ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 13, 2024

முழுமுச்சாக நாம் செய்ய வேண்டியது…!

முழுமுச்சாக நாம் செய்ய வேண்டியது…!

 

வாழ்க்கையிலே வரக்கூடிய குறைபாடுகளையோ மற்ற தீமைகளையோ வேதனைகளையோ கேட்க நேர்ந்தால் நுகர நேர்ந்தால் அது நம் உடலுக்குள் வராதபடி தடுக்க… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் எங்கள் இரத்த நாளங்களில் அது கலக்க வேண்டும் என்று நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்த வேண்டும்.

அதற்குப் பின்
1.”எது நல்லவையோ அது நடக்க வேண்டும்…” என்று எண்ணத்தை நாம் செலுத்த வேண்டும்
2.அது உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.

இந்த வழியில் நாம் வாழ்ந்தோம் என்றால் இந்த உடலுக்குப் பின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குச் செல்கின்றோம்.

உலகெங்கிலும் எத்தனையோ கொடுமைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில்… நம் பூமி மட்டுமல்ல இந்தப் பிரபஞ்சமே உருமாறும் நிலை இருக்கின்றது… கடும் விஷத் தன்மைகள் பரவிக் கொண்டுள்ளது.

இதைப் போன்ற நிலையிலிருந்து எல்லாம் நாம் தப்ப வேண்டும் என்றால் குருநாதர் காட்டிய அருள் வழியில் தியானத்தை மேற்கொண்டு
1.அவர் கொடுக்கும் உபாயங்களை நாம் கடைப்பிடித்து
2.இந்த உடலுக்குப் பின் நாம் பிறவி இல்லை என்ற நிலை அடைய
3.அதை முழுமூச்சாக நாம் செயல்படுத்த வேண்டும்.

கடலில் படகை ஓட்டிச் சென்றோம் என்றால் அதிலே அலைகள் எதிர்த்து வரும் பொழுது அதைப் பிளந்து நாம் செல்ல வேண்டிய எல்லையை அடைகின்றோம்.

அதைப் போன்று அந்தத் துருவ நட்சத்திரம் தான் நமது எல்லை என்று முடிவுகட்டி இந்த வாழ்க்கையில் எத்தனை விதமான சங்கடமோ சலிப்போ வெறுப்போ அல்லது பாசத்தால் வரக்கூடிய உணர்வுகளோ வந்தால் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்று வரும் அலைகளைப் பிளந்திடல் வேண்டும்.

நமது எல்லையான துருவ நட்சத்திரத்தை அடையக்கூடிய சக்தியாக… வாழ்க்கை என்ற ஓடத்தைச் சீர்படுத்தி வாழ வேண்டும்.

காட்டிற்குள் சென்று தவம் இருந்து அந்தச் சக்தியைப் பெறுவதல்ல. இந்த நாட்டுக்குள் வாழும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியைப் பெற வேண்டும். “இது தான் உண்மையான தவம்…”

அந்த தவத்தை நாம் எடுத்துக் கொண்டால் துருவ நட்சத்திரத்தின் சக்தி நமக்குள் வலுப்பெறுகின்றது. தீமைகள் புகாது தடுக்கும் வல்லமையும் பெறுகின்றோம்.