
குரு என்னை வளர்த்தது போல் தான் “உங்களையும் இப்போது வளர்த்துக் கொண்டு வருகின்றேன்…”
மனித உடலில் இருந்து தீமையான உணர்வுகளை மாற்றி உணர்வினை ஒளியாக
மாற்றி விண் சென்றார்கள் மெய் ஞானிகள். அதைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து இந்த
உணர்வின் அலைகளை நமக்கு முன் பரவச் செய்து கொண்டு தான் இருக்கின்றது.
உதாரணமாக நெருப்பின் அருகில் நாம் சென்றால் நெருப்பின்
தணல் அருகில் வராதபடி நம்மை ஒதுக்கிவிடும். அதைப் போல
1.நெருப்பை ஒத்த மனிதர்கள்…
2.நெருப்பை
ஒத்த அந்த
உணர்வுகளை வளர்த்துக் கொண்டவர்கள் மெய் ஞானிகள்.
ஏனென்றால் இன்னொரு உடலின் ஈர்ப்பிற்குள் செல்லாதபடி உயிரின் ஈர்ப்புடன் ஒன்றி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி இன்றும் அவர்கள் நிலையாக இருந்து கொண்டுள்ளார்கள் மகரிஷிகள்.
பிறவியற்ற நிலைகள் அடையும் அந்த ஆற்றல்களை நுகர்ந்திருந்தார்கள்.
1.அதை நாம் பருக வேண்டும் என்றால் “நமக்கு அந்தச் சக்தி வேண்டும்…”
2.அதற்கு என்ன செய்ய
வேண்டும்…?
கடந்த காலங்களில் அன்று ஆண்ட அரசர்கள் என்ன
செய்தார்கள்…? மாற்று அரசர்கள் இந்த அரசைக் கைப்பற்ற… அந்த அரசனுடைய குழந்தைகளை அது அரசனாகும்
நிலைகளுக்கு வரும் பொழுது… சூழ்ச்சியால் விஷத்தைக் கொடுத்துக் கொன்றிடும் நிலை வந்துவிடும் என்று தெரிந்த பின்பு…
1.அந்தக் குழந்தை… தாயின் கருவிலே கர்ப்பத்தில் இருக்கும் பொழுதே
2.விஷத்தை சிறுக சிறுக சிறுகச் சிறுக தலைமுடியில்
தொட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகத் தாய்க்குக் கொடுத்து “குழந்தைக்கு விஷத்தை ஏற்றுவார்கள்…”
3.பிறந்த பின்னும் பாலூட்டும் பொழுதும் சிறுகச் சிறுக விஷத்தை ஏற்றுக் கொள்ளும் நிலையைச் செய்து “குழந்தைக்கு விஷத்தை ஏற்றி விடுவார்கள்…”
4.அப்படி ஏற்றி விட்டால் மற்றவர்கள் வேறு எந்த
விஷத்தைக் கொடுத்தாலும் இவர்களை மாய்த்து விட முடியாது.
அதே சமயத்தில் இந்த விஷத்தை உணவாகக் கொண்டபின் இந்த உணர்வுகள் அனைத்தும் குழந்தையின் உடலிலே வீரியம் கொண்டதாக மாறி விடுகின்றது. அதனால் தான் கடந்த கால அரசர்களுக்கு வலு மிகவும் அதிகம்.
1.அந்த விஷத்தின் தன்மை கொண்டு இவர்கள் வளர்ச்சி பெற்றது போன்று
2.ஞானிகளும் மகரிஷிகளும் தனக்குள் வளர்த்துக் கொண்ட
சக்தியை குருநாதர் வளர்த்துக் கொண்டார்.
குருநாதர் எனக்கு இதை நேரடியாகக் கொடுக்காதபடி அதைப் புரிந்து கொள்வதற்காக பைத்தியம் போன்று அவர்
இருக்கப்படும் பொழுது அவருடைய காலிலே வேஷ்டிகளைக் கிழித்துக்
கட்டுவார்… வேறு நிறம் கொண்ட சில துணிகளையும் கட்டிக் கொள்வார்.
ஆனால் ஏன் இவ்வாறு செய்கிறார்…? என்று எனக்குத் தெரியாது. ஏனென்றால் அவர் பைத்தியம் போன்று தான்
நடித்துக் கொண்டிருந்தார்.
எதை எடுத்தாலும் ஒரு நிமிடம் என்னிடம் நன்றாகப் பேசுவார்… ஒரு நிமிடம் பைத்தியக்காரர் போன்று பேசுவார். அப்போது என்னுடைய எண்ணமும் அப்படித்தான் இருந்தது.
