ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 15, 2015

கடவுளைத் தேடிக் கொண்டுள்ளோம் - அவனுடன் ஐக்கியமாகும் வழி என்ன...?

உங்களுக்கு உதாரணத்துக்குச் சொல்லுகின்றேன். கார்த்திகை நட்சத்திரம் என்பது ஆண்பால், ரேவதி நட்சத்திரம் என்பது பெண்பால்.

நட்சத்திரங்கள் உமிழ்த்தும் உணர்வுகள் இது இரண்டும் அணுக்களாக வரப்படும் போது சூரியன் அதைக் கவர்ந்து அதனை அணுக்களாக மாற்றப்படும்போது மற்றக்கலவையுடன் கலந்து
கல்லாகவும் மண்ணாகவும், வைரங்களாகவும்
மாற்றும் திறன் பெறுகின்றது.
உலோகங்களாகவும் மாற்றப்படுகின்றது

மற்ற எந்த உலோகக்கலவை இது கவருகின்றதோ அதன் வரிசைப்படுத்தி அதன் உணர்வை இரண்டும் சேர்த்து அந்த உணர்வின் தன்மை கருவாக மாற்றும் தன்மை அடைகின்றது

கார்த்திகை நட்சத்திரத்திலிருந்து வரும் ஒரு அணுவின் தன்மையும் அதே சமயத்தில் ரேவதி நட்சத்திரத்திலிருந்து வரும் அணுவின் தன்மையும் அது அணுக்களாக மாறி இருப்பினும் வியாழன் கோளில் வரும் கதிர் இயக்கப் பொறியின் தன்மையை அது வெளிப்படுத்தும் நிலையை சூரியன் காந்த சக்தி கவருமே என்றால் உயிரணுவின் தோற்றமாகிறது.

கார்த்திகை நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் துகள் ரேவதி நட்சத்திரத்தின் துகளின் அருகிலே வந்தால் இதைக் கண்டு இந்த உந்து விசையால் ரேவதி நட்சத்திரத்தின் துகள் நகர்ந்து ஓடுகிறது.

ஓடி வரும் நிலைகளில் சந்தர்ப்பவசத்தால் வியாழன் கோளின் கதிர் இயக்கப் பொறியுடன் மோதும்பொழுது கிறு கிறு என்று சுழற்சியாகி அதைத் தொடர்ந்து பின் வரும் கார்த்திகை நட்சத்திரத்தின் தன்மையும் தனக்குள் சேர்த்து ஒன்றுடன் ஒன்று மோதும் நிலைகள் வருகின்றது.

மோதும் நிலைகள் வரும்போது அதிலே ஏற்படுவது வெப்பமும் அதிலே ஈர்க்கும் சக்தியும் வருகின்றது. உயிரணுவிற்குள் தோன்றும் வெப்பம் - விஷ்ணு, ஈர்க்கும் காந்தம் – லட்சுமி.

ஈர்க்கும் சக்தி வரப்படும்போது எந்தக்கோள் உமிழ்த்திய அணுவின் தன்மை இங்கே அடைகின்றதோ அதன் அடர்த்திக்குள் இவ்வாறு உருவாகும் நிலைகள் கொண்டு அந்த அணுக்களை கவர்ந்து அதற்குள் அடைபடுகின்றது. ஒரு உயிரணுவாக உருவாகின்றது

உயிரணுவிற்குள் துடிக்கும் நிலைகள் வரப்படும்போதுதான் விஷ்ணுவின் மனைவி லட்சுமி, அதாவது துடிக்கும் நிலைகள் உருவாக்கப்படும்போதுதான் ஈர்க்கும் காந்தமே அவ்வாறு உருவாகின்றது.

முதலிலே காந்தத்தால் உருவானதுதான் சூரியனும், அதைத்தான் லட்சுமி நாராயணா என்று காரணப் பெயரைச் சூட்டுகிறார்கள்.

உணர்வின் தன்மைகள் ஒன்றோடு ஒன்று மோதி அந்த வெப்பத்தின் தன்மை அடையப்படும் போது ஈர்க்கும் தன்மை உருவாகி லட்சுமியும் அந்த விஷ்ணுவும் தனக்குள் கவரும் சக்தி எதுவோ உயிரணு ஆன பின் அதே அணுவின் தன்மை ஜீவ அணுவை உருவாக்குகிறது.

