ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 2, 2015

திருமணம் செய்யாது பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்கின்றேன் என்ற நிலை சரிதானா...?

நாராயணன் மறு அவதாரம் விஷ்ணு. நாராயணன் என்பது சூரியன் விஷ்ணு என்பது உயிரணு. ஆண் பெண் என்ற நிலைகளில் தான் இந்த உயிரின் தன்மை உருவாகிறது

பின், கவர்ந்த உணர்வை அணுக்களாக மாற்றும் திறன் பெறுகின்றது இதுதான் விஷ்ணுவின் மனைவி லட்சுமி.

ஆக இந்த உயிரணு தோன்றிய பின் நாராயணன் மறு அவதாரம் எடுக்கிறான் என்ற நிலையைத் தெளிவாக்கியது,

ஒன்றுடன் ஒன்று மோதப்படும்போது பெண்பால் ஆண்பால் என்ற நிலைகள் இணைந்துதான் (உணர்வின் தன்மை கவரப்படும்போது) கவர்ந்த சக்தியை உருவாக்கும் ஆற்றல் பெறுகின்றது.

ஆண், பெண் என்ற நிலைகள் இல்லை என்றால்
இந்த அமில சக்தி கூடி
ஒன்றை இணைக்கும் சக்தியை இழந்துவிடும்.
தனித்து ஆண்பால் என்ற நிலை எதையும் உருவாக்காது.

விஞ்ஞான அறிவு கொண்டு இதை இன்றும் நிரூபிக்கின்றான் விஞ்ஞானி.

ஆணும் பெண்ணும் இணையாதபடி இவன் கொடுக்கும் அமில சக்தியின் உணர்வு கொண்டு கருவுறும் தன்மையில் முட்டையை உருவாக்குகின்றான்.

அந்த முட்டையை வைத்து நீங்கள் அடையில் வைத்தால் அது குஞ்சு பொரிக்காது. அதற்குள் அந்த அமிலத்தின் தன்மைதான் இருக்கும் ஆனால் கருவுறும் தன்மை இழக்கப்படும்.

இதை விஞ்ஞான அறிவு கொண்டு இந்த உணர்வின் தன்மையை தெளிவாக்கி உள்ளான். தனித்து ஆண்பால் என்ற நிலைகள் கொண்டு எதையும் உருவாக்க முடியாது என்று அன்றே மெய்ஞானி அதைச் சொல்லியிருக்கிறான்.

அப்படி அவர்கள் கூறியிருக்கும்போது இன்று நீ திருமணமே செய்யாதபடி ஆண்டவனை நேசித்தால் நீ அவனைப் போய் அடையலாம் என்று சொல்வது எப்படி சரியாகும்?

அரசர்கள் ஆண்ட அக்காலங்களில் வேதங்களில் அதாவது அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளபடி தெய்வ நிலைகள் உருவாக்கப்பட்டு ஆலயங்களைக் கட்டி அதற்கு ஒரு காவலனை வைக்கப்படும்போது
அவன் திருமணம் செய்யாமல் இருந்தால்தான்
தனக்குச் சொத்து வேண்டும் என்று அவன் விரும்ப மாட்டான்
பொது மக்களை விரும்புவான்.
அதன் வழி கொண்டு மக்களுடைய ஆசையைப் பெற்றால்
மெய்ஞானம் பெறும் தகுதி பெறுவான் என்று செய்தார்கள்.

அதைப் போல இன்று மடாதிபதிகள் திருமணம் செய்யாது அந்த சக்தியின் சேவையாக இருக்கும் சிலர் திருமணம் செய்யாது ஆண்டவனை நான் அடையப் போகிறேன் என்றால் நிச்சயம் அடைய முடியாது.

சாங்கிய சாஸ்திரங்கள் கொண்டு சிலைகளை உருவாக்கி, அதன் வழி கொண்டு நைவேத்தியம் ஆகியவகளைச் செய்து வந்தால் ஆண்டவனின் அருளைப் பெறுவோம் என்று எண்ணி இத்தகைய தவறுகளைச் செய்தால் மனிதனாகப் பிறந்தும், மீண்டும் பிறவியின் நிலைகளை எடுக்கும் நிலைகள்தான் வரும்.