ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 4, 2024

எமது உபதேசக் கருத்துக்களைப் பதிவாக்கிக் கொண்டால் “அன்று வாழ்ந்த மெய் ஞானிகளை” நீங்கள் காண முடியும்

எமது உபதேசக் கருத்துக்களைப் பதிவாக்கிக் கொண்டால் “அன்று வாழ்ந்த மெய் ஞானிகளை” நீங்கள் காண முடியும்

 

நட்சத்திரங்களின் எதிர் மோதலால் ஏற்படும் மின்னல்கள் (மின் அணுக்களின் கதிர்கள்) கடலிலே பாய்ந்தால் மணலாக மாறுகின்றது அதில் உள்ள… “ஹைட்ரஜன் அந்த உப்பின் சத்து” அந்த மின்னலின் வீரியத்தைத் தணிக்கிறது.

கடலிலே பாயும் மின்னல்…
1.அந்த மின் அணுக்களுடன் தொகுப்புகள் மணலாக வரப்படும் பொழுது உயர்ந்த ஆற்றல்களைப் பெறுகின்றது.
2.இதைத்தான் யுரேனியமாகப் பிரித்து எடுக்கின்றார்கள் விஞ்ஞானிகள்.

எந்தெந்த நட்சத்திரத்தின் நிலைகள் இது கலவைகளாக… எது எதிர் நிலையில் வருகிறது…? என்ற நிலைக்கொப்ப மணல்களாக உருவாக்கப்படுகின்றது.

அந்த மணலினை எடுத்து அதிலிருந்து பிரித்து எடுத்து அணுவைப் பிளக்கின்றார்கள்… அந்த அணுவின் தன்மை பிளந்து பல விதமான நிலையாக எடுக்கின்றார்கள் விஞ்ஞான அறிவு கொண்டு.

1.அதிலே சிதைவடைந்த உணர்வின் தன்மையைத் தான் கம்ப்யூட்டரில் பாய்ச்சி (பல விதமான தனிமங்கள்)
2.உணர்வின் அதிர்வுகளைக் கொண்டு… உணர்வின் செயலாக்கங்களுக்கு…
3.நுண்ணிய கதிரியக்கப் பொறிகளை மாற்றும் போது “கம்ப்யூட்டராக” அது வேலை செய்கிறது,

அதாவது…
1.மின் அணுவின் கதிரியக்கங்களின் நிலைகள் காந்தப் புலனறிவால் கவரப்பட்டு
2.அந்தக் காந்தத்தைக் கவரும் உணர்வின் தன்மையை அதற்குள் பதிவு செய்து உணர்வின் அறிவான பின்
3.எதிர் ஒளியின் தன்மைகள் மின் அணுவைப் போன்ற உணர்வின் தன்மை கம்ப்யூட்டரில் தோன்றும்.

அப்படித் தோன்றும் உணர்வின் தன்மை எதுவாகின்றதோ… ஒவ்வொரு உணர்வுக்கொப்ப (எதிலே செலுத்துகின்றோமோ) உருவங்களையும் காட்ட முடியும்.
1.ஒரு மனிதன் 100 ஆண்டுகளுக்கு முன் அவன் வாழ்ந்தான் என்றால்…
2.இவன் அவன் வம்ச வழியில் வந்தவன் என்றால்
3.அவர்கள் ரூபம் எப்படி இருக்கிறது…? என்று அக்கால உருவத்தைக் காணலாம்.

இந்த உணர்வின் தன்மை பதிவாக்கி இந்தக் கம்ப்யூட்டரின் மூலம் எதிர் அலைகளை எடுத்துக் கொண்டால் ஒளியின் அதிர்வுகளை எடுத்துக் கொள்கின்றது. ஆயிரம் மடங்கு அதைக் கூட்டுகின்றான்.
1.மீண்டும் அந்த உணர்வின் எதிரொலிகள் வரப்படும் பொழுது
2.இங்கே வாழ்ந்த உணர்வுகள் “பதிவானதை எடுத்து”
3.அந்த மனிதனுடைய உருவத்தையே கம்ப்யூட்டர் கொடுக்கின்றது.

விஞ்ஞானிகள் அதைக் காட்டுகின்றார்கள்.

இதே போன்று அன்று “வாழ்ந்த மெய் ஞானிகளையும்” நாம் காண முடியும் அவனில் விளைந்த உணர்வுகளை உங்களுக்குள் இப்போது பதிவாக்கப்படும் பொழுது
1.இந்த உணர்வினைத் தொடர்ந்து எடுத்து அதைப் பெருக்கிக் கொண்டே வந்தால்
2.அவன் கற்றுணர்ந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் வந்து
3.அவன் எப்படி ஒளியாக ஆனான் என்ற உணர்வை எடுத்து நீங்களும் ஒளியாக ஆக முடியும்.

சில பேர் நினைக்கலாம் விஞ்ஞானம் அறிவு எங்கேயோ சென்று கொண்டிருக்கின்றது இவர் என்ன படிக்காதவர் சொல்கிறார்…? (ஞானகுரு) என்று.

ஏனென்றால் விஞ்ஞானிகளுடைய செயல்கள் எப்படி இருக்கின்றது மெய் ஞானிகள் அறிவு எப்படி இருக்கின்றது…? மெய்ஞானிகளுடைய செயல் எப்படி இருக்கிறது…? என்பதை குருநாதர் அந்த இயற்கை நிலைகளை அதனுடைய இயக்கங்கள் எப்படி…? என்பதை அவர் காட்டிய நிலைகளைக் கற்றுணர்ந்த பின் தான் உங்களுக்கு இதை உபதேசிக்கின்றேன்.

இதைப் பதிவு செய்து கொண்டால் கால பருவம் வரும் போதெல்லாம்
1.அந்தந்த உணர்வுக்கொப்ப அந்தந்தக் காலங்களுக்கொப்ப
2.உணர்ச்சிகள் அது கலந்து அறிவின் ஞானமாக உங்களுக்குள் ஊட்டும்.

முந்தி சொன்னதெல்லாம் வேறு விதமாக இருக்கும் அதனின் வளர்ச்சி உங்களில் வரப்படும் பொழுது… இயற்கையின் நிலையாக “உங்களை நீங்கள் அறியும் உணர்வுக்கு வளர வேண்டும்…” என்பதற்குத்தான் இதைப் பதிவாக்குகின்றேன்.

எத்தனை காலம் இந்த உடலில் நாம் வாழப் போகிறோம்…?
1.இந்த உடல் சதமற்றது… என்றைக்கும் நிலையானது உயிர்.
2.அந்த உயிருடன் ஒன்றி ஒளியாக ஆக்கப்பட வேண்டும்.

ஆகவே… உடலுக்குப் பின் பிறவி இல்லை…! பிறவி இல்லா நிலை அடைந்த அருள் ஒளியின் உணர்வை உங்களுக்குள் சேர்ப்பிப்பது தான் இந்த உபதேசத்தின் நோக்கம்.