ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 24, 2025

மூகாம்பிகையில் வந்து நாம் எந்த ஞானத்தைப் பெற வேண்டும்?


1.கோலமாமகரிஷியின் அருள் சக்தியைப் பெறுவோம்
அவரவர்கள் அம்மா அப்பாவை மனதில் எண்ணி, மிகவும் சக்தி வாய்ந்த சப்தரிஷிகளின் அருள்சக்தி, கோலமாமகரிஷி அவர் வளர்த்த இச்சக்தி, நம்முன் படர்ந்து கொண்டிருப்பதை நாம் கவர்ந்து, நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா, என்று நமக்குள் இணைப்போம்.

அவ்வாறு, நமக்குள் இணைத்து, அந்தத் தத்துவ மகரிஷி, உலகவியல்களை எவ்வாறு கண்டுணர்ந்தார்? அவருக்குள் எப்படி விளைய வைத்தார்? அதைப்போன்று, அந்தக் கோலமாமகரிஷி, அவருக்குள் விளைந்த, அருள்ஞான வித்தை உங்களில் பதிவு செய்து, உண்மையான மெய் உலகில், நாம் அவர்கள் சஞ்சரித்த அவ்விடங்களில் நாமும் சென்றடைய இது உபயோகமாக இருக்கும்.

ஆகவே, இங்கே கொல்லூரில் வந்து நாம் தியானிக்கிறோம். ஏனென்றால், அகஸ்தியன் சந்தர்ப்பத்தால் தனக்குள் கண்டுணர்ந்தான். ஆனால், கோலமாமகரிஷியோ
1.“அழியாப் பெருவாழ்வு என்ற நிலை பெற வேண்டும்”,
2.“அவர் எண்ண வலுவால், தனக்குள் நுகர்ந்தறிய வேண்டும்”,
3.“இன்னொரு சரீரம் வேண்டியதில்லை” என்ற வலுவான எண்ணத்தை அவர் கொண்டு,
4.“என்றும் அந்த சப்தரிஷிகளுடன் நாம் இணைந்திடல் வேண்டும்” என்று தன் எல்லையை வகுத்து
5.அவர் தன் வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி, மெய்ஞானிகளின் உணர்வைத் தனக்குள் வளர்த்து, அவர் விண்ணுலகம் சென்றார், மிகக் குறுகிய காலங்களில்தான்.

இவையெல்லாம், 3000 ஆண்டுகளுக்குள் நடந்த நிகழ்ச்சி. ஆகவே சமீபத்தில் அவருக்குள் விளைந்த உணர்வுகள், அவர் எங்கெங்கு தவமிருந்தாரோ, அந்த அலைகளின் தன்மை இங்கே படர்கிறது.

அதை நாம் பருகுவோமென்று பிரார்த்தித்து, உயிரான ஈசனை வேண்டி, நாம் அனைவரும் தியானிப்போம்.

2.கொல்லூருக்கு நாம் எதற்கு வருகிறோம்...? 
நாம் மனிதனாக இருக்கிறோம். கூட்டாக இருக்கிறோம். கூட்டாக இருக்கும்போது, எதைப் பெறுகின்றோம்? அந்த மெய் ஒளியை எப்படிப் பெற வேண்டுமென்று எண்ணுகிறோம்?

மெய்வழி எப்படி என்ற நிலையை, அறிய முற்படுகிறோம். அப்பொழுது இங்கேயும் தேடி வருகிறோம். நாம் நமக்குள் தீமைகளை நீக்க வேண்டும், மெய்யுணர்வைப் பெறவேண்டுமென்ற நிலைக்குத்தான், இங்கே தேடி வருகிறோம்.

இதைப்போலத்தான் கோலமாமகரிஷி அவர்கள் கண்டுணர்ந்த நிலைகளை,  துருவத்தை உற்று நோக்கினார்கள். அதன் வழிகளில் துருவத்தின் ஆற்றல் பெற்ற, அந்த துருவ மகரிஷியின் உணர்வுகளை இவர்கள் அறிகின்றார்கள். அதன்வழி கோள்களைப் பார்க்கின்றார்கள், இல்லையென்றால் இவர்கள் அறிய முடியாது.

