ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 31, 2023

நல்ல நேரத்தைத் தான் நாம் உருவாக்க வேண்டும்…!

சாங்கிய சாஸ்திரத்தைச் செய்து நல்ல நேரம் வருகின்றதா… கெட்ட நேரம் வருகிறதா…? என்று தான் இன்று பார்த்துக் கொண்டு வாழ்கிறோம்.

உதாரணமாக ஒரு மனிதன் திடீரென்று கடுமையான நெஞ்சு வலியால் அவதிப்படுகின்றான்… அவனுக்கு மூச்சுத் திணறலாக இருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம்.

மருத்துவரிடம் உடனடியாக அழைத்துப் போனால் தான் அவனுக்குச் சரியாகும். நல்ல நேரம் பார்த்து அவனை மருத்துவரிடம் கொண்டு போக முடியுமா…?

நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருந்தால் “அந்த நல்ல நேரம் அவரைக் காப்பாற்றுமா…?”

இப்படி… நம்மை அறியாமலேயே நல்ல நேரம் கெட்ட நேரம் என்று தான் சாங்கியப்படி எண்ணிக் கொண்டிருக்கின்றோம். அதிலே உண்மை இல்லை.

ஆக அவரைக் காக்க வேண்டும் என்று எண்ணத்தில் உடனே சென்றால் அவருக்கு நல்ல நேரம் வருகிறது… அவரை நிச்சயம் பிழைக்க வைக்க முடியும்.

நல்ல நேரம் எங்கே உருவாகின்றது…?
1.நமக்குள் தான் உருவாகின்றது
2.நல்ல நேரத்தைத் தான் நாம் உருவாக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

நல்ல நேரத்தை உருவாக்க வேண்டும் என்றால்…
1.இப்போது ஒரு கஷ்டம் வருகின்றது என்றால்
2.அந்த நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
3.அந்தச் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
4.எனக்கு நல்லது நடக்க வேண்டும்…! என்ற இந்தச் சந்தர்ப்பத்தை அங்கே உருவாக்க வேண்டும்
5.அப்பொழுது அந்த நல்லது நடக்கும்… இது நல்ல நேரம் ஆகின்றது

ஆனால் ஒருவர் வருகிறார். “ஜாதகப்படி இந்த நேரம் மோசமான நேரம்… இந்த நேரத்திலே நீங்கள் நல்ல காரியத்தை ஆரம்பிக்கின்றீர்கள்…!” என்று நம்மிடம் சொல்கிறார்.

அவர் சொல்வதைப் பதிவு செய்தால் போதும்.
1.அவர்கள் சொல்லும் அந்தக் கெட்ட நேரம் நமக்குள் வந்து
2.அது கெட்ட நேரமாகவே ஆகிவிடுகிறது.

ஆக கெட்ட நேரமும் நல்ல நேரமும் எங்கே எப்படி உருவாகின்றது…? என்பதை நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

வீட்டில் இந்தக் கஷ்டம் அந்தக் கஷ்டம் என்று சொல்வார்கள். பின் என்னுடைய நேரம் கெட்ட நேரம்… அதனால்தான் இப்படியானது…! என்று சொல்லிவிடுவார்கள்.

இதை எல்லாம் எடுத்துவிட்டு
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் நாம் எண்ணி உயிரிலே உருவாக்கப்பட்டால்…
1.அந்த உணர்வின் வழி அந்த உணர்ச்சி… அது நம்மை ஆளத் தொடங்கும்
2.நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வைக் கண்களால் நினைக்கப்படும் போது
3.அந்த உணர்வு வலுவாகி உயிரிலே மோதும் போது அதை நல்ல நேரமாக உயிர் சமைக்கும்.

ஆக… நல்ல நேரமும் கெட்ட நேரமும் மனிதனுக்கு இல்லை.