ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 8, 2024

“ஆலய வழிபாடு” என்பதே இன்றைய காலத்தில் எப்படி எப்படியோ மாறிவிட்டது…!

“ஆலய வழிபாடு” என்பதே இன்றைய காலத்தில் எப்படி எப்படியோ மாறிவிட்டது…!


சூட்சமத்தில் நடப்பதை நாம் எப்படி அறிந்து செயல்பட வேண்டும்…? என்று
1.அன்று அகஸ்தியன் உருவ வழிக்கு (தெய்வ) உணர்வுகளை ஊட்டி அருவ நிலைகளை நீ எப்படி நுகர்வது…?
2.அந்த அருவத்தை உனக்குள் சேர்க்கப்படும் பொழுது அந்த ஞானத்தின் வழி உன்னை எப்படிக் காக்க வேண்டும்…? என்று
3.ஆலயங்களிலே சிலைகளை வடிவமைத்தான்.

ஆனால்… சிலையை வைத்து இன்று பூஜை செய்பவரும் சரி ஆலயத்திற்குப் பக்தி கொண்டு செல்வோரும் சரி… துயரத்தைத் தான் வளர்த்துக் கொண்டிருக்கின்றோமே தவிர “துயரத்தை நீக்கும்… ஒரு சொல் கூட வருவதில்லை…”

கேட்டால் நான் அப்படியெல்லாம் கும்பிடுவதில்லை என்று சொல்வார்கள் பெரும்பகுதியானவர்கள். நான் அப்படிக் கும்பிடுவதில்லை இப்படித்தான் கும்பிடுகிறேன் என்பார்கள் சொல்லுக்குப் பதில் வரும் அவ்வளவு தான்…!

ஆனால் உண்மையின் இயக்கங்கள் நமக்குள் அது வளரும் முறைகளை நாம் கையாள்வது எப்படி…? என்பதைச் சூட்சுமத்தில் நடப்பதைத் தான் உருவத்தை அமைத்துக் கொடுத்தனர் ஞானிகள்.
1.உருவத்தை அமைத்துக் கொடுத்த அந்த ஞானிகளை
2.சிறிதளவாவது நாம் மதிக்கின்றோமா என்றால் இல்லை

அன்று கல்வி அறிவு இல்லை என்றாலும் தெய்வ நிலைகளை எளிதாக எடுத்துக் கொண்டார்கள் அது எல்லாம் படிப்படியாக மாறி இன்று அனைத்துமே வேறு வழிகளில் திரும்பி விட்டது.

அன்றைய பக்தியின் நிலைகள் ஆலயத்திற்குச் சென்றால் அந்தத் தெய்வீக குணத்தைப் பெற வேண்டும் என்று “தெய்வத்திற்கு முன் நின்று… தவறு செய்யக் கூடாது…!” என்ற எண்ணம் இருந்தது.

இன்று தெய்வத்திற்கு முன் நின்று தவறைச் சொல்லிவிட்டு “பார் என்னை என்னைஸ் சோதிக்கின்றாய்…” என்ற நிலை தான் வருகின்றது. கல்வி அறிவு கொண்டு இன்று வளர்ந்து கொண்டவர்கள்
1.தவறையும் செய்துவிட்டு… தெய்வத்திடம் சென்று தன்னை நியாயப்படுத்தி
2.அந்த உணர்வுகளை வளர்த்துக் கொள்பவர் தான் பலர் உண்டு.

ஞானிகள் காட்டிய உணர்வுகளை இதுவரை நாம் பெறவில்லை…! கொலை செய்பவனும் தன்னை நியாயப்படுத்திக் கொள்கின்றான்
1.என்னை இப்படியே தொல்லை படுத்திக் கொண்டிருக்கின்றான்… நீ கேட்க மாட்டேன் என்கிறாய்.
2.அதனால் அவனைத் தொலைத்து விட்டு உனக்கு வந்து நான் காணிக்கை செலுத்துகிறேன் என்று போடுகின்றார்கள்… இப்படியும் உண்டு.

நான் காளியாக மாறுவேன் பேயாக மாறுவேன் அதன் வழியில் நான் செயல்படுத்துவேன் ஏனென்றால் காளி கோவிலில் ஆட்டையும் கோழியையும் கொடுத்துவிட்டு… பார்…! எனக்கு அவன் இடைஞ்சல் செய்தான்…! அதற்காக வேண்டி ஆட்டைப் பலியிட்டு அவன் நாசமாகப் போக வேண்டும் என்று இப்படித்தான் கும்பிடுகின்றார்கள்.

“ஒன்றுமறியாத ஜீவன்களை அங்கே கொல்கின்றோம்…” என்பதை மறந்து விடுகின்றார்கள்

இதைப் போன்று எத்தனை துயரின் நிலைகளைத் தான் தெய்வம் என்ற நிலையில் வளர்க்க முடிகின்றதே தவிர அருள் ஞானிகளின் உணர்வை நாம் பெற முடியவில்லை.

சாதாரண பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் தான் ஆலயத்திலே சிலைகளை வைத்தார்கள் ஞானிகள். இது இந்த குணம் கொண்டது என்று ஸ்தல புராணங்களை வடித்து நீ முதலில் எதை எடுக்க வேண்டும்…? என்ற நிலையில் அதைக் காட்டுகின்றார்கள்.

அது மட்டுமல்லாமல்…
1.அங்கிருக்கும் சிலைக்கு எத்தனையோ அபிஷேகங்களைக் காட்டி
2.உயிரான ஈசனுக்கு நாம் ஊட்ட வேண்டிய நல் உணர்வுகளை… அருள் மணங்களை… அங்கே உணர்த்துகின்றார்கள்.

ஞானிகள் காட்டிய வழியில் உயிரான ஈசனுக்கு நல் மணங்களை ஊட்டினால் மகிழ்ந்து வாழும் சக்தி பெற முடியும்… தெய்வீகப் பண்புகளை வளர்க்க முடியும். மனிதன் என்ற முழுமை அடைய முடியும்.