ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 10, 2024

குருநாதரை ஒரு பைத்தியக்காரர் என்று தான் நானும் ஆரம்பத்தில் எண்ணினேன்

குருநாதரை ஒரு பைத்தியக்காரர் என்று தான் நானும் ஆரம்பத்தில் எண்ணினேன்

 

நம் மீது அழுக்குப்பட்டாலோ தூசி பட்டாலோ மற்றது பட்டாலோ அதை உடனே தூய்மைப்படுத்துகின்றோம். அதைப் போன்று அந்தந்த நிமிடம் நம் ஆன்மாவில் அறியாது புகும் தீமையான உணர்வுகளைத் துடைத்துப் பழக வேண்டும். நம் இரத்த நாளங்களையும்த் தூய்மைப் படுத்த வேண்டும்.
1.அப்படித் தூய்மைப்படுத்த வேண்டும் என்றால் அதற்கு நல்ல சக்தி வேண்டும்.
2.நல்ல சக்தி வேண்டுமென்றால் நல்ல சக்தி பெற்ற குரு தேவை.
3.குரு வழியில் அருளை நமக்குள் பதிவு செய்து கொண்டு… குரு காட்டிய வழியினை நினைக்கப்படும்போது நாம் அதைப் பெற முடியும்.

வான்மீகி வியாசக பகவான் போன்ற மகரிஷிகள் கண்டுணர்ந்தது போல நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரும்… அவருடைய சந்தர்ப்பம் அகஸ்தியன் பெற்ற அருளையும் அவன் துருவ நட்சத்திரமான உண்மையும் அறிந்தவர்.

அவர் வழியில்… அறிந்த உணர்வு கொண்டு மற்றவர்களுக்கு அவர் எடுத்துச் சொல்லச் சென்றாலும் கூட அவரை அலட்சியப்படுத்திய மக்கள்தான் உண்டு.
1.சில உண்மைகளை அவர் சொல்லும் பொழுது பித்தன்… என்றும் பைத்தியக்காரன்…! என்றும் அவரை எண்ணினார்கள்.
2.என்னிடம் அவர் பழகும் பொழுதும் நானும் (ஞானகுரு) அவ்வாறு தான் எண்ணினேன்… பைத்தியம் பிடித்தவர் என்று.

ஆனால் எம்மை அடிக்கடி அணுகி இந்த வித்தைகளை எல்லாம் நீ கற்றுக் கொள் உனக்கு நல்லதாக இருக்கும் என்பார்.

வித்தை என்றால் “மந்திரவாதிகள் செய்வது போல்” ஏதோ செய்து கோளாறாகி அதனால் இப்படிப் பைத்தியமாக இருக்கின்றார்…! என்று தான் என்னுடைய எண்ணங்கள் இருந்தது முதலில்.

இருந்தாலும் அடிக்கடி ஆவர் எம்மைச் சந்திப்பதும் டீ வாங்கிக் கொடுப்பதும் நான் குடிக்கவில்லை என்றால் திட்டுவதும்… குடித்தால் நான் சொல்வதை நீ கேட்க வேண்டும் என்பதும்… இந்த நிலை தான் நடந்து கொண்டிருந்தது. குருவை ஆரம்பத்தில் சந்தித்த பின் நடந்தது இது தான்.

அவருக்குத் தெரியாதபடி நான் ரோட்டுக்கு அந்தப் பக்கம் சென்றாலும் அங்கே வந்து பிடித்து விடுவார், எங்கே ஒளிந்து செல்கின்றாய்…? நான் பார்க்கிறேன்…! என்பார்.

எப்படி விலகிச் சென்றாலும் கூட அவர் என்னை விட்ட பாடு இல்லை…!

அந்தச் சந்தர்ப்பத்தில் என் மனைவிக்கு உடல் நலம் குறைவானது. ஆஸ்பத்திரியில் சேர்த்தோம்… டாக்டர்கள் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார்கள்…! கடைசியில் “தேறாது…” என்று கூறி விட்டார்கள்.

