ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 19, 2024

நோய் நீக்கும் மருந்து

நோய் நீக்கும் மருந்து

 

நோய்வாய்ப்பட்டவர்கள் அவரவர்கள் உடலில் உள்ள நோய்கள் நீங்க வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள். மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து… எங்கள் உடலில் உள்ள நோய்கள் அனைத்தும் நீங்கி உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

இடுப்பு வலியோ கண் வலியோ பிடரி வலியோ வயிற்று வலியோ இருதய வலியோ சிறுநீரகக் கோளாறோ… இதைப் போன்ற எந்தக் குறைபாடுகள் இருந்தாலும் அது எல்லாம் அகல வேண்டும்… வலி குறைய வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்..
1.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வு இப்பொழுது உங்கள் உடல் முழுவதும் படரும்
2.எல்லா உறுப்புகளிலும் அந்த சக்திகள் படரும்
3.அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் உற்சாகமடையும்…
4.அதற்குள் இருக்கக்கூடிய குறைபாடுகளை நீக்க மகரிஷிகள் உணர்வுகள் “மருந்தாக” அமையும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா.

இப்பொழுது…
1.உங்கள் உடலில் ஒரு மின்சாரம் பாய்வது போன்று இந்த உணர்வுகள் ஊடுருவிப் பாய்ந்து…
2.நோய்களை நீக்கும் ஒரு இயக்கச் சக்தியாக வரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் இருக்கக்கூடிய சகல நோய்களும் நீங்க வேண்டும் என்று… அவரவர்கள் உடலில் உள்ள நோயை நீங்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

“பொதுவான விதிப்படி” எங்கள் உடலில் உள்ள சர்வ நோய்களும் நீங்கி உடல் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி அந்தச் சக்திகளைப் பெறுங்கள்.

கை கால் குடைச்சலோ பிடரி வலியோ மூட்டு வாதமோ அந்த வலிகள் நீங்க வேண்டும் என்று ஏங்கி ஒரு ஐந்து நிமிடம் தியானியுங்கள்.

ருவ நட்சத்திரத்தினுடைய உணர்வுகள் உங்கள் உடலில் பரவுவதை உணரலாம் இருதய வலி இருந்தால் அது நீங்குவதையும் ஆஸ்த்மா தொந்தரவு இருந்தால் நுரையீரலில் இருந்து அந்தச் சளிகள் அகல்வதையும் காணலாம்… மூட்டு வலி நீங்குவதையும் உணர முடியும்.

இராமாயணத்தில் காட்டியபடி ஜனக சக்கரவர்த்தி நற்குணங்களை பேணிக் காக்க நீ என்ன செய்ய வேண்டும்…? என்று அங்கே சுயம்வரத்தை (பந்தயத்தை) வைக்கின்றார்.

மற்றவர்கள் அந்த ஆயுதத்தை வைத்து அவரவர் திறமையைக் காட்டுகின்றார்கள்.
1.இராமனோ தீமை செய்யும் (எண்ணங்களை) அந்த ஆயுதத்தை ஒடித்து விடுகிறான்.
2.அதாவது பகைமை இல்லாது தன்னுடன் அனைவரும் இணைந்து வாழ வேண்டும் என்று இராமன் எண்ணுகின்றான்.

வேதனை என்ற உணர்வை நமக்குள் வளர்த்து விட்டால் அதை எண்ணும் பொழுது பிறரை வேதனைப்படுத்தும் நிலையே வருகின்றது.

அதற்குப் பதிலாக…
1.மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணித் தீமை செய்யும் எண்ணங்களை ஒடித்து விட்டு…
2.அனைவரும் நலம் பெற வேண்டும் என்று அருள் ஞானிகள் உணர்வைப் பாய்ச்சப்படும் போது நாமும் மகிழ்ந்து வாழ முடியும்.

அத்தகைய மகிழ்ச்சி தரும் அந்த உணர்வைத் தான் கல்யாணராமா…! என்று சொல்வது

1.ஒவ்வொரு நாளும் காலை துருவ தியானத்தில்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணினால் “நாம் கல்யாணராமன் ஆகின்றோம்…”

பகைமையை உருவாக்கும்… அதனால் உடலில் உருவாகும் நோய்கள் அனைத்தும் அகற்றப்படும்…. நமது நினைவின் ஆற்றல் அனைத்தும் சப்தரிஷி மண்டலத்துடன் இணையும்.

வாழ்க்கையில் வரும் பகைமை உணர்வைப் பற்றற்றதாக மாற்றி… மகரிஷிகளின் உணர்வை நமக்குள் பற்றுடன் பற்றி… பேரின்பப் பெரு வாழ்வாக அருள் மகரிஷிகளுடன் நாம் இணைந்து வாழ்வோம்.

அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழ வேண்டும் என்று நாம் தவமிருப்போம்.

ஆண்டவன் எங்குள்ளான்…?

ஆண்டவன் எங்குள்ளான்…?

 

நடக்கின்றது பங்குனி உத்திரக் காவடி ஆட்டம்… ஆட்ட்த்தில் கலந்திட்டேன் நானும் அதிலே காவடி ஆடிட…! செப்பிடுவான் என் சிஷ்யனும் (ஞானகுரு) வந்து.

நீ பிறந்த ஊரிலும் பிறந்த ஊர் என்பது உன் முதல் ஜென்மத்தைச் சொல்கின்றேன்… மிகவும் முக்கியம்…! நீ பிறந்த ஊரிலும் உன்னால் ஸ்தாபகம் செய்த கோவிலிலும் நடக்கின்றதப்பா பங்குனி உத்திரம் பெரும் விமரிசையாக.

ஊரின் பெயரைச் சொல்லிவிட்டால் உன் கவனம் எல்லாம் அதனுள்ளேதான். உன் தியானத்திற்கு விடுகின்றேன்… கண்டிடுவாய்… அந்நிலையில் காவடியையும் கண்டிடுவாய்.

அழகான துறையினிலே உன் அருளால் அமைந்ததப்பா… அத்திருஸ்தலமே…! உனது புகழ் உலகமெங்கும் ஓங்கிடும் நிலையில் இருந்திட்டாய் போன ஜென்மத்திலும்.
1.உன் பெயருக்கும்… உன் உடலின் பெயருக்கும்… போன ஜென்மத்திற்கும் தொடர்பு உள்ளதப்பா.
2.இந்நிலையை எந்த ஜோசியனும் சொன்னானா…?

உலகெங்கும் தெரிந்த கோயில் இந்த ஜென்மத்திலும் உன்னுடன் தொடர்புடைய கோவில்… இப்பொழுது இருக்கும் நிலையில் தொடர்பில்லை.

உன் நினைவில் போகரின் ஸ்தாபகத்தால் வந்த ஸ்தலம் என்ற எண்ணம் தான் நிலை புரிந்ததா…! போகரின் எண்ணம் எல்லாம் உன் நினைவில் வந்திடுவதும் போன ஜென்மத் தொடர்பினால் தான்.

போகர் தான் பெற்ற பயனால் இன்றும் உள்ளார்… என்றும் இருப்பார் முருகனாகவே…! பெரும் முருகர் ஸ்தலமைத்தாய்…! முதல் ஜென்மத்தில் விட்ட சிறு குறையினால் வந்ததப்பா இந்த ஜென்மம்.

விட்ட குறையை இந்த ஜென்ம நிலையில் ஸ்தாபிதம் செய்து விடப்பா...! போகரின் நிலையில் வந்திடவே ஸ்தாபிதம் செய்திடப்பா…! செய்த பலனினால் தான் உன் துடிப்பும் ஆர்வமும் அதிவேகமும் போகரும் பகர்ந்திடுவார் அவசரக்காரன் என்று.

நான் சொன்ன நிலையைப் பார்த்தாயா…! உன் நிலையை எண்ணிப்பார்… உன் துடிப்பும் வேகமும் தான் உன் நிலையை உயர்த்தி விட்டது.

விட்ட குறையை முடித்திடப்பா…!
1.உன் துடிப்பினாலும் துரிதத்தினாலும் எந்நிலையிலும் துரிதமுள்ள நீ…
2.என் வழியில் உன் நிலை அமைதியில் வருகின்றதப்பா (தியான நிலை).
3.அந்நிலையிலேயே தொடரட்டும் ஜெப நிலை. வடிகால் அமைத்து விட்டேன்… பாய்ந்திடட்டும்… பரிபக்குவமாக வளர்ந்திடுவாய்.

பங்குனி உத்திரத்தில் பகர்ந்துரைத்தேன் உத்திரத்தின் தன்மை எல்லாம் ஒரு நிலையில் உள்ள மனிதர்கள் ஒன்று சேர்ந்து மகிழ்ந்திடவே உத்திர நாட்கள் அமைந்ததப்பா.

அன்புடனே அன்னதானம் பகிர்ந்துண்டு ஆண்டவனை நினைத்திடத் தான் “பண்டிகை நாட்கள்” எல்லாம் பாரினில் வந்ததப்பா…!

இன்றுள்ள நிலை எல்லாம் ஒட்டு மொத்தமாகச் சேர்த்து வருடம் முழுவதும் வேண்டும் வேண்டுதலை… தன் நிலை உயர்த்திட எடுக்கின்றார்கள் காவடியை. வெறும் களியாட்டம் நடக்கின்றது.

காவடியில்…. “தெய்வ அருள் வந்திடும்… அந்நாளில் பகர்ந்திடும் சொற்கள்” எல்லாம் பாமரர்களுக்கு நல்ல உணர்வுகளை அளித்திடுவார்கள் அச்சித்தர்கள்.

அருள் வரும் தன்மை எல்லாம் இன்றைய நிலையில் யார் வருகிறார்களப்பா…? (தன் நிலையைக் கேட்பதற்கு ஆவி நிலையை அழைக்கின்றார்கள்).
1.அவர்கள் உடலில் முருகனும் விநாயகரும் வருவதல்ல அருள் நிலையில்.
2.ஆவி உலகத் தன்மை தான் சிலரின் உடலில் வந்து ஆடுகிறது... சில அம்மன் கோவில்களில் வருவதெல்லாம் ஆவி நிலைகள் தான்.

சித்தர்களின் நிலை எல்லாம் சில அபூர்வத் தன்மைகளிலே தான் தோன்றிவிடும்.
1.சித்தர் நிலை வருவதெல்லாம் சீருடனும் சிறப்புடனும் சொல் ஆற்றலுடனும் மிக அவசியமான நிலையில் வந்திடுமப்பா.
2.ஒரு நொடி தான் பகர்ந்திடுவர் பரிபக்குவ நிலையில்…!
3.உலக ஆசைகள் உள்ள சித்தர்கள் தான் வருவார்கள் (அதுவும் என்னைப் போல்).

ஆவியின் தன்மை வைத்துத் தான் அழைக்கின்றார்கள் பெரும் ஜாதகக்காரர்களும் சாமியார்களும் சில வைத்தியர்களும் கூட…! தன் நிலையில் ஆவியின் நிலையை நிறுத்திக் கொண்டு அவ்வாவிகளின் உதவியுடன் செய்கின்றார்கள் இந்நிலையெல்லாம்.

செய்யட்டும் செய்யட்டும்… நன்மைகளை செய்யட்டும்… ஆண்டவர் ரூபத்தில் வந்தாலும் ஆவிகள் செய்தாலும் நன்மைக்கே செய்யட்டும்...!

ஆவியின் தன்மையை வைத்து ஆண்டவனையே இழுக்கின்றார்கள் பெரும் ஆணவக்காரர்கள். குட்டிச்சாத்தானை வைத்துக்கொண்டு குடிகளைக் கெடுக்கிறார்கள்

ஆவியின் பசிக்கு அளிக்கின்றான் பல உணவுகளை. ஆண்டவனின் பெயரால் ஆண்டவனின் பெயரையே சக்கி மாதாவின் ஜோதியையே மாற்றி விட்டார்கள் குட்டிச்சாத்தான்கள்.

உலக நிலையையே மாற்றுகின்றது இந்தக் குட்டிச்சாத்தான்கள். “ஒற்றன் வடிவிலும்” உள்ளான் இக்குட்டிச்சாத்தான். ஆட்சி நடத்துகின்ற பெரும் ஆணவக்காரனிடமும் உள்ளான் இக்குட்டிச்சாத்தான்… செய்யும் வேலையெல்லாம் அந்தக் குட்டிச்சாத்தானால் தான்…! குட்டிச்சாத்தானின் பசிக்கும் தான் தன் கழிவைத் தானே பருகுகின்றான்

உலக நிலையைப் பார்த்தாயா…!

குட்டிச்சாத்தானின் வேலைகளை எல்லாம்… அந்த ஆவிகளை அடக்க ஆண்டவன் இல்லையா…? என்றிடுவாய்.

ஆண்டவர் எங்கப்பா உள்ளார்…? அவனவன் மனமே தான் ஆண்டவன் என்று பகர்ந்திட்டேன்.
1.அவன் மனமே குட்டிச்சாத்தானிடம் சிக்கியுள்ள பொழுது
2.ஆண்டவன் எப்படிக் காப்பாற்றுவான்…?

பெரும் திருடனும் அழைக்கின்றான் ஆண்டவனை… அன்புடன் மழலையும் அழைக்கின்றது ஆண்டவனை…! எந்நிலைக்கும் அவன் ஜோதி நிலைதான்.

அவன் நிலையில் இருந்துதான்… அவன் ஆசி பெற்ற சித்தர்கள் ஆளுகின்றார்கள் மனிதர்களை…!
1.அவரவரின் மனநிலைக்கேற்ப அவர்கள் அழைக்கும் தன்மைக்கு
2.அவரவர் புரிந்திடும் நிலையிலும் சித்தர்கள் அருள்கின்றார்கள்.

முருகா என்று அழைத்திட்டவர்களுக்கு… அவன் அழைக்கும் நிலையில் அன்புடன் அழைப்பவர்களுக்கு அவன் கஷ்டத்தையும் அவன் நிலையையும் உணர்ந்து அருளுகின்றார்கள்… “போகரும் பல சித்தர்களும்…”

அவரவர்களின் இஷ்ட தெய்வத்தை அழைப்பவர்களுக்கும்… அழிவின் நிலையை நாடுகின்றவனுக்கும்… அழைக்கும் தன்மையில் அவ்வழுகிய அணுவின் வழியில் தான் வந்து அவனிடம் அண்டிக் கொள்கின்றது அவன் நிலையில் உள்ள ஆவிகள். ஆனால் இவன் நினைக்கின்றான் ஆண்டவனே இவனுக்குள் அருள் புரிந்தான் என்று.

நல் உணர்வில் நல் நிலையில் நல் நினைவில் உள்ளவர்களுக்கெல்லாம் நல்லோரின் ஆசி பூ மழையாகப் பொழிகின்றது.

தீய நினைவில் உள்ளவரின் நிலையில் எல்லாம் தீய நிலையில் உள்ள ஆவிகள் அண்டிக் கொள்கின்றன. இப்போது புரிகின்றதா ஆண்டவன் எங்குள்ளான்…? என்று.

ஆண்டவன் என்பவன் யாரப்பா…?

இயற்கையில் ஒன்றிட்ட…
1.இயற்கையே தான் ஆண்டவன் காற்றே தான் ஆண்டவன்
2.சூரியனே தான் (வெளிச்சம் ஒளி) ஆண்டவன்.
3.தண்ணீர் தான் ஆண்டவன்
4.ஒளியும் காற்றும் தண்ணீர் இந்த மூன்றும் தான் ஆண்டவன்.
5.இயற்கை அன்னை இயற்கை சக்தி என்பதெல்லாம் இந்த மூன்றும் தான்.

ஆண்டவன் என்பவன் எங்குள்ளான் என்ற நிலை புரிந்ததா…?

இப்பாட நிலையை எந்நிலையிலும் பகர்ந்திடவில்லை நானும். என் சிஷ்யனையும் வாயடக்கி விட்டேன் பல நாட்களாக. உன் நிலைக்குப் புரிய வைத்தேன் சில துளிகள்.

உங்கள் நிலையை உயர்த்திக் கொள்ளுங்கள். கலியுகம் மாறுகின்றது கல்கியுகம் வருகிறது என்பதெல்லாம் இக்கால நிலையைக் கொண்டுதான்.

ஆண்டவன் எங்குள்ளான் என்பவனைக் கேள்… ஆற்று வெள்ள வந்திடும் பொழுது அடித்துச் செல்கின்றானே அனைத்தையும்… “அவன் தானப்பா ஆண்டவன்…” ஒவ்வொரு வழியையும் பிரித்துச் சொல்ல வேண்டுமாப்பா…?

ஆண்டவன் எங்குள்ளான்…? என்பதை… “இந்தப் பாடத்தை” எந்த நூலிலும் படித்திருக்கின்றாயா…?

July 18, 2024

நாம் பழக வேண்டிய முக்கியமான பயிற்சி

நாம் பழக வேண்டிய முக்கியமான பயிற்சி

 

இந்தப் பிரபஞ்சத்தில் உருவாகிய அனைத்திலும் உள்ள நஞ்சினை அடக்கி ஆட்சி புரிந்து ஒளியாக இருக்கின்றது துருவ நட்சத்திரம். இதை உணர்த்துவதற்குத் தான் விநாயகர் அருகே “அரச மரத்தை” வைத்தார்கள் ஞானிகள்.
1.இந்த மனித வாழ்க்கையில் நாம் எதை வைத்து எப்படி உயர்ந்த சக்திகளை எடுக்க வேண்டும்…? என்பதை
2.அங்கே அரச மரத்தை வைத்துக் காட்டுகின்றார்கள்.

அதிகாலையில் நாம் குளித்து உடல் அழுக்கை நீக்கிய பின் விநாயகர் சிலையை உற்று நோக்கி… இந்த மண்ணுலகில் நஞ்சினை வென்று நஞ்சினை ஒடுக்கி ஒளியின் கதிராக மாற்றி… ஒளியின் சரீரமாக இருக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உணர்வின் எண்ணங்களை தனக்குள் கவரும்படி செய்தார்கள் ஞானிகள். இது துவைதம்…!

பிறப்பின் உண்மையின் தன்மையை நமக்குள் தெளிவாக்குவதற்காகச் சிலையாக வடித்து வைத்தார்கள் ஞானிகள். நாம் பிறப்பில் மனிதனாக எப்படி வந்தோம் என்று அறிவதற்காக…!

அங்கே சிலையில் ஒன்றுமில்லை…!

கண் கொண்டு சிலையை உற்றுப் பார்க்கும்படி செய்து காவியத்தின் தன்மை கருத்துடன் நமக்குள் கூட்டப்பட்டு
1.அந்தக் கருத்தினை எண்ணித் “தன்னை அறிதல்” என்ற நிலையும்
2.எந்த உணர்வினை தனக்குள் அகஸ்தியன் எடுத்துத் துருவனாகி துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரம் ஆனானோ
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் அப்போது பதிவாக்குதல் வேண்டும்.

