ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 25, 2012

சற்குருவின் அருள் ஞானம்

சாமி புத்தகம்   சற்குருவின் அருள் ஞானம்
நாம் நமது வாழ்க்கையில், இந்துக் கலாச்சாரம் என்ற நிலைகளில் வாழ்ந்து வந்தவர்கள். இந்து மதத்தில் சிவ கலாச்சாரம், விஷ்ணு கலாச்சாரம், தேவி கலாச்சாரம் என்ற நிலைகளில் கலாச்சாரங்களை அடிப்படையாக வைத்து, ஆச்சாரங்களை வைத்து, இயங்கி வந்திருக்கின்றோம், இயங்கிக் கொண்டிருக்கின்றோம்.  

இன்று மட்டும் நாம் இதைச் செய்யவில்லை. நம் தாய் கருவில் இருக்கும் பொழுதே, அதிகமாக இந்தக் கலாச்சர அடிப்படையில்தான் ஆச்சார அனுஷ்டானங்களைச் செய்திருக்கின்றார்கள். தாய் கருவிலேயே, இந்த உணர்வு வந்துவிடுகின்றது.

உயிரினங்களை எடுத்துக் கொண்டால், குளவிக்கு, புழுவை எடுத்து, தன் இனத்தை விருத்தி செய் என்று யாரும் சொல்லவில்லை. மிருகங்களுக்கு, பிறந்தவுடன் தாய்ப் பால் கொடுக்க வேண்டுமென்று, யாரும் சொலவில்லை.

ஆனால், மனிதனாகும் பொழுதுதான், அதன் தொடரைக் காண்பித்துக் கொடுக்கின்றோம். மற்ற உயிரினங்கள் உணர்வின் தொடர் கொண்டுதான், அதை அறிந்து கொள்கின்றது.

உயிரினங்கள் அது தாய் உணர்வு எதுவோ,
வேறு சிந்தனைகள் இல்லாததால்,
அந்த உணர்வுகள் ஒருங்கிணைந்து,
அதனதன் பாதுகாப்புக்கு உண்டான உணர்வுகள் 
சிறு குட்டியிலேயே வந்துவிடுகின்றது.

வீட்டில் வளரும் மாடு கன்றுகள், தாராளமாக எங்கும் போகும். அந்த மாட்டைக் காட்டில் விட்டுவிட்டால், அந்தத் தாய் எப்படி மறைந்திருந்து வாழ்கின்றதோ, அதே மாதிரி அந்த மாடு, கன்று போட்டபின், மாடு மேய்ச்சலுக்குப் போனபின்பு, இது ஒரு புதரில்தான் ஒளிந்து கொள்கின்றது. இதெல்லாம் இயற்கையின் உணர்வுகள்,

இப்படி, அந்த உயிரினங்கள் எப்படித் தன்னைக் காத்துக் கொள்கின்றது என்பதை, காடுகளிலும், நாட்டுக்கும், காட்டுக்கும் உண்டான வித்தியாசத்தையும்,
காட்டுக்குள் இருக்கும் உயிரினங்கள் எப்படி இருக்கின்றது?
நாட்டிற்குள் வாழும் உயிரினங்கள் எப்படி இருக்கின்றது?
என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளத்தான், குருநாதர் எம்மைக் காடு மேடெல்லாம் அலையச் சொன்னார்.

ஆனால், காட்டில் வாழும் மனிதரானாலும், நாட்டில் வாழும் மனிதரானாலும், ஒவ்வொரு பகுதிகளிலும், ஒவ்வொரு கலாச்சாரங்களை உற்பத்தி செய்து கொண்ட நிலைகளில்தான் வாழுகின்றார்கள்.

காட்டுக்குள் வாழும் மனிதனும், அவர்கள் எண்ணிக் கொண்ட கடவுளும், அவர்களைக் காக்கும் கடவுளும், அவர்கள் எதைக் கடவுளாக, தன் எண்ணத்தில் பதிவு செய்தார்களோ, அந்தப் பதிவின் இயக்கத் தொடர்தான் அங்கே, கடவுளாக இயக்குகின்றது.

உலகிலேயே, கலாச்சாரங்கள் நிறைந்தது நமது இந்திய மண்ணில்தான். இங்குதான், எண்ணிலடங்காத கலாச்சாரங்கள் உண்டு. வட இந்தியாவில் ஒவ்வொரு இனத்திற்கும், ஒரு கலாச்சாரம். அந்த ஆச்சாரப்படிதான், செயல்படுத்துகின்றார்கள்.

அதே மாதிரி, தமிழ்நாட்டிலும், அந்தந்த இனத்திற்குரிய கலாச்சாரப்படித்தான் இயங்குகின்றார்கள். இவையனைத்தும், மனிதனை அந்த வழிகளில் ஒருங்கிணைத்து, இந்த மனித வாழ்க்கையில், “ஒன்று சேர்ந்து வாழக்காட்டிய நிலைதான்” அது.

இதெல்லாம் அரச காலங்களில், மதமாகக் காட்டி, மதத்திற்குள் சட்டங்கள் இயற்றியதை, மக்கள் அதை ஏற்றுக் கொண்டு, அந்த அரசன் வழிகளில் பதிவு செய்து கொண்டு, ஒரு மதமாக இயக்கினாலும், அதை ஒரு கலாச்சாரமாக்குகின்றார்கள்.

அரசன் வழியில், அவன் காட்டிய உணர்வுகளை,
என்னென்ன செய்ய வேண்டும்?
எப்படிச் செய்யவேண்டுமென்று,
அவன் பாடமாகச் செய்ததை நமக்குள் பதிவு செய்து,
அதுவே சில காலம் சென்றுவிட்டால்,
கடவுளாக இயங்கத் தொடங்கிவிடுகின்றது.
அவர்கள் காட்டிய கலாச்சாரங்கள்தான், கடவுளாகின்றது.

ஒரு புழு புழுவாக இருக்கும் பொழுது, தாவர இனச்சத்தை உணவாக எடுக்கின்றது. அதை ஒரு குளவி, இதே புழுவை எடுத்துக் கொண்டு, இதற்குள் உமிழும் உமிழ்நீராகக் கட்டுகின்றது.

யாம் காடுகளில் சுற்றும் பொழுது, எமக்கு குருநாதர் எதை எதையெல்லாம் உணர்த்தினாரோ, அவைகளை அதன்வழிதான் உங்களிடம் சொல்வது.

அவர் காட்டிய வழிகளில், அதைப் பின்பற்றிய அனைவரும், மகரிஷிகளைப் பின்பற்றியவர்கள். அனைவரும் கல்கி என்ற பிறவா நிலை அடைந்து, ஒளியின் சரீரமாக, இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.
ஆனால், கலாச்சாரப்படி, ஆச்சாரப்படி வாழ்ந்தாலும், நாமும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றோம். மகரிஷிகளும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

அவர்கள் இந்த உடலில் நஞ்சினை நீக்கி, உணர்வினை ஒளியாக மாற்றி, உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.

பிறவா நிலையும், பிறிதொரு இருளை நீக்கி, ஒளியின் சரீரமாகப் பிறக்கும் நிலையில் அவருடைய உணர்வை நுகரப்படும் பொழுது, இருளிலிருந்து விடுபட்டு, ஒளியின் தன்மை பெற்று, வாழ்கையில் மகிழ்ந்திடும் நிலையும், இன்னொரு உடலுக்குள் புகுந்து, இந்த உடலில் பெற்ற உணர்வின் தன்மை கொண்டு, மீண்டும் ஒரு உடல் பெறா நிலை பெற்றவர்கள்.

ஆனால், நாம் இந்தக் கலாச்சாரப்படி
எதையெல்லாம் எண்ணி வளர்த்துக் கொள்கின்றோமோ,
இந்தக் கலாச்சார முறைப்படி, மீண்டும் பிறவிக்கு வருகின்றோம்.

கலாச்சார முறைப்படி ஆசைகளை வளர்த்து, எந்தெந்த உணர்வுகளைத் தூண்டிவிட்டு இருக்கின்றார்களோ, அந்த உணர்வுகள் உடலுக்குள் வலுப்பெற்று, அதுவே கணங்களுக்கு அதிபதியாகி, அதன் வழிகளில் எதை வலுவாகக் கொண்டோமோ, அதுவே இந்த உடலுக்குள் விளைகின்றது.

பின், நாம் இந்த உடலை விட்டுச் சென்றபின், இந்தக் கலாச்சாரப்படி, “நான் எல்லோருக்கும் நல்லது செய்து, ஆண்டவனை வணங்கினேன், எனக்கு இப்படிச் செய்துவிட்டார்களே”, என்ற உணர்வு அதிகரிக்கப்படும் பொழுது, இந்த உடலை விட்டுச் சென்றபின், ஆவேச உணர்வுதான் இருக்கும்.

யாரை எண்ணி, இந்த ஆவேச உணர்வை வளர்த்துக் கொள்கின்றார்களோ, அந்த உடலுக்குள் பேயாகத்தான் ஆட்டும்.

இந்த உணர்வை அங்கே அதிகமாக விளையச் செய்து, அந்த விளைந்த உணர்வே, இந்த உடலைப் பிளந்து, மீண்டும் இந்தக் கலாச்சாரத்தில் காட்டிய முறைப்படி என்ன செய்கின்றது?

“தன்னை மதிக்க வேண்டும்”
என்ற உணர்வுகள் வரப்படும் பொழுது,
அந்த மதிப்பு கொடுக்கவில்லை என்றால்,
பகைமை உணர்வுகளை ஊட்டச் செய்து,
அவர்களை எப்படியும் வீழ்த்த வேண்டும்
என்ற உணர்வுகள் வருகின்றது.

உயிரினங்களை எடுத்துக் கொண்டால், அதில் ஆண் இனங்கள் ஒன்று சேர்ந்துவிட்டால், தன் கௌரவத்தைக் காக்க சண்டை போட்டுக் கொள்ளும். பெண் இனங்கள் சண்டை போடுவதில்லை. சண்டை போடுவதை வேடிக்கை பார்க்கும்.

ஆண் இனங்கள்தான், ஒன்றுக்கொன்று தன் வலிமையின் நிலைகளைக் காட்டும். இதைப் போலத்தான், போர் முறைகள் வந்தது. ஆரம்பத்திலிருந்து, உயிரினங்களிலிருந்து, இந்த வளர்ச்சியில்தான், வளர்ந்து வந்திருக்கின்றோம்.

இதைப் போன்று வளர்ந்து வந்த கலாச்சாரத்தில், இன்றைக்கும் மதங்கள் உருவாக்கப்பட்ட கலாச்சாரத்தில்,
ஆண்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து,
ஆண்களையே உயர்த்திக் காட்டப்பட்டு, அதன்வழிகளில்
பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டு,
அடிமையின் உணர்வுதான்,
இன்று நம்மை இயக்கிக் கொண்டு வருகின்றது.

இதையே ரிஷிகளும், ஞானிகளும், ஆண்பால், பெண்பால் என்று இருந்தாலும், அவர்கள் இரண்டற இணைந்து, உணர்வினை ஒளியாக மாற்றி, இந்த வாழ்க்கையில் வரும் இருளைப் பிளந்தவர்கள். இதுதான் “ரிஷிபத்தினி” என்பது.
அதாவது, மகரிஷிகள் காட்டிய நெறியை, தனது மனைவி ஏற்றுக் கொண்டு, உணர்வின் செயலாக இயக்குவது. இரண்டும் கலந்த உண்ர்வுகள் வரப்படும் பொழுது, கணவருடன் ஒன்றிய நிலைகள்.

இதைத்தான், கவர்ந்து கொண்ட சக்தி எதுவோ, உணர்வின் இயக்கங்கள் எவ்வாறோ, அதன் வழியில்,
இந்த வாழ்க்கையில், தன்னை உயர்த்த வேண்டும் என்ற நிலையை இழந்து,

“பிறர் உயர்த்தப்பட வேண்டும்” என்ற உணர்வுகள், அவர்கள் உயரக் காரணமாகின்றது.

