ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 30, 2025

“தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டுள்ளது போல் தான்” இன்றைய மனிதனின் வாழ்க்கை இந்த உலகிலே உள்ளது

“தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டுள்ளது போல் தான்” இன்றைய மனிதனின் வாழ்க்கை இந்த உலகிலே உள்ளது


பூமிக்கு வெளியிலே அணுகுண்டுகளை வெடித்துப் பரீட்சித்துப் பார்த்ததும்ராக்கெட்டுகளை அதிகமாக விண்ணிலே செலுத்திக் கொண்டிருப்பதும்… அதன் மூலம் கதிரியக்கங்கள் எல்லாக் கோள்களுக்குள்ளும் அதிகமாகப் பரவி விட்டது.
 
நட்சத்திரத்திலிருந்து இயற்கையாக வெளிப்படக்கூடிய கதிரியக்கச் சக்திகள் ஒன்றுடன் ஒன்று மோதி மின்னலாக வரும் பொழுது
1.விஞ்ஞானத்தினால் பரவச் செய்துள்ள கதிரியக்கங்களில் இது பட்ட பின் இரு மடங்காகிவிடும் கோள்களிலும் இது அதிகமாகிவிடும்.
2.இப்படிப்பட்ட அலைகள் இந்தப் பிரபஞ்சத்திற்குள் இப்பொழுது சுழன்று கொண்டுள்ளது சூரியனுக்கு அருகிலும் வந்துவிட்டது.
 
உதாரணமாக… இரண்டு மின்சார வயர்கள் ஒன்றுடன் ஒன்று மோதினால் இரண்டு மடங்கு கரண்டுகள் அதிகமாகி அதனுடன் சேர்ந்த பல்புகள்மற்ற சாதனங்கள் அனைத்தும் ஃப்யூசாகி விடுகின்றது.
 
சூரியனின் சுழற்சியில் இப்பொழுது மின்சாரம் (இயக்கம்) சீராக இருக்கின்றது. ஆனால் இயற்கையால் உருவாகும் கதிரியக்கமும் மனிதனால் பரவச் செய்த கதிரியக்கமும் மோதிய பின் இரு மடங்கு இயக்கமாகி சூரியனுக்குள் அப்படிச் செல்லும் போது அங்கே இரு மடங்கு மின்சாரம் உற்பத்தி கும்.
 
அப்போது நம் உயிரின் துடிப்பும் அதிகரிக்கப் போகின்றது. அதனால் நம் உடலில் உள்ள அணுக்களும் வேகமாகத் துடிக்க ஆரம்பிக்கும். இப்படி வேகமானால் சிந்திக்கும் தன்மை இழந்து விடுவோம்.
 
ஒரு நொடிக்குள் இப்படி நடந்து விட்டால்
1.மனிதனுக்கு மனிதன் அடித்துக் கொல்லும் நிலை வந்துவிடும்.
2.இந்த உணர்வலைகள் பாய்ந்து காட்டிற்குள் இருக்கக்கூடிய மிருகங்களும் நகரத்திற்குள் வரும் வாய்ப்புகள் உண்டு.
3.ஒரு நாள் முழுவதற்கும் இதனுடைய பாதிப்பு இருந்தால் உலகில் முக்கால்வாசி மக்கள் தன் நினைவை இழந்து இறந்து விடுவார்கள்.
 
விஞ்ஞான ரீதியில் எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்று எத்தனையோ கம்ப்யூட்டர்களை உலகெங்கிலும் வைத்துள்ளார்கள். எலக்ட்ரிக்கின் சக்தி இரு மடங்காகும் பொழுது அதனுடன் தொடர்பு கொண்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் அனைத்தும் கருகிவிடும்.தில் இவர்கள் வைத்திருக்கின்ற அளவுகோலும் மாறிவிடும்.
 
அடுத்த நாட்டை அழிப்பதற்காக பூமிக்குள் எத்தனையோ குண்டுகளைச் சேமித்து வைத்துள்ளார்கள். அதிலே மற்ற மின்னலோ இயற்கையின் சீற்றங்களோ பாதித்து விடாதபடி அதற்குண்டான பாதுகாப்புக் கவசமாகக் கம்ப்யூட்டர்கள் மூலம் இணைத்து வைத்துள்ளார்கள்.
 
ஒரு மின்னல் பாய்ந்து அந்தக் குண்டுகள் அனைத்தும் வெடித்தால் அருகில் இருக்கக்கூடிய இடமே முழுமையாக அழிந்துவிடும். அதனால் தான் எல்லா இடங்களிலும் அதைக் காப்பதற்காக வேண்டி கம்ப்யூட்டர் மூலம் நுண்ணிய நிலைகளில் இயக்கிச் சீராக வைத்திருக்கின்றார்கள்.
 