நாமும் இந்த உணர்வை நுகரப்படும்போது, அகஸ்தியன் அணுவின் ஆற்றலை கோள்களக மாற்றிச் சென்றபின், இந்த உணர்வின் அலையை, நாம் அதனுடன் தொடர்பு கொண்டு வருவதற்குத்தான், எல்லாவற்றையும் கலந்து, ஒவ்வொரு உணர்வையும் கொடுக்கிறோம்.

துருவத்தை நுகர்ந்து பழகிக்கொண்டால், அதனின் ஆற்றலில், விண்ணின் ஆற்றல்களை நாம் பார்க்க முடியும்.

விண்ணின் ஆற்றலைப் பார்க்க முடியுமென்றால், நம் உணர்வின் தன்மை, சப்தரிஷி மண்டலத்தின் உணர்வின் தன்மையுடன் நாம் ஒன்றுகிறோம்.  அப்பொழுது, இந்த உடலைவிட்டு நாம் சென்றோமென்றால் நமக்கு இருப்பிடம் அதுதான். அதை எல்லையாக வைக்கிறோம். 

யாம், குறைந்தது ஆறு வருடங்கள் இங்கே இருந்தோம். முதலில், 1½ வருடம் இங்கே வந்து போய்க் கொண்டிருந்தோம். பின் இங்கே தங்கியிருந்த காலங்களில்தான், பாக்கி விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. இவைகளெல்லாம் சொல்வது, உங்களுக்குள் பதிவு செய்வதற்குத்தான்.

ஏனென்றால் அவர் பெற்ற உணர்வுகள் இங்கே இருக்கிறது. இருந்தாலும், இங்கு வந்து உபதேசிக்கும் போது, எளிதில் நீங்கள் இதைப் பெற முடியும்.

நாம் இங்கிருந்து சொல்கிறோம் என்றால், இந்த உணர்வுகள் இங்கே பதிந்து இருக்கின்றது. அப்படி அவரைப் பற்றி சொல்லும் போது, உங்களுக்குள் பதிவாகின்றது. மூலமாகின்றது.

நஞ்சுக்கு மிக சக்தி வாய்ந்த நிலை உண்டு. ஆனால், மனிதனுக்குள் உள்ள மிகச்சக்தி வாய்ந்த உயர்ந்த எண்ணத்தைக் கொண்டு, அந்தச் சக்தியை நீக்க முடியும். இதைப் பயன்படுத்தவேண்டும்.

மனிதனுக்குள் விளைந்த சக்தி, ஆறாவது அறிவு, மிக சக்தி வாய்ந்தது. ஆனால் நஞ்சுக்கோ மிக சக்தி உண்டு. நஞ்சின் சக்தி மிக அதிகமாக இருப்பினும், மனிதனின் ஆறாவது அறிவின் சக்திக்கு, எல்லாமே அடிமை. அதைச் சீராகப் பயன்படுத்தினால், நஞ்சினையும் நாம் ஒடுக்க முடியும்.

அணுகுண்டை உருவாக்கியவனும் மனிதன்தான். அதே சமயத்தில், அதை அடக்கி வைத்து வெடிக்கச் செய்வதும் மனிதன்தான். இதைப்போல அன்று அரசனாக இருந்த “கோலமாமகரிஷி” தன் தவத்தின் நிலைகள் வரப்படும்போது, இவன் செய்த தவறுகள் எத்தனையோ. அவை அனைத்தும் இவனுள் அலைகளாக வருகின்றது.

