ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 10, 2012

உலகுக்கு எடுத்துக்காட்டாக நாம் எப்படி வளர்ந்து காட்டவேண்டும்?

1. யாம் யாரையும், இப்படித்தான் நடக்க வேண்டும் என்று கட்டுப்படுத்தவில்லை
யாரையும் யாம் அவர்களை குற்றவாளி ஆக்குவதற்கு அல்ல நாம் பார்க்கலாம் சில நிலைகளில், சில உணர்வுகள் அவர்களை இயக்கும் நாம் தியான வழியில் சுட்டிக் காட்டிய அந்த உணர்வுகள் கொண்டு, அவர்களை அறியாது இயக்கக் கூடிய, அந்த நிலைகளை மாற்றுதல் வேண்டும்.

யாம் தியானத்தில் பவர் கொடுக்கிறோம். யாம் எல்லோருக்கும் செய்வதைக் காட்டிலும், உங்களுக்கு அந்தப் பவரைக் கொடுக்கிறோம். பொது வாழ்க்கையின் நிலை கொண்டு, உங்களைக் காட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவில்லை.

யாரையும், யாம் சொல்வதைக் கேட்க வேண்டும் என்றோ, இப்படித்தான் நடக்க வேண்டும் என்ற நிலைக்கோ சொல்லவில்லை. ஆனால்,
தர்மத்தையும்,
நியாயத்தையும்,
ஞானிகளின் உணர்வுகளையும்,
எப்படி இயக்குகிறது?
என்ற நிலைகளை உங்களுக்குள் பதியச் செய்கிறேன்.

அதை நீங்கள் வளர்த்துக் காட்ட வேண்டும். இப்படித்தான் சட்டம் என்ற நிலைகள் வந்தால் அந்தக் கட்டுப்பாடு தளர்ந்து விடும். சில நாள் நிற்காது

அந்த உண்மையின் நிலையைப் பதிவு செய்யப்படும்போது, இதை நீங்கள் வளர்த்துக் கொண்டால், அது உங்களை உயர்த்திக் காட்டும். அதன் வழியில் உங்கள் மனதால் ஏற்றுக் கொண்டால் தவிர, கட்டுப்பாடு எல்லாம் ஒரு திறை மறைவுதான்,

எதன் நிலைகள், எந்த நிலைகள், எதன் வழி வந்தாலும், ஒரு சட்டத்தை இயற்றி, இப்படித்தான் வர வேண்டும் என்ற வந்தால்அவருடைய உணர்வுகள் அந்தக் கட்டுக்கோப்பு நிலைத்திருக்காது

அந்த இயற்கையின் உண்மை நிலைகளை எடுத்து விரிவாக்கி,
அருள் ஞானிகளின் பாதையைப் பதிவாக்கி,
அதை உங்கள் நினைவுகளில் இருக்கச் செய்து,
அதன் வழிகளில் நீங்கள் இயங்கத் தொடங்கினால் அது இயங்கும்.
அப்படி இருந்தால்தான் மாற்ற முடியும்.
2. யாம் சொல்வதை, செயல் ருபமாகக் கொண்டு வரவேண்டும், அதைத்தான் யாம் விரும்புகின்றோம்
அதனால்தான் ஏற்கனவே சொல்லுகின்றோம்.
உங்கள் உயிர் எதை இயக்குகின்றது?
அது எப்படி உருவாக்குகிறது?
நாம் எண்ணிய எண்ணங்கள் எப்படி இயங்குகின்றது?
இதிலிருந்து நாம் எப்படி உருவாக்க வேண்டும்?
என்று யாம் சொல்லுகின்றோம்

ஆறாவது அறிவு கொண்ட மனிதன், பிரம்மாவைச் சிறைபிடித்தான். நாம் உருவாக்கும் ஆற்றலைப் பெற்றவர்கள். நாம் உருவாக்க வேண்டும் எதை? தீமையை வென்ற அருள்ஞானியின் உணர்வை நாம் உடலுக்குள் உருவாக்க வேண்டும்.

