ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 31, 2023

“மின்னலுக்குள் இருக்கும்…” உயர்ந்த ஆற்றலை நாம் பெற வேண்டும்

அகஸ்தியன் தாய் கருவிலே பெற்ற உயர்ந்த சக்திகள் கொண்டு தாவர இனங்களுடைய சக்திகளை அறியும் ஆற்றல் பெற்றான்.
1.தாவர இனங்களுடைய சக்திகளை நுகர்ந்து நுகர்ந்து தனக்குள் அதை எடுக்கும் பொழுது
2.இந்த தாவர இனங்களுக்கு ஜீவ நீராக ஊட்டும் மேகங்கள் கூடுவதை அறிகின்றான்
3.இவன் எண்ணத்தால் எண்ணினால் அவன் உணர்வுகள் மேகங்களை அழைத்து வருவதும்
4.அப்பகுதியில் அதிகமாக மழை பெய்வதும் போன்ற நிலை உருவாகிறது.

ஏனென்றால் அகஸ்தியன் விஷத்தின் தன்மை கொண்டு அதை ஒடுக்கிடும் தன்மை பெற்றவன். ஆதியிலே பொருள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி அடர்த்தியாகி ஆவியாகும் போது தான் மேகத்தின் தன்மை அடைகின்றது. மாறுபட்ட சத்துகள் கலந்ததும் நீராக வடிகிறது.

அந்த ஆற்றலைத் தான் அகஸ்தியனும் பெறுகின்றான். அந்த நீரின் தன்மை மற்ற தாவர இனங்களிலும் படுகின்றது இதைப் போன்ற உணர்வுகள் இவனுக்குள் படரப் படும் பொழுது
1.இவன் எங்கே அமர்ந்து சிறிது காலம் செயல்படுகின்றானோ
2.இவன் உடலில் இருந்து உணர்வுகள் அங்கே படரப்பட்டு
3.மேலே மேகங்கள் படர்ந்து செல்வதை அது கவர்ந்து நீராக மாற்றிடும் நிலை பெறுகிறது.

அதே போல் அகஸ்தியன் மின்னலை உற்றுப் பார்த்தான் என்றால்
1.இவன் உயிர் அதை மின் அணுக்களாக மாற்றுவதும்
2.நுகர்ந்ததை அடக்கி ஒளியின் உணர்வாகப் பெறும் தகுதியும் பெறுகின்றான்.

ஒரு சமயம் குருநாதர் காட்டிய வழியிலே நாசிக் என்ற இடத்திற்கு நான் (ஞானகுரு) செல்லப்படும் பொழுது அங்கே ஒருவனைச் சந்திக்கும்படி செய்தார். அவனுக்கு வயது பதினேழு இருக்கும்.

அவன் வேறொரு மனிதனைக் கோபமாக உற்றுப் பார்த்தால் போதும்...! கண்ணின் ஒளிகள் பாய்ந்து அங்கே ஓட்டையே போட்டு விடும். சுரீர்ர்ர்ர்…! என்று இந்த உணர்வுகள் பாயும். அவன் அலற வேண்டியது தான்.

அவனுக்கு இது எப்படி வந்தது…?

தாய் கருவிலே இவன் இருக்கப்படும் பொழுது தாய் மின்னலை எட்டிப் பார்த்தது. அப்போது அந்த மின்னலின் உணர்வுகள் கருவிலே இணைந்து விட்டது. ஆனால் தாய் தன் கண் பார்வையை இழந்துவிட்டது.
1.கருவில் இருக்கும் சிசுவிற்கு அந்த மின்னலின் ஒளிக் கற்றைகள்
2.இரத்தத்தின் வழி கூடி உடலிலே கலந்து அந்த உணர்வின் ஆற்றலைப் பெறுகின்றது.

தாய் கண் இழந்த பின் நெற்றியின் உணர்வு கொண்டு பார்க்கும் நிலையும் மின்னல்கள் தாக்கப்படும் பொழுது கர்ப்ப காலங்களில் இந்த உணர்வுகள் கருவிலே இணைந்து அது விளைந்து கொண்டே வருகின்றது.