இவர் யாக வேள்விகள் நடத்தப்படும்போது, பல அசுரர்கள் பல நிலைகளில் இடையூறு செய்தார்கள் என்று காவியத்தில் சொல்வார்கள். அதற்காகத்தான், இந்தக் கோவிலில் ஒரு பக்கம் முருகனும், இன்னொரு பக்கம் வீரபத்திர சாமியும், காவல் தெய்வமாக இருக்கிறார்கள்.

ஆக, வலுவான என்ணங்கள் கொண்டு, நஞ்சினை நீக்கிப் பழகவேண்டும். இந்த தத்துவமெல்லாம் புரிந்துவிட்டது அல்லவா! முருகன் காவல் தெய்வமாக இருக்கிறார் என்று சொன்னால், அர்த்தம் என்ன? கோவிலில் ஒரு பக்கம் முருகன், மறு அக்கம் வீரபத்திரசாமி.

ஆறாவது அறிவின் (முருகன்) துணை கொண்டு, தனக்கு இணையாக, வலுவின் (வீரபத்திரன்) துணை கொண்டு, எதற்குமே அஞ்சாநெஞ்சன், துணை கொண்டு வெல்ல வேண்டும்.

ஆகவே உயர்ந்த நிலைகள் எதுவோ, அதைத்தான் அவர் கைப்பற்றினார் என்ற நிலையும் அதிலே கண்டுணர்ந்த சக்திதான் இங்கே ஆறாவது அறிவு, என்று தெளிவாகக் காட்டினார். இங்கே கோவிலில் பார்த்தால், அதுதான் இருக்கும்.

இதைப்போல அரசனாக இருக்கும்போது, பல கொடூரச் செயல்கள் செய்தது இங்கே பதிந்திருக்கிறது. தன் ஆன்மாவில் வந்து, பல எதிர்ப்பு சக்திகள் கொடுக்கிறது.

தவம் என்பது உயிர். யாகம் என்பது, உயிரின் நெருப்பில், தன் எண்ணத்தால் விண்ணின் ஆற்றலைப் போடும்போது, இந்த அசுர குணங்கள் தனக்குள் வராது தடுப்பது எவ்வாறு? என்பதுதான், அவர் சொன்ன சாஸ்திர விதிகளில் ஒன்று.

3.மூகாம்பிகையில் வந்து நாம் எந்த ஞானத்தைப் பெற வேண்டும்?
மூன்று சக்தியின் நிலைகள் – வெப்பம், காந்தம், விஷம். நமக்குள் ஈர்க்கப்பட வேண்டியது எது? நம்முடைய மனதில், ஞானம் பெற வேண்டியது எது? என்கிற நிலையை அறிவற்குத்தான், எமது குருநாதர் இங்கே அழைத்துவந்தார். 

இங்கே வந்து அமர்ந்து தியானிக்கும்போதுதான், அதற்கான விளக்கங்கள் கிடைப்பதற்கும், மனிதனின் உணர்வுக்குள் என்ன செய்கிறது? அது எதற்காக வேண்டி, கோலமாமகரிஷி செயல்பட்டார் என்ற நிலையும், தெரிய வந்தது.

அவரின் செயலாக்கத்தில், மனிதனுக்குள் சேர்ந்த உணர்வுகளை ஆட்சி புரிவதற்காக, பலகாலம் தனக்குள் பதிந்துகொண்ட நிலைகளை, இது பிளக்க, ”துருவத்தின் நிலைகளை” அதிகமாக எடுத்துத் தவமிருந்தார், கோலமாமகரிஷி.

துருவத்தின் ஆற்றலைத் தனக்குள் பருகும்போதுதான், தான் வளர்ந்து வர வர, இவர் வயதும் முதிர்ந்து விடுகிறது. அதிலிருந்து இவர் ஆன்மா வெளிவந்தபின், அவர் அதற்குத் தகுந்த உடலாக, அன்றைக்கு “ஆதிசங்கரர்” உடலைத் தேர்ந்தெடுத்தார்.

