ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 15, 2023

மனிதனின் நல்ல சிந்தனைகள் "சிறுகச் சிறுக அழிந்ததன் சரித்திரம்...!"

கடவுள் எப்படி இருக்கின்றான்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள் கடவுள் ஒருவனே…! தேவன் ஒருவனே…! என்பதெல்லாம் மதங்களால் உருவாக்கப்பட்ட நிலைகள்.

ஒவ்வொருவரும் தனக்குகந்த உணர்வுகளை அது உருவாக்கி மந்திரங்களை உருவாக்கி… அதனை மனிதனுக்குள் பதிவாக்கி… இன்னென்ன மந்திரங்களைச் சொன்னால் கடவுள் அதற்காக அடிபணிந்து நமக்கு எல்லாம் செய்து தருவான்…! என்று சட்டங்களை இயற்றப்பட்டு… அதற்கென்று வேதங்களை உருவாக்கப்பட்டு… மந்திரங்களை ஒலிக்கச் செய்து கேட்டுணரும்படி செய்து… மனிதனை உருமாற்றிக் கொண்டு வருகின்றார்கள்.

மதங்களால் இயற்றப்பட்ட சட்டத்தை நமக்குள் பதிவாக்கி விட்டால் “அது தான் கடவுளாக இயக்குகின்றது நம்முள் நின்று…!”

ஒருவன் ஒருவன் தீமை செய்கிறான் என்று பார்த்து… தீமை எனக்குச் செய்தான் என்று உணர்வை நுகர்ந்து விட்டால் அந்த உணர்வின் தன்மை ஜீவ அணுவாக மாற்றி அது பிரம்மமாக்கி நம் உடலுடன் சேர்ந்து இயக்கப்படும் பொழுது தீமை செய்யும் கடவுளாக அது உருவாகின்றது.
1.தீமை செய்யும் எண்ணங்கள் அதிகமாகச் சேர்த்து விட்டால்
2.அந்த அணுவின் தன்மை தீமையை உருவாக்கும் கடவுளாக உருவாகின்றது.
3.ஆனால் நன்மை செய்யும் உணர்வுகளை உருவாக்கி விட்டால் நல்ல உணர்வை நுகரும் ஆற்றல் பெறுகின்றோம் நமக்குள் கடவுளாக…!

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் விஞ்ஞானம் இன்று இதைத் தெளிவாக நிரூபிக்கின்றது.

உதாரணமாக ஒரு கம்ப்யூட்டரில் எலக்ட்ரானிக்கை வைத்து அதை இயக்கச் செய்கின்றார்கள்.
1.அதிலே பொருத்தப்பட்டுள்ள நாடாக்களில்
2.காந்தப் புலனறிவை ஈர்த்து ஒலி அலைகளைப் பரப்புவதைக் கவர்ந்து
3.மீண்டும் எதிர் நிலைகளில் உருவாக்கும் ஆற்றலை அதிலே மூலமாகப் பூசி உள்ளார்கள்.

அதில் நாம் தட்டெழுத்தால் (KEY BOARD) எப்படி அடிக்கின்றோமோ… அடித்துக் காந்தப் புலனால் ஒலி அலைகளை எழுப்பப்படும் பொழுது
1.எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது
2.ஒலி அலைகளைப் படமாக்குகின்றது… அதற்குத்தக்க உருவத்தையும் காட்டுகின்றது
3.ஒரு மனிதனையே உருவாக்கிக் காட்டுகின்றது.

அதைப் போன்று தான் நம் உயிர் எலக்ட்ரிக்கை உருவாக்குகின்றது. நாம் எண்ணும் எண்ணங்களை எல்லாம் எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது. அந்த உணர்வுக்கொப்ப உடலில் உறுப்புகளை இயக்குகின்றது.

மனிதனால் உருவாக்கப்பட்ட கம்ப்யூட்டர் இயக்கினாலும் அதில் இருக்கக்கூடிய காந்தப்புலன்… “தட்டெழுத்தால் அடிக்கும் அந்த உணர்வு கொண்டு…” காந்தப்புலனால் ஈர்க்கப்பட்டு அது செயல்படுத்தப்பட்ட நிலைகள்

அதைச் செயல்படுத்தும் பொழுது “இவன் உணர்வும் அதிலே கலந்து…” அந்த உணர்வின் இயக்கச் சக்தியாக அந்தக் கம்ப்யூட்டர் இயக்குகின்றது.