ரிஷிப்பத்தினியாக இவர்கள் இரண்டு பேருமே,
அவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்
அவர்கள் பார்ப்போரெல்லாம்
உயர்ந்த நிலைகள் பெற வேண்டுமென்று
உயர்வின் ஒளியைக் கூட்டி,
மற்றவர்களை உயர்த்த நினைத்தவர்கள்.

அந்த உயர்த்த வேண்டுமென்ற உணர்வுகள் இவர்களுக்குள் விளைந்து, அதுவே அவர்கள் உயரக் காரணமாகின்றது. இதுவே மகரிஷிகளில், கணவன் மனைவியாக இணைந்த நிலையில், ரிஷிபத்தினி என்பவர்களின்  செயலாகும்.

குருதேவர் குளவியைக் காட்டுகின்றார். குளவி புழுவைத் தூக்கிக் கொண்டு வந்து, தனக்குள் இருக்கும் விஷத்தின் தன்மை கொண்டு புழுவைத் தாக்கி, தன் இனமாக மாற்ற விரும்புகின்றது. காட்டிற்குள் இதையெல்லாம் காட்டுகின்றார்.

அதாவது, மகரிஷிகள் ஒளியாதவற்கும், தன் இனமாக (மகரிஷிகளாக) மாற்ற விரும்பும் நிலையையும், அங்கே காட்டுகின்றார்.

உயிரினங்களில் தன் இனத்தைப் பெருக்க வேண்டும் என்ற உணர்வுகளில், இனச் சேர்க்கை வேறு. இனத்தை உருவாக்க வேண்டும் என்ற உந்துதல் வேறு.

குளவி தனக்குள் எண்ணிய உணர்வின் தன்மையைப் புழுவின் மேல் பாய்ச்சுகின்றது. தனக்குள் ஊறும் உமிழ்நீரைக் கூடாகக் கட்டி, அந்தப் புழுவினை அங்கே இணைக்கப்படும் பொழுது, தன் உணர்வின் இயக்கங்களை அதன் மேல் தாக்குகின்றது.

ஆக, இதற்குள் இருக்கும் விஷத்தின் தன்மை தாங்காது, புழுவுக்கு அந்தக் குளவியின் நினைவே வருகின்றது. புழுவின் உணர்வுகளுக்கு, அந்த உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது, அதிலே பதிந்துவிடுகின்றது.

அப்பொழுது, திடீரென்று ஓங்கி எம்மை அடிக்கிறார் குருநாதர். அடித்தவுடன் குளவியைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது, குருநாதர் மேல் திருப்பம் வருகின்றது.
அந்தக் குளவியைப் பற்றிக் காண்பித்துக் கொண்டிருக்கும் பொழுது, குளவி அதனுடைய விஷத்தால், புழுவின் மேல் தாக்கப்படும் பொழுது, புழுவின் நினைவலைகள்,
குளவியால் தாக்கப்பட்ட உணர்வு கொண்டு,
எவ்வாறு இணைக்கின்றது?
அந்த உணர்வுகள்,
அதற்குள் இருக்கக்கூடிய காந்தப் புலனறிவு
எவ்வாறு இயக்குகின்றது,
எவ்வளவு துரிதமாக இயக்குகின்றது?
என்பதை உணர்த்துகின்றார்.
அதே சமயத்தில், எம்மை ஓங்கி அடிக்கின்றார்.

அடித்தவுடன், அவரைத் திடீரென்று பார்க்கின்றேன். திடீரென்று திரும்பியவுடன், அவர் உணர்த்திய உணர்வின் அலையை,
அந்த மெய்ஞான உணர்வை எடுத்து,
எம் எண்ணத்தில் கவரச் செய்கின்றார்.
இழுக்கச் செய்கின்றார்.

இப்படி அவர் உணர்த்தும் மெய் உணர்வை, யாம் கவர்ந்து எமக்குள் இழுத்தவுடன், சிரிக்கின்றார் குருநாதர்.

குளவிக்கும், மனித வாழ்க்கைக்கும், எடுத்துச் சொல்லப்படும் பொழுது, சாதாரண மனிதன் தன்னைக் காத்துக் கொள்வதற்காக, ஒருவனைத் தாக்கபடும் பொழுது, இந்த உணர்வுகள் அவன் மேல் பாய்ச்சப்பட்டு, அதே நிலைகளில், எதிர் பதிலாக, ”அவனை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் வருகின்றது. இந்த மூன்றுக்கும் உண்டான வித்தியாசங்களைக் காட்டுகின்றார்.

குருநாதர் எம்மை அடித்தவுடன், திரும்பிப் பார்க்கின்றேன். அவருக்குள் விளைந்த சக்திகள், அவர் எண்ணத்தால் வெளியிடுவதை, உடனே உற்றுப் பார்த்தவுடன், அந்த உணர்வுகள் வருகின்றது.

அப்பொழுது, அவர் விளைய வைத்த உணர்வுகள், அவரை எண்ணியபின், இந்த அடியை மறந்து, குளவி எப்படி விஷத்தால் புழுவைத் தாக்கியபின், அந்தப் புழு வேதனையை நீக்கிவிட்டு, குளைவியையே எண்ணுகின்றதோ, அதே மாதிரி குருநாதருடைய எண்ணத்தை வைத்து, குருநாதருடைய நிலைகளை எண்ணுகின்றேன்,
அப்படி எண்ணப்படும் பொழுது,
அவர், அந்த “மூல உணர்வுகளின் நிலைகள்”,
அவருக்குள் இணைத்ததை எமக்குள் இணைக்கின்றார்.
இப்படித்தான் குருநாதர் மெய் உணர்வின் தன்மையை எம்மைப் பெறச் செய்தார்.

இதைப் போன்று, நீங்களும் உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் தீமைகளைச் சந்திக்கின்றீர்களோ, உங்கள் நல்ல உணர்வுகள் மாறுகின்றதோ, உடனடியாக, அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் திருப்பமாகி, நினைவச் செலுத்தும் பொழுது, அதிலிருந்து வரக்கூடிய பேரருள் பேரொளியைச் சுவாசிக்கும் பொழுது, பிறருடைய தீமையான உணர்வுகள் நமக்குள் வருவதில்லை.

அதே சமயத்தில், அந்த அகஸ்தியன் துருவனாகி, துருவ மகரிஷியாகி, இன்று துருவ நட்சத்திரமாக, நஞ்சினை வென்று உணர்வினை ஒளீயாக மாற்றி, என்றும் பதினாறு என்று கணவன் மனைவியாக இணைந்து, வாழ்ந்து வளர்ந்து கொண்டு, தன் இன மக்களை வளர்க்கச் செய்து கொண்டிருக்கின்றான்.

அப்பொழுது, அந்த துருவ நட்சத்திரத்திலிருந்து வரும், அருள் உணர்வுகளை, நாம் நமக்குள் கூட்டும் சந்தர்ப்பம் உருவாகின்றது.

ஆக, அந்த துருவ நட்சத்திரத்தின் அருள் வட்டத்தில், நாம் இணைந்து வாழும் நிலை உருவாகின்றது. இந்த உடலுக்குப்பின், நாம் பிறவியில்லா நிலை அடைந்து, அழியா ஒளி சரீரம் நாம் அனைவரும் பெறுகின்றோம். எமது அருளாசிகள்
(பக்கம் 9-11)
குளவி புழுவைத் தூக்கியபின், தன் இனத்தின் நிலைகள் கொண்டு, அது தன் இனமாக மாற்றவேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுகின்றது.

தனக்குள் இன விருத்திக்கான உமிழ்நீரைச் சுரக்கும் பொழுது, அதை மண்ணிலே போட்டுப் பிசைகின்றது. மண்ணிலே போட்டுப் பிசையும் பொழுது, ஒரு நிறம் இருக்கிறதென்றால், தனக்குகந்த மண்ணை எடுத்து வந்து, சுண்ணாம்பினால் அதைக் கலந்து எடுத்துக் கொண்டு வருகின்றது. அதிலே இருக்கக்கூடிய காந்தப் புலனறிவிலே, அதைப் பாய்ச்சுகின்றது. அதைப் பாய்ச்சி, உருண்டையை எடுத்துவந்து கூடாகக் கட்டுகின்றது.

தன் இனவிருத்தியின் உணர்வின் நோக்கங்களில், தன் இனத்தைப் பெருக்க வேண்டும் என்ற உணர்வை அது எடுத்துக் கொண்டு, புழுவைத் தாக்குகின்றது. தாக்கியவுடன் புழுவின் உணர்வின் செல்கள் வெளியிலே போகாதபடி, அது மறைத்துவிடுகின்றது.

முதலில் கவசமாகக் கட்டி விடுகின்றது. அதிலிலுள்ள விஷத்தின் தன்மை புழுவின் தோலைச் சருகாக மாற்றி விடுகின்றது. அதற்கு அந்தச் சக்தி இருக்கின்றது.

அப்பொழுது, புழுவின் உடலை உருவாக்கிய உயிரும், உயிரால் உணர்வால் ஆக்கப்பட்ட, உடலுக்குண்டான அணுக்களிலும், இந்த விஷத்தின் தன்மை பாய்ந்து, விஷமாக ஆகின்றது.

விஷத்தன்மை பாய்ந்தபின், அந்தக் குளவியின் நினைவாற்றல்தான் அதிகமாகி வருகின்றது. அந்த நினைவாற்றல் அதிகரிக்கப்படும் பொழுது, அது கொட்டி சருகாகும் பொழுது, அந்தக் கூட்டின் மேலிருந்து “ரீங்கார ஒலிகளை” எழுப்புகின்றது.

அந்த உணர்வின் இயக்கமானபின்,
இதே நினைவலையில், அந்த உணர்வின் செல்கள் மாறிவிடுகின்றது.
இந்தக் கூட்டின் வழியாக, அந்த உமிழ்நீரைச் சேர்த்தபின்,
அந்த ஒலி அலைகளை எடுக்கின்றது.

நட்சத்திரங்களில் இருந்து வரக்கூடிய கதிரியக்கங்கள், பூமிக்குள் ஊடுருவி, அந்தக் காந்தப் புலனறிவு இயக்கும். காந்தம் அதிகமாகும் பொழுது, பூமியின் நடுவிட்டம் வரை, ஊடுருவிச் செல்லும். ஊடுருவிச் செல்லும் பொழுது, மரங்கள் மேல் தாக்கப்பட்டால், மரங்கள் கருகி விடுகின்றது.

அப்படி ஊடுருவும் நிலைகள் தனக்குள் ஆனவுடனே, வெல்டிங் (welding) வைத்தால் எப்படி ஓட்டை ஆகின்றதோ, அதே போல சில பாறைகளில் ஊடுருவி, அதற்குள் சில நுண்ணிய அலைகளைப் பாய்ச்சுகின்றது. அது தனக்குள் சேர்த்துக் கொண்டபின், மொத்தத்தில் வெடித்துக் கொண்ட உணர்வுகளை ஆவியாக மாற்றும் பொழுது, அதன்வழி, மாற்றங்களைக் கொடுக்கின்றது.

பூமியின் செயலாக்கங்களுக்கு, பிற மண்டலங்களிலிருந்து வரும் விஷத்தன்மையை, நட்சத்திரங்கள் அது தனக்குள் உருவாக்கி, அது உமிழ்த்தும் அலைகளை சூரியனின் காந்த சக்தி, அது தனக்குள் கவர்ந்து கொண்டபின்,
அந்த அலைகளின் வீரியம் வருவதும்,
நம் பூமியின் ஈர்ப்புக்குள் நுழைந்து கொண்டபின்,
அது ஈர்த்துச் சேமிக்கும் நிலையான
நடுமையத்தில் கொண்டு போகின்றது.

நாம் சுவாசிக்கும் நிலைகள், உணர்வுகளை நம் உடலுக்குள் பாய்ச்சினாலும், உடலில் விளைந்த உணர்வுளை எல்லாமே, உயிரிடமே கொண்டு வந்து சேர்த்து வைத்துக் கொள்கின்றது.

இந்த உயிரின் இயக்கங்களை ஊடுருவிச் செய்தாலும் உணர்வின் இயக்கங்களைப் பெருக்கி, அணுக்களைப் பெருக்கி, தன் நினைவுடன் இயக்கச் செய்து, தன்னுடன் இணைத்து, ஒரே இயக்கமாகக் கொண்டு வருகின்றது.

