ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 14, 2021

நம் நல்ல குணங்கள் சீராக இயங்க சுதந்திரம் வேண்டும்

 

இன்று கோடிச் செல்வங்கள் வைத்திருப்போரும் சரி... அரசியலில் முன்னணியில் இருப்போரும் சரி... அரசியல் தலைவர்களும் சரி... யாரும் நிம்மதியாக இருப்பது இல்லை.

1.உலகம் முழுவதும் உள்ள அரசியல் வாழ்க்கை நடத்துபவர்கள் அனைவருமே
2.நிம்மதியற்ற வாழ்க்கை தான் வாழுகின்றனர்... “சுதந்திரம்” என்ற நிலை இல்லை.

அவர்கள் வெளியே வரவேண்டும் என்றாலும் அஞ்சித் தான் அவர்கள் வர வேண்டியுள்ளது. அவர்களுக்குப் பாதுகாப்பு பின்னாடியே வருகின்றது.

நாமும் இன்று பஸ்ஸில் சென்றாலும் அல்லது ரோட்டில் சென்றாலும் நமக்கும் அந்த முழுச் சுதந்திரம் இல்லை. எவன் பறிப்பான்...? எவன் அடிப்பான்...? அவன் கொல்வான்...? என்ற உணர்வில் தான் செல்ல வேண்டி இருக்கிறது.

சுதந்திரம் என்ற நிலை யாருக்கும் வரவில்லை. அரசியலிலும் சரி... செல்வாக்குடன் வாழ்வோரும் சரி... எல்லாம் ஓங்கி வளர்ந்து வந்தாலும் உடலில் சுதந்திரமான வாழ்க்கை இல்லை.

சுதந்திரமான வாழ்க்கை வாழ வேண்டுமென்றால் காந்திஜியை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
1.எத்தகைய தீமையும் அவருக்குள் புகாது “அனைவரும் சகோதரர்களே...” என்று
2.தன் உடலுக்குள் அந்த உணர்வை ஊட்டிக் கொண்டார்
3.அந்த சகோதரத்துவதைத் தான் அவர் தனக்குள் வளர்த்துக் கொண்டார்.

மதக் கலவரங்களும இனக் கலவரங்களும் இந்தியாவில் நடக்கும் போது மக்கள் மடிவதை... அசுர சக்திகள் இங்கே வந்து மாய்க்கின்றது என்று கூட அவர் எண்ணவில்லை. அசுர சக்தி என்ற எண்ணமே அவருக்குள் வரவில்லை.

“அனைவரும் ஒன்று...” என்ற நிலையில் உணர்ந்து சாந்த நிலைகள் கொண்டு நாம் மற்றவரையும் வாழ வைக்கும் போதுதான் இந்த உடலுக்குள் சுதந்திரம் கிடைக்கின்றது.

மனிதன் அழகாக இருப்பான்... செல்வமும் இருக்கும்... செருக்கும் இருக்கும். ஆனால் அவனுக்குச் சுதந்திரமில்லை.

காரணம்... அம்மம்மா...! என்று வேதனை உணர்வுடன் சாப்பிட முடியவில்லையே... படுக்க முடியவில்லையே... படுத்தால் தூங்க முடியவில்லையே...! என்றெல்லாம் புலம்பிக் கொண்டிருப்பார்கள்.
1.தூங்க வேண்டும் என்ற எண்ணம் கூட வருவதில்லை.
2.ஆனால் செல்வம் இருக்கும்... சுதந்திர வாழ்க்கை வாழ்வதில்லை.

ஆகவே அந்தச் சுதந்திரம் என்பது எது...?

1.தன் அருகில் இருக்கக்கூடிய மக்கள் அனைவரும் மகிழ வேண்டும்
2.நாங்கள் பார்க்கும் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று கல்யாணராமனாக
3.அந்த அரவணைக்கும் சக்தியாக எண்ணங்கள் ஒன்று சேர்ந்து வாழும்போது தான் நமக்குள் அந்த எண்ணங்கள் வளர்கின்றது

கல்யாணராமன் எப்போது ஆகின்றான்...?

திருமணம் ஆகும் போது நாம் எப்படி மகிழ்ச்சி பெறுகின்றோமோ அது போன்று நம் எண்ணங்கள் எல்லாம் ஒன்று சேர்க்கும் பொழுதுதான் அந்த மகிழ்ச்சி பொங்குகிறது.

பகைமை அற்ற நிலை உருவாகின்றது. இந்த மகிழ்ச்சி பேரானந்தத்தை நமக்குள் கூட்டுகின்றது.

ஒரு நண்பன் “அவன் உயர்ந்த நிலை பெற வேண்டும்” என்ற எண்ணத்தை நமக்குள் வளர்த்துக் கொண்டால் அவன் வளர... வளர... நமக்கு அந்த வளர்ச்சி உயர்ந்ததாக வளரும்.

அதே சமயத்தில் “எனக்கு இப்படி இடைஞ்சல் செய்கிறான்” என்ற உணர்வை எடுத்துக் கொண்டால் நமக்குள் இருக்கும் அந்த நல்ல மனம் சுதந்திரத்தை இழந்து விடுகின்றது.

அந்த உணர்வுகள் வளர வளர உடலுக்குள்ளேயே எதிரியாகி நம் நல்ல செயல்களை அழிதுக் கொண்டே இருக்கின்றது. சுதந்திரம் எங்கே இருக்கின்றது...? சுதந்திரமாக வாழும் தன்மை இல்லை.

காந்திஜி இதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றார். நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்... மடியவில்லை. உடல்தான் மடிந்தது. அவருக்குள் விளைந்த அந்த அரும் பெரும் சக்தி உலகம் முழுவதும் பரவி உள்ளது.

அவர் வாழ்ந்த காலத்தில் அவருடன் பழகிய நல்ல மக்கள் மத்தியிலும் இது பதிவாகியுள்ளது. ஆகவே...
1.அவர் உடலில் விளைந்த ஞான வித்தை நாம் வளர்த்துக் கொண்டால் அது அரும் பெரும் சக்தியாக மாறும்.
2.சாந்த குணத்தைப் பெறச் செய்யும்... சகோதர உணர்வுகளை வளர்க்கச் செய்யும்.
3.அதன் மூலமாக நாம் சுதந்திரமாக வாழ முடியும்...!