வீட்டிற்கு அழைத்து வந்த பின்… அதைக் கண்டு மாமனார் இறந்து விட்டார் காரணம் ஒரே பெண். அந்த சமயத்தில் குருநாதர் வந்து “நீ வா…“ என்று என்னைக் கூப்பிடுகின்றார்.

குருநாதர் கூட்டத்தில் சத்தம் போடுகின்றார் இதற்குப் பயந்து அவர் பின்னாடி சென்றேன்.

அப்பொழுதுதான் எனது வாழ்க்கை முழுவதையும் சிறு குழந்தையாக நான் இருந்ததிலிருந்து விவரம் தெரிந்த காலம் வரை நடந்த நிகழ்ச்சிகளை அப்படியே வெளிப்படுத்துகின்றார்… அத்தனையும் அப்படியே சொல்கின்றார்.

அப்பொழுதுதான்… “அவர் பைத்தியம் இல்லை” என்று நான் தெரிந்து கொள்கின்றேன்.

ஆஸ்பத்திரியில் என் மனைவிக்கு ஆபரேஷன் செய்யலாம் என்று டாக்டர்கள் முயற்சித்தாலும் மயக்க மருந்து கொடுக்கும் பொழுது மனைவிக்கு எடுக்கவில்லை. அதனால் ஆபரேஷன் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்கள் குருநாதர் அதையும் என்னிடம் சொல்கின்றார்

உண்மைகளை அறிந்து கொண்ட பின் பைத்தியம் இல்லை…! என்று உணர்கின்றேன்.

பின்… ஒரு எலுமிச்சம் பழத்தையும் விபூதியும் என்னிடம் கொடுக்கின்றார் உன் மனைவிக்கு இதைக் கொடு… நன்றாக ஆகிவிடுவார் …!என்று சொல்கின்றார்.

இங்கே மாமனார் இறந்து விட்டார்… நான் குருவுடன் சென்று விட்டேன். ஆனால் வீட்டிற்கு மாமனார் இறந்ததைக் கேட்க வந்தவர்கள் எல்லாம்
1.மனைவி இப்படி இருக்கின்றது
2.மாமனாரோ இறந்து விட்டார்
3.அவருடைய மருமகன் பைத்தியம் போல சுற்றிக் கொண்டிருக்கின்றான் என்று என்னைப் பேசுகின்றார்கள்.

ஏனென்றல் என் மனைவி இடுப்புக்குக் கீழ் சுத்தமாகக் கால் வரவில்லை படுக்கையில் இருந்ததால் புண்ணும் வந்துவிட்டது.. ஒரு விரல் கூட காலிலே அசையாது.

குருநாதர் சொன்னபடி எலுமிச்சையையும் விபூதியையும் கொடுத்தேன்…! மறுநாள் பார்த்தால் விரல்கள் மற்ற எல்லாம் அசைய ஆரம்பிக்கின்றது.

மனைவி ஆஸ்பத்திரியில் இருந்த போது உடலில் பேண்டேஜ் ஒன்று போட்டிருந்தார்கள். உள்ளுக்குள் பார்த்தால் மூட்டைப் பூச்சிகள் ஏராளம் உடலிலே சொரணை இல்லை இரத்தத்தைக் குடிக்கின்றது. என் மனைவி எழுந்த பின்… பேண்டேஜ் கழட்டும் போது தான் மூட்டைப்பூச்சிகள் உள்ளே இருப்பது தெரிந்தது.

குருநாதர் சக்தி வாய்ந்தவர் என்ற நிலைகளை நான் நம்புகின்றேன். அதற்கப்புறம் குருநாதர் என்னைக் கூப்பிட்டு
1.என்னை நம்புகின்றாய் அல்லவா என்று கேட்கின்றார்
2.கேட்கின்றேன்… நம்புகிறேன் என்று சொன்னேன்.

