ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 26, 2024

நம் எண்ணங்களும்… நாம் நுகரும் உணர்வுகளும்… அதனின் செயலாக்கங்களும்

நம் எண்ணங்களும்… நாம் நுகரும் உணர்வுகளும்… அதனின் செயலாக்கங்களும்

 

இன்று நாம் தவறே செய்ய வேண்டாம். ரோட்டிலே செல்கின்றோம்… வாகனம் ஒன்று வேகமாக வருகின்றது…! என்று பார்க்கின்றோம். யார் மீதாவது மோதி விட்டால் அவர்கள் அவதிப்படுவார்களே என்ற எண்ணங்கள் நமக்குள் தோன்றுகின்றது.

அத்தகைய எண்ணங்கள் தோன்றும் பொழுது அந்த வாகனத்தின் வேக உணர்வைக் காணும் பொழுது மனது “பட…பட…” என்று துடிக்கின்றது. பயத்தினால் துடிக்கப்படும் பொழுது அச்சமான உணர்வலைகள் பெருகி விடுகின்றது.
1.பய உணர்வு பெருகினால் சிந்திக்கும் திறன் இழக்கப்படுகின்றது.
2.வேதனையாகி… இனி என்ன ஆகும்…? என்று மன பயம் தூண்டப்படுகின்றது.

வேதனை என்பதே நஞ்சு. வேதனை கலக்கப்படும் பொழுது எதையாவது ஒரு பொருளை பார்க்கிறோம் என்றால்… அந்தப் பொருள் கீழே விழுந்து விடுமா…? என்ற பயம் வருகின்றது.

அந்த பயத்துடன் எண்ணிவிட்டால்
1.பார்த்த உடனே அந்தப் பொருள் கண்டிப்பாகக் கீழே விழுந்து விடும்.
2.அதே சமயத்தில் மன உறுதி கொண்டு அதை மாற்றிப் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றால் உடனே அது வரும்.

ஆனால் நாம் கீழே விழுந்து விடும் என்று எண்ணுவோம். அதை (எண்ணத்தை) எடுத்து மாற்றி வைக்க மனம் வராது.

ஆக… இந்த உணர்வுகள் இத்தகைய நிலையில் கொண்டு அதுவே எண்ணத்தில் இருக்கப்படும் பொழுது
1.நாம் எண்ணிய எண்ணங்களும் எதிர்வரும் உணர்வு மோதப்படும் பொழுது
2.காற்றலை போல வந்து அந்தப் பொருள் ஆடுவதைப் பார்க்கலாம்.

மனிதனின் உணர்வின் உணர்ச்சிகள் “கொஞ்சம் போல இருப்பதை” இதில் உள்ள காந்தப்புலன் எழுத்து டப்… என்று கீழே விழுகச் செய்துவிடும்.

இதே போல ஒரு மனிதனுக்கு உடலில் அரிப்பாகிவிட்டால் அதை உற்றுப் பார்த்தால் உங்கள் கை அடுத்து உடலில் எங்கேயாவது ஒரு இடத்திற்குப் போய் அதைத் தேய்க்க ஆரம்பிப்போம்.

அந்த உணர்வின் உணர்ச்சிகள் நம்மை அறியாமலே அந்த உணர்ச்சிகளைத் தூண்டச் செய்யும். ஏனென்றால்
1.அந்த இயற்கையின் உணர்வுகள் நாம் எதை உற்றுப் பார்க்கின்றோமோ நுகர்கின்றது
2.நுகரும் பொழுது அந்த உணர்வு நம்மை அறியாமலேயே செயல்களைச் செயல்படுத்தி விடுகிறது.

ஒருவர் தலை சொறிவதைப் பார்த்துக் கொண்டேயிருங்கள். நம்மை அறியாமலே இந்தக் கை நம் தலையைச் சொறியும்படி செய்யும்.

காரணம் அந்த உணர்வின் எண்ணங்கள் நுகரப்படும்போது அந்த உணர்ச்சிகள் தான் நம்மை இயக்குகின்றது.

இது எல்லாம் இயற்கையின் சில செயல்கள்.

இதைப் போன்று தான் மனிதனின் வாழ்க்கையில் பிறர் படும் வேதனையை நுகர்ந்தோம் என்றால் நம் நல்ல குணங்களை… அந்த வேதனை என்ற விஷம் நம்மைத் தெளிவாக்காதபடி இருளாக்கி விடுகின்றது.

அப்போது சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகிறது… நல்ல பார்வைகளோ நல்ல சொல்களோ இழக்கப்படுகிறது. நல்லதைச் சொல்லத் தவறி விடுகின்றோம்.
1.ஒரு நல்லதையே எண்ணி அந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்றால் முடியாது…
2.நம்மால் நல்லது சொல்ல முடியாது போய் விடுகின்றது.
3.நல்ல உணர்வின் நினைவு இல்லாது போய் விடுகின்றது…
4.நல்ல காரியத்தைச் செயல்படுத்த முடியாது போய் விடுகிறது.

இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்றால் வேதனைகளை நீக்கிய துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்தே ஆக வேண்டும் நம் உடலில் இரத்த நாளங்களில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை மீண்டும் மீண்டும் பெருக்கிக் கொண்டே வர வேண்டும்.

நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறச் செய்தே ஆக வேண்டும். இவ்வாறு செய்தால் தான்
1.நம்மை அறியாமல் இயக்கச் செய்யும் பிற உணர்வின் இயக்கங்களிலிருந்து நாம் விடுபட முடியும்.
2.நாம் அருள் வழியில் என்றுமே வாழ முடியும்.