ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 1, 2012

கோலமாமகரிஷி 2

சாமி புத்தகம்   கோலமாமகரிஷி 2
(பக்கம் 11-14)
அடுத்தவரிடம் கஷ்டத்தைக் கேட்கும்போது, கேட்பவருக்குக் கை, கால் குடைச்சல், வீட்டில் அமர்ந்து கேட்டால், கஷ்டமென்று சொல்வதை, அதிக கவனத்துடன் கேட்போம். “பையன் அப்படிச் செய்கிறான், இப்படிச் செய்கிறான்” என்பார்கள்.

அதற்குத் தகுந்த மாதிரி, இன்னொரு வீட்டில் கஷ்டமாக இருந்தால், இருவரும் எங்கே உட்கார்ந்து பேசினார்களோ, அங்கேதான் அமர்ந்து பேசுவார்கள்.

அங்கே உட்கார்ந்தவுடன் இந்த இராமாயணம்தான். சமையல் செய்வது போய்விடும். எல்லாம் போய்விடும். கடைசியில் என்ன உலகம்! என்பார்கள்.

ஆக, இந்த உணர்வுகள் அவர்களைக் கண்டவுடன் சாடிக்கொண்டே இருக்கும். அதற்கு உதவும். அதே சமயத்தில்,
காதிலும் கேட்போம். வீட்டிலும் பதிவு செய்துவிட்டோம்.
வீட்டிற்கு வந்தாலும் நிம்மதி இல்லை.
இரவில் கை கால் குடைச்சல், கண் எரிச்சல், தலைவலி எல்லாம் வந்துவிடும். டாக்டரிடம்தான் போக வேண்டும்.

இப்பொழுது, நாம் சந்தோஷமாகத்தான் பேசிக் கொண்டிருக்கிறோம். உடனே எழுந்து விடலாம். அடிக்கடி சங்கடமாக பேசிக் கொண்டிருந்தால், அங்கங்கே விஷம் தேங்கி நிற்கும். இந்த உணர்வுகள் வேகமாகத் தடுத்து நின்றவுடன், விஷம் அங்கேயே தேங்கிவிடும்.

ஆனால், கொஞ்ச நேரம் சலிப்பும், சங்கடமும், வேதனையும் எடுத்திருந்தால், நம் உடலில் மடக்கிக் கொண்டிருக்கும் இடங்களில் எல்லாம், இந்தப் பிராணவாயு, நாம் மூச்சு எடுப்பதெல்லாம் சுற்றிக் கொண்டுவரும்.

இந்த இடத்தில் தடைப்பட்டால், நரம்புகளில் இருக்கக்கூடிய உணர்வின் தன்மைகள் துடிக்க வேண்டும். இது போய் மோதியவுடன், அந்த இடத்தில் அசுத்தங்கள் எல்லாம் அப்படி, அப்படியே அடங்கிவிடும். அதுதான் மூட்டுக்கு மூட்டுக்கு வலி, முழங்கால் வலி, நடக்க முடியாமல் கூட வரும்.

நாம் கவலையால் எப்படி அமர்ந்திருந்தோமோ, அப்படி வலி வரும். கால் நீட்டி அமர்ந்திருந்தால், மடக்க முடியாது. மடக்கி அமர்ந்திருந்தால் நீட்ட முடியாது. அந்த விஷமான தன்மைகள் பலகீனப் படுத்தும். அங்கங்கே தேங்கி விடும்.

நாம் சுவாசித்த பிராணவாயு, அங்கங்கே போகும்போது, அதற்குத்தக்க இவையெல்லாம் தேங்கிக் கொள்ளும். சுத்தப்படுத்துவதற்கு வழியில்லை.

நீங்கள் ஒவ்வொரு நிமிடத்திலும், ஆத்மசுத்தி செய்து வாருங்கள். நமக்குள் இருக்கக்கூடிய நோய்கள் விலகிவிடும். உங்கள் மனக் கவலைகள் நீங்கும்.

எத்தொழிலே முன்னேற்றம் அடைய முடியுமோ, அதை அடைய முடியும். நாளைய விஞ்ஞான அழிவுகளில் இருந்து வரக்கூடிய, சில விஷத்தன்மையில் இருந்து மீட்டுக் கொள்ள உதவும். இவ்வளவு சுலபமாகச் சொல்வதினால், நீங்கள் அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.

ஆகையினாலே, நீங்கள் ஒவ்வொருவரும் வீட்டில் இருக்கும் அனைவரும் சேர்ந்து, வாரத்தில் ஒரு நாள் கூட்டுக் குடும்ப தியானமிருங்கள்.

இறந்தவர்களுடைய உயிராத்மாக்களை, அந்த சப்தரிஷி மண்டலத்துடன் சேர்ந்து, அந்த உயிராத்மாக்கள் ஒளிசரீரம் பெற வேண்டுமென்று, விண் செலுத்துங்கள். இது அவசியம். இதைக் கட்டாயம் செய்தே ஆக வேண்டும்.

அவர்கள் உணர்வுகள் உங்கள் உடலில் இருக்கிறது. இந்த முறைப்படி இந்த தியானத்தைச் செய்து வாருங்கள். பௌர்ணமி தியானத்தில் எல்லாம், உங்களுக்கு அந்த சக்தியைக் கொடுக்கிறோம்.

உங்கள் புலனறிவுக்கு, விண்ணுக்குச் செல்லக்கூடிய அளவுக்கு, அந்த விண்ணுடன் தொடர்பு கொள்ள வைக்கிறோம். அதே சமயம், இந்த இறந்தவர்களின் உயிராத்மாவை, நீங்கள் எண்ணி, உந்தி அங்கே தள்ள வேண்டும்.
விஞ்ஞானி எப்படி இராக்கெட்டைச் செலுத்தி,
அதற்குள் மனிதனை அனுப்பி, இயந்திரத்தை வைத்து,
இங்கிருந்தே கம்ப்யூட்டர் அலைவரிசையைப் பார்க்கிறான்.
அங்கிருக்கக்கூடிய செய்தியை, ஆண்டனா வைத்து இழுக்கிறான்.

அதே மாதிரி, இறந்தவர்களை விண்செலுத்திவிட்டு, நம் ஆண்டனா, கண் இருக்கிறது. இந்த உணர்வைச் செலுத்தி, அங்கே ஏங்குங்கள். கேளுங்கள். நீங்கள் எடுங்கள்.

தெரிந்து எடுப்பதில்லை. தெரியாமலே நீங்கள் எடுக்கலாம். ரேடியோவில் அலைவரிசையைத் திருப்புவது போன்று, லேசாகக் கொடுக்கிறோம். நீங்கள் எடுத்துப் பழக வேண்டும், எமது அருளாசிகள்.
(பக்கம் 20-23)
எல்லோரும், வாரத்தில் ஒரு நாள் கூட்டு தியானம் செய்யுங்கள். கணவன் மனைவி இருவரும், ஒருநாளுக்கு ஐந்து தரமாவது ஆத்மசுத்தி செய்துவிட்டு, கணவனுக்கு அருள் சக்தி பெற வேண்டும். அவர் மூச்சும், பேச்சும் உலக அமைதி பெற உதவ வேண்டும்.

அவர் எத்தொழில் செய்தாலும், நலமும் வளமும் பெற வேண்டும். அவர் செயல் மற்றவர்களுக்கு நல்லதாக வேண்டும். அவரைப் பார்ப்பவர்களுக்கெல்லாம் நல்லது நடக்க வேண்டும் என்று ஆத்மசுத்தி செய்துவிட்டு எண்ணுங்கள்.

இந்த உடல் சதமல்ல. நாம் எவ்வளவுதான் இருந்தாலும், இந்த உணர்வை நமக்குள் எடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும். நம்முடன் தொடர்பு கொண்டு பாசத்தால் பிணைத்துக் கொண்டால்தான், நாம் இந்த வழியிலே விண் செலுத்த முடியும்.

காசைக் கொடுத்து, “எங்கள் அப்பாவிற்கு சொர்க்கத்திலே இடம் வாங்கிக் கொடு” என்றால், யாரும் வாங்கித் தரமாட்டார்கள். நாம் அந்த உணர்வு கொண்டுதான், விண் செலுத்த முடியும். இல்லையென்றால் ஒன்றும் முடியாது. எதுவுமே செய்ய முடியாது. ஆனால், எடுத்துக் கொண்ட உணர்வுக்கு, நிச்சயம் பிறப்பு எடுத்தேதான் ஆக வேண்டும்.

ஆனால், இந்தச் சரீரத்தில் வேதனையை எடுத்தால், வேதனை கொண்ட உடல்தான் அடுத்து அமையும். இன்று சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு, அது நாயகனாக இருக்கும். அதெல்லாம் சந்தர்ப்பம்தான்.

கொங்கணவர், ஒரு ஏழையாக இருந்தாலும், ஒரு அரசனாக இருந்த பிருகுவின் உயிராத்மா இங்கு வந்து, ஒரு நிலை செய்யும்போது, வாசுகியின் (திருவள்ளுவரின் மனைவி) நல்வாக்குதான். இரண்டு பேருக்கும் மோட்சம் கிடைக்கின்றது.

இல்லையென்றால் இங்கே சூனியம்தான். இதைப் போன்ற சந்தர்ப்பம், வருகின்றது. இதைப்போல, உங்களுக்கு சிரமமென்ற நிலைகள் வரப்படும்போது, இது ஒரு சந்தர்ப்பம்.

இந்த சந்தர்ப்பமான நிலைகளில், உங்களுக்கு கொடுக்கும் உபதேசம் “மகரிஷிகளின் அருள் ஒளி”. மகரிஷிகளின் அருள் ஒளியைக் கூட்ட, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி தேவை.

“அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும்” என்று  எண்ணிய நேரத்தில், ஞானியரின் அருள் உணர்வை உங்களுக்குள் செலுத்தி, துன்பப்படுத்தும் மனித உணர்வின் நிலைகளை அடக்கி, எண்ணத்தை வலுக்கூட்டி, உங்கள் செயல் தன்மையால் முன் செல்லுங்கள். இதைச் செய்வதற்குச் சந்தர்ப்பம் உண்டு.

ஆனால், அந்த சந்தர்ப்பத்தைக் கூட்டிக் கொண்டால் உங்களுக்குள் இருக்கக்கூடிய உணர்வை இயக்கிக் காட்டுவது, உங்கள் உயிரான ஈசன்தான்.

நீங்கள் சேர்த்துக் கொண்ட உணர்வின் சத்துதான், உணர்வை ஒளியாக மாற்றுவது, உடலைக் கொடுப்பது எல்லாமே.

நாம் எதை எண்ணினாலும், இந்தச் சுவாசத்தை நாம் எடுக்கும்போது, உயிரான நிலை, பிரம்மமாகிவிடுகின்றது. நாம் சங்கடமோ, சலிப்போ, அழிப்பேன், எடுப்பேன், என்ற உணர்வை எடுத்தாலும், இந்த உணர்வின் தன்மையை நாம் சுவாசித்து, உயிரான ஒளியாக மாற்றி, அடுத்த நிலைகளுக்கு ஆளாக்கிவிடுகின்றது. எதிலிருந்தும் நாம் தப்ப முடியாது.

ஆக நாம் எடுத்துக் கொண்டது உயிராக நின்றிருக்க, பிரம்மமாக நின்று சிருஷ்டித்துக் கொடிருக்கும், நமக்குள் அவனைப்பற்றி அந்த மகரிஷிகளின் அருளால், அவனுக்கு எடுக்க வேண்டியது எவையாக இருக்க வேண்டும்?
அனைத்தும் நல்லதாக வேண்டும்.
எல்லோரும் நலம்பெற வேண்டும்.
வாழ்க்கையில் உயர்வு பெறவேண்டும்.
மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்று
நீங்கள் சுவாசிக்கும்போது,
உங்களுக்குள் சிருஷ்டித்துக் கொண்டே இருக்கின்றான்.
உங்களுக்குள் இருக்கக்கூடிய துன்பத்தைத் துடைக்கிறான்.
வழியறியும் உணர்வை, உங்களுக்குள் ஒளியாக மாற்றுகின்றான்.

அவனுடன் (உயிருடன்) செல்லப்படும்போது, எந்த ஒளியின் தொடர்கொண்டு வழிகாட்டினானோ, அங்கே செல்கின்றோம்.
(பக்கம் 26-30)
எல்லோரும், கொங்கணவ மாமகரிஷி போல மனதைத் தங்கமாக்கும் நிலை” பெறவேண்டும். ஆகையினாலே, அவருடைய அலைகள்தான் உங்களுக்குள் இன்று இந்நேரம் செயல்படுத்துவது.

பிருகு மகரிஷி, ஏழ்மையின் உடலான கொங்கணவர் உடலில் சென்று, வாசுகி அம்மையாலே எடுத்துக்கொண்ட உணர்வின் தன்மை கொண்டு, மனதைத் தங்கமாக்கும் அந்தச் சந்தர்ப்பத்தினுடைய நிலைகளைப் பெற்றது போன்று, இன்று இதைக் கேட்போருக்கும், அந்தச் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.

இந்த சந்தர்ப்பத்திலே உணர்வினுடைய நிலைகள்,
உங்கள் மனது தெளிவாகி,
தங்கம் எப்படி, என்றுமே பளிச்சிடச் செய்கின்றதோ,
அதைப்போல உங்கள் மனதின் எண்ணங்களும் பளிச்சிட்டு,
வாழ்க்கை தங்கத்தைப் போன்று வலுக்கொண்டதாகவும்
செயலினுடைய தன்மை இனிமை கொண்டதாகவும்,
உங்கள் பார்வையினுடைய தன்மை பிறருக்கு இனிமையாகவும்,
தங்கம் எப்படி ஜொலிக்கின்றதோ, அதைப்போல
உங்கள் வாழ்க்கை ஜொலிக்க வேண்டுமென்று
யாம் பிரார்த்திக்கிறோம்.

நினைவு அனைத்தையும் புருவ மத்தியில் செலுத்தி, அதன்வழி பெற தியானியுங்கள். அருள்ஞானச் சக்கரத்தில் பாருங்கள். அதில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி வரும்.
நீங்கள் என்னென்ன காரியங்கள் நினைக்கிறீர்களோ, அவை நல்லதாக ஆக வேண்டுமென்று எண்ணுங்கள். குடும்பம் நலமாக வேண்டுமென்று எண்ணுங்கள். விவசாயம் நன்றாக இருக்க வேண்டுமென்று எண்ணுங்கள். தொழில் பெருக வேண்டுமென்று எண்ணுங்கள்.

நோயாளி, அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று, நோய் நீங்கி, உடல் நலம் பெற வேண்டுமென்று எண்ணுங்கள். அந்தச் சக்கரத்தின்முன், நீங்கள் ரொம்ப பயபக்தியோடு பால், பழம் வைத்து, தியானம் செய்துவிட்டு, குழந்தைகளுக்குக் கொடுங்கள். நீங்களும் உடல் நலமாக வேண்டுமென்று எண்ணிச் சாப்பிடுங்கள். இதே வழியில் கடைபிடித்து வாருங்கள்.

எங்கள் ஊர் நன்றாக இருக்க வேண்டும்.
அந்த மகரிஷிகளின் உணர்வுகள், ஊர் முழுவதும் படர வேண்டும்.
இந்த ஊரிலுள்ள குடும்பம் எல்லாம், ஒன்றுபட்டு வாழ வேண்டும்.
அவர்கள் விவசாயம் எல்லாம், செழித்து வளர வேண்டும்.
அவர்களெல்லாம் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று,
சக்கரத்தின் முன் அமர்ந்து சொல்லிக் கொண்டே வாருங்கள்.

