ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 20, 2015

மனிதன் முழுமை அடையும் மார்க்கத்தைக் காட்டினார் நமது குருநாதர்

ஒரு பகைமையான உணர்வுகளை நுகரப்படும்போது அந்த உணர்ச்சிகள் நம்மைத் தாக்கி நம் நல்ல குணங்களை இயக்கவிடுவதில்லை.

தீமையான உணர்வின் அணுக்கள் அது உருவாகிவிட்டால் நம் உடலுக்குள் உள்ள நல்ல அணுக்களின் நிலைகள் சுருக்கமாகிவிடுகிறது. நல்ல அணுக்கள் சுருங்கிவிட்டால் தீய அணுக்கள் வலிமை பெறுகிறது.

தீய அணுக்களின் வலிமை அதிகமாகும்போது அதனின் செயலாக்கங்கள் எதுவோ அந்த அமிலங்கள் உடலிலே ப்டரப்படும்போது நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட இந்தத் தசையின் பாகம் கரைகின்றது.

கரைந்துவிட்டால் உடல் உறுப்புகள் குறைகின்றது. அதன் உணர்வலைகள் ஒவ்வொன்ரும் இந்த உணர்ச்சிகள் வரும்போது வேத்னை என்ற நிலையில் சோக ஒலிகளை எழுப்பி அந்த உணர்வின் அதிர்வாக நமக்குள் விளையைத் தொடங்கும்.

இந்த வேதனைப்பட்ட உணர்வை சூரியன் காந்த சக்தி கவர்ந்தால் அதன் உணர்வு கொண்டு நமக்குள் வேதனை ஒலிகளை எழுப்பி
நமக்குள் அதன் உணர்வின் அணுக்களை அதிகமாக வளர்த்து
நல்ல அணுக்களுக்கு உணவு கிடைக்காது தடைப்படுத்தி
மனிதனையே சீர்குலையச் செய்யும் நிலைகளாகி மாற்றங்கள் ஏற்படுகிறது.

இதைப் போன்ற தீமைகளிலிருந்து மாற்றுவதற்குத்தான் உன்னைக் காட்டுப்ப்குதிகுள் அழைத்து வந்தேன், இயற்கையின் நியதிகள் எவ்வாறு இயக்குகிறது என்று நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இதையெல்லாம் எமக்கு உணர்த்தினார்.

இயற்கையிலிருந்து மீள எண்ணியவர்கள் எத்தனையோ பேர். ஆனால், எத்தனையோ பேர் சென்றாலும் முழுமையடையாது மடிந்தவர்களும் உண்டு.
முழுமை பெறும் வழிக்குச் சென்றவர்கள்
முழுமை பெற்றவர்கள் சிலரே உண்டு.

பல பேர் பல நிலைகள் முழுமை பெறாது அந்த முழுமையற்ற நிலைகள் குறை கொண்ட உணர்வுகள் விளைவித்த அந்த உணர்வின் அணுக்கள் இந்தக் காற்றிலே உண்டு.

அதே சமயத்தில், முழுமை பெற்று இன்று துருவ நட்சத்திரமாக ஆன நிலைகளும் அதைப் பின்பற்றியவர்கள் சப்தரிஷி மண்டலமாக வாழ்பவர்களும் உண்டு.

தான் பெறவேண்டும் கடவுளை அடையவேண்டும் என்ற ஆவேச உணர்வுடன் திரும்ணமே செய்ய மாட்டேன் என்ற உணர்வின் வேக அழுத்தம் கொண்ட நிலையில் மடிந்த அத்தகையவர்களின் உணர்வுகளும் காற்றில் உண்டு.

இப்படிப்பட்டவர்களின் உடலில் விளைவித்த உணர்வுகளை நுகர்ந்தால் திருமணம் ஆனவர்களை வெறுக்கும் தன்மை வருகிறது. அப்படி வெறுக்கும் தன்மை வரும்போது
அவன் வளர்ச்சியின் தன்மை குன்றுகிறது.
மற்றொன்றை வளர்க்கும் தன்மை இழக்கப்படுகிறது.

ஆக, அந்த ஆண் என்ற உணர்வின் தன்மை வலுவாக்கி கரு என்ற உணர்வை உருவாக்காதப்டி அதை வளர்ச்சி பெறும் உணர்வின் தன்மை தடைப்படுத்தி அதற்கு மேல் வளராத நிலை ஆகிறது.

மனிதன் இன்று சாமியாராகச் சென்றாலும் அவன் திருமணமாகி ஒன்றிணைத்து அவன் நிலையை அது செயல்படவில்லை என்றால் அணுக்கருத்தன்மை சிருஷ்டிக்கும் தன்மை இழக்கப்படுகிறது.

ஆக, முனி என்ற நிலையைத்தான் அடைய முடியும் என்பதனை குருநாதர் தெளிவாக உணர்த்துகின்றார். ஆக, இந்தக் காற்று மண்டலத்தில் தான் சகல்மும் கலந்துள்ளது.

மகரிஷிகள் தங்கள் வாழ்க்கையில் வந்த தீமைகளிலிருந்து மீண்டு
அதை அடக்கிட விண்ணின் ஆற்றலைப் பெற்று
கணவன் மனைவி ஒன்றிணைந்து ரிஷி ரிஷி பத்தினியாக வாழ்ந்து
உயிருடன் ஒன்றி ஒளியாக ஆன உணர்வுகளும்
இந்தக் காற்றிலே நமக்கு முன் பரவியுள்ளது.

அவர்கள் இன்றும் சப்தரிஷி மண்டலத்தில் ஒரு அங்கமாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள். அந்த மகரிஷிகள் விளைவித்த அந்த ஆற்றலை நுகர்ந்தால் நாமும் அவர்களைப் போல் அருள் வாழ்க்கை வாழலாம்.

கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றென இணையலாம். அழியா ஒளிச் சரீரம் பெறலாம். நம் குரு காட்டிய இந்த நிலையை நீங்களும் பெற முடியும்.