ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 29, 2020

விஞ்ஞானத்தின் சக்தி மிக மிக வீரியம் கொண்டதாக… நுண்ணிய அறிவாக இருந்தாலும்... தனக்குள் வரும் தீமைகளைப் பிளக்க முடியவில்லை…!

குருநாதர் காட்டிய அருள் வழியில் 2000 சூரியக் குடும்பங்களைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கின்றேன். அதை எல்லாம் இலேசில் சொல்லகின்றேன் (ஞானகுரு) என்று எண்ண வேண்டாம். என்னை அங்கேயே அழைத்துச் சென்றார் குருநாதர்…!

அந்த அண்டங்களிலே எவ்வாறு இயக்குகின்றது….? அங்கேல்லாம் எடுத்துக் கொண்ட உயிரணுக்களின் வளர்ச்சி எப்படி இருக்கின்றது…? அந்த 2000 சூரியக் குடும்பங்களில் உள்ள பூமிகளில் மனிதர்கள் முடி இருப்போரும் உண்டு… கூழையாக இருப்போரும் உண்டு… நம் பூமியைக் காட்டிலும் மிகவும் விஞ்ஞான அறிவில் உயர்ந்தோரும் உண்டு.

விஞ்ஞான அறிவின் நுண்ணிய அலைகள் கொண்டு
1.இங்கே நாம் எப்படி எலக்ட்ரானிக் நிலைகளைச் செயல்படுத்துகின்றோமோ இயந்திரங்களை மாற்றுகின்றோமோ…
2.மந்திர ஒலி கொண்டு மனிதனை உருக்குலையச் செய்து ஆவியாக மாறுகின்றானோ…. கூடு விட்டு கூடு பாய்கின்றானோ… இதைப்போன்று
3.நம் பூமியில் இருப்பது போல 2000 சூரியக் குடும்பங்களில் நான்கு சூரிய குடும்பங்களில் இது உண்டு.

அவர்கள் தன் உணர்வின் தன்மை தனக்குள் எடுத்து… உடலையே ஒளியாக மாற்றி… “எங்கு வேண்டுமானாலும் செல்லும் சக்தியாக” மந்திர ஒலியால் உருவாக்கிக் கொண்டவர்கள்.

நம்மைக் காட்டிலும் அங்கே மந்திர ஒலிகளைக் கொண்டு உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி மற்ற இடங்களுக்கு ஊடுருவிச் செயல்படும் தன்மைகள் உண்டு.

இது எல்லாம் குருநாதர் எனக்குக் காட்டிய நிலைகள்…!

ஏனென்றால் இதைப் பற்றி முந்தி சாமி (ஞானகுரு) சொல்லவில்லையே…! என்று எண்ணலாம். எதை எதைச் சொல்வது…? எதை மனதில் பதிய வைப்பது…? என்று அந்தந்தக் காலம் வரும்போது தான் இதை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

எலக்ட்ரானிக்….! என்று ஒரு பொருளின் தன்மையை ரூபமாக மாற்றி இன்று எப்படிக் காட்டுகின்றாரோ இதைப் போலத்தான் மற்ற சூரியக் குடும்பத்திலிருந்தும் அவர்கள் விண் விசையின் தன்மையை எலக்ட்ரானிக்காகத் தனக்குள் மாற்றி
1.நம் பூமிக்கும் வந்து செல்கின்றார்கள் (ALIENS)
2.பறக்கும் தட்டு… அந்தத் தட்டு…! என்றெல்லாம் சொல்வார்கள்.

ஆக… எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றார்கள். தன் உந்து விசையின் தன்மையால் இழுக்கின்றார்கள்… குவிக்கின்றார்கள். தன்னுடைய நிலையை “அடுத்தவர்கள் வருவதற்கு முன் மறைந்து விடுவார்கள்…!”

இங்கே நம் பூமியில் இவர்கள் செய்யும் (எலக்ட்ரானிக்) விஞ்ஞான அறிவைப் போல அவர்கள் மேன்மை கொண்டவர்கள். நம் பூமியில் வந்து செல்கின்றார்கள் அந்த உணர்வலைகளை நம் பூமி கவர்கின்றது.