அதன்வழி, உங்கள் தெருவில் உள்ள எல்லோருக்கும், அந்த அருள் உணர்வுகள் படரும். அந்தந்தக் குடும்பங்களில் நலமாகும் சக்தி பெருகும். இந்த உணர்வுகள் இப்படிப் படர படர, அங்கே எல்லோருக்கும் கிடைக்கும்.

T.V. ஸ்டேஷனில் எந்த ஒளிபரப்பைப் பண்ணுகிறார்களோ, அந்த அலைவரிசையில்தான் வரும். நாமும் இந்த உடலில் எடுத்து, இந்த மகரிஷிகளின் அலைவரிசையில், அவர்களை எண்ணிச் சொல்லியிருப்போம்.

அவர்கள் ஞாபகம் வந்து, அந்த அலைவரிசையை எடுத்தார்கள் என்றால், அவர்களும் அறிய முடிகின்றது. அவர்களை அறியாத கஷ்டங்களையும் போக்க வேண்டும்.
இந்த மாதிரி, நம் தியானவழி அன்பர்களெல்லாம் உலகம் நலம் பெறுவதற்காகத் தியானம் செய்தீர்கள் என்றால், எல்லோருடைய எண்ணங்களும் நல்லாகும் போது, நமக்குள் அருள் மகரிஷியின் உணர்வை, எளிதில் பெற முடிகிறது.

ஒவ்வொரு குடும்பத்திலும் கூட்டு தியானம் இருந்து, அவர்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும். அவர்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும். அவர்கள் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும், என்று ஏங்கி தியானியுங்கள்.

யாருடைய குழந்தைக்காவது நோய் இருந்தால், கூட்டுத் தியானங்கள் இருந்து, மகரிஷிகளின் அருள்சக்தி அந்தக் குழந்தை உடல் முழுவதும் படர வேண்டும். நோய் நீங்க வேண்டுமென்று சொல்லுங்கள். கூடுமான வரையிலும் நோய்கள் நீங்கி, சீக்கிரம் நலம்பெறும்.
என்னதான் நோய்கள் நீங்கினாலும்,
இன்னும் கொஞ்ச நாள்தான் இந்த உடலில் வாழ்கிறோம்.
எப்படியும் இந்த உடல் அழிந்துதான் ஆக வேண்டும்.
இந்த உடல் உங்களுக்கு சொந்தமல்ல.
அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்?

எல்லோரும் நன்றாக இருக்கவேண்டுமென்று, அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை அவர்களுக்குப் பாய்ச்ச வேண்டும், இந்த உணர்வுகளைச்  செலுத்தும்போது, மகரிஷிகளின் அருள் உணர்வை, நமக்குச் சொந்தமாக்கி விடுகிறோம்.

உணர்வுகள் நோய்வாய்ப்பட்டால் உடல் சுருங்கத்தான் செய்யும். ஆகவே, அருளைப் பெற்றபின், தீய உணர்வுகள், தீய அணுக்கள் குறையப்படும்போது, உடல் சுருங்கத்தான் செய்யும்.

ஆனால், அந்தப் பேரருள் கொண்ட உணர்வுகள்
அந்த உடலிலே ஒன்று சேர்ந்து இணைந்தபின்,
அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திலிருந்து கவர்ந்து,
அந்த உணர்வாக உணவாக எடுத்து,
ஒளியின் பிழம்பாக மாறும்.
அப்பொழுது நாம் பிறவியில்லா நிலை அடைகிறோம்.
இராமாயணத்தில், இராமன் “நேரமாகி விட்டது” என்று மணலைக்கூட்டி, (மனதைக் கூட்டி) தியானிக்க ஆரம்பித்துவிடுகிறான்.
இதைப்போலத்தான், நம் தியானம் அனைத்தும் நம் எண்ணங்களெல்லாம் ஒன்று சேர்ந்து, பகைமையில்லா உணர்வுகளை நமக்குள் வளர்த்து, ஏகாந்த நிலையை அடைய வேண்டும்.

அவ்வாறு வளர்த்து, நம் உயிருடன் ஒன்றி, இந்த உடலிலிருக்கும்போதே, அந்த ஒளியின் உணர்வைச் சேர்த்து, ஒளியின் சரீரமாக மாற்ற வேண்டும். இதுதான் கடைசி நிலை.
(பக்கம் 35-38)
அன்றைய அரசர்கள் செய்தது போலத்தான், இன்றைய விஞ்ஞானிகள், ஒவ்வொரு உணர்வின் தன்மையையும் வளர்த்து, வளர்த்து, அது காற்றில் கலந்து, மீண்டும் விஞ்ஞானத்திற்கு வருகின்றது.

அன்று மெய் ஞானிகள் சொன்னது அனைத்தும், மனித உடலிலிருந்து எடுத்தார்கள். இன்று மனித உடலிலுள்ள உணர்வுகள் எதில் எதிலே கலந்திருந்ததோ, அதைக் கெமிக்கல் கலந்து அறிந்தான்.

உலோகத்தன்மையை வைத்து, மந்திரத்தினால், ஒருவன் சொல்லக்கூடிய எண்ணத்தை அறிந்தான். அதே சமயம் பூமிக்குள் இருக்கக்கூடிய நிலையை அறிந்தான்.

பூமிக்குள் ஆழமாக இருக்கக்கூடிய, கல்லை அறிந்தான். பூமிக்குள் இருக்கக்கூடிய மண்ணை அறிந்தான். பூமிக்குள் இருக்கக்கூடிய பாஷாணத்தை அறிந்தான். அதிலிருக்கக்கூடிய உலோகத்தைப் பக்குவப்படுத்தினான்.

இவன் உடலுக்குள் இருப்பது இருநிலைகள் வரப்படும் பொழுது, ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு ஏழு, என்கிற பொழுது, அது கடினமாகின்றது. அதற்குள் மறைந்த நுண்ணிய அலைகள் தெரிகிறது. அப்பொழுது, உலோகத்தை அறியும் தன்மை வருகிறது.

இப்படி, உலோகக் காலங்கள் வரப்படும் பொழுது, உலோகத்தை ஆயுதமாக வைத்து, இந்த மந்திரத்தை வைத்து, சில நிலைகளைச் செயல்படுத்துகிறான். உலோகத்தின் தன்மை வரப்படும் பொழுது, வெடிக்கும் தன்மை வருகின்றது.

இந்த உலோகத்தின் தன்மை, வெடிக்கும் தன்மை வந்தவுடன், மந்திரங்களெல்லாம் அடிப்பட்டுவிட்டது. மந்திரமெல்லாம் நிற்காது. “டம், டம்”, என்று மந்திரம் சொல்லும்முன், போட்டு அடித்துவிடுகின்றான். எந்திரங்களுக்குப் பவர் வந்தது. இன்று எந்திரங்களுக்கு முன் மந்திரம் நிற்காது.

மந்திரத்தைப் போல இன்று கம்ப்யூட்டர் வந்துவிட்டது. இந்தக் கம்ப்யூட்டர் வந்தபின், நாம் பேய், அது, இது, என்று சொன்னதை, இன்று நாம் T.V. யில் பேயைப் பார்க்கிறோம்.

நம் கண்ணின் நிலைகளில் அன்று பேயைப் பார்த்தோம். இன்று, உருவத்தின் நிலைகளைப் பேய்களைக் கண்ணில் பார்க்கிறோம். இதைப் போன்ற உணர்வின் தன்மை வரப்படும் பொழுது, கெமிக்கல் கலந்து இருப்பதனால், இந்தப் பேயின் உருவத்தை இன்று படம் எடுக்க முடியும். சொல்வது அரத்தமாகிறதல்லவா.

விஞ்ஞானம் உருவாகும் பொழுது,
கெமிக்கல் கலந்தபின் தான்,
அதன் நிலையை அறிகின்றோம்.
இன்று சிறுநீருக்குள், ஒவ்வொரு உணர்வின் தன்மை எது எது கலந்திருக்கிறது என்பதை, கெமிக்கல் வந்தவுடன், அதன் கலர்கள் மாறுகின்றது.

இதைப் போலத்தான், இவன் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை, மனித உணர்வுக்குள் வரப்படும் பொழுது, இன்று ஆவியை நாம் படம் பிடிக்க முடியும். முந்தைய நாட்களில் படம் பிடிக்க முடியாது.

இவனின் இரசாயணத்தன்மையுடைய நிலைகள்
நமக்குள் கலந்து கலந்து,
மனித உணர்வுக்குள் வந்தபின்,
அதில் சிக்கியதுதான் “எதிர்பாராத கண்டுபிடிப்புகள்”.

இவையெல்லாம் கண்டுபிடித்து, இன்று “கம்ப்யூட்டராக” வந்தது. இன்று இயந்திரத்தின் துணை கொண்டு மனிதனையே உருக்குலைக்கும் நிலை வந்துவிட்டது. இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
(பக்கம் 44-48)
நமது குருநாதர் எம்மைப் பல முறைகளில், பல சிக்கல்களையும், பல தொல்லைகளையும் கொடுத்தபின், “யாருக்குச் செய்தாலும், அவர்களுக்கு நல்லது செய்துவிட்டு, அவர்களிடம் நல்ல வாக்கை வாங்கு” என்றார்.

உங்களையறியாமல், உங்கள் வாழ்க்கையில் என்னென்ன ஆசைப் படுகிறீர்கள்? நல்லதுதான் செய்கிறோம் என்று சொன்னாலும் கூட, துன்பத்தை விளைய வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அங்கே துன்பம் வந்து சேர்ந்தால், நல்லது உள்ளே போய்விடும்.

பாலை, பாதுகாப்பாக நன்றாகக் காய்ச்சி வைத்திருப்போம்.
ஒரு துளி விஷம் கலந்துவிட்டால்,
தெரியாமல் சாப்பிட்டால் இறந்துவிடுவோம்.
இதைப் போல, நமக்குத் தெரிந்து, கெட்டதாக ஆவதல்ல. ஆனால், கெட்டது அனைத்துமே நம்மை இயக்குகின்றது.

சூரியனும் விஷத்திலேதான் சிக்கியிருக்கிறது.
ஒரு அணுவும் விஷத்தில்தான் இருக்கின்றது.
யாம் இப்பொழுது பேசுவதும் விஷம்தான்.
எம்மை இப்பொழுது பேசத் தூண்டுவதும் விஷம்தான்.
அந்த உணர்ச்சி இல்லையென்றால், உங்களிடம் வராது.

இந்த விஷமே, உங்களிடம் தாக்கவில்லை என்றால், உணர்ச்சியைத் தூண்டவே செய்யாது. விஷம் இல்லாத மண் மாதிரி இருக்கும்.

தேவாங்கைப் போன்று, விஷம் கம்மியாக ஒன்றும் செய்யாது, அமைதியாக இருக்கும். நீங்கள் என்ன செய்தாலும், ஒன்றுமே செய்யாது. ஆற்றலே இருக்காது அமைதியாகவே இருக்கும். அது மாதிரி, யார் உடலில் விஷம் கம்மியாக இருக்கின்றதோ, இந்த மாதிரி மந்தமாக இருப்பார்கள். அவர்களிடம் எந்த மாற்றமும் இருக்காது.

சாதாரணமாக விஷம் கம்மியாக இருப்பவர் ஒருவரிடம், ஒரு வேலையைச் சொன்னால், “இது எதற்கு, அது எதற்கு? என்று சொல்லிக் கொண்டிருப்பார்.

இன்னொருவர் இந்த விஷம் கொஞ்சம் இருந்தால், துடி துடிப்பார். “பைத்தியக்காரத்தனமாக, இவன் உட்கார்ந்து கொண்டே சாப்பிடுகிறானே” என்பார்.

சோம்பேறித்தனமானவர் "இவன் என்னடா, இப்படிப் பறந்து கொண்டிருக்கின்றான்?” என்பார். இவருடைய உணர்வுக்கு, இதைச் சொல்வார்.

இவனைப் பற்றி அவர் சொல்வார். ‘சும்மாவே இருந்து கொண்டு சாப்பிடுகிறானே” என்று இவருடைய வேகம் பேசும். “இவன் சோம்பேறிப்பயல்” என்பார். இவனுடைய உணர்வின் வேகம் இவ்வாறு சொல்லும்.

அவன் உணர்வு, “இவன் ஏன் இவ்வளவு வேகம் காட்டுகிறான்? என்று இருக்கும்.

இவை இரண்டும் எதிர்மறை. ஆக, இந்த உணர்வுகள் வேலை செய்யும். ஆக, அந்தந்த உணர்வின் தன்மை செயல்படுவது போல, விஷத்தின் தன்மை நாம் பேசுவதிலும் உண்டு.

உலகமே விஷத்திற்குள் கவர்ந்ததுதான். மிளகாய்க்குள் காரமிருக்கிறது. அளவாகக் குழம்பில் போட்டால், குழம்பு ருசியாக இருக்கும். அதிகமாகப் போட்டால் என்னவாகும்?

இதே மாதிரிதான், விஷத்தின் அளவு எது எதிலே கூடியிருக்கின்றதோ, அந்த உணர்வுக்குத் தக்கவாறு, அந்த உணரச்சியைத் தூண்டச் செய்வதும், அதற்குள் எந்த அளவுக்கு விஷம் இருக்கின்றதோ, அந்த அளவுக்குத் தக்கவாறுதான், சொல்லின் ஆற்றலும் வரும்.

ஆக, ரோஜாப் பூவிற்குள்ளும் விஷம் உண்டு. நல்ல நறுமணத்தை
வேகமான நிலைகளில் கொண்டு செல்ல விஷம் தேவை.
விஷம் இல்லை என்றால்,
ரோஜாப் பூவிற்கு வேலை இல்லை. மணம் இருக்காது.

ஆனால், அதிகமாக மணம் சேர்ந்துவிட்டாலோ, அதிக வாசனையை நுகர்ந்து பாருங்கள். தலைவலி வந்துவிடும். இந்த விஷத்தின் தன்மை வேலை செய்யும். அதிகமான மணத்தைக் கூட்டிவிட்டால், மயக்கம் வந்துவிடும்.

சிலருக்குப் பலவீனமான எண்ணம் இருக்கும். மணம் பிடிக்காது. ஆக, இவர்கள் உடலில் இருக்கக்கூடியது, அந்த விஷத்தை ஏற்றுக் கொள்ளாத தன்மை.

மற்ற உடலிலிருந்து, விஷமான தன்மை வந்தால், ரோஜாப்பூ மணத்தை ஏற்றுக் கொள்ளாத நிலை வந்தால், வாழ்க்கையில் எப்பொழுது பார்த்தாலும் விரக்தியாக இருக்கும். “என்ன வாழ்க்கை, என்ன இது?” என்ன இது? என்று சோர்ந்து சோர்ந்து, அந்த உணர்வை எடுத்திருப்பார்கள்.

அவர்களிடம் நல்ல வாசனை ஏதாவது இருந்தால், அதற்குள் இருக்கும் விஷம் தூண்டும். அதில் பட்டவுடன், இவர்களுக்குத் தலைவலி வரும். மயக்கம் வரும் எங்கேயோ ஓடிப் போய்விடுவோம் என்ற எண்ணம் வரும்.