மற்றவர்கள் உடலின் இச்சை கொண்டு, ஆதிசங்கரரை கங்கையிலே மூழ்கடிக்கும் போது, இந்த உடலின் பற்று இல்லாதபடி, எதைப் பற்றியதோ, ஆதிசங்கரர் உடலுக்குள் சென்ற கோலமாமகரிஷியின் உயிரான்மா, விண்வெளி செல்கிறது. ஆதிசங்கரரின் உடலிலிருந்துதான் விண் சென்றது.

ஆகவேதான், எமது குருநாதர் எம்மைக் காசிக்குப் போகச் சொன்னார். அந்த காசியிலே இருக்கப்படும்போது, அன்று, ஆதிசங்கரருக்கு ஏவல் செய்து அவருக்கு வயிற்றுவலி வரவைத்து, ஒரு விநாயகர் கோவிலில் “அர்ச்சனை, அபிஷேகம், யாகங்கள் செய்ய வேண்டும் என்றும்,  வேள்விகள் செய்தால்தான், உன்னுடைய வயிற்றுவலி நீங்கும்” என்றும், அதிலிருந்து “நீ யாகத்தைச் செய்யவில்லையென்றால் தப்பமுடியாது” என்று துவைதவாதிகள், ஆதிசங்கரரை மிரட்டிய நிலைகளை எமக்குக் காண்பித்தார், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

ஏனென்றால், ஆதிசங்கரர் அத்வைதத்தைப் பற்றிப் பேசுகிறார். சூட்சும நிலைகள் எப்படி இயக்குகிறது? எந்த மணத்தை நுகர்கின்றாயோ, அது ஞானம். அது சூட்சமத்தில் உனக்குள் எவ்வாறு இயங்குகின்றது? என்ற நிலையையும், வசிஷ்டாத்வைதத்தையும் அங்கே எடுத்துரைக்கிறார்.

“வசிஷ்டாத்வைதம்” என்பது, தான் கவர்ந்து கொண்ட சத்து, தனக்குள் மறைந்து எவ்வாறு இயங்குகிறது என்ற நிலை தான்.

இவர் அத்வைதத்தை எடுத்தாலும், நீ கவர்ந்து கொண்ட “வசிஷ்டாத்வைதம்”, உனக்குள் எப்படி இயங்குகிறது? என்று உணர்த்தினார்.

அவ்வாறு சொல்லப்படும்போதுதான், அன்று அரச காலங்களில் துவைதத்தை வைத்து வணங்கியவர்கள், சிலையை வைத்து வணங்கி, யாக வேள்விகளைச் செய்யக் கூடியவர்கள் அனைவரும் சேர்ந்து, இவர் யாகம் வளர்த்து, மற்ற வேள்விகளைச் செய்தால்தான், உண்மையான பக்தி என்று அவர்கள் சொல்கிறார்கள்.

ஆதிசங்கரர், இம்முறையைச் செய்வது தவறு என்று வாதிட்டார். உண்மையான நெருப்பு உயிர் என்று உபதேசித்தார். ஆக இது வசிஷ்டாத்வைதம். தனக்குள் நெருப்பின ஈர்ப்பான அந்தக் காந்தத்தால் கவரக்கூடிய நிலையையும், கவர்ந்து கொண்ட நிலையையும் என்றார்.
     
1.நாம் எதை எண்ணுகின்றோமோ,
2.அதனின் உணர்வு நமக்குள் கவரப்படும்போது, தன்னுள்,
3.தனக்குத் தெரியாமலே அதன் இயக்கங்கள் இருக்கும்... "வசிஷ்டாத்வைதம்" என்ற நிலையை அவர் உணர்த்துகின்றார்.

இவ்வாறு அந்த நிலையை உணர்த்தினாலும், “இது உண்மையல்ல” இந்தச் சிலையிலிருந்துதான் நீ எல்லா நிலைகளும் பெறுகின்றாய். இந்தச் சக்தியை, இந்த தெய்வத்தின் நிலைகளிலிருந்துதான் நீ  பெற முடிகின்றது” என்று இவர்கள் சொல்கிறார்கள்.

