ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 29, 2012

மனித நேயம் என்பது எது...?

நாம் அனைவரும், அந்த மகரிஷிகளின் அருள்வட்டத்தில் கலந்து, நம்மையறியாது சேர்ந்த தீமைகள் நீங்கி, நம்முடைய மூச்சும், பேச்சும் உலக நன்மை பயக்கும் சக்தியாக, நாம் எண்ணிய உணர்வுகள், நமக்குள் தீமையை அடக்கும் சக்தியாகவும், நன்மை பயக்கும் சொல்லாகவும், செயலாகவும், நமக்குள் வளரவேண்டும்.

நம்முடைய உணர்வுகள், எண்ணங்கள் அனைத்தும்,
உலக மக்களைக் காத்திடும் நிலையாகவும், 
சகோதர உணர்வை வளர்த்திடும் நிலையாகவும்,
அது வளர்ந்திட வேண்டும். 

அந்த மெய்ஞானியின் உணர்வுகள், அவர்கள் எல்லோரும் எவ்வாறு அனைத்தும் உணர்ந்து, உறவாடினார்களோ, அதைப்போன்று நம் உணர்வுகள் அனைத்தும், வெளியிடும் அனைத்து உணர்வுகளும், நமக்குள் இருக்கும் நல்ல உணர்வுகளும்,
நமக்குள் ஆகாத உணர்வுகள் வந்தாலும்,
சகோதர உணர்ச்சியுடன் ஒன்றுபட்டு, சேர்த்து,
தீமையற்ற நிலையாக வளரும் நாம்,
தனித்த சரீரங்களாக இருந்தாலும்,
சகோதர உணர்வுகளுடன் வாழ்ந்திடும்  உணர்வாக,
நாம் இடும் மூச்சலைகள், இங்கே படர்ந்து
அதன் வழிகளில், நம் பூமியான பரமாத்மாவும்,
அது பரிசுத்தப்படும் நிலைகள் ஏற்படும்.
ந்தப் பரமாத்மாவில் இருந்து, நுகர்ந்து எடுக்கும் அனைத்து உயிரான மக்களும், அந்த "மெய்வழி பெறும் நிலைகள்" ஏற்படும்.

நாம் எந்தத் தாவர இனச்சத்தை நுகர்ந்து, உணவாக உட்கொண்டு, உடலாக ஆனோமோ, இந்த மனித உடலுக்குள் எண்ணிய உயர்ந்த எண்ணங்கள், சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டுப் படர்ந்து, நாம் எந்த உணர்வின் தன்மை உணவாக எடுத்துக் கொண்டோமோ, நாம் அதை உணவாக்கியபின்,  
நம் உணர்வின் எண்ண அலைகள் படர்ந்து, 
நாம் செல்லும் இடங்களில் பரவியுள்ள, 
நஞ்சு கொண்ட உணர்வுகளைத் தாக்கி, 
நஞ்சு கொண்ட தாவர இனமே வளராது
மனிதனை வீழ்த்திடும் நிலையைத் தடுக்கும்.

ஆக இதைப்போன்ற நிலைகளிலிருந்து, நீங்களிடும் மூச்சலைகள்,
இன்று தாவர இனச்சத்தும் சத்தான நிலைகளில் வளர்ந்து,
அந்த உணர்வின் தன்மையை,
உணவாகப் புசிக்கும் மக்கள் அனைவரும்,
மெய் உணர்வின் தன்மையைப் பெறும் தகுதியாக,
உங்களுடைய மூச்சுகள் அமையவேண்டும் என்றும்,
கேட்டுணர்ந்த உணர்வுகள் இது படர்ந்து,  
மெய் உலகைப் படைக்கும் உணர்வாக
உங்களுக்குள் விளைந்து,
நீங்கள் இடும் மூச்சலைகள்
உலகில் உள்ள தீமையான நிலைகளை நீக்கி,
மெய் உணர்வைப் பெறும் சக்தியாக மலர வேண்டும்  என்று,
எல்லாம் வல்ல குருநாதர் அருள் வழியில்,
அந்த மெய்ஞானியின் அருள் வட்டத்திற்குள்,
உங்கள் எண்ணங்கள் சென்று,
அதன் வழிகளிலே தீமையை நீக்கி,
நல் உணர்வான, நல்வினைகளைச் சேர்த்து,
நல்வினைக்கு உடல் அமைத்து,
அது, வினைக்கு நாயகனாக, மெய்ப்பொருள் கண்டுணர்ந்த,
அந்த மெய்ஞானியின் அருள்வட்டத்தில், நாம் அனைவரும் என்றும் நிலையான பெருவீடு பெருநிலைஎன்ற நிலையடைந்து, வளர்ந்து, அதைப் போன்று, என்றும் மங்காத ஒளிச்சரீரத்தைப் பெறுவோம்.

இன்றைய நிலையில், நம் பூமியில் வாழும் உயிரினங்கள், மிருகங்களிலிருந்து, மனிதன் வளர மிகவும் சிரமமான நிலைகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். காற்று மண்டலமோ, நச்சுத்தன்மையாக மாறிக் கொண்டு வருகின்றது.

அதே சமயம், மனிதனுடைய எண்ண அலைகள் அனைத்தும் சிந்தனையற்ற நிலைகள் கொண்டு, மனித உடலில் விளைய வைத்த இந்த உணர்வுகள் இங்கே படர்ந்து கொண்டிருக்கின்றது. இத்தகைய உணர்விலிருந்து, நாம் மீள வேண்டும்.

நமது குருநாதர், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர், எமக்கு உணர்த்தியருளிய அருள் வழியை, நீங்களும் பெற வேண்டுமென்ற இந்த ஆசையினால்தான், நம் குருநாதர் காண்பித்தருளிய உணர்வுகளை, உங்களுக்குள்ளும் விளையச் செய்து, அதை நீங்கள் எண்ணும் பொழுது, அந்த மகரிஷியின் அருள் சக்தியைப் பெற்று, உங்களை அறியாது புகுந்த தீமைகளை நீக்கி, நல்லுணர்வின் தன்மையாக நீங்கள் வளர வேண்டும் என்று பிரார்த்திக்க, நாம் அதனின் சத்தை, ஒருங்கிணைந்து விளையும் சத்தாகச் செயல்படுவோம்.