ஒரு செடியில் வித்து உருவாக்கி விட்டால் அந்த வித்து நிலத்தில் ஊன்றும் போது அதே உணர்வின் சத்தை எடுத்து அதே செடியாக வளரும்.

அதைப் போன்று எதனை இரண்டாகச் சேர்த்து உயிரணு ஜீவ அணுவாக உருவாக்குகின்றதோ அந்த ஜீவ அணு எந்த சத்தினை உருவாக்கியதோ தன் இனத்தை அது உருவாக்கும்.
அதனால்தான் விஷ்ணுவின் மகன் பிரம்மா என்றும்
பிரம்மா உருவாக்குகிறான் என்றும் உணர்த்தப்பட்டது.

எதை இந்த உயிர் அணு நுகர்ந்து ஒரு அணுவாக உருவாக்கியதோ தன் இனத்தைக் கவர்ந்து தன் இனத்தை அது பெருக்கும் என்றும் விஷ்ணுவின் மகன் பிரம்மா என்று காரணப்பெயரை சுட்டிக்காட்டி நாம் எல்லாம் தெளிவாக தெரிந்து கொள்ளும்படி செய்தனர் அருள்ஞானிகள்.

ஆகவே, நாம் எப்படி உருவானோம் என்ற உண்மையை உணரும் வழிகள் கண்டுணர்ந்த ஆதியிலே கண்டவன் அருள்ஞானி அகஸ்தியன் இதை வெளிப்படுத்தினான். அந்த உணர்வலைகள் இன்றும் உண்டு. இதைத்தான் வேதங்கள் கூறுகின்றது.

ஆனால், காலத்தால் அரசர்களால் வேதங்களை தனக்குகந்த நிலைகளாக மாற்றி பேருண்மையின் நிலைகளை மறைந்து இன்றும் அரசுப் போர்கள் நடந்து ஞானிகள் காட்டிய உணர்வின் அலைகள் மறைந்துவிட்டது.

தன்னைத்தான் அறிந்து கொள்ளும் சக்தியை இழந்து இன்று மனிதர்கள் நாம் கடவுளைத் தேடிக் கொண்டே உள்ளோம். நமக்குள் உள் நின்று இயக்குகிறான் என்ற நிலையை மறந்தேவிட்டோம்.

அன்று அகஸ்தியன் கண்டுணர்ந்த உண்மைகளை வியாசகர் நமக்கு பிற்காலத்தில் எடுத்துரைத்தார். அதை வேதங்களாக மாற்றப்பட்டு தவறான வழிகளில் காட்டப்பட்டு தவறின் நிலையிலே அரசர்கள் நம்மை இயக்கிவிட்டார்கள்.

இன்று விஞ்ஞான உலகில் இந்தக் காற்று மண்டலமே நச்சுத்தன்மை அடைந்து மனிதனை உருமாற்றும் நிலைகளும் மனிதனின் குணங்களை சீர்கெடுக்கும் நிலையும் விஷத்தன்மை கொண்ட செயல்களைச் செயல்படுத்தும் உணர்வுகள் பெருகிக் கொண்டிருக்கிறது.

மனிதனுக்கு மனிதன் இரக்கமற்று கொன்று புசித்து அதிலே ரசிக்கும் தன்மையும் உருபெற்றுக் கொண்டுள்ளது. ஆகவே இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் தப்புதல் வேண்டும்.

இதிலிருந்து எவ்வாறு தப்ப வேண்டும் என்பதற்குத்தான் இப்பொழுது நமது குருநாதர் காட்டிய அருள்வழியில் ந்த அருள்ஞானி அகஸ்தியனின் ஆற்றல்களையெல்லாம் நீங்கள் பெறவேண்டும் என்று உபதேசிக்கிறோம்.

இந்த உணர்வுகளை உங்கள் உடலுக்குள் பதிவாக்கிவிட்டால் உங்கள் நினைவின் ஆற்றல் தீமையில் இருந்து விடுபடும் உணர்வினை உங்களிலே வளர்த்து அருள்ஞானிகளின் அருள் உணர்வை உங்களில் பெருக்கிட உதவும்.

இந்த பூமியில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி
ஒளியின் சரீரமாக்கும்ந்த உணர்வுகளை நுகர்ந்து
கடைசி நிலைகளில் நாம் அனைவரும்
பிறவியில்லா நிலைகள் அடைய இது உதவும்.