இதைப் போன்று அது உருவாக்கும் நிலைகள் வரப்படும் பொழுது…
1.அந்தக் கம்ப்யூட்டரை இயக்கப்படுபவனுக்கு குடும்பத்தில் எதிர்மறையான உணர்வுகள் வந்து விட்டால்
2.அது… இவன் தட்டெழுத்தால் அடிக்கும் உணர்வுக்குள் கலந்து “வைரஸ்” என்ற நிலையாக… இது பிழைகள் கொண்டதாக மாற்றி விடுகின்றது.

(இதே நாடாவை மற்றவர்கள் பார்த்து இந்த உணர்வை எடுக்கப்படும் பொழுது தட்டெழுத்துக்களில் இந்த உணர்வின் மாற்றங்கள் அங்கேயும் வைரஸாக வரும்).

பிழைகளை இவன் அழித்து மீண்டும் செயல்படுவான் என்றால்
1.அங்கே திரையில் காட்டும் உணர்வுகளை இவன் நுகர்ந்து உணர்வுக்குத்தக்க மாற்றப்படும் பொழுது
2.இவனுக்குள் தீமையின் உணர்வுகள் விளைந்து… தன் சிந்தனை இழந்து பிரமை பிடித்தவன் போன்று ஆகிவிடுவான்.

இந்த கம்ப்யூட்டரில் தொடர்ந்து வேலை செய்பவர்கள் யார் அதிகமாக அதை இயக்குகின்றார்களோ… அவர்கள் வேறு சிந்தனையே இல்லாது… இதன் உணர்வுளிலேயே இருப்பார்கள்.

எந்திரத்தின் துணை கொண்டு இந்த உணர்வின் தன்மை இயக்குவது போன்று “மனித உணர்வுக்குள் எலக்ட்ரானிக் என்ற நிலைகள் கொண்டு…” மனிதனுக்குள் இயக்கும் இந்த உணர்வுகளுடன் கலந்தே எலக்ட்ரானிக்கின் தன்மை அடைகின்றது.

இவை எல்லாம் விஞ்ஞான அறிவால் உருவானாலும் இயற்கையின் உணர்வுகள் மனிதனான பின் இதனுடன் கலந்தே அது இயக்குகின்றது.

விஞ்ஞான அறிவால் கண்டுபிடிப்புகள் வளர்ச்சி பெற்றிருந்தாலும்
1.எலக்ட்ரானிக் என்ற நிலையில் வருவதை மனிதன் தனக்குள் நுகரப்படும் பொழுது
3.இயற்கையின் நிலைகளை அது மாற்றி விடுகிறது.

ஏனென்றால் நம் உயிர் எலக்ட்ரிக்காக இயங்கி நுகருவதை எலக்ட்ரானிக்காக… உடலையே இயக்குகின்றது. (ஏற்கனவே சொன்னோம்)

விஞ்ஞான அறிவின் தன்மைகள் கொண்டு இயந்திரத்தின் துணையால் எலக்ட்ரானிக் என்ற நிலையில் இந்த உணர்வின் எண்ணங்கள் பரவுகின்றது
1.மெய் (தன் நிலை – இயல்பு) உணர்வுகள் மறைகின்றது…
2.மெய் உணர்வுகளை வளர்க்கும் தன்மை அது இழக்கப்படுகின்றது.

இது மட்டுமல்ல…! வானுலக ஆற்றலை… நஞ்சு கலந்த உணர்வுகளை அளவுகோலிட்டு அதைக் கம்ப்யூட்டரில் இயக்கிப் பார்க்கின்றான்
1.நஞ்சின் தன்மை பூமிக்குள் வருகின்றது… மனிதனைக் காக்கும் உணர்வுகள் அதிலே இல்லை.
2.மனிதனை அழித்திடும் உணர்வுகள்… கண்டுபிடிப்புகள் இங்கே அதிகமாகின்றது
3.இதை இயக்குவனுக்குள் அந்த அழித்திடும் உணர்வுகள் வளர்ந்து எல்லா இடங்களுக்கும் (காற்று மண்டலம்) பரவுகின்றது.

மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த உணர்வுகள் காற்று மண்டலம் முழுவதும் பரவி
1.மனித இனத்தையே பூண்டோடு அழித்திடும் நிலைகளுக்கு மாற்றிக் கொண்டு வருகின்றது.
2.இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள வேண்டும்.

ஆக கடவுள் யார்…? நமது உயிர் தான்…!