ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 28, 2023

ஒரு சீராக இயங்கிக் கொண்டிருந்த சூரியன் “எரிமலையாக இன்று உமிழ்த்திக் கொண்டிருக்கின்றது”

கடும் விஷத்தன்மை பரவிக் கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில் உலகம் முழுவதுமே நஞ்சு பரவும் நிலை இருக்கின்றது.

அணுகுண்டுகளும் மற்றும் அதைப் போன்ற எத்தனையோ கெமிக்கல் கலந்த குண்டுகளையும் வெடித்துப் பரிசீலித்துப் பார்த்த
1.அந்த விஷமான கதிரியக்கங்கள் அனைத்தும் நம் சூரியக் குடும்பத்தில் உள்ள எல்லாக் கோள்களும் கவர்ந்து விட்டது.
2.சூரியனும் அதைக் கவர்ந்து தனக்குள் கடும் எரிமலைகளாகக் காந்தப் புயல்களாகக் கக்கிக் கொண்டே உள்ளது
3.அதிலிருந்து வரக்கூடிய எதிர்மறையான உணர்வுகள் நம் பூமிக்குள் அடிக்கடி அடிக்கடி பாய்ந்து கொண்டிருக்கின்றது.

தினமும் பத்திரிகை படிப்பவர்களுக்கு இது தெரிந்திருக்கும்.

மின்னல்கள் பாயும் பொழுது அது கடலிலே அடங்கி யுரேனியமாக மாறுவதும் 27 நட்சத்திரங்களுடைய உணர்வு பல கலவைகள் கொண்டு வித்தியாசமான வெடி பொருள்களுக்கு உகந்த மணல்களாகவும் வருகின்றது.

இது எல்லாம் பூமியில் தாக்கப்படும் பொழுது அது நடு மையம் அடைந்து கொதிககலனாக மாறி நிலநடுக்கங்கள் போன்று ஆகி கீழே இருப்பது மேலே வருவதும் மேலே இருக்கும் நிலம் கீழே இறங்குவதும் பூமிக்குள் பல பல மாற்றங்கள் அதுவும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

இதையும் பத்திரிகையில் நீங்கள் பார்த்திருக்கலாம்.

ஒரு சீராக இயங்கிக் கொண்டிருந்த சூரியனின் நிலைகள் மாறி மனிதனால் உருவாக்கப்பட்ட விஷத்தன்மைகள் அங்கே பெருகி விட்டது. “எரிமலைகளாக அது உமிழ்த்திக் கொண்டிருக்கின்றது…!”

சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு யாம் (ஞானகுரு) சொன்னது இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றது. அந்த எரிமலைகள் இங்கே பரவி
1.ஒன்றுடன் ஒன்று உராயப்படும் பொழுது எலக்ட்ரிக் என்ற நிலைகள் அதிகரிக்கும்… அது இரு மடங்காகப் பரவும்.
2.அப்படி உருவான உணர்வுகளை மனிதன் எடுத்துக் (மின்சாரம் தயாரிக்க) காந்த புலன்களில் மோதப்படும் பொழுது
3.இது எலக்ட்ரிக் பவரை அதிகரிக்கும்… மோதலில் வெப்பத்தின் தன்மையும் கூட்டும்.

இப்பொழுது நீங்கள் பார்க்கலாம். சூரியனுக்குள் எரிமலையாகப்படும் பொழுது பூமிக்குள் எந்தெந்தப் பகுதியிலே பரவுகின்றதோ அங்கே வெயிலின் கொடுமைகள் அதிகமாகிறது (CLIMATE CHANGE).

எலக்ட்ரிக் என்ற நிலை மனிதனுக்குள் வரப்படும் போது
1.உயிரின் துடிப்புகள் அதிகரித்து வேகம் அதிகமாகும்
2.உடலுக்குள் சீராக இயங்கிக் கொண்டிருக்கும் அணுக்களின் தன்மையும் துடிப்பு அதிகமான பின்
3.இந்த உணர்வின் இயக்கம் மனிதனின் சிறுமூளையில் உள்ள நுண்ணிய நரம்புகளைத் தெறிக்கச் செய்யும்
4.அதனால் சிந்திக்கும் தன்மை இழக்கப்பட்டு மனிதனைச் செயலிழக்க வைத்துவிடும்.

உதாரணமாக ஒரு மோட்டார் அதனுடைய பளு (LOAD) அதிகமாக எடுக்கிறது என்றால் மின் இணைப்பில் உள்ள ஃப்யூஸ் வயரில் மின் அழுத்தம் அதிகமாகி அது கருகி விடுகின்றது… இருண்டு விடுகின்றது… மோட்டார் நின்று விடுகின்றது.

அது போன்று தான் மனிதனுக்குள் பாய்ச்சப்பட்டு சிறு மூளையில் உள்ள நுண்ணிய நரம்புகள் தெறித்து விட்டால் சிந்திக்கும் தன்மை இழந்து விடுகின்றது.

இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

கடும் நஞ்சுகளையும் வென்ற அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்த உணர்வுகளை நாம் அதிகமாக நமக்குள் சேர்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

1.நம் உணர்வுகள் ஷாக் அடிக்காது ஃப்யூஸ் ஆகிவிடாது நம் சிந்தனைகள் செயலற்றதாக ஆகாதபடி தடுக்க
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தியானத்தின் மூலம் ஒவ்வொரு நிமிடமும் எடுத்து வளர்த்துக் கொள்ளுங்கள்.

குடும்பத்தில் கணவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஒருவருக்கொருவர் பாய்ச்சி… இரு உயிரும் ஒன்றாகி… உணர்வை எல்லாம் ஒளியாக மாற்றுங்கள்.

இதன் வழி சீராகச் செயல்பட்டால் உங்கள் வாழ்க்கையில் அருள் மகரிஷிகள் உணர்வின் துணை கொண்டு சிந்தனைகள் சிதையாது… உடலை விட்டுச் சென்றால் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று நிச்சயம் பிறவியில்லா நிலை அடைய முடியும்.

இந்தச் சந்தர்ப்பத்தை இழந்து விட்டால் உயிரான்மாவில் விஷம் அதிகரித்து விஷப் பூச்சிகளாக ஒன்றை ஒன்று கொன்று விழுங்கும் உயிரினங்களாக உயிர் மாற்றிவிடும்.
1.அடுத்து மனிதனாக உருவாகும் காலம் எப்பொழுது…? என்று சொல்ல முடியாது.
2.இன்று நல்ல நினைவு இருக்கும் போதே குருநாதர் காட்டிய வழியில் நாம் அருள் உணர்வுகளைப் பெருக்கிடல் வேண்டும்.