குழந்தை பிறந்த பின் அவன் இளம் வயதிலே அதை அறியவில்லை பதினேழாவது வயதை அவன் எட்டப்படும் பொழுது
1.இவன் எண்ணத்தின் கோப உணர்வுகள் பொறிகள் கிளம்புவது போல வருகிறது.
2.ஒரு இரும்பை அவன் பார்த்தால் அது சூடாகும்… அப்படியே வளைக்கலாம்

அதாவது சிறிது நேரம் ஒரு இரும்பை அவனை உற்றுப் பார்க்கும்படி செய்தால் அது சூடாகிவிடும்… வளைத்து விடலாம். இந்த மாதிரி மின் கதிர்கள் அவன் கருவிலே விளயப்படும் பொழுது வந்த சக்தி.

(அவன் நீடித்த நாள் வாழவும் இல்லை சுற்றுப்பயணம் சுற்றி விட்டு இரண்டாவது தடவை நான் அங்கே வரும் பொழுது அவன் இல்லை).

அவன் உணர்வுகள் அந்த அறிவின் தன்மை கொண்டு வெளி வரப்படும் பொழுது மற்றது கெடுகிறது. ஆனால் முதலில் தெரியாது.
1.அடுத்தவனை இவன் உற்றுப் பார்த்தால் அவன் மயங்கி விழுந்து விடுவான்.
2.இவனால் தான் அப்படி ஆனது என்று ஒருவருக்கும் தெரியாது.

இப்படி அவனை அறியாமலே பல நிலைகள் வந்து விபத்துகள் ஆகிறது. பின்னாடி மற்றொருவர் கூறும் பொழுது தான் தெரிய முடியும்.

ஆக… ஒரு மனிதன் மீது மின்னல் பட்டால் அவன் எப்படிக் கருகி விடுவானோ அதே போன்று இவன் பார்வை பட்டால் அடுத்தவர்களை அது கறுக்கி விடுகின்றது.

அனுபவ ரீதியாக குருநாதர் எமக்குக் காட்டிய உண்மை நிலைகள்

மின்னலைப் பார்த்ததால் முதலில் தாய்க்குக் கண்கள் போனது ஆனால் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கோ அது வளர்ந்த பின் “ஈர்க்கும் சக்தி பெருகி அணு செல்களாக அது பெருகுகின்றது…”

மின்னலைப் பார்த்துவிட்டு அடுத்தவனைப் பார்த்தால் சுட்டுப் பொசுக்குகின்றது. அப்போது அவனைக் கண்டாலே மற்றவர்கள் அஞ்சி ஓடும் நிலைகள் வந்துவிட்டது.

அவனை வீட்டை விட்டு வெளியே செல்லாதபடி செய்துவிட்டார்கள் எல்லோருக்குமே பயம்… அவன் மீது கோபப்படவும் முடிவதில்லை.

ஆனால் அவனுக்கு எப்போது இந்த நிகழ்ச்சிகள் நடக்கிறது என்றால்
1.மின்னல் பாயும் பொழுது இழுத்து அந்த உணர்வுகள் பார்வைக்குள் வந்து
2.எக்கோ (ECHO) மறுபடியும் அந்த உணர்வுகள் இயக்குகின்றது.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன்…
1.அவன் தாய் கருவிலே இருக்கப்படும் பொழுது மின்னலை அடக்கும் அந்தச் சக்தி கிடைக்கின்றது
2.பிறந்த பின் குழந்தை அவன் தரையில் மல்லாந்து படுத்திருக்கும் நிலையில்
3.இவனுக்குள் கதிரியக்கப் பொறிகளை அடக்கிடும் சக்தியும் வருகின்றது.
4.இந்த அணுக்கள் இவனுக்குள் பெருகிப் பெருகி வானுலகை உற்று நோக்கும் அறிவின் தன்மை வந்து வான இயல் ஆற்றலைப் பெறுகின்றான்.
5.அதன் மூலம் எதனையுமே வென்றிடும் சக்திகளும் ஒளியாக மாற்றிடும் ஆற்றலும் அவனுக்குள் பெறுகின்றது

ஆனால் அகஸ்தியன் சக்தி வாய்ந்த நிலைகள் இப்படிப் பெற்றதை மக்களுக்கு இந்த உண்மைகள் தெரியாதபடி…… கிடைக்க முடியாதபடி காலத்தால் அது மறைக்கப்பட்டு… அரசர்கள் தடைப்படுத்தி விட்டனர்.