ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 10, 2021

இருதயத்தைச் சீராக இயங்கச் செய்யவும்... மன வலிமை பெறச் செய்யவும் நாம் தியானிக்க வேண்டிய முறை

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இருதயம் முழுவதும் படர்ந்து இருதயத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் கண்ணின் நினைவை இருதயத்திலே செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை இருதயத்திலே செலுத்தி நல்ல அணுக்களை அங்கே உருவாக்கி
1.உடல் முழுவதற்கும் நல்ல இயக்கச் சக்தியாக மாற்றவும்
2.நல்ல இரத்தங்களை உறுப்புகள் முழுவதற்கும் பாய்ச்சக் கூடிய வலிமை பெறச் செயுங்கள்.
3.சிறு மூளை முதற் கொண்டு மேலே நல்ல இரத்தம் சென்று நல்ல உணர்வாக மாற்ற
4.அத்தகைய திறன் கொண்ட இதயத்தை உங்களிலே உருவாக்குங்கள்.

உங்கள் இருதயத்தை உருவாக்கிய அணுக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

மீண்டும் நினைவு படுத்துகிறேன். அருள் உணர்வின் இயக்கமாக அந்த அணுக்களுக்கு இதை ஊட்டுகின்றேன் (ஞானகுரு).

அந்தச் சக்தி பெற வேண்டும் என்ற ஏக்கத்தால் அதைப் பெறச் செய்யுங்கள்.
1.உங்களால்தான் முடியும்... நீங்கள் எண்ணினால் முடியும்.
2.அந்த உணர்வின் தன்மையை நீங்கள் ஈர்க்கக்கூடிய சக்திக்கு
3.எமது அருளும் குரு அருளும் உங்களுக்குள் கலந்து உறுதுணையாக இருக்கும்.

இப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி நேரடியாக இருதயத்திற்குக் கிடைக்கக்கூடிய திறன் பெறுகின்றது. அதைப் பெற்று உங்கள் இதயத்தைச் சீராக்கிக் கொள்ளுங்கள்.

இருதயத்தில் வலி இருந்தால்... வாய்வினாலேயோ மற்ற நிலைகளினாலோ... இருதயம் பலவீனமாக இருந்து ஹார்ட் அட்டாக் வரக்கூடிய அத்தகைய அணுக்கள் இருந்தால் அதை எல்லாம் மாற்றித் தெளிவான இருதயமாக நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும்.

துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளைப் பெருக்கி உடலில் எல்லா அணுக்களிலும் ஒளி என்ற உணர்வைப் பாய்ச்சி உடல் முழுமைக்கும் நல்ல உணர்வுகளை உருவாக்கும் திறன் கொண்ட இதயமாக உங்களுக்குள் உருவாக்குங்கள்.

1.அருள் உணர்வைச் சேர்த்து அசுர குணங்களை நீக்கச் செய்யும் சக்தியாக
2.அறியாது சேர்ந்த அசுர குணங்களை அகற்றிடும் சக்தியாக
2.நல் உணர்வை வளர்க்கும் சந்தர்ப்பமாக உருவாக்குங்கள்.

நரகாசுரனைக் கொன்ற நாள் என்று ஞானிகள் சொன்னது போல் கண்ணின் நினைவு கொண்டு அந்த அருள் உணர்வுகளை உடல் முழுவதும் பாய்ச்சி
1.அசுர குணங்களை... அசுர அணுக்களை
2.நமக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள்.

நல்ல உணர்வின் இயக்கம் கொண்ட உடல் உறுப்புகளாக நமக்குள் உருவாக்கச் செய்யும் அந்தச் சக்தி பெறச் செய்வதே இந்தத் தியானத்தின் நோக்கம்.

உதாரணமாக இருதயத்தில் பலவீனம் இருந்தால்
1.அது பம்ப் செய்யும் போது கிடைக்கவில்லை என்றால் துடிப்பு வேகமாக இருக்கும்.
2.சில உணர்வின் மோதல் அழுத்தமானல் இரத்தம் போகாது தடுக்கும் போது அந்த நேரத்தில் துடிப்பு அதிகமாகும்.
3.நரம்புகளில் அந்த இயக்கச் சக்தி அது போகும் பாதையில் பலவீனமானல் இழுக்கும் சக்தி குறையும்.

அந்த மாதிரி நேரங்களில் எல்லாம் வலியும் வேதனையும் தோன்றும்.

அதைப் போன்ற நிலையில் இருந்து தப்ப உங்கள் கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் இருதயத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வைப் பாய்ச்சுங்கள்.
1.சீரான நிலைகள் கொண்ட இருதயமாக நீங்கள் இயக்கச் செய்யுங்கள்
2.உங்கள் கண்ணின் நினைவினை இருதயத்தில் செலுத்தி அந்த உயர்ந்த சக்திகளைப் பெறச் செய்யுங்கள்.