பதிவான எண்ணம் கொண்டு தான் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் எடுக்க முடியும். அதன் வழியில் எண்ணும் பொழுது நம் கண்ணின் நினைவாற்றல் விண்ணுக்குச் செல்லுகின்றது.

1.அந்த உணர்வினைத் தனக்குள் பதிவாக்கி
2.இந்த எண்ணங்கள் கொண்டு மீண்டும் கண்ணுக்கே நினைவைச் செலுத்தி
3.கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றச் செய்து விண்ணிலிருந்து வரும்
4.துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம்மைப் பெறும்படி செய்திருக்கின்றார்கள் விநாயகர் தத்துவத்தில்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! அது எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவினை உயிருடன் ஒன்றி இந்த அலைகளை “உடலுக்குள் நாம் பரப்புதல் வேண்டும்…”

காலையிலிருந்து இரவு வரையிலும் சந்தர்ப்பவசத்தால் எத்தனையோ துன்பங்களைக் கேட்டறிந்துள்ளோம்… துயரப்படுபவரைப் பார்த்துள்ளோம். இந்த உணர்வுகள் அனைத்தும் ஆன்மாவிலே இருக்கின்றது.

அந்த உணர்வுகளைக் கவரப்படும் பொழுது ஆன்மாவாகச் சேமித்து வைக்கின்றது. சேமித்த உணர்வுக்கொப்ப
1.உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் எந்த அளவிற்கு உந்துகின்றதோ அந்த அளவிற்கு நாம் சுவாசிக்கின்றோம்.
2.சுவாசிக்கும் போது உணர்வுக்குத் தக்க “அந்த எண்ணங்கள்” வரும்.

இன்று ஒரு மனிதன் ஒரே எண்ணத்தில் இருக்க வேண்டும் என்றால் முடியவே முடியாது.

நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் எந்தெந்தக் குணத்தால் அது உருவானதோ அதற்கு இரை தேட…
1.எந்த மனித உடலிலிருந்து வந்ததோ…
2.சூரியனின் காந்த சக்தி அதை அலையாக மாற்றி வைத்திருப்பதை நுகரப்படும் பொழுது
3.உயிரிலே மோதி உணர்ச்சிகள் தூண்டும்… அப்போது உணர்ச்சிக்கொப்ப அந்த அணுக்கள் அதை இரையாக எடுக்கின்றது
4.எடுத்து நமக்குள் உள் செல்லும் உணர்வினை அது உணவாக எடுத்து வளர்கின்றது.

ஆகவே அத்தகைய அணுக்கள் இப்படி உணவாக எடுக்கும் நிலையிலிருந்து… நம் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு
1.“எதை உணவாகக் கொடுக்க வேண்டும்…?” என்று தெளிவாக்கப்பட்டுள்ளது.
2.அந்த அருள் ஞானியால் கொடுக்கப்பட்ட விநாயகர் தத்துவத்தில்.

அதாவது… புறத்திலிருந்து ஆன்மாவாக எத்தனையோ நிலைகள் மாறி வருவதை… அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நாம் தூய்மைப்படுத்துதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ணி உயிருடன் ஒன்றி நினைவினை அடிக்கடி அடிக்கடி உடலுக்குள் பாய்ச்சுதல் வேண்டும்.

இந்த உணர்வுகள் வலுப்பெறும் போது
1.தீய அணுக்களுக்கு வரும் அந்த நிலை அது அடைபட்டு… இழுக்கும் சக்தி குறைகின்றது… தீமையான எண்ணங்கள் வராதபடி விலக்கி விடுகின்றது.
2.அவசியம் இந்தப் பயிற்சியை நாம் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

சாதாரண பாமர மக்களும் இதை பழக்கப்படுத்துவதற்குத் தான் திரும்பும் பக்கமெல்லாம் விநாயகரை வைத்தார்கள் ஞானிகள்.

நாம் உணர்ந்து கொண்டோமா…?

ஆவி நிலையில் வாழ்வது எல்லாம் “பெரும் அல்லல் படும் நிலை தான்”

ஆவி நிலையில் வாழ்வது எல்லாம் “பெரும் அல்லல் படும் நிலை தான்”

 

“ஆவிகளைப் பற்றி” எல்லாமே தெரியும் தன்மை நாய்க்கு மட்டும் தான் உண்டு. அதற்காகத்தான் என்னுடன் நாயை நிறுத்திக் காட்சி தந்தேன்.

நாயாகப் பிறப்பவர்கள் எல்லாம் ஆவி உலகில் உள்ள பெரும் ஆத்திரக்கார ஆவிகள் என்றேனல்லவா முதல் பாடத்தில். உடலில் இருக்கும் பொழுது எந்த விரோதத்தில் அவர்களின் ஆவி பிரிந்து சென்றதோ
1.அவ்வாவி தான் முடிக்கும் காரியத்தை முடித்தவுடன் வருவது “நாயின் உடலில் தான்…”
2.மனித உடலை எடுக்கும் சந்தர்ப்பமும் பாக்கியமும் அந்த ஆவிகளுக்குக் கிட்டுவதில்லை.

இவ்வழியில் வந்த நாய்கள் எல்லாத் தன்மையையும் ஆவி உலகில் உள்ள ஆவிகள் எப்படி எந்நிலையும் தெரிந்திருக்கின்றனவோ… எந்நிலை என்பது மற்ற ஆவிகளின் நிலையும் முன் ஜென்ம விரோதத்தின் நிலையும் தெரிந்து வைத்திருக்கின்றதோ… அதே போலத்தான் நாயின் உடலிலும் இருக்கும்,.

நாய்க்கு எல்லா சக்திகளும் தெரிந்திடும். நாயின் தன்மையை ஊன்றிப் பார் நாயில் உள்ள வெறித்தன்மைதான் உணர்ந்திட்டாய். நாய்க்கும் ஜென்மத் தொடர் உண்டப்பா.

நாயின் நிலை எல்லாம் பெரும் பூகம்பத்தையும் அறிந்திடும்… வரும் வெள்ளத்தையும் அறிந்திடும்…! அதன் தன்மையில் சிறு அணுவும் ஆவி உலகத்தின் தன்மையும் ஆண்டவனின் தன்மையும் தெரிந்து விடும்.

ஆனால் ஆவியையும் ஆண்டவனையும் பிரித்துப் பார்க்கும் தன்மை அதற்கு இல்லை. அதன் வெறி உணர்விலே அத்தன்மை மறைந்து விடுகிறது.

நாய் கடித்து இறப்பவர்கள் எல்லாம் நாயுடன் முன் ஜென்மத்தில் தொடர்பு உடையவர்களே. முன் ஜென்மத்தில் விட்ட குறையை அந்த நாய் தீர்த்துக் கொள்கின்றது.

நாய் கடித்துத் தப்புபவர்கள் எல்லாம் அவர்கள் முன் ஜென்ம “பூஜா பலனினால்தான்…”

1.பூஜா பலன் என்பது கற்பூரம் காட்டி விடுவது மட்டுமல்ல…
2.அதன் பலனை அடைந்தவன் என்பது அவனின் முன் ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்களை வைத்துத்தான் பூஜா பலன் என்று சொல்கின்றேன்.

கடவுள் சிலைக்கு முன்னால் நிற்பவர் எல்லோருமே பூஜா பலன் எய்தியவனா…? இல்லை…!

கோயிலுக்குச் செல்லாதவனும்… கடவுளே இல்லை என்பவனும்… தன் நிலை உணர்ந்து நியாயத்தைக் கடைப்பிடித்து நல்லொழுக்கம் பெற்றவரும்… நாடு போற்றும் தன்மை உள்ள எல்லோருமே… பூஜை பலன் பெற்றவர்கள்.

ஆயிரம் தவறுகள் செய்தாலும் தான் தர்மம் செய்கின்றேன்… கோயில் கட்டி வழிபடுகின்றேன் என்பவன் எல்லாம் பூஜா பலன் பெறுகின்றானா…? இல்லை… பெரும் பூஜ்யம் தான் அவன் நிலை.

கோயில் என்பதையே தான் செய்யும் பாவத்தைக் கொட்டித்தான் பாவ மன்னிப்புக் கேட்கின்றான். அவன் நினைக்கின்றான்…
1.செய்த பாவத்தைச் செய்து விட்டுக் கோவில் கட்டி கும்பிட்டால்
2.கூப்பிட்ட குரலுக்கு “கும்பேஸ்வரன் வந்திடுவான்” என்ற எண்ணம் அவனுக்குள்ளே.

மறு ஜென்மம் என்பது உள்ளதப்பா அவனைப் பார்த்துக் கொள்ள…!

ஆவி உலகில் ஊடுருவி அதன் தன்மையில் பார்த்து விட்டால் உலக நிலை எல்லாமே உன்னுள்ளே தெரிந்திடும்.
1.மனித உடலில் உள்ளவரை தான் அமைதியும் சந்தோஷத்தையும் காண முடியும்.
2.ஆவி நிலை எல்லாம் பெரும் அல்லல் படும் நிலை தான்.

மனித உடலின் நிலையிலேயே மூன்றில் ஒரு பாகம் (1/3) அமைதியான ஆனந்தமான நித்திரை அருளியுள்ளான் அவ்வாண்டவன். எந்த நிலையிலும் அந்த ஆனந்தமான நித்திரை இல்லை அப்பா “ஆவிகளுக்கு…”

மனித உடலில் பெற்ற பேற்றை வழி வழியாகச் சொல்கின்றேன் இப்பேறு பெற்றதற்கு பல கோடித் தவம் வேண்டும். தவமிருந்து பெற்ற உடலைத் தான் தன்னிச்சையாக அழிக்கின்றார்கள் மானிடர்கள்.

1.மனித உடலின் தன்மை எல்லாம் பெரும் பேரின்ப நிலையப்பா
2.மனித உடலில் இருந்து கொண்டே வாழும் வாழ்க்கை அழகுடனும் அர்த்தமுடனும்… ஆனந்தத்திலும்… களித்திட வேண்டுமப்பா.

மனித உடலை எய்தியவன் எல்லாம் தன் நிலையை உணர்ந்திடாமல் பிறந்த உடனே ஆத்திரத்துடனும் பேராசையுடனும் பழிவாங்கும் நிலையிலும் கோப தாபத்துடன் வளர்க்கப்படுகின்றான். எப்படி அப்பா இருக்கும் வாழ்க்கை நிலை…?

பிறந்தவுடனே நல்லறிவை ஊட்டும் குடும்பத்தில் வளரும் குழந்தை நல்ல நிலைக்கு வந்து விடுவான். வளரும் தன்மையிலே வாழ்க்கை அமைகின்றது.

இப்பாடம் புரிவதற்கு புதியவனல்ல நீ…! எல்லா பாடத்தின் தன்மையும் தெரிந்திடவே புகுத்திட்டேன் இதை.

July 17, 2024

நம் உயிர் “தாயாக” இருக்கின்றது

நம் உயிர் “தாயாக” இருக்கின்றது

 

சந்தர்ப்பத்தில்… ஒருவர் கோபிக்கும் உணர்வின் தன்மை நமக்குள் பதிவாகி விட்டால்… உயிரியலின் மாற்றங்களில் அதை ஜீவ அணுவாக நம் உயிர் உடலுக்குள் மாற்றிவிடுகின்றது.

அதாவது…
1.எதனின் நினைவை எடுத்து உயிர் நமக்குள் அதை அணுவாக ஆக்கியதோ
2.எந்த நிலைகள் கொண்டு அந்த மனிதனின் உணர்வை சூரியனின் காந்த சக்தி கவந்து வைத்திருக்கின்றதோ
3.அதை உயிர்… அதனின் துடிப்பின் ஈர்ப்பு கொண்டு அந்த உணர்வைக் கிளர்ந்து எடுக்கப்படும் பொழுது
4.நுகர்ந்து தன் ஆன்மாவாக மாற்றி உயிரிலே படும் பொழுது மீண்டும் அந்த நினைவாற்றல் வரும்.

ஆக… கோபம் கொண்ட அணுவின் தன்மையாக நமக்குள் விளைந்திருந்தால்… அதற்கு இரை வேண்டும் போது அது கத்தும்… அதனின் உணர்ச்சியைத் தூண்டும்.

உதாரணமாக… காக்கைகளோ குருவிகளோ கொக்கோ… தன் குஞ்சுகளுக்கு அது இரை தேடிக் கொண்டு வந்து கொடுக்கின்றது. குஞ்சுகள் கத்தும் பொழுது மீனையோ வீட்டில் பூச்சிகளையோ மற்ற பூச்சிகளையோ உணவாகக் கொடுக்கின்றது.

இதைப் போன்று தான் எந்த குணத்தின் தன்மை நாம் நுகர்ந்தோமோ நமது உயிர் அந்த குணத்தின் உணர்வின் அணுவாக விளையச் செய்து விடுகின்றது.
1.அந்த அணுக்கள் தன் பசிக்காக ஏங்கும்போது அதை உருவாக்கிய தாயான உயிர்
2.அதற்கு வேண்டிய நிலைகளை நுகர்கின்றது… ஆன்மாவாக மாறுகின்றது… சுவாசித்த பின் நமக்குள் எண்ணம் ஆகின்றது
3.அந்த மனிதன் கோபித்திருந்தால் நமக்கும் அப்பொழுது கோபம் வரும்… அறியாமலே திடீரென்று கோபம் வரும்.

என்னவென்றே தெரியவில்லை திடீரென்று எனக்குக் கோபம் வந்துவிட்டது என்று சிலர் சொல்வார்கள்.

ஏனென்றால் அந்தக் கார உணர்வின் தன்மை தனக்குள் வளர்த்துக் கொண்டால் அது பசிக்கு ஏங்கினால் போதும்.
1.உயிருடைய வேலை… எந்த மனித உடலிலிருந்து அந்தக் கார உணர்வு வந்ததோ
2.அதை எடுத்து ஆன்மாவாக மாற்றி சுவாசிக்கச் செய்து விளைந்த அணுக்களுக்கு உணவாகக் கொடுக்கும்.

அத்தகைய கோபம் வந்த பின்… வீட்டிலே மனைவியை அடித்து விடுவார், தன் நண்பனைப் பகைமை ஆக்கி விடுவார்… கடை வியாபாரம் இருந்தால் வியாபாரத்தில் வரும் வாடிக்கையாளரிடம் எதிர்த்துப் பேசி சண்டை வரும்.. சர் தான் போயா…! என்பார்.

அறியாமலே இத்தகைய செயல்கள் நடக்கும்…!

ஏனென்றால் உருவான அணுக்கள் அது தன் இனத்தின் தன்மையைப் பெருக்க… அதற்கு உயிர் இப்படி இரைகளைக் கொடுத்துக் கொண்டே தான் இருக்கும்

இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்பதற்குத்தான் அடிக்கடி அடிக்கடி மகரிஷிகள் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்து
1.ஒளியான அணுக்களைத் தியானத்தின் மூலமாகவும் ஆத்ம சக்தி மூலமாகவும் உங்களுக்குள் பெருக்கும்படி செய்கிறோம்.
2.அதாவது தீமையின் விளைவுளை மாற்றி அமைக்கும் பயிற்சியாக உங்களுக்கு இதைக் கொடுத்துக் கொண்டு வருகின்றோம்.

ஆகவே மகரிஷிகள் அருள் சக்திகளை அவ்வப்போது எடுத்து உங்களுக்குள் வலுவாகச் சேர்த்துக் கொண்டே வாருங்கள். உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றுங்கள்.

இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலையை அடையுங்கள் (ஞானகுரு).

சித்தர்கள் வெளிப்படும் காலம் இது...!

சித்தர்கள் வெளிப்படும் காலம் இது...!

 

ஏழு ஜென்மங்கள் என்றேன் அல்லவா… உலகம் தோன்றிய நாட்கள் எந்தக் கணக்கிலும் வரவில்லையப்பா. உலகம் தோன்றி நிலையில் வந்தவர்கள் எல்லாம் இன்றும் உள்ளார்கள் என்றால் எப்படி…? என்று எண்ணி இருப்பாய்…!
1.”மனித உடலில் உள்ள காலம்” ஆயிரத்தில் ஒரு மடங்கு இல்லை அப்பா இந்த ஏழு ஜென்மத்திலும்.
2.காலமெல்லாம் சுற்றுவதெல்லாம் அவ்வாவிகள் ஆவி உலகத்தினூடே தான்…!

என்னப்பா…? புரிகின்றதா பாட நிலை…!

இந்நிலையில் இருந்தெல்லாம் ஜெயிப்பவனுக்கு வருகிறது பெரும் சூட்சும உலகம். அவ்வுலகத்திற்குச் சென்றால் எவ்வுலகையும் காணலாம் என்று சொன்னேன். பெரும் பொக்கிஷம் பெற்றவர்கள் தான் அவ்வுலகத்திற்குச் சென்றவர்கள்.

இவ்வுடலில் உள்ள பொழுது சேர்க்கும் பணமும் சொத்துமல்ல பொக்கிஷம் ஞானப் பொக்கிஷத்தைப் பெற்றிடுங்கள் கல்கிக்குச் செல்வதற்கு…!

1.கல்கியில் வந்திடுவான் சித்தனெல்லாம் என்று பகர்ந்திட்டான் உன்னிடம் இச்சித்தன் (சாமி – ஞானகுரு).
2.எப்படி வந்திடுவான்…? என்று சொன்னானா…!

கல்கியில் வந்து பிறந்திடுவானா…?

இல்லையப்பா…!

கல்கியில் இன்று வாழும் நிலையில் இக்கலி யுகத்தில் கடைசியில் நல் நிலை பெற்றோர் உணர்வில் வந்துவிடும். பிறந்து விடும் பூக்களிலும்…! பூக்கள் என்பது பிறக்கும் மழலைகளைத்தான் சொல்கின்றேன். அந்நிலையில் வருகின்றார் ஒவ்வொரு சித்தனாக…!

சித்தன் வெளிப்படுவான் என்று சொன்ன சிததனைக் கேட்டாயா…! என்ன நிலையில் வெளிப்படுவார் என்று…?

எவ்வுடலையும் ஏற்றுக்கொள்வார் அச்சித்தனெல்லாம்.
1.எவ்வுடலையும் என்று சொல்வதெல்லாம்
2.பெரும் பூர்வ புண்ணியப் பலனடைந்த உடலைத்தான் அச்சித்தன் ஏற்றுக் கொள்கின்றான்.

பிறக்கும் மழலைகளைப் பரிந்துரைத்தேன். கலியியில் பார்த்திருப்பாய் சில மழலைகளின் சொல்லையும் செயலையும்..!

