ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 16, 2024

எம்மிடம் துன்பத்தைச் சொல்லி எதையும் கேட்காதீர்கள்… நல்லதைச் சொல்லி அதைக் கேட்டு வாங்குங்கள்

எம்மிடம் துன்பத்தைச் சொல்லி எதையும் கேட்காதீர்கள்… நல்லதைச் சொல்லி அதைக் கேட்டு வாங்குங்கள்

 

தெரிந்தோ தெரியாமலோ நம் உடலுக்குள் அசுர அணுக்கள் புகுந்து விட்டால் தன் அருகிலே இருக்கும் நல்ல அணுக்களைக் கொன்று புசிக்கத் தொடங்கிவிடும்.

நல்ல உடலை உருவாக்கிய அந்த அணுக்கள் மடிந்துவிட்டால் உடலுக்கு இயக்கச் சக்தியாக மற்றும்… “திரவகப் பொருள்கள்” கிடைக்காது போய்விடும்.

1.நரம்புகளுக்குள் ஒரு விதமான ஆசிட் (அமிலம்) உண்டு
2.அந்தத் திரவகம் நமக்குள் இல்லை என்றால் கைகளை மடக்குவதோ மீண்டும் நேராக்குவதோ கடினமாகிவிடும்.
3.மூட்டுகளிலும் இந்தத் திரவங்கள் ஓடப்பபட்டு அது தான் மடக்குவதற்கும் மற்றதுக்கும் இயக்குகிறது.

நாம் பார்க்கின்றோம் விஞ்ஞான அறிவு கொண்டு இயந்திரங்களுக்கு ஒரு திரவப் பொருட்களை (OIL – LUBRICANTS) அதற்குள் கலக்கின்றார்கள் அப்பொழுது அந்த இயந்திரங்கள் தேய்வில்லாதபடி சில காலம் ஓடுகின்றது.

இன்ஜின்களிலும் இதே போன்று திரவங்களைக் கலக்கின்றனர்… அதற்குள் இருக்கும் பேரிங்… பிஸ்டன்… தேய்வில்லாதபடி ஓடுகின்றது.

இதைப் போன்று தான் நம் உடலுக்குள் உயர்ந்த அணுக்களால் உருவாக்கப்பட்டது அந்த அணுக்களின் மலம் திரவமாக மாற்றப்பட்டு நம் உடல் உறுப்புகளில் இயக்கச் சக்தியாகக் கொண்டு வருகிறது.

உதாரணமாக நுரையீரல் என்று வைத்துக் கொள்வோம். நுரையீரலுக்குள் நுண்ணிய அலைகளாக இயக்கச் செய்யும்
1.அந்த நரம்புகளுக்கும் வாயு நரம்புகளுக்கும்… திரவம் அதற்குள் சென்ற பின் விரிவடைகின்றது.
2.மீண்டும் சுருங்கச் செய்வதற்கு அதில் உள்ள திரவ அணுக்கள் சுருங்கி இழுக்கும்
3.அந்தக் காற்று புகும் பொழுது மீண்டும் விரிவாகும்.

எப்படி ஒரு காற்றினை அழுத்தி இழுக்கப்படும் பொழுது விரிவாகிறதோ… அந்த அழுத்தத்தைக் குறைக்கப்படும் பொழுது எப்படிக் குறைகின்றதோ… இதைப் போன்று தான் நம் சுவாசப்பைகளை நரம்பில் உள்ள திரவம் இயக்குகின்றது.

நுரையீரலை இயக்கச் செய்யும்…
1.அதாவது அனைத்து உறுப்புகளையும் ஒருக்கிணைந்து இயக்கச் செய்யும் ஈரல் மையங்களில் ஆசிட் பவர் குறைந்து விட்டால்
2.அதை இழுத்து விரிவடையச் செய்யும் காற்று நிலைகள் விரிவடைந்து விட்டால் அதிகமாக விரிவடைந்து விடும்.
3.அதே சமயத்தில் அதைச் சுருங்கச் செய்யும் சக்தியும் குறைந்து விடுகின்றது.