ஆனால் காலிலே கட்டிக் கொண்டு ஒவ்வொரு செடிக்கும் சென்று ஒவ்வொரு
விதமான நிறம் கொண்ட துணிகளை அங்கேயும் கட்டுவார்.
1.அப்பொழுது பரிபாஷையிலே அங்கே ஒன்று சொல்வார்.
2.ஆனால் அந்த பரிபாஷையில் சொல்வது எனக்கு விளங்காது…!
துணியைச் செடியில் கட்டி விடுவார். அதை என்னிடம் காட்டி இவைகளுக்கு யார் சோறு போடுவது…? என்று கேட்பார். யார் சோறு போடுவது…? என்று எனக்குத் தெரியாது… அது சோறு சாப்பிடாது சாமி…! என்று நான் சொல்வேன்.
சோறு சாப்பிடாமல் அது எப்படி வளரும்…? என்று என்னென்னமோ பேசுவார். எனக்கு அப்பொழுது ஒன்றும் புரியாது இப்படி
அவர் சொல்லிக் கொண்டே வந்தபின்… மீண்டும் என்னிடம் தெரியுமா…? என்று கேட்பார்.
தெரியவில்லை…! என்று நான் சொன்னவுடன் இரண்டு உதை கொடுப்பார்.
1.அடி வாங்கும் பொழுது அவருடைய நினைவு வரும்.
2.இப்படித்தான் அவருடைய எண்ணத்தை எனக்குள்
செருகச் செய்தார்.
அவர் உடலை விட்டுச் சென்றார். அவர் காட்டிய உணர்வின்படி அகஸ்தியர் வாழ்ந்த இடங்கள்… முதலில் தலைக்காவிரிக்குச் சென்றேன். அங்கே அகஸ்தியருடைய உணர்வுகள் இருக்கின்றது.
பாகமண்டலம் என்று உண்டு. அங்கே மலை உச்சியிலே தண்ணீரை எவ்வளவு எடுத்தாலும்
குறையாது.
உயரமான மலை… அதற்குக் கீழ் தான் மற்ற எல்லாம் தணிந்து இருக்கின்றது.
ஆனால் மலை உச்சியிலே அந்த நீர் இருக்கக்கூடிய
பள்ளம் இருக்கின்றது. அதிலே தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. எவ்வளவு எடுத்தாலும் குறைவதில்லை.
எங்கிருந்து நீர் அங்கே வருகின்றது…? என்பதை முதன் முதலில் அறிவதற்காக என்னை அங்கே
செல்லும்படி செய்தார் குருநாதர்.
அங்கே தியானத்தில் இருக்கப்படும் பொழுது உயரமான
அந்த இடத்தில் மேலே மேகங்கள் செல்கின்றது. மேகங்கள் செல்லும் பொழுது
1.மலையில் இருக்கக்கூடிய காந்தம் நீர் பசை உள்ள
அந்த மேகங்களைக் கவரும் சக்தி பெறுகின்றது.
2.இதே போன்று சில மரங்களுக்கும் அந்த மேகங்களை
இழுத்துக் கவரும் சக்தி வருகின்றது.
3.மேகங்கள் மரத்தால் இழுக்கப்படும் பொழுது நீரை
அது உணவாக எடுத்துக் கொண்டாலும் மரத்தில் இருந்து மீண்டும் நீர் வடிந்து நீராக
ஓடுகின்றது.
அதனுடைய தன்மைகள் வேறு.
மலையில் அகஸ்தியன் உட்கார்ந்து அவர் ஜெபித்த
உணர்வின் சக்தி காற்றாகப் படர்ந்து செல்லும் அந்த மேகத்தை இழுத்து
1.அதை நுகரச் செய்யும் அந்தச் சக்தி அகஸ்தியன் உட்கார்ந்த இடத்திலே அந்தப் பாறைகளில் பட்டிருக்கின்றது.
2.ஆகையினால் மேகங்கள் மேலே செல்லும் பொழுது கவர்ந்து நீராக
வடிந்து செல்கின்றது.
நாம் இங்கே வீட்டில் சமையல் செய்கிறோம் நீர் ஆவியாகப் போகின்றது. அதன் மீது ஒரு தட்டை வைத்து குளிர்ந்த நீரை மேலே ஊற்றினால் அந்த ஆவி நீராகக் கொட்டுகின்றது.
எந்தச் சத்தின் தன்மையை ஆவியாக மாற்றினோமோ… தட்டை வைத்துக் குறுக்காட்டப்படும் பொழுது நீரை ஊற்றிய பின் ஆவியாகச் செல்வதை நீராக வடியச் செய்கின்றது.
