ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 19, 2023

கடுமையான நஞ்சுகளையும் முறிக்கும் சக்தி

கருடன் என்ற பறவையை எடுத்துக் கொண்டால் அதனுடைய கூட்டிலே நாம் ஒரு இரும்புச் சங்கிலியை “விலங்கு போடுவது போல்” முடிந்து வைத்து விட்டால் அது என்ன செய்யும்…?

கூட்டிலிருக்கும் தன் குஞ்சுகளை மீட்டுவதற்காக அலைந்து திரிந்து
1.சில செடிகளின் விழுதுகளை அல்லது அந்தக் காம்புகளை எடுத்து அந்தச் சங்கிலி மீது வைத்து அதைத் தெறிக்கச் செய்துவிடும்.
2.இது கருடன் கண்ட உபாயம்… இரும்பு உலோகங்களைக் கத்திரிக்கும் திறன் பெற்றது.

ஆனால் கருடனுக்கு இந்தச் சக்தி எப்படிக் கிடைத்தது…?

புழுவிலிருந்து மனிதனாக வளர்ச்சி பெற்று மனிதனாக ஆன பின் மீண்டும் மடிந்து மடிந்த நிலைகளிலிருந்து “அவன் பட்சிகளாக உருவானால்…” இவனுக்குள் உருவாகிய இந்த உணர்வின் அணுக்கள் அது உணவாக உட்கொள்ளும் பொழுது “அந்த உணர்வின் ஞானங்கள்…” அங்கே கிடைக்கின்றது.

மனிதனாகிப் திருப்பிப் பட்சியாக வந்த பின்…! மனிதனுக்குண்டான சிந்தனைகள் எல்லாம் அந்தப் பட்சிக்கு உண்டு.

எப்படி…?

காடுகளில் மனிதன் ஒரு விஷத்தால் தாக்கப்பட்டுத் தேய்பிறையாகி அவன் மடிந்து கிடந்தால் அந்த உடலிலிருந்து வந்த விஷத்தின் தன்மை மற்ற தாவர இனங்களில் இது கலந்துவிடும்.

விஷம் தீண்டி மடிந்த இவன் உடலில் இருந்து வெளிவரக்கூடிய உணர்வின் அலைகள் படர்ந்து வருவதைச் சூரியனுடைய காந்த சக்தி எடுத்து கவர்ந்து வைத்துக் கொள்கிறது.

அதே சமயத்தில்
1.மற்ற சாந்தமான தாவர இனங்களின் சத்து சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டுப் பரவி வருவது இதைக் கண்டு அஞ்சி ஓடுவதும்
2.இன்னொரு விஷமான செடியின் மீது அது மோதும் சந்தர்ப்பத்தில் சுழற்சி ஆகுவதும்
3.சுழற்சியான பின் தனக்குள் கவர்ந்து கொண்டு புது விதமான தாவர இனச் சத்தாக செடியாக விளைகின்றது.

ஏனென்றால்… பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக ஆனபின் ஒரு விஷம் தீண்டி மனிதன் மடிந்தால் இவன் உடலில் இருந்து வரக்கூடிய மணம் மற்ற தாவர இனச் சத்துக்களுடன் கலக்கப்பட்டு… இரண்டறக் கலந்து ஒரு வித்தாக உருவாகி நிலத்தில் பட்டு விட்டால்… கடும் விஷத்தையே முறிக்கும் சக்தி பெறுகின்றது.

இதைத் தான்… அந்த விஷத்தை முறிக்கக் கூடிய சக்தியைக் கருடன் கண்டுள்ளது. அதாவது.. உலோகங்களில் இந்த்த் தாவர இனத்தின் சத்து பட்டபின் அது பலவீனமாகி… அந்த உலோகம் தெறிப்பதையும் அது கண்டுள்ளது.

ஏனென்றால் மனிதனாக ஆன பின் இவனுக்குள் விளைய வைத்த சத்துக்கள் தாவர இனத்துடன் கலக்கப்பட்டு இது பட்சியானாலும் கூட…
1.அதற்குள் இருக்கக்கூடிய உணர்வு (ஞானம்) சிக்கலில் இருந்து தீர்க்கும் நிலையாக வருகின்றது
2.இது பட்சி இனமாகத்தான் இருக்கின்றது… ஆனால் இதற்கு எப்படி இந்த அறிவு வந்தது…? என்று குருநாதர் காட்டுகின்றார்.

இதே போல் தான் கீரிப்பிள்ளை மீது பாம்பின் விஷம் தீண்டப்பட்ட பின் அது ஓடிச் சென்று அதை முறிக்கும் அந்தத் தாவர இனத்தில் பிரள்கிறது. அந்த மணங்களை நுகர்கிறது. நுகர்ந்து அந்த விஷத்தை நீக்கிய பின் அந்தப் பாம்பினை மீண்டும் அது தாக்குகிறது.

இது போன்று தான்
1.”ஒரு உயிரணு” தனக்குள் கவர்ந்து கொண்ட உணர்வின் அணுக்கள்
2.மாறி மாறிப் பல விதமான ஒரு சக்திகள் பெற்று வளர்ச்சிக்கு வருகின்றது.

இப்படி எல்லாவற்றையும் கடந்து மனிதனாக உருப்பெற்ற பின் இத்தகைய தாவர இனங்களுடைய சக்திகளைப் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் காடுகளில் வாழ்ந்த அகஸ்தியனின் தாய் தந்தையர்கள் கண்டறிய நேர்கிறது.

அந்த வழியில் தான் அகஸ்தியன் சர்வ நஞ்சுகளையும் ஒடுக்கிடும் சக்திகளைப் பெற்றான்… ஒளியாக மாற்றிக் கொண்டான்.