ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 25, 2020

ஈசனைப் பற்றியும்… ஈஸ்வரபட்டரைப் பற்றியும்… தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்


குருநாதர் பெற்ற அந்தச் சக்தி எமக்குள் ஞான வித்தாக வளர்த்த அந்த உணர்வின் சக்தியை உங்களுக்குள் நினைவைக் கூர்ந்து கேட்கும்படி செய்து அருள் ஞான வித்தாக உங்களுக்குள் பதிவு செய்து கொண்டே வருகின்றோம்.

அந்த வித்தினை வளர்க்க நாம் தியானிக்க வேண்டும். எந்த வித்தின் தன்மை அவர் பெற்றாரோ அந்த நினைவைக் கொண்டு நீங்கள் ஏங்கி அந்த வித்தினை வளர்க்கும் தன்மை தான் யாம் சொல்லும் இந்தத் தியானம்.

இந்தத் தியானத்தின் நினைவு கொண்டு உங்களுக்குள் வளர்த்து…
1.அருள் ஞானச் சத்தாக உங்களுக்குள் விளைய வைத்து
2.அருள் ஒளியின் சுடராக உங்கள் எண்ணங்கள் சென்று
3.அந்த உணர்வின் நிலையை உடலின் உணர்வின் ஒளியாக மாற்றிட
4.இது உங்களுக்குள் உபயோகமாக இருக்கும்.

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா...! என்று சொல்லும் பொழுதெல்லாம் ஜீவ அணுவாக இருந்து நமது உயிர் தனக்குள் சேர்த்துக் கொண்ட அனைத்திற்கும் உயிரே குருவாக இருக்கின்றது என்று எண்ண வேண்டும்.

நமது குரு அண்டசராசரத்தைத் தனக்குள் கண்டுணர்ந்தார். தீமைகளை அகற்றிடும் உணர்வின் தன்மை கொண்டு
1.அருள் ஞான வித்தாக நமக்குள் தெளித்த உணர்வுகள்…
2.அவரின் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்யப்படும்போது
3.அந்தக் குருவை நீங்கள் நினைவில் கொண்டால்
4.அவர் பெற்ற உணர்வின் சக்தியும் அவரின்று வெளிப்பட்ட உணர்வையும் அது உங்களுக்குள் இயக்கப்பட்டு
5.அவர் அருள் ஞானம் பெற்ற அருள் வழியில் அது குருவாக உங்களுக்குள் நின்று
6.வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி மெய்ப் பொருளைக் காணும் உணர்வின் குருவாக உங்களுக்குள் அமைந்து
7.அருள் வழியாக உங்களுக்குள் சேர்த்து இருளை அகற்றிடும் உணர்வாக விளைந்து
8.அதன் வழி இன்று குரு அமர்ந்திருக்கும் சப்தரிஷி மண்டலத்துடன் நம்மை அழைத்துச் சென்று..
9.நம்மை அரவணைத்துப் பிறவியில்லா நிலைகளை அடையச் செய்யும்…!

ஆகவே நாம் அந்தக் குரு வழியில் செல்வோம்.

இந்த வாழ்க்கையில் என்னைத் துன்பப்படுத்தினார்…! என்ற உணர்வினை நமக்குள் வளர்த்துக் கொண்டால் அது ஓ… என்று ஜீவ அணுவாகி விடுகின்றது. அந்த துன்பப்படுத்தும் உணர்வை நமக்குள் அதிகமாக வளர்த்தால் அது குருவாகின்றது.

அது குருவானால் இந்த உடலைத் துன்பப்படுத்தி எவர் துன்பப்படுத்தினாரோ அவர் உடலுக்குள் அழைத்துச் சென்று அதன் குரு வழி கொண்டு அவனுள் நம்மைச் சேர்த்துவிடும். இருள் சூழ்ந்த நிலைகளை நமக்குள் உருவாக்கிவிடும். ஆகவே
1.நாம் எண்ணியது எதுவோ…
2.நாம் எதன் வழி செயல்படுகின்றோமோ
3.அதுவே நமக்குள் குருவாகின்றது.

ஏனென்றால் நாம் எண்ணியது அனைத்திற்கும் உணர்வின் தன்மை நமது உயிரே குருவாக இருக்கின்றது.

ஆனால் நமது குரு அண்டசராசரத்தையும் தனக்குள் வளர்த்து நஞ்சினை வென்றிடும் உணர்வினைத் தனக்குள் பெற்று அதனின் அருள் ஞான வித்தாக எனக்குள் பதிவு செய்தார். அதை வளர்த்துக் கொண்டேன்.

அவர் காட்டிய வழியில்… நீங்களும் அந்த அருள் ஞானச் சக்தி பெற வேண்டும் என்று… அருள் ஞான வித்தை உங்களுக்குள் இதனை உபதேசமாகக் கொடுக்கின்றோம்.

இந்த உயிர் எப்படி மனிதனானதோ மனிதனானபின் ஒளிச் சரீரம் எப்படிப் பெற்றேன்…? என்று குரு கண்ட உணர்வின் தன்மையை அந்த அருள் ஞான வித்தை உங்களுக்குள் ஊன்றுகின்றோம்.

உயிர் உடலை வளர்த்ததையும் உணர்வின் தன்மை பெற்றதையும் இதனின் தன்மை உங்களுக்குள் பதிவு செய்ததை
1.மீண்டும் நினைவு கொண்டு அந்தக் குருவினைக் கண்டால்
2.அவர் ஒளிச் சரீரம் பெற்ற நிலையில் நம்மை அங்கே அழைத்துச் செல்லும்.
3.அவர் அரவணைப்பில் வைத்துக் கொள்ளும்…
4.இன்னோரு உடல் பெறா நிலையை உருவாக்கும்.

நம் உயிர் குரு என்றாலும்…
1.நம் குருநாதர் பெயரும் ஈசன் தான்
2.நம் உயிர் பெயரும் ஈசன் தான்…!

ஆகவே இந்த இரு உணர்வும் ஒன்றி…
1.உயிர் உருவாக்குவது போன்று நம் குருநாதர் உருவாக்கி
2.அது ஜீவ அணுக்களாக மாற்றும் திறன் பெற்றதனால்
3.ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்று சொல்லும் பொழுதெல்லாம்
4..நம் உயிரையும்
5.நம் குருநாதர் காட்டிய அந்த ஈசனான நிலையையும்
6.இரண்டு தரம் நினைவில் கொண்டு வாருங்கள்.

இந்த நினைவின் அடிப்படையில் நாம் எண்ணும்போது குரு பெற்ற அருளை நாம் முழுமையாகப் பெறுகின்றோம்…!

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா...!