அந்த இடத்திலே மேகமே இல்லை என்றாலும் அந்த
ஞானியின் அருள் சக்திகள்… மணங்கள் பட்டவுடன் குவித்து மேகங்களாக
மாறுகின்றது. மேகங்களாக மாறிய பின் தன் உணர்வின் சக்தியை இழுத்து இதற்குள் உறைந்த பின் நீராக மாறுகின்றது.
குருநாதர் பித்தரைப் போன்று இருந்தாலும் அந்த இடங்களுக்கு நான்
சென்ற பின்
1.குருநாதருடைய உருவம் தெரிகின்றது… அவர் காலில் கட்டிய துணிகள் தெரிகின்றது…
2.அங்கிருக்கக்கூடிய மரங்களிலும் இவர் கட்டிய துணிகள்
தெரிகின்றது.
3.அப்பொழுது குருவின் நினைவு வருகின்றது.
4.முதலில் உடலுடன் அவர் இருக்கும்
போது சொன்ன பரிபாஷையின் நிலைகள் அந்த இடத்திலே எனக்குப் புரியும் நிலை வருகிறது.
5.இந்த நீராக வடியக்கூடிய ஆற்றல் எப்படி…? என்று அங்கே அப்பொழுது நான் அறிய முடிந்தது.
உயிருடன் இருக்கும் பொழுது எனக்கு இதை உணர்த்தவில்லை.
இருந்தாலும் அடி கொடுத்தார். அந்த உணர்வின் நினைவலைகள் வரப்படும் பொழுது “அந்த எண்ணத்தில் வரும் பொழுது புரிகின்றது…” அன்று வாழ்ந்த அகஸ்தியன் ஆரம்ப காலங்களில் விண்ணினுடைய ஆற்றல்
எப்படி நுகர்ந்து எப்படி அவன் பெற்றான்…? என்ற நிலையைக் காட்டுகின்றார்.
அகஸ்தியன் எங்கெல்லாம் சென்றானோ அந்த மலை இருக்கக்கூடிய
பகுதிகளில் இது போன்ற நீர்கள் உற்பத்தி ஆகின்றது. மைசூரிலும் இதே போன்று நீர் நிலைகள் உண்டு… நாழிக் கிணறு என்று சொல்வார்கள்.
மற்ற இடங்களில் நீர் இருப்பதில்லை. ஆனால் அந்த இடத்தில் மட்டும் நீர்
இருக்கின்றது. எடுக்க எடுக்க அங்கு நீர் வந்து
கொண்டிருக்கிறது. எவ்வளவு எடுத்தாலும் எடுத்த அளவுக்கு நீர் வந்து மீண்டும் நிரம்பிவிடும். அது உச்சிமலை… பாறை தான்… வேறு ஒன்றும் இல்லை…!
அன்று அகஸ்தியன் அவன் சென்ற இடங்களில் எல்லாம்… நான் எடுத்துக் கொண்ட ஜெப நிலைகளில்
1.ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு நட்சத்திரத்தின் அலைகள் எப்படி விண்ணிலிருந்து வருகின்றது…? என்ற நிலையை நேர் பார்வை கொண்டு
2.அந்த அட்சரேகையின் சுழற்சி வட்டத்திற்குள் அது வெளிப்படுத்தும்
நிலையும்… அதற்கு மத்தியிலே கோள்கள் எவ்வாறு செல்கிறது…? என்றும்
3.நட்சத்திரங்கள் விண்ணிலிருந்து வரக்கூடிய விஷத்தினை அது முறியடித்து
பிரபஞ்சத்திற்குள் தணிந்த அலைகளாக வரும் பொழுது
4.மத்தியிலே செல்லும் பொழுது ஒவ்வொரு கோளும் இந்த சக்தியை தனக்குள் நுகர்ந்து
எப்படிச் செயல்படுகின்றது…?
5.செயல்பட்ட பின் ஓன்றுடன் ஒன்று கலந்து இந்த உணர்வின் சக்தி எப்படி மாறுகின்றது…?
6.அது வெளிப்படுத்தும் சக்தியை அதற்கடுத்துக் கீழ் வட்டங்களில் இருக்கும் மற்ற கோள்கள்
இதிலிருந்து வருவதை அது எப்படிக் கவர்கின்றது…?
அதைப் போல சூரியனுக்குள் வரப்படும் பொழுது ஒன்று
இங்கேயும்… ஒன்று அங்கேயும்… ஒன்று இங்கேயும் என்று இதே மாதிரி நட்சத்திரத்தின் நிலைகள் ஒன்றன்
பின் ஒன்றாக மாறி இருக்கும் நிலைகள் கொண்டு அது எவ்வாறு இருக்கிறது…? என்ற நிலையை அவர் உணர்ந்தார்.
