
நாம் அனவரும் ஒன்று சேர்ந்து துருவ நட்சத்திரத்தின் சக்தியை உலகமெங்கும் பரவச் செய்வோம்
அருள் ஞானச்
சக்கரத்தை தினமும் உற்றுப் பாருங்கள். அதிலிருந்து துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி வரும்.
என்னென்ன காரியங்கள் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதை எல்லாம் எண்ணுங்கள்.
1.குடும்பத்தில் ஒன்றுபட்டு வாழ வேண்டும்
2.விவசாயம் செழிக்க வேண்டும்
3.தொழில் பெருக வேண்டும் வாடிக்கையாளர்கள் நலமாக வாழ
வேண்டும்.
4.நோயுற்றவர்களுக்குத்
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைத்து
5.அவர் நோய் நீங்கி உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
சக்கரத்தை வைத்துப் பயபக்தியுடன்
செயல்படுங்கள். பாலோ பழமா பதார்த்தத்தையோ வைத்துத் தியானம் இருந்துவிட்டு நீங்களும்
உட்கொள்ளுங்கள்… குழந்தைகளுக்கும் கொடுங்கள்.
எல்லோரும் உடல் நலம் பெற வேண்டும் அருள் ஞானம் பெற வேண்டும் என்று இந்த வழியைக் கடைப்பிடித்து வாருங்கள்.
எங்கள் ஊர் நன்றாக இருக்க வேண்டும் தெரு நன்றாக இருக்க வேண்டும் வீடு நன்றாக
இருக்க வேண்டும் அடிக்கடி இந்த உணர்வுகள் இங்கே படர வேண்டும் என்று சக்கரத்தை
உற்றுப் பார்த்து இந்த உணர்வுகளைப்
பரப்புங்கள்.
1.ஊரில் உள்ள அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும்
2.ஊரிலே விவசாயம் செழிக்க வேண்டும்
3.மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று
4.”சக்கரத்திற்கு முன்…” இதை எல்லாம் சொல்லிக் கொண்டே
வாருங்கள்.
அதன் வழி ஓரளவுக்கு
அனைவருக்கும் இந்த உணர்வுகள் படரும்…
பரவும். ஊரில் உள்ள குடும்பங்களும் நலமாகும் சக்தி பெறும். இந்த உணர்வுகள் பரவப் பரவ எல்லோரும் அதைப் பெறும்
தகுதி ஏற்படும்.
டிவி ஸ்டேஷனில் எந்த ஒளிபரப்பு
செய்கின்றார்களோ அந்த அலைவரிசையைத் திருப்பினால் அது தான்
வரும். அதே போல
1.குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் அந்த அல்லைவரிசையை எடுத்துப் பரப்பப்படும் பொழுது
2.மற்ற
யாரிடமும் பேசினாலும் கூட அவர்களுக்குள்ளும்
இது பதிவாகின்றது.
அவர்களுக்கு இந்த எண்ணம் வந்தால் அதை எடுத்து வளர்த்துக் கொண்டால் அவர்களும்
அவர்களை அறிய முடிகின்றது. அறியாது வந்த கஷ்ட நஷ்டங்களைப் போக்க முடிகின்றது.
உலகம் நலம் பெற்று வாழ நாம் இந்த முறைப்படி தியானத்தைச் செயல்படுத்த வேண்டும். எல்லோரும் நன்றாக ஆகும்பொழுது நமக்குள் அருள் மகரிஷியின் உணர்வுகளை எளிதில் பெற முடியும்.
ஒவ்வொரு
குடும்பங்களிலும் கூட்டுத் தியானமிருங்கள். அந்தக் குடும்பம் நன்றாக வேண்டும்… குடும்பத்தில் குழந்தைகளும்
மற்றவர்களும் தொழிலும் சீராக வேண்டும் என்று தியானமிருங்கள்.
நோயற்றவர்களுக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் அவர்கள் நலம் பெற
வேண்டும் என்று கூட்டுத்
தியானத்தில் முயற்சி எடுங்கள்… நலமாக வேண்டும் என்று ஒன்று
சேர்ந்து சொல்லுங்கள். கூடுமானவரை சீக்கிரம்
அவர்கள் உடல் நலம் பெறுவார்கள்.
என்ன தான் நோய் நீங்கினாலும் கூட நாம் வாழக்கூடிய காலம் குறுகியதுதான். எப்படியும் இந்த உடலை விட்டு நாம் பிரியத் தான் வேண்டும்… இந்த
உடல் நமக்குச் சொந்தம் இல்லை.
அப்பொழுது என்ன செய்ய வேண்டும்…?
1.எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று அருள் ஒளியை அங்கே பாய்ச்சப்படும் பொழுது
2.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் நமக்குச் சொந்தமாகின்றது.
உடல் நோய்வாய்ப்பட்டாலும் உடல் சுருங்கத் தான் செய்யும்… அருள் உணர்வுகள் பெற்ற பின் தீய உணர்வுகள் தீய அணுக்கள் குறையப்படும் பொழுது உடல் சுருங்கத் தான் செய்யும். ஆனால்
1.பேரருள் என்ற உணர்வுகள் உயிரிலே பட்டு… ஒன்று
சேர்த்து இணைந்த பின்
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திலிருந்து அதைக் கவர்ந்து
3.அந்த உணர்வை உணவாக எடுத்து “ஒளியின்
பிளம்பாக…” மாறும்.
எப்போதுமே பிறவியில்லா நிலை அடையும் அந்தச் சக்தி பெறுகின்றோம். அதைத்தான் இராமாயணத்தில் இராமன்
நேரமாகிவிட்டது என்று மனதைக் குவித்துப் பூஜித்தான் என்று
காட்டியிருப்பார்கள்.
நம்முடைய எண்ணங்கள் அனைத்தும் ஒன்று சேர்த்து… பகைமை இல்லாத உணர்வுகளை வளர்த்து… உடலில் இருக்கும் பொழுது ஒளியின் உணர்வைச் சேர்த்து… உயிருடன்
ஒன்றி ஒளியின் சரீரமாக மாற்ற வேண்டும். கடைசி நிலை அது
தான்…!