இந்த நல்ல வாசனைக்குள் உள்ள விஷம். இந்த மணத்தை இங்கே சகிக்க விடாதபடி, தனக்குள் தூண்டியவுடன், உடனே மயக்கம் வரும். சோர்வடையச் செய்யும். அங்கே உட்காரவிடாது. எல்லாம் வந்துவிடும். ஏனென்றால், இதைப் போன்று ஒன்றுக்கொன்று, இந்த உணர்வின் ஆற்றல்கள் உண்டு.
(பக்கம் 35-38)
உதாரணமாக, சவுண்டால் மரம் இருக்கிறதென்றால், இதற்கு வெப்பம் அதிகம்.
வெப்பம் அதிகமாக இருப்பதனால்,
தன்னுடைய ஈர்ப்பு சக்தி வரப்படும் பொழுது,
பூமியின் ஈர்ப்புக்குள் வேகமாக ஓடும்.

பாறையானாலும் உடைத்துத் தள்ளிவிட்டுச் செல்லும். மழையில்லை என்றாலும் சட்டை செய்யாது. இந்த மரம் தன் உணர்வின் நிலையில், பாறைக்குள் இருக்கக்கூடிய நீரை எடுக்க, தேடிச் செல்கின்றது.

வேப்ப மரமும் அப்படித்தான். தன் உணர்வின் சத்தை வேகமாகச் செலுத்தும். வேப்ப இலையைச் சாப்பிட்டால்,  நம் உடல் உடனே சூடாகும். இந்த சவுண்டால் மர இலையைச் சாப்பிட்டாலும் உடல் சூடாகும்.

அந்தச் சூட்டின் தன்மை அதற்கு வேண்டும். அதே சமயம், அதற்குத் தகுந்த காந்தம் இருக்கின்றது. காந்தத்திற்குத் தக்கவாறுதான், தன் ஈர்ப்பின் சக்தி வருகின்றது. எத்தகைய வறட்சியாக இருந்தாலும் தாங்கிக் கொண்டிருக்கும்.

அதே மாதிரி விஷ ‘முள்” இருக்கிறது. அது காற்றிலிருந்து விஷத்தைக் கவர்ந்து கொள்ளும். விஷத்தைக் கவர்ந்து கொண்டாலும், அதற்குள் இருக்கக்கூடிய, காந்தத்தின் துடிப்பின் வேகம் அதிகமானாலும், அதுவும் பாறைக்குள் ஈர்க்கும். அது எந்த வறட்சியானாலும் ஈர்த்துக் கொள்ளும்.

ஆனால், அது காற்றிலிருக்கக் கூடிய விஷத்தையும், ஈர்த்துக் கொள்ளும்.சவுண்டால் மரம், அதற்குள் இருக்கக் கூடிய வெப்பமும், வெப்பத்திலிருக்கும் காந்தமும் கலந்திருப்பதனால், காற்றிலே நல்ல மணம் இருக்கிறது. நம் உடலிலே சத்தாக வேண்டும்.

உடல் சூடாகிறது என்றால், இந்த சவுண்டால் இலையில் இரசம் வைத்துச் சாப்பிட்டால், ஜலதோஷம் விட்டுவிடும்.

அதே சமயத்தில் மாட்டிற்குத் தீவனமாகப் போட்டால், பால் நன்றாகச் சுரக்கும். இதையே தாய்மார்கள் ரசம் வைத்து, கீரை போலவும் சாப்பிட்டால், குழந்தைகளுக்குப் பால் ஜாஸ்தி கிடைக்கும். விஷம் இப்படியும் இருக்கிறது.

ஒரு தாவர இலைச் சத்துக்குள் அது, அது கலந்து கொண்ட வெப்பமும், விஷத்தின் அளவுதான், எல்லாமே உணர்வுதான். இன்று விஞ்ஞானி இதைத்தான் கண்டுபிடிக்கின்றான். இந்த உடலுக்குள் என்ன செய்கிறது?

ஆக, இவன் இயற்கையில் வருவதை விடுத்து, விஷம் வேண்டுமென்றால், பாம்பைத் தேடிப் பிடிக்கின்றான். இந்த விஷத்தை மருந்தில் கலக்கிறான்.

அன்று வைத்தியர்கள், இந்த விஷச் செடி இங்கே இருக்கிறது. மனித உணர்வுக்குள் இன்னதென்று, இந்தச் சத்தை எடுப்பான். குரு மருந்தாக வைத்துக் கொள்வான்.

இந்த விஷச் செடியின் சத்துக்கு, எந்த மருந்தாக இருந்தாலும், வேகமாக செயல்பட, இந்த விஷ மருந்தை லேசாகக் கலக்க வேண்டும். அது கலந்தவுடன், இந்த விஷம் வேகமாக இழுத்துச் சென்று, எல்லா இடத்திலும் பொருந்தச் செய்கின்றது. விஷம் குருவாகின்றது.

ஆகவே, சூரியனுக்கு குரு யார்? ஆதிசேஷன் என்ற விஷம்தான். இங்கே மேரு என்ற மலையை மத்தாக வைத்துக் கடைந்தான் என்று வியாசக பகவான் சொன்னார். எதன் மேல் நாராயணன் பள்ளி கொண்டிருக்கின்றான்? விஷத்தின் மேல்.
“மேரு” என்ற மலையை மத்தாக வைத்தான் என்பது, அடுக்கடுக்காகச் சேர்ந்த பெரிய மலைதான் நம் பூமி. “வாசுகி”, தான் சுவாசித்த இந்த உணர்வு விஷம். சுழலச் செய்வதற்குச் சேர்த்துக் கொண்ட விஷம், இதில் துடிப்பாகி, வளரச் செய்கின்றது.

வாசுகி என்ற பாம்பைக் கயிறாக வைத்து, “பாற்கடலைக்” கடைந்தான். அதாவது விண்ணிலே இருக்கக்கூடிய ஒளி அலைகளிலே இது கடைகின்றது. சுற்றிச் சுற்றிக் கடைந்து, தனக்குள் எடுத்துக் கொண்ட வெண்ணைய்தான் நாம் எல்லோரும்.

எடுத்துக் கொண்ட செடி, கொடி, கல், மண் எல்லாம் விளைந்து,
பாலுக்குள் கடையும் பொழுது வெண்ணெய் வருவதைப் போல,
அதே மாதிரிதான், எல்லா நிலைகளிலும்,
புழுவிலிருந்து வடித்து வடித்து, மனிதனாகி,
இந்த உணர்வின் தன்மைகளை ஒளியாக மாற்றி,
விண்ணிற்குப் போகக்கூடிய சக்தி.
(பக்கம் 56-58)
மனிதனுக்குள் இந்த சலிப்பு என்பது உப்புச் சத்தாகிவிடும். அடிக்கடி சலிப்படைகின்றவரிடம் சென்று சரக்கு வாங்கிப் பாருங்கள். பால் வாங்கி வந்தால் கூட, கெட்டுவிடும். நீங்கள் சலிப்பான நிலைகளில் வேலை செய்தாலும் கூட, நிச்சயம் அங்கே உப்புச் சத்து கூடிவிடும்.

இந்த உணர்வு, கூடக் கொஞ்ச காலம் ஏங்கியிருந்தால் போய்விடும். நாம் என்னமோ நினைக்கிறோம். இந்த உணர்வின் இயக்கம் என்ன செய்கிறது? என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

அதைப்போலத்தான் இன்று இந்த தியானமிருக்கும் நீங்கள் யாருக்காவது கஷ்டம் வந்துவிட்டால், “ஐயோ இப்படிப் பண்ணுகிறார்களே”  என்று எண்ணுவீர்கள்.

நம் பிள்ளை, படித்து நன்றாக இருக்கவேண்டுமென்று எண்ணுவோம். அவன் படிக்கவில்லை என்றால் “இப்படிப் பண்ணுகிறானே, இப்படிப் பண்ணுகிறானே” என்று ஜெபம் பண்ண ஆரம்பித்துவிடுகிறோம்.

வீட்டுக்காரர் வந்தவுடன், “பிள்ளைகளை நீங்கள் இப்படி வளர்த்து, கெடுத்து விட்டீர்களே” என்று ஜெபம். அவர்களையும் திட்டுவதற்கு ஆரம்பித்துவிடுவார்கள்.
போனபின் தியானம். என்ன தியானம்?
“என்ன அவன் பண்ணுகிறான்”,
“அவன் இப்படிப் பண்ணிக்கொண்டிருக்கிறான்”
“இவன் அப்படிப் பண்ணிக்கொண்டிருக்கிறான்”
“படிக்க மாட்டேன் என்கிறான்”
“இவரும் கேட்க மாட்டேன் என்கிறார்”
என்று மனதிலே எண்ணித் தியானம்.
அந்த நேரத்தில், அவரது பேரப்பிள்ளை யாராவது வந்தால் “தொலைந்து போ” என்று, அவனையும் சாபமிட ஆரம்பித்துவிடும்.

இந்த ஜெபம் என்ன செய்யும். அந்தச் சாபம் வந்தவுடன், கோபம் வந்துவிடும். இரவு நேரத்தில் கை கால் குடைச்சல், மேல்வலி, உடல்வலி என்று எல்லாமே சகிக்க முடியாது. இந்த தியானம் செய்கிறோம். ஏனென்றால், அவனை நினைத்து வேதனையை எடுத்தவுடன் கை, கால் குடைச்சல் வரும். இந்த தியானம் செய்கிறோம்.

நாம் என்ன செய்ய வேண்டும்.? இரவில் படுக்கும்போது, “ஆத்மசுத்தி” செய்ய வேண்டும். மகரிஷிகளின் அருள்சக்தி பெறவேண்டும். என் ஜீவாத்மா பெற வேண்டும். என்று எண்ணவேண்டும்.

நீங்கள் ஒரு நாளில் பத்து நிமிடம் தியானமிருக்கும்போது, நாம் கொடுத்த இந்த சக்திக்காக வேண்டி, துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுங்கள்.

அந்த சக்தியை எடுக்கும்போது, அந்த ஞானியரின் சக்தியைப் பிரித்துக் கொடுக்கும். அவ்வாறு பிரித்துக் கொடுப்பதற்காக வேண்டி உங்களுக்கு செய்து கொடுக்கிறோம்.
சாமி வந்தவுடன் எல்லாம் நன்றாகிவிட்டது. நன்றாகிவிட்டது என்று சொல்வோம். அடுத்து, இரண்டவது தரம் வந்து நல்லதாக ஆகிவிட்டது என்பார்கள்.
மூன்றாவது தடவை என்ன செய்கிறார்கள்?
யாம் எத்தனை தடவை செய்து கொடுப்பது?

ஒருதரம், இரண்டுதரம், மூன்றுதரம் கூட, செய்து கொடுக்கலாம். நான்காவது தரமும், “சாமி” தான் செய்து கொடுக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.

ஒன்றும் பலன் இல்லை என்றால், “என்னத்தை சாமி செய்துவிட்டார்” என்று சொல்கின்றார்கள்.

உடனே ஜோசியக்காரனிடம் சென்று, நல்ல நேரம் வருகிறதா? கெட்டநேரம் வருகிறதா? என்று யாகத்தைச் செய்துவிட்டால், இந்த இயந்திரத்தைக் கொண்டு வைத்தால் நல்ல நேரம் வருமா! என்றிருப்பார்கள்.

“உங்கள் எண்ணத்திற்குள் எடுத்துச் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்” என்றால், செயல்படுத்த மாட்டார்கள்.

ஆகையினால்தான் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு நிமிடத்திலும் சுத்தப்படுத்திக் கொள்வதற்காக, “ஆத்மசுத்தி” என்ற ஆயுதத்தை உங்கள் கைமேல் கொடுப்பது.
(பக்கம் 60-62)
ஒரு அணுவின் தன்மை, ஒரு குணத்திற்குள் ஒவ்வொன்றும் வேறுபடுகின்றது. ஒரு குருவியை எடுத்துக் கொண்டால், எத்தனையோ தந்திரங்களைச் செய்கின்றது.

ஆனால், அந்தக் குருவி தனக்குள் தந்திரத்தை எடுத்து, அந்த உணர்வின் தன்மையை தனக்குள் நுகர்ந்து, தனக்குள் சேர்த்து, தன்னைக் காத்துக் கொள்ளக் கூடிய உணர்வின் தன்மையை, எடுத்துக் கொள்கின்றது.

இந்த உணர்வாலே, எடுத்துக் கொண்ட ஒவ்வொரு அணுவின் தன்மையும்,
அதற்குள் வளர்ச்சியாகி, உயிராத்மாவில் சேர்கின்றது.
இப்படி, தேன்கூடு போல அது வளர்ச்சியாகி,
உயிராத்மாவுடன் சேர்த்தபின்,
எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப,
தற்காத்துக் கொள்ளக்கூடிய உணர்வு வருகிறது.
தீயதை நீக்கி, நல்லதை எடுக்கிறது.

இதே மாதிரிதான், ஒவ்வொரு அணுவிற்குள்ளும் எடுத்துக் கொண்ட உணர்வின் ஆற்றல், நமக்குள் வருகின்றது. உதாரணமாக, ஒரு புழுவை, ஒரு குளவி கொட்டுகின்றது. அந்தப் புழுவின் உடலில், குளவியின் விஷம் படுகின்றது. அதே சமயம், குளவியாக மாறுகின்றது.

குளவியாக மாறியபின், அதற்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள். குளவியின் விஷம் அதற்குள் இருக்கின்றது. அதன் நிலைகள் கொண்டு, இதுவே தன் இனத்தைப் பெருக்குவதற்கு, அடுத்த புழுவைக் கொண்டு வைக்கின்றது.

இதற்கு யாரும் சொல்லித் தரவேண்டியதில்லை. ஏனென்றால், அந்த உணர்வுக்குள் இருக்கக்கூடிய இயக்கம் அப்படிப் பட்டது.

புழுவிலிருந்து மனிதனாகத் தோன்றும் வரையிலும், ஒவ்வொரு உணர்வின் தன்மையில் மாற்றங்களாகி,
அறியக் கூடிய சக்தியும்,
தன்னைக் காத்துக் கொள்ளக் கூடிய உணர்வும்,
ஒவ்வொரு அணுவிற்குள்ளும் உருவாகி,
அதற்குண்டான உடலை வளர்த்து, 
எல்லாக் கழிவையும் கழிவாக்கக் கூடிய ஆற்றல், (நமக்கு) மனிதனுக்கு வருகின்றது.

நாம் சாப்பிட்ட ஆகாரத்தில், நஞ்சின் தன்மை இருந்தாலும் அதைக் கழித்துவிட்டு, நல்ல உடலாக நமக்குள் சேர்த்து, அந்த ஆற்றல் மிக்க மணமாக வருவதுதான் ஆறாவது அறிவு.

இந்த ஆறாவது அறிவால், நாம் சுவாசித்து, உயிரிலே பட்டவுடன் எதை எண்ணுகின்றோம்? கருணைக் கிழங்கில் விஷம் இருக்கின்றது. அதை அறிந்து, அந்த விஷத்தை நீக்கிவிட்டு, நாம் சாப்பிடுகின்றோம்.