இதற்கும் அதற்கும் உண்டான வித்தியாசத்தைக் காட்டுகின்றார். 27 நட்சத்திரங்களின் நிலைகள் ஒன்று சேர்ந்தபின், கொதிகலனாக மாறுகின்றது. அதிலிருந்து கலவைகள் ஆவியாக மாறி, இது தனது நிலைக்கு மாற்றிக் கொள்கிறது. இதைப் போலத்தான்
இந்த விஷத்தன்மை கொண்ட உணர்வுகள்,
புழு, கூட்டுக்குள் அந்த உணர்வின் வேகங்கள் எடுத்தபின்,
இந்த அணுக்களில் பட்டபின்,
புழுவின் “உயிர்”, இந்த உணர்வுகளை எடுத்தபின், இந்த செல்களை மாற்றி, குளவியாக உருவத்தை மாற்றுகின்றது.  இது பரிணாம வளர்ச்சி.

"மூலக்கூறினுடைய உணர்வுகளை”, ஓரளவுக்கு இணைத்துக் கொடுக்கின்றோம். உங்களுடய உணர்வுகளில், “குருநாதருடைய உணர்வுகளையும், அவர் கண்டுணர்ந்த உணர்வுகளையும் இணைத்து வளரச் செய்வதற்குத்தான் இதை உபதேசிப்பது.

அணுக்களின் நிலைகளை நாம் தெரிந்து கொள்வோம் என்றால், உங்களில் ஒளியான உணர்வுகள் வளர்ச்சி அடைவதற்கு ஏதுவாக இருக்கும். எமது அருளாசிகள்.
(பக்கம் 12-14)
நாம் குரு காட்டியவழியில் தியானத்தைக் கடைப்பிடித்து வாழ்கின்றோம். அப்படிச் சீராகக் கடைப்பிடிக்கும் பொழுது, பிறருடைய கஷ்டமான உணர்வுகளைப் பிரித்துக் காட்டும்.
அருள் உணர்வை எடுத்து, அதை நீக்கி,
அவர்களுக்கு நல்ல வழியைக் காட்டி விட்டோம் என்றால்,
வாழ்க்கையில் தீமைகள் வராதபடி
வ்வப்பொழுது, ஆத்மசுத்தி செய்து நீக்கிவிடலாம்.

இதை நீக்காமல் இருந்துவிட்டு, இந்த உணர்வின் தன்மை எடுத்துக் கொண்டால், அதுவும் இதுவும் கலந்திருக்கும். இந்த ஆன்மாவில் உள்ளதை நாம் சுவாசித்தவுடன், உயிரில் கலக்கும்.

இரவில் புலனடங்கித் தூங்கும் போது, இதெல்லாம் நமது வாழ்க்கையில், காட்சிப் பொருளாகவும், கெட்ட னவுகளாகவும் வரும். இதைப் புரிந்துகொண்டோம் என்றால், நன்றாக இருக்கும்

நம்முடைய உணர்வு ஓட்டத்திற்கு ஒப்ப, ஒரு வெளிச்சத்தைப் போட்டு அதிலே எந்தக் கலர் சுற்றுகின்றோமோ, அதுதான் தெரியும். அதுபோல அறிவின் ஞானத்தை ஊட்டி, இந்த உணர்வின் தன்மை வரப்படும்போது, அந்த உணர்வுதான் நமக்குத் தெரியும்.

அப்பொழுது பிறருடைய குறைகளை உணர முடியும். இப்படி நடக்கின்றது, அவருக்கு இடையூறு வருகின்றது என்று தெரியும்.

பிறர் தவறு செய்திருப்பார்கள். அவருடைய இன்னலான நிலைகள் தெரிய வந்திருக்கும். எனக்குக் காட்சி கிடைத்தது. அவரைப் பார்த்தேன். இந்த மாதிரி கஷ்டமாக வந்துவிட்டது. எனக்கு முதலிலேயே தெரிந்தது”, என்று சொல்லுவோம்.

ஏனென்றால், அவருடைய தவறின் உணர்வுகளை அறிய முடிகின்றது. இதைத்தான் நாம் நுகர்ந்து சொல்கின்றோம். அப்பொழுது, அந்த மாதிரி நேரங்களில் காட்சிகளைக் கொடுத்தவுடனே, இதை ப்படிச் செய்ய வேண்டும்?

அருள் வழியில், பற்றுடன் ஆத்மசுத்தி செய்துவிட்டோம் என்றால், ஒருவரது நிலைகளைச் சொன்னாலும், அவர் நஞ்சு கொண்ட வேதனையான உணர்வுகள், நம் ஆன்மாவில் கலக்காது.

ஆனால், இரவில் நம் வாழ்க்கையில் ஆத்மசுத்தி செய்யாமலோ, செய்திருந்தாலும், அந்த ஆத்மசுத்தியில் குறை இருந்தாலோ, என்ன ஆகும்?

ஒரு பாத்திரத்தில் அழுக்கு சிறிது ஒட்டியிருந்தால், அது சீக்கிரம் போய்விடுகின்றது.
அதோடு ஒன்றிய நிலைகள் இருக்கும் போது,
இரண்டு தரம் தேய்த்துக் கழுவினாலும் போகாது.
இதே மாதிரி, நம் ஆத்மசுத்தியிலும் ஏற்படும். இதெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நான் ஆத்மசுத்தி செய்கிறேன், இப்படித் தெரிகிறதே”, என்று ஏங்கக்கூடாது.தையெல்லாம், நாம் தெளிவாகத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

நாம் போகும் மார்க்கங்கள், மனிதனின் முழுமை அடையும் நிலைகள், நம்முள் விளையும் உணர்வுகள், பிறருடைய இருளைப் போக்கும் தகுதி பெற்றவர்கள் நாம். அதனால் அந்தத் தகுதியை நமக்குள் வளர்த்துக் கொள்வது நல்லது.

மற்றவர்களுடைய தவறைக் கண்ணால் பார்க்கின்றோம். நமக்குள் பதிவு செய்து விடுகின்றோம். நாம் ஆத்மசுத்தி என்ற வலு சேர்த்திருந்தாலும், அந்த நிமிடம்தான், அந்த வலு.

அதிலே துடைப்பு அதிகம் இருக்காது. தூங்கப்போகும் போது, இது வந்துவிடும். அந்த வெறுப்பின் உணர்வுகள் இங்கு வரப்படும் பொழுது, தூக்கம் வராது. என்னதான் ஆத்மசுத்தி செய்தாலும், தூக்கம் வரவில்லை என்போம். ஏனென்றால், அந்த உணர்வின் இயக்கங்களே நமக்குள் இருக்கும். அப்பொழுது,
நாம் ஆத்மசுத்தி செய்த பின்பும்,
அந்தக் கடினமான நிலைகள் விலகவில்லை என்று பொருள்.
இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

தற்கு நாம் என்ன செய்ய வேண்டுமென்றால்,
நம் நினைவை, துருவ மகரிஷியோடு இணைக்க வேண்டும்.
துருவ நட்சத்திரத்தோடு,
சப்தரிஷி மண்டலத்தோடு இணைக்க வேண்டும்.
இதைக் கூட்டிக் கொண்டே இருந்தோமென்றால், அந்த உணர்வுகள் நமக்குள் வர வர, இது ஒடுங்கும். இந்த ஆன்மாவைச் அது சுத்தப்படுத்தும்.

அதே சமயத்தில், நம் உடலில் நாம் கேட்டறிந்த தீமையான அணுக்களுக்கு, சாப்பாடு போய்ச் சேராது. அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டுமென்றால், நம் வாழ்க்கையில் தொடர்ந்து அதிலே இருக்க வேண்டும்.

நம் வாழ்க்கையே தியானமாக்க வேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் எடுத்து, இந்த உடலென்ற சட்டியில் சமைக்க வேண்டும்.

நாம் எந்தெந்தக் காய்களை, குழம்பில் போட்டுச் சமைக்கின்றோமோ, அந்த வாசனைதான் வரும். நாம் உயர்ந்த சரக்குகளைப் போட்டாலும், காரமோ, உப்பின் தன்மையோ கூடிவிட்டால், அந்தக் குழம்பின் சுவை கெட்டுவிடும்.

இந்த குழம்பைப் போன்றுதான், நம் வாழ்க்கையின் நிலைகளில் எதைச் செயல் படுத்துகின்றோமோ, அந்த மணம் நமக்குள் சுவை கொண்ட சொல்லாகவும், செயலாகவும் வரும். அந்த சுவை கொண்ட உணர்ச்சிகளைத் தூண்டும்.

குழம்பில் சிறிது வித்தியாசமாகிப் போய்விட்டது என்றால், உள்ளுக்குள் இழுக்காது. சுவை கெட்டுவிடும். ஆனால், உணவு எவ்வளவு சத்தான நிலைகளில் இருந்தாலும், உள்ளே ஏற்றுக் கொள்ளாது மறுக்கின்றது.

சாப்பாட்டில், அதிலே போட்டிருக்கின்ற மணம்தான் முலாம்.
மணத்தின் உணர்ச்சிகள் நமக்குள் தூண்டப்படும் பொழுது,
உள்ளுக்குள் இழுக்காது.
வெளியில் தள்ளி விடுகின்றது. ஆனால் பசி எடுக்கும்.
இந்த மணத்தை நுகரும் உணர்ச்சிகள்
நம்மை இயக்கினால்தான், இது உள்ளே போகும்.

ஆகையால், நாம் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில், அந்த மகரிஷிகளின் அருள் மணங்களை”, வாழ்க்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதும் நுகர்ந்து பழக வேண்டும்.

சும்மா இருக்கும் பொழுது, ஒருவரை நாம் பார்த்துக் கொண்டிருந்தோம் என்றால், அவர் எடுத்துக் கொண்ட உணர்வு கொண்டு, திடீரென்று நினைவு ஓட்டம் ஓடும்,

ஒரு வெளிச்சத்தைப் போட்டவுடன், அங்கு இருக்கும் பொருள் தெரிய வரும். அதைப் போல, ஞானிகளின் உணர்வுகள் நமக்குள் வரப்படும் பொழுது, அந்த உண்மைகளை நாம் உணரமுடியும். தொழிலில் இருப்போம். இந்த உணர்வுகள் அங்கே பிரித்துக் காட்டும்.

ஒரு கம்ப்யூட்டரில் இரண்டு அலைகள் போட்டவுடன், உதாரணமாக எழுத்து வடிவிலே ஆங்கிலமோ, தமிழோ கொடுக்கிறார்கள். அதனதன் அழுத்தத்தைக் கொடுத்தவுடன், மற்றதைப் பிரித்துக் காட்டுகின்றது.

இதைப் போல நமது உயிர், சூரியனின் காந்த சக்தி கவர்ந்த
இந்த உணர்வுகளை நுகரப்படும் பொழுது,
அதை எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது.
அதனுடைய செறிவினுடைய அளவுகோல் எதுவோ
அதற்குத் தகுந்த மாதிரி, நம் உடலை இயக்குகின்றது.

அதன் அளவுகோல் எதுவோ, அதற்குத்தகுந்த மாதிரி
நமது உயிர், அதை,
அந்தக் காந்தத்தை இழுக்கின்றது.
அதில் வந்த உணர்வு
அதிலே அழுத்தம் எவ்வளவு இருக்கின்றதோ, அதற்குத் தகுந்த மாதிரி, எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது.

மாற்றிய அதனுடைய உணர்வுகளைப் பரப்பப்படும் பொழுது
அதனுடைய இன உணர்வுகள்
அதற்குத் தகுந்த அதிர்வுகளைக் கொடுத்து
உடலை இயக்குகின்றது.
அதற்குத் தகுந்த சிந்தனைகளைக் கொடுத்து
அதற்குண்டான செயல்களையும் செய்கின்றது.

