ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 20, 2024

பெரும்பகுதியானவர்களுக்கு இன்று கிட்னி பழுதடைவதன் காரணம் என்ன…?

பெரும்பகுதியானவர்களுக்கு இன்று கிட்னி பழுதடைவதன் காரணம் என்ன…?

 

நாம் விளைய வைக்கும் தாவர இனங்களில் பூச்சிகள் புழுக்கள் விழுந்தால் அவைகளைக் கொல்ல பூச்சி மருந்துகளைத் தெளிக்கின்றோம். அதே சமயத்தில் அதில் விளைந்த நல்ல தானியங்களை உணவாக உட்கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றோம்.

ஆனாலும் அந்தத் தாவர இனத்திலே விழுந்த பூச்சிகள் நாம் தெளித்த பூச்சிக்கொல்லி மருந்தை ஏற்றுக் கொண்ட நிலையில்
1.அந்த நஞ்சினையே தனக்குள் ஏற்றுக் கொண்டு
2.கடும் நஞ்சு கொண்ட புழுவாக நஞ்சான கிருமிகளாக அடுத்து அது விளைகின்றது.

நாம் தெளித்த பூச்சி மருந்து நாம் விளைய வைக்கும் தாவர இனங்களிலும் கலக்கப்பட்டு… அந்த உணர்வின் சத்து அதுவே நஞ்சாக மாறி… அது கலந்த உணவை உணவாக உட்கொள்ளும் பொழுது “நம் உடலுக்குள் பலவிதமான நோய்களாக உருவாகிறது…”

அந்தப் பூச்சிகளையும் புழுக்களையும் இரக்கமற்றுக் கொன்றது போன்று அந்த நஞ்சின் தன்மை அதிகமாகி கொன்றிடும் உணர்வுகளாக அதிகமாக விளைந்து… அதனால் நம் உடலுக்குள் இருக்கும் “சிறுநீரகங்கள்” பாதிக்கப்படுகின்றது.

காரணம்… அதிலே இந்த நஞ்சு அதிகரிக்கப்படும் பொழுது இரத்தத்தைச் சுத்திகரிக்கும் அதனுடைய செயலாக்கங்கள் செயலற்றதாக ஆக்கி வெறித்தனமான நிலைகள் கொண்டு பல நோய்களை உருவாக்கக் காரணமாகி விடுகின்றது.

1.எந்த நஞ்சினை வடிகட்டும் திறன் கொண்டதோ நம் சிறுநீரகங்கள் அதனின் திறனை இழந்து
2.அதனால் நஞ்சு நம் இரத்தங்களிலே அதிகரித்து உடல் முழுவதும் சுழன்று
3.மனிதனுடைய சிந்தனைத் திறன் குறைந்து சிந்தனையற்றவனாக அந்த வளர்ச்சிகள் அதிகரித்து
4.மனித உடலுக்குள் நஞ்சையே வளர்த்திடும் நிலையாக மாறிவிடுகின்றது.

இதிலிருந்து மீள ஞானிகள் காட்டிய அறவழியில் நாம் செயல்படுதல் நல்லது.

விஞ்ஞானிகள் அணுவைப் பிளந்தார்கள். ஆனால் மெய் ஞானிகள்
1.உணர்வுக்குள் இருக்கும் நுண்ணிய நிலைகளைப் பிளந்து அதை ஒளியாக மாற்றினார்கள்
2.அந்த ஞானிகள் உணர்வை நாம் எடுத்தால் விஞ்ஞான அறிவால் ஏற்றுக் கொண்ட அந்த நஞ்சின் தன்மையைப் பிளக்க முடியும்.

அதைப் பிளக்கச் செய்வதற்குத் தான் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் மெய்ஞானிகள் உணர்வுகள் இங்கே படர்ந்து இருக்கும் வேளையில் அது ஆழமாக உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

பதிவாக்கிய பின் அதை தியானிக்கும்படி செய்து அதனின் வலுப்பெறச் செய்து அதையே இப்பொழுது உபதேசமாக கொடுக்கப்படும் பொழுது “எந்த அளவிற்குக் கூர்ந்து கவனிக்கின்றீர்களோ… அது ஊழ் வினையாக உங்களுக்குள் பதிவாகின்றது…”

அதை மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் இந்த வாழ்க்கையில் விஞ்ஞான அறிவால் நமக்குள் வரும் தீமைகளிலிருந்து மீட்டிக் கொள்ள உங்களால் முடியும்.

உபதேசித்த உணர்வுகள் அனைத்தையும் உங்களுக்குள் வலுப்பெறச் செய்து கொண்ட பின்… நீங்கள் எண்ணும் பொழுதெல்லாம் அந்த ஞானிகள் உணர்வுகளை நீங்கள் சுவாசித்து… உங்களை அறியாது வந்த தீய வினைகளை நீக்க முடியும்.

விஞ்ஞானி எப்படி அணுவைப் பிளந்தானோ…? அதே விஞ்ஞானக் கல்விக்குச் செல்லப்படும் போது அதனின் ஆற்றலை அவன் பெறுவது போல்
1.மெய்ஞானிகள் உணர்வை நமக்குள் சேர்த்து
2.நம் உணர்வுக்குள் நஞ்சு கலந்ததை நம் உடல் பிரிப்பதை…
3.பிரிந்த நிலைகள் கொண்டு தன் எண்ணத்தால் உணர்வுக்குள் இருக்கும் நஞ்சினைப் பிளந்து
4.அந்த மகரிஷிகள் உணர்வுகளைப் பாட நிலையாக எடுத்து அதனின் நிலைகள் கொண்டு
5.இந்த மனித வாழ்க்கையில் எப்போதெல்லாம் துன்பம் நேர்கின்றதோ அது சேராத வண்ணம் தடுத்து நிறுத்த ஈஸ்வரா என்று
6.எண்ணியதை இயக்கிக் காட்டும் அவனையே ஈஸ்வரா என்று “உயிரை எண்ணி ஏங்கி”
7.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று வானை நோக்கி நினைவினைச் செலுத்த வேண்டும்.

சக்தி வாய்ந்த ஆண்டென்னா… விண்ணிலிருந்து வரும் சக்திகள் பூமிக்குள் படர்ந்து கொண்டிருப்பதைக் குவித்து ஈர்த்து… அதனுடன் இணைக்கப்பட்ட டிவியில் தெளிவாக அதைக் காட்டுகின்றது… உணர்த்துகின்றது.

இதை போன்று யாம் கொடுக்கும் உபதேசங்களைக் கூர்ந்து கவனித்தால் உங்கள் கண் கரு விழிகளின் இயக்கத்திற்குள் ஆற்றல் மிக்கதாக இந்த உணர்வின் அலைகள் பாயும்..
1.இதை மனமுவந்து பெற வேண்டும் என்று ஏங்குங்கள்
2.அந்த சக்தி உங்களுக்குள் ஜீவன் பெறுகின்றது

இது உங்கள் கையில் தான் இருக்கிறது.

எமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நான் (ஞானகுரு) செய்தேன் அதன் வழிகளிலே உயர்ந்த சக்திகளைப் பெற முடிந்தது. என் குருநாதர் காட்டிய வழியினைத் தான் உங்களுக்குள்ளும் இப்போது பதிவாக்குகின்றேன்.

பதிவாக்கியதை நினைவு கொண்டு விண்ணை நோக்கி நீங்கள் ஏங்கினால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்கிறது. உங்கள் உடலுக்குள் சேர்த்துத் தீய குணங்கள் விளையாது தடுத்துக் கொள்ள இது நிச்சயம் உதவும்.