அதுதான் கார்த்திகேயா. நாம் தெரிந்த கொண்ட உணர்வு கொண்டவர்கள் நாம் அதை எப்படிச் செயல்படுத்த வேண்டும். என்ற நிலைகளில் உருவாக்குதல் வேண்டும். இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால், நாம் ஞானத்தை எவ்வழியேனும்நாம் சாமி பெயரைச் சொல்லிவிட்டு, “குருநாதரை நான் ரொம்ப மதிக்கிறேன். அவர் மிகவும் உயர்வாகச் சொல்கிறார்என்று, கடைசியில் கொண்டுபோய் குழியில் தள்ளி விடாதீர்கள். எனக்குத் தேவையற்றது. நான் யாருடைய போற்றுதலுக்கும் வரவில்லை.

உங்களை உயர்ந்த நிலைகளில் எண்ணும் நிலைகளுக்கு, குரு கொடுத்த ஆணைகளை சிறப்பித்துப் பழகுங்கள் இதை நாம் பழகிப் பழக வேண்டும். அதை நமக்குள் வளர்த்தல் வேண்டும். இன்று எத்தனையோ பேர் அங்கிருந்து வருகிறார்கள்.

நாம் எப்படி இருக்க வேண்டும் என்ற கட்டுக் கோப்பின் நிலைகளிலும், யாம் போதிப்பதைக் காட்டிலும், நீங்கள் எல்லோரும், செயல் ரூபங்களில் காட்டுவதையே எதிர்ப்பார்க்கிறேன் அதற்குத்தான் இதை அமைத்தது. அதைத்தான் நாம் வளர்ப்பது.

நாம் அமைத்துக் கொண்ட நிலைகளில் இருந்து, எப்படி உருவாக்க வேண்டும் என்றுதான், அதை நாம் இன்னும் தெளிவான நிலைகளில் விரிவாக்கிக் கொடுக்க வேண்டும். அருள் மகரிஷிகள் வளர்த்ததையும் காட்டுகின்றோம்.

அன்பால் பண்பால், நாம் பரிவுடன் செயல்படுகின்றோம். நம்மை அறியாது, எப்படி பிறிதொரு ஆவியின் நிலை நம்மைத் தொடர்பு கொண்டு
பிறிதொரு ஆவி நமக்குள் வந்துவிட்டால்,
அதன் செயல் நமக்குள் எப்படி ஆக்குகின்றது?
இதைத் தெளிவாக்குகிறோம்.

மீண்டும் அருள்ஞானத்தை எப்படிப் பெருக்குவது? இந்தத் தீமைகளை எப்படி அடக்குவது? என்ற நிலைக்கு, ஆத்மசுத்தி என்ற ஆயுதத்தையும் கொடுக்கின்றோம். எனக்காக அல்ல.

எனக்கென்று நிலைகள் வரும்பொழுது, என் நிலைகளே தனியாகப் போய்விடும். இன்று, எல்லோரது நிலைகளும் இருள் சூழ்ந்து உள்ளது. குரு கொடுத்த கட்டளைப்படி, அவரது ஆணைப்படி,
இந்த உணர்வின் ஒலிகளை எழுப்பு,
அதன் வழியிலே அந்த ஒளியின் நிலை நீ பெறு.
அனைவரும் எல்லா நிலைகளும் பெறவேண்டும் என்று நீ பெருக்கு.
அனைவரையும் அந்த நிலை பெறச் செய்என்று சொன்னார்.
3. தவறுக்குள் உள்ள நன்மைகளையே நாம் எடுத்துப் பழகவேண்டும்
காட்டில் நெல் விளைய வேண்டும் என்றால் உமியையா போடுவார்கள்? வரக்கூடிய நிலைகள்இன்று ஒருவன் தவறு செய்கிறான் என்றால்,
அந்தத் தவறுக்குள்
நாம் நன்மை எடுக்கும் நிலைகளே, வரவேண்டும்.

அவன் தவறு செய்கிறான் என்று தெரிந்தால், “அந்தத் தவறுகளை நாம் செய்யக்கூடாதுஎன்ற எண்ணங்களே, நமக்குள் வர வேண்டும்.

