ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 27, 2023

பாட நிலையாக யாம் உபதேசிக்கவில்லை… “உணர்வுபூர்வமாகப் பதிவு செய்கிறோம்…”

1.அகஸ்தியன் பெற்ற உண்மைகளையும் அவனுக்கு பின் வந்த ஏனைய மகரிஷிகள் உணர்வுகளையும்
2.அவர்கள் அறிந்துணர்ந்த உண்மையின் உணர்வுகளையும்
3.சந்தர்ப்பத்தால் அகஸ்தியன் உணர்வை நுகர்ந்தறிந்த ஞானிகளின் உணர்வுகளையும் உங்களுக்குள் இப்பொழுது பதிவு செய்கின்றோம்.

யாம் (ஞானகுரு) உபதேசிக்கும் போது இந்த அருள் உணர்வுகளைப் பெற வேண்டும்… பதிவாக வேண்டும்…! என்ற “ஏக்கம் உள்ளவருக்கு…” நிச்சயம் அது கிடைக்கும்.

சாமி சொல்கிறார்… ஒன்றும் அர்த்தமாகவில்லையே என்று எண்ணாதபடி
1.“அர்த்தமாக வேண்டும்…” என்று எண்ணினால் அது பதிவாகும்
2.”அந்த நினைவு…” மீண்டும் அர்த்தத்தை உங்களுக்குள் விளக்கும்.

சொல்கின்றார்… எனக்குப் புரியவில்லையே…! என்று நிலைக்குக் கொண்டு வந்தால் அந்த உணர்வைக் கவர்ந்து புரியாத நிலையை உருவாக்கிவிடும்.

ஆகவே… புரிய வேண்டும் என்ற எண்ணத்தில் எண்ணினால் புரியும்.

ஆரம்பத்தில் பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் பொழுது புரிவதில்லை ஆனால் படித்துப் படித்து அந்த உணர்வுகள் வளர்ந்த பின் எழுத்தறிவு வடிவில் கொஞ்சம் கொஞ்சமாக அறிகின்றோம்.
1.எழுத்தின் கூட்டமைப்புகளில் சொல்களை உணர்கின்றோம்
2.அதன் மூலமாக மற்ற நிலைகளை அறியும் தன்மையும் வருகின்றது.

இதைப் போன்று தான்
1.உணர்வின் தன்மையை யாம் பதிவாக்கும் போது
2.அது அர்த்தமாக வேண்டும்… அதை அறியும் ஆற்றல் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வு இருந்தால் இது பதிவாகும்.

சாமி சொல்கிறார்… நல்லதைத்தான் சொல்கின்றார்…! சாமியிடம் விபூதி வாங்கினால்… ஆசீர்வாதம் வாங்கினால் “உடல் நோய் போகும்… தொழில் நன்றாக இருக்கும்…” என்றால் இது இந்த உடலுக்குத் தான். அந்த ஆசைகள் தான் வளர்கின்றது.

இதுவும் நடக்கும் அதுவும் நடக்கும்…! ஆனால் உடலின் இச்சைக்குச் “சிறிது காலமே வரும்…” அடுத்து வரும் எதிரியின் நிலைகளை எனக்கு இவன் இப்படிச் செய்கின்றான்… என்னைத் தொல்லைப்படுத்தினான்…! என்று இந்த உணர்வைக் கூட்டினால்… வளர்ந்து வரும் தொழிலையும் செல்வத்தையும் காக்க முடியாத நிலை ஆகிவிடும்.

ஆகவே… அருள் செல்வத்தைக் கூட்டி இருள் புகாது நம்மைக் காக்கும் நிலையாகச் செயல்பட வேண்டும். செல்வத்தைக் காக்க வேண்டும் என்றால் ஞானம் தேவை.

செல்வத்தைத் தேடித் தன் குடும்பத்தில் வரும் சந்ததிகளுக்கு என்று கொடுத்தாலும் அவர்களுக்கு அந்த ஞானம் இல்லை என்றால் ஒரு நொடிக்குள் செல்வம் மறைந்துவிடும்.

ஞானம் இல்லாது செயல்படும் போது…
1.நான் சேமித்த செல்வத்தை இவன் எப்படிக் காக்கப் போகின்றான்…?
2.அதைச் சேர்ப்பதற்கு நான் எத்தனையோ சிரமப்பட்டேனே…! என்று எண்ணினால்
3.வேதனையைத் தான் தனக்குள் வளர்க்க முடியும்.

இதைப் போன்ற நிலையிலிருந்து எல்லாம் நாம் விடுபட வேண்டும்.

உயிர் ஒளியாக எவ்வாறு இருக்கின்றதோ அந்த அருள் ஒளியைப் பெற்று… வாழ்க்கையில் வரும் இருளை அகற்றிடும் அருள் ஞானம் பெற வேண்டும் என்று
1.எவரொருவர் இதைப் பதிவு செய்து அந்த நினைவுடன் வாழுகின்றனரோ
2.அந்த அருளைப் பெறலாம்… இருளை அகற்றலாம்… மெய் ஒளியைப் பெறலாம்… பொருளறிந்து செயல்படும் திறன் பெறலாம்
3.வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ முடியும்… மகிழ்ச்சி பெறும் உணர்வுகளை உடலில் விளைய வைக்க முடியும்
4.என்றும் ஏகாந்த நிலையை அடைய முடியும்.

“மகரிஷிகளைப் பின் தொடர்ந்து” அவர்கள் பெற்ற பிறவியில்லா நிலையை அடைய முடியும். அதுவே மனிதனின் கடைசி எல்லை.