ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 10, 2024

ரிஷிக்கு யாராவது தீங்கு செய்தால் உடனே அவர் சாபமிடுகிறார்… பின் சாப விமோசனம் கொடுக்கின்றார் - விளக்கம்

ரிஷிக்கு யாராவது தீங்கு செய்தால் உடனே அவர் சாபமிடுகிறார்… பின் சாப விமோசனம் கொடுக்கின்றார் - விளக்கம்

 

நாம் எண்ணியது அனைத்தையும் நம் உயிர் தான் சிருஷ்டிக்கின்றது.
1.நாம் எண்ணியது எதுவோ அதை ஓ… என்று ஜீவனாக்கி…
2.அந்த உணர்வின் சத்தை உடலாக்கி…
3.உடலுக்குள் அந்த எண்ணத்தை மீண்டும் இயக்கச் செய்து
4.இந்த உணர்வினை விளையச் செய்து
5.விளைந்த உணர்வின் சத்தைத் தன்னுடன் அழைத்துச் செல்கின்றது.

மனிதனான பின் நல்லவைகளை எண்ணினால் நல்லதே நமக்குள் சேர்ப்பிக்கப்படுகின்றது. ஆனால் நல்லவைகளை எண்ணினாலும் அதற்குள் விஷத் தன்மைகளைச் சேர்க்கப்படும் பொழுது அந்த நல்லவைகளும் கெட்டுவிடுகிறது.

ஆனால் நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்திருக்கும் நஞ்சினை மலமாக மாற்றி விட்டு… நல்ல உணர்வின் சத்தை உடலாக மாற்றும் திறன் பெற்றது தான் மனித உடலில் உள்ள உணர்வுகள்.

அத்தகைய உணர்வினைப் பெற்றிருந்தாலும்… பிறர் செய்யும் குறைகளோ மற்றதோ இருப்பினும் அந்த நஞ்சினை நீக்கும் உபாயத்தைச் செயல்படுத்தவில்லை என்றால்… முழு நிலவாக (பௌர்ணமி) இருக்கும் சந்திரன் அதற்குப்பின் சிறுக சிறுக எப்படி மறைகின்றதோ… அதைப் போன்று மனித உடலில் இருக்கும் உணர்வின் அறிவுகள் அனைத்தும் மறைந்து… வேதனை என்ற நஞ்சுக்குள் சிக்கி விடுகிறது.

நாம் எவ்வளவு தெளிந்த மனிதனாக இருப்பினும் ஒரு துளி நஞ்சினை உணவுடன் கலந்து உட்கொண்டால் நினைவனைத்தும் மறைந்து விடுகின்றது.

இதைப் போன்று தான் நமக்குள் சிறுகச் சிறுக நஞ்சு (தீமை செய்யும் குணங்கள்) கலந்துவிட்டால் அடுத்து மனித நினைவில்லாது போய்விடும். மற்ற உயிரின்ங்களின் ஈர்ப்புக்குள் தான் புக நேரும்

எத்தனையோ கோடிச் சரீரங்களை நாம் எடுத்துத் தெளிந்திடும் தெரிந்திடும் தன்னைக் காத்திடும் உணர்வின் தன்மை அதனுடன் இணைந்து விளைந்து விளைந்து…
1.மனிதனாக உருவாக்கிய உயிரைத்தான் “ரிஷி” என்று ஞானிகள் காட்டினார்கள்.
2.காவியங்களில் பார்த்தோம் என்றால் “அந்த ரிஷிக்கு ஒருவன் தீங்கு செய்தான்…” என்று ஒரு நிலையைக் காட்டுவார்கள்.
3.அப்போது அவனை ரிஷி சாபமிட்டார் என்றும்… பின் சாப விமோசனத்தைக் காட்டினார் என்றும் சொல்லியிருப்பார்கள்.

அதனின் உட்பொருள் என்ன…?

மனித உடலுக்குள் இருக்கும் நமக்குக் கெட்டவைகளை நீக்கும் சக்தி இருந்தும்… அதைச் சீராகப் பயன்படுத்தாது விட்டுவிட்டால்… கெட்டதை நீக்கிடும் ஆற்றலைப் பெருகச் செய்த உயிருக்கு நாம் செய்யக்கூடிய நன்றி எதுவாக இருக்கின்றது…?

அதாவது… இந்த உடலின் இச்சை கொண்டு
1.நாம் எடுத்துக் கொண்ட பாசத்தால் வேதனை என்ற நஞ்சினைக் கலந்து
2.ஈசனாக இருந்து ரிஷியாக இருந்து மனித உடலைச் சிருஷ்டித்த உயிருக்கு
3.நாம் செய்யக்கூடிய நன்றி எதுவாக இருக்கின்றது…?
4.அதைத் தான் “ரிஷிக்குத் தீங்கு செய்தான்” என்று காவியத்தில் காட்டுகின்றார்கள்.

