ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 22, 2015

குருவின் துணையால் விண்ணின் ஒளியை அடைவோம்

கேள்வி:
சமீப காலத்தில் நம் சற்குருதேவர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரைத் தவிர யாரும் சப்தரிஷி மண்டல அலையுடன் கலக்கவில்லை என்று நீங்கள் (ஞானகுரு) சொல்லியிருக்கின்றீர்கள்.

நம் தியானவழி அன்பர்கள் பல ஆயிரக்கணக்கானோர் அவர்கள் மூதாதையர்களின் உடலை விட்டுப்பிரிந்த உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று தியானிக்கின்றார்கள்.

அவர்கள் எல்லோரும் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்துவிட்டார்களா? எப்பொழுது கலப்பார்கள்?

ஞானகுருவின் பதில்:
இப்பொழுது நம் குரு அருளால்தான் ஒளி சரீரத்தை ஆக்குகிறோம். அவருக்குப் பின் யாரும் போகவில்லை என்றால் குரு அருளைக் கொடுத்துத்தான் ஒளி நிலை பெறச் செய்கிறோம்.

அதாவது, அவர் உணர்வின் துணை கொண்டுதான் அங்கே சப்தரிஷி மண்டலத்திற்கு அனுப்புகிறோம். அந்த நிலை பெறச் செய்வதற்குத்தான் மார்க்கத்தைக் காட்டினார் குருநாதர்.
அந்தச் சக்தியைக் கூட்டி அங்கே அனுப்புகிறோம்.
போகும் பாதையை நாம் அறிந்து கொள்கிறோம்.

ஏனென்றால், ஆதிசங்கரரும், கோலமாமகரிஷியும் விண் சென்றார்கள். அவருடைய சீடர்கள் கொண்டு வந்த பிற்பாடு பக்தி மார்க்கத்தில் இது மறைந்து விட்டது.

துவைதம் என்ற நிலைதான் இருந்தது. அத்வைதம் துவைதமாக ஆக வேண்டும் என்று ஆதிசங்கரர் சொன்ன நிலையை துவைதம் ஒன்றிலே மட்டும் தான் இருக்கின்றார்கள்.

ஆக, எண்ணத்தை உணர்வாக உடலாக மாற்றிக் கொண்டேதான் இருக்கின்றார்கள். இதிலிருந்து மீளும் நிலை இல்லாது (ஒளியாக மாற்றும் நிலை இல்லாது) செய்துவிட்டார்கள்.

சூட்சம நிலைகள் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக ஆகும் மார்க்கங்கள் காலத்தால் மறைந்தே விட்டது. இப்பொழுது நம் குருநாதர் வந்த பிற்பாடுதான் அதை நாம் ஏற்கும் நிலைகள் வருகிறது.

உங்கள் மூதாதையர்களை விண் செலுத்தவில்லை என்றால் பின் நீங்கள் போகவே முடியாது.

உணர்வின் சரீரம் கொண்ட நாம் அதைப் பெறச் செய்வதற்குத்தான் இதைச் செய்தது. நம் குருநாதர் போன பிற்பாடு அவர் அருள் கொண்டு போய்க் கொண்டே இருக்கிறோம் அல்லவா.

ஆகவே, காலை துருவதியானத்தில் நாம் அடிக்கடி இந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று வலுவைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.
பின், இந்த உடலை விட்டுப் பிரிந்து சென்ற மூதாதையர்களான குல தெய்வங்களின் உயிராத்மாக்கள் சப்தரிஷி மண்டலங்களில் இணைய வேண்டும் என்று இந்த உணர்வைக் கூட்ட கூட்ட
நாம் காலையில் இதைப்போல துருவதியானம் செயல்படும்போது
அவர்கள் உணர்வு நமக்குள் இருப்பதனால்
எளிதில் சப்தரிஷி மண்டலத்தில் அடையச் செய்து
அந்த ஆன்மாக்களை அனுப்பி விடலாம்.

இதில் நீங்கள் விண் செலுத்தியது உங்களுக்குள் அந்த உணர்வு வரும்.

அவர்கள் சொர்க்கம் அடைந்த அந்த உணர்வினை உங்களுக்கு தெளிவாகக் கூற நான் சொர்க்கத்தில் இருக்கிறேன் என்ற இந்த உணர்வுகளை கனாக்களில் வந்து சொல்லவே சொல்வார்கள். சிலருக்கு அது தெரியும்.

ஏனென்றால் உங்கள் உடலின் உணர்வுக்குள் ஆசை என்ற உணர்வு என்ற உணர்ச்சியால் அறியச்செய்யும் தன்மை உண்டு.

இதைப்போல உங்கள் மூதாதையர் யாராவது சொர்க்கம் அடைந்துவிட்டால் அவர்கள் உணர்வு உங்களுக்குள் இருந்தால் இந்த ஆன்மா இன்னொரு உடலைவிட்டு வந்தபின்
“என்னையும் நீ அனுப்பு”. என்ற இந்த உணர்வு கொண்டு
உணர்ச்சியால் ஓதி இயக்கப்பட்டு அதை நினைவு கூர்ந்து
அவர்களையும் விண்ணுக்குச் செலுத்தலாம்.

இதுதான் நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய விண் செல்லும் மார்க்கமும் விண் செலுத்தும் மார்க்கமும்.