ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 1, 2024

மற்றவர்களுக்கு அருளைப் பாய்ச்சும் போது… தீமையிலிருந்து விடுபடும் சக்தியை நமக்குள் வலுவாக்க முடியும்

மற்றவர்களுக்கு அருளைப் பாய்ச்சும் போது… தீமையிலிருந்து விடுபடும் சக்தியை நமக்குள் வலுவாக்க முடியும்

 

அன்றைய அரசர்கள் தன்னுடைய சுகபோகங்களுக்காக மனிதரை மாக்கள் ஆக்கி… அவன் சுகபோகங்களை அனுபவித்தான். அவனுக்குக் கீழ் அடிமையாக்கப்பட்ட நிலையில் மக்கள் இன்றும் நரக வேதனையில் தான் துடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அவன் ஏற்படுத்திய பகைமை உணர்வுகள் மதத்தை அடிப்படையாக வைத்து மக்களைப் போர் புரியச் செய்தான். அதன் விளைவாக… சகோதர உணர்வுகள் இன்று இழக்கப்பட்டுப் போர் முறைகளாக வந்து கொண்டிருக்கின்றது

பகைமை உணர்வுகள் வளர்ந்த பின்
1.அஞ்சி வாழும் நிலைகளாக உண்மையின் உணர்வுகளை அறியும் தன்மை இழக்கப்பட்டு
2.இன்று வாழும் மக்கள் பண்டைய கால வாழ்க்கை நிலை போல
3.மிருகத்தைப் போன்று ஒருவருக்கொருவர் தாக்கிடும் நிலையாக அஞ்சி வாழும் உணர்வுகளே விளைந்து வந்து கொண்டிருக்கின்றது.

இதைப் போன்ற கொடுமைகளிலிருந்து மனிதன் மீள வேண்டும்.

ஆகவே… நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்த உண்மையின் உணர்வுகளை ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள். இந்த மனித உடலில் இருந்தே அருள் வழியைப் பெற வேண்டும் என்ற உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

உங்களை அணுகியவர்களுக்கும் இந்த அருள் உணர்வை ஊட்டுங்கள்.
1.தவறு செய்வது நாம் அல்ல… சந்தர்ப்பங்களும் அந்த நேரத்தில் நாம் நுகர்ந்த உணர்வுகள் தான் இயக்கச் சக்தியாக இயக்குகின்றது.
2.இதிலிருந்து விடுபட வேண்டும் என்று நீங்கள் மற்றவர்களுக்கு ஓதும் பொழுது
3.அந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் வலுவாக வளர்த்துக் கொள்ள முடியும்.

உங்கள் சொல்… அந்த அருள் உணர்வுகள்… அங்கே பதிவாக்கப்படும் பொழுது அவர்களையும் தீமையிலிருந்து மீட்டிடும் சக்தியாக மாற்ற முடியும். நீங்கள் இடும் மூச்சலைகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவருகின்றது.

நீங்கள் எண்ணும் பொழுது அகஸ்தியனின் உணர்வை அறியும் நிலையாக அறிய முடியும். நஞ்சினை வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வையும் அகஸ்தியன் உணர்வையும் நீங்கள் பெற முடியும் உங்கள் வாழ்க்கையும் அந்த நிலை பெறும். அடுத்து பிறவி இல்லா நிலை அடையும் பாக்கியமும் பெறுகின்றீர்கள்.

உங்கள் வாழ்க்கை அனைத்தும் சதா அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்திலேயே வாழ்ந்திடும் நிலை பெறுங்கள். அனைவரும் அதைப் பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

1.பகைமை என்ற உணர்வோ… அதனால் வந்த நோயோ இருந்தாலும் அதை மறந்து விடுங்கள்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறுவேன்… என் இரத்த நாளங்களில் கலக்கச் செய்வேன் என்று இதைப் பெருக்குங்கள்.

அருள் உணர்வுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்… அது வளர அறியாது சேர்ந்த பகைமையால் ஏற்பட்ட கடும் நோய்களிலிருந்து விடுபட முடியும்.

நோய்…! என்று எண்ணத்தை அதன் மீது செலுத்தாதீரக்ள். அதை மறைக்க அருள் உணர்வுகளைச் சேருங்கள்.
1.இதைச் சேர்க்கச் சேர்க்க மகரிஷிகளை எண்ணினாலும் தீமை என்ற நிலைகள் சிறிது கடினமாக இருக்கும்.
2.மேலும் என்னைச் சிந்திக்க விடவில்லையே…! என்று ஏங்க வேண்டாம்
3.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவேன்… எனக்குள் இருக்கும் தீமையை விளைவிக்கும் அணுக்களும் சாந்தமடையும்.
4.என் உடல் நலம் பெறும்…!
5.என் இரத்த நாளங்களில் மகரிஷிகள் உணர்வுகள் பெருகும்… அருள் ஞானம் பெறுவேன்…
6.என் பேச்சும் மூச்சும் கேட்பவரையும் நலம் பெறச் செய்யும் என்று இத்தகைய உறுதியுடன் நீங்கள் செயல்படுத்துங்கள்.