அவன் தவறு செய்கிறான் என்றால், அந்தக் குறைகள் நமக்குள் வந்தே தீரும். அதை நாம் நீக்குதல் வேண்டும், எப்படி?
அந்த உமி இல்லை என்றால்
அரிசி இல்லை.
ஆக எதிலும், எதனின் இயக்கமாக இருந்தாலும், ந்த விஷம் இல்லை என்றால், அந்த நல்ல உணர்வு இயக்கம் இல்லை. ஆகவே, இதைப் போன்றுதான் இந்த உணர்வின் இயக்கங்கள் இந்த விஷம் கலந்துதான் வருகின்றது.

எப்படி, சூரியன் அல்ட்ரா வயலெட் என்ற நிலைகளில் விஷத்தைப்  பிரிக்கின்றதோ, இதைப்போல் நாம் நுகர்ந்து அறியப்படும்போது, அந்த ஞானியின் உணர்வை இயதனுடன் சேர்த்து, இந்த விஷத்தின் தன்மையை அடக்குதல் வேண்டும். அதுதான் அங்குச பாசவா.

விநாயகத் தத்துவத்தை வைத்து, நாம் இதை அடக்கும் வல்லமை பெற்றவர்கள் என்று, தெளிவாக்கப் பட்டுள்ளது. அதைச் செயல்படுத்துதல் வேண்டும். நாம் எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும். என்ற நிலைகளை, தெளிவாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் நமது ஒழுக்கங்களையும், நெறிகளையும், குரு எதைச் சொன்னார்? அதை, எந்த வழியில், எந்த நிலையில், கடைப்பிடித்துப் பழக வேண்டும், என்பதை உணரவேண்டும். கெட்டுப் போவதற்குச் சொல்லவில்லை.

நல்ல முயற்சியை மேற்கொண்டிருப்பவர்கள், ஒருவருக்கொருவர் சேவை மனப்பான்மையை வலர்க்கும் விதமாக, நாம் சேவை செய்யவும் நமக்குள் ஒற்றுமையையும், நமது பண்புகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆக, குறைகளை அகற்றும் நிலைகளில், அந்த உயர்ந்த நிலைகளைப் பெறுவதற்காக, இந்த உபதேசங்களைக் கேட்டு, நீங்களாக வரவேண்டும் என்றுதான் இதைச் சொல்வது.  ஆகையால் நீங்கள் அதைச் செய்கிறீர்கள். அதை மேலும் நல்ல முறையில் வளர்க்க வேண்டும்.

னென்றால், எப்படியெல்லாம் குறைகள் நம்மைறியாமல் வருகிறது? மாறுகிறது, அதை எப்படி நாம் மாற்ற வேண்டும்? என்ற நிலையில், ஒவ்வொரு  நொடியிலும் நாம் அதைத் தெளிவாக்கிக் கொண்டுவர வேண்டும்.

எப்படி, உலகிற்குச் சூரியன் குருவாக இருந்து, உலகத்தையும் மற்ற பிரபஞ்சத்தையும் இயங்குகின்றதோ, இதைபோலவே நம் குரு காட்டிய நிலைகொண்டு, நமக்குக்ள் பகைமையற்ற உணர்வுகளும், ஒழுக்கம் என்ற நிலைகளும் நாம் வளர்க்க வேண்டும்.
4. நல்லது நல்லதும் அல்ல, கெட்டது கெட்டதும் அல்ல
குழம்பு வைக்க காரம், புளிப்பு, உப்பு எல்லாம் தேவைதான். ஆனால் சமப்படுத்துதல் வேண்டும். தீமை என்ற உணர்வு நமக்குள் இருந்தால், எதையும் அறிய முடியாது.

வெறுப்பான நிலை இல்லை என்றால், அந்த வெறுப்பின் தன்மை வராது. ஏனென்றால், நமக்கு அது தெரியாது. ஆக நம்மைத் தெரியப்படுத்தும் வெறுப்பு இருந்தாலும், அந்த வெறுப்பின் தன்மை தெரிவித்து, வெறுப்பின் தன்மையே வளர்த்துக் கொண்டால், வெறுப்பின் தன்மையே வரும். வெறுப்பை விலக்க வேண்டும்.