இதைப் போலத்தான், நமக்குள் நூற்றுக்கணக்கான பிரிவுகள் உண்டு. அது வெளிப்படும் பொழுது, எந்தெந்த அளவுகோல் இருக்கின்றதோ, அதற்குத் தக்கவாறுதான், புலனடங்கித் தூங்கும் பொழுது, அதிலே, இந்த வாழ்க்கையில், நாம் எந்த உணர்வை அதிகமாகச் சேர்த்துக் கொண்டோமோ, அந்த அணுக்களின் உணர்ச்சிகள் அதிகமாகத் தூண்டும். அது ஆன்மாவாக மாறும்.

இது இரண்டும் கலந்து, உயிரிலே படும் பொழுதுதான், எலக்ட்ரானிக்காக மாற்றி, பல நிலைகளை நாம் தெரிந்து கொள்கின்றோம். அந்த மாதிரித் தெரிந்து கொண்டாலும், தியான வழிகளில், இது ரொம்பத் தெளிவாகத் தெரியும்.

தூக்கத்தில் இருந்தாலும்,
சும்மா படுத்திருந்தாலும்,
நாம் அமைதியாக இருக்கும் பொழுது,
இந்த ஆன்மாவில் உள்ளபடி,
நம் மனநிலையில் மாற்றங்கள் வந்து கொண்டேயிருக்கும்.

அந்த மாதிரி நேரங்களில், அந்த உணர்வை, தீமையான அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காதபடி ஆத்ம சுத்தி செய்து, அதை அகற்றும்படி, நாம் செய்ய வேண்டும். இதுதான் ஆத்ம சுத்தியில் உள்ள “மூலக்கூறு”.

(பக்கம் 23-25)
மகரிஷிகள் இந்த உலகப் பற்றை, உடலின் பற்றை விட்டுவிட்டு, உயிரின் பற்றிலே சென்றவர்கள் ஆக, உடல் பற்றாக இருப்பதை விட்டு, உயிர் பற்றை வளர்த்தவர்கள்.

உயிரின் சேர்க்கை, அதாவது,
உயிரின் ஒளியால் உணரப்பட்ட உணர்வின் தன்மையை,
ஒளியாக மாற்றப்படும் பொழுது,
உயிருடன் ஒன்றிய சேர்க்கை – ஒளி.
ஆகவே, அவ்வாறு ஒளியானவர்கள் மகரிஷிகள்.
அந்த நிலைகளில் குருநாதர் காட்டும் இந்த நெறியை நாம் அனைவரும் பின்பற்றப்படும் பொழுது, நாமும் அந்த இனத்தைச் சேர்ந்தவர்கள்.

ஏனென்றால், விண்ணுலக ஆற்றலை இந்த மண்ணுலகில் வந்து, அதனைத் தனக்குள் கண்டான் விஞ்ஞானி. மண்ணுக்குள் கண்டாலும், புவியின் ஈர்ப்பு நிலைகளை உணர்ந்தான். ஆனால், அதேசமயத்தில் இராக்கெட்டை ஏவும் போது, இந்த பூமியின் ஈர்ப்பு நிலை சுற்று, அதைப் போல பன்மடங்கு வேகத் துடிப்பினை, உந்துவிசையாக்கி அனுப்புகின்றான்.

புவியின் ஈர்ப்பைக் கடந்துச் சென்றபின், அதனுடைய வேகத் துடிப்பு அதிகமாகின்றது. இந்த உணர்வின் தன்மை கொண்டு, தானே மிதக்கும் நிலை வருகின்றது. எந்த வேகத் துடிப்பின் நிலை கொண்டிருக்கின்றானோ, அதை நிலை கொள்ளவும் செய்கின்றான்.

இதைப் போலத்தான், அகஸ்தியன் விண்ணுலக ஆற்றலை, அணுவின் ஆற்றலைக் கண்டுணர்ந்தான். அகஸ்தியன் கண்டுணர்ந்ததை இதனுடன் இணைத்து, பதிவு செய்து கொள்ளத்தான் குருநாதர் ஆரம்பத்தில் இதையெல்லாம் என்னுள் இணைத்தார். அதை யாம் இப்பொழுது, உங்களுக்குள் இணைக்கின்றோம்.

அணுவின் ஆற்றலை, தனக்குள் அறிந்த அகஸ்தியன், அணுவின் இயக்கத்தை அறிந்துணர்ந்து, விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பருகி, அதையும் சேர்க்கின்றார்.

நமது பூமி தனக்குள் இழுக்கும்போது, இடைமறித்து உணர்வை நுகர்ந்து, அந்த வலுவைப் பெறுகின்றார். அதனால்தான், அதிகாலையில் 4.00 மணிக்கு, துருவ நட்சத்திரத்தை இடைமறித்து, அந்த வழிகளில் உங்களுக்குள் சேர்க்கச் சொல்வது.
மற்ற மதங்கள், 4.30 மணிக்கு கடவுளின் தரிசனத்தைக் காணலாம் என்று சொல்வார்கள். அது, இதெல்லாம் தெரிகிறது என்று, இந்து மதத்திலும் சொல்வார்கள். ஆனால், மூலம் தெரியாது. ஏனென்றால், மறைக்கப்பட்ட உண்மையைத் தான் நாம் தேடிக் கொண்டிருக்கின்றோம்.

ஆகையினால், இதைக் கடந்து சென்று, அந்த மெய் உணர்வின் தன்மையை உங்களிடம் பதிவு செய்வதற்குத்தான் இதைச் செய்வது. இந்த உணர்வுகள் உங்களுக்குள் வளர்ச்சியாக வளர்ச்சியாக, அந்த மகரிஷிகள் கண்ட உண்மைகளை இங்கே வளர்க்கின்றோம். இந்த மனித வாழ்க்கையில் இருளைச் சேர்ப்பதை, நாம் இப்பொழுது விலக்கிக் கொண்டிருக்கின்றோம்.

ஒரு வெளிச்சத்தைக் கண்டபின், அங்கிருக்கும் பொருள் தெரிவது போல் அந்த மகரிஷிகள் உடலில் விளைந்த உணர்வுகளை, நமக்குள் ஒளியாக மாற்றும்போது, நம்மை அறியாது, பிறிதொரு உடலில் விளைந்த உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகின்றது, என்பது தெரிகின்றது.

திடீரென்று, ஒருவர் ஏதாவது சொல்லிவிட்டார் என்றால், நம்மால் அடக்க முடிகின்றதா? அவர் உடலில் விளைந்த உணர்வுகள், நமக்குள் பாய்ந்தபின் நம்மை எப்படி இயக்குகின்றது? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதைப் போல, அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை, ஒவ்வொரு நிமிடமும் ஆத்மசுத்தி செய்து, நமக்குள் சேர்க்கப்படும்போது நமக்குள் அந்த உணர்வின் இயக்கத்தையும் உணரமுடிகின்றது.

ஏனென்றால் நமது தெளிந்த அறிவு, அது மறைக்கப்படும் பொழுது சிந்தனை குறைகின்றது. இருளிலிருந்து விடுபட முடியாத போது, அந்த ஒளி கண்டபின், இருளிலிருந்து விடுபடும் மனபலம் கிடைக்கின்றது.

அதனால்தான், உங்களை அதிகாலையில் எப்படியும் அந்த நேரத்திற்கு, தட்டி எழுப்பி விடுவதும், அந்த உணர்ச்சிகளைத் தூண்டச் செய்வதும்.
அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டுமென்றால், நம் நினைவினை மேல் நோக்கிச் செலுத்த வேண்டும். அந்த துருவ நட்சத்திரத்தோடு தொடர்பு கொண்டு, அதிலிருந்து வரும் பேரருள் பேரொளி உணர்வுகளை நம் உயிர் வழி கவர்ந்து, நம் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு உணவாகக் கொடுக்க வேண்டும். உயிரோடு ஒன்றும் உணர்வுகளை, ஒளியாக மாற்ற வேண்டும்.
(பக்கம் 25-27)
குளவி புழுவைக் கொட்டி, அந்த உணர்வின் தன்மை ஆனபின்
உமிழ்நீரைக் குழைத்து, கட்டிய கூட்டின் வழியாக,
புழு, வெளியே உள்ள உணர்வினை நுகர்ந்து எடுக்கின்றது.
அப்பொழுது, அணுக்களை அதன் ரூபமாக மாற்றுகின்றது.

இதைப் போலத்தான், மகரிஷிகளின் உணர்வின் ஒளிகளை எடுத்து, நமது உயிருடன் ஒன்றச் செய்து, நமது உடலில் உள்ள, உறுப்புக்களை உருவாக்கிய அணுக்களை மாற்றுகின்றோம்.

இந்த நினைவினை, இங்கே கொண்டு வரப்படும் பொழுது, மனித வாழ்க்கையில் நாம் சேர்க்கும் உணர்வுகள், நமது வாழ்க்கையை ஓட்டும்.
நாம் தப்பு பண்ணியது, சரி பண்ணியது எல்லாவற்றையும்
நம் கண் இழுத்து, நமக்குள் பதிவாக்கி இருக்கும்.
பின் அது அனைத்தும் நமது ஆன்மாவாக இருக்கும்.
அதிலே எந்த உணர்வைச் செலுத்துகின்றோமோ,
அது முன் நின்றுதான், நமது உயிர் அதை இயக்கி,
அதன் வழிகளில் தான் நாம் செயல்படுகின்றோம்.

இதைப் போலத்தான், குளவி புழுவைக் கொட்டி, உமிழ்நீரில் மண்ணைக் குழைத்துக் கூடு கட்டி, அதற்கு வெளியில் தன் உணர்வைப் பரப்பி, இந்த விஷத்தைப் பாய்ச்சுகின்றது. அந்தப் புழு, அந்த விஷத்தின் நினைவால் வெளியில் பரவிய உணர்வை நுகர்ந்து, குளவியின் உணர்வை எடுத்து, ரூபம் மாறுகின்றது.

27 நட்சத்திரங்களிலிருந்து வெளிவரும் கதிரியக்கச் சக்திகள், நம் பூமி, அது இழுக்கும் வேகத்தில் பூமிக்குள் ஊடுருவி, பல கலவைகளாக்கிக் கலக்கச் செய்து, பல மாற்றங்களாவதற்குக் காரணமாக இருக்கின்றது.

அதைப் போல, குளவியின் விஷத்தின் தன்மை புழுவிற்குள் ஊடுருவி, அணுக்களை உருமாற்றச் செய்கின்றது.

அதே போலத்தான், இன்று அந்த துருவ மகரிஷியின் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்யும்போது, அது காலையில் உங்களைத் தட்டி எழுப்புவதும், தூக்கம் வராமல் முழிப்பு வருவதும் போன்ற நிலைகள் ஏற்படுகின்றது. அந்த நேரத்தில்,
உங்கள் நினைவினை
துருவ மகரிஷியோடு இணைக்க வேண்டும்.
துருவ நட்சத்திரத்தோடு இணைக்க வேண்டும்.
சப்தரிஷி மண்டலத்தோடு இணைக்க வேண்டும்.
இதை ஒரு பழக்கத்திற்கு கொண்டு வர வேண்டும்.
துருவ மகரிஷியை எண்ணுகின்றோம்.
துருவ நட்சத்திரத்தை எண்ணுகின்றோம். அதன் வழி கொண்டு
சப்தரிஷி மண்டலங்களுடன் நம் நினைவை இணைக்கின்றோம்.
ஆறாவது அறிவு கொண்டு, துருவ மகரிஷி வெளிப்படுத்திய உணர்வு கொண்டு தனக்குள் பெற்று, ஏழாவதாக ஒளியின் சரீரம் பெற்று, மண்டலமாக இயங்கிக் கொண்டுள்ளதுதான், சப்தரிஷி மண்டலம்.

இந்தத் தொடர் வரிசையில், நம் நினைவினை அந்த மண்டலத்துடன் கலந்து விடுகின்றோம். இதைப் பற்றுடன் பற்றி,
ஏணிப் படிகளில் மேலே போகிற மாதிரி
1, 2, 3 என்று அதோடு இணைத்து விடுகிறோம்.
இது மிக முக்கியம்.
வரிசைப்படுத்தி இதைக் கொண்டு போக வேண்டும்.

அப்பொழுது, அந்த உணர்வுகள் நமக்குள் இருப்பதை, குளவி எப்படி புழுவைக் கொட்டி, குளவியாக மாற்றிவிட்டதோ அதே மாதிரி, இந்த உணர்வை நாம் மாற்ற வேண்டும்.