வந்திடுவார்… வந்திடுவார் பெரும் சித்தனும் யோகியும் எல்லாமே கல்கிக்கு வந்திடுவார்கள். வரும் நிலையைப் புகட்டி உள்ளேன்.

முதன் முதலில் இந்நிலையில் தான் என் சிஷ்யனுக்கே வாயடைத்தேன். பகர்ந்து விட்டேன் நான் உனக்கு.

பரிபக்குவமான நிலையில் மன அடக்கத்துடன் இருங்கள்…!

எண்ணிக் கொள் எண்ணிக்கொள்… எண்ணின் வடிவத்தில் எண்ணிக்கொள்… எண்ணத்தில் எண்ணிக்கொள்…! காலங்கள் குறுகியது… குறுகியது… என்று பகர்கின்றேன்.

2000 ஆண்டுகள் என்று சொல்கின்றார்கள். 2000வது ஆண்டில் இவ்வுலக மக்கள் எல்லோருக்கும் ஆரம்பமாகி விட்டது “அழிவின் நிலை எல்லாம்…”
1.அவன் செய்யும் அணுவும் அணு அணுவாக அழியும் தன்மை வந்து விட்டது
2.அவனே வியக்கும் வண்ணம் சக்தியைப் பார்த்திடுவான் சக்தியையே…!

சக்தி நிலையைத் தெரிந்து கொள்ளாமல் அணு ஆராய்ச்சி செய்கின்றானாம்…! சக்தி நிலையில் ஊதி விட்டால் அவன் செய்யும் அழிவின் தன்மை எல்லாம் என்னவாகும்…?

கொதிக்கும் நிலையில் உள்ளதப்பா இவ்வுலக நிலை…! எல்லாம் பார்த்திடுங்கள் பார்த்திடுங்கள்… நான் பகர்ந்ததையெல்லாம் பார்த்திடுங்கள் வெடிக்கும் நிலையையும் பார்த்திடுங்கள்.

என் நிலையில் நீ இருந்தால் உலகத் தன்மையையே பார்த்திடலாம். குறுகிய காலம் தான் உள்ளதப்பா…! கூட்டி விடு உன் நிலையினை சமமான நிலையைத் தெரிந்து கொண்டாய்…
1.படர விடு இந்தப் பாட நிலையை நிலை நிறுத்திப் படரவிடு ஒரு நிலையில்
2.கல்கி என்ற விடிவிளக்கின் ஆரம்பத்தில் வந்துள்ளாய்.

July 16, 2024

நம் கண்களை ஞானக் கண்களாக மாற்ற வேண்டும்

நம் கண்களை ஞானக் கண்களாக மாற்ற வேண்டும்

 

உதாரணமாக புழுவிற்குக் கண்ணில்லாத போது… அது தன் எண்ணங்கள் கொண்டு ஊர்ந்து சென்றாலும்… உணவுக்காக ஆசைப்பட்டுத் தேடிச் சென்றாலும்… ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எதிரிகளிடம் சிக்கும் பொழுதெல்லாம்…
1.தான் படும் வேதனைகளைத் தாங்காது
2.எது தன்னைத் தாக்குகின்றதோ அதைப் பார்க்க வேண்டும் என்ற உணர்வுகள் தோன்றுகின்றது.

இப்படிப் பல சரீரங்களில் பார்க்க வேண்டும் என்ற எண்ணங்கள் தோன்றித் தோன்றித் தோன்றி… அடுத்த உடல் பெறும் பொழுது “பல நிலைகளைக் குவித்துக் கண்களாக உருப்பெறுகின்றது…”

முதலிலே எண்ணங்கள் தான் உருவானது. எண்ணத்தின் துணை கொண்டு பார்க்க வேண்டும் என்ற உணர்வுகளை ஒவ்வொரு உயிரினமும் (தன் எதிரிகள்) தன்னைத் தாக்கப்படும் பொழுது அந்தச் சரீரத்தைப் பார்க்க வேண்டும் என்ற உணர்வுகளை உந்தி உந்தி… பல சரீரங்களில் அதை எடுக்கின்றது.

1.அதாவது இரண்டு நாட்களுக்கு அந்த உடலில் உயிர் இருக்கும் அடுத்த நாள் மடிந்துவிடும் ஆரம்ப நிலைகளில்
2.இப்படி நூறு சரீரங்களைக் கடந்து “பார்க்க வேண்டும்… பார்க்க வேண்டும்…” என்ற உணர்வு வளர்ந்து வளர்ந்து
3.கண்களாக உடலில் உருப்பெறும் தன்மை வருகின்றது,

ஆதே சமயத்தில் ஒளி வீசி (வெயில்) மற்ற பொருளைக் காட்டும் சூரியனின் ஒளிக்கதிர்கள் இங்கே இருக்கின்றது. புழுவின் உயிரின் துடிப்போ… தான் பார்க்க வேண்டும் என்ற உணர்வுகள் வரும் பொழுது
1.மணத்தால் அறிந்தாலும் தன் உணர்வால் அறிய வேண்டும்
2.பார்வையால் பார்க்க வேண்டும் என்று உணர்வுகள் தோன்றுகின்றது (தோற்றுவிக்கின்றது).

இப்படித் தோன்றிய நிலைகள் தான் கண்களாக உருவாகிறது. இதைத் தான் துவாரகா யுகத்தில் நாரயணன்… “சூரியன் கண்ணனாகத் தோன்றுகின்றான்…” என்று சாஸ்திரங்கள் காட்டுகின்றது.

சூரியனின் ஒளிக்கதிர்கள் நம் உடலுக்குள் ஒளிக் கதிராகக் கண்கள் காணும் நிலை வருகிறது. அதாவது
1.சூரியனிலிருந்து பாதரசங்கள் வீசப்படும் பொழுது
2.அது மற்றொன்றுடன் மோதி ஒலியின் ஒளிக் கதிர்களாக எப்படி ஆகின்றதோ
3.இதைப் போன்ற நிலைகள் அங்கே பெறுகின்றது.

இந்த உணர்வை நுகர்ந்து கொண்ட பின் தன் உடலில் பெற்ற பார்க்க வேண்டும் என்ற உணர்வுகள் கண்களாக உருவாகி
1.இந்த உணர்வின் நினைவாற்றல் அங்கே தாக்கப்படும் பொழுது
2.எதனின் உணர்வோ அந்த ரூபத்தினை அறியும் வல்லமை பெறுகின்றது – “கண்களுக்கு அந்த ஆற்றல்…”

உதாரணமாக ஒருவர் கோபமாக இருக்கிறார்… நாம் அவரைப் பார்க்கிறோம் என்றால் அதைப் பார்த்த பின் உணர்வுகள் மோதுண்டு உணர்ச்சியின் வேகத்தைக் கூட்டுகின்றது
1.அப்போது நமக்கு கோபம் வருகிறது…
2.கோபம் வந்த பின் இருள் சூழ்கிறது… சிந்திக்கும் திறனும் இழக்கப்படுகிறது.

ஆனால் ஆடு மாடுகளோ மற்ற காட்டில் வாழும் மிருகங்களோ தனக்குள் இருக்கும் விஷத்தின் தன்மையைப் பாய்ச்சி அந்த உணர்வுகள் கண்ணின் வழி வெளிப்படும் பொழுது
1.அதிலே வரும் அலைகள் மோதி குறித்த தூரத்தில்
2.கண்ணின் உணர்வலைகள் விசை உந்துதலின் தன்மை எவ்வளவு ஏற்படுகிறதோ
3.அந்த வட்டத்திற்கு ஒளியாகத் தெரியும்.
4.(மனிதனுக்கு இது போன்று தெரிவதில்லை)

இரவிலே பாம்பு பூச்சிகள் தேள் மற்ற மிருகங்களுக்கும் கண் பார்வையால் மோதுண்டு அதன் ஒளிகள் அதற்குத் தெரியும் மனிதனுக்குத் தெரிவதில்லை காரணம்…
1.மனித உடலில் விஷத்தின் தன்மை வடிகட்டப்பட்டுக் குறைத்து விட்டதனால்
2.மோதலால் ஏற்படும் ஒளித்தன்மை நமக்குள் இழக்கப்படுகிறது.

அதே சமயத்தில்… பிறர் படும் உணர்வின் தன்மை நமக்குள் மோதப்படும் பொழுது… உணர்ச்சிகள் எழுந்து அறியும் தன்மையாக… அறியும் ஆற்றல் நமக்குள் பெறுகின்றது.

ஒரு எண்ணம் நமக்குள் மோதினால் அதனின் உணர்வின் தன்மை கொண்டு
1.அவன் என்ன செய்கின்றான்…?
2.குற்றம் செய்கின்றான்… அல்லது குற்றமற்றதாக இருக்கின்றது… என்ற உணர்வின் செயலாக்கங்களை நாம் உணர முடிகிறது.

ஆகவே மனிதன் தீமைகளை வெல்லும் சக்தி பெற்றவன்…!

பல கோடிச் சரீரங்களில் தான் கூர்மையாகப் பார்த்துத் தன் எதிரிடமிருந்து தப்பித்துக் கொள்ள… எத்தனையோ உணர்வுகளைச் சுவாசித்து… சுவாசித்து… தான் எதை எதை எல்லாம் கூர்மையாகப் பார்த்ததோ அதனின் வலிமையைச் சேர்த்துச் சேர்த்து… இப்படித் தீமைகளை அகற்றிடும் உடல அமைப்பினை உயிர் உருவாக்குகிறது.

அதாவது தீமைகளைப் பிளந்திடும் அணுக்கள் உருபெற்று அதற்குண்டான உறுப்புகள் உருவாகி மனிதனாக உருவாக்குகிறது… பரசுராம்…! இயற்கை நிலைகள் எது விளைந்தாலும் அதனைச் சமப்படுத்தி உணவாக உட்கொள்ளும் நிலை பெறுகின்றோம்.

இப்படிப் புழுவிலிருந்து மனிதனாகத் தோன்றும் வரை இந்த உயிர்…
1.ஒவ்வொரு சரீரத்திலும் தன்னைக் காத்துக் கொள்ள மரண பயங்களை ஏகி
2.அந்த மரண பயத்தால் நான் நுகர்ந்த உணர்வுகள் வலுவாகி
3.இந்த உணர்வின் தன்மை கொண்டு உடல் மடிந்தாலும்
4.வலுவான உணர்வுகளைச் சேர்த்து… பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனாக இன்று வந்துள்ளோம்.

மனிதனான பின் பல தீமைகளை அறிந்தாலும் பலராம்…! எல்லாவற்றையும் அறியக்கூடிய ஆற்றல் பெறுகின்றோம்.

அதாவது சமப்படுத்தும் உணர்வுகளை நுகரப்படும் பொழுது தீங்கு செய்கிறான் என்றால் அதை நுகர்ந்த பின்
1.அந்த தீங்கு தனக்குள் வராதபடி சமப்படுத்த முடிகின்றது…
2.கண்டிப்பாகச் சமப்படுத்த வேண்டும்… அதற்குத் தான் இதை எல்லாம் உங்களுக்குத் தெரியப்படுத்துகின்றோம்.

நல் நிலை வருவதெல்லாம் “நிதானமாகத்தான்…!” ஆனால் என்றுமே நிலைத்து நிற்கும்

நல் நிலை வருவதெல்லாம் “நிதானமாகத்தான்…!” ஆனால் என்றுமே நிலைத்து நிற்கும்

 

நல் நினைவையும் நல் பாட்டையும் நல் சொல்லையும் மிஞ்சிவிடும் தீயோரின் எண்ணமும் செயலும் சொல்லும்.
1.நல் வழியில் வருவதெல்லாம் மிக நிதானத்தில் தன் உணர்வில்
2.தன்னுள்ளேயே அமைதியுடன் தான் வந்திருக்கும் “நிலை நிற்கும்…”

தீய எண்ணங்களும் தீய சொல்லும் செயலும் உலக நிலையையே மிஞ்சிவிடும். நல்லவருக்குக் காலமில்லை… அவன் எப்படி வாழ்கின்றான் பார்…! என்ற எண்ணம் தான் மனிதனுக்குள்ளே…!

1.நல் நினைவின் தன்மை எல்லாம் நமதுள்ளே இருக்கட்டும்…
2.பிறரின் புகழ் உரைகளுக்காகவோ பிறரின் போற்றுதலுக்காகவோ அல்ல நல் நினைவு.

எந்த இடத்திலும் நல்லதையும் அடக்கி விடும் தீயது. அதற்காக மனம் கலங்கவோ மன அடக்கம் இல்லாமல் (உணர்ச்சிகளை) வெளியிட வேண்டியதோ இல்லை.

தீயது வளரத்தான் செய்யும்…
1.வளர வளர அதன் நிலை அழிந்துவிடும். பெரும் அழிவாக அழிந்துவிடும்.
2.பெரும் நிலையை அடைந்தவன் உலக நிலையைக் கண்டவன் உலகை ஆள்பவன் எல்லாமே பெரும் அழிவு நிலையில் தான் அழிகின்றான்.
3.நல் நிலையில் உள்ளவனின் நிலை தான் நிலைத்திருக்கும் காலம் காலமாக…!

பார்ப்பவரின் பார்வைக்குப் பிறர் பார்ப்பதற்கல்ல இவை எல்லாம். சொல்லும் பாடம் புரிகின்றதா…?

சொல்வாக்கு செல்வாக்கு ஆசை மனம் செயல் எல்லாப் பாடங்களையும் சிறுகச் சிறுக தந்து அருளியுள்ளேன். ஒவ்வொரு பாடத்தின் தன்மையையும் நீ புரிந்து விட்டால் உன் வழியில் அப்பாடத்தின் தொடர் நிலைகள் எல்லாம் புரிந்துவிடும்.

மனிதன் எண்ணம் உலகத்தில் உள்ள எல்லா சக்திகளையும் விட மிகவும் துரிதமானது என்று சொன்னேன்.

காற்று மழை ஒலி ஒளி மனிதனாக செய்த விஞ்ஞானம் எல்லாவற்றையும் மிஞ்சக் கூடிய எண்ணத்தையே உன்னுள் அடக்கி உள்ளாய்.
1.இவ்வெண்ணத்தின் தன்மையில் இருந்து தான் பாய்கின்றது உலகத்தன்மை எல்லாம்.
2.எண்ணத்தின் பாடத்தைப் பகர்ந்து விட்டால் உன் எண்ணமெல்லாம் பாட நிலையிலே இருந்துவிடும்.

உன் எண்ணத்தை வைத்து வந்து விடப்பா… பெரும் ஞான நிலைக்கே என்று பகர்கின்றேன். பாடத்தின் வழியை எப்படிச் சொன்னாலும் “உன் நிலையை உயர்த்திடவே பகர்கின்றேன் பல நாட்களாக…!”

என்னப்பா…! புரிகின்றதா இந்த நிலை…?

சிவன் சக்தி வடிவத்தை அர்த்தநாரீஸ்வரர் என்று சொல்லி சரி பாதி சிவனையும் மறு பாதி சக்தியையும் உருவத்தைச் சித்தரித்தார்கள் சித்தர்கள். இந்நிலை எதற்கப்பா…?

உன் நினைவில் வந்ததா…? கடவுளின் ரூபத்தைக் கருத்துடன் புகுத்தி விட்டேன் உன் எண்ணத்தில். பெண் ஆண் என்பதெல்லாம் பிரிந்திடாமல் வருவதற்காக அளித்த சொல்லப்பா சிவசக்தி வடிவம்.

சிவ சக்தியின் வடிவத்தை உன் எண்ணத்தில் இட்டுள்ளேன். உன் எண்ணத்தின் வேகத்தில் பல பல உண்மைகளை அறிந்திடப் பாடம் மட்டும் புகட்டிவிட்டால் பாட நிலையிலேயே இருந்திடுவாய்.

பெரும் பரீட்சை ஒன்று உனக்குள்ளே வைத்துள்ளேன்…!
1.உன் எண்ணத்தின் மையத்தில் வைத்திடுவாய் சிவ சக்தியின் பிம்பத்தை
2.வைத்துள்ளேன் இன்று உனக்கு அந்நிலையில் உன்னுள்ளே.

இன்றைய தியானத்தை உன் நிலையை ஒருநிலைப்படுத்தி சக்தி சிவன் சொரூபத்தை உன்னுள்ளே கண்டு அந்நிலையின் தத்துவத்தை எனக்கு அருள்வாயா…?.

1.உன் நிலையை… தியான நிலையில் கண்டு பார்த்தால் கண்டிடுவாய்.
2.சிவ சக்தியின் வடிவத்தை நீ பெற்ற மக்களின் தன்மையில் கொண்டு வந்தால்… அந்நிலை புரியும்.

சிவன் தனியாக உள்ளாரா…? சக்தி தனியாக உள்ளாரா…? என்பதெல்லாம்… ஒன்றுடன் ஒன்று கலக்கவில்லை என்றாய் அல்லவா…! நான் பகர்ந்து விட்டால் புரிந்து கொள்வாய் சில நொடியில்… பெற்ற “தியானத்தின் தன்மையிலே கண்டிடப்பா…!”

அணுவின் தன்மையில் பல கோடி நிலைகளை… கோடி கோடி நிலைகளைப் பகர்ந்துள்ளேன்.

1.ஆவியின் நிலையிலே பெண் இல்லை ஆண் இல்லை.
2.இறந்த பின்னால் ஆவியின் நிலை எல்லாம் பெண்ணல்ல ஆண் அல்ல

சஞ்சலம் உள்ள ஆவிகள்… தன் நிலையை முடித்து விட எண்ணுகின்றது உடலில் இருந்த பொழுது செய்த பலனை ஏற்றுக் கொண்டு சில ஆவிகள் இருக்கின்றன… சில ஆவிகள் பழி தீர்க்கும் நிலையிலும் இருக்கின்றன.

1.மனித உடலில் நல்லவர் கெட்டவர் என்பதைப் போல் என்பதைப் போல்
2.ஆவியின் உலகிலும் இரு நிலை ஆவிகளும் சுற்றுகின்றன.
3.அவ்வாவிகளின் செயல்களினால் நடக்கின்றன பெரும் விபத்துகளும் கொலைகளும் தற்கொலைகளும் எல்லாமே.

நல்ல நிலையில் உள்ள ஆவி… தான் பிரிந்து சென்ற குடும்பத்தின் பற்றை எல்லாம் மறந்திடாமல் அந்நிலையில் இருந்து கொண்டே நடத்திவிடும் குடும்ப நிலைகளை எல்லாம்.

பிறந்தவுடன் இறக்கின்றான்… இறந்தவுடன் பிறக்கின்றான்… என்றால் சில ஆவிகளின் நிலை மட்டும்தான் இந்நிலை.