1.உணர்வின் தன்மை எலக்ட்ரானிக்கில் இணைத்த பின் அலைகளாக மாற்றி
2.மீண்டும் எங்கேயும் ஊடுருவி… இந்த உணர்வின் தன்மை எங்கு வேண்டுமானாலும் செலுத்தப்பட்டு
3.எலக்ட்ரானிக்கின் கருவி கொண்ட மற்ற இயந்திரங்களையோ சாதனங்களையோ இயக்கி விட்டு
4.இனம் புரியாத நிலைகள் செல்லும் நிலைகளும் உண்டு.

இந்த எலக்ட்ரானிக் நிலைகளை அலைகளாக பிரிக்கப்படும் நிலைகள் நம் பூமியிலும் இது நடக்கின்றது. நம் பூமியில் லேசர் (LASER) கதிரியக்கப் பொறிகளைக் கொண்டு மற்றொரு நாட்டிற்குள் ஊடுருவச் செய்கின்றார்கள்.
1.அந்த எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற கதிரியக்கங்களைப் பாய்ச்சியபின்
2.அது மின்னணுவாக அதனுடைய அதிர்வின் நிலைகளைக் கொண்டு
3.அந்த நாட்டில் இருக்கக்கூடிய நுண்ணிய அறிவுகளையும்
4.இயந்திரத்தின் மூலமாக (அவர்களுக்குத் தெரியாமல்) காண்கின்றார்.

மிக மிகச் சிறிய நிலைகளை நாம் கண்ணால் பார்க்க முடியவில்லை என்றாலும்
1.அதற்கென்று ஒரு சாதனத்தை… ஊசி முனை (PROBE) என்ற அளவுகோலை வைத்து
2.விமானத்தின் மூலம் விண்ணிலே பறந்து கொண்டே பார்க்கும் நிலைகளுக்கு
3.விஞ்ஞான அறிவு நம் நாட்டிலேயே வந்துவிட்டது.

காரணம்… இதனுடைய நுண்ணிய அறிவினைக் காட்டப்பட்டு அதனைக் கொண்டு வளர்க்கின்றார்கள். இப்போது சாதாரண கருவிகளின் உணர்வின் தன்மையைப் பிளக்கப்பட்டு… “கதிரியக்கத்தால் அ8லைகளாகப் பிரிக்கப்பட்டு…” அதனுடைய அளவுகோலை எல்லாம் அளந்து அறிகின்றார்கள்.

ஒரு அலையின் தன்மை எந்த அளவு இருக்கின்றதோ… அதனின் நுண்ணிய உணர்வின் அதிர்வுகளைக் கண்டுணர்ந்து… அதனின் செயலாக்கங்கள் இன்னது தான்…! என்று அவன் காணுகின்றான்.

அதைப் போலத்தான் பூமிக்குள்ளும் கதிரியக்கச் சக்திகளை ஊடுருவச் செய்து அதனை நுண்ணிய அளவுகோல் கொண்டு அளந்தறிந்து… பூமிக்குள் இன்னென்ன பாகங்களில் இன்னென்ன உலோகங்கள்… நீர் வளங்கள்… எண்ணெய் வகைகள்… மற்ற பொருள்கள் அங்கே விளைகின்றது..! என்ற கண்டுபிடிக்கும் உணர்வுகள் விஞ்ஞான அறிவால் வந்து விட்டது.

ஆனால் மெய் ஞானிகளோ…
1.அவர்கள் கண்ணின் நினைவை எதன் பக்கம் பாய்ச்சுகின்றனரோ… அதற்குள் ஊடுருவி..
2.அதன் உணர்வின் தன்மையை அறிந்து… தனக்குள் அதை நுகர்ந்து
3.தான் யார்…? என்று தன்னை அறிந்து கொண்டவர்கள்…!

விண்ணுலக ஆற்றலையும் பேரண்ட உணர்வுகளையும் தனக்குள் அவர்கள் கவர்ந்து
1.மனிதனுக்குள் வந்த தீமைகளைப் பிளந்து…
2.தீமைகளைப் பிளந்த உணர்வுகளைக் கதிரியக்கங்களாக மாற்றிக் கொண்டார்கள்
3.தன் உணர்வின் செயல் அனைத்தையும் அவ்வாறு மாற்றிக் கொண்டார்கள்.