உப்பு கைப்பு என்ற நிலை இருந்தாலும்,
சுவையைக் கூட்ட உப்பைக் கலக்க வேண்டும்.
ஆக உணர்ச்சியைத் தூண்டும் காரத்தைக் குறைக்க வேண்டும்.
காரத்தை அதிகமாகக் கலந்தால், ஆபத்தை உருவாக்கும்.

இதைப்போன்ற நிலைகளில், எதுவும் கெட்டது அல்ல.
நல்லது நல்லதும் அல்ல.
கெட்டது கெட்டதும் அல்ல.
ஆறாவது அறிவு கொண்ட நாம், நமக்குள் அறிந்து, தவறு என்று உணர்ந்துவிட்டால், நாமே திருத்தி அதை மாற்றி அமைக்க வேண்டும்.

தனக்குள்ளே, நாம் பிறருடைய நிலைகளைக் குறை கூறுவது போல, நாம் கேட்டறிந்த உணர்வுகள், நமக்குள் குறைவராத நிலைகளில் நீக்கிப் பழக வேண்டும்.

ஒவ்வொரு நாளும், நமது சந்தோஷம் பிறருடைய நிலைகளை, சந்தோஷப்படச் செய்ய வேண்டும். ஆக எல்லோரையும் ஒன்றிணைக்கச் செய்யத்தான் இதைச் சொல்வது. ஆகையால், நாம் யாரையும் குறை கூறுதல் வேண்டாம்.
எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும்,
நம்மை அறியாது குறைகள் வந்தாலும்,
நமக்கு நாமே நீக்க வேண்டுமே தவிர
நம்மால் பிறருக்குத் தீங்கு வரக் கூடாது.
நம்மால் பிறரது மனம் உடையக் கூடாது
என்ற இந்த உணர்வுகளை, நமக்குள் வளர்த்தல் வேண்டும்.

ஒருச் சொல்லைச் சொல்லும்போது, அது ஒருவரைப் புண்படச் செய்யும் நிலையாக வந்துவிடலாம். அது பகைமையாக ஆகிவிடும். எதனால் வந்ததோ, அதுவே நமக்குள்ளும் விளைந்துவிடும்.

இதைப் போன்ற நிலைகளை நாம் அகற்ற, ஆத்மசுத்தி என்ற நிலையை எடுத்து, நாம் எல்லோரும் இங்கு எடுத்துக் கொண்ட நிலைகள் கொண்டு, நம்மை எண்ணினால் சந்தோஷம் வர வேண்டும்.

அவர்கள் குடும்பம், நன்றாக இருக்க வேண்டும். அவர்கள் உயிர், நன்றாக இருக்க வேண்டும். இந்த எண்ணங்களே அவர்களை இயக்கும். அப்படி இயக்க வேண்டும் என்றால், அதன் வழி நடக்க வேண்டும்.
5. ஞானகுருவிற்கு எது மதிப்பு?
சாமிக்கு பதில், நீங்கள் இந்த உயர்ந்த பண்புகளை வளர்த்துக் காட்டினால், நீங்கள்தான் சாமி. உங்கள் நிலை கொண்டுதான் இங்கு சாமியின் நிலைக்கு மதிப்பு.

நீங்கள் எல்லாம் சங்கடப்பட்டு, சலிப்புப்பட்டு, வெறுப்புப்பட்டு இருந்தீர்கள் என்றால், சாமியைக் குப்பையில் போடுகிறீர்கள் என்று அர்த்தம். அத்து மீறியதாக ஆகும். ஆகையால், எல்லோராலும் உயர முடியாது.

என் சக்தியின் நிலைகளை நீங்கள் பயன்படுத்தினாலும், உங்களை உயர்த்திக் காட்டினால்தான், எல்லோருக்கும் சந்தோஷம் கிடைக்கும். உங்களுக்கும் சந்தோஷம் கிடைக்கும். எல்லோரையும் சந்தோஷப்பட வைக்கலாம்.