ஆதிசங்கரர், இதுவல்ல உண்மை,
1."உயிர் நெருப்பு”
2.புறத்தீயிட்டு நீ வேகவைப்பது உன்னுடைய இச்சைக்கு இருக்கும். இந்த இச்சையை எண்ணினால், “உனக்குள் எரிக்கும் சக்திதான் வரும்”.
3.“தீமைகளினுடைய நிலைகளைத்தான் உனக்குள் வளர்க்க முடியும்”,
4.“இந்த நல்ல ஜீவனுள்ள அணுக்களை இழக்கின்றாய், அழிக்கின்றாய்”
5.“நல்ல வாசனையான பொருட்களைப் போட்டு, நீ அழிக்கின்றாய்”.

ஆக, உயிரான நிலைகளில், உன்னுள் தீமையான உணர்வுகளைப் போட்டு உனக்குள் பொசுக்கு என்று விவாதிக்கிறார், அன்று ஆதிசங்கரர்.

“உயிர்களைப் பலியிடப்படுவது யாகம்” அதிலிருந்து உணர்வுகளை வெளிப்படுத்தி எடுப்பது தனக்குச் சாதகம் என்ற நிலைகளில், அந்த இடத்தில் வாக்குவாதம், பட்டிமன்றம் நிறைய நடக்கிறது.

காசிக்குச் சென்று கங்கைக்கரையில், விநாயகர் கோவிலில் அமர்ந்து யாம் தியானிக்கும்போது, இவருள் இருந்து என்ன செய்கிறது என்பதை உணர முடிந்தது.

இவர்களுக்குள் வாதிக்கும்போது, ஆதிசங்கரரை “நாஸ்தீகன்” என்ற நிலைகளில் பட்டம் கட்டினார்கள். இதனுடைய உண்மை நிலைகளைத் தெரிந்து கொண்டபின் தான், யாம் அங்கு சென்றோம்..

அவ்வாறு பட்டிமன்றம் நடக்கும்போது “இது உண்மையில்லை”, இது உன்னையும் “நாஸ்தீகனாக்கும்” எந்த மனிதன் உணர்வைக் கொண்டு நீ எடுத்தாயோ, அது உன் சொல்லைக் கேட்போரையும், நாஸ்தீகனாக்கும் என்ற நிலைகளில், ஆதிசங்கரரை நாஸ்தீகன் என்று பட்டம் சூட்டினார்கள்.

1.“புறத்தீயிட்டு, எந்த நிலைகளில் நீ வேக வைக்கின்றாயோ” இங்கே பொருட்கள் கருகுகின்றது. நறுமணம் அழிகின்றது.
2.இதனுடன் நெருப்பில் இடப்படும்போது அதனின் உணர்வு அங்கே கருக்கப்படுகின்றது.
3.ரோஜாப்பூ போட்டாலும், கருகத்தானே செய்கிறது எந்த நறுமணத்தைப் போட்டாலும் கருகுகின்றது.

ஆனால், உயிரான நெருப்பில், நாம் அந்த நறுமணங்களைப் போடும்போது, இது அலைகளாகப் படருகின்றது. இது வசிஷ்டாத்வைதம். அந்த நறுமணத்தின் தன்மையை நீ கவரப்படும் பொழுது, இந்த உணர்வுகள் உனக்குள் நறுமணமடைகின்றது.

இதை உணர்த்துவதற்கு, கண்ணால் கவரப்படும் உணர்வுகளுக்குக்  காட்சியாக வைத்ததுதான். 
1.ஆனால், எண்ணத்தால் எவ்வாறு எடுப்பது? என்ற அளவில் 
2.அங்கே பட்டிமன்றம் நடக்கின்றது... அந்த அளவுக்கு வாக்குவாதம் நடக்கிறது. 

அங்கே தியானத்தில் அமரும்போதுதான், குருநாதர் எமக்கு இதை ஏல்லாம் உணர்த்திக் காட்டினார்.