அந்த உணர்வுகளை மாற்றி வரப்படும்பொழுது,
நமது வாழ்க்கையில் கஷ்டமோ, நஷ்டமோ, எதை நாம் பார்த்தாலும்,
நமது கலாச்சார முறைப்படி அந்த உணர்வு நமக்குள் பதிவானபின்,
அது ஏற்கனவே நமக்குள் கலந்த வித்து, அதைக் கவரும்பொழுது,
அது நமது ஆன்மாவாகின்றது.
அதைத் தடைப் படுத்துவதற்கு, இந்த உயிரிலே, குரு கொடுத்த அச்சக்தியை எண்ணி, உள்முகமாகச் செலுத்தி, ஆன்மாவைத் தூய்மைப் படுத்திக் கொண்டே இருக்கவேண்டும்.

இல்லாவிடில், நம்மில் விளைந்த அணுக்கள் தனக்கு ஆகாரமாக எடுக்கும். இதைத் தடுப்பதற்குத்தான் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில், அந்த துருவ மகரிஷியின் அருள் வழியில், அந்த துருவ மகரிஷியின் உணர்வுகளை, நமக்குள் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்க வேண்டும்.

ஏனென்றால், அவர்கள் பிறவிக் கடனை நீக்கிச் சென்றவர்கள். அவர்களை எண்ணத்தால் கவர வேண்டுமென்றால், நமக்கு அந்தச் சக்தி இல்லை.
குளவி கொட்டியபின்,
அந்த விஷத்தின் தன்மை கொண்டு, புழுவிற்கு
அந்த குளவியின் உணர்வை
பெறும் சக்தி வருகின்றது

அதே போல, அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவதற்காக துருவ மகரிஷியின் உணர்வின் நிலையை, அடிக்கடி உங்களுக்குள் பாய்ச்சப்பட்டு ஆயிரக்கணக்கானோர் உணர்வுகளில் அது சேர்க்கப்படுகின்றது.

அப்படிச் சேர்க்கப்பட்ட இந்த உணர்வின் வலுவை நாம் அனைவரும் பெறுவதற்குத்தான், எல்லோரும் தியானம் முடிந்தபின், “தியானத்தில் அமர்ந்துள்ளோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்” என்ற ஒருங்கிணைந்த வலுவைக் கொண்டு வருகின்றோம்.

குருநாதர் காட்டிய வழியில் அந்த வலுவைக் கூட்டி எண்ணி, அதைப் பதிவு செய்யப்படும்பொழுது, நம்முடைய எல்லோருடைய எண்ணமும் எல்லோருக்கும் கிடைக்கின்றது. இந்த ஒருங்கிணைந்த உணர்வுகள், காற்றிலுள்ள மகா ஞானிகளுடைய உணர்வோடு ஒன்றிவிடுகின்றது. அதற்குச் சமமாகி விடுகின்றது.

ஒரு நூலைக் கட்டி ஒரு பொருளைத் தூக்கும்போது, அது அறுந்துவிடுகின்றது. பல நூல்களை இணைத்து, கயிறாகத் தறித்து கடினமான பொருளையும் எளிதாகத் தூக்குகின்றோம்.

அதைப் போலத்தான், நமது குருநாதர் காட்டிய அருள் வழியில், அவர் எதை எதை எல்லாம் உணர்த்தினாரோ, அதை மனதில் வைத்து, அதை உங்களில் உருவாக்குவதற்குத்தான், மகரிஷிகளின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்து, கூட்டுத் தியானத்தின் மூலம் அதைப் பெறச் செய்வது.
(பக்கம் 28-31)
சில சமயங்களில், நாம் எவ்வளவு தெளிவாக இருந்தாலும், நம்முடைய பையன் நான்கு தடவை அடம்பிடித்தால் போதும், இந்தப் பற்று இங்கே வந்துவிடுகின்றது. அது, நம் எண்ணத்தை ஆன்மாவிலே மறைத்து விடுகின்றது. இந்த உயர்ந்த எண்ணத்தைப் பெறும் தகுதியை, இழக்கச் செய்கின்றது.

இந்த நஞ்சான உணர்வு வந்து ஊடுருவப்படும் பொழுது, இது தன் இரையை எடுத்துக் கொள்கின்றது. இந்த உடல் பற்றின் உணர்வுகள், அந்த அணுவின் வளர்ச்சியும் நமக்குள் தொடர்ந்து விடுகின்றது. இதைத் துடைப்பதற்கு, அவ்வப்பொழுது ஆத்ம சுத்தி செய்து, எண்ண வலுவைக் கொண்டு வரவேண்டும்.

அதற்குத்தான், நாம் ஒவ்வொரு நிமிடமும் ஈஸ்வரா என்று நம் உயிரிடம் எண்ணத்தைச் செலுத்திப் பழக வேண்டும். இந்தக் கண்ணின் நினைவை, அங்கே கொண்டு போக வேண்டும்.

கூட்டுத் தியானத்தில், நாம் பெறும் அந்த மகரிஷிகளின் உணர்வை கண்ணின் நினைவிற்குக் கொண்டு வந்து, உயிருடன் இணைக்க வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற்று, அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இணைக்க வேண்டும்.

இவ்வாறு காட்டியதைத்தான், இந்தக் குண்டலினி யோகக்காரர்கள் “ஆக்ஞை” இடப்பட்டு என்று சொல்வார்கள். நாம் எந்த உணர்வைச் செலுத்துகின்றோமோ, அது நமக்குள் அணுக்களில், “மூலாதாரத்தில்” உடலின் அணுக்களில் இயக்குகின்றது.
உடலின் உறுப்புக்களுக்கு மூலம், அணுக்களின் தன்மை.
மூலாதாரம் இங்கே “உயிர்”

இதைத்தான், “மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை, காலமறிந்து” என்கிற பொழுது,
நம்மிடத்தில் தீய அணுக்கள் உண்டு.
அதற்கு வளர்ச்சி இல்லாதபடி,
“மூண்டெழும் கனலைக் காலமறிந்து,
கருத்துடன் செயல்பட வேண்டும்” என்றுதான்,
அந்த இடத்தில் காட்டப்பட்டது.

இவர்கள் என்ன செய்கின்றார்கள் என்றால், அங்கே கட்டளை இடப்படும் பொழுதுதான், ஆக்ஞை என்ற நிலையைக் கொண்டு வருகின்றார்கள். அப்பொழுது ஆக்ஞை இட்டு, பரவுலகத்தை மேலே உச்சிக்குக் கொண்டு போய், இதன் வழிகொண்டு மோட்ச லோகத்திற்குக் கொண்டு போ, என்று சொல்கின்றார்கள்.

ஆக மூலாதாரம், இந்த உடல் முழுவதற்கும் இங்கே கீழே இழுக்கப்பட்டு, இந்த உணர்வுகள் சமைக்கப்பட்டு, இந்த உணர்வின் தன்மை இரத்த நாளங்களில் இருந்து பிரிக்கப்படுகின்றது என்று, இவர்களின் அனுமானம். மூலாதாரம் கீழே இருக்கின்றது என்று, இவர்கள் கொண்டு போகின்றார்கள்.

ஆனால், நமக்கு மூலம் உயிர்.
நாம் எடுக்கும் உணர்வுகள் நமக்கு ஆதாரம்.
இந்த ஆதாரத்தை, நமக்குள் மறைந்திருக்கும்
ஒவ்வொரு அணுக்களுக்கும் சேர்ப்பிக்க வேண்டும்.
இதுதான் குண்டலினி.

கண்ணின் நினைவு கொண்டு, உயிருடன் ஒன்றி, உணர்வினை உடலுக்குள் பரப்புதல் வேண்டும். அந்த உணர்வின்  தன்மை வலுப்பெறும் பொழுது, இதைப் பிளக்கின்றது.

ஏனென்றால், நமக்குள் பதிவான குணங்கள் பல கோடி. அது அது சாப்பாட்டிற்குக் கிளர்ந்தெழத்தான் செய்யும். பூமிக்குள் என்னென்ன விதை மறைந்திருக்கின்றதோ, களையை நீக்கியவுடன், மழைக் காலம் வந்துவிட்டதென்றால், துணிந்து ஆகாரத்தை எடுத்துத் தழைக்க ஆரம்பித்துவிடும்.

அதே மாதிரி, அந்தந்தக் காலப் பருவத்தில் அது அதை எடுத்துக் கொள்கின்றது. ஒருவர் கோபப்படுவதைப் பார்த்துப் பதிவு செய்துவிட்டால், சண்டை போடுவதைப் பார்த்தால், அந்தக் காலப்பருவம் வந்துவிட்டது.

உடனே ஆன்மாவில் சேர்ந்துவிடும். உடனே சண்டை போடுகிற மாதிரிதான் வரும். சண்டையை வேடிக்கை பார்த்தால், வீட்டில் சண்டை போடுவீர்கள். அந்தக் காலப்பருவத்தில், அது வளர ஆரம்பித்து விடுகின்றது.

நமக்குள் விளைய வைத்த வித்துகள், அந்தந்தக் காலப்பருவம் வந்துவிட்டால் அது அது விளைய ஆரம்பித்துவிடுகின்றது. எந்தக் காலப்பருவத்தில் விளைந்தாலும், நமக்குத் தேவைப்பட்டதை விளையச் செய்ய, களையை நீக்குகின்றோம். அதை நாம் நீக்குவதற்கு, சக்தி கொடுக்கின்றோம்.

எந்தக் காலப்பருவமானாலும், அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும். அந்த உணர்வை உள்முகமாக உடலுக்குள் செலுத்தி, வலுப் பெறச் செய்து, அதற்குச் சாப்பாடு இல்லாமல் செய்ய வேண்டும்.

இந்தக் களையை நீக்க வேண்டும். இதை நீக்கினால்தான், அதற்குச் சாப்பாடு கிடைக்காது. இல்லையென்றால், சண்டை போட்ட அணுவெல்லாம் சாப்பாடு எடுத்துவிடும்.

ஓரு குடும்பத்தில் வேதனைப்படுகிறார்கள். அந்த வேதனையான சொல்லைக் கேட்டுக் கொண்டிருந்தோமென்றால், அந்தக் காலப்பருவம் என்ன செய்யுமென்றால், அந்த வேதனையான அணுக்கள் நம்மிடம் வந்து, வளர்ச்சியடைய ஆரம்பித்துவிடுகின்றது.

இப்படிப் பெரும்பகுதி, எங்கு திரும்பினாலும், ரயிலில் போகும் பொழுது, அடுத்தவர்கள் செய்யும் தவறைப் பார்த்தால் வேதனை. கடையில் இருக்கும்போது ஒருத்தருக்குக் கடன் கொடுத்துவிட்டு, அவர் தரவில்லை என்றால் வேதனை. கோபம், குரோதம், வெறுப்பு.

இதுவெல்லாம் சந்தர்ப்பத்தால் விளையப்படும் போது, உள்ளுக்குள் ஊட்டம் கொடுத்துக் கொண்டேயிருக்கும். அது அது வளரும்.

மனிதருடைய மனநிலை,
காலையில் ஒரு மனதாக இருக்கும்.
இதை விட்டு வெளியே போகின்றோமென்றால்,
மனது வேறு விதமாக மாறும்.
தொழிலில் அமர்ந்தவுடன் என்னவாகும் என்றால், ஒருவன் நம் சொல்லைக் கேட்காமல் இருப்பான். நமக்கு இடைஞ்சல் செய்து கொண்டே இருப்பான்.

நாம் இங்கே இருக்கும் வரையில், இதையெல்லாம் மறந்து இருப்போம். ரோட்டில் போகும் பொழுது மறந்திருப்போம். அந்த இடத்தில் (தொழிலில்) உட்கார்ந்தவுடனே, அவனைப் பார்த்தவுடனே, மீண்டும் அந்தக் களை முளைக்க ஆரம்பித்துவிடும்.