சில ஆவிகள் உடலை விட்டுப் பிரிந்தும் எங்கும் செல்வதில்லை. அக்குடும்பத்தில் உள்ள பற்றையும் பாசத்தையும் ஒரு நிலை நிறுத்தித் தன் செயலில் நிறைவு கண்ட பிறகே மறு ஜென்மம் எடுக்கிறது.

சில ஆவிகள் உடலில் இருந்து பிரியும் பொழுது தனக்குண்டான ஆசைகளையும்… தான் வாழ்ந்த காலத்தில் அடைய முடியாத நிலையில் விட்டுச் சென்ற ஆசைகளையும் அடைவதற்காக… அவ்வாவி எந்த இடத்தில் அதை எல்லாம் அடைய முடியுமோ அந்நிலைக்குச் சென்று பிறக்கின்றது.

சில ஆவிகள் நிலை தான் பெரும் மோசக்கார ஆவிகளாக நிலைத்து நிற்கின்றது. அவ்வாவிகள் எல்லாம் கொலையாகவோ தற்கொலையாகவோ… இவ்விரண்டில் வரும் ஆவிகள் தான் மறு ஜென்மம் எடுக்காமல் அழிகின்றன அழிக்கின்றன.
1.ஆண்டவனின் தன்மையையே அழிக்கப் பார்க்கின்றன
2.அதனால் தான் ஆவியின் நிலையில் நடக்கின்றது பல வீடுகளில் நன்மை தீமை எல்லாமே…!

July 15, 2024

நட்சத்திரங்களுக்குண்டான “ஜொலிப்பு”

நட்சத்திரங்களுக்குண்டான “ஜொலிப்பு”

 

வானவியல் இயக்கத்தின் அடிப்படையில் நமது சூரிய குடும்பத்திற்குப் பிற மண்டலங்களிலிருந்து வரக்கூடியதை எல்லாம் 27 நட்சத்திரங்கள் கவர்கிறது.

அதைக் கவர்வதற்காகப் பால்வெளி மண்டலமாக அமைத்து நூலாம்படை போல வலையை விரித்து விடுகின்றது.
1.பிற மண்டலங்களின் உருவான அணுக்கள் இதிலே பட்டபின்
2.அதனுடைய உணர்வைத் தனக்குள் எடுக்கும் பொழுது ஒளியின் மின்கதிர்களாக மாறுகின்றது
3.அதனால் தான் நட்சத்திரங்களுக்கு அவ்வளவு ஜொலிப்பு…!

அணு விசைகள் (அணு ஆயுதங்கள்) வெடித்த பின் அதனுடைய ஓளிக் கதிர்கள் நம் கண்ணை எப்படிப் பறிக்கின்றதோ… ஊடுருவிப் பாய்கின்றதோ… அதே போல் நட்சத்திரங்களிலிருந்து வரும் மின்னல்… அதாவது
1.ஒரு பொருளுடன் ஒரு பொருள் நட்சத்திரங்களின் அணுக்கள் (ஒன்றுடன் ஒன்று) மோதப்படும்போது
2.பளீர்… என்று மின்னலாக மிகக் கடுமையாக ஊடுருவிப் பாய்கின்றது.

அந்த மின்னலின் கதிரியக்கங்கள் புவியின் ஈர்ப்புக்குள் வந்தால் பூமியின் நடு மையத்திற்கே வேகமாக ஊடுருவிச் செல்கின்றது. பூமியைப் பார்த்தால் கல் (பூமியின் நிலப்பகுதி) மூடி இருப்பது போன்று இருக்கும். ஆனால்
1.ஒவ்வொரு கல்லுக்குள்ளும் பாறைக்குள்ளும் அந்த நட்சத்திரங்களின் கதிரியக்கப் பொறிகள் உண்டு
2.அதன் வழி பட்டபின் அதனுடைய தொடர் வரிசையில் நம் பூமியின் நடுவிட்டம் சென்றடைந்து
3.பூமியின் சுழற்சியில் தேங்கும் இடமான மையத்தில் தேங்கி விடுகின்றது.

இது அனைத்தும் சேமிக்கப்பட்டு கொதிகலனாக மாறி வெளியே இருப்பது அனைத்தையும் கூழாகக் கரைத்து விடுகின்றது. அதிகமான அமிலங்களாக மாறி விட்டால் அப்போது பூமியிலே நில நடுக்கம் தோன்றும். நிலங்கள் அப்படியே கீழே சரிந்து உள்ளே போவதை நாம் பார்க்கலாம்

நட்சத்திரங்கள் இது போன்று வெளிப்படுத்தும் கதிரியக்கப் பொறிகள் நம் பூமிக்குள் ஊடுருவி பூமியின் ஈர்ப்புக்குள்ளே சென்று விட்டால் சிறுகச் சிறுகச் சேமிக்கப்பட்டுத் தன் அருகில் உள்ள அனைத்தையும் கரைக்கப்படும் பொழுது மேல் பாகம் அப்படியே அமிழ்ந்து விடும் (பூகம்பம்).

எந்தப் பகுதியில் இதனுடைய அமிலங்களாக உருகப்படுகின்றதோ மேல் பாகம் எடை தாங்காது அப்படியே கீழே இறங்கும்.
1.விஞ்ஞான அறிவால் இதையெல்லாம் கண்டு கொள்வது அவ்வளவு சுலபம் அல்ல
2.எப்பொழுது எதைச் செய்யும்…? எப்படி ஆகும் என்று…!

இதைப் போன்ற எம்முடைய (ஞானகுரு) உபதேசங்கள் சில நேரங்களில் மிகவும் நுட்பமாக வெளி வரும். மற்றவர்கள் அதைத் தவறான வழிகளில் எடுத்துச் செல்வதும் உண்டு.

அத்தகையவர் கைகளில் சிக்கக் கூடாது என்பதற்காகத் தான் சில நேரங்களில் அதிவேகமாக யாம் சொல்வது. ஆனால் அதே சமயத்தில்
1.உணர்வின் ஈர்ப்புடன் பதிவு செய்ய வேண்டும்…
2/நல்ல வழியில் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பவர்களுக்கு உரமாக ஏற்றி
3.மீண்டும் நினைவு கொள்ளும் போது அந்த மெய் வழியினைப் பெறும் தகுதியும் அவர்களுக்கு ஏற்படுத்துகின்றோம்.

இதிலே எத்தனையோ வழிகள் உண்டு…!

தீமையை விளைவிப்போர் நன்மையைத் தீமையாக மாற்றி விடுவார்கள்… அந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் அதிலே சிக்கிவிடக் கூடாது.

யார் உண்மையிலேயே இந்த அருள் ஞானத்தைப் பெற வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றர்களோ அவர்களுக்கு இது கிடைக்க வேண்டும் என்பதற்குத்தான் ஒவ்வொரு நிலைகள் உபதேசிக்கப்பட்டு
1.சில உண்மைகளை ஆழமாக உங்களுக்குள் பதிவு செய்வதும்
2.மெய் உணர்வின் உணர்வுகளை உங்களுக்குள் சில நேரங்களில் சிறிது வேகமாகப் பேசுவது உண்டு.

சாமி இலேசாகப் பேசிக் கொண்டிருந்தார் திடீரென்று இப்போது வேகமாகப் பேசுகிறார் என்று நீங்கள் எண்ண வேண்டியதில்லை.

உங்கள் ஈர்ப்புக்குள்… உங்கள் உணர்வின் குணங்களுக்குள் அதைச் சீராக நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் இப்படி எல்லாம் செய்வது.

மாய ரூபத்தைக் காண விரும்ப வேண்டாம்… அதைக் கண்டு ஏமாறவும் வேண்டாம்…!

மாய ரூபத்தைக் காண விரும்ப வேண்டாம்… அதைக் கண்டு ஏமாறவும் வேண்டாம்…!

 

இயேசுவே நம… புத்தா நம… முகமது நபியே நம… ஐயப்பனே நம…! என்னும் போதெல்லாம்…
1.உன் மனதை ஒருநிலைப்படுத்தும் போது
2.நீ சொன்ன நாமத்தில் உள்ள “சித்தர்களை” நீ காண முடியும்.

அவ்வழியில் வந்தவர்கள் தான் போக மாமகரிஷியும் அகஸ்திய மாமகரிஷியும் கொங்கணவ மாமகரிஷியும். அதே சமயத்தில் உன் நினைவில் “உன் அறிவிற்கு எட்டாத பல ரிஷிகளும்” உருவமுடன் வருகின்றார்கள்.

உன் தியானத்தில் தெரியும் விநாயகரும் லட்சுமி சரஸ்வதி இராமர் கிருஷ்ணர் முருகர் எல்லாமே ஈஸ்வர சக்தியில் வரும் “மாய ரூபங்கள் தான்…”
1.முதலில் சொன்ன சித்தர்கள் எல்லாம் தன் உருவில் வந்து… தான் பெற்ற சக்தியினால் ஆசீர்வாதம் செய்வார்கள்.
2.பின் சொன்னவர்கள் எல்லாம் ஈஸ்வர சக்தியில் வரும் மாயாஜால ரூபங்கள் தான்.

ஈஸ்வரனை எண்ணும் பொழுது… ஈஸ்வரா…! முருகா…! விநாயகா…! என்று யாரை அழைத்தாலும் வருவது அச்சக்தியின் மாய ரூபமே…!

1.அவனுக்கு உள்ள பெயர் ஆயிரம்.
2.இந்த உலகமே அவனது…
3.எந்த ரூபமும் எந்தச் செயலும் செய்பவனும் அவனே.
4.உன்னுள் இருப்பவனும் அவனே என்னுள் இருப்பவனும் அவனே.
5.அவன் சக்தியைப் பெற்ற பயனால் வந்தவர்கள் தான் பல கோடிச் சித்தர்களும் ஞானிகளும் ரிஷிகளும்.

அவனின் சக்தியை உணராமல் தன்னிலையை மறந்து வெறும் வெறியாட்டங்களில் வாழ்ந்தவர்கள் எல்லோரின் நிலையும் வெறியுடனே… அத்தகைய அணுவின் தன்மையாக இவ்வுலகைச் சுற்றிக் கொண்டுள்ளது.

இப்பூவுலகில் பிறந்த நீங்கள் அவரவர்களுடைய பூர்வ புண்ணிய பலனை வைத்து… அச்சக்தியின் அருளைப் பெற்று நல்வழிக்குச் சென்றால்… போகனையும் கொங்கணவனையும் அகஸ்தியனையும் மிஞ்சலாம்.

ஆனால் இப்பூமியில் பிறந்து… அவனுடைய சக்தியை உணராமல் தன் வழியில் தன் சுகத்தை நாடி; உடல் சுகத்தை நாடி; பல அற்ப ஆசைகளில் தன் மனதைச் சிதறடித்து; பாவ புண்ணியங்களைப் பார்க்காமல் இருப்பவனை எல்லாம்…
1.இரண்டாம் நிலையில் சொன்ன இவ்வுலகைச் சுற்றியுள்ள தீய அணுக்கள் வெறியுடன் உள்ள அணுக்கள்
2.தன் விரோதத்தை முன் ஜென்ம விரோதத்தை எந்த நிலையிலும் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று இருப்பது.

மறு ஜென்மம் எடுத்தாலும்… பிறந்து வளர்ந்து நினைத்ததை முடிக்க வேண்டும் என்பதனால் மறு ஜென்மம் எடுக்கும் முதலிலேயே… அவ்வணுவான ஆவி “இச்சஞ்சலமான புத்தி உள்ளவனின் உடலில்” அண்டிக் கொள்கின்றது.

அதன் விரோதத்தைத் தன் கோபத்தை எந்நிலையிலும் பழிபாவத்தைத் தீர்த்துக் கொண்டுதான் மறு ஜென்மம் எடுக்கிறது (அந்தக் கெட்ட ஆவி).

அதனால் தான் மனிதர்களை
1.நல் நிலையில் இருங்கள்… தெய்வப் பற்றுடன் இருங்கள் தேவனை நம்புங்கள் என்றெல்லாம்
2.அன்றுள்ள சித்தர்கள் பல கோடிக் கோவில்களையும் பல தெய்வங்களையும் தானாகவே கற்பனை செய்து
3.முருகனையும் விநாயகரையும் லட்சுமி சரஸ்வதி என்று பல நாமங்கள் உள்ள தெய்வத்தின் சிலைகளை எல்லாம் பிரதிஷ்டை செய்து வைத்தார்கள்.
4.ஆகவே மனிதனின் நிலையை ஒருநிலைப்படுத்தத்தான் கோவில்கள் எல்லாம்.

இவர்கள் நினைத்துக் கொண்டார்கள் முருகனும் விநாயகனும் பிறந்தார்கள். முருகனுக்கு மனைவிமார்கள் குடும்பமெல்லாம் மனிதர்களால் சொன்ன கதைதான்… மனிதர்களுக்குச் சொன்ன கதைகள் தான் இவைகள் எல்லாம்.

நல்வழியில் புகட்டிய எல்லாவற்றையும் நாசமாக்கி விட்டார்கள் பெரும் நாசக்காரர்கள்.

கடவுள் என்றாலே வெறுக்கும் தன்மையில் அவரவர்களின் பிழைப்பிற்காகவும் பொழுது போக்கிற்காகவும் “கடவுளை ஒரு கருவியாக்கி… விளையாட்டுப் பொம்மையாக்கி விட்டார்கள்…!”

முருகன் படம் எழுதுபவனுக்குக் காசு… படத்தைத் தீட்டுபவனுக்கும் காசு… பட்த்தை விற்பவனுக்கும் காசு… முருகனைப் பற்றிய பாடலைப் பல கோணத்தில் திரித்துத் திரித்து எழுதுபவனுக்கும் காசு… அதை விற்பவனுக்கும் காசு.

ஆனால் முருகனின் நிலையை ஒருநிலைப்படுத்துபவன் எவனும் இல்லை.

1.முருகனையும் தெய்வத்தையும் அவ்ஈஸ்வர சக்தியையும் பிழைக்கும் வழிக்குத் தான் ஒவ்வொருவனும் அழைக்கின்றான்.
2.கோவிலுக்குச் செல்பவன் எல்லாம் தன் குறையெல்லாம் அத்தெய்வம் போக்கித் தனக்கு அருள வேண்டும் பெரும் செல்வத்தைத் தர வேண்டும்
3.எந்தச் செல்வத்தை…? பொருட்செல்வத்தினை நாடித்தான் செல்கின்றான் தேவனையும் நாடி.

எவனப்பா வருகின்றான் தன்னிலை உணர…?

தன் நிலை உணர வேண்டும் என்றால் என்ன…? என்பதே இந்த மானிடர்களுக்குப் புரியாமல் இருக்கும் பொழுதே இவர்களுக்கு எப்படி வந்திடும் தியான நிலை…!

அத் தெய்வமான ஈஸ்வர சக்தியின் நிலையினைக் கேட்டவர்கள் கேட்டு நல்லாசி பெற்றிடட்டும்.

ஆவி நிலையைப் பற்றிச் சிறு அளவு உங்களுக்குள் புகுத்தி உள்ளேன். நீ வணங்கும் உன் குலதெய்வம் என்பது யாரப்பா…? சௌண்டம்மன் அங்காளம்மன் காளியம்மன் எல்லோரும் யாரப்பா…?

மாரியம்மன் என்பவளும் அம்மன் தான். அந்த அம்மன்கள் எல்லாம் யாரப்பா…? இந்நிலை உனக்கு புரிந்திட்டதா…? இவ் அம்மன்கள் நிலை எல்லாம் பெரும் தெய்வீக நிலையில் உள்ள ஆக்ரோஷமாக உள்ள ஆண்டவனின் சக்தியைப் பெற்ற பெரும் ஆவிகள் தான்.

அவ்வாவியின் நிலையிலிருந்தே சக்தியின் ரூபத்தில் அருளைப் பெற்று நீ நினைக்கும் நேரத்தில் உன் நினைப்பினுள்ளே வந்து ஆசீர்வாதம் தருகின்றார்கள்.

ஆனால் அம்மன்களின் சக்தி எல்லாம் பெரும் ஆக்ரோஷமான நிலையில் உள்ளது தான். அதனால்தான் இவ்வம்மன்களின் ஆவிகள் சிறு வேண்டுதலைக் கூட நாம் அளிக்கா விட்டால்… தன் நிலையில் வந்து ஆவி நிலையில் வந்து எப்படியும் உணர்த்திப் பிடுங்கிக் கொள்ளும்… செய்யாதவர்களைப் பழி தீர்த்துக் கொள்ளும்.

அதனால் தான் பெரும் ஆக்ரோஷ நிலையிலுள்ள சக்திகள் என்று சொன்னேன். ஈஸ்வர சக்தியை பெற்ற இவ்வம்மன்களுக்கே பார்த்தாயா ஆக்ரோஷத்தை.

1.பெரும் சாந்த நிலை எய்திவிட்டால் இன்றுள்ள போகனின் நிலை… அது இவ் உலகை ஆளும் ஈஸ்வரனுக்கே ஆனந்தமூட்டும் நிலை.
2.அந்நிலை பெற்ற போகனை முருகா என்று அழைத்திட்டால் எந்நிலையிலும் அருளுடன் அன்புடன் அருள் புரிகின்றான்.
3.அவனின் நிலையை எண்ணிவிட்டால் பெரும் ஆனந்தமும் பெரும் செல்வமும் கிடைக்குமப்பா…!

(என் நிலையே எனக்குத் தெரிவதில்லை – ஈஸ்வரபட்டர்) இந்நிலையில் உன் நெஞ்சமெல்லாம் பூரிக்கின்ற தன்மையைப் பார்த்தாயா.
1.நீ உணர்ந்திட்டாய் இந்நிலையில் உள்ள உன் நிலையை…
2.இன்று உனக்கு உள்ள நிலை… சுவாச நிலை… பெரும் பொக்கிஷமான நிலை.
3.அவன் அருளைப் பெற்றிட்டால் எந்நிலையும் கைகூடும்.
4.அவன் அளிக்கின்றான் இப்பொழுது உன் நிலையை எண்ணிப் பெரும் சந்தோஷமும் பூரிப்பும் கொண்டு…!

இந்நிலையில் அவனை (போகரை) எண்ணி நீ தியானத்தில் இருந்திடப்பா.

அவன் வருவான்…! உன் நினைவிலும்; உணர்விலும்; உடலிலும்; அணு அணுவாக; ஆனந்தமயமாக உன்னை வந்து அண்டிடுவான்…!

July 14, 2024

ஒரு அணு என்று இருந்தால் உணர்ச்சியைத் தான் ஊட்டும்… பல அணுக்களாக விளைந்தால் உடலையே அது இயக்கிவிடும்

ஒரு அணு என்று இருந்தால் உணர்ச்சியைத் தான் ஊட்டும்… பல அணுக்களாக விளைந்தால் உடலையே அது இயக்கிவிடும்

 

ஒரு கோபப்படுவோருடைய உணர்வைக் கண்ணுற்று நோக்கி நம் உடலிலேயே பதிவாக்கி மீண்டும் அதை நுகர்ந்து நம் உயிரிலே பட்டால் அது நம் உடலுக்குள் கோபத்தை உருவாக்கும் அணுவின் தன்மை அடைந்து விடுகின்றது.