ஆகவே, நாம் அனைவரும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டும் அருள் வழியில், இதைக் கடைபிடிக்க வேண்டும். அவர் பித்தனைப் போலத்தான் இருந்தார். பல நிலைகளிலும், பல இன்னல்களைப் பட்டார். அவருடைய நிலையை, பிறர் பார்க்கும் போது பைத்தியக்காரனாகத்தான் காட்டினார்.

ஆனால், அந்த பைத்தியக்கார நிலையில், அவருக்குள் எவ்வளவு பெரிய ரகசியங்கள் இருந்தது. நம் நிலைகளுக்குத் தெரியாது.

அதே குருநாதரை வைத்து, நான் அதைச் செய்கிறேன். இதைச் செய்கிறேன். ரசமணி செய்கிறேன் என்று, மந்திரங்கள், தந்திரங்கள் என்று அவர் பேரைச் சொல்லி, இப்படியும் சில பேர் செய்திருக்கிறார்கள்.  ஆனால் அவர் உடலில் பல உணர்வுகள் உண்டு. அவர் எடுத்துக் கொண்ட நிலைகளிலும் கற்றுணரந்த நிலைகளிலும் அவர் உடலைவிட்டுச் சென்றான். அவர் உடலில் இருந்து பிணைத்த உணர்வுகள் உண்டு.

அதன் வழியில், தீமையை எண்ணுவோர்க்கு தீமையே கிடைக்கும். நம் குருநாதர் காட்டிய அருள் ஒளி பெற வேண்டுபவர்களுக்கு, அந்த அருள் ஒளி கிடைக்கும். அந்த அருள்ஞானத்தை நாம் பெறுவோம் என்றால், நமக்கு மெய்வழி காணும் நிலைகள் கிடைக்கும்.

நாம் இந்த உடலில் இருக்கும்போழுதே, அந்த அருளைப் பெற வேண்டும். அதை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும். கணவன் மனைவியும், இதைப் போல எண்ணுதல் வேண்டும்.

அன்று அகஸ்தியன் காட்டிய நிலைகள், இன்று துருவத்தில் பேரின்பப் பெருவாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும், அவர் வழியில் சென்றடைவோம். இன்னொரு பிறவி இல்லா நிலை பெறுவோம் என்று பிரார்த்திக்கின்றேன்.
6. யாம் சொல்லும் உயர்ந்த உணர்வுகளை, நீங்கள் உலக மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்
இயற்கையின் நியதிகள், எப்படி மனிதனை அறியாது  ஆட்டிப்படைக்கின்றது என்ற நிலையும், பல கோடி சரீரங்கள் எடுத்து இன்று மனிதனானபின், நமது எல்லை எது என்ற நிலையையும், பலமுறை உபதேசித்திருக்கின்றோம். இன்றும் உபதேசித்திருக்கின்றோம்.

இதன் வழிகளில், ஒவ்வொரு குடும்பத்திலேயும் நாம் அமைதி கொண்டு வாழ்வதும், நமது மக்களை எப்படி நல்வழிப்படுத்த வேண்டும் என்ற உணர்வினை, எடுக்க வேண்டும்.

நமது குருநாதர் நமக்கு எவ்வளவோ புதையலைக் கொடுத்திருக்கின்றார். அதை நாம் எடுத்து அடுத்து. பிறவியில்லா நிலை அடைய வேண்டும். அந்த சக்தியைப் பெறுவதற்குண்டான நிலையைத்தான், நம் குருவழியில் உங்களுக்குள் பதியச் செய்திருக்கின்றோம்.