வேதனை வெறுப்பு வந்துவிட்டால், நல்லவர்களையும் வெறுத்துப் பேச ஆரம்பித்துவிடும். ஒரு நல்ல அமைப்பை அமைக்க வேண்டுமென்றால், வெறுப்பாகத்தான் வரும். அந்தந்தக் காலப்பருவத்தில், அது அது விளைகின்றது.

நாம் ஒவ்வொரு நிமிடத்திலும், மனிதன் காலப்பருவத்தை மாற்றுகின்றோம். அதே போல மாற்றியமைத்த அருள்ஞானிகளின் உணர்வுகளை உள்செலுத்தி, அந்தந்தப் பருவங்கள் வரப்படும் பொழுது, களைகளை நீக்கிக் கொண்டே ருக்க வேண்டும். இதுதான் ஆத்ம சுத்தி என்பது.
(பக்கம் 31-33)
நாம் எதற்கு வளர்ச்சியைக் கொடுக்கின்றோமோ, அது நமக்குள் விளைந்துவிடும். “என்னை இப்படிப் பேசினானே, பேசினானே” என்று எண்ணப்படும் பொழுது, அந்த உணர்வின் தன்மை நமக்குள் வளரப்படும் பொழுது, அந்த மனிதருடைய எண்ணங்கள் நமக்குள் வந்து, இது அதிகமாக வளர்ந்துவிடுகின்றது.

அதனால் உருவாக்கப்பட்ட உணர்வுகள், எப்படி குளவி, புழுவுக்குள் விஷத்தன்மையைப் பாய்ச்சியபின், குளவியின் நினைவு வந்து, குளவியாகவே மாறுகின்றதோ. அதுபோல,
“நம்மைக் கெட்டுப்போக வேண்டும், இப்படிப் பேசுகின்றான்”,
என்ற இந்த உணர்வைப் பதிவுசெய்து கொண்டபின்,
நம்மைக் காக்க வேண்டுமென்று வந்தாலும்,
கெட்டுப்போக வேண்டுமென்ற உணர்வினை
நமக்குள் வளர்க்கப்படும் போது,
நமக்குள் அந்தக் கெடுதல் வந்துகொண்டே இருக்கின்றது.

அவன் எதைச் செய்தானோ, அந்த அணுக்கள் நமக்குள் விளைந்து, நாம் போகும் பக்கம் எல்லாம், அதற்குச் சாப்பாடு வருகின்றது. ஆன்மாவாக மாறுகின்றது.

நாம் யாரிடம் சொன்னாலும், கெட்டுப் போகவேண்டும் என்ற நிலைகளில், வியாபாரத்தில் மந்தம். அதைப் போன்று, துணி நெய்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம். “நேற்று கொண்டுவரச் சொன்னார்கள், எடுக்கவில்லை பார்” என்று சொல்வதைப் பார்க்கலாம். இன்று மனநிலை மாறிவிட்டால், தப்பாகக் காட்டும்.

இதைப்போல உணர்வுகள், அதை  மாற்றியமைத்துக் கொண்டே வரும். “கெட்டுப் போக வேண்டும்” என்று நாம் சொன்ன உணர்வுகள், நமக்குள் கெடச் செய்து, வியாபாரத்திலும் கெடச் செய்துவிடும்.

நம் குழந்தைமேல் பாசமாக இருப்போம். அவன் மேலும் வெறுப்பு வரும். இப்படி, அந்த உணர்வின் செல்களை வளர்த்துவிடுகின்றோம். அவனின் உணர்வுகளை எல்லாம், நமக்குள் வளர்த்துவிடுகின்றோம். இவ்வாறு வளர்த்துக் கொண்டபின், இந்த உடலைவிட்டுச் சென்றபின், அவன் உடலுக்குள் செல்கின்றோம்.

பாம்பு தன் இரைக்காகத் தவளையை விழுங்கியபின், தனக்குள் உடலாக மாற்றிக் கொள்கின்றது. ஆனால், எதன் விஷத்தை இதற்குள் பாய்ச்சியதோ, இந்த உடலை உருவாக்கிய அணுக்கள், குளவி பாய்ச்சிய மாதிரி இதற்குள் பாய்ச்சியவுடன், கரு முட்டையாக உருவாகிவிடுகின்றது. அதனின் உணர்வை எடுத்து, இந்த உயிரணு பாம்பாக உருவாக்கி விடுகின்றது. இது பரிணாம வளர்ச்சி.

தவளையை, பாம்பு பதுங்கி இருந்து பார்க்கின்றது. தவளை தப்பித்துக் கொள்ள எண்ணுகின்றது. பாம்போ, குறி வைத்து, சீறிப் பாய்ந்து அதைத் தாக்குகின்றது.

இப்படி நாம் ஒவ்வொரு உடலிலும் தன்னைப் பாதுகாக்கும் உணர்வை வளர்த்து வளர்த்து, எல்லாவற்றையும் பாதுகாக்கும் நிலை பெற்ற, மனிதனாக உருவாகியுள்ளோம். ஆனால், மனிதனாக ஆனபின், எதிரியை வீழ்த்திவிட்டு, நாம் வாழவேண்டும் என்று, எண்ணுகின்றோம்.

ஒருவர்  ஒரு கடை வைத்து இருக்கின்றார். அதில் வியாபாரம் நன்றாக இருக்கின்றது என்றால். அந்தக் கடையை எப்படியெல்லாம் கெட்டுப்போக வேண்டுமோ, அதையெல்லாம் செய்வோம். 
நம்மையறியாமலேயே,
“அவன் சரக்கு மோசமான சரக்கு” என்று சொல்வோம்.
சரக்கு நன்றாக இருக்கும்.
ஆனால், அவர்மேல் நமக்கு வெறுப்பு இருக்கும்.
அவர் சரக்கை, மோசம் என்று சொல்லுவோம்.

நாம் எவ்வளவுதான் பேசினாலும், மனம் ஒத்திருந்தால், அவர் சரக்கு நன்றாக இருக்கும் என்று சொல்லுவோம். இதைத் தெரிந்துக் கொண்டபின்கூட, நம்மிடம் அந்த உணர்வு வரும்.

நாம் எல்லாம் தெரிந்து கொள்கின்றோம். ஆனாலும், அவர் மேல் பற்று இருந்தது என்றால், சரக்கையும் நல்லதாக்குகின்றோம். அவர் மேல் பற்று இல்லை என்றால், அவர் எடுத்து வந்த சரக்கையும், மட்டமாகக் காண்பிக்கின்றோம்.

இந்த உணர்வுகள் அங்கு பதிவு செய்துவிட்டால், இதுதான் அங்கு பாயும். எதிரிக்கு உணர்வின் அலையை மாற்றும்போது, உணர்ச்சிகளை அங்கு மாற்றும். எதன்மேல் பற்று கொண்டு, இந்த உணர்வுகள் வருகின்றதோ, நம் வார்த்தையைக் கேட்பார் என்றால் அவருக்கு அதுதான்.

மற்றவர்கள் உயர்ந்த நிலைகள் பெறவேண்டும் என்ற உணர்வை நீங்கள் பாய்ச்சும்போது, அதை அவர்கள் பதிவு செய்து கொண்டார்கள் என்றால், அவர்கள் உயர்ந்த நிலைக்கு வருகின்றார்கள்.

அந்த உணர்வை சரியான நிலைகளில் ஏற்றுக் கொள்வார்களா? மாட்டார்களா? என்று இதைக் கலந்துவிட்டு, சொல்லப் போனோம் என்றால், அந்த ஏற்றுக் கொள்ளாத உணர்வே வரும். இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது, மிகவும் அவசியம்.
(பக்கம் 35-39)
நாம் அழுக்குத் தண்ணீரில், நல்ல தண்ணீரை ஊற்றும் பொழுது, ஊற்றும் இடத்தில் பார்த்தால், நன்றாக இருக்கும். அதனுடன் இரண்டறக் கலந்தபின், அந்த நல்ல தண்ணீரை மாற்றிவிட்டு, அழுக்குத் தண்ணீரையே காட்டும்.

கடல் மிகவும் பெரிதுதான். அதில் பெருங்காயத்தைக் கரைத்தவுடன், அதிலே அலைகள் மோதியவுடன், அந்த வெப்பத் தாக்குதலினால் நறுமணங்கள் வரும். சிறிது நேரத்தில், கடலில் பெருங்காயத்தின் மணம் மறைந்துவிடும்.

அதே போன்று, கடல் எப்படிப் பல சத்துகளைக் கவர்ந்தாலும், அதிலே சுருங்கிய உணர்வுகளில் உப்புச் சத்து நிறைய உண்டு. உப்புச் சத்து நிறைய இருந்தாலும், அதிலே நல்ல சத்தை உருவாக்கும் சக்தி உருவாகி விட்டால், கடலிலேயும், அது தனக்குள் உப்புத் தண்ணீரை மாற்றி, நல்ல தண்ணீராக மாற்றும் இடமும் இருக்கின்றது.

இராமேஸ்வரத்தில், அந்தப் பாறைப் படிவத்திற்குத் தக்க மாதிரி, அந்தத் தண்ணீர் ஓடுகின்ற பாதையில், ஒரே கிணற்றில் இந்தப் பக்கம் வேறுவிதமாக இருக்கும். அந்தப் பக்க ஊற்றிலே, உப்பாக இருக்கும்.

நான்கு கிணறு இருக்கிறதென்றால், இந்தப் பாறையின் உணர்வு ஓட்டத்திற்குத் தக்க, தண்ணீரின் சுவை வித்தியாசமாக இருக்கும்.

இதைப் போலத்தான், நமக்குள் நூற்றுக் கணக்கான பிரிவுகள் உண்டு. அது வெளிப்படும் பொழுது, எந்த உணர்வை அதிகமாகச் சேர்த்துக் கொண்டோமோ, அந்த உணர்ச்சிகள் அதிகமாகி, ஆன்மாவாகி, உயிரிலே படும் பொழுதுதான், எலெக்ட்ரானிக்காக மாற்றப்பட்டு, பல நிலைகளைத் தெரிந்து கொள்கின்றோம்.

நாம் உதாரணமாக, காலை வேளைகளில் தொழில் சம்பந்தமாகப் போகின்றோம். நாம் பஸ்ஸில் பயணம் செய்யும் பொழுது, பல நிலைகளைப் பார்க்கின்றோம். அனைத்தும் உயிரிலே பட்டு, நமது ஆன்மாவாக மாறிவிடுகின்றது. நம் மனநிலை, அதற்குத்தக்க மாறிவிடுகின்றது.

பஸ்ஸை விட்டு இறங்கி, ஆபீசுக்குப் போகும் பொழுது, ஒரு நிலை. இந்த இரண்டு நிலையும் சேர்ந்து, ஆபீசுக்குள் போகும் பொழுது, ஒருவர் துடைத்துக் கொண்டிருப்பார். இந்த உணர்வுடன் பார்த்தவுடன், பேப்பரும் சேர்ந்து பறந்து போகும்.

“ஏம்பா, பேப்பரை எடுத்து வைத்துவிட்டு, தட்டுவதில்லையா?” என்ற இந்த உணர்வுதான் வரும். இந்தக் குறுகலான உணர்வுதான் வரும். அப்பொழுது, இந்த உணர்வை நமக்குள் பதிவு செய்து விட்டோம். ஆபீசுக்குள், குறைகளைத்தான் வளர்த்துக் கொள்கின்றோம். இந்த உடலான ஆபீசுக்குள்ளேயும், குறைகளை வளர்க்கும் சக்தி கூடிக் கொள்கின்றது.

இந்த மாதிரி சந்தர்ப்பங்களில், நாம் ஆபீசுக்குப் போனவுடனே, ஆத்ம சுத்தி செய்ய வேண்டும். அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மாக்கள், ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று, நம் கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து, பல முறை எண்ண வேண்டும்.

இதைத்தான் அன்று ஞானிகள் சொன்னது. “ஆக்ஞை”. இந்த உணர்வின் தன்மை கொண்டு, நம் உயிருடன் எதை எண்ணுகின்றோமோ, உயிர் அதை இயக்கும்.

அந்த துருவ மகரிஷிகளின் அருள் சக்தி, எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும், என்ற உணர்வை புருவமத்தியின் வழியாக, உடலுக்குள் கொண்டு போக வேண்டும்.