நமக்குள் பதிவான உணர்வு கொண்டு மீண்டும் “அவன் கோபித்தான்” என்ற உணர்வை நுகர்ந்தால் இந்த உணர்வுகள் அந்த உணர்ச்சியைத் தூண்டுகின்றது. நுகர்ந்த உணர்வு நம் இரத்தநாளங்களில் அது பெருகத் தொடங்கி விடுகின்றது.

உதாரணமாக ஒரு நெல்லை வைத்து அதை நாம் சமைத்துச் சாப்பிட முடியாது. பல நெல்களை இணைத்துச் சமைத்தால்தான் அது சாதம் ஆகின்றது.

ஆகவே அதைப் போன்று
1.நாம் நுகர்ந்த அந்தக் கோபமான உணர்வு பல அணுக்களின் தன்மை அடையபபடும் பொழுது தான்
2.இரத்தக் கொதிப்பு என்ற உணர்ச்சியைத் தூண்டுகின்றது.

ஒரு அணுவின் தன்மை என்று இருந்தால் அது மற்ற உணர்வுடன் கலக்கப்படும் பொழுது இரத்தக் கொதிப்பு என்று வராது..
1.அது உணர்ச்சியை ஊட்டும் உணர்வு என்றுதான் அதற்குப் பெயர் வரும்.
2.மற்றவைகளுடன் சேர்த்து இந்த உணர்வின் தன்மை இயக்கம் கம்மியாகவே இருக்கும்.

ஒரு வேதனைப்படுவரைத் திரும்பத் திரும்ப எண்ணினால் அந்த எண்ணத்தின் கணக்கு அதிகரித்தால் அதற்குத் தக்க நோயாக வரும்.

இதை எல்லாம் உணர்த்துவதற்குத்தான் சிவன் ஆலயத்தில் “நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை” என்று காட்டுகின்றார்கள்.

நாம் எந்தெந்தக் குணங்களை எல்லாம் சுவாசிக்கின்றோமோ அது நமக்குள் உள் சென்று அதனின் குணமாக உருவாகின்றது என்பதைத் தான் நந்தீஸ்வரன் என்று காரணப்பெயர் வைக்கின்றார்கள்.

எக்குணத்தின் தன்மை உணர்வின் தன்மை உருவாக்குகின்றதோ தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கிவிடும்.

ஒரு அணுவின் தன்மை பெற்றபின் அந்த உணர்ச்சியைத் தூண்டி நம் உயிரின் நிலைகளுக்கு நினைவுபடுத்தி அதை மீண்டும் சுவாசிக்கச் செய்து நம் இரத்தநாளங்களில் கலந்து இந்த உணர்வின் தன்மை உணவாக எடுத்துக் கொள்ளும்… உடலிலே அணுக்களாக விளையும்.

ஒரு நெல்லை நிலத்தில் ஊன்றினால் எப்படிப் பல நெல்களாக விளைந்து வருகின்றதோ இதைப்போல
1.நமக்குள் பதிவான ஒரு உணர்வின் (வித்தின்) தன்மை அது எதுவோ
2.அதற்குத் தக்கவாறு அந்தப் பல எண்ணங்களுடைய உணர்வுகளாக வருகின்றது
3.அந்த வித்தின் தன்மை விளைகின்றது

இப்படி நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தும் சிவன் ஆலயத்தில் சிவனுக்குக் கணக்கப்பிள்ளை

யார்..?

சுவாசித்த உணர்வுகளே நந்தீஸ்வரன். நாம் பார்த்த உணர்வுகள்… நாம் சுவாசித்து அந்த உணர்வின் தன்மை அதனின் கணக்கு அதிகமாகும் போது அது நந்தீஸ்வரன்.

உடல் சிவம்… சுவாசிப்பது நஸ்தீஸ்வரன்… உடலுக்குள் தொடர்ந்து இது செயல்படும் போது நந்தீஸ்வரன் கணக்குப்பிள்ளை.

இயற்கையைப் பயன்படுத்துபவன் மனிதன்… ஆனால் இயற்கையை வளப்படுத்துபவன் சித்தன்

இயற்கையைப் பயன்படுத்துபவன் மனிதன்… ஆனால் இயற்கையை வளப்படுத்துபவன் சித்தன்

 

உணர்வலையின் ஜீவ பிம்ப ஞானத்தால் தான் “நுண்ணிய காந்த ஈர்ப்பலையை...” நாம் வளர்த்துக் கொள்ள முடியும்.

1.இந்த மனித உடலுக்குள் உள்ள பன்னிரெண்டு வகை குண அமிலத்தையும் இவ்வுணர்வலையின் செயலையும்
2.இவ்வெண்ண சுவாசத்தால் “ஒரு நிலைப்படுத்தும்” பக்குவ மேம்பாட்டினால்
3.ஞான ஈர்ப்பின் நுண்ணிய காந்த அலையின் வளர்ச்சி ஒளியை
4.இவ்வுடல் முழுமைக்கும் ஈர்க்கவல்ல சக்தி முறையை வழிப்படுத்தும் செயல் உணர்ந்து
4.நம் ஜெப நிலை இருக்கும் பக்குவம் தான் “ஓ...ம் என்ற நாதமுடன் ஈர்த்து வழி பெறுங்கள்...!” என்னும் யான் சொல்லி வரும் நிலை.

இந்த உடலுக்கு உணர்வும்... உணர்வுடன் கூடிய குண அமிலங்களும்... குண அமிலங்களுடன் வழி நடத்தும் எண்ண சுவாசமும்... இருந்தால் தான் ஜீவ சக்தியான நுண்ணிய காந்த அலையின் சக்தியை நாம் எடுக்க முடியும்.

நம் உயிராத்மாவிற்கு சேமிக்கும் சொத்து எது...? என்று பல தடவை வினாக்களை ஏற்கனவே எழுப்பியுள்ளேன்.

உயிராத்மாவிற்குத் தேவையான சொத்தைச் சேமிக்க வேண்டும் என்றால்... பலவான எண்ணத்தில் உணர்வின் உணர்ச்சி அலையின் வாழும் மனிதனின் ஞானம் எத்தகையதைப் போல் இருந்திடல் வேண்டும்...?

இன்றும் பல காலமாகவும் பல மேதைகள் புதிய புதிய செயல் முறைகளைக் கண்டுபிடித்து விஞ்ஞானச் செயலும் கல்வி ஞானமும் இன்னும் சிலர் கவிதை ஞானமும் பெற்றுத்தான் வாழ்கின்றனர்.

இந்த ஞானம் எத்தகையதைப் போன்றது..?

சித்தனின் ஞானத்திற்கும் இந்த ஞானத்திற்கும் மாறுபாடு என்ன...? சித்தனின் வளர்ச்சியும் ஞானம் தான்...! இவையும் ஞானம் தான்...!

சூரியனின் ஒளி சக்தியினால் இந்தப் பூமியின் வளர்ச்சி பூமி எடுத்து வளர்ந்து பலவாக உள்ளது. வளர்ந்துள்ள இயற்கையில் இருந்து அதிலுள்ள சத்தான நமக்குகந்தது எது..? என்று அறிந்து அதன் பெருக்கத்தை உற்பத்தியாக்கி அதன் சுழற்சி செயலில் இருந்தே மேன்மேலும் புதிய புதிய படைப்புகளை ஒன்றுடன் ஒன்று கலந்து அதன் பலனைப் பெறுவது போன்ற ஞானம் தான் விஞ்ஞானமும்.. இன்றைய கல்வி ஞானமும்... கவி ஞானமும்...! எல்லாமே.

ஆனால் சித்தனின் ஞானம் எப்படிப்பட்டது...?

இயற்கையில் பலவான நிலையில் இப்பலவற்றையும் கண்டு இவற்றிற்கு மேல் இவற்றையே வாழ வைக்கும் நிலை எவை..? என்பதனை உணர்ந்து இந்நிலையின் வளர்ச்சியின் “மூலம் அறிந்திட...” இந்த மூலத்துடன் சென்றடையும் நிலையில் கலந்தால் தான் இன்றைய படைப்பைப் போன்று பலவான புதிய படைப்புகளை இயற்கையில் படைக்கவல்ல ஆற்றலுக்கு வழி பெறச் செல்லுகின்றான் சித்தன்.

1.இயற்கையில் விஞ்ஞானம் காணுகின்றான் மனிதன்.
2.அந்த இயற்கையையே வளரச் செய்கின்றான் சித்தன்...!

காற்றிலும் நீரிலும் ஒளியிலும் உள்ள அமிலங்களைக் கொண்டு விஞ்ஞானச் சாதனையான அணு குண்டையும் விஷ வாயுக் குண்டையும் பலவாகப் படைக்கும் இன்றைய மனிதன்
1.நீரையும் காற்றையும் ஒளியையும் படைக்க முடியுமா...?
2.இயற்கையில் விளைந்த நாணல் புல்லைக் காற்றும் நீரும் ஒளியும் இல்லாமல் விஞ்ஞானத்தால் படைக்க முடியுமா...?

ஆனால் காற்றையும் நீரையும் ஒளியையும் படைத்தவனும் மனிதனே.. சித்தனாகவும் ஆனான்.. சப்தரிஷியாகவும் ஆனான்... சகலத்தையும் படைக்கும் ஆற்றலின் ஒளி காந்த சக்தியாகவும் ஆனான்...!

அத்தகைய ஞானத்தின் படைப்பு தானப்பா நீயும் நானும்...!

அந்த ஞானத்தையே பெறவல்ல சக்திக்கு ஜீவத் துடிப்புக் கொண்ட எண்ண சுவாசம் இருந்தால் தான் “எந்த ஞானமும் பெற முடியும்...!”

July 13, 2024

எண்ணத்தின் வேகத்தைப் புரிந்திட்டாயா நீ…!

எண்ணத்தின் வேகத்தைப் புரிந்திட்டாயா நீ…!

 

பாடலை உச்சரிக்கும் தன்மையில் உன் சுவாச நிலை புரிகின்றதா…? பகர்ந்திட்டேன் பகர்ந்திட்டேன் பல நாட்களாக…!

சுவாச நிலை என்பது “ஓம் ஈஸ்வராய நம… ஓம் ஈஸ்வராய நம… என்று உன் மூச்சை வெளி விடுவது அல்ல…”

மூச்சை உள்ளிழுத்து வெளிவிடும் பொழுது
1.உன் கலக்கத்தை எல்லாம் அடக்கி விட்டு அந்நிலையை மறந்து விட்டு
2.ஓம் ஈஸ்வரா குருதேவா… ஓம் ஈஸ்வரா குருதேவா… ஓம் ஈஸ்வரா… என்று
3.உன் மூச்சை உள்ள இழுக்கவும் வெளிவிடவும் பழகவும்.

சோர்வுடன் விட்ட மூச்செல்லாம் சோர்வுடனே தான்…! பகர்ந்துள்ளேன் பகர்ந்துள்ளேன் பல நாட்கள் ஜெப நிலையில் இருந்திடுங்கள் என்று.

எண்ணம் செயல் இன்பம் துன்பம் சோர்வு அனைத்தும் கலந்தது தான் மனிதன்.
1.மனிதனின் வாழ்க்கையில் இவை அனைத்தும் இல்லாவிட்டால்
2.சுவையும் இல்லை வளமுள்ள வாழ்க்கையுமில்லை.

சோர்வும் வருவதால் தான் மனக்கவலை தன்னை விட்டு அகல்வதில்லை மனதில் உள்ள சோர்வை அகற்றிடாமல் சோர்வின் நிலையிலேயே இருந்திட்டால்…
1.உன்னைச் சுற்றியுள்ள இவ்வுலகில் உள்ள சோர்வின் அணுக்களை எல்லாம்
2.உடலில் அணுவாக மாற்றிடச் செய்யும்.

நல்நிலையில் உள்ள பொழுது நல்ல நிலையில் உள்ளவனுக்கு சந்தோஷம் இன்பமும் “ஈஸ்வரனே” (உயிர்) தருவான். சோர்விற்கும் கலக்கத்திற்கும் எவர் ஒருவர் அடிமையாகின்றாரோ அவர் நிலையெல்லாம் துன்பத்துடனே…!

சோர்வும் கலக்கமும் வந்திட்ட பொழுது அந்நிலையையே எண்ணிடாமல்
1.அவன் (ஈசன்) எனக்குள் உள்ளான் என்ற எண்ணம் மனதினுள்ளே வந்து
2.சோர்வின் நிலையை வளர்த்திடாமல் அவனிடம் அதை விட்டு விடும் தன்மை வேண்டும்.

எண்ணும் சோர்வமும் கலக்கமும் மனிதன் நிலையினையே மாற்றிவிடும்… உடல் நிலையையும் மாற்றிவிடும்… மன நிலையையும் மாற்றிவிடும். மன நிலை மாறிவிட்டால் உன்னை அண்டிக் கொள்ளும்… அந்த அணுவெல்லாம்.

அணுவின் தன்மையிலே நல்ல அணுவும் உள்ளதுவே தீயணுவும் உள்ளதுவே. சோர்வின் தன்மையிலே தீய அணுவை அணுகிடுவாய்… தீயணுவின் வேலையெல்லாம் உடல் நிலையையே மாற்றிவிடும். கோபம் சலிப்பு வருவதெல்லாம் இந்நிலையில் தான்.

1.எந்நிலை வந்தாலும் ஈஸ்வரன் (உயிரிடம் - என்னிடம்) என்பவனிடம் விட்டுவிடுங்கள்.
2.அவன் பார்த்துக் கொள்வான்.

நம்மை ஒருவர் துவேஷிக்கும் பொழுதும் நம்மைப் பார்த்து ஒருவர் பொறாமையாக எண்ணும் எண்ணமும்…
1.சோர்வின் நிலையில் உள்ளவனுக்கு உடனே வந்து தாக்கும்
2.காரணம் எல்லா நிலையிலும் எண்ண நிலைதான் மிகவும் துரிதமானது.
3.அவர்கள் எண்ணும் எண்ணம் செல்லும் வேகத்தில் உன் உடலை வந்து தாக்கிவிடும்.
4.உனக்குள் சோர்வும் கலக்கமும் இருக்கும் பொழுது உன் எதிரியின் எண்ணம் உடனே வந்து உன்னைத் தாக்கும்.

இந்நிலையில் வருவது தான் உடல் நிலையில் வரும் மாற்றங்களும் வியாதிகளும் எல்லாமே.

அதற்குத் தான் பிறரின் கண் படும்… சுற்றிப்போடு…! என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்பாய்.

அந்நிலை வருவதெல்லாம் உன் சோர்வினால் தான்.
1.சோர்வுடையவனுக்கு எல்லாத் தீய குணங்களும்
2.எண்ணும் எண்ணத்தை விடத் துரிதமாக வந்தடையும்.

பெரும் காற்றும் மழையும் மின்சாரமும் செயற்கை மின்சாரங்கள் எல்லாமே செல்லும் வேகத்தை விட “எண்ணத்தின் வேகம்” உலகிலேயே உயர்ந்த வேகம்…!

எண்ணத்தின் வேகத்தைப் புரிந்திட்டாயா நீ…!
1.இருக்கும் நிலையில் இருந்து நீ செய்யும் தியானத்தில் உன் எண்ணம் எம் மண்டலத்தைச் சுற்றியும் பாயும்.
2.மனிதனின் சக்தி உலக சக்திக்கெல்லாம் அப்பாற்பட்ட பெரிய சக்தி
3.அச்சக்தியின் தன்மையை யாரப்பா உணர்ந்துள்ளார்கள்…?
4.எண்ணத்தின் தன்மையை எண்ணிப்பார்…! உன் உணர்வை எண்ணிப்பார்.
5.நாட்டமெல்லாம் அவன் அருள்வான் நலிங்கிடாதே… எந்நிலை வந்தாலும் மாற்றிடும் தன்மை வேண்டும்.

சோர்வு சோகம், கோபம் குரோதம் நலிவு வருவதெல்லாம் மனிதனுக்குச் சரிபாதி உள்ளது அதை எல்லாம் வென்று… அந்நிலைக்கு நம் மனதை இடம் கொடாது
1.நம் நிலையை ஒருநிலைப்படுத்தி
2.மின்னல் வந்தாலும்… பூகம்பம் வந்தாலும்… நம் நிலையை மாற்றிடாமல் இருந்திடுவதே இத்தியானத்தின் முறை.

தியானத்தில் அமர்ந்து தான் இந்நிலை வர வேண்டும் என்பதல்ல…!

உன் உடலில் உள்ள கோடான கோடி அணுக்களையும் உன்னைச் சுற்றி உள்ள பல கோடி அணுக்களையும் ஒருநிலைப்படுத்தத்தான் “இந்தத் தியான முறை எல்லாம்…!”

மனிதனின் நிலையில் ஒரு பாதி இது என்று சொன்னேன். மறு பாதி என்ன என்றால் ஆசை பேராசை பற்று உல்லாசம் நிறைந்துள்ளது.
1.ஆசையை வளர்த்து விடுகின்றான்
2.பாசத்தைப் பகிர்ந்து விடுகின்றான்.
3.உள்ள நிலையை மறந்து விட்டுப் பெரும் உல்லாசத்தை நாடி விடுகின்றான்.

அத்தகைய நிலையில் மனம் எடுக்கும் சுவாசத்தில் நன்மை தீமை ஒன்றுமே தெரிவதில்லை.

தன் நிலையில் உள்ள ஆசையை வளர்த்திட மென்மேலும் ஆசைப்பட்டு அந்த ஆசை அணுவுக்கே அடிமையாகின்றான். பாசம் என்பதும் இப்படியே…! பெரும் பாசத்திற்கு அடிமையாகி விடுகின்றான்.

உல்லாசத்திற்கு அடிமையாகின்றான் இந்நிலையில் உள்ளவனுக்கு எந்நிநிலையும் அவன் கண்ணிற்குத் தெரியாது.

1.இந்த நிலைகளை எல்லாம் அகற்றிவிட்டு
2.தன் நிலையில் எது வந்தாலும் அடக்கி ஒருநிலைப்படுத்துபவனுக்கே
3.”தியான நிலை” என்பது கூடி வரும்.

தர்மம் நியாயம் என்பதெல்லாம் உன் அளவில் கஷ்டப்பட்டு உன்னை நீ வருத்தி உன் வழியில் பொருள் திரட்டிப் பிறருக்கு அளிப்பது தான் தானம் அல்ல.

