ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 19, 2021

மனிதனுடைய பரம்பரை வழியில் உடலைக் காப்பதா…? ஞானிகள் வழியில் உயிரான்மாவை ஒளியாக மாற்றுவதா…? – நடந்த நிகழ்ச்சி

 

சுமார் 12 அல்லது 13 வயது பெண் குழந்தை ஒன்று ஆஸ்த்மா நோயினால் மிகவும் வாடிக் கொண்டிருந்தது. எம்மிடம் (ஞானகுரு) அழைத்து வந்து விபரம் கேட்டார்கள்.

நோயின் கடுமையினால் வேதனை என்ற உணர்வையே எடுத்துக் கொண்டால் விஷத்தின் தன்மை அடைகின்றது. அதே சமயத்தில் விஞ்ஞான அறிவு கொண்டு
1.விஷத்தின் உணர்வை அதிகமாகச் சேர்த்திருப்பதால்
2.இந்த ஆன்மா உடலை விட்டுப் பிரிந்தால் மனிதன் அல்லாத பிறவியாகத்தான் பிறக்கும்..
3.ஆனால் அந்த உடலிலேயே அருள் மகரிஷிகளின் உணர்வை ஏற்றுக் கொண்டால்
4.இந்த உடலை விட்டுப் பிரிந்தால் அது பிறவியிலலா நிலை அடையும்…! என்று தெளிவாக்கினேன்.

அந்த மெய் ஞானிகளின் உணர்வின் தன்மை அந்தக் குழந்தைக்குச் செருகேற்றப்பட்டு உயர்ந்த நிலைகள் பெறவேண்டும் என்ற உணர்வுடனே தொடர்ந்து அதைச் செயல்படுத்தினார்கள்.

நுரையீரல் பாகத்தில் அதிகமான விஷ்த் தன்மை சேர்ந்து… நரம்பு இழுத்துப் பிடித்திருப்பதனால் அது அவஸ்தைப்படுகின்றது. அவர்கள் பரம்பரையில் அந்தப் பெண்ணின் அப்பாவிற்கு ஆஸ்த்மா இருந்தது.. தாத்தவிற்கும் உண்டு.

இப்படிப் பரம்பரை வழியாக வந்திருப்பதனால் இந்தப் பின்னம் அதிகமாக இருக்கும். இதிலிருந்து (பரம்பரை) விடுபட்டால் தான் நோயிலிருந்து தப்ப முடியும்.

இருந்தாலும்…
1.இந்த ஆன்மா பெண் குழந்தையாக இருக்கும் பொழுது அடுத்துத் திருமணமாகி
2.அதன் பின் இதன் வாழ்க்கையில் மீண்டும் அதீதமாக வேதனைப்பட்டால்
3.மனிதனல்லாத உருவாக உருவாக்கிவிடும்.

அதற்கு முன்னாடி… எம்மைச் சந்தித்த சந்தர்ப்பத்தில் அருள் ஒளியைச் சேர்க்கும் பருவமாக வரப்படும் பொழுது
1.இந்த ஆன்மா அருள் ஒளியின் தன்மை கொண்டு
2.மகிழ்ச்சியின் உணர்வு கொண்டு நஞ்சை வென்றிடும் உணர்வுகள் இதற்குள் பெறப்பட்டு
3.அதனுடைய வளர்ச்சியில் உடலை விட்டுப் பிரிந்தால்
4.அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணையவும்… உடல் பெறும் உணர்வுகள் கரையவும்…
5.பிறவியில்லா நிலையை அடையவும் இது உதவும்.

ஏனென்றால் கடும் நோய்வாய்ப்பட்டவரின் நிலைகளை அது மாற்றி அமைக்க வேண்டும். ஆனாலும் அந்தப் பெண்ணின் தாய் வேதனையை எடுக்கின்றது.

அதிலிருந்து மாற்றி ஒளியின் தன்மையாக மாற்றுவதற்கு “இந்த உடலிலேயே அந்த உணர்வுகளைக் கரைத்திட வேண்டும்…” என்ற நினைவை அங்கே கூட்டச் சொன்னேன்.

1.அதன் வழி பின்பற்றினால் எளிதிலே அங்கே சப்தரிஷி மண்டலம் போய்ச் சேரும்..
2.உடல் பெறும் உணர்வுகள் கரையும்…! என்றும் விளக்கமாகச் சொன்னேன்.

ஆகவே… மனிதன் இந்த உடலுக்கு இச்சையை அதிகமாகக் கூட்டாது அருள் ஒளி பெறவேண்டும்… இந்த வாழ்க்கையில் வரும் இருளை நீக்க வேண்டும்…! என்ற உணர்வை வலுவாக எடுத்தால் போதும்.

1.குறித்த காரியங்கள் பெறவேண்டும்…! என்று எண்ணுவதற்குப் பதில்
2.அருள் ஒளியின் உணர்வுகள் வரும் பொழுது தெளிவான உணர்வுகள் வரும்.
3.அப்பொழுது வழி அறிந்து செயல்படக்கூடிய திறன் வரும்.
4.சோர்வென்ற நிலைகள் விடாது தெளிந்த மனதைக் கூட்ட இது உதவும்.

ஆகவே எத்தகைய தொல்லைகள் வரினும் அருள் ஒளி எங்கள் உடலில் பெருக வேண்டும். இந்த உடலை விட்டுச் சென்றால் பிறவில்லா நிலை அடைய வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அந்த அரும் பெரும் சொத்தே… நமக்கு மிகப் பெரிய செல்வம் ஆகும்…!

நாம் தேடிச் செல்லும் எந்தச் செல்வங்களும் நம்முடன் வருவதில்லை. அழகான உடலும் நம்முடன் வருவதில்லை. அலங்காரப் பொருள்களும் நம்முடன் வருவதில்லை. ஆடம்பரமாகக் கட்டிய வீடும்… காரும்… நம்முடன் வருவதில்லை.

அருள் ஞானத்தை இந்த உடலில் வளர்த்துக் கொண்டால் உயிருடன் ஒன்றிய ஒள்யின் சரீரமாக நிலை பெறும். ஆகவே எதிலேயும் வேகாத நிலையாகப் பிறவி இல்லா நிலை அடைந்து… “அகண்ட அண்டத்தில் என்றுமே வாழலாம்…!”
1.அகண்ட அண்டத்தில் வாழும் பருவத்தை
2.இந்த உடலிலே சேர்த்தால் தான் அடுத்த நிலை வரும்.

ஏனென்றால் இந்த உடல் எந்த நேரத்திலும் போகத்தான் செய்யும். மிஞ்சிப் போனால்… கூட ஒரு பத்து இருபது வருடம் வாழப் போகின்றோம்… அவ்வளவு தான்…!

பெண் குழந்தை என்று வரப்படும் பொழுது “சீரான உடல் அமைப்பு இல்லை…” என்றால் திருமணம் ஆனாலும் மிகவும் வேதனைப்படும், குழந்தைப் பேறு போன்ற பருவங்கள் வரும் பொழுதெல்லாம் வேதனைப்படும்.

ஆகவே இந்த உடல் தேறாது என்ற நிலை வந்தவுடன் தேறுவது எது…?
1.அருள் உணர்வின் ஒளியே தேறும்.
2.அதுவே என்றும் பிறவியில்லா நிலை
3.இந்தப் பருவத்தில் ஒளியாகி விட்டால் நலமாகும்.

மாறாக… குழந்தை மேல் பாசமாக எண்ணி ஏங்கி விட்டால் அந்தப் பெண்ணின் ஆன்மா தாயின் உடலுக்குள் மீண்டும் வரும். இந்த உடலில் எந்த வேதனையை அது பட்டதோ தாயின் உடலுக்குள்ளும் அதே வேதனையைத் தான் உருவாக்கும்.