சிறிது நாட்களுக்குப் பழக்கம் வந்துவிட்டதென்றால், இது உள்ளுக்குள் கொண்டு போகும். அப்பொழுது, இந்த உணர்வின் செல்களை வளர்க்கப்படும் பொழுது, எதை அங்கு பற்றினோமோ, இந்த நினைவு அங்கு கொண்டு போகும்.

முதலில், பிறர் செய்யும் தவறுகளைக் கண்ணில் பார்க்கின்றோம். கண் இழுத்து ஆன்மாவாக மாற்றுகின்றது. இது சுவாசித்து, உயிரிலே படுகின்றது. நாம் பார்த்த உணர்வுகள், உடலுக்குள் பரவுகின்றது.

ஆனால், இன்றைய செயல் அதுவானாலும், குளவி எப்படிச் சில நிகழ்ச்சிகளைச் செய்து, அந்தப் புழுவின் அணுக்களில் மாற்றங்கள் ஏற்படுத்துவது போல்,
பிறர் செய்யும் தீமையின் உணர்வின் தன்மைகள்
இதிலே சென்றபின், அந்த அணுக்களை வளர்ச்சி பெறச் செய்து,
நம் உடலின் அழகையே கெடுக்கும்.

அவன் அழகற்ற செயலும், தவறான சொற்களும் சொல்லியிருந்தால், அந்த செயல்களை இங்கு உருவாக்கும் பொழுது, அணுக்கள் மாறுகின்றது. அது நோயாக விளைகின்றது. நம் உடலின் அழகையும் கெடுக்கின்றது. புழு, குளவியாக மாற்றமான மாதிரித்தான், இந்த மாற்றமும்.

ஆனால் அதே சமயத்தில், மகரிஷிகளின் உணர்வுகளை இங்கு கண் கொண்டுதான் பதிவு செய்கின்றோம். நீங்கள் அதைப் பெற வேண்டுமென்ற ஏக்க உணர்வு கொண்டு, யாம் உங்களுக்குள் பதிவு செய்து விடுகின்றோம். மீண்டும் இதை இயக்கத்திற்குக் கொண்டுவரப்படும் பொழுது, இதை நீங்கள், உயிரோடு இயக்க வேண்டும்.

முதலில், கண்ணில் ருக்மணி பதிவாக்குகின்றது. பதிவானால்தான் எடுக்க முடியும். இது, ஆன்மாவில் கலந்து, உயிரிலே பட்டுத் தெரிந்து கொள்ள முடியும் ஆனால், இப்பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற ஏக்கத்தை, இங்கு கொண்டு வருகின்றோம். பதிவாக்குகின்றோம்.

குருநாதர் எம்மைத் தொட்டு, அந்தச் சக்தியைப் பெறச் செய்தார். ஆனால் உங்களிடம், மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணி, உங்கள் உயிருடன் ஒன்றி எண்ணத்தைச் செலுத்துகின்றோம்.
எம் ஒருவருக்குத்தான் அதைக் கொடுத்தார். யாம், எல்லோருடைய உயிரையும் கடவுளாக மதித்து, நீங்கள் அதைப் பெற வேண்டும் என்று, உங்கள் உயிருடன் நினைவை இணைக்கின்றோம். அந்த நினைவின் ஆற்றலை அலைகளாகப் பரப்பப்படும் பொழுது, உங்கள் உயிர் மேக்னட், அதைக் கவர்கின்றது.

ஒரு பக்கத்தில் கம்ப்யூட்டரை இயக்கினால், உலகம் முழுவதற்கும் அதை இயக்குகின்றது. இது ஆணையிடுவதை ஒலிபரப்புச் செய்தார்கள் என்றால், இது அடுத்த இடத்தில் இயக்குகின்றது.

இதே மாதிரித்தான், குருநாதர் கொடுத்த இந்தச் சக்தியை, நீங்கள் பெற வேண்டும் என்ற இந்த உணர்வை இங்கு பதிவு செய்யப்படும் பொழுது, இதை எடுக்கச் சொல்லுகின்றோம்.

உங்களிடம், உபதேசிக்கும் உணர்வுகளைப் பதியச் செய்துவிடுகின்றோம். யாம், நீங்கள் பெற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தை”, கொஞ்சம் கொஞ்சமாக வளர்க்கின்றோம். உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து, இந்த உணர்வை உங்களிடம் பதிவு செய்கின்றோம்.

குருநாதரைப் பார்க்கும் பொழுது, பைத்தியக்காரராகத்தான் தெரிந்தார். அவரை யாம் பைத்தியக்காரராக நினைத்தோம். ஆனால், யாம் சொல்வது சாதாரணமாகத் தெரியும்.

ஆனால், யாம் சொல்வதை நீங்கள், “சாமி சாதாரணமாகச் சொல்கின்றார்” என்று நினைக்கின்றீர்கள். சொல்லில் சாதாரணம், ஆனால், பதிவோ, குரு அருளின் சக்தியைஉங்களிடம் பதிவு செய்கின்றோம்.

நீங்கள் அனைவரும், அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று பதிவு செய்ததை, இதை எண்ணி, உயிருடன் ஒன்றி, அந்த உணர்வினை, உடல் முழுவதும் படர வேண்டும் என்று ஆக்ஞையிட்டு, எங்கள் ஜீவான்மா பெற வேண்டும், ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணி, உங்களுக்குள் இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை, மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். எமது அருளாசிகள்.

(பக்கம் 41-43)
நம் உடலுக்குள், நல்ல அணுக்களால் உருவான நிலையில், எலும்பு சம்பந்தப்பட்டது என்றால், எலும்பாக உருவாகின்றது. நாம் அடிக்கடி வேதனைப்படுகின்றோம். அந்த வேதனையின் அணுக்கள், நமக்குள் T.B. ஆக மாறிவிடுகின்றது.

இதைப் போல, நமது சுவாச நாளங்களில் இந்த விஷத்தின் அணுக்களானால், நல்ல அணுக்களால் உருவான நுரையீரலை அது சாப்பிட ஆரம்பித்துவிடும். இது. ஓட்டை ஓட்டையாக விழுந்துவிடும். வலி எடுக்கும் பொழுது, அதனின் வலுகூடி, கிளர்ச்சியைத் தூண்டி சாப்பாடு எடுக்கும்.
ஒரு பக்கம், “பளீர்” என்றால்,
நமக்குள் கிளர்ச்சியைத் தூண்டி,
நம் ஆன்மாவில் அதை இழுக்கும்.
நம் சுவாசத்தின் வழிப்படித்தான், சாப்பாடு எடுக்கும்.
இந்தக் கிளர்ச்சியைத் தூண்டவில்லை என்றால்,
நமக்கு அந்த நினைவு வராது.

கிளர்ச்சியைத் தூண்டும் பொழுதுதான்,
கண்ணுக்கு நினைவு வரும்.
கண்ணுக்கு நினைவு வரும் பொழுதுதான்,
கருவிழி ருக்மணி பதிவு செய்யும்.
கண்ணோடு சேர்ந்த காந்தப்புலனோ, யாரைப் பதிவு செய்ததோ, அந்த மனித உடலிலிருந்து வந்ததை, இழுத்துவிடும்.

நாம் ஒருவரைச் சாக்கிட்டுச் சொல்வது வேறு. ஒருவர் வேதனைப்படுவதைப் பார்த்தால், அந்த வேதனையான அணுக்கள் இங்கு வந்து, நமக்குள் அணுவாகி, கிளர்ச்சியைப் பண்ணுவது வேறு.

ஒருவர் நரக வேதனைப்படுவதைக் கண்ணுற்றுப் பார்த்தால், அதே அணுக்கள் நமக்குள் வந்து, இங்கு பதிந்துவிடும். அப்படிப் பதிந்த அணுவிற்கு, சாப்பாடு வேண்டும். இந்த உயிரின் மூலமாகத்தான், அது எடுக்கும்.

சூரியன் அதிலிருந்து ஒளிக்கற்றைகளைப் பாய்ச்சப்படும் பொழுது, ஒரு செடியைத் தாக்கி, செடியை இயக்கச் செய்து, அதே உணர்வின் தன்மை, காந்தத்தால் அந்த உணர்வை இழுக்கச் செய்கின்றது. தன் மணத்தால், தன்னைப் பாதுகாத்துக் கொள்கின்றது.

இதைப் போல, ஒரு அணுவின் தன்மை நமக்குள் உருவானபின், அதே உணர்வின் தன்மை இங்கே கிளரும். அந்த நினைவு, கண்ணுக்குத்தான் வரும்.

நேராகச் சாப்பாடு, அதற்குத்தான் போய்ச் சேரும். நாம் வேதனையாக இருக்கும்போது, ஒருவர் சந்தோசமாகச் சொன்னால், அவர் மேல் வெறுப்புதான் வரும்.

நாம் தவறு செய்வதால் ஏற்படுவதில்லை. பிறர் தவறு செய்வதைக் கண்ணுற்றுப் பார்க்கப்படும் பொழுது, அந்த அணுக்கள் நமக்குள் விளைந்து, கிளர்ச்சியைத் தூண்டுகின்றது. ஆன்மாவில் வந்தபின், உணர்ச்சியைத் தூண்டி சத்தை எடுக்கின்றது.

இதைப் போலத்தான்,
செடியில் விளைந்த வித்தை எங்கு நடுகின்றோமோ,
அது காற்றில் கலந்துள்ள தன் இனமான சத்தை,
எந்தத் தாவர இனம் மடிந்தாலும்,
அந்தச் சத்தை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து
அந்த இனத்திற்குச் சத்தாகக் கொடுத்து, அதை வளர்ப்பது போல நமது உயிரும், எதனை, எதனுடைய நிலைகளில் வளர்க்கின்றோமோ, அதற்கெல்லாம் உணவை ஊட்டிக் கொண்டேதான் இருக்கும்.

எத்தனை பேருக்கு நன்மை செய்தேன்? என்னை ஆண்டவன் இப்படிச் சோதிக்கின்றானே என்கிறோம். நம்மை ஆள்பவன் யார்? நமது உயிர்தான்.

பிறருக்கு நன்மை செய்யும் பொழுது, அவர்களின் வேதனையைக் கேட்டு, அந்த அணுவை, நமக்குள் வளர்த்து விடுகின்றோம். அந்த அணுவின் தன்மை வளரப்படும் பொழுது, வேதனை. அணுக்கள்தான் அதிகம் வளர்கின்றது.

நாம் நன்மை செய்தது, “பாதாம் கீரில்” விஷம் கலந்த மாதிரி ஆகிவிடுகின்றது. நம்முடைய நல்ல குணத்துடன், விஷம் கலந்து, விஷத்தின் வலு அதிகமாகின்றது.

விஷத்தின் தன்மை அதிகமாகும் பொழுது, அது விளைந்து, உணர்ச்சிகளைத் தூண்டி, கிளர்ச்சி செய்து நல்லவைகளைக் கொல்லும். நம் உடலில் T.B.மட்டுமல்ல, அதனுடைய மலத்தைப் போட்டவுடன், சிரங்கு வந்து, நம்முடைய சதையைக் கரைத்துக் கொண்டே போகும்.

இதே மாதிரி, இந்த அணுக்களின் தன்மையை எடுத்து, இந்த விஷத்தின் தன்மை அதிகமாகிவிட்டால், முதலில் கைகால் குடைச்சல் வரும். விஷத்தின் தன்மை அதற்குள் ஐக்கியமாகும் பொழுது, விஷத்தையே உணவாக உட்கொள்ளும் நிலையாக, மாறுகின்றது.

குளவி விஷத்தைப் பாய்ச்சி, அணுக்களில் கலக்கும் போதுதான், விஷத்தின் தன்மை உணர்வின் தன்மையை மாற்றும் நிலை வருகின்றது. நம் குருநாதர் இதற்கும் அதற்கும் ஒப்பிட்டுக் காட்டினார். இயற்கையின் வளர்ச்சியைத் தெரிந்து கொண்டால், நம்மை ஆள்வது யார்? என்று, தெரிந்து கொள்ளலாம்.