எந்த நிலையிலும் நம் நிலையில் ஒருவரின் பொருளுக்கோ ஒருவரின் துவேஷத்திற்கோ ஆளாகாமல் ஒருவரை ஏமாற்றியோ பிறரின் சொத்தை அபகரிக்கக் குறுக்கு வழியில் சென்றிட்டோ… தன்னிலையை மறந்து பிறருக்கு உபதேசம் செய்வதோ… இதுவல்ல தர்மம்.

தர்மம் நியாயம் என்கிறோம்… தர்மம் என்பது தன் வழியில் உள்ள நியாயத்தை என்றும் கடைப்பிடித்து மற்றவரின் கஷ்டத்தைப் பார்த்து உன் உள்ளத்தால் வார்த்தையால் அன்பைப் பொழியும் பொழுது நீ தரும் பொருளினாலோ நீ இடும் பிச்சையினாலோ வருவதல்ல தர்மம்.

ஒருவரின் கஷ்டத்தைப் பார்த்த பின்
1.உள்ள நிலையில் உன்னால் முடிந்த அளவு அவருக்கு அன்பையும் உன் ஆறுதலையும் பகிர்ந்து
2.அக்கஷ்டப்படும் மனிதருக்கு “உன் அருளை” எப்படிப் பாய்ச்சுகின்றாயோ
3.அதிலே உள்ளதப்பா தர்மமும் நியாயமும்.

அவன் நிலையைப் பார்த்து பழித்துப் பேசிடவோ துவேஷித்திடவோ வேண்டாம். பொருளினால் மற்ற உதவிகள் அளிப்பதனால் மட்டும் வருவதில்லை தர்மமும் நியாயமும்…! (இது முக்கியம்)

உன் ஜென்ம நிலையை உணர்ந்து கொண்டால் எல்லாமே விளங்கிவிடும்… உன் வழிக்கு எல்லாமே.

1.தியான வழியில் அமர்ந்தால் உன் உடலில் உள்ள அணுக்கள் எல்லாம்
2.நான் பாடத்தில் சொன்ன எல்லா அணுக்கள் எல்லாமே “உன்னை வந்து தாக்கப் பார்க்கும்.

உன் எண்ணத்தின் வழியிலேயே அந்நிலையில் நீ செய்யும் தியானம் எல்லாம் அவன் (ஈஸ்வரன்) நிலையில் ஐக்கியப்படுத்து
1.உன் மனதைப் பெரும் நிதானப்படுத்திச் சாந்தமுடன்
2.எந்நிலையும் உன்னைத் தாக்கிடாமல் எந்த அணுவும் உன்னை அடைந்திடாமல்
3.உன் மனதை ஒருநிலைப்படுத்தி நீ விட்டிடும் மூச்சிலே தான் தியானமே கை கூடும்.

அந்நிலையில்… தியான நிலை கைகூடும் அந்த நிலையில்
1.அவன் பாதத்தை வணங்கிடப்பா.
2.அவர் பாதம் என்பதெல்லாம் உன் சக்திக்குள்ளே தான் உள்ளதப்பா.
3.அந்நிலையில் உள்ளவனுக்கு எண்ணும் எண்ணமெல்லாம் அவனருள்வான் உன் வழிக்கே.

உங்களுக்கு எண்ணத்தின் வேகத்தைச் சொன்னேன் அந்நிலையில் தியான நிலையில் உள்ளவனின் எண்ணத்தின் வேகம் உலகை மட்டுமல்ல உலகைச் சுற்றியுள்ள பல கோடி… பல கோடி… கோடி மண்டலங்களையும் அறிந்திடலாம்.

எந்நிலையில் உள்ள நிலையும் உன் தியான நிலையில் எண்ணத்திலேயே கண்டிடலாம்… பல கோடி கண்டிடலாம். தியான நிலையைப் பகிர்ந்திட்டவன் எல்லாம்… இந்நிலையை யாரும் பகிர்ந்திடவில்லை.

“தியானம் தியானம்” என்கிறார்கள். எந்த நிலைக்குத் தியானம் என்கிறார்கள்…?

தியான நிலையில் இருந்து உலக நிலையையும் வேறு பல நிலைகளையும் அறிந்து விட்டு என்ன பயன்…? என்ற எண்ணம் எல்லோருக்குள்ளும் சுழல்கின்றது.

1.தியான நிலைக்கு வருவதெல்லாம் அவன் அவன் செய்த பூர்வ புண்ணியப் பலனே.
2.பழிப்பவர்கள் பழிக்கட்டும்… வருபவர்கள் வந்திடட்டும் தியான நிலைக்கே.
3.முதல் பாடத்திலேயே சொல்லி உள்ளேன் கல்கியின் நிலையை.
4.அந்நிலைக்கு வருபவனுக்குத் தான் இந்தத் தியான நிலையும் கைகூடுமப்பா…!

தியான நிலையைப் புரிந்திட்டாயா உன் பாட்டின் தன்மையை மாற்றிக் கொள்வாயா…!

திருவருள் தந்திடுவீர் தாயே தந்தையே
திருமகன்(ள்) பணிகின்றேன்
திருவருள் தந்திடுவீர் தாயே தந்தையே
திரு குருவின் அருள் பெறவே
திருமானின் அருள் பெறவே
திருவருள் தந்திடுங்கள் தாயே தந்தையே.

July 12, 2024

உங்கள் நல்ல அறிவைக் காக்கச் செய்யும் எம்முடைய அருள் உபதேசம்

உங்கள் நல்ல அறிவைக் காக்கச் செய்யும் எம்முடைய அருள் உபதேசம்

 

உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலேயும்… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் ஜீவணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்ற நினைவை நீங்கள் அடிக்கடி உடலுக்குள் செலுத்தினால் போதும்.
1.நீங்கள் அப்படி எண்ணும் பொழுதெல்லாம் அதை பெறச் செய்வதற்கும்
2.உங்கள் உடலுக்குள் ஊடுருவிச் சென்று அது சக்தி வாய்ந்ததாக மாறும்படியும் செய்கின்றோம்.
3.துருவ நட்சத்திரத்தின் சக்தி உள்ளே சென்ற பின் உங்கள் நல்ல அறிவை மறைத்துக் கொண்டிருக்கும்… நஞ்சான இருள்களை நீக்கிவிடும்.

அதற்குத் தான் இதை இப்பொழுது யாம் உபதேசிப்பது. ஏனென்றால் இந்த உபதேசத்தின் உணர்வுகள் உங்கள் நல்ல அறிவைக் காக்கப் பயன்படும்.

பிறர் வேதனைப்படுவதை உற்றுப் பார்த்த பின் மீண்டும் மீண்டும் அந்த உணர்வுகள் எப்படித் தோன்றுகின்றதோ… தூண்டுகின்றதோ… நினைவு வருகின்றதோ… அதைப் போன்று தான்
1.உங்களுக்கு இதைத் திரும்பத் திரும்பச் சொல்வது
2.அப்படிச் சொன்னால்தான் அந்த உணர்ச்சிகள் தூண்டும்… உங்களுக்கு புரிய வரும்.

சந்தர்ப்பத்தில் வேதனையைப் பார்த்த பின் இருண்டு விடுகின்றது உங்களுடைய செயலாக்கங்கள் மாறுகின்றது. இது வளர்ந்து விட்டால் அந்த நல்ல அறிவின் செயல் முழுமையாக இழந்து விடுகின்றது.

அதை மாற்றுவதற்குத்தான்… மகரிஷிகளின் அருள் சக்தியையும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியைம் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியையும் இந்த உபதேசத்தின் வாயிலாக உங்களை நுகரும்படி செய்து… உங்கள் கண்ணின் கருவிழிக்குள் பதிவு செய்து… இந்த உணர்வின் ஆற்றலை உங்கள் நல்லறிவினை… எதனையுமே அறிந்து தெளிவாக்கிடும் அந்த ஞானத்தின் நிலையைக் காத்திட இதை உபதேசிப்பது.

1.உங்களை அறியாமலேதான் இதைப் பதிவு செய்கின்றேன்
2.மீண்டும் நீங்கள் நினைவு கொண்டால் உங்களை அறியாமலே பல அற்புதங்கள் நடக்கும்
3.தீமைகளை நீக்கிடும் ஆற்றலும் நீங்கள் பெறுகின்றீர்கள்.

அதைப் பெறச் செய்வதற்குத் தான் எனது குருநாதர் காட்டிய வழியில் அருள் ஞானியின் உணர்வை நுகர்ந்து அதே உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து உங்களை அறியாது நல்லறிவை மறைத்துக் கொண்டிருக்கும் சிறு சிறு திரைகளை நீக்கும்படி செய்கிறோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நல்ல அறிவுக்குள் இணைக்கச் செய்யும் பொழுது ஒவ்வொரு நொடியிலும் உங்கள் நல்ல அறிவைத் தெளிவாக்கிக் கொண்டு வர முடியும்.

அப்படி நீங்கள் தெளிவாக்கிக் கொண்டு வந்து உங்கள் வாழ்க்கையில் அது முழுமை பெற்றால் சந்திரன் எப்படிப் பூரண பௌர்ணமியாகப் பிரகாசிக்கின்றதோ அதே போல உங்கள் உடலில் உள்ள உணர்வுகள் அனைத்தும் “ஒளியின் சிகரமாக மாறுகின்றது…”

இந்த உடலை விட்டு எப்பொழுது சென்றாலும் உங்கள் உயிரான்மா பிறவி இல்லாப் பெரு நிலைகள் அடையும்.

இந்த வாழ்க்கையில் நம்மை அறியாமலேயே வரும் தீமைகளை அடக்கி… நம் எண்ணத்தால் தீமையற்ற செயல்கள் வராதபடி செயலாக்காதபடி நம்மைக் காத்துக் கொள்ள முடியும்.

புதிய உலகை நான்(ம்) படைப்பேன்(போம்)

புதிய உலகை நான்(ம்) படைப்பேன்(போம்)

 

“நானேதான் நான்…” என்னும் நிலை எல்லோருக்கும் வேண்டும். நான் என்னும் “அகந்தை” தான் வேண்டாம்.

நான் என்பதை அகற்றிடுங்கள்… நான் என்னும் சொல்லை விட்டுவிடுங்கள்…! என்று சொல்கின்றார்கள். ஆனால்
1.குழந்தையின் பருவத்திலேயே ஊட்டி விடுவதெல்லாம் “நான்” என்னும் சொல்லைத்தான்.
2.வளர்ந்த பிறகு “நான் என்பதை அகற்றிவிடு” என்று சொல்கின்றார்கள்.

ஆக… தன் நிலை உயர்ந்தால் தான் பிறரை உயரச் செய்ய முடியும்.

தன் நிலை என்னும் பொழுது நான் என்னும் நிலை தான் வரும்… நம் நிலை என்று எப்படி வரும்…? ஆகவே நான் என்பதை அகற்றிடுங்கள் என்பதன் பொருளைப் புரிந்து கொள்ளுங்கள்.

“நான்” என்பதையே புரியாமல் செய்வது தான் நான் என்பதெல்லாம்

குயவன் ஒரு மண் பானையைச் செய்துவிட்டு “நாம் செய்தோம்” என்று சொல்ல முடியுமா…? நான் தான் செய்தேன்…! என்று சொல்வான்.

தான் செய்யும் செயலுக்கு… செயல் என்பது தொழிலுக்கோ பிழைப்பிற்கோ உண்ணுவதற்கோ “அந்த நான்” வேண்டும். அந்நிலையில் நான் இருந்தால்தான் தன் நிலையையே பார்த்திட முடியும்.

1.நான்…! என்ற அகந்தை ஆணவம் பொறாமை பழிச்சொல்…
2.என்னைத் தவிர யாருக்கும் ஒன்றும் தெரியாது என்னும் நிலையில் இருந்து கொண்டு பிறரைப் பழிக்கும் நிலை
3.அந்த நிலையில் உள்ள நான் தான் வேண்டாம் என்பது.

நான் என்பதற்கு நான் எதிரி அல்ல…! குழந்தை தன் படிப்பில் ஒரு ஓவியத்தை வரைகிறது. அதை யார் செய்தார்கள்…? என்றால் கேட்டால் “நான் செய்தேன்…” என்று சொல்லக் கேட்டால் அது எவ்வளவு பெருமை…?

அதில் உள்ள அழகு வளர்ந்த பின்னும் இருந்து விட்டால்… அந்த நான் இருந்தால்தான் உலகமே அழகுபடும். அந்த நானில் இருந்திடுங்கள்.
1.நான் செய்திடுவேன் நல்ல காரியத்தை
2.நான் செய்திடுவேன் நல் தியானத்தை
3.நான் தியானம் செய்து நல் அலைகளைப் பரப்பிடுவேன்

இந்த நானை அகற்றாதீர்கள்.

1.மனத்தில் நல் மனமும் உள்ளது தீய மனமும் உள்ளது
2.நானிலும் நல் நானும் உள்ளது தீய நானும் உள்ளது.
3.மனம் எல்லாம் ஒன்றுதான்… நானும் ஒன்று தான்…!

அதைப் பிரிக்கும் வழி தான் நமக்கு வேண்டும்.

ஒரு இயந்திரமோ சமயலோ எதுவாக இருந்தாலும் ஒருவர் செய்வதைப் பார்த்துவிட்டு அவன் செய்து விட்டான்… ஏன் நான் செய்ய முடியாதா…? என்ற நான் வேண்டும்.

மனிதனுக்கு எப்படி ஆசை வேண்டும் என்று சொன்னேனோ அது போலவே “நானும்” வேண்டும். நானுக்கு நான் எதிரி அல்ல…!

ஒரு நல் வழியை நிலைநாட்டிட… “நான் அதைச் சொல்கிறேன்” என்னும் சொல்லில் தவறில்லை.
1.தீய வழிக்குத் தான் நான் என்பதை அகற்றிட வேண்டும்.
2.நான் என்பது நான் என்ற அந்த அகந்தையை அகற்ற வேண்டும்.

ஒரு நிலையில் இருந்திடுங்கள் ஒற்றுமையுடன் இருந்திடுங்கள்.

இன்றைய உலக நிலையில் எல்லாம் ஒரு நிலையும் ஒற்றுமையையும் பறந்திட்டது… கால நிலையைக் கருத்துரைத்தேன்.

குறுகிய காலம் என்றேன் பார்த்தாயா பதட்ட நிலையை…! பரஞ்ஜோதி வடிவானவனே பார்க்கின்றான் இப்பாருலகில் உள்ள நிலை எல்லாம். பகர்வதற்கு என்ன உள்ளது…? இப்பாரின் நிலையை…!

ஆகர்ஷண சக்தி எல்லாம் அழன்று உள்ளது அழிவின் நிலையில்.

கால நிலை மறந்து விடாதே கால நிலையை மறந்து விடாதே காத்திடுவாய் கல்கியுடன் கலந்திடத் தான்…!
1.அழிவு நிலையில் எல்லாம் அழியும் போது நான் இருந்து என்ன பயன்…? என்ற எண்ணம் நமக்கு வேண்டாம்.
2.நம் உயிரின் ஆசைக்காக “நாம் மட்டும் வாழ வேண்டும்” என்ற எண்ணத்திற்காக இருக்கச் சொல்லவில்லை.

உலக நிலையே அழிந்து விட்டால் நாம் வாழ்ந்த நிலைக்கு என்ன பயன்…?

பிறந்த பயனைப் போற்றிடச் செய்யுங்கள் போற்றிடச் செய்யுங்கள் என்பது பிறர் போற்றுவதற்காக அல்ல. புதிய எண்ணம் புதிய செயல் அதைப்போல் புதிய உலகத்தையும் கண்டிடுங்கள்.

சித்திரம் தீட்டிடுவேன் சித்திரம் தீட்டிடுவேன்
சிந்தை உள்ள சிவனின் சித்திரம் தீட்டிடுவேன்
சிவனின் சக்தியெல்லாம் சிந்தையில் வந்திடவே
சித்திரம் தீட்டிடுவேன்
சிவனாரின் ஆசி பெற்றிடவே சித்திரம் தீட்டிடுவேன்
சிவ சிவா என்னும் நாமத்தில் சிந்தை எல்லாம்
கலங்கிடாமல் இருந்திடவே சித்திரம் தீட்டிடுவேன்
சிவ பாக்கியம் பெற்றிடவே சித்திரம் தீட்டிடுவேன்
சிவன் அருளைப் பகர்ந்திடவே சித்திரம் தீட்டிடுவேன்
சிவன் சித்திரம் தீட்டிடுவேன்
(சிவன் சக்தி நடனக்காட்சி)
சிவ நடனம் கண்டிடவே
சீற்றமெல்லாம் குறைந்திடவே
சிவ பாதம் பணிந்து நின்றே சித்திரம் தீட்டிடுவேன்
சிங்கார மழலையிலே
சிரிக்கும் சிரிப்பில் எல்லாமே
சிந்தையுள்ளே மகிழ்ந்திடவே
சித்திரம் தீட்டிடுவேன் சிவனின் சித்திரம் தீட்டிடுவேன்
சிறு சிறு பூவின் மணத்தில் எல்லாம்
சிந்தையில் மனதை ஏற்று
சிவாய நம ஓம் சிவாய நம ஓம்
சிவ சிவாய நம ஓம் சிவ சக்தி நம ஓம்
சிவனின் நாமத்தை ஓதிடவே சித்திரம் தீட்டிடுவேன்…!

July 11, 2024

தனக்குள் வந்த தீமைகள் அனைத்தையும் ஒடுக்கி ஒளியாக மாற்றிக் கொண்டவர்கள் தான் "மகரிஷிகள்"

 

தனக்குள் வந்த தீமைகள் அனைத்தையும் ஒடுக்கி ஒளியாக மாற்றிக் கொண்டவர்கள் தான் "மகரிஷிகள்"

 

கோழி… விஷமான உணவுகளை உட்கொண்டாலும் அந்த விஷத்தினை ஒடுக்கித் தன் உடலின் தசைகளாக மாற்றித் தனக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றது. மயில் போன்ற பெரும்பகுதியான பறவை இனங்களும் விஷத்தை ஜீரணிக்கக் கூடிய சக்தி பெற்றவைகள் தான்

இதைப் போன்று தான்
1.மனிதனின் வாழ்க்கையில் தனக்குள் வந்த கடும் தீமைகளை… அதனின் செயலாக்கங்களை ஒடுக்கி
2.தன் இணைப்பின் நிலையாகச் செயல்படுகின்றார்கள் மகரிஷிகள்.

அப்படிச் செயல்பட்டவர்கள் தான் தன் உடலில் உள்ள உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலை கொண்டு இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அதற்குப் பின் வந்த மனிதர்கள்
1.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்பட்ட ஒளிக்கற்றைகளைச் சந்தர்ப்பத்தால் கவர்ந்து
2.தன் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும் இணைக்கப்படும் பொழுது
3.உடல் பெறும் நிலைகளை மாற்றி விட்டு உயிருடன் ஒன்றி
4.ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றி விண் சென்றார்கள்

அது தான் சப்தரிஷி மண்டலம் என்பது. ஏழாவது நிலை என்றால் சப்தரிஷிகள் என்பது.