ஒவ்வொரு குடும்பத்திலேயும் இதைத் தெளிவாக்கி,
உங்கள் உயிரைக் கடவுளாக்கி,
நல்ல உணர்வை தெய்வமாக்கி,
அதையே குருவாக்கி, உங்கள் வாழ்க்கையில்
பேரின்பப் பெருவாழ்வு வாழும் நிலையைப் பெற்று,
நம் அன்பர்கள் அனைவரும் ஒரு குடும்பம் என்ற நிலைகளில்,
உயர்ந்த பண்புகளை வளர்த்து,
ஒருவரை ஒருவர் நாம் மதித்து நடந்து,
நாம் நம் குருவழியில் வழி நடத்திச் செல்லவும்,
நம் ஒவ்வொரு குடும்பமும் உயர்ந்து வரவும்,
அதற்காக வேண்டி தியானித்து,
அந்தக் குடும்பங்கள் நலம் பெறுவதைக் கண்டு
நாம் மகிழ்ச்சி பெறும் அந்த சக்தி பெற வேண்டும்.

எல்லா வழிகளிலும் நம் அமைப்புகளைப் பார்த்து, எல்லோரும் பொற்றும் நிலையும், அதை அவர்கள் பெற்று, அவர்கள் வாழ்க்கையில் அந்த நலம் பெறும் சக்தியை,  நாம் கொடுத்தருள வேண்டும்.

இதற்காக வேண்டித்தான் ஒரு கூட்டமைப்பாக அமைத்து, அதன் வழிகளில் யாம் உங்களுக்குள் இதைப் பதிவு செய்வது.

ஆகவே, நீங்கள் நினைவு கொண்டால், அந்த அருள் சக்தியைப் பெறுவதற்கு இது உதவும். ஆகவே, மனிதனின் வாழ்க்கையில் நாம் எப்படி வாழ வேண்டும் என்று, பலமுறை உபதேசித்திருக்கின்றோம்.
நமது எல்லை எதுவென்ற நிலைகளில் கடைபிடித்து,
குறைந்தபட்சம் அவரவர் குடும்பங்களில்,
எப்படி இந்த உயர்வுகளை பெற வேண்டும்
என்ற எண்ணங்களை வளர்த்து,
குடும்பத்தில் குழந்தைகளையும், கர்ப்பமாகப் போகும்போது,
கர்ப்பமாகும் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும். என்றும்
தாய்மார்களுக்கும், நம்மைச் சார்ந்து அணுகி வருவோர்க்கும்,
நீங்கள் எடுத்து உபதேசிக்கும் உணர்வுகள் வர வேண்டும்.

ஒவ்வொரு நொடிகளிலேயும், இன்று பெண்கள் குடும்பத்தில் எப்படி வாழ வேண்டும்? நமக்குள் எதை எதை எல்லாம் செயல்படுத்த வேண்டும்? குழந்தைகளை எப்படி வளர்த்தல் வேண்டும்? என்ற நிலைகளை, ஒருவருக்கொருவர் சொல்லி, நம்மை சார்புடையோருக்கும், தியானத்திற்குப் புதிதாக வருவோருக்கும், இதை எடுத்துச் சொல்ல வேண்டும்.

இந்த உணர்வு, நமது பொழுது போக்கு. எல்லோரும், அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்று, எண்ணுதல் வேண்டும்.

நம் ஊரைவிட்டு, நாம் எந்த இடங்களுக்குச் சென்றாலும், நம்  சகோதரர்கள் உண்டு. நாம் அங்கு அனைவரும் ஒருவருக்கொருவர், நாம் வளர்ந்த நிலைகளை எடுத்துச் சொல்லி வளர வேண்டும்.

இதை நாம் முறைப்படுத்தி வந்தால், திருந்தக்கூடிய நிலைகளை நாம் அடைகின்றோம். நம்மைப் பார்த்தாலே, எவ்விடத்திலும் உங்களப் பார்க்கும்போது, அந்த உயர்ந்த மரியாதை உங்களுக்குக் கொடுக்கும் நிலை பெற வேண்டும். அதை நாம் வளர்த்தல் வேண்டும்.

ஆக, சிலர் இதற்குள் வந்து, தவறுகள் நிகழ்த்தாது பாதுகாத்தல் வேண்டும். நல்லைதை வளர்ப்பதைக் காட்டிலும், தீமைகள் நம்மை அழித்திடாதபடி பாதுகாப்பதே முக்கியமாக இருக்கின்றது.