இந்த ஆறாவது அறிவின் பெயர்தான், “சரவணபவா”,

“குகா”, அதாவது எதையுமே சரணடமடையச் செய்யக்கூடிய சக்தியாக, உடலான இந்தக் குகைக்குள் நின்று,

“கந்தா”, சிறுகச் சிறுக வருவதைத் தனக்குள் அணைத்து,

எத்தனையோ குணங்கள் கொண்டு, எத்தனையோ வகையான உணர்வுகளை,  நாம் நமக்குள் எடுத்தாலும், “கடம்பா” இதை எல்லாம் உருவாக்கி,

“கார்த்திகேயா”, ஆக, எத்தகைய தீய நிலைகள் வந்தாலும், இந்த உடலில் எப்படி, விஷத்தை மலமாக மாற்றி, உடலை நல்லதாக மாற்றி, அறிந்து செயல்படும் ஆற்றல்மிக்க சக்தியான, இந்த ஆறாவது அறிவின் தன்மை, தனக்குள் உண்டு என்ற, தன் நிலையைப் பாடச் செய்தார்கள். இதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இதைத்தான் ஆதிசங்கரர்,
“ஐகிரி நந்தினி, நந்தித மேதினி,
விஷ்வ விநோதினி” என்று,
நாம் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு உணர்வின் தன்மையும், ஒவ்வொரு உணர்வின் ஆற்றல் மிக்க சக்திகளும், நமக்குள் எப்படி வேலை செய்கின்றது? என்று, அந்தத் தத்துவத்தை அன்று காட்டினார்.
(பக்கம் 63-65)
ஆறாவது அறிவின் தன்மையைக் கொண்ட நாம், அதுதான் வள்ளி, தெய்வானை, அதாவது, முருகனுக்கு வள்ளி, தெய்வானை என்று இரண்டு மனைவி என்று சொல்வார்கள். இந்த ஆறாவது அறிவை சரவணபவா, குகா, கந்தா, கடம்பா, கார்த்திகேயா. பின் முருகா என்கிறோம்.

கருணைக் கிழங்கை வேக வைத்து, அதனுடைய விஷத்தை நீக்கிவிட்டு, நாம் சாப்பிடும் பொழுது, எப்படி மகிழ்ச்சியாக இருக்கின்றோமோ, அதைப் போலத்தான்
“சக்திவேல்”, நமது கூர்மையான எண்ணம்,
“ஞானவேல்”, கருணைக் கிழங்கில் உள்ள விஷத்தை நீக்கியநிலை.

அதே சமயம், “வேலும் மயிலும்” என்றால், கருணைக்கிழங்கில் உள்ள விஷத்தை நீக்கிவிட்டு, நாம் சாப்பிட்டவுடன், அந்த ஞானத்தால் சாப்பிட்டவுடன், உடலில் மகிழ்ச்சியாகின்றது. மயில் எப்பொழுதுமே, தோகை விரித்து ஆனந்தமாக ஆடுகின்றது.

மயிலின் காலடியிலே என்ன இருக்கின்றது? பாம்பு, இப்பொழுது, நாம் கருணைக் கிழங்கை வேகவைக்கும் பொழுது, விஷமெல்லாம் நீங்கினால், மிஞ்சுவது கொஞ்சம் விஷம்தான்.

வேகவைத்த, அந்தக் கருணைக் கிழங்கை நாம் சாப்பிடும் பொழுது, நம் உடலிலிருக்கக்கூடிய மூல வியாதிகள், கை கால் குத்தல், மூட்டுவலி, போன்றவைகள் எல்லாம், மிஞ்சிய விஷத்தன்மையால் நீங்கிவிடும்.

இந்த விஷத்தை நீக்கக் கூடிய நிலைகள், அதனுடைய சக்திகள் நமக்குள் அடங்கி, நமக்குள் வரும் துன்பத்தை நீக்கக் கூடிய நிலைகளாக நமக்குள் வரும்.

அதுதான் சரவணபவா, குகா, கந்தா, கடம்பா, கார்த்திகேயா, இந்த ஆறாவது அறிவின் தன்மை. இதையெல்லாம் நாம் சமைத்து உட்கொள்ளும் நிலைகள். ஆக, முருகன் யார்? ஆறாவது அறிவு. மயிலின் காலடியில் பாம்பு, விஷம், அதற்குக் கதை எழுதியிருப்பார்கள்.

அசுரருடன் முருகன் போர் செய்தான். போர் செய்யப்படும் பொழுது, அசுரன் இறக்கப்படும் பொழுது, “முருகா, நான் உன் காலடியிலே இருக்கின்றேன், எனக்கு வரம் கொடு” என்றான்.

ஆக, நம் வாழ்க்கையில் எந்த நிலை இருந்தாலும், ரோட்டிலே போனாலும், ஒருவன் தவறு செய்கிறான் என்றால், அந்த ஆத்திரமான உணர்வுகள் நம்மைத் தூண்டும். அப்பொழுது, அது நமக்குள் போராகின்றது. ஆனால், போருக்குப் போகும் பொழுது, மனிதன் இந்த உணர்வைத் தடுத்து, அதை அழிக்க வேண்டும்.

ஆக, உணர்வை மாற்றக் கூடிய சக்தி வரப்படும் பொழுதுதான், அதை அசுரனை வென்றான் என்று சொல்கின்றோம்.

கருணைக் கிழங்கில் உள்ள விஷத்தை நீக்கும் பொழுது,
அந்த அசுரச் சக்தியை  நீக்குகின்றோம்.
அப்பொழுது, நாம் கருணைக் கிழங்கைச் சாப்பிட்டவுடன்,
அது நம் காலடியில் இருக்கின்றது.
எனக்குள் இருக்கும் விஷத்தின் தன்மை, ஆக்கபூர்வமான சக்தியாக இருக்கின்றது. ஆகையினாலேதான், அதை இங்கே காட்டுகின்றார்கள்.

அவர்கள் துன்பப்படும் வேதனையைத் துரித நிலைகளில் இழுத்துவிடும். ஆக, அங்கிருக்கக்கூடிய விஷத்தின் தன்மையை அதிகமாகக் கூட்டி, “எல்லோருக்கும் நன்மை செய்தேனே, எனக்கு இந்த நிலை வந்துவிட்டதே” என்று சொல்லிக் கொண்டிருப்போம்.

இதைப் போல நம்மையறியாமல் வந்து சேரும் இயற்கையின் தன்மையில், இதைப் போன்ற நிலைகளை மாற்றி அமைப்பதுதான் “மெய்ஞானம்”.
(பக்கம் 67-71)
நாம் எல்லோரும் பாசத்தால் கட்டுப்பட்டு இருக்கிறோம். நாம் தவறு செய்யாமலேயே, மூதாதையர்கள் காட்டிய நிலைகள் கொண்டு, பக்திமார்க்க நிலைகளில், அவர்கள் எந்தெந்த தெய்வங்களை வணங்கினார்களோ, அந்த தெய்வத்தின் நிலைகள் கொண்டு, இவர்கள் விட்ட சாபத்தினால், மற்றவர்கள் அதை வணங்கப்படும் பொழுது, அதே உணர்வுகளை, மற்ற மனிதரின் உடலில் பதிவு செய்து கொள்ளுகின்றோம்.

ஆகையினால், அந்த வம்சாவழிகளின் நிலைகள் கொண்டு, அந்த தெய்வத்தை வணங்கி, அதே முறைகள் கொண்டு சாபமிட்டாலும், அதே தெய்வத்தின் வழியின் நிலைகள், அந்த வம்சாவழியினர் செயல்படும் பொழுது, அதுவே வந்து சேர்ந்து விடுகின்றது. ஆக, அந்தக் கொடி வழிகளில் வருகின்றது.

அந்தக் கொடி வழியின் நிலைகள் இங்கே வந்து, இன்று நாம் எவ்வளவு அன்பையும், பாசத்தையும் செலவு செய்தாலும், நமக்குள் இந்த மூதாதையர்கள் இட்ட சாப அலைகளின் நிலைகள் வந்துவிட்டால், நம்மை அறியாமலேயே பல தீயவினைகள் வந்துவிடுகின்றது.

இன்று குடும்பத்திற்குள் சென்றாலும்,
நாம் நிம்மதியாக இருக்க வேண்டுமென்று எண்ணுவோம்.
இந்த நேரம் (சாபத்தின் நிலை) வந்தவுடன்,
நம்மையறியாமலேயே, வேதனைப்படச் செய்யும் நிலைகள்தான்
திருப்பித் திருப்பி வந்து கொண்டே இருக்கும்.

ஆக, அவ்வாறு வேதனயான உணர்வுகளை வளர்த்துக் கொண்டால், மகிழ்ச்சி என்ற எல்லைக்குச் செல்லும் பொழுது, “டமார்” என்று சிதறுண்டு போகும். இப்படி ஏராளமான குடும்பங்கள் உண்டு.

அப்படி மகிழ்ச்சியின் எல்லையினுடைய நிலைகள் வரப்படும் பொழுது, சிதறுண்டு போகும் நிலையும், இந்தப் பாசத்தினால் எடுத்துக் கொண்ட நிலைகளில், எல்லோருக்கும் நன்மை செய்தாலும், அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகளாலே, கை கால் குடைச்சல் வரும். “ஐயோ, நான் எல்லோருக்கும் நல்லதுதானே செய்தேன், என் கை கால் எல்லாம் குடையுதே, என் உடலெல்லாம் வலிக்கின்றதே, ஆண்டவன் என்னைச் சோதித்துக் கொண்டிருக்கிறான்” என்பார்கள்.

ஆக, இதைப் போல நாம் நம் உணர்வுக்குள், நல்லதைச் செய்தாலும், “நல்லதைக் காக்கும் ஆற்றல்” நம்மிடம் இல்லை. அந்த நல்லதைச் செய்வதற்கு, நமக்குள், அந்த நல்லதின் நிலைகள் நிலைத்திருக்க வேண்டும்.

ஆனால், நாம் பாசத்திலே, பிறருக்கு நுகர்ந்துதான் (அவருடைய உணர்வுகளை) நல்லது செய்ய வேண்டுமென்று எண்ணுகின்றோம். அது நமக்கும் நல்லவைகளாக இருக்க வேண்டும்.

ஆகையினாலேதான், அன்று மெய்ஞானிகள் எடுத்ததைப் போல, நாம் எந்தத் துன்பத்தைக் கண்ணுற்றுப் பார்த்தாலும், அந்த நல்லதைக் காப்பதற்கு, யாம் சொல்லும் இந்த தியான முறைப்படி, துருவ நட்சத்திரத்தை எண்ணி, அதிலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளியை உங்களுக்குள் எடுத்துக் கூட்டிக் கொண்டு, “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கின்றேன்.

நாம் தவறு செய்யாமலேயே, பிறர் செயும் தவறை கண்ணுற்றுப் பார்த்துக் கொண்டிருந்தால் போதும், அதாவது, நீங்கள் ஒரு பத்து நாட்கள் சண்டை போடுவோரைப் பார்த்துக் கொண்டிருந்தால் போதும், உங்கள் வீட்டில் நீங்களும் சண்டை போட்டுவிடுவீர்கள்.

அப்படி, பத்து நாட்கள் சண்டை போடுவோரைப் பார்த்தபின், உங்கள் உடலில், கை கால் குடைச்சல் வரும், தலைவலி வரும். உங்களை அறியாமல் இனம் புரியாத நிலைகள் வரும்.

ஏனென்றால், கூர்மையான உணர்வின் தன்மைகள் நம்மை அறியாமலேயே, நமக்குள் வந்து, நமக்குள் பல தீய நிலைகளை நமக்குள் உருவாக்கிவிடும்.

இதைப் போன்ற நிலைகள் எல்லாம், நாம் பாசத்தின் நிலைகள் கொண்டு, மக்களிடம் ஒன்றி வாழும் பொழுது வரக்கூடிய உணர்வுகள்.

இதிலிருந்து மீண்டு வருவதற்கு, அன்று மகரிஷிகள் கொடுத்த, அந்த மெய்ஞானத்தின் சக்தியை நாம் பெறுவதற்கு, யாம் சொல்லும் இந்த தியானத்தைச் செய்ய வேண்டும்.

அவ்வாறு தியானத்ததின் நிலைகள் கொண்டு, நம் குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு, “ஓம் ஈஸ்வரா” என்று உங்கள் உயிரை எண்ணி, வாழ்க்கையில் அடிக்கடி, இந்த ஆத்ம சுத்தியைக் கடைப்பிடித்தால், அந்த ஆத்ம சுத்தியின் துணை கொண்டு, உங்களுக்குள் வரக்கூடிய துன்பங்கள் அனைத்தையும் துடைக்க முடியும். எமது அருளாசிகள்.
(பக்கம் 73-78)
நான் நல்லதை எண்ணும்பொழுது, குறையினுடைய உணர்வுகளை நாம் சுவாசித்து விடுகின்றோம். சுவாசித்த உணர்வுகள் நம் உடலுக்குள் சென்றவுடன், பல நோய்களாக மாறிவிடுகின்றது.

நாம் எதைத் தவறென்று சொல்லுகின்றேனோ, அந்தத் தவறான செயலைச் செய்யும் நிலைக்கே நான் வந்துவிடுகின்றேன்.
எதையெல்லாம் தவறென்று சொல்லுகின்றேனோ,
எதையெல்லாம் தவறென்று சுட்டிக் காட்டுகின்றேனோ,
நான் சுட்டிக் காட்டக் காட்ட,
இந்த உணர்வின் சக்தி எனக்குள் கூடி,
அதே தவறைச் செய்யும் நிலைக்கே
என்னை இட்டுச் செல்கின்றது.

சாதாரண வாழ்க்கையில் இதைப் போன்ற நிலை வந்து விடுவதாலே, இதை நாம் மாற்றுவதற்குத்தான், அன்று நமது குருநாதர், இந்த உணர்வின் செயல்கள் எப்படிச் செயல்படுகின்றது? என்ற பேருண்மையைக் காட்டினார்.

கோலமாமகரிஷியின் தத்துவம், ஆதிசங்கரர் மூலம் இன்று வரை வந்தாலும், அந்தத் தத்துவத்தை மறைத்துவிட்டார்கள். 3500 ஆண்டுக்குள் மறைந்துவிட்டது.

இன்று, சங்கராச்சாரியார் இருந்தார் என்று சொல்லுகின்றார்கள். அவர் பிறந்த நாளை எடுத்துக் கொண்டார்கள். அவர் மறைந்த நாளை, இன்னும் யாரும் கணக்கிடவில்லை. மறைந்த சரீரம் எங்கிருக்கிறதென்றும் சொல்லவில்லை. மறைந்த தேதியுமில்லை. மறைந்த இடமுமில்லை. வயது மட்டும் 35 வரையிலும் இருந்தார்.
அந்த மகானுடைய அருள் சக்திகள், இந்தக் காற்றிலே மிதந்து கொண்டிருக்கின்றது. அந்த உணர்வின் சக்தியை, உங்களுக்குப் பெறச் செய்வதற்குத்தான், இந்த உபதேசம்.

கோலமாமகரிஷி, ஆதிசங்கரருடைய உடலிலிருந்துதான் மெய் ஒளியைப் பெற்று, விண் சென்றார். ஆதிசங்கராச்சாரியருடைய உயிராத்மாவும், விண்வெளி சென்றுவிட்டது. அவர்களெல்லாம், இன்று விண்வெளியில் நட்சத்திரமாக இருக்கின்றார்கள். அவர்கள் உணர்த்திய இந்த அருள் வழியை, நாம் ஒவ்வொரு நிமிடமும் பெற வேண்டும்.;

குடும்பத்திற்குள் கணவன் மனைவிக்குள் சண்டை வந்தாலும், அடுத்த நிமிடமே, மகரிஷிகளின் அருள் சக்தி என் கணவர்/மனைவி ஜீவாத்மா பெற வேண்டும். அவர் பேச்சும், மூச்சும் உலக மக்களை நன்மை பெறச் செய்ய வேண்டும். அவர் சொல்லிலே இனிமை பெற வேண்டும் என்று, நீங்கள் அடிக்கடி, இந்த “ஆத்ம சுத்தி” செய்து கொண்டு, இந்த உணர்வுகளைச் செலுத்துங்கள்.

