ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 27, 2021

இருதய வாயில் என்பது என்ன…?

விஷ்ணு நரசிம்ம அவதாரமாக எடுத்து இரண்யனை மடி மீது வைத்து அவனைப் பிளந்தான் என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்..

1.விஷ்ணு என்பது நம் உயிர்
2.மடி என்பது நம் இருதயம்
3.இரண்யன் என்பது தீமை செய்யும் உணர்வுகள்.

இருதய வாயிலில் இருக்கும் “மேக்னட்...” புறத்தால் ஒரு பொருளைப் பார்க்கப்படும் போது அவர்கள் உடலிலிருந்து வரக்கூடிய உணர்வலைகளை இழுத்து அலையாகக் குவிக்கும் இடம் அது.

அது தான் மடியாகின்றது.

இங்கே தேங்கி நிற்கும் நிலைகளில் கெட்டவரின் நினைவுகளை எடுத்து இங்கிருந்து மறுபடியும் சுவாசித்து உயிரிலே பட்ட பின் எதுவோ அது இயக்குகின்றது.

ஒரு நாடாவிலே எதைப் பதிவு செய்கின்றோமோ அதை மீண்டும் ஓட்டப்படும் போது அந்த நாடாவில் உள்ளதைத்தான் ரேடியோவோ மற்ற இயந்திரங்களோ பேசுகின்றது. ட்ரான்சிஸ்டர் அந்த அலைகளை எடுத்துக் கொடுக்கின்றது.

இதைப் போல்
1.கூர்ந்து பார்க்கும் போது நம் கண்கள் அதை எடுத்து
2.அந்த உணர்வின் அலைகளை நமக்குள் அலைகளாகக் குவித்துக் கொடுப்பதைச் சுவாசித்து
3.அந்த அலைகளுக்குள் இருக்கும் உணர்வைத் தான் சொல்லாகவும் செயலாகவும் அது நம்மைப் பேசச் செய்கிறது.

ஆகவே இந்த உணர்வின் சக்தியை நாம் அதை எப்படிச் செயல்படுத்த வேண்டும்...? என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்தான் என்றால் நம் உயிர் இங்கே நரசிம்மனாக மாறி அதன் வழியில் தீமைகளைப் பிளக்க வேண்டும் என்று காவியங்களில் காட்டப்பட்டது.

ஒருவன் கெடுதல் செய்கிறான் என்று எண்ணும் போது அந்த உணர்வின் சக்தியை நாம் எடுத்து அவர்களைக் கவரப்படும் போது அந்த உடலிலிருந்து வந்த எண்ணங்கள் எல்லாம் நமக்குள் தெரிகின்றது.

அந்த உணர்வு நமக்குள் இயக்கி அவனை உதைக்க வேண்டும் என்று சொல்கிறது.
1.அதே உணர்வு என் உடலுக்குள் சென்றவுடனே என் நல்ல குணத்துடன் சண்டையிடுகின்றது.
2.நீ இரு நான் பார்த்துக் கொள்கிறேன்... என்று.

என் உடலுக்குள் நல்ல குணங்களுடன் கலந்தவுடனே நீ இரு... நான் பார்த்துக் கொள்கிறேன்..! என்று சொல்லப்படும் போது நல்ல குணங்கள் இந்த உணர்வைத் தாங்காது
1.மேல் வலிக்கிறது தலை வலிக்கிறது
2.கை குடைகிறது கால் குடைகிறது
3.நெஞ்சு வலிக்கிறது இரத்தக் கொதிப்பு வருகிறது வாத நோய் வருகிறது என்று
4.சீராக இயக்கக்கூடிய நிலைகள் அனைத்தையுமே நிறுத்தி விடுகின்றது.

இதை மாற்றுவதற்குத் தான் நரசிம்மா...!

கெடுதல் செய்தவர்களை எண்ணும் போது என்னை அந்தத் தீமை எப்படி இயக்குகிறதோ அதைத் துடைப்பதற்குத் துடைத்துப் பழகிய அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுதல் வேண்டும்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன் மனித உடலில் உயிருடன் ஒன்றிய உணர்வை ஒளியாக மாற்றிக் கொண்டான்.

துருவத்தை அறிந்தான்… துருவத்தை அடைந்தான்... துருவத்தின் உணர்வைத் தனக்குள் சேர்த்தான்... துருவ மகரிஷியானான். சிருஷ்டிக்கும் நிலை பெற்றான்... அந்த உணர்வு கொண்டு துருவ நட்சத்திரமாக இன்றும் ஒளியாக உள்ளான்...!

அவனைப் பின்பற்றிச் சென்றவர்கள் அனைவரும் ஏழாவது அறிவு கொண்டு சப்தரிஷிகளாக ஒளியாக மாறிச் சப்தரிஷி மண்டலமாக இருக்கின்றார்கள்.

அந்த அருள் சக்திகளைப் பெற்றால் நரசிம்மா..! தீமைகளை நீக்கி விட்டு ஒளியின் சரீரமாக மாற்ற வேண்டும். இந்த உடலிலிருந்து தான் அதை நாம் பெற வேண்டும்.