ஆகவே நம்முடைய ஆறாவது அறிவால் இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளைத் தனக்குள் செயல்படாதபடி தடுத்து… ஒவ்வொரு உணர்வின் தன்மையும் அடக்கி… அருள் உணர்வுகளைத் தனக்குள் வளர்த்துக் கொண்டால் உடலை விட்டுச் சென்ற பின்…
1.எந்த மகரிஷியின் உணர்வை நாம் நுகர்ந்தோமோ அவரின் உணர்வுகள் நமக்குள் வலுப்பெற்று
2.துருவ மகரிஷி எப்படித் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளாரோ
3.அவரின் ஈர்ப்பு வட்டத்திற்கு அது நம்மை அழைத்துச் சென்று விடும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் சென்றால் அடுத்து உடல் பெறும் விஷத்தன்மைகளை ஒடுக்கிவிடும். பின் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாற்றி விடும்... அதற்குப்பின் நமக்குப் பிறவி இல்லை.

விண்ணுலகில் உருவாகும் உணர்வின் சத்தை ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளது துருவ நட்சத்திரம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் பெரும் கூட்டமைப்பாக முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

அந்தக் கூட்டமைப்புக்குள் “சாதாரண கண்களுக்குப் புலப்படாத அளவுகளில்” விண் சென்றவர்கள் அனைத்தும் ஒளியின் சரீரமாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்…!

நாம் சென்றடைய வேண்டிய எல்லை அதுதான்…!

நான் வருவேன்… “எப்போதும் உன்னுடன்…!”

நான் வருவேன்… “எப்போதும் உன்னுடன்…!”

 

மனமே தான் நீ…! மனத்திற்கும் குரங்கிற்கும் ஒப்பிடுகின்றார்கள்… மனம் ஒரு குரங்கு என்கிறார்கள்…! ஆனால்
1.குரங்கின் நிலை வேறு மனிதன் நிலை வேறு
2.குரங்கின் நிலை ஒரு நிலையிலே தான் உள்ளது.

ஒரு பொருளையோ ஒரு செயலையோ குரங்கின் மனம் எண்ணிவிட்டால் “அதன் நாட்டம் எல்லாம் ஒரு நிலையில் தான் உள்ளது…” குரங்கு மரத்திற்கு மரம் தாவுவதை வைத்து மனநிலையும் குரங்கையும் ஒப்பிட்டார்கள்.
1.மனம் அல்ல குரங்கு… குரங்கல்ல மனம்…
2.குரங்கைப் பற்றி மனிதர்கள் கொண்டிருக்கும் அர்த்தம் வேறு... குரங்கிற்கும் மனிதருக்கும் உள்ள நிலை வேறு.
3.குரங்கின் எண்ணம் மாறாது… குரங்கின் செயலும் மாறாது… தன் எண்ணத்திலேயே தான் அது என்றும் உள்ளது.

மனம் – எண்ணம்… எண்ணம் - மனம் எல்லாம் ஒன்றுதான்.

உன் எண்ணம் எங்குள்ளது…? துரிதமான நிலையில் சொல்வதெல்லாம் உன் எண்ணத்திற்கு “உதயம்” வரத்தான்.

பாடத்தில் தடங்கல் வந்தால் பாடத்தின் தன்மையும் மாறி விடுகின்றது. எண்ணமும் செயலும் மாறி விட்டால் உன் நிலையும் மாறி விடுகின்றது.

நம் பிறப்பிலிருந்து ஒவ்வொருவருக்கும்… “அவருடைய வளரும் சூழ்நிலை… பெற்றோர்களின் பழக்க வழக்கங்கள்… சுற்றத்தாரின் பழக்கங்கள்…” எல்லாமே கலந்து விடுகின்றது.

இந்த நிலையில்
1.உன்னை நீ உணர வேண்டும்
2.உன் நிலையை ஒரு நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும்
3.தன் எண்ணம்… தன் மனம்… தன் செயல்… எல்லாம் ஒரு நிலையில் இருக்க வேண்டும்.

இந்த நிலையைப் புரிந்து கொண்டால் எந்நிலையும் கிட்டிவிடும் என்று பகர்ந்துள்ளேன் பலமுறை. குழப்பமுடன் உள்ளாய் இரு தினத்தில் இந்நிலையில் ஏன் குழப்பம்…? உன்னையே நீ காணும் பொழுது…!

எடுத்ததை முடிப்பாய்…! எண்ணியதைச் செய்வாய்…! செயலெல்லாம் அவன் செயல்…! அவன் செயல் என்று வந்த பிறகு மனநிலையை மாற்றி விடாதே...!

உலக நிலை மாறப் போகிறது உன் நிலையில் வெகு துரிதம் வேண்டும் தியான நிலையில். கருவின் நிலை வளர்வதற்குள் கருகிவிடும் உலகம் முழுவதுமே உருண்டு விடும்.

இந்நிலையில் உன் நிலையில் வெகு துரிதம் வேண்டும். தியான வழியினைப் பயன்படுத்தித் தப்புங்கள். பாவ புண்ணியம் என்ற அணுவின் அணுக்கள் எல்லாம் அணுவுடன் மோதும் நிலையில் உள்ளது.

இவன் வெடிப்பான் அவன் வெடிப்பான் என்று உள்ள பொழுதே இவன் வினை எல்லாம் வெடித்துவிடும் அணுகுண்டாக…! கூடி விட்டான் கூட்டாளியாக… கூட்டத்தினிலே புகுந்து விட்டான். இந்நிலையும் சரி இல்லை… பெரும் அழிவிற்கே இந்நிலை எல்லாம்…!

ஒன்றை ஒன்று ஊடுருபவன…! ஒருவன் நிலையில் நிலையல்ல… தன் நிலையை நிலைநாட்டப் பிறர் நிலையில் ஊடுருவுகின்றான்…. காசு பணம் தேடிடவே கடல் கடலாக அலைகின்றான்.

உன் நிலையை எண்ணிடாமல் அவர் நிலையினை எண்ணுபவன் ஒரு சிலரே… உன் நிலைக்குப் புரிந்திடாது.

இயற்கையின் தாக்கலே பெரும் விஷமாகத் தாக்கிவிடும் (அம்பு எய்து விழும் காட்சி)
1.வருடம் அல்ல நாளல்ல… வருவதெல்லாம் பேரழிவு தான்
2.பூமித் தாயும் தாங்க மாட்டாள்.

அந்த அணுவின் நிலையை. அணுவின் பாடத்திலேயே புரிந்திருக்கும் இவன் விட்ட அணுவெல்லாம் இவனையே தாக்குகின்றது. நல்லெண்ணம் எங்குள்ளது…? தர்ம நியாயம் மறைந்து விட்டது.

செயற்கையுடன் வாழ்பவனுக்கு இயற்கை நிலை எதற்கப்பா…? சீறிடுவாள் இயற்கை அன்னை… இவனின் செயற்கை இவனையே அழித்துவிடும்.

விஞ்ஞானத்தைக் கண்டவன் எல்லாம் மெய்ஞானத்தைக் கண்டானா…?
1.விஞ்ஞானமும் மெய்ஞானமும் கலந்திருந்தால் நல்ல நிலை பெற்றிருக்கலாம்
2.மெய்ஞானத்தையே மறந்திட்டான்.

விஞ்ஞானத்தில் உயிரணுவைச் செய்திடச் சொல் பார்க்கலாம்…!

இயற்கை அன்னை தந்த உயிரணுவை வைத்துத் தான் இவன் விஞ்ஞானம் எல்லாம். விஞ்ஞானம் எல்லாம் அழிவிற்குத் தான்…!
1.இராக்கெட்டின் நிலையிலேயே மறந்திட்டான்
2.பறந்து என்ன பயன் கண்டான்…?
3.தன் நிலையை உணராதவன் செய்திட்டான் இராக்கெட்டை.

தேய்வ ஞானம் மறைந்ததப்பா தெய்வீகமும் மறைந்ததப்பா தேவனையே மறைத்திட்டான் தேவலோகம் சென்று பார்க்கின்றானா…? பார்த்து என்ன பயன் கண்டான்…? பாரில் உள்ளவர்க்குப் பகர்ந்திட்டானா…?

1.அவன் (ஈஸ்வரன்) அருளைப் பெற்றிடப்பா…!
2.அவன் இல்லாமல் யாரும் இல்லை
3.அவனே தான் உலகமப்பா
4.அவனே தான் நீயுமப்பா நானுமப்பா
5.அவனையேதான் நினைத்திட வேண்டுமப்பா
6.கலியின் தன்மையை மாற்றிடப்பா
7.காவியத்தில் வந்திடப்பா
8.கல்கியாக நிலைத்திடப்பா…!

மனிதன் மனதை மாற்றிடுங்கள்…! வளரும் குழந்தைகளுக்கு இந்தப் பாதை எதற்கு…? என்னும் நிலை வேண்டாம். புகட்டிடுங்கள் குழந்தைகளின் மனதிற்கு எல்லாம்.

எல்லோருக்கும் தான்… இதைச் செய்யச் சொல்கின்றேன்…!

இன்றைய கால நிலையைப் பற்றிச் சொல்… மனிதனின் நிலையைப் பற்றி புரிந்திடச் சொல். சிறு குழந்தைக்கும் புரியும் நிலையில் பகர்ந்துவிடு.
1.சிறுவர் சிறுமியருக்கெல்லாம் புரியும் தன்மையிலே அவர் நிலைக்கு நீ சென்று சொல்லி
2.அவரின் அன்பை எல்லாம் பெற்றுக் கொண்டு இன் அன்பைத் தந்துவிடு.
3.நான் வருவேன் உன்னுடன்…!

எந்த நிலைக்குச் சென்றாலும் எவ்விடத்திற்குச் சென்றாலும் புகட்டிடுவாய் பாலரின் மனதிற்குள்ளே. பாலரின் மனதை ஈர்க்கப் பகர்ந்துள்ளேன் இந்தப் பாடம் எல்லாம்.

July 10, 2024

உங்கள் பெண்ணுக்கு நல்ல வரன் சீக்கிரம் கிடைக்கும்

உங்கள் பெண்ணுக்கு நல்ல வரன் சீக்கிரம் கிடைக்கும்

 

நாம் மனிதர்கள் சந்தோஷமான உணர்வுகளைப் பதிவு செய்து கொண்ட பின் சந்தோஷமாக வாழ்ந்த நிலையை எண்ணும் பொழுது நம்மை அறியாமலே அன்று நமக்குச் சந்தோஷம் வருகின்றது.

அதே சமயத்தில் கோபமாகப் பேசியருடைய நினைவுகளை நாம் எண்ணினோம் என்றால் நம்மை அறியாமலே வெறுப்பும் கோபமும் அன்று உருவாகின்றது.

அப்பொழுது நம் உடலில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்படுகின்றது.

ஒரு மனிதன் வேதனையுடன் பேசினால் அதைப் பதிவு செய்து கொண்டால் அந்த மனிதனை மீண்டும் நினைக்கும் பொழுது நம்மை அறியாமலே வேதனை வருகின்றது… மனம் சோர்வடைகின்றது…!

ஒரு தொழிலில் செய்ய வேண்டும் என்று பதிவு செய்து கொண்டால் அந்த நினைவு வருகின்றது ஆனால் தொழில் சரியாகக் கிடைக்கவில்லை என்றால் அந்த நேரம் சோர்வடைந்து விடுகின்றோம்.

இதைப் போன்று
1.இந்த உடலில் “எதை எதை” நாம் பதிவு செய்து கொள்கின்றோமா
2.அது மீண்டும் நினைவுக்கு வரும் பொழுது நம் கண்ணுக்கே வருகின்றது.
3.கண்ணுக்கு வரும் பொழுது இந்தக் காற்று மண்டலத்தில் நாம் பழகியவர்களின் உணர்வுகள் பரவி உள்ளதை நாம் சுவாசித்து
4.அந்தந்த உணர்வுக்குத் தக்கவாறு நம் உடலின் மாற்றங்களும் எண்ணங்களும் சொல்களும் வருகின்றது… நம் செயல்களும் அமைகின்றது.

உதாரணமாக நம்மிடம் கோபமாகப் பேசியவர் நினைவு வரும் பொழுது பெண்களாக இருப்பின்… குழம்பு வைக்கும் பொழுது அதில் “காரத்தை” அதிகமாகப் போட்டு விடுவார்கள்.

சலிப்பு கொண்டோரின் நினைவுடன் சமைத்தால் அதிலே “உப்பை” அதிகமாகப் போட்டு விடுவார்கள். ஏனென்றால் நுகர்ந்த உணர்வுகள் அந்த வேலையைச் செய்யும்.

ஆண்களாக இருப்பின்… ஒரு வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தால் அந்த நேரம் குறுக்கே யாராவது வந்தார்கள் என்றால்
1.உடனே சலிப்பு வந்துவிடும்… அப்பொழுது கோபம் அதிகரிக்கும்.
2.கோபத்தின் தன்மை வரும் பொழுது வாகனத்தைச் சீராக ஓட்டுவது மிகவும் கடினமாகி விடுகின்றது.
3.கோபம் வந்தபின் அடுத்து நிதானமாக வண்டியையும் ஓட்ட முடியாது… ஓட்டினாலும் சிரமம் தான்.

இதைப் போன்று ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் நமக்குள் பதிவு செய்த நிலைகள் மீண்டும் நினைவுக்கு வரும் பொழுது
1.காற்றிலே கலந்துள்ள அந்தந்த உணர்வுகளைச் சுவாசிக்க நேர்ந்து
2.அந்தந்த உணர்வுகள் நம் உடலுக்குள் செல்வதும்… பின் அதைச் செயலாக்கியும் விடுகின்றது.

இப்படி நம் வாழ்க்கையில் எத்தனையோ உணர்வுகளைப் பதிவு செய்கின்றோம் நினைவு கொள்ளும் பொழுது அது வருகின்றது.

கல்விச்சாலையில் படிக்கும் போது பாடங்களைப் பதிவு செய்து கொண்டால் அதாவது…
1.எந்தப் பாடத்தை பதிவு செய்தோமோ அதை நினைவால் வெளிப்படுத்தும் போது
2.சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாக வைத்து விடுகின்றது.
3.அந்தப் பாடங்களை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது அதனுடைய தொடர் வரிசையும்
4.பாட நிலையில் எதை எவ்வாறு செய்ய வேண்டும்…? என்று குறித்த உணர்வுகள் நமக்குள் தெளிவாக வருகிறது.

உதாரணமாக உயர் படிப்பு படிப்பவர்களுக்குப் படிப்பில் பாடங்கள் அதிகமாக இருக்கப்படும் பொழுது அதன் தொடர் வரிசையில்… படிக்கும் பொழுதே சோர்வோ சோம்பேறித்தனமோ வந்து விட்டால்… குடும்பம் அல்லது தொழில் அல்லது கொடுக்கல் வாங்கல்களில் பாதிப்பு வந்துவிட்டால்…
1.பாடங்கள் சீராகப் பதிவாகாது… பரீட்சையில் தேர்வதும் மிகக் கடினமாகின்றது.
2.அத்தகையவர் படித்து வருவார் என்றால் மிகவும் கடினம் தான்

உதாரணமாக… குடும்பத்தில் கணவன் மனைவிக்குப் புத்திர பாக்கியம் வேண்டுமென்றால் “குழந்தை வேண்டும்” என்று பதிவு செய்தால் அந்தப் பாக்கியம் கிடைக்கும்.

அதற்கு மாறாக… “குழந்தை இல்லையே… குழந்தை இல்லையே… இல்லையே…!” என்று இதைப் பதிவு செய்து கொண்ட பின் இந்த உணர்வுகளே அதிகரித்து “புத்திர பாக்கியம் கிடைப்பது” காலதாமதம் ஆகிவிடும். காரணம்…
1.சோர்வும் சஞ்சலமும் அதிகமாகச் சுவாசிக்கும் பொழுது
2.அந்த அணுக்கள் வீரியத்தன்மை அடைந்து கரு வளர்ச்சி பெறும் நிலைகளும் தடைப்படுகின்றது அல்லது பலவீனம் அடைகின்றது.

இதைப் போன்று தான் நாம் பதிவு செய்து கொண்ட நிலைகள் எல்லாம் மீண்டும் நினைவுக்கு வரும் பொழுது இப்படிப்பட்ட இயக்கத்திற்கு வருகின்றது இதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்பது.

“தன் பெண்ணுக்குத் திருமணமாக வேண்டும்…” என்று எண்ணலாம். ஆனால் “திருமணம் ஆகவில்லையே…” பிள்ளையைப் பார்க்க வந்து வந்து செல்கின்றனர்…! என்று பதிவு செய்தால்
1.அந்தப் பதிவே மீண்டும் நினைவுக்கு வரும் பொழுது ஆன்மாவில் அது கலந்து
2.பெண் பார்க்க வரும் பொழுது அவர்கள் நம்முடைய சோர்வின் நிலைகளை உற்றுப் பார்த்து
3.நம் சொல்லைக் கேட்கப்படும் பொழுது அவர்களும் சோர்வடைகின்றார்கள்.
4.அப்போது நம்முடைய எண்ணமே பார்க்க வந்தவர்கள் உணர்வினை இயக்கி…
5.பேச்சுத் தொடரில் சோர்வின் தன்மை அடையச் செய்து திருமணம் நடைபெறாது தடையாகி விடுகின்றது.
6.நல்லது எண்ணுவதை அந்த இடத்தில் நாம் விட்டு விடுகின்றோம்.

அதை எல்லாம் மாற்றி அமைக்க நாம் என்ன செய்ய வேண்டும்…? என்றால்… நம் பெண் எங்கே திருமணம் ஆகிச் சென்றாலும் அந்தக் குடும்பங்கள் நலமாக இருக்க வேண்டும்… அந்தக் குடும்பத்தில் தொழில் வளம் பெருக வேண்டும்…
1.அந்தச் சக்தி என் பெண்ணுக்குக் கிடைக்க வேண்டும் என்ற அடிக்கடி எண்ணினால்…
2.அந்தத் திருமணமாக வேண்டிய பெண்ணும் இப்படி எண்ணினால்…
3.துரிதமாக அதற்கு நல்ல வரன் கிடைக்கும்.
4.எதிர்காலம் நல்ல வாழ்க்கையாகவும் அமையும்
5.அதனுடைய பேச்சும் மூச்சும் அந்தக் குடும்பத்தை நல்ல முறையில் வாழ வைக்கும்… மகிழ்ச்சியை உண்டாக்கச் செய்யும்.