வேதனை என்ற உணர்வை எடுத்து உயிருக்குள் செலுத்தப்படும் பொழுது உயிர் அதையே ஜீவனாக்கி நல்ல உணர்வுடன் கலந்து விடுகிறது. அப்போது நஞ்சினை நீக்கிடும் இந்த உடலை… நஞ்சினை நீக்கிடும் உணர்வு கொண்டு அதை நீக்கவில்லை என்றால்
1.அதையே உணவாக உட்கொண்டால் அதுவாக நீ ஆகிவிடு… நீ பாம்பாகப் போ…! என்றும்… பேயாகப் போ…!” என்றும்
2.ரிஷி (நம் உயிர்) சாபம் விடுவதாகக் காட்டுகின்றார்கள்… காவியங்களில் இது தெளிவாக்கப்பட்டுள்ளது

சாபத்திலிருந்து மீட்டுவதற்கு வழியும் காட்டுகின்றார்கள். எப்படி…?

ஐயனே… அறியாமல் நான் செய்த தவறுக்கு எனக்கு விமோசனம் இல்லையா…! சாபத்திலிருந்து மீண்டிடும் நாள் எது…? எனக்கு அருள் கூர்ந்து நல்ல வாக்கினைக் கொடுங்கள்…! என்று வேண்டிக் கொள்வதாகவும் காட்டியிருப்பார்கள் காவியப் படைப்பிலே…!

நீ நல்லவனைத் தீண்ட எண்ணுவாய். அப்பொழுது அவன் கை படும். நீ மீண்டும் மனிதன் ஆவாய். அதனின் அர்த்தம் என்ன…?

ஒரு நல்லவன் தான் நடந்து போகிற பாதையில் பாம்பைப் பார்க்கிறான். அது தன்னைக் கடித்துவிடும்…! என்று அடிக்கின்றான். “மனிதன் அடித்து விடுவான்…!” என்று அது இவனைப் பார்க்கிறது.

1.பாம்பு மனிதனைக் கடித்து விட்டால் இவன் பாம்பு உடலுக்குள் வருவான்.
2.பாம்பை இவன் அடித்தான் என்றால் பாம்பின் உயிர் அவன் உடலுக்குள் போகும்.
3,மனித உடலுக்குள் வரும் பாம்பின் உயிர் மனித உணர்வுகளைக் கவர்ந்து மனிதனாகப் பிறக்கின்றது.

அதே சமயத்தில் நீ பேயாகப் போ…! என்றால் என்ன அர்த்தம்.

என்னை இப்படிச் செய்தானே… அப்படிச் செய்தானே பாவி…! அவன் எல்லாம் பாவி உருப்படுவானா…! என்று நினைப்பார்கள். இந்த உணர்வு வரப்போகும் போது அவன் உடலுக்குள் போகின்றது. அதே உணர்வை வைத்து அங்கே ஆட்டிப் படைக்கிறது.

அப்பொழுது ஐயனே…! இதிலிருந்து தப்பும் வழி எனக்கு ஒன்றுமில்லயா,,,?

நல்லவனுடைய நிழல் உன் மீது படும். நீ உள்ளிருந்து மனிதனாக ஆவாய் என்று ரிஷி சொல்வதாகக் காட்டுவார்கள்.

நாம் தெரிந்து கொள்வதற்குத் தான் இதையெல்லாம் உணர்த்தினார்கள் ஆனால் காலத்தால் இது எல்லாம் அறிந்து கொள்ள முடியாதபடி ஆகிவிட்டது ஏதோ கதைகள் அக்காலத்தில் நடந்தது… யாரோ செய்தார்கள்… என்றோ நடந்தது…! என்று இப்படித் தான் எண்ணுகின்றோம்.

நமக்குள் நடக்கும் இந்த உணர்வின் தன்மையை நம் உயிரின் இயக்கங்கள் அது எவ்வாறு…? என்பதை நாம் உணர்தல் வேண்டும். காரணம்… நாம் எதை எண்ணுகின்றோமோ அதைத் தன உயிர் சிருஷ்டித்து விடுகிறது.

1.நல்லதை எண்ணினால் மகிழ்ச்சியின் தன்மை அடைகின்றது
2.அருள் ஞானிகள் உணர்வப் பெற வேண்டும் என்று நாம் எண்ணினால் ஒளியின் சரீரமாக நம்மை மாற்றுகின்றது.

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்