அப்படிக் குறைவடையப்படும் போது நம் நினைவாற்றலையும்… இந்தத் திரவகம் சிறு மூளை பாகம் சென்று ஒன்றுடன் ஒன்று இணைந்து இயக்கப்படும் பொழுது அங்கேயும் அதனுடைய அழுத்தக் குறைவுகள் ஆகி விட்டால் அந்த உறுப்புகளை இயங்காது தடைப்படுத்தி விடுகின்றது… மிகவும் நுண்ணிய நிலைகளில் இப்படி ஆகிவிடுகின்றது.
1.இத்தகைய நிலைகள் நமக்குள் ஏற்பட்டு விட்டால்
2.தீய அணுக்கள் உடலுக்குள் புகாது தடைப்படுத்தும் சக்தி இழக்கப்படுகிறது.

இவ்வாறு துரித நிலைகள் கொண்டு இந்த விஷத்தன்மை ஊடுருவி விட்டால் விஷ அணுக்களாக உடலுக்குள் உருவாகி அது வளர்ச்சியாகத் தொடங்குகிறது.

அதனால் பொழுது
1.நல்லதைப் பெற முடியாதபடி
2.நல்லதை எண்ண முடியாதபடி
3.நல்லதைக் கேட்க முடியாது ஒரு தடையாகிவிடும்.

என்னிடம் வந்தீர்கள் என்றால் சாமி…! என்னுடைய நோய் குறையவே மாட்டேன் என்கிறது… கஷ்டம் என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது… குடும்பத்தில் சும்மா சண்டை வந்து கொண்டே இருக்கிறது…! என்றே சொல்வீர்கள்.

“நல்லதைச் சொல்லிக் கேளுங்கள்” என்று நான் சொன்னாலும் நீங்கள் கேட்க மாட்டீர்கள். எங்கள் வீட்டில் கஷ்டமாக இருக்கின்றது… அதை எப்படி நாங்கள் சொல்லாமல் இருப்பது…! என்று தான் சொல்வீர்கள்.

ஏனென்றால் எந்த உணர்வு இழுக்கின்றதோ அது தான் இங்கே வரும்.
1.கஷ்டம் என்ற உணர்வு அந்த நினைவாற்றல் வந்து விட்டால்
2.உங்கள் ஆன்மாவின் முன்னணியில் அது தான் இருக்கும்.

மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெறுவீர்கள். அது உங்கள் உடலுக்குள் நன்மை பயக்கும் சக்தியாக வரும். அதனால் நீங்கள் நலம் பெறுவீர்கள்… உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி வரும்… தொழில்கள் வளம் பெறும்…! என்று நான் சொன்னாலும்…
1.“இதை உங்கள் உணர்வு ஏற்க மறுக்கும்…”
2.நான் சொல்வது அனைத்துமே விரயம் ஆகிவிடும்

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்; எங்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்; மெய்ப்பொருள் காணும் சக்தி பெற வேண்டும்; என் குடும்பம் நலம் பெற வேண்டும்; எங்கள் உடல்கள் நலம் பெற வேண்டும்; குழந்தைகள் உயர்ந்த ஞானம் பெற வேண்டும்; குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட வேண்டும்; வியாபாரம் பெருக வேண்டும்; வாடிக்கையாளர்கள் பெருக வேண்டும்; அவர்கள் நலம் பெற வேண்டும்…! என்று இதை ஏங்கிப் பெற்றால் அந்த நல்ல அணுக்கள் உங்களில் வளரும்.

1.நீங்கள் உடல் நலம் பெறுவீர்கள்
2.மகரிஷிகளின் அருள் சக்தியால் உங்கள் குடும்பம் நலமும் வளமும் பெறும் என்று
3.இதைத்தான் உங்களுக்குள் ஊழ்வினை என்று வித்தாகப் பதிவு செய்கின்றேன்.
3.அதை நினைவாக்கி வளர்ப்பதற்குத் தான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு உபதேசிக்கின்றேன்.

ஆகவே நான் கொடுக்கும் நல்லதை மறந்துவிட்டுத் துன்பத்தைச் சொல்லி அத்தகைய பதிவை நீங்கள் வளர்ப்பது உங்களுக்கு நல்லதல்ல…!

அதை மாற்றிக் கொள்ளுங்கள்…!