ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 26, 2023

கையை வைத்து உடல் வலிகளை நமக்கு நாமே போக்கிக் கொள்ளக்கூடிய பயிற்சி

உதாரணமாக காலில் மூட்டில் வலி இருக்கிறது… நடக்க முடியவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்…?

1.ஈஸ்வரா…! என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி
2.கொஞ்ச நேரம் கையை அந்த மூட்டில் வைத்து மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
3.காலில் இருக்கக்கூடிய மூட்டு வலி நீங்க வேண்டும்… உடல் நலம் பெற வேண்டும்
4.அந்த வலி நீங்க வேண்டும்… நல்லதாக வேண்டும் என்று நினைத்துப் பாருங்கள்.

அந்த வலி குறைய ஆரம்பிக்கும்.

இதே போன்றுதான் இருதயத்திலோ மற்ற இடங்களிலோ வலி இருந்தால் இதே மாதிரி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அந்த உணர்வை எடுத்து “அங்கே கையை வைத்து… இந்த உணர்வுகளைப் பாய்ச்சுங்கள்…”

அங்கே சளி இருந்தாலும் இரண்டு கையையும் நெஞ்சிலே வைத்து அந்தச் சளி நீங்க வேண்டும் என்று அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று பாய்ச்சிப் பழகுங்கள்.

1.சொல்லிக் கொடுக்கின்றோம்… ஆனால் இதை நீங்கள் செய்ய வேண்டும்
2.ஒரு நாளைக்கு வைத்துவிட்டு அப்படியே விட்டு விடக்கூடாது தொடர்ந்து நீங்கள் செய்ய வேண்டும்.
3.(ஏனென்றால் முதலில் ஆர்வமாக கேட்பார்கள் பின்னாடி அதைச் செயல்படுத்துவதில்லை)

எங்கே வலி இருக்கின்றதோ அந்த இடத்திலே மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று நினைத்துக் கையை வைத்து அந்த வலி குறைய வேண்டும் என்று உணர்வுகளை
1.இதன் வழி பாய்ச்சி அந்த எண்ணத்தைக் கொண்டு வாருங்கள்
2.வலி குறைவதைக் காணலாம்…!

உதாரணமாக சங்கடமாக இருந்து ஒரு காயையோ அல்லது குழம்பையோ சமையல் செய்து பாருங்கள்… அது ருசி கெட்டுப் போகும். சந்தோஷமாக இருக்கும் பொழுது செய்து பாருங்கள்… நன்றாக இருக்கும்.

காரணம்,,, அன்றன்று உள்ள குணத்திற்குத் தக்க மாதிரித் தான் இதனுடைய செயல்கள் நடக்கும். நீங்கள் சலிப்போடு அரிசியை வேக வைத்துப் பாருங்கள்… சாதம் தண்ணீர் பட்டுப் போகும். இதெல்லாம் நீங்கள் பார்க்கலாம்.

சங்கடமாக இருந்து சமையல் செய்தால் அந்தக் காய்கறிகளை சல…சல… என்று ஆகிவிடும்… குழம்பின் ருசியே மாறிவிடும்.

யாம் (ஞானகுரு) சொல்லும் வழிகளில் நீங்கள் செயல்பட்டால் உங்கள் உடல் நலமாக உதவும். இந்த உடல் நமக்குச் சதமானது அல்ல…! அவ்வப்போது மனது அமைதி பெறுவதற்கு… மகரிஷிகளின் அருள் சக்தியால் உடல் வலி நீங்க வேண்டும் என்று இந்த எண்ணங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஐயோ… எனக்கு அங்கே வலிக்கிறது இங்கே வலிக்கிறது என்று அதைச் சொல்ல வேண்டியதில்லை.
1.எழுந்திருக்க முடியவில்லை நடக்க முடியவில்லை என்று சொல்லாதபடி
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… வலி நீங்க வேண்டும்
3.நான் எழுந்து நடக்க வேண்டும்… நடக்கக்கூடிய சக்தி பெற வேண்டும் என்று
4.வலி வரும் பொழுதெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தியைச் சுவாசித்து நன்றாக வேண்டும் என்று எண்ணி
5.இதைக் கூட்டிக் கொண்டு வாருங்கள்… அந்த வலிகள் நீங்குகிறதா இல்லையா என்று நீங்கள் பாருங்கள்.

சாமி…! நீங்கள் சொன்ன தியானத்தைத் தான் நாங்கள் செய்கிறோம் என்று இப்படித்தான் எண்ணுகின்றார்களே தவிர “தியானம் என்றால் என்ன…?” என்று முதலில் அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா…!

நீங்கள் சொன்னீர்கள்… ஆனால் நடக்கவில்லை நடக்கவில்லை என்று அந்த இராகத்தைப் பாடக்கூடாது.
1.உடலின் இச்சைக்கு நாம் செல்லக்கூடாது.
2.அருளைப் பெருக்கும் பொழுது இந்த இருள் நிச்சயம் நீங்கும்.