ஆகவே மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து கொண்டு அதற்குப் பின் வாழ்க்கையில் ஒவ்வொரு நல்ல காரியங்களையும் செயல்படுத்தப் பழகிக் கொள்ளுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணி… ஒரு ஐந்து நிமிடம் உடலுக்குள் செலுத்திய பின்… எந்தக் காரியத்திற்குச் செல்கின்றீர்களோ அவை அனைத்தும் காரிய சித்தி ஆக வேண்டும்… எங்கள் சொல் அவர்களை நல்லதாக்க வேண்டும்… என்னைப் பார்க்கும் பொழுது அவர்களுக்கு நல்ல எண்ணம் வர வேண்டும்… என்று “இப்படித்தான் எண்ணிப் பழகுதல் வேண்டும்…”

வாழ்க்கையில் வரக்கூடிய எந்த நிலையாக இருந்தாலும் நல்லதாக வேண்டும் என்று இந்த முறைப்படி ஆத்ம சுத்தி செய்து செயல்படுத்த வேண்டும்.

ஆகையினால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறக்கூடிய தகுதியும் பெறுகின்றீர்கள்… அப்போதெல்லாம் அதை வலுக் கூட்டிக் கொண்டே வரவேண்டும்.

அதிகாலையில் எப்பொழுது விழிப்பு வருகின்றதோ அப்பொழுதெல்லாம் மகரிஷிகளை எண்ணி விட்டு இந்த முறைப்படி அந்தந்த காரியங்கள் நல்ல முறையில் நடக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

துருவ நட்சத்திரத்தைப் பின்பற்றி எத்தனையோ மகரிஷிகள் விண் சென்றுள்ளார்கள். அவர்கள் அனைவரும் ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றிச் சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் உள்ளார்கள்

ஒவ்வொரு நாளும் வாழ்க்கையில் அந்த அருள் சக்திகளை எடுத்து உங்கள் உடலுக்குள் வலுவாக்கிக் கொள்ளுங்கள்.
1.உடலுக்குள் சோர்வடைந்த நிலையில் எதுவாக இருந்தாலும் நல்ல மன பலம் பெற்று மன வளம் பெறுவீர்கள்.
2.சிந்தித்துச் செயல்படும் அருள் ஞான சக்தியாக வரும்…
3.உங்கள் காரியங்கள் “அனைத்தும் வெற்றியாகும்…”

செய்து பாருங்கள்…! (ஞானகுரு)

உண்மைச் சக்தியான காந்த ஈர்ப்பு மின் அலையை எடுக்கவல்லவன் “நிச்சயம் ஒளி நிலை பெறுவான்”

உண்மைச் சக்தியான காந்த ஈர்ப்பு மின் அலையை எடுக்கவல்லவன் “நிச்சயம் ஒளி நிலை பெறுவான்”

 

உணர்வின் வழித் தொடர் இச்சைக்கு நம் எண்ணம் செயல்பட்டு அவ்வுணர்வின் தன்மைக்கே எண்ணச் செயலை வழிப்படுத்தும் மனிதனால் எண்ண மேம்பாட்டிற்குண்டான வழிப்பாதையை அறிய முடியாது.

காட்சி:
அம்பெடுத்துக் குறி பார்த்து அம்பு விடுகின்றான் ஒரு மனிதன். அவன் உடலில் “ஒரு பெரிய கட்டெறும்பு” வந்து ஊர்ந்து கொண்டுள்ளது. அவன் எண்ணம் எல்லாம் அம்பின் குறி தவறாத ஒரே நிலையில் அம்பெய்தி தன் எண்ணத்தின் மேம்பாட்டைக் காண்கின்றான்.

அவ்வம்பு எய்தப்பட்ட பிறகு இந்த உடலில் ஓடும் “எறும்பின் குறு குறுப்பு உணர்வை அறிந்து...!” அதைத் தட்டி விடுகின்றான்.

இது எதனைக் குறிக்கின்றது…?

விளக்கம்:
உணர்வின் நிலையையே இவ்வெண்ணக் குறியினால் மாற்றியமைக்க முடியும்.
1.ஆனால் இவ்வுணர்வின் செயலே
2.நம் எண்ணத்தையும் விழிப்படையைச் செய்திடும்.

இவ்வுணர்வின் செயலே... எண்ணத்தை விழிப்படையைச் செய்யும் நிலை எப்பொழுது ஏற்படும்...?

இவ்வுணர்வின் எண்ணத்தை
1.எந்த ஒரு மனிதன் தன் எண்ணத்தின் வழித் தொடரில் பழக்கப்படுத்தி
2.அந்த உணர்வையே எண்ணத்தின் செயலில் செயல் புரிய வைக்கும் மனிதனுக்கு
3.இவ்வுணர்வின் அலையே எண்ணத்தின் ஈர்ப்பின் வளர்ச்சிக்கு
4.”அதி துணையாகச் செயல்படும்...!”

சில மிருகங்களுக்கு இவ்வுணர்வில் செயல் திறமை அதிகமாக உரு வளர்ச்சியிலேயே ஜீவன் கொண்டு வாழ்ந்து வருகின்றது.

நாம் உறங்கும் சில நேரங்களில் நம்மை அறியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் நம் எண்ண அலை உறங்கிடும் தன்மையில் இவ்வுணர்வின் அலையின் விழிப்பினால் நம் உடலில் ஏறும் சில ஜெந்துக்களையும் அதே சமயம் நம் உடலில் உள்ள நரம்புப் பிடிப்புகளையும் நீக்க இவ்வுணர்வலைகள் செயல் புரிகின்றன.

இந்த உடலில் நாம் எடுக்கும் எண்ணச் சுவாச அலைக்கு உறக்கம் தந்தாலும் உடலில் உணர்வலை இயங்கிக் கொண்டே தான் உள்ளது. இந்த உணர்வலைகளிலேயே...
1.மனிதனின் எண்ண மேம்பாட்டைக் கொண்டு
2.அபரிதமான சக்தி அமில குணங்கள் வளர்ந்துள்ளன.

ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள பொழுது சுற்றியுள்ள சப்த ஒலிகள் தனக்கு வேண்டப்படாத ஒலி அலையை இவ்வுணர்வலையும் எடுத்துக் கொள்வதில்லை.

ஆனால் அதே சமயம் கைக் குழந்தை தன் சிறு சிறு அசைவு கொண்டு அழுதாலும் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள தாயின் உணர்வறிந்து “விழிப்பு நிலை” ஏற்பட்டு விடுகின்றது.

சில கள்ளர்களின் கள்ளத்தனம் இல்லங்களுக்கு வந்து எடுத்துச் செல்லும் நோக்கமுடன் செயல்பட்டாலும்
1.இவ்வுணர்வின் அலை விழிப்படைந்து செயல்புரிந்து...
2.ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள பொழுதும் விழிப்படையச் செய்துவிடும்.

இந்த உடலில் உள்ள பல கோடி அணுக்களும் “நுண்ணிய ஈர்ப்பு அலையின் சக்தி அலையை ஈர்க்கவல்ல தன்மை கொண்ட மனிதனின்...” உணர்வலை எண்ண அலை உறங்கிடும் நிலையிலும் இவற்றில் விழிப்பு நிலை உறங்குவதில்லை.

ஒவ்வொரு மனிதனும் தன் எண்ணத்தின் நிலை கொண்டு இவ்வுடலில் உள்ள உணர்வின் சக்தி அலையைத் தன் இச்சையிலிருந்து அதன் வழியில் ஓட விடாமல் ஒரு நிலைப்படுத்தும் சம நிலை வழித் தொடர்படுத்திடல் வேண்டும்.

அப்படிச் செய்து விட்டால் இவ்வுணர்வலையின் சக்தி மேம்பாட்டினால் இவ்வுடலில் உள்ள அனைத்து அணுக்கதிர்களும் தன் ஈர்ப்பில் நுண்ணிய காந்த அலையின் சக்தி அலையைக் கூட்டிக் கொள்ளும்.

பிறகு எண்ணத்தால் எடுக்கும் சுவாசத்தால் உயரிய ஒளி அலையின் ஈர்ப்பிலிருந்து மிகச் சக்தி வாய்ந்த நுண்ணிய காந்த அலையின் ஈர்ப்பை இச்சுவாசம் முழுவதுமே ஒவ்வொரு தசை நார்களும் ஈர்க்கவல்ல சக்தி பெற்றிடலாம்.
1.அப்படிப்பட்ட மனிதனின் செயல் தான்
2.சப்தரிஷிகளின் செயல் வட்டத்துடன் சென்றடையும் ஈர்ப்பு பெற்ற ஜோதி காணும் நிலையே அன்றி
3.ஆறு கால ஜெபம் செய்து ஆண்டவன் நமக்கு அருள்வான் என்று ஏங்கி தவமிருப்பதால்
4.எந்தச் சக்தி அலையும் எந்த மனிதனாலும் பெற முடியாது.

உண்மைச் சக்தியை காந்த ஈர்ப்பு மின் அலையை எடுக்கவல்ல மனித ஆத்மா நிச்சயம் ஒளி அலை பெறுவான்.

உணர்வலையை எண்ணத்தைக் கொண்டு ஒரு நிலைப்படுத்தும் மனிதனுக்கு
1.அந்த உணர்வலையின் திசை திருப்பலிலிருந்து
2.அதி சக்தி ஈர்ப்பைப் பெற முடியும்.

July 9, 2024

செய்யத் தவறியதை… செய்ய மறந்ததை… நாம் அனுதினமும் இப்போது செய்ய வேண்டும்

செய்யத் தவறியதை… செய்ய மறந்ததை… நாம் அனுதினமும் இப்போது செய்ய வேண்டும்

 

துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் சப்தரிஷிகளின் அருள் சக்தியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் துருவ நட்சத்திரத்தின் பேர்ருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… என்று “புருவ மத்தியில் எண்ணி” ஏங்கித் தியானித்து… அந்த வலுவைக் கூட்டுங்கள்.

அதை வைத்து நம் முன்னோர்களின் உயிரான்மாக்களை விண் செலுத்த வேண்டும். காரணம்… நம் மூதாதையர்களுக்கு குலதெய்வங்களுக்கு இதற்கு முன்னாடி நாம் அதைச் செய்ய மறந்து விட்டோம்.

இப்போது
1.சப்தரிஷி மண்டலத்தின் பேர்ருள் பேரொளியை வலுப்பெறச் செய்து
2.மகரிஷிகள் காட்டிய அருள் வழியை உங்களுக்குள் அந்த உணர்வைத் தூண்டி
3.நினைவைத் தன்னிச்சையாக விண்ணை நோக்கிச் செலுத்தும்படி பயிற்சி கொடுக்கின்றோம்.
4.அதை நீங்கள் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

இதே ஏக்கத்தோடு நாம் அனைவரும் அந்தச் சப்தரிஷி மண்டலத்தின் உணர்வைப் பெற்று அதனின் வலுவின் துணை கொண்டு அவரவர்கள் குலதெய்வங்களான உயிரான்மாக்களை அந்த சப்தரிஷி மண்டலத்துடன் எளிதில் இணைக்க முடியும்.

ஏனென்றால் அந்த வலுவின் தன்மை கொண்டு
1.குலதெய்வங்களின் உயிரான்மாக்களை உந்தித் தள்ளப்படும் பொழுது அந்த சப்தரிஷி ஈர்ப்பு மண்டலத்தில் செல்கின்றது
2.உடல் பெறும் உணர்வுகள் கரைகின்றது… உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலைக்கின்றது
3.அப்பொழுது அந்த சப்தரிஷி மண்டலத்துடன் அது சுழல்கின்றது.

உதாரணமாக நாம் பூமியின் நிலைகளைக் கடந்து ஒரு இராக்கெட்டை விண்ணிலே செலுத்துகின்றோம். அப்பொழுது பூமியின் ஓடுபாதையில் அது சுழலச் செய்யும் பொழுது அதன் வரிசையில் சுழலுகின்றது.

அதே சமயத்தில் பூமியின் நிலைகள் தென் வடக்கில் சுழலும் போது
1.அந்த சுழலும் தன்மைக்கு இதனுடைய ஈர்ப்பின் வேகத்தைக் கூட்டும் போது அதே ராக்கெட் சுழலுகின்றது.
2.ஆனால் அதனுடைய வேகத்தை குறைத்து பூமியின் சுழல் வட்டத்தில் அதனுடைய சமமான நிலைகள் இருக்கும்போது
3.எந்த ஊரின் நிலையோ அதனின் நிலை கொண்டு அங்கே நிலை கொண்டு அதனைச் செயல்படுத்துகின்றது.

இதை போன்று தான் நாம் எந்த மனித உடலில் இருந்து உணர்வினை ஒளியாக மாற்றி இன்றும் ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலமாக இருக்கின்றனரோ
1.அவர்கள் உணர்வுகளை நம் உடலுக்குள் செலுத்தி இதனின் வலு துணை கொண்டு
2.நம் மூதாதையர்களுடைய உடலை விட்டு பிரிந்து சென்ற ஆன்மாக்களை
3.நாம் இந்த முறைப்படி ஆயிரக்கணக்கானோர் வலு கொண்டு விண் செலுத்துதல் வேண்டும்.

அவ்வாறு விண் செலுத்தினால் அந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் செல்கின்றது பின் உடல் பெறும் உணர்வுகள் கரைந்த பின் அந்த ஈர்ப்பு வட்டத்திலே சுழலத் தொடங்கி விடுகின்றது.

விண் செலுத்திய பின் அந்தந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர் அந்த சப்தரிஷி மண்டலங்களின் பேர்ருள் பேரொளி பெற வேண்டும்… துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெற வேண்டும் என்று ஏங்கினால்…
1.அந்த உணர்வைப் பெற்று இந்த வாழ்க்கையில் வரும் கடும் தீமைகளை கூட மாற்றி
2.அந்த மகரிஷிகளின் உணர்வை நமக்குள் வளர்த்துக் கொள்ளலாம்.

ஏனென்றால் இதற்கு முன் நாம் செய்யத் தவறிய அந்த உணர்வு கொண்டு நாம் ஒவ்வொருவரும் இந்த பௌர்ணமி நாளில் இது மாதிரி தொடர்ந்து உந்தித் தள்ளினால்… இன்னொரு உடலுக்குள் பேயாக நின்று அதனை ஆட்டிப் படைத்து அதற்குப் பின் வெளியில் வந்தாலும்… அவர்களுடைய உணர்வுடன் நம் நினைவினை ஆற்றலை பரப்பப்படும் பொழுது (இன்னொரு உடலுக்குள்) இந்த நஞ்சினைக் கரைத்து விட்டு… “விண் செல்லும் உணர்வினைத் தனக்குள் பெரும் தகுதியை ஏற்படுத்துகின்றது…”

ஆகவே மனிதனாக நம்மை உருவாக்கி நம்மை சீராட்டி தாலாட்டி வளர்த்த குலதெய்வங்களை “இன்னொரு பிறவியின் நிலை அடையாமல் செய்வதே… நம்முடைய தலையாயக் கடமையாகும்…”

அவரவர் வீடுகளில் இருந்தே இதைப்போல இந்த உணர்வினை எடுத்துச் செயல்படுத்த முடியும். ஒரு கூட்டமைப்பாக ஆயிரக்கணக்கானோர் சேர்ந்து எடுத்தோம் என்றால்
1.அவர்களை நாம் துரித நிலைகள் கொண்டு எந்த உடலை விட்டு வெளியில் வந்தாலும்
2.அவர்களுடைய உணர்வு தான் நம் உடலாக இருப்பதனால் நாம் அவர்களை எளிதில் அனுப்ப உதவும்.

ஏனென்றால் இப்பொழுது நாம் சாங்கியத்தில் சுட்ட சாம்பலைக் கங்கையில் அல்லது ஓடும் நீரில் கரைத்தால் பாவம் போய்விடும்… மோட்ச தீபம் ஏற்றினால் அவர் சொர்க்கம் போவார்…! என்று தான் நம்மைச் செய்ய வைத்துள்ளார்கள்.

ஆகவே… காலத்தால் மறைந்த இந்த நிலையை மகரிஷிகளின் அருளால் இதைப் போன்ற மூதாதையர்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து அவர்களை பிறவியில்லா நிலை அடையச் செய்வோம்.

அவர்கள் அங்கு ஒளி நிலை பெற்றால் இந்த உணர்வு கொண்டு நாம் இந்த பூமியில் வரும் தீமைகளை அகற்றிவிட்டு நாம் இந்த வாழ்க்கையில் மகிழ்ந்து வாழவும் மகரிஷிகள் அருள் வட்டத்தில் வாழ்ந்து… இங்கு வரும் தீமைகளில் இருந்து விடுபட்டு மகிழ்ந்து வாழ முடியும்.

1.இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல… உயிரே நமக்குச் சொந்தம்
2.ஆனால் இப்பொழுது உயிருக்கும் நமக்கும் சொந்தம் இல்லாத நிலைகளில் இருக்கின்றோம்.
3.ஆகவே உயிரின் தன்மையை நாம் சொந்தமாக்க வேண்டும்

ஆக நாம் எதை எண்ணுகின்றோமோ அதனை வைத்து இந்த உயிர் உடலை இயக்குகின்றது. ஆகையினால் “உயிர் தான் நமக்குச் சொந்தம்” என்று யாரும் நாம் எண்ணவே இல்லை.

அவனால் உருவாக்கப்பட்டது தான் இந்த உடல் என்ற நிலையில் நாம் அவனை வேண்டி நாம் எதை எண்ணி எடுக்கின்றோமோ அதை உருவாக்குகின்றது.

ஒருவருக்கு நாம் கடுமையாகத் தீங்கு செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றோம். அதை உயிர் உருவாக்குகின்றது… அந்த உணர்வை உடலுக்குள் பரப்புகின்றது. அதையே (தீமையை) செய்யும்படி செய்கின்றது.

ஒருத்தருக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றோம்… அந்த உணர்வின் தன்மை இந்த உடலை இயக்கிக் காட்டுகின்றது.

ஆனால் தீமையின் உணர்வை நாம் பெற வேண்டும் என்று எண்ணி விட்டால்
1.அந்தத் தீமையின் உணர்வின் அணுக்கள் நமக்குள் விளைந்து
2.நம் உடலை அழுகச் செய்து நம்மை வேதனைப்படச் செய்கின்றது‌.

யார் வேதனைப்பட வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அந்த வேதனையின் உணர்வின் அணுக்கள் நமக்குள் விளைந்து அந்த வேதனையையே நமக்குள் உருவாக்கி விடுகின்றது.

இதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொல்வது. ஆகவே நாம் எதுவாக ஆக வேண்டும் என்று சிந்தித்துச் செயல்பட வேண்டும்.