உன் உயிர் எத்தனையோ கோடி உடல்களை உருவாக்கிய நிலையில் இப்பொழுது நீ மனிதனாக வந்திருக்கிறாய் என்பதை குரு உபதேசிக்கின்றார். பல கோயில்களுக்கு அழைத்துச் சென்றார்.

ஒவ்வொன்றாக்க் காண்பித்து இது எந்த தெய்வம்…? இது என்ன தெய்வம்…? என்று கேள்வி கேட்கின்றார். பின் விளக்கம் கொடுக்கின்றார்.

அதே போல் எறும்பு பூச்சிகள் இவைகளுக்கெல்லாம் சாப்பாடு யார் போடுவது…? என்று கேட்கின்றார். மரம் செடி கொடிகளுக்கு யார் சாப்பாடு கொடுப்பது…? அது எப்படி…? என்று கேட்கின்றார். பின் அதற்கு விளக்கங்களைச் சொல்லிக் கொண்டு வருகின்றார்.

இப்படி அவருடன் நான் சேர்ந்து சுற்றி வரும் பொழுது எல்லோருமே “என்னைப் பைத்தியக்காரன்…” என்று சொல்ல ஆரம்பிக்கின்றார்கள்.

அதே போன்று இரவிலே நகரங்களிலே சுற்றச் சொல்வதும் “சில மோசமான பகுதிகளுக்கு” எல்லாம் கூட குருநாதர் கூப்பிட்டுச் செல்வார்.

துர்மரணம் அடையும் மனிதன் அவன் இறந்தபின் (அவன் இறக்கும் தருணத்தில்) மண்ணிற்குள் பதிந்த இரத்தம் அந்த உணர்வலைகள் பதிவாகியது என்ன செய்கிறது…? என்று காட்டுகின்றார்.
1.துர்மரணம் அடைந்த அந்த இடத்தில் மீண்டும் அவன் வெளிப்படுத்தும் ஓசைகள் எப்படி இருக்கின்றது…?
2.அந்த ஆன்மாக்கள் எந்த நிலையில் இருக்கின்றது…?
3.இன்னொரு உடலுக்குள் எப்படி வருகிறது…? என்று உணர்த்துகின்றார்.

அதே சமயத்தில் மனிதன் மற்ற உயிரினங்களைக் கொல்லும் பொழுது அந்த உயிர்கள் மனிதனின் ஈர்ப்புக்குள் எப்படி வருகிறது…? வந்த பின் மனிதனாகப் பிறக்கும் தகுதி எப்படி வருகின்றது…? என்று காட்டுகின்றார்.

மனிதன் ஒருவனைக் கொலை செய்கின்றான்… துன்புறுத்துகின்றான் என்றால்… அதன் வழியில் அந்த ஆன்மா எவன் துன்புறுத்துகின்றானோ அவன் உடலுக்குள் சென்று… அதே உணர்ச்சிகளை மீண்டும் இங்கே எப்படி இயக்குகின்றது…?

துன்புறுத்தாதபடி நோய்வாய்ப்பட்டு ஒருவன் இறந்தால் அவனிடத்தில் பாசமாக இருக்கும் பொழுது அந்த ஆன்மா பாசம் கொண்டவருடைய உடலில் எப்படிச் சேர்கின்றது…? என்று இதையெல்லாம் எனக்குள் தெரியப்படுத்துகின்றார்.
1.எத்தனையோ கோடி உடல்களை மாற்றி மாற்றி மனிதனாக வந்தபின் நாம் எந்த நிலை பெறுகின்றோம்…?
2.ஆனால் ஞானிகள் காட்டிய வழியில் எந்த நிலை பெற வேண்டும்…? என்பதை
3.இப்படித்தான் ஒவ்வொன்றாகப் பல அனுபவங்களை எனக்குக் கொடுத்து உண்மைகளை எல்லாம் தெரியும்படி செய்தார் குருநாதர்.