ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 3, 2023

மதங்களால் ஏற்படுத்தப்பட்ட கடவுள்கள் எல்லாம் எங்கே போனார்கள்…? என்று தெரியவில்லை…!

இந்தக் காற்று மண்டலம் மிகுந்த நச்சுத்தன்மையாகப் பெருகிக் கொண்டிருக்கின்றது என்று ஏற்கனவே பல முறை சொல்லியிருக்கின்றேன்.

விஞ்ஞான அறிவால் உருவாக்கப்பட்ட கதிரியக்கங்களும் அதிலிருந்து வெளிப்படக்கூடிய விஷத்தன்மைகளும் நமது பூமியில் கடுமையாகப் பரவிக் கொண்டுள்ளது.

1.இந்த விஷத்தன்மைகள் மனிதனுக்குள் நுகரப்பட்டு நுகரப்பட்டுத் தாவர இனங்களையும் சாடி
2.நாம் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள்ளும் இந்த விஷத் தன்மைகள் பரவிவிட்டது.
3.மனிதனுடைய சிந்தனையையே அது இழக்கச் செய்து மனிதனுக்கு மனிதன் கொடூரமாகத் தாக்கிடும் நிலை வந்துவிட்டது.

அதே சமயத்தில் நாம் செல்வத்தைத் தேடி வைத்திருந்தாலும் அதற்குப் பாதுகாப்பு இருக்கிறதா…! என்றால் அதுவும் கேள்விக் குறி தான்.

செல்வத்தை எடுத்துக் கொண்டு சென்றாலும் பரவாயில்லை… வீட்டில் உள்ளோரையும் கொன்று விட்டு அதன் பின் செல்வத்தை அபகரித்து செல்லும் சூழ்நிலை இருக்கின்றது.

அது மட்டுமல்ல…! மனிதனை மனிதனே கொன்று சாப்பிடும் நிலைகளும் வந்துவிட்டது. தாய்லாந்து ஆப்பிரிக்கா சீனா ரஷ்யா அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகளில் இது வந்து விட்டது. “மனித மாமிசத்தை வைத்து விற்பனை செய்யும் ஓட்டல்களும்... கடைகளும் வந்துவிட்டது...”

காரணம்… விஞ்ஞான அறிவுகள் முதிர முதிர “மனிதனுடைய சமுதாயம்… மக்கள் தொகை கூடுகின்றது…” என்று கணக்கிட்டு இந்த வகையிலாவது குறையட்டும் என்று கருச் சிதைவுகள் ஏற்படுத்தப்பட்டு கருச்சிதைவான அந்தச் சிசுக்களை எடுத்து “மாமிசமாக வியாபாரம் செய்து கொண்டுள்ளார்கள்…!”
1.இன்று சிசுக்களைச் சாப்பிடுகின்றனர்…
2.நாளைக்கு மனிதனையே முழுமையாக உட்கொள்வார்கள்.

உலகம் முழுமைக்கும் இது பரவி விட்டது. இத்தகைய உலகில் தான் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

1.மதங்களால் ஏற்படுத்தப்பட்ட கடவுள்கள் எல்லாம் எங்கே போனார்கள்…? என்று தெரியவில்லை…!
2.மதங்களால் உருவாக்கப்பட்ட சத்தியம் தர்மம் நியாயம் நிதானம் எல்லாம் எங்கே போனது…? என்றும் தெரியவில்லை

படிப்பறிவு அதிகமாக இருந்தாலும் அதைச் சீர்படுத்த ஞானம் தேவை. பொதுவாக… எல்லாவற்றுக்குமே ஞானம் தேவை தான். கொலைகாரனாக இருந்தாலும் திருடனாக இருந்தாலும் அந்த ஞானத்துடன் தான் அந்த வேலையைச் செய்கின்றார்கள்.

1.ஆனால் அருள் ஞானம்...! தீமைகளை அகற்றி நன்மைகள் செய்யும் இந்த ஞானங்கள் தான் மனிதனுக்குத் தேவை.
2.அத்தகைய நிலை இல்லை என்றால் இனி வரக்கூடிய எதிர்காலம்……….!

60 வயதிற்கு மேலே உள்ளவர்களுக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் இருபது வயது ஆனவர்களோ அல்லது பிறக்கும் குழந்தைகளுடைய எதிர்காலமோ… “இனி எவ்வாறு இருக்கும்…?” என்று சொல்லவே முடியாது. அந்த அளவில் தான் இன்றைய உலகம் இருக்கின்றது.

மதங்களாலும் இனங்களாலும் உருவாக்கப்பட்ட கடவுள்கள் யாரையும் காப்பாற்றப் போவதில்லை. நம்மை உருவாக்கிய கடவுள்… உயிர் தான் கடவுளாக நம்மைக் காப்பாற்றக் கூடியது.

இன்று மனிதனாக இருப்பவர்கள் நாளை மனிதனாகப் பிறப்பது கஷ்டம். இந்த உடலுக்குப் பின் மனிதனல்லாத விஷத்தன்மை கொண்ட உயிரினங்களாக உயிர் நம்மை உருவாக்கிவிடும்.

1.உயிரணு தோன்றி புவியின் ஈர்ப்புக்குள் வந்து மனிதனாக வளர்ந்து
2.இருளை நீக்கி ஒளியின் உடலாக இருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுத்துப் பழகி
3.உடலுக்குள் சேர்த்து நம் உணர்வுகள அனைத்தையும் ஒளியாக மாற்றப் பழகுதல் வேண்டும்.
4.ஆகவே இன்று நமக்கு நல்ல நினைவு இருக்கும் பொழுது குருநாதர் காட்டிய அருள் வழியில் இதைச் செயல்படுத்துங்கள்.