அவர் அமர்ந்த இடத்தில் குருநாதர் காட்டிய நிலையில் நானும் அங்கே அமரப்படும்போது
விண்வெளியின் ஆற்றலும் மற்ற பிரபஞ்சத்தின் இயக்கமும்
எல்லாமே அறிய முடிந்தது.
ஆதியிலே இதையெல்லாம் அறிந்தவன் அகஸ்தியன். அவன் நுகர்ந்த உணர்வின் தன்மையை அங்கே அமர்ந்து நானும் கண்டேன். அந்தச் சக்தி வாய்ந்த நிலைகள் வரப்படும் பொழுது குரு பலத்தால் அறிய முடிந்தது.
அன்றைய அரசர்கள் விஷத்தின் தன்மையைச் சிறுகச் சிறுகச் சேர்த்து அதற்குப்பின் மற்ற விஷங்களை
எடுத்துக் கொண்டாலும் அது பாதிக்காத வண்ணம் எப்படிச் செயல்பட்டார்களோ… அதைப் போன்று தான்
1.மிக மிகச் சக்தி
வாய்ந்த ஞானிகளை அவருடைய சக்திகளை நாம் லகுவில் மதிப்பிட முடியாது.
2.காரணம் சாதாரண மக்களின் பிடியில் சிக்காதபடி அவர்கள் விண்ணுலகம்
சென்றவர்கள்.
3.அவ்வளவு சக்தி வாய்ந்த நிலைகள் விஷம் மற்றொன்றை எப்படி வீழ்த்துகின்றதோ அதைப் போன்று
4.மகா ஞானிகள் தீய விளைவுகளைச் சுட்டுப் பொசுக்கக் கூடிய ஆற்றலைப் பெற்றவர்கள்.
அவர்களுடைய உணர்வுகளை நாம் பெற வேண்டும் என்றால் இந்தச் சாதாரண
மனித வாழ்க்கையில் இருக்கும் பொழுது
1.நம்முடைய நினைவலைகளைச் சுத்தமாகவே மாற்றிவிடும்.
2.நம்மைச் செயலற்றதாக ஆக்குமே தவிர அதிலிருந்து பருகும் நிலையும் அற்றுப் போய்விடும்.
3.ஆகையினால் மனித வாழ்க்கையில் நாம் சிறுகச் சிறுக அதை எடுத்து வளர்க்க
வேண்டும்.
எப்படி அரசர்களுக்கு விஷத்தைச் சிறுக
சிறுகக்
கொடுத்து அதைத் தனக்குள் சேர்க்கும் படி செய்து பெரும் கொண்ட
விஷங்களைக் குடித்தாலும் தன்னைப் பாதிக்காத வண்ணம் எப்படிச் செயல்படுத்தினார்களோ அதைப் போலத் தான் குரு காட்டிய நிலையில் அதைச் செயல்படுத்த
முடியும்.
முதலிலே அவர் எனக்கு இதை உணர்த்தும் பொழுது “வேறொரு நிலைகளாகத் தான்” உணர்த்தினார். பின் சிறுகச் சிறுக எண்ணத்தின் ஏக்கத்தை அதை நிலைப்படுத்தச் செய்து அகஸ்தியன் சென்ற மலைப் பகுதிகளுக்குச் சுற்றச் செய்தார்.
அங்கே சுற்றும்
போது பல கஷ்டங்களும் இன்னல்களும் என்னைத் தாக்கும் நிலை வரும் பொழுது அங்கே அமைதி
கொண்டு அமர்ந்து அந்த ஞானிகள் உணர்வை நான் எடுக்கப்படும் பொழுது தான் விஷத்தின்
தன்மை முறிக்கும் அகஸ்தியன் உணர்வை நான் நுகர்ந்து “துன்பத்தைத் துடைக்கும் உணர்வுகளாக வேதனைகள் அகற்றப்பட்டு… மெய் ஒளியைக் காணும் ஆற்றலாக எனக்குள் பெருகி வந்தது…”
அப்படி எனக்குள் பெருகிய நிலைகளைத் தான்
1.நீங்கள் துன்பம் என்று வரும் பொழுதெல்லாம் உங்களுக்குள் உபதேசமாகச் சிறுகச் சிறுகச் சொல்லி வருகின்றேன்
2.அதைப் பெற வேண்டும் என்று எந்த அளவுக்கு ஏக்கத்தில் இருக்கின்றீர்களோ அதன்
வழி தான் உங்களைச் சுவாசிக்கச் செய்வது.
3.சுவாசித்த உணர்வுகள் சிறுகச் சிறுக உங்கள்
உடலில் வளரத் தொடர்கின்றது.
குரு என்னை வளர்த்தது
போல் தான் “உங்களையும் இப்போது
வளர்த்துக் கொண்டு வருகின்றேன்…”