(பக்கம் 43-46)
ஆறாவது அறிவால், தெரிந்து கொள்பவன் மனிதன். நமது ஆறாவது அறிவு கொண்டு, எதையுமே நாம் மாற்றியமைக்கும் திறன் பெற்றவர்கள். ஒரு பொருளின் இயக்க உண்மையை, நாம் அறிந்து கொண்டவர்கள்.

அந்த ஒளியின் சிகரமாக, மாற்றிக் கொண்டவன் மனிதன்தான். மாற்றிய உணர்வின் தன்மையைத் தனக்குள் சிருஷ்டித்துக் கொண்டவன் ரிஷி. ரிஷியின் மகன் நாரதன்.

நாரதன் என்பது,தீமையை நீக்கக் கூடியதும், தீமையின் உண்மையை உணர்த்தக் கூடியது”. அதற்கும் இதற்கும் உணர்வால் ஒப்பிட்டு, தன்னைச் சிந்திக்கும் நிலைகள்  சுருதி – ஏழு. அதாவது, ஆறின் தன்மை கொண்டு, அதிலே மகிழ்ச்சி பெரும் தன்மை.

நாரதரிடம், சுருதி ஏழு இருக்கும். சரஸ்வதியிடமும் அது இருக்கும். மனிதன் ஆறாவது அறிவால், ஞானத்தின் தன்மை கொண்டு, சுருதியை எதிலே எதை இயக்குகின்றோமோ, அதனின் சுருதியாக மாற்றுகின்றது.

ஆகவே, கடுமையான சுருதியாக இருந்தாலும், எளிமையான நிலைகள் அதனுடன் சேர்ந்து, இணைந்து வாசித்தால்தான் இனிமையின் தன்மை வரும். நாம் காரத்துடன், மற்ற பொருள்களைப் போடும் பொழுதுதான், சுவையின் தன்மை வரும்.

இதையெல்லாம், குளவி சமாச்சாரத்தில் சொல்கின்றார் குருநாதர். இப்பொழுது, உங்களிடம் சொல்ல எவ்வளவு நேரமாகின்றது? எமக்கு அன்று சோறு கிடையாது.

குருநாதர் சொல்லும் பொழுதெல்லாம், கேட்டுக் கொண்ட இருக்க வேண்டும். சிறிது திரும்பினாலும் அடி விழும். கவனம் அவர் பக்கம் போகும்.

உங்களிடம் கொக்கி என்ன போட்டிருக்கின்றோம் என்றால்,
உங்களின் எதிர்பார்ப்பை வைத்து, இழுத்து வைத்திருக்கிறேன்.
காந்தத்தை வைத்து இழுத்து வைத்திருப்பதால்,
அந்த உணர்வின் தன்மையைக் கொண்டு வர முடிகின்றது.
இல்லையென்றால், கொண்டு வரமுடியாது.

மற்ற கூட்டங்களில், மற்றவர்கள் உபதேசம் செய்வதைப் பார்த்தால், “ஆகா!” என்று ஒருவர் கைதட்டுவார். இந்தப் பக்கம் இவர் என்ன செய்கின்றார்? என்று பார்ப்பார்கள். ஒரு சொல் வந்தவுடன், “ஆகா!” என்பார்கள். அடுத்தவர் கேட்பதையும். தடைப்படுத்துவார்கள்.

இதுவெல்லாம், நமது வாழ்க்கையில், எது மாற்றியமைக்கின்றது? அதை நாம் எப்படி மாற்ற வேண்டும்? என்பதற்குத்தான் இந்த ஆயுதத்தை உங்களிடம் கொடுக்கின்றோம். இப்படி உங்களிடம் பேசியதில்லை. சொன்னதுமில்லை.

காலை 4 மணிக்கு சில முக்கியமான உணர்வுகளை அனுப்புகின்றேன். அனுப்பும் பொழுது, அதை எப்படியும்  பெற வேண்டும் என்று எண்ணுகின்ற பொழுது, அந்த உணர்வுகள் தெரிய வரும்.

“சாமி” நம்மை எங்கே கவனிக்கின்றார்?
மற்றவர்களைத் தான் கவனிக்கின்றார்”
என்று நினைத்தீர்கள் என்றால்,
உங்களுக்குக் கிடைப்பதை நீங்களே தடைப்படுத்திக் கொள்கின்றீர்கள்.

ஏனென்றால், கலாச்சார முறைப்படி வளர்ந்தவர்கள் நாம். ஞானிகளின் ஆச்சாரத்தை விட்டுவிட்டோம். ஞானிகளின் ஆச்சாரம், “நீங்கள் பெற வேண்டும், எல்லோரும் பெற வேண்டும்” என்ற ஐக்கிய உணர்வு கொண்டு ஒளியானவர்கள். அவர்கள் வளரும் ஒளிகள்.

ஒரு நூலால், ஒரு பொருளைத் தூக்க முடியாத பொழுது, பல நூல்களை இணைக்கும் பொழுது, கயிறாக மாறுகின்றது. எல்லோரும் பெற வேண்டுமென்று, எல்லோருடைய வலுவைப் பெறும் பொழுது, அவருடைய எண்ணம் வலுப் பெறுகின்றது. மகரிஷிகள், எல்லோருடைய துணை கொண்டுதான் ஒளியானார்கள். ஏன், நாம் ஆக முடியாதா?

மற்றவர்களுக்குத்தான் கொடுக்கின்றார்கள். எனக்கு சாமி கொடுக்கவில்லை என்று பிரித்துவிட்டால் என்னவாகும்? இதை, யாம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்றுதான் செய்கின்றோம்.

அவர்களுக்குக் கிடைக்கின்றது, ஏன்? நமக்கும் கிடைக்கும் என்றுதான் நினைக்க வேண்டும். எல்லோரும் பெற வேண்டும் என்று எண்ணும்பொழுது, நாமும் பெறக் கூடிய தகுதி பெறுகின்றோம்.

நாம் ரேடியோ, டிவியை எங்கெங்கு திருப்புகின்றோமோ, எந்தெந்த ஸ்டேசனைத் திருப்பி வைக்கின்றோமோ, அந்த அலைவரிசை கிடைக்கின்றது. அதே போலத்தான், யாம் அந்த மகரிஷியின் உணர்வுகளை, உங்களுக்குள் பதிவு செய்திருக்கின்றோம்.

அந்த மகரிஷிகள், “உங்களுக்குக் கிடைக்க வேண்டும்” என்று எண்ணும் பொழுது, இதைக் காட்டிலும் அதிகமாக, அவர்களுக்குக் கிடைக்கும்.

உங்கள் துணை வைத்து, அவர்களை எண்ணும் பொழுது, இந்த வலு அவர்களுக்குக் கிடைக்கின்றது.
நீங்கள் இங்கு பெறுகின்றீர்கள்.
உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று
அவர்கள் தியானிக்கும் பொழுது,
அவர்கள் அங்கே பெறுகின்றார்கள்.

சூரியன் தனித்துப் பிரகாசமாகவில்லை.
மகரிஷிகள் தனித்து ஒருவர் பிரகாசம் ஆகவில்லை.
எல்லோருடைய உணர்வையும் ஒன்றி, ஐக்கியமாகி, அந்த எண்ண அலைகளை வைத்துத்தான், மகரிஷிகள் ஒளியானார்கள்.
(பக்கம் 49-54)
வேதங்கள் என்றாலே நாதங்கள் என்று பொருள். உணர்வுகள் அதன் சுருதிக்கொப்ப எவ்வாறு இயங்குகின்றது என்பதையும், உணர்வுக்கொப்ப ரூபங்கள் தோன்றுவதையும் மனிதன் புரிந்து கொள்ள வேதங்கள் படைக்கப்பட்டிருக்கின்றது.

பல உணர்வின் அணுக்கள் ஒன்று சேர்ந்து, உருவாகும் பொருள் ரிக். ஒரு கோளும் ரிக். ஒரு செடியும் ரிக். பல உணர்வின் அணுக்களின் மலங்களில் உருவான, நம் உடலும் ரிக் தான்.

உடலுக்குள் உறைந்த உணர்வுகள் மணம். அதை நாம் எண்ணிப் பார்க்கும் பொழுது, உணர்வு இயக்கம். குருவின் அருளைப் பெற்று, உங்களிடம் உபதேசிக்கும் பொழுது, இங்கே விளைந்த மணம் வெளிப்படுகின்றது, சாம.

எத்தனையோ சிரமங்களிலிருந்து, நீங்கள் விடுபட வேண்டும் என்ற உணர்வின் தன்மையை ஏங்கிப் பெற்றீர்கள். ஏங்கிப் பெறும் பொழுது, இந்த உணர்வுகள் வரப்படும் பொழுது, தீமைகளை அடிமைப்படுத்தும் அதர்வண.

தீமைகளை வெல்லும் உணர்வுகளை, உங்களிடம் சேர்க்கப்படும் பொழுது, தீமைகளை வெல்லும் நிலை உருவாகின்றது. இது யஜூர். யஜூர் என்றால், வித்தென்று பொருள்.
ஆனால், வித்தான பின், அதனின் உணர்வின் தன்மை,
மணத்தால், உணர்வால், வளர்த்து,
ஞானத்தின் தன்மை வளரும்.

இதற்கு முன், கஷ்டமென்று சொல்லிக் கொண்டு இருந்தீர்கள். இப்பொழுது, மகரிஷிகளின் உணர்வை உங்களிடம் சேர்க்கும் பொழுது, யஜூர். அந்த வித்தாக மாறிவிடுகின்றது. இதை அடிக்கடி மற்றவர்களுக்குச் சொல்கின்றீர்கள். அப்பொழுது இந்த மணம் சாம. அது அந்த உணர்வின் எண்ணமாக மாறும்.

மற்றவர்களுடைய, தீமைகளை அடக்குவதற்குச் சொல்லும் பொழுது, அதர்வண வேத சாஸ்திரத்தின் முக்கிய குறிக்கோளைப் புரிந்து கொள்ளவில்லை என்றால், வேதங்களை நாம் பொய்யாக்குகின்றோம். அந்த மூலக் கருத்தை, நாம் அறியவில்லை என்றுதான் பொருள்.

நெருப்பில் ஒரு பொருளப் போட்டால், வேகுகின்றது. இது அதர்வண.
அதனுடைய சக்தியை இழந்துவிடுகின்றது. இதே மாதிரி
மகரிஷிகளின் அருள் சக்தி மிகவும் சக்தி வாய்ந்தது. இது தீமைகள் வரப்படும் பொழுது, அதை வென்று விடுகின்றது அதர்வண.
அந்த ஒளியின் தன்மை வரும் பொழுது யஜூர்.
ஒளியின் சரீரமாக விளைகின்றது.
வேத சாஸ்திரப்படி, ஞானிகளின் உணர்வைப் போட்டு, தீமைகளைப் பொசுக்க வேண்டும்.
எப்படி நெருப்பிலே ஒரு பொருளைப் போட்டால் அதில் கலந்த மணத்தின் தன்மையைப் பிரித்து விடுகின்றது.

இதைப் போன்றுதான், மகரிஷியின் உணர்வுகளை உயிருடன் ஒன்றச் செய்ய வேண்டும். வாழ்க்கையில் வந்த தீமைகளைப் பொசுக்கிடல் வேண்டும்.

அந்த மகரிஷிகள் காட்டிய உணர்வின் தன்மையை, தனக்குள் சேர்க்கும் பொழுது, அதர்வண. அது தனக்குள் வித்தாகி, தீமையைப் பிளந்திடும் உணர்வாகும் பொழுது, தீமையைப் பிளந்திடும் சாம. அது மணத்தின் தன்மை கொண்டு, தன்னைக் காத்திடும்.

நாம் இவ்வளவு பெரிய உண்மையைத் தெரிந்து கொண்ட நிலையில், நாம் ஓங்கி வளர்ந்திருக்கும் பொழுது, பெரிய தப்பு செய்து கொண்டே வருகின்றோம்.

அடுத்தவர்கள் யாராவது தப்பு செய்தார்கள் என்றால், “பார், சாமி எவ்வளவு சொல்லியிருக்கிறார்? இவர்களெல்லாம் எப்படி ஊரை ஏமாற்றிக் கொண்டு வருகின்றார்கