ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 17, 2021

பிறிதொருவரின் இயக்கமாக நாம் இயங்கிவிடக் கூடாது

 

அன்றாட வாழ்க்கையில் கோபமோ வெறுப்போ வேதனையோ போன்ற உணர்வுகளை எல்லாம் நாம் அதிகமாகச் சந்திக்க நேருகிறது… நமக்குள் அது எல்லாம் பதிவாகின்றது.
1.அதன் வழி நாம் சுவாசிக்க சுவாசிக்க
2.நம் உடலிலே அந்தந்த குணங்களுக்குண்டான அணுக்கள் பெருகுகின்றது.

கோபமும் வேதனையும் வெறுப்பும் வளரும்போது நம் நல்ல குணங்களுக்குள் ஊடுருவி உடலுக்குள்ளே பெரும் போராக நடக்கின்றது.

கார உணர்வுகளை உணவாக உட்கொள்ளும் அத்தகைய அணுக்கள் அதனுடைய வளர்ப்புக்குக் காற்றிலிருந்து தன் தன் இனமான உணர்வுகளை நுகரச் செய்து அது உணவாக எடுத்துக் கொள்ளும்போது
1.நம் உயிரிலே பட்டுத் தான் இந்த உணர்வுகள் செல்கின்றது
2.அதனால் நம் உடலுக்குள் குழப்பமும் சிந்திக்கும் தன்மை இழக்கும் சந்தர்ப்பமும் வருகிறது.

நல்ல அணுக்கள் உணவுக்காக உணர்ச்சிகளை உந்தினால் அதற்கு உணவு கிடைக்காதபடி நம்மை அறியாதபடி ஒரு இருண்ட நிலையாக மாறுகின்றது.

உதாரணமாக ஒருவன் அரக்கத்தனமாகத் தாக்கப்படும்போது அவன் உடலில் இருந்து விளைந்த உணர்வுகளை நுகரும் பொழுது அது வாலி.

நாம் அதை நுகர்ந்தோமென்றால் உடனே நம் உடலில் உள்ள நல்ல அணுக்கள் அனைத்தும் நடுங்கத் தொடங்குகிறது. அவனுடைய கார உணர்ச்சிகளை நம் உடல் தாங்காது உடல் நடுக்கமாகிச் சிந்திக்கும் செயலும் இழக்கப்படுகின்றது.

சிந்திக்கும் செயல் இழக்கப்படும் போது…
1.அவன் நம்மைத் தாக்கிக் கொல்வவதற்கு முன்
2.அவனைத் தாக்க வேண்டும்…! என்ற உணர்வுகள் நமக்குள் வருகின்றது.

இப்படி… சாந்தமாக இருக்கும் ஒருவன் கொலை செய்ய எப்போது காரணம் ஆகின்றான் என்றால் மற்றொருவன் கொலை செய்யும் உணர்வுகளைப் பார்த்துப் பதிவாக்கி அந்த உணர்ச்சிகளை நுகரப்படும் பொழுது இவனுக்குள் வந்து விடுகின்றது.

தான் வாழ வேண்டும் என்ற நிலையில் அடிக்கடி பிறரைக் கொன்று குவித்து அதன் வழி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஒருவன் எண்ணி எடுக்கின்றான்.

1.அதை அடுத்தவர் உற்றுப் பார்த்து நுகரப்படும் போது ஓ…ம் நமச்சிவாய… அவர்கள் உடலாக மாறி
2.சிவாய நம ஓ…ம் நுகர்ந்த உணர்வுகள் அந்த எண்ணங்களாக அவனையும் கொலை செய்ய
3.இந்த உடலிலிருந்து மீண்டும் செயல்படுத்தத் தொடங்குகிறது.

கெடுதல் செய்கிறார் என்ற உணர்வினை நாம் அடிக்கடி நுகர நேர்ந்தால் சிவாய நம ஓ…ம் அவனின் அசுர உணர்வுகள் நம்மை இயக்கி நம் உடலில் உள்ள நல்ல அணுக்களை அது மாற்றி அமைக்கத் தொடங்கி விடுகின்றது.

ஆகவே…
1.எடுத்துக் கொண்ட (சுவாசித்த) உணர்வுக்கொப்ப நாம் எவ்வாறு இயங்குகிறோம்…?
2.பிறிதொரு உணர்வால் எவ்வாறு நாம் இயக்கப்படுகின்றோம்…?
3.இதிலிருந்தெல்லாம் நம்மை நாம் எப்படிக் காத்துக் கொள்ள வேண்டும்…? என்பதனை அறிந்து
4.தீமைகளை வென்ற மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொரு நிமிடமும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்குத் தான்
5.இதை எல்லாம் உங்களுக்குள் தெளிவாக்கிக் கொண்டே வருகின்றோம்.