ஆனால் இரு மடங்கு மின்சாரம் உற்பத்தியானால் என்ன ஆகும்…? இவைகள் அனைத்துமே செயல் இழந்துவிடும். கம்ப்யூட்டர்கள் ஃப்யூஸ் ஆகிவிடும்.
 
ஏனென்றால் இயக்கத் தொடர் அதிகமானவுடன் அதற்குள் இருக்கும் காந்தம் அதிகமாகி அனைத்தையுமே வேகமாக இயக்கும்படி செய்து கருக்கி விடுகின்றது. அந்தப் பாதுகாப்பு இழந்தால் புதைத்து வைத்த குண்டுகள் வெடிக்கத் தொடங்கும்.
 
1.நாடு நகரம் மக்கள்நீ… நான்… உன் சொத்து என் சொத்துஎன்று சொன்னாலும் எல்லாமே சிதைவுண்டு போய்விடும்.
2.அந்த அளவிற்குத் தலைக்கு மேல் கத்தியைத் தொங்கவிட்டு கீழே அமர்ந்திருப்பது போன்று
3.”எப்பொழுது கயிறுறுந்து விழும்…?” என்று சொல்ல முடியாத நிலையில் இப்படிப்பட்ட போர் முறையில்தான் இருக்கின்றோம்.
 
கடவுளின் அவதாரத்தில் வராக அவதாரம் உயிரின் துடிப்பாகிப் பல உணர்வுகளை மாற்றி அமைத்து உணர்வின் தன்மை எதனையுமே பக்குவப்படுத்தும் மனித நிலை பெற்ற பின் தான் விண்ணுலக ஆற்றலைக் கவர்ந்து தனக்குள் அதை உருவாக்கும் ஆற்றலைப் பெற்றான் மனிதன்.
 
ஆனால் அது எல்லாம் அரசர்கள் காலத்தில் அஞ்ஞான வாழ்க்கையாகி இன்று உடலின் இச்சைக்கு என்று வளர்த்துக் கொண்டார்கள் விஞ்ஞானிகள்.
 
கஸ்தியனோ நஞ்சினை வென்று உணர்வுகளை ஒளியாக மாற்றிப் பிறவி இல்லாத நிலை அடைந்து (அந்த உயிர்) என்றுமே ஒளியாக இருக்கின்றான் துருவ நட்சத்திரமாக.
 
னைப் பின்பற்றிச் சென்றவர் அனைவரும் மனிதனின் ஆறாவது அறிவை ஏழாவது நிலை பெற்று ஒளியின் சரீரம் பெற்றது சப்தரிஷி மண்டலம்.
 
அது தான் சிருஷ்டித்துக் கொண்ட மண்டலம். ஆறவது அறிவைத் தனக்குள் நுகர்ந்து உணர்வினைச் சிருஷ்டித்துக் கொண்டதுசப்தரிஷி சிருஷ்டி…! காரணப்பெயராக இவ்வாறு வைத்து நாம் தெரிந்து கொள்ளக் காட்டினார்கள்.
 
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியையும் சப்தரிஷி மண்டலங்களின் சக்தியையும் நாம் எடுத்து வளர்த்துக் கொண்டால்
2.நடக்கப் போகும் அந்தத் தீமையிலிருந்து நாம் மீள முடியும்.
3.நம் உணர்வுகளை எல்லாம் உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றிய பின்
4.அகண்ட அண்டத்தில் எது வந்தாலும் அதை ஒளியாக மாற்றி மீண்டும் நிலையான சரீரமாக வளர முடியும்.
 
கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றாகி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி அத்தகைய நிலை பெற்றவர்கள் தான் சப்தரிஷி மண்டலத்தில் இன்றும் உள்ளார்கள்.
 
ஆனால் தனித்த நிலையில் வளர்ச்சி பெற்றால் முனி…! மற்றொன்றை வீழ்த்திடும் சக்தி கொண்டது. பின் அதுவும் மடிந்து விடும். வளரும் சக்தி இல்லை.. இதற்கு முனி என்று பெயர். தன் வலிமையைக் காட்டும் மற்றொன்றை முறியடிக்கும்பின் அதுவும் மடியும்.
 
நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் கணவன் மனைவி என்ற நிலையில் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்திகளை எடுத்து
1.இரு உணர்வும் ஒன்றாக இணைந்து இரு உயிரும் ஒன்றாக இணைத்து உணர்வை ஒளியாக மாற்றிக் கொண்டே வந்தால்
2.உடலை விட்டுச் சென்ற பின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குச் சென்றடைய முடியும்.
3.விஞ்ஞானத்தினால் வரக்கூடிய தீமைகளிலிருந்து தப்பி விண் செல்ல முடியும்.