ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 6, 2023

பரமபதத்தின் இரகசியத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும்

1.எதிலேயும் யாரிடமும் வெறுப்பு விருப்பு என்ற உணர்வுகள் இல்லாதபடி ஒளியின் சரீரமாக நாம் பெற்று
2.அந்த மெய் ஒளியின் எண்ணத்துடன் நாம் செல்வதுதான் ஏகாதசி என்பது.

அன்று தான் பரமபதம் அடையும் நாள் என்றும்… சொர்க்கவாசல் என்றும் கோயில்களில் வடக்கு வாசலைத் திறந்து வைப்பார்கள்.

வாழ்க்கையில் நாம் எல்லாம் நல்லதைத்தான் செய்வோம். ஆனால் நம்மை அறியாதபடியே வேதனை என்று வரப்படும் பொழுது அந்த விஷமான நிலை தாக்கப்பட்ட பின் (“பரமபத விளையாட்டில் பாம்புகள் கொத்துவது போல்") நம் உடலுக்குள் பல விதமான நோய்களாகி விடுகிறது

1.நோய்கள் ஆன பின் மனித சரீரத்தை இழந்து மீண்டும் இழி நிலையான சரீரங்களைப் பெற்று
2.அதிலிருந்து மீண்டு… மீண்டும் மனித நிலைக்கு வந்து மீண்டும் வளர்ச்சியாகி வளர்ச்சியாகி…
3.இப்படிப் பல கோடிச் சரீரங்களை நாம் எடுத்து இழந்து… எடுத்து இழந்து…
4.இந்தச் சுற்றிலேயே தான் இன்று இருக்கின்றோம்.

மெய் வழியின் தன்மையை அடையும் மார்க்கம் இல்லாது நாம் இப்போது தவித்துக் கொண்டிருக்கிறோம்

அந்த மெய் வழியில் நாம் செல்வதற்கு என்ன வழி…? என்ற நிலையைத்தான் குருநாதர் அன்று ஏனக்கு (ஞானகுரு) உணர்த்தினார்.

இந்த மார்கழி மாதம் ஏகாதசி அன்று தான் உடலை விட்டுக் குருநாதர் விண் சென்றார். விண் சென்றபின் முதல் நிலையாக என்னை இயக்கியதும் பேசச் செய்ததும் அவருடைய ஆன்மாவின் உணர்வின் நிலைகள் தான்.

பல உண்மைகளை உணர்வதற்கு அவர் உணர்வின் தொடர் வழி கொண்டு நான் செல்ல 12 வருட காலம் பல அனுபவங்களைக் கொடுத்துக் கொடுத்து அவர் எப்படிச் சூட்சும நிலைகள் கொண்டு இருக்கின்றாரோ அந்த சூட்சும நிலையைக் கண்டுணரும்படிச் செய்தார்.

1.அவர் ஒளி முன் செல்ல நான் பின் சென்று அவர் காட்டிய அருள் நெறியின் நிலைகள் கொண்டு
2.ஒவ்வொரு உணர்வும் ஒவ்வொரு உடலின் உறுப்புகளும் அது எவ்வாறு உருவானது…?
3.இயற்கையின் நிலைகள் கொண்டு என்பதை இது எல்லாம் எவ்வாறு ஆனது என்ற மெய் உணர்வைக் காட்டி
4.அந்தச் சப்தரிஷி மண்டலத்திலிருந்து வரக்கூடிய ஆற்றல்மிக்க சக்திகளை எவ்வாறு பெற வேண்டும்…? என்று எனக்குக் காட்டினார்.

அவர் எனக்கு அருளிய அந்த ஆற்றல்மிக்க நிலைகளை நீங்களும் பெற வேண்டும் என்ற ஆசையில் தான் இதை இன்று உபதேசிப்பது. ஆக… மார்கழி மாதம் இந்தப் பௌர்ணமி மிக முக்கியமான நாள்.

ஈஸ்வரபட்டர் என்ற நாமம் கொண்ட உடலிலிருந்து குருநாதர் விண் சென்றாலும்
1.இதற்கு முந்தி எத்தனையோ கோடி லட்சம் ஆண்டுகள் முன்னாடி விண் சென்று சப்தரிஷி மண்டலங்களாக அடைந்தது
2.அவருடைய (ஈஸ்வராய குருதேவர்) உணர்வின் தன்மை அந்த அலைகள் வரும் பொழுது தான்
3.பூமிக்குள் இருக்கக்கூடிய ஒவ்வொரு மனிதர்களின் உள்ளத்திலும் இது பட்டு
4.அதன் வழி இந்த மெய் உணர்வின் ஒளிகள் வளர்ந்து வளர்ந்து இன்றும் பரப்பிக் கொண்டிருக்கின்றது
4.இந்த பூமி என்ற நிலையில் பல பாகங்களிலும் இது பரவிக் கொண்டிருக்கின்றது.

உடலை விட்டு சென்ற ஒரு உயிரான்மா… பூமியின் பிடிப்பில் இருப்பதை… அதை எவ்வாறு விண் செலுத்த வேண்டும்…? என்ற பேருண்மையை எனக்கு உணர்த்தினார் குருநாதர்.

தாய் தந்தையர்கள் எண்ணத்தால் தான் நாம் கருவானோம்.. உடல் பெற்றோம்.. ஆகவே நம்மை ஈன்றெடுத்த முதல் தெய்வங்கள் அவர்கள் தான். உடலை விட்டுச் சென்ற பின் அந்த ஆன்மாக்களை எவ்வாறு விண் செலுத்துவது என்றும்… அவர்களை விண் செலுத்தினால் தான் விண்ணில் இருக்கக்கூடிய சப்தரிஷி மண்டலத்துடன் நாமும் இணைய முடியும் என்றும் குருநாதர் உணர்த்தினார்.

சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளிப்படும் அந்த ஆற்றல்மிக்க சக்தியை நாம் தாய் தந்தையரின் உயிரான்மாக்களுக்கு உணவாக ஊட்டச் செய்து
1.அந்த உனர்வின் சத்து கொண்டு ஒளி சரீரமாக அங்கே வளர்க்கச் செய்ய வேண்டும்
2.அவ்வாறு வளர்க்கச் செய்ய்யும் போது தான் “நம்முடைய எண்ண அலைகள் விண்ணை நோக்கிச் செல்லும்…” என்ற இந்த உண்மை நிலைகளை உணர்த்தினார்.

அதே சமயத்தில் சப்தரிஷிகளாக ஆவதற்கு முன் இந்த மனித உடலிலிருந்து எவ்வாறு அந்த நிலையைப் பெற்றார்கள்…? என்று ஈஸ்வரபட்டர் என்ற நாமத்தில் உடலை விட்டுப் பிரிந்து சென்ற பின் அந்தப் பேருண்மைகளை எமக்கு வழிகாட்டினார்.

குருநாதர் அவர் வழி காட்டிய அறநெறிகள் கொண்டு… ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிலையையும் எனக்கு எப்படிக் காட்டினாரோ இந்த உபதேச வாயிலாக உங்களுக்கும் அதை ஊட்டுகின்றோம்.