சில குடும்பங்களில், மூதாதையர்கள் நான்கு வம்சத்திற்குமுன், ஒருவருக்கொருவர் பல நிலைகளைச் செய்திருப்பார்கள். குடும்பம் எப்படிப் பிரிந்ததோ, உன் குடும்ப வம்சமே அதைப் போல ஆகும் என்று சொல்வார்கள்.

அவ்வாறு சொல்லியிருந்தால், அந்த வம்சாவழியினுடைய நிலைகளில், இந்த உணர்வுகள் சென்று விட்டால், இன்று, ஒன்றும் அறியாதவனிடத்திலும், இன்னல்பட்டுக் கொண்டு இருப்பார்கள்.

இன்று விஞ்ஞான உலகத்தின் நிலைகளில், ஒவ்வொருவரும் சாபமிடும்  நிலைகளும், சாபமிட்டே இறக்கும் நிலைகளும், வெறித் தன்மையான உணர்வுகளைத்தான் தமக்குள் வளர்த்து, இறப்போர் அதிகம். இந்த உணர்வின் தன்மைகள் நமக்குள் பட்டபின், எத்தனையோ இன்னல்கள் நமக்குள் வந்து கொண்டுதான் இருக்கின்றது.

இதிலிருந்தெல்லாம், நாம் தப்பித்து வாழவேண்டுமென்றால், ஆத்ம சுத்தி என்ற நிலைகளை, நாம் எடுத்துச் சுத்தப்படுத்த வேண்டும். இந்த மனித உடல் கிடைப்பது, மிகமிக அபூர்வம். ஆகையினால், இந்த உடலுக்குள்ளேயே சொர்க்க பூமியை நாம் காணவேண்டும்.

“முருகா!, அழகா!” என்கிற பொழுது, நம் உடலுக்குள், மகிழ்ச்சியான எண்ணங்களைத்தான், நாம் தோற்றுவிக்க வேண்டும். அதுதான் முருகனின் ஆறாவது அறிவின் தன்மைகள்.
(பக்கம் 81-86)
இப்பொழுது யாம் பேசுகின்றோம் என்று எண்ண வேண்டாம். இவை அனைத்துமே, அன்று கோலமாமகரிஷி, எப்படி ஆதிசங்கரருடைய உடலிலிருந்து வெளிப்படுத்தினாரோ, அதே உணர்வின் தன்மையை அவர்கள்தான் வெளிப்படுத்துகின்றார்கள். அந்த உணர்வின்  ஆற்றலைத்தான், யாம் உங்களுக்குள் இப்பொழுது பாய்ச்சிக் கொண்டிருக்கின்றோம்.

ஆக, பாய்ச்சும் இந்த உணர்வினை, நீங்கள் துருவ தியானத்தின் நிலைகள் கொண்டு ஆத்ம சுத்தி செய்யும் பொழுது, உங்கள் உடலில் இருக்கக்கூடிய, எத்தகைய நோயானாலும், எந்தக் கவலையானாலும், குடும்பத்தில் எந்தச் சிக்கல் இருந்தாலும் அது நிவர்த்தியாகும்.

நீங்கள் ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்து கொண்டு, நாளை எல்லாம் நல்லதாக இருக்கவேண்டுமென்று நீங்கள் சொல்லி வாருங்கள். உங்களுக்குள் நல்லதாவதைப் பார்க்கலாம்.

ஒவ்வொருவரும் ஆத்ம சுத்தி செய்து, உங்கள் வாழ்க்கையில் இருக்கக் கூடிய துன்பத்தைப் போக்கப் பயன்படுத்துங்கள். மீண்டும் மீண்டும், இந்த வாக்கை, யாம் உங்களுக்குக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றோம்.

அன்று ஆதிசங்கரர் தன் உணர்வின் தன்மையை, மற்றவர்கள் அறியாமையிலிருந்து விடுபட்டு, மெய் ஒளியின் தன்மை பெறவேண்டும் என்று, மெய் உணர்வைத் தனக்குள் வளர்த்து, உணர்த்தி, அதை வெளியே பரப்பிவிட்டு, இளமைப் பருவத்திலே விண் சென்றார்.

அந்த இளமைப் பருவத்தில் உணர்த்திய, உணர்வின் ஆற்றல், மிக்க ஆற்றல்” கொண்டது. ஆக, அந்த மகரிஷியின் அருள் சக்தியை, நீங்கள் எல்லோரும் பெறவேண்டும், என்ற ஆசையிலேதான் சொல்லுகின்றோம்.

ஆகவே, குடும்பங்களில் கணவன் மனைவி இருவரும் ஆத்ம சுத்தியை அவசியம் செய்ய வேண்டும். ஏனென்றால், இதைக் காட்டிலும் இன்னொரு சரீரம் பெறப் போவதில்லை. இந்தச் சரீரத்தில் இருந்தேதான், நாம் பெற வேண்டும்.

கணவனும் மனைவியும் ஆத்ம சுத்தி செய்து கொண்டு, மகரிஷிகளின் அருள் சக்தியை அவர் ஜீவாத்மா பெற வேண்டும் என்று, கணவன், மனைவியை நினைக்க வேண்டும், மனைவி, கணவனை நினைக்க வேண்டும்.
இருவருடைய உணர்வின் நிலைகள், ஒரு நிலை கொண்டு,
சரியான முறையில் யாம் சொல்லும் தியானத்தைச் செய்து வந்தால்,
இதில் நீங்கள் சொர்க்கபூமியைக் காணலாம்.

ஒரு குடும்பத்திற்குள், கணவன் மனைவி இரண்டு பேருமே மகிழ்ச்சியாக இருந்தால்தான், அது சொர்க்கலோகம். ஆனால், கணவன் மனைவிக்குள் ஒவ்வொரு நிமிடமும், வேற்றுமை உணர்வு வந்தால், நரகலோகம்தான். ஆக, நாம் நரகலோகத்தை இந்த உடலுக்குள் சிருஷ்டிக்கின்றோம். அடுத்து, இருள் சூழ்ந்த பிறவிக்குப் போகின்றோம்.

யாம் இப்பொழுது ஏற்படுத்தும் இந்தச் சந்தர்ப்பத்தில், அருள் உணர்வைப் பெற்றபின், குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒற்றுமையாக இருப்பதற்கு, யாம் கொடுக்கும், இந்த வாக்கின் நிலைகளைப் பயன்படுத்தி, அந்த மகரிஷிகளின் அருள் ஒளிகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் தவறு செய்யவில்லை என்றாலும், முந்தைய சாப நிலைகளிலிருந்து வரும், முன்னோர்களின் உணர்வின் அணுக்கள் நமக்குள் உண்டு.

எண்ணங்களை, நல்ல குணங்களைச் சிதறடிக்கும் அந்த உணர்வுகளிலிருந்து, உங்களை நீங்கள் மீட்டு, ஒவ்வொருவரும் மகழ்ச்சியின் தன்மை பெறவேண்டுமென்று, யாம் “எல்லா மகரிஷிகளையும்” வேண்டி, அந்த அருள் ஒளியைக் கேட்கின்றோம்.

யாம் அந்த மகரிஷிகளின் அருள் ஒளிகளைப் பெற்று, இந்த உணர்வின் தன்மை, எமக்கும் சேர்ந்ததனாலே, எமக்கும் மகிழ்ச்சி ஏற்படுகின்றது. அந்த மகிழ்ச்சியான உணர்வுகளை நீங்கள் பெற வேண்டுமென்ற ஆசையினால், யாம் இந்த உணர்வின் சக்தியை உங்களுக்குள் செலுத்தி, பதியச் செய்கின்றோம்.

இதன்படி நீங்கள் செய்தீர்களென்றால், எல்லா மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெற்று, உங்களுக்குள் இந்தச் சொர்க்கபூமியை, மகிழ்ச்சியான எண்ணங்களைப் பார்க்கலாம். உங்கள் பேச்சும், மூச்சும், கணவரிடத்தில்/மனைவியிடத்தில் மகிழ்ச்சியை ஊட்டும். அவருடைய உணர்வும், உங்களுக்கு மகிழ்ச்சியை ஊட்டும்.

ஆக, இரண்டு சரீரமும் ஒன்று சேர்ந்து, இந்த உணர்விலே சொர்க்கத்தைக் காண்பீர்களென்றால், இந்த உடலை விட்டுச் சென்றபின், உங்கள்  உயிராத்மாக்கள் இரண்டுமே, விண் செல்லும்.

துருவ நட்சத்திரம், சிவசக்தியின் ஸ்வரூபம்” கொண்டுதான், துருவமாக இருக்கின்றார்கள்.
ஆக, இதைப் போன்று, என்றும் பதினாறு என்ற நிலைகளை நீங்கள் அனைவரும் பெறலாம். மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளும், எமது அருளும், உங்கள் அனைவருக்கும் உறுதுணையாக இருக்கும்.
(பக்கம் 87-91)
சூரியனுடைய நிலைகளை எடுத்துக் கொண்டால், நவக் கோள்கள். ஆனால், அதே சமயம் இந்தப் பிரபஞ்சத்திற்குள் எத்தனையோ புதிது புதிதாக உருவாகிக் கொண்டு, அது பிரபஞ்சத்திற்குள் எண்ணிலடங்காத, இந்த நட்சத்திரம், அந்த நட்சத்திரம் என்று, விஞ்ஞானிகள் சொல்வார்கள்.

இவைகளெல்லாம், இந்தப் பிரபஞ்சத்தில் பிற மண்டலங்களிலிருந்து வந்தாலும், அதைத் தனக்குள் சமைத்தெடுத்து, அந்த மண்டலங்களிலிருந்து, வரும் உணர்வின் சத்தின் நிலைகளும், சூரியனின் ஒளிக் கதிர்களும், மற்றதுடன் ஊடுருவி, இந்தக் காந்த அலைகள் பெற்று, இந்த உணர்வுக்குள் திரண்டு, இந்தச் சக்தியின் தன்மை எடுத்து, ஆனால், எந்தக் கோளுக்கும் சம்பந்தப்படாதபடி, அலையின் தன்மையில் தனக்குள் சுழன்று கொண்டிருக்கும்.

இதைப் போன்றுதான், இன்று மனித வாழ்க்கையில், நாம் ஒவ்வொருவரும், ஒரு குடும்பமான நிலையில் சுழன்று கொண்டிருந்தாலும்,
தற்குள் வேற்றுமையான உணர்வுகள் புகுந்து விட்டால்,
அந்தக் குடும்பத்திலிருந்து பிரிந்து செல்வது போன்று,
அந்தக் குடும்பத்திற்குள், அதிகமான தீயவினைகளை உண்டாக்கும்.

இதே மாதிரி, பிரபஞ்சத்திலிருந்து வரக்கூடிய நிலைகள் நம் சூரியக் குடும்பமான நிலைகளில், பூமிக்குள் ஈர்க்கப்படும் பொழுது, மற்ற விஷ அலைகள் நமது பூமிக்குள் வந்துவிட்டாலோ, பூமியின் நிலைகள் சிதறுண்டு போகும்.

ஆக, இதற்குள் இது பாதுகாப்பான நிலைகள் கொண்டு, இன்று விஞ்ஞானிகள் சொல்வது போன்று, “ஓசோன் திரை” சூரியனிலிருந்து வரக்கூடிய கதிரியக்கச் சக்திகளைத் தடுக்கும் ஆற்றல் பெற்றது.

அதிலிருந்து வெளிப்படுத்தும் அதே அலைகள், நம் பூமியிலிருந்து வெளிப்படும்போது, இந்த உணர்வின் தன்மையை, அந்தச் சூரியக் காந்த அலைகள் இழுத்து, அது அடுக்கடுக்காக இருந்தவுடன், அதைப் பிளந்து ஊடுருவி வரும் தன்மை, மற்ற விஷத்தன்மைகளுக்கு இழுக்கப்படுகின்றது.

அதைப் போன்று, நாம் நம் உடலுக்கு மெய்ஞானியருடைய உணர்வலைகளை நமக்குள் சேர்த்து, தீமைகள் நம்மைச் சாடாதவண்ணம், நாம் அடிக்கடி “ஆத்ம சுத்தி” செய்து, நம் உணர்வின் மத்தை நமக்கு ஒரு காபந்தாகக் கொண்டு வரவேண்டும்.

ஆக, அவ்வாறு நாம் செய்து கொண்டால்,
பிறருடைய எண்ணங்கள் நம்மைத் தாக்கி,
நம்மை உணர்ச்சிவசப்படச் செய்து,
நமக்குத் தீமையான எண்ணங்களை உருவாக்கி,
அதன் வழியிலே நம்மை இட்டுச் செல்லும் நிலையிலிருந்து
நமக்குள் அந்த மெய்ஞானியின் அருள் ஒளியாலே,
காத்துக் கொள்ளும் நிலைகள் நமக்குள் வரும்.

உதாரணமாக, உடலை விட்டுப் பிரிந்தவர்கள் நல்ல மனிதர்களாக இருந்திருப்பார்கள். நல்லது செய்திருப்பார்கள். அந்த மாதிரி மனிதர்களை நாம் வேதனையோடு எண்ணினால், அந்த உயிராத்மா நமக்குள் வந்துவிடும், அல்லது சங்கடமான எண்ணங்கள் நம் உடலில் வந்துவிடும்.

அதையெல்லாம் தவிர்ப்பதற்கு, நீங்கள் முதலில் ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும். பின் யாரொருவர் இறந்தார் என்று கேள்விப்பட்டவுடன், “ஈஸ்வரா” என்று எண்ணிவிட்டு, “சப்தரிஷி மண்டலங்களின் ஒளிகாந்த சக்தியை” நாங்கள் பெறவேண்டும், எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்று, உடல் முழுவதும் நினைவைச் செலுத்த வேண்டும்.

பின், இறந்த அந்த உயிராத்மாவை நினைத்து, அந்தக் குடும்பத்தாருடன் சேர்ந்து, அவர்கள் உணர்வும் சேர்ந்து. நம் உணர்வும் ஒன்று போல சேர்ந்து, அந்த உயிராத்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டுமென்று, உந்தித் தள்ள வேண்டும்.

ஏனென்றால், சிறுதுளி பெருவெள்ளம். இவ்வாறு, தியானம் இருப்பவர்கள் அனைவரையும், பௌர்ணமி தியானத்தில் இதற்காகத்தான், ஏகோபித்த நிலையில் பிரார்த்திக்கச் செய்கின்றோம்.

உங்கள் புலனறிவை விண்ணில் செலுத்தச் செய்து, இறந்தவர்களுடைய உயிராத்மாக்களை, அவரின் குடும்பத்தார்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தால், சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரும் பேரொளியை, சுலப நிலைகளில் பெற்று, வரும் தீமைகளிலிருந்து விடுபட முடியும்.
(பக்கம் 91-95)
நாம் ஒரு தவறும் செய்திருக்க மாட்டோம். எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டுமென்று எண்ணியிருப்போம். பஸ்ஸில் போய்க் கொண்டிருக்கும் பொழுது, திடீரென்று ரோட்டில் விபத்து நடந்துவிட்டால், அதை நாம் பார்த்தால், இன்னொரு ஆன்மா நம் உடலுக்குள் வந்துவிடுகின்றது.

அதிர்ச்சியான செய்திகளைக் கேட்டோம் என்றால், அந்த அதிர்ச்சியான நிலைகளில் அதனால் பயந்தோம் என்றால், அதிர்ச்சியில் இறந்த உயிரான்மா, நம் உடலில் ஆவியாக வந்து, தொல்லை கொடுக்கும். அதிலிருந்து தப்பமுடியாமல் எத்தானையோ பேர் இருக்கின்றார்கள்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஒவ்வொரு உடலிலும், ஏதோ ஒரு வகையில் வந்து புகுந்துவிடுகின்றது. இன்னொரு ஆன்மா எந்தத் துன்பப்பட்டதோ, அதையெல்லாம் நம் உடலில் செலுத்திவிடும்.

இதைப் போன்ற நிலைகளை மாற்றுவதற்கு, இறந்தவர்களுடைய உயிராத்மாவை விண் செலுத்த வேண்டும். ஏங்கி இழுத்துவிடக் கூடாது.

இந்த தியானம் செய்தபவர்கள் நாம், அவர்களை உணர்வாலே உந்தி, விண் செலுத்த வேண்டும். இந்தச் சக்தி கொண்டு, எல்லோரும் சேர்ந்து தள்ளும் போது, அந்த மண்டலத்தில் அனுப்பி வைத்து விடுகின்றோம்.

ஆக, அந்த சப்தரிஷி மண்டலங்களின் அருள்சக்தி பெற வேண்டுமென்று, எண்ணும்போது
அந்தக் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு,
இவர்களுடன் சேர்ந்த உணர்வு அது,
அந்த உணர்வுடன், ஆத்மா அங்கிருக்கும் பொழுது,
எண்ணும் பொழுது, நினைவு வேகமாகச் செல்லும்.

சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிப்படும் சக்தியை எடுத்து, அவர்கள் வாழ்கின்றார்கள்.
நாம் எப்படி இந்த பூமியிலே விளைவதைச் சாப்பிடுகிறோமோ,
இந்த பூமியில் காற்றிலிருக்கக் கூடிய சக்தியை,
மரம், செடி கொடிகள், எப்படித் தனக்குள் ஈர்த்து வாழ்கிறதோ,
இதைப்போல, நாம் இந்த மனித உடலிலிருந்து,
சப்தரிஷியினுடைய உணர்வின் ஒளிகளைப் பெற வேண்டுமென்று,
எண்ணி ஏங்கிச் சேர்த்துக் கொண்டவர்கள்,
இந்த உயிராத்மாவை அங்கே அனுப்பி வைத்தோம் என்றால்,
இந்த மனித உணர்வால், சமைத்து அனுப்பிய அந்த அலையை, அவர்கள் சுவாசிப்பார்கள்.

அப்படிச் சுவாசித்து, அந்த உணர்வு கொண்டு, அந்தச் சரீரம் ஆத்ம சரீரமாக, ஒளிச் சரீரமாக வளர ஆரம்பிக்கும். அவர்கள் தியானமிருந்தார்களோ, இல்லையோ, அவர்களை நாம் அனுப்பி வைத்து விடுகின்றோம்.

முதலில் அனுப்பி வைக்கும் பொழுது, அந்தச் சக்தி கிடைக்கின்றது. பின், அதன்வழி கொண்டு நாம் இந்த எண்ணத்தில் இருக்கும் பொழுது, நம் ஈர்ப்பு அங்கே இருக்கும்.

இதை நம் குழந்தைகளுக்குப் பழக்கிவிட்டால், அவர்கள் உந்தினால், ரொம்பச் சுலபமாக, நாம் அங்கே சென்று விடுகின்றோம். இப்படித்தான், ஞானியர்கள் எல்லாம் போனார்கள்.

அதற்காக வேண்டித்தான், அந்த மெய்ஞானியர்கள், அவர்கள் எவ்வளவு பெரிய சக்தியைப் பெற்றிருந்தாலும், மக்கள் மத்தியிலே சொல்லி, அவர்கள் எண்ணத்தைத் தூண்டச் செய்து, ஒவ்வொருவரிடத்திலும், அந்தத் துன்பத்தைப் போக்கச் செய்து, அந்த மகரிஷியினால் எனக்கு நல்லதாக ஆனது என்று அவர்களை எண்ணச் செய்து, அந்த எண்ணத்தை அவர்கள் சேர்த்து, அவர்கள் வழிகளில், அவர்கள் உணர்வின் ஆற்றல்மிக்க நிலைகளில் சேர்ந்து, விண்சென்றார்கள்.

அவர்கள் விண் சென்ற வழியில், பின்னால் வந்தவர்கள் அதைக் கடைப்பிடித்தது கொஞ்ச காலம்தான். அரச நிலைகளில் பக்தி மார்க்கம் வந்ததுமே, எல்லாமே மாறிவிட்டது.

விண் செல்லும் நிலை முழுவதும் மாறி, மீண்டும் இந்த மனிதக் கூண்டுக்குள் தான் புகுந்து கொண்டிருக்கும் நிலையாகிவிட்டது. இதையெல்லாம் மாற்றியமைத்து, அந்த மெய்ஞானிகள் காட்டிய வழியில் விண் செல்ல வேண்டும்.

முன்னோர்களையும், தாய் தந்தையரின் உடலை விட்டுப் பிரிந்த உயிராத்மாக்களையும், சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்கின்றோம். நாம் உடலுடன் இருக்கின்றோம். அவர்கள் ஆத்மாக்களை அனுப்பி விடுகின்றோம்.

தாய் உணர்வை எடுத்தே பழகுகின்றோம். அந்தத் தாயின் அருளாசி பெற வேண்டுமென்று எண்ணும் பொழுது, இங்கிருந்தே கிடைக்கிறது. அந்த உணர்வுடன், அந்த சப்தரிஷி மண்டலங்களை எண்ணினால், அங்கிருப்பதை மிகச் சுலபமாகப் பெறுகின்றோம்.

இதற்குத்தான், அன்று ஞானியர்கள் அம்மா அப்பாவை, வணங்கப் பழகச் செய்தார்கள்.
ஆகவே, எல்லோரும் வீட்டில் கூட்டுக் குடும்ப தியானமிருந்து,
அம்மா அப்பாவை தெய்வமாக எண்ணி,
அவர்கள் உயிரை ஈசனாகக் கருதி,
அம்மாவுடைய கண்ணைக் கண்ணனாக எண்ணி,
அப்பாவுடைய உடலைச் சிவனாகக் கருதி,
அவர்கள் உடலிலுள்ள,
நம்மை உருவாக்கிய நல்ல குணங்கள்,
நம்மை உருவாக்கிய தாய் தந்தையரிடம்தான் இருக்கிது என்று,
அவர்கள நாம் வணங்கிப் பழக வேண்டும்.
(பக்கம் 96-101)
இன்று விஞ்ஞான உலகத்தின் நிலைகள் அதிகமாக இருப்பதால், ஒவ்வொருவரும் வாரத்தில் ஒரு நாள், கிராமத்தில் ஒன்றும் தெரியாதவர்கள் இருந்தாலும்கூட, கூட்டுத் தியானம் இருந்து பழகுங்கள்.

உங்களுக்குள் ஞானம் தெரியும். ஞானத்தை அபூர்வமான நிலைகளில் பேசக்கூடிய ஆற்றலும் கிடைக்கும். மெய்ஞானியரின் அருள் ஒளி கிடைத்தால், ஞானம் கிடைக்கும்.

ஆதிசங்கரர் படித்தவரல்ல. அவர் உடலில் ஆற்றல் கிடைத்தது. இராமலிங்க அடிகள் படித்தவரல்ல. அவருக்குப் படிப்பு வரவில்லை என்று,  வீட்டில் உதை வாங்கியவர்தான். அவருடைய சந்தர்ப்பம், இதைப் போல மெய்ஞானத்தை அறிந்த ஆத்மா, அவருடைய உடலுக்குள் வந்து, பல நிலைகளைச் சொன்னது.

கோலமாமகரிஷி அரச நிலைகளில் வந்தவர். அவர் அரச நிலை எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, மெய் ஒளியைக் காணவேண்டும் என்று வந்தவர்.

ஆதிசங்கரர் படித்தவரல்ல. கோலமாமகரிஷி, அவர் உடலை விட்டு வெளியே வந்து,
ஆதிசங்கரர் உடலில் புகுந்து, ஞானத்தைப் பேசி,
அந்த உடலிலிருந்து இவரும் ஞானத்தைப் பெற்று,
அந்த ஆத்மாவிற்கும் ஒளி கொடுத்து விண் சென்றார்கள்.
ஆக, இந்த மாதிரி நாம் ஒருவருக்கொருவர், மனித சரீரத்திலிருந்து
மனிதருடைய நிலைகளை எடுத்துத்தான், விண் செல்ல வேண்டும்.

இன்று கம்ப்யூட்டரில் இந்த அலைவரிசை வருகிறதென்றால், அதை இயந்திரத்தினால் கேட்டறிவோம். ரேடியோவைக் கேட்போம். T.V.யைப் பார்ப்போம், எல்லாம் பார்ப்போம். அந்த உணர்வுகளெல்லாம் நம் உடலுக்குள் உள்ள செல்களுக்குள் பதிந்துவிட்டது.

விஞ்ஞான அறிவு, நம் உணர்வுடைய செல்லுக்குள் பதிந்தவுடன், மனிதன் விட்ட மூச்சலைகளை, இதுதான் “செல்” என்று எடுத்துக் கொண்டான்.

இதைக் கம்ப்யூட்டர் அலைவரிசையில் வைத்துக் கொண்டு, மனிதனுக்கு எப்படி,
இந்த உடலிலிருந்து வரக்கூடிய வாசனையை,
இந்த உணர்வின் நிலைகளை,
அந்த உயிராத்மா, அது எப்படி செயல்படுத்துகின்றதோ,
அதே மாதிரி எலக்ட்ரானிக் நிலையை உணர வைத்து,
அந்த அழுத்தத்தின் நிலைகள், இந்த உணர்வின் நிலைகளை,
“சிலிகான் (silicon)” என்ற நிலைகளில், உணர்வலைகளை இழுக்க, எதை எதைச் சேர்க்க வேண்டுமோ, அதைச் சேர்க்கின்றான் விஞ்ஞானி.
ஆக, இந்த மனிதனுடைய உணர்வுகள் பட்டுப் பட்டு, கம்ப்யூட்டரின் அலைகள் செயல்பட ஆரம்பித்துவிட்டது.

மனிதனுடைய உணர்வுகள், நாம் பேசக்கூடிய எண்ணத்தை, சூரியனுடைய வெப்ப காந்தங்கள், அந்த உணர்வுகளை ஈர்த்து, அதை நாடாக்களில் பதிவு செய்து, நாடாவில் பதிவு செய்தபின், அதையே ஒலிபரப்பி, வெப்ப காந்தத்தில் அனுப்பி, எந்த இயந்திரத்தின் துணை கொண்டு, எதன் அலைவரிசையில் வைத்தானோ, அதைப் பிரித்து எடுக்கின்றான்.

இதையே நாம் காதில் கேட்டு, இந்த உணர்வின் தன்மை, எந்தக் “கெமிக்கல்” உணர்வுடன் நம்முடன் கலந்து கொண்டோமோ, இந்த ஐம்பது வருடத்திற்குள் மனிதனுக்குள் விளைய வைத்து, அவன் கொண்டு வந்த, இந்த உணர்வு முழுவதுமே, இன்று காற்றலைகளில் கலந்து, அதையே இயந்திரத்தினால் ஈர்த்துப் பழகினான்.

ஏதோ சக்தி காற்றிலிருக்கிறது என்று அறிந்தான். இவன் விட்ட உணர்வே, மனித உடலில் பட்டு, இந்த மூச்சின் அலைகள் இந்தக் காற்றிற்குள் பெருக்கமாகின்றது.

ஆக, மனித உடலுக்குள் மந்திரங்கள், தந்திரங்கள், இயந்திரங்கள் எல்லாம் பதிவு செய்தான். ஆக, சினிமாக்களில் எத்தனை தந்திரங்கள், எத்தனை போர்கள் செய்கிறார்கள்? அதே போல, இவனுடைய சூட்சும உணர்வுகளைப் படங்களாகப் பிடித்தான். போனான், வந்தான், எல்லாம் கேட்டான். அந்த உணர்வுகள் பட, ஒளி கொண்டு ஒளிபரப்பு செய்தான்.

இது மனித உடலுக்குள் வந்தபின், அதே அலைவரிசையை எடுத்தான். இது சிலிகான் முறைகளில் இழுத்துக் கவர்ந்து, இழுக்கப்படும் பொழுது, எந்தெந்த நிலைகளில் செயல்பட்டானோ, அதை எலக்ட்ரானிக்கில் பதிவு செய்தான்.

அதைப் போல, சில அழுத்தங்கள் வரப்படும் பொழுது, இந்த அலைகள், அது பேச ஆரம்பித்துவிட்டது. இதைத்தான், விஞ்ஞான மூளை என்று சொல்லி, சிலிகானின், எலெக்ட்ரானுடைய விஞ்ஞானக் கருவிகளுக்குள் உராய்ந்து, உணர்ந்து, உணர்வலைகள் பட்டவுடன், செயல்படுகிறது.

இப்பொழுது, எப்படி மனிதனுக்கு ஒரெ சீதோஷ்ண நிலை இருக்கிறதோ, இதே மாதிரி கம்ப்யூட்டருக்கு, 90டிகிரிF என்றால், அதே அளவுதான் இருக்க வேண்டும். அதற்கு மேல் போனால், காய்ச்சல் வந்துவிடும். தாறுமாறாகச் செயல்படும். அதே மாதிரி, கண், காது, உணர்வு சேர்த்து, அலைவரிசையை ஈர்த்து வைத்துக் கொள்ளும்.

உங்களிடம் ஒரு நோய் வந்துவிட்டதென்றால், அதை அடுத்தவருக்கு அனுப்பும். இப்படி ஒருவருக்கொருவர் நோயை அனுப்பி, கடைசியில், இந்த மனிதனுடைய உணர்வுகள் அங்கேயே சுழன்று கொண்டிருக்கும்.

விமானங்கள், இராக்கெட்டுகள் மற்றவைகளிலெல்லாம், இவன் வேலை செய்து கொண்டிருக்கின்றான். ஆக, இவைகளெல்லாம் என்று தாறுமாறாக விழப் போகின்றதோ? தெரியவில்லை.

எல்லாவற்றையும் பொருத்தி வைத்திருப்பது, எப்படி எப்படியோ, போகப் போகிறது. நாமும் இந்த மனித சிந்தனையை இழந்து, எப்படி எப்படியோ திரியப் போகிறோம்.

இதிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கு, மெய் ஒளியை எடுத்து, சுட்டுப் பொசுக்குங்கள். யாம் இலேசாகச் சொல்கின்றோம் என்று அலட்சியபடுத்தாதீர்கள்.

நாம், எல்லாம் விவரத்தையும் தெரிந்து எடுப்பதற்கு, நாட்கள் இல்லை. உங்களுக்குள் மெய் உணர்வைப் பாய்ச்சி, சக்தியை எடுப்பதற்கு, யாம் சுலபமாகச் சொல்கின்றோம்.

நீங்கள் தியானமிருந்து, மூதாதையர்களை விண் செலுத்துங்கள். விண்ணிலிருக்கக் கூடிய அலைகளை எடுப்பதற்கு, முயற்சி எடுங்கள், எமது அருளாசிகள்.
(பக்கம் 121-127)
“பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் முருகன்”.
முருகன் யார்?
பிரம்மாவை ஏன் சிறைப்பிடித்தான்?

இப்பொழுது, சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்ப காந்தம், ஒரு ரோஜாப்பூவிலிருந்து வரக்கூடிய மணத்தை, அது இழுத்துக் கவர்ந்து கொள்கின்றது. அப்படிக் கவர்ந்து கொண்டபின், அந்த மணத்தை வீசி, அலைகளாக அது வீசுகின்றது. சந்தர்ப்பத்திலே அந்த நிலை உருவாகின்றது.

இதைப் போல, ஒவ்வொரு சந்தர்ப்பம், ஒரு பொருளுடன், ஒரு பொருள் சேர்க்கப்படும் பொழுது, மற்றொரு பொருளினுடைய தன்மைகள் உருவாகின்றது. அதே போன்று, நாம் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் உருவாக்க வேண்டும்.

விஞ்ஞானத்தில் இன்று, எத்தனையோ செடி கொடிகளை, மாற்றி இருக்கிறோம். எத்தனையோ மாடு, ஆடு இனங்களை மாற்றி இருக்கிறோம்.
ஆக, இந்த இயற்கையில் விளையக் கூடிய, அத்தனை சக்தியையும்,
இந்த மனித உடலுக்குள் நாம் சிருஷ்டிக்கும் தன்மை,
அதுதான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்.
சாதாரணமாக ஒருவன் தவறு செய்கின்றான். அந்தத் தவறான உணர்வை நான் எடுக்கின்றேன். அல்லது, ஒரு பொருளை உருவாக்க வேண்டுமென்று, நான் எண்ணுகின்றேன்.

அப்பொழுது அந்த எண்ணத்தை நான் சுவாசித்து, என் உயிரிலே பட்டவுடன் பிரம்மம். அந்த பிரம்மத்தின் தன்மைகள், என் உடலுக்குள் செல்கின்றது, “பிரணவம்”.

என் உடலுக்குள் சென்றவுடன், அதன் நிலைகள் கொண்டு, நான் செயல்படுத்துகின்றேன். ஆக, பிரம்மா உருவாக்குகின்றான். நம் உயிரின் தன்மை பிரம்மம்.

ஆக, நாம் இந்த ஆறாவது அறிவின் தன்மையால், சிருஷ்டிக்க வேண்டுமென்று எண்ணுகின்றேன்.
இந்த உணர்வின் தன்மையை என் உணர்வுக்குள் செலுத்தி,
அந்தச் சந்தர்ப்பத்தை நிகழ்த்தி,
நான் அதைச் செயல்படுத்துகின்றேன்.

ஆக இந்த மனிதன் உருபெறும் சக்தி பெற்றவன் என்ற நிலைக்கு, அங்கே மெய் ஒளியின் தன்மையைக் காட்டினார்கள் ஞானிகள். இதுதான்,  “பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்”.

ஓம் என்ற பிரணவ மந்திரத்தை
சிவனுக்கே ஓதினான், முருகன்.  
உடலான சிவன், ஆக, இந்த உடலுக்குள் நின்று, ஆறாவது அறிவு (முருகன்) – உடலான சிவனுக்கு உணர்த்துகின்றான்.

அதாவது, இது இன்னென்ன பொருள்,  ஒரு பொருள் ஒரு பொருளுடன் மோதும் பொழுது, நமது பூமி சுழல்கின்றது. அது சுழலும்போது ஏற்படக்கூடியதுதான், ‘’பிரணவம்’’.
நாம் சுவாசித்து, நம் உயிரிலே பட்டு
அந்த உணர்வின் தன்மை
ஜீவ அலைகளாக இயக்குவதுதான் ‘’பிரணவம்”, 
என்ற இந்தத் தத்துவத்தை
உடலான சிவனுக்கு, காது வழியாகச் சொல்லுகின்றான். 

ஆக, நாம் சுவாசித்த உணர்வினுடைய நிலைகள்,
ஒலி அலைகளாகப் பட்டபின்,
இந்த உணர்வின் தன்மை, செவிகளிலே பட்டு,
சிவனுக்கே ஓதினான்,
இதுதான் தகப்பன்சாமி என்று கதை எழுதுவார்கள்.

இந்த மனித உடலுக்குள் ஆறாவது அறிவின் தன்மையை 
நாம் சுவாசித்து, உயிரிலே பட்டு,
இந்த உணர்வின் எண்ணத்தை மூச்சாக வெளியிட்டு,
இந்த உணர்வின் காந்த அலைகளில் பட்டு,
நம் செவிகளில் பட்டு,
அந்த ஒலியின் தன்மை கொண்டு
செயல்படுத்தும் தன்மை, ஆறாவது அறிவு.

காதைப் பொத்திக் கொண்டு பேசிப்பாருங்கள்.
சிந்தனை செய்ய முடியுமா?  
ஆகையினாலேதான் சிவனுக்கே ஓதினான்.

தன் உணர்வின் எண்ணத்தை,
தான் சுவாசித்து வெளியிட்ட உணர்வின் தன்மையை,
தன் செவிகள் கொண்டு
அந்த உணர்வின் நிலைகளில் செயல்படுத்தும் தன்மை,
இதுதான் ஆறாவது அறிவு தகப்பன்சாமி.

முருகனுக்கு இரண்டு சக்திகள் இச்சாசக்தி, கிரியாசக்தி. இவைகள் அன்று ஞானிகள் சொன்ன பேருண்மையினுடைய நிலைகள். அதாவது வள்ளி (வல்லி) வலிமை மிக்க சக்தி.

நம் உடலிலிருந்து வரக்கூடியது ஆறாவது அறிவு. வள்ளி திணைக்காட்டிலே காவல் இருக்கின்றாள். தான் விளைய வைத்ததை, மற்ற குருவிகள் கொத்திச் சாப்பிட்டுப் போகாமல், அதைப் பாதுகாக்கின்றாள்.

அதைப் போல, இந்த மனித உடலின் தன்மையை, நாம் எத்தனையோ  கோடி சரீரங்கள் எடுத்த, இந்த நிலையான நல்வினையை, நமக்குள் சேர்த்திருக்ககூடிய நிலையைக் காக்கும் நிலையாக, திணைக்காட்டில் காவல் இருக்கும்போது, குருவியை எப்படி விரட்டுகின்றாள். இதைப் போல, நம் உடலில் வளர்த்த நல்லுணர்வைக் காக்கக்கூடிய உணர்வை, நாம் சுவாசிக்கும்போது,
நம் உயிரிலே பட்டவுடன், தெய்வ ஆணை,  
நாம் சுவாசித்தது, இந்த உடலில் தெய்வமாக மாறி,
அந்த ஆணைப்படிதான், நம்மை செயலாக்குகின்றது.
இதுதான் வள்ளி, தெய்வானை.

ள்ளி திருமணத்தில், இன்னொன்றையும் காட்டியிருக்கிறார்கள். முருகனுக்கு அண்ணன் விநாயகர்.  அந்த ஆதிமூலத்திலிருந்து  தோன்றிய, ஆறாவது அறிவான சக்தியைத்தான்நமக்குள், இது காப்பாற்றும் அலைகளாக இருக்கின்றது, 
‘’இதை நீ கல்யாணம் செய்து கொள்’’. 
உன்னைக் காத்துக் கொள்ளக்கூடிய உணர்வாக, எடுத்துக்கொள்
என்று உடலிலிருந்து அந்த சக்தியைக் காட்டினார்கள்.   
வள்ளி திருமணத்தில் இதைத் தெளிவாகக் காட்டுகிறார்கள், பச்சையாகவே காட்டுகிறார்கள். அதை உணர்ந்து கொள்வார் யாருமில்லை. இந்த உடலின் தன்மையை, அப்படியே பாகம் பாகமாகப் பிரித்து, தெளிவான நிலைகளில் காட்டியிருக்கிறார்கள்.

இந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்ட நாம், பிரம்மாசிருஷ்டிக்கும் தன்மை பெற்றவர்கள்”. ஆதிசங்கரருடைய உடலிலிருந்து கோலமாமகரிஷி காட்டியது, ‘’அத்வைதம்’’. 

நாம் காற்றிலிருக்கக்கூடிய நல்ல உணர்வுகளை, நல்லவைகளாக நாம் சுவாசித்து, இந்த சுவாசத்தின் தன்மைகளை நமக்குள் பிரம்மமாக்கி, பிரணவமாக்கி, நமக்குள் அந்த தெய்வ நிலைகளைப் பெறச் செய்வதுதான், ஆதிசங்கரருடைய தத்துவம். ஆக, நமக்குள் துவைதம் துவைதம் என்பது ஒளி சரீரம். அந்த மெய்ஞானியின் உணர்வை நமக்குள் எடுத்து, உயிராத்மாவை ஒளி சரீரமாக மாற்றும் நிலை.
(பக்கம் 143,144, 155,156)
யாம் பிரச்சாரம் செய்யவில்லை. உங்கள் ஒவ்வொருவருடய நிலைகளிலும் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பதியச் செய்து, தியானத்தினால் துருவ நட்சத்திரத்தின் பேரருளை, நமக்குள் கூட்டிக் கொள்கின்றோம். அதற்குத்தான் தியானம்.

அதற்கடுத்து, நம் வாழ்க்கையில் எந்தச் சந்தர்ப்பமானாலும் சரி, “ஓம் ஈஸ்வரா” என்று உயிரை எண்ணி, “மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும்” என்று ஏங்கி “மகரிஷிகளின் அருள் சக்தியை எங்கள் ஜீவாத்மா பெற அருள்வாய் ஈஸ்வரா” என்று உங்கள்: உடலைத் தியானித்துக் கொள்ளுங்கள். இதற்குப் பெயர் “ஆத்ம சுத்தி”.

நம்மை அறியாமலேயே, நம்மைத் துன்புறுத்திக் கொண்டிருக்கும் நிலையை மாற்றுவதற்குத்தான், தக்க ஆயுதத்தை “மிஷின் கண்” (MACHINE GUN) போன்று, உங்களுக்கு ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கையில் கொடுக்கிறோம்.

ஏனென்றால், இதை உங்களுக்கு யாம், வாக்குடன் கூடி, கொடுக்கும் நிலைகள். நீங்கள் எல்லாம் கடும் ஜெபமிருந்து இந்தச் சக்தியைப் பெறுவதென்றால் அவ்வளவு சாதாரணமானதல்ல.

இந்த ஆத்ம சுத்தி என்கிற எண்ண உணர்வின் எண்ண வாக்கை,
சரியான முறைகளில், உங்களுக்குக் கொடுப்பதற்கு,
இந்த உணர்வின் தன்மையை,
யாம், கொல்லூரில் 16 வருடங்கள் எடுத்து, வளர்த்து, “அந்த வாக்கின் ஒலியை” உங்களுக்குள் பதியச் செய்கின்றோம்.
இப்படிப் பதியச் செய்ததை, யாம் சொல்லும் இந்த முறைப்படி, யார் ஒருவர் தியானத்தில் இருக்கின்றார்களோ, அவர்களுக்கு இந்த வாழ்க்கையிலே எத்தகைய துன்பமிருந்தாலும், நிச்சயம் நீங்கிவிடும்.

பெண்களாக இருக்கக் கூடியவர்கள் அனைவருமே, சமையல் செய்யும் பொழுதெல்லாம் ஆத்ம சுத்தி செய்து விட்டு, அரிசியைப் போடும் பொழுதெல்லாம், அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால், நாம் சமைக்கும் சாப்பாட்டை யார் புசித்தாலும், அவர்கள் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற வேண்டுமென்று எண்ணி, அரிசியைப் போடுங்கள். நீங்கள் அப்பொழுது சுவாசிக்கக் கூடிய உணர்வு, உங்களை அறியாமலேயே உங்களைச் சுத்தப்படுத்தும்.

பெண்களுக்கு, அடிக்கடி கவலையும், தொல்லைகளும் வருவதனால், அந்த உணர்வுகளால், அவர்களுக்கு கை கால் குடைச்சலும், தலைவலியும், ஒற்றைத் தலைவலியும், அதிகமான நிலையில் வரும். காரணம் பெண்களுக்கு ஈர்ப்பு சக்தி ஜாஸ்தி.

பெண்கள், கவலையும், மற்ற நிலைகளையும் அடிக்கடி எண்ணியெண்ணி, அவர்களை அறியாமலேயே, இந்த உணர்வுகள் உடலில் சேர்ந்து, கை கால் குடைச்சல் வந்துவிடுகின்றது. அதுவே, பின் நாட்களில் நோய்களாக வளர்ந்து, நல்லதையே சிந்திக்க முடியாத நிலைகள் ஏற்படுகின்றது.

ஆகையினால், பெண்கள் சமையல் செய்யும் பொழுதும், சமையல் செய்தபின் பரிமாறும் பொழுதும், இந்த நிலைகளைச் செய்து கொள்ளுங்கள். கணவன் மனைவியும், அவசியம் இந்த ஆத்ம சுத்தியைச் செய்து பழகிக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு நாளும், வீட்டை விட்டு வெளியே சென்றாலும்,
தொழிலில் போய் அமர்ந்தாலும்,
ஒரு சங்கடமான வார்த்தைகளைக் காதில் கேட்டாலும்,
அடுத்த நிமிடம் ஆத்ம சுத்தி செய்து பழகிக் கொள்ள வேண்டும். ஏனென்றால், ஒவ்வொரு நிமிடமும் சுத்தப்படுத்துவதற்கே, இந்த ஆயுதத்தை யாம் கொடுக்கின்றோம்.

இவ்வாறு, நாம் நமது வாழ்க்கையில் தொடர்ந்து செய்து வந்தால், மகரிஷிகள் எவ்வாறு அன்று, அந்த உணர்வுக்குள் ஒளியைச் சேர்த்து, தீமைகளை நீக்கி, உயிரோடு ஒன்றி, ஒளியின் சரீரமாகி, சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் சுழன்று கொண்டிருக்கின்றார்களோ, அதைப் போல. நாமும் அவர்களுடைய நிலையை நிச்சயம் அடைய முடியும்.

இதற்கு, உங்களை நீங்கள் நம்ப வேண்டும். ஆனால், யாம் சொல்லும் நிலைகளைக் கவனமாகக் கவனித்து, உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் இதைப் பயன்படுத்தி, இந்த விஞ்ஞான உலகத்திலே, விஞ்ஞான அழிவுகள் உங்களைத் தாக்காதவண்ணம், உங்களைக் காப்பாற்றி, அடுத்து ஒளிச் சரீரம் பெற வேண்டுமென்ற உணர்வுடன் நீங்கள் இதைச் செயல்படுத்துங்கள். எமது அருளாசிகள்.
(பக்கம் 159-164)
சாதாரண வாழ்க்கையில், ஒருவர் திட்டுவதை நாம் எடுத்துக் கொள்ளலாம். அந்த ஞானியரின் அருளைப் பெறுவது என்றால், அவ்வளவு சுலபமல்ல. அப்படி அந்த ஞானியரின் அருளை, நீங்கள் எளிதில் பெறுவதற்காகத்தான், அந்த அருள் ஞானியின் அருள் வாக்கை, உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

அந்த ஞானியின் அலையைப் பெறுவதற்குத்தான் “ஓம் ஈஸ்வரா” என்று உங்கள் உயிருடன் தொடர்பு கொண்டு, அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நாம் பெற வேண்டுமென்று ஏங்கி, மகரிஷிகளின் அருள் ஒளியை எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று உங்கள் உடலுக்குள் தியானியுங்கள்.