தன் எண்ணங்கள் கொண்டு எல்லாவற்றிலும் ஊடுருவி ஒவ்வொன்றையும் தனக்குள் கவர்ந்து அந்த உணர்வின் செயலாக்கங்களைத் தனக்குள் பிளந்திடும் சக்தியாக… அணுக்களாக வளர்ச்சி செய்யப்பட்டு தன் உடலில் வந்த தீமையான நிலைகளை எல்லாம் சுட்டுப் பொசுக்கினார்கள் அந்த மெய் ஞானிகள்.

1.இருளைப் போக்கும் உணர்வைத் தனக்குள் விளைய வைத்தான்.
2.உயிருடன் ஒன்றினான்… துருவ நட்சத்திரமானான்…
3.அவனைப் பின்பற்றி சென்றவர்கள் அனைத்தும் தீமையை விலக்கிடும் சக்தி பெற்று
4.அவன் ஈர்ப்பிலே சப்தரிஷி மண்டலமாக உள்ளார்கள்

விஞ்ஞானிகளோ அணுவைப் பிளந்து… அணுவின் தன்மை கொண்டு கதிரியக்கங்களாக மாற்றி… அந்தக் கதிரியக்கப் பொறிகளை ஒன்றுடன் பாய்ச்சப்படும்போது ஒளி அலைகளைக் கண்டுணர்ந்து (லேசராக)
1.அதனுடைய இயக்கம் எவ்வாறு…?
2.அதனுடன் கலந்த நிலைகள் எது..? என்று
3.தனக்குள் விரிவுப்படுத்தி அறிகின்றார்கள்

இதைப் பற்றிய விஞ்ஞான அறிவு கொண்டோர் யார் இருந்தாலும் சரி.. நான் (ஞானகுரு) சொல்லும் பொறிகளின் நிலைகளைச் சிந்தித்துப் பாருங்கள். அந்தப் பொறியின் அளவுகோலைப் பற்றிச் சொன்னதை எல்லாம் விஞ்ஞானிகள் வெளிப்படுத்துவார்கள்.

ஏனென்றால்... நம் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) விஞ்ஞானிகள் எவ்வாறு செயல்படுத்துகின்றார்கள்…? என்ற நிலைகளை உணர்த்தினார்.

அதனுடன் தொடர்பு கொண்டு விண் அணுக்களின் நிலைகளையும் அதே சமயத்தில் கதிரியக்கப் பொறிகளின் நிலைகளையும்…
1.உணர்வுகள் எதனுடன் ஊடுருவுகின்றது…?
2.அது எவ்வாறு பிளக்கின்றது…?
3.பிளந்த நிலைகளைள எவ்வாறு அதிர்வுகளால் அறிகின்றான்..?
4.அதை இணைத்துக் கொண்டபின் எவ்வாறு இயக்குகின்றான்…? என்ற நிலையை எல்லாம் தெளிவாக எடுத்துரைத்தார் குருநாதர்.

இவ்வளவையும் படிக்காதவன் நான் சொல்லி விட்டால்.. அப்புறம்   படித்தவர்கள் விஷயத்தை நிறைய எடுத்துக் கொள்ளுவார்கள். எடுத்து அவருடைய ஆராய்ச்சிக்குத் தான் கொண்டு போவார்கள். விஞ்ஞான அறிவுக்குத் தான் பயன்படும்… தீமைகளைப் பிளக்க முடியாது…!

1.ஆனால் அந்த மெய் ஞானியின் உணர்வின் அதிர்வுகளை நமக்குள் செலுத்தினால்
2.இந்த உணர்வின் எண்ணத்தோடு பாய்ச்சப்படும்போது எத்தகைய தீமைகளையும் பிளக்க முடியும். 
3.விஞ்ஞானத்தால் வரும் கடுமையான விஷங்களையும் ஒடுக்க முடியும்
4.மெய் ஞானிகளுடன் ஒன்றி என்றுமே ஏகாந்தமாக வாழ முடியும்.