ஒருவர் திட்டினால் நம் உணர்வுகளில் பட்டவுடன் எப்படிச் சிலிர்க்கின்றது? ஆத்திரம் வருகின்றது, பயம் வருகின்றது, எல்லாம் வருகின்றது.

ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை எடுத்து, அதை நீங்கள் பயன்படுத்தி, உங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று, உங்கள் உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது, மற்றவர்களின் அசுத்த நிலைகள் வந்தாலும், அதை மாற்றும்.

ஆகவே, நாம் அடிக்கடி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் செலுத்திக் கொண்டால், தீமைகள் சேராது சுத்தப்படுத்திக் கொண்டே இருக்கும். நம் உணர்வுக்குள், அந்த ஒளிகள் மாறிக் கொண்டே இருக்கும்.

எப்படி ஒரு அணுவின் தன்மை, உதாரணமாக கசப்பின் தன்மை கொண்டு கூட்டமைப்பாகச் செல்லும் பொழுது, மற்ற தாவர இனச்சத்தின் அலைகள் செல்லும் பொழுது, அதனுடன் சேர்ந்து,
இந்தப் புது அலைகள், சிற்றலைகள் மோதியவுடன்
அதற்குள் மோதி, அதைக் கவர்ந்து,
அணுக்கள் தனக்குள் அதை விழுங்க,
இந்த உணர்வின் தன்மை மாறுபட்டே செல்கின்றது.

இதைப் போன்று, நாம் ஆற்றல்மிக்க மெய்ஞானிகளின் அருள் உணர்வை, அடிக்கடி நமக்குள் சேர்த்துக் கொண்டு, தீமை செய்யும் அனைத்து நிலைகளையும் மாற்றிடுவோம்.

ஒரு உணர்வின் தன்மை,
ஒரு அணுவின் தன்மை சேர்க்கப்படும் பொழுது,
அது எந்தெந்த குணத்தின் தன்மையை, அதிகமாகச் சேர்க்கின்றதோ, அது ஆற்றல் பெறுகின்றது. இதுதான், இயற்கையின் செயலினுடைய உண்மையினுடைய நிலைகள்.

ஆக, மெய் உணர்வின் தன்மையை நாம் அறிந்துணர்ந்தபின், அந்த மகரிஷிகள் அருள் வழியைக் காட்டியபின், இந்த உடலிலே இருக்கப்படும் பொழுதே, யாம் சொல்லும் நிலைகளில், உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய பிரச்னைகளையும், சங்கடங்களையும், எப்பொழுதெல்லாம் எதிர் கொள்கின்றீர்களோ, அதையெல்லாம் உங்களுக்கு, நன்மை பயக்கும் நேரம் என்று, எடுத்துக் கொள்ளுங்கள்.

அது எப்படியென்றால், “இப்படி என்னைத் திட்டிவிட்டானே, இரு நான் பார்க்கிறேன்” என்றால் துன்பத்தைக் கொடுக்கும் நாள். அவர்கள் சொன்னவுடன், அல்லது நமது பையனே இப்படிப் பேசிவிட்டானே என்ற உணர்வுகள், ஆத்திர உணர்வுடன் தீர்க்கப்படும் பொழுது, நமக்குக் கெட்ட நாள், நமக்குள் அந்த உணர்வின் தன்மையைக் கூட்டுகின்றது.

ஆனால், நம்மைத் திட்டும் பொழுதும், அந்த உணர்வின் தன்மை கொண்டு பிறர் நம்மை ஏசும் நிலை வந்தாலும், “ஈஸ்வரா” என்று உங்கள் உயிரை எண்ணுங்கள். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும், எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள். உடனே அது அடங்கும்.

ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு நம்மைத் தூண்டும் நேரத்தில், நாம் இந்த ஆத்ம சுத்தியைக் கடைப்பிடித்தால், அவர்களால் சங்கடமாக ஏற்படுத்திய உணர்வுகள் நம்மை ஆட்டிப்படைக்காதபடி, அதை அடக்க இந்த ஆயுதம் உதவும்.

இப்படி, மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் சேர்க்கும் பொழுது, அது நன்மை தரும் சந்தர்ப்பமாக மாறுகின்றது. நமக்கு நல்ல நேரமாக அமைகின்றது.

அதற்குப்பின், யார் நமக்குத் தவறு செய்தார்களோ, அவர்கள் மகரிஷிகளின் அருள்சக்தி பெற்று, அவர்கள் நாளை செய்வதெல்லாம் நல்லதாக ஆக வேண்டுமென்று, நீங்கள் ஆணையிடுங்கள்.

இப்படி அவர்களுடைய தவறான உணர்வுகள். உங்களுக்குள் வராது தடுக்கச் செய்யுங்கள். இதை நீங்கள் பயன்படுத்தி, ஒவ்வொரு நிமிடமும், மகரிஷிகளின் அருள் ஒளியை, சேர்க்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

மனித வாழ்க்கையில், அது எந்த நிமிடமென்று சொல்ல முடியாது. எந்த நிலைகளில் இருந்தாலும், மனிதருடன் வாழப்படும் பொழுது, குறைகளைக் காணாமல் இருக்க முடியாது. இன்றைய விஞ்ஞான உலகத்தில், குறைகள் வந்து கொண்டேதான் இருக்கின்றது.

இந்த ஆத்ம சுத்தியை, நீங்கள் அனைவரும் உங்கள் வாழ்க்கையில் அடிக்கடி செய்து, இந்தப் புனிதப்  பயணத்தை, அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைச் சேர்த்து, ஒவ்வொரு நொடிப்பொழுதும், அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழ வேண்டும். எமது அருளாசிகள்.
(பக்கம் 167-169)
நம் உடலில், எத்தனையோ கௌரவங்களை எதிர்பார்க்கிறோம். எவ்வளவோ, துணி மணிகளைப் போடுகின்றோம், அழகுபடுத்துகின்றோம்.
எல்லாம் இருந்தாலும், நம்மை யாராவது,
ஒரு சொல் லேசாகக் குறைத்துச் சொல்லிவிட்டால்,
இப்படிச் சொல்லிவிட்டானே,
“இரு உன்னை நான் பார்க்கிறேன்”,
என்ற நிலைதான் வருகின்றது.

நம்மையறியாமலேயே இந்த நிலையைச் செய்கின்றோம். ஒருவர் சொன்னால் தாங்கமுடியவில்லை. அதே சமயத்தில், இந்த உடலிலிருந்து, உயிரான ஈசன் போய்விட்டால், என்ன செய்கிறோம். தூக்கி ரோட்டில் போட்டுவிடுகின்றோம். பின் கட்டைகளைப் போட்டு, நெருப்பை வைத்து எரித்துவிடுகின்றோம்.

எத்தனை கௌரவத்தைக் கொண்டிருந்தாலும், இந்த உயிரான ஈசன் போய்விட்டால், இந்த நீசமான உடலுக்கு என்ன வேலை? நாம் அதைத்தான் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

இதைப் போல, நாம் இந்த உடலுக்குள் எதை எண்ணுகின்றோமோ, சங்கடமாக எண்ணினாலும், துன்பமாக எண்ணினாலும், இந்த உணர்வின் தன்மை உயிரிலே படும்போது, இந்த உணர்வின் நிலைகள்தான் நம்மை இயக்குகிகின்றது.

ஆக, நாம் அப்படி எண்ணினால், இந்த உடலுக்குள் இருக்கக் கூடிய நம் ஈசனுக்கே கெடுதல் செய்கின்றோம். அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாம் கோபமான நிலைகளையோ,
வெறுப்பான நிலைகளையோ,
அல்லது ஆத்திரமான உணர்வுகளையோ,
நாம் சுவாசிக்கும் பொழுது,
நம் உயிரில் பட்டுத்தான்,
அதற்குப் பின், வெளியிலே நாம் சொல்கின்றோம்.

நாம் யாரைத் திட்டினாலும், முதலில் நாம் தான் அனுபவித்துக் கொள்கின்றோம்.

கீழே சேறு இருக்கிறதென்றால்,
அந்தச் சேற்றைக் கையில் அள்ளும் பொழுது,
முதலில் நாம் அசிங்கப்படுகின்றோம்.

இதைப் போலத்தான், ஒருவன் கெடவேண்டுமென்ற எண்ணத்தை மனதில் எடுத்துக் கொண்டால், முதலில் நமக்குள்தான், அந்த உணர்வுகள் சாடி, நம் உடலுக்குள் நல்ல குணங்கள் அனைத்துமே கெடுகின்றது.

ஆக முன் பகுதி தெரியாது, பின் பகுதி நம் உடலுக்குள் அழுகிய சரீரமாக உண்டாக்கி, அந்த வேதனையின் தன்மையைப் பார்க்கலாம்.

ஏனென்றால், உயிர் பிரம்மம். நாம் யாரிடத்தில் ஏமாற்றினாலும், நம் உயிரான ஈசனிடம் ஏமாற்ற முடியாது. நாம் கொடுத்ததை பிரம்மமாக்கி நமக்குள் சிருஷ்டித்துவிடுகின்றது.

ஆக அதே பிரம்மனிடத்திலே மகிழ்ச்சியை ஊட்ட வேண்டுமென்றால், அதைக் காட்டிலும், உயர்ந்த மெய்ஞானியின் அருள் ஒளியைச் செலுத்தினால் ஒழிய, இந்த உணர்வை நமக்குள் மாற்ற முடியாது.
(பக்கம் 172-179)
சந்தர்ப்பத்தில் நாம் சோர்வோ, சஞ்சலமோ, வேதனையோ பட்டுவிட்டால், அனைத்துமே விஷம். அந்த விஷமான உணர்வுகளை நாம் எடுக்கப்படும் பொழுது, இந்த விஷத்திற்குள், அதிர்ச்சியின் நிலை வரப்படும் பொழுது, நமக்குள் வேதனை கொண்டு இறந்தவர்களுடைய உயிராத்மா,  ஊடுருவ சந்தர்ப்பம் ஏதுவாகின்றது.
ஆக, இன்னொரு உடலிலே வேதனையாக,
அவன் எந்த நிலையில் இறந்தானோ,
எந்த வெறியின் தன்மையில்
வெறுப்பின் உணர்வுகளினால் ஆனானோ,
அந்த உணர்வின் தன்மை நமக்குள் வந்து
நம்மை இயக்கத் தொடங்கிவிடும்.
இதைப் போன்று  நம்மை அறியாமேலேயே, சந்தர்ப்பங்கள் நம்மை இயக்கிவிடுகின்றது.

ஏனென்றால், பலவீனமாகும் பொழுதுதான், இந்த விஷத்தின் தன்மை ஊடுருவுகின்றது. உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும் பொழுது, அதை அப்புறப்படுத்துகின்றது.

இப்பொழுது நாம் கோபிக்கும் பொழுது, இந்த உணர்வலைகள் நம் உடலிலே கோப அலைகளாக மாறுகின்றது. அப்படிக் கோப அலைகள் வரும் பொழுது, யாராவது சந்தோஷமாகப் பேசினாலும், அதை நெருங்கவிடாது. கவனம் வைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் சோர்வான நிலையில் இருக்கும் பொழுது, மற்றவர்கள் எந்த நிலையில் பேசினாலும், இந்தச் சோர்வான அலையே உங்களுக்குப் பாதுகாப்பாக இருந்து, அதையேதான் பேசச் செய்து, மற்றவற்றை எடுக்க விடாது.

நீங்கள் நல்லதை. மகிழ்ச்சியான நிலையில் எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது, விஷமான அலைகள் தாக்கியவுடன், “சுர்” என்று பட்டவுடன், திடீரென்று வெடித்துவிடும்.

சோர்வு, சஞ்சலம் இவை எல்லாம் விஷம். நல்லதையே எண்ணும் பொழுது, “சுருக்” என்று ஒருவர் சொன்னால், இது உடனே ஊடுருவி, அந்த நல்லது கலைந்து, அந்த நல்லதை உணவாக உட்கொள்கின்றது.

இதைப் போன்ற நிலைகளை நாம் மாற்ற வேண்டுமென்றால், அதனுடைய ஆற்றலைக் குறைக்க வேண்டுமென்றால், “ஓம் ஈஸ்வரா” என்று அந்த உயிரின் தன்மையை நாம் எடுத்து, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும், அதை எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும், என்ற இந்த அலைகளைச் செலுத்தும் பொழுது, நமக்குப் பாதுகாப்பு கிடைக்கும்.

யார் சங்கடமான நிலைகளைச் சொன்னாலும் பரவாயில்லை. அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியை நாம் சுவாசித்து, இந்த ஒளியினை நாம் பாய்ச்சும் பொழுது, பிறருடைய உணர்வுகள் தீயதாக இருந்தாலும், அதை மாற்றும் ஆற்றல் கிடைக்கின்றது.

இவையெல்லாம் இயற்கையினுடைய நிலைகளை, நாம் சிருஷ்டிக்கும் நிலைகள், அதாவது மனிதன் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான். மனிதனுடைய ஆறாவது அறிவு, எதையுமே சிருஷ்டிக்கும் தன்மை கொண்டது.

நமக்குள் வரக்கூடிய துன்பத்தை அகற்ற, அந்த மெய் ஒளியின் தன்மையை நமக்குள் பிரம்மாக்கி, பிரணவமாக்கி, நம்மை தீயது அணுகாத நிலைக்கு, அந்த உடலிலேயே உணர்வை ஒளியாக மாற்றி, உணர்வின் தன்மையை நாம் ஒளியின் சரீரமாகப் பெற வேண்டும். இதுதான் கடைசி நிலை.
இப்பொழுது இந்தக் காலகட்டத்தில், குருதேவருடைய உணர்வை இங்கே பதியச் செய்கின்றோம். அந்தப் பதிவை வைத்துத்தான் எல்லாமே செயல்படுத்த வேண்டும். அவர்களுடைய அருள் ஒளியை நாம் பெற வேண்டும்.

செருப்பை எதற்காகப் பயன்படுத்துகின்றோம் என்றால்,
காலில் முள் தைக்காமல் இருக்கத்தான்.
அதே மாதிரி, குருதேவருடைய அருளை ஏன் பெறுகிறோம் என்றால், நம்மை வேதனையான எண்ணங்கள் தாக்காமல் இருப்பதற்காகத்தான். சொல்வது அர்த்தமாகிறதல்லவா.

பிறருடைய கோபமான, அல்லது ஆத்திரமான எண்ணங்கள் நம்மைத் தைக்கின்றதென்றால், அப்பொழுது, குருநாதருடைய அருள் சக்தியை நாம் பெற்று, அதைத் தடுக்க வேண்டும். எத்தகைய கடுமையான நிலைகள் வந்தாலும், நாம் ஜெபத்தினாலே மன வலுக் கொண்டு, நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்.

பைரவர் என்றால், காவல் என்று அர்த்தம். ஆகவே, எதை நாம் மோப்பமாக்க வேண்டும்? அந்த மெய்ஞானிகளின் அருள் ஒளியை, நமக்குள் எடுத்து, அவைகளை நமக்குள் வலுக் கொண்ட எண்ணங்களாக, காக்கும் நிலையாகக் கொண்டு வரவேண்டும் என்பதைத்தான் அப்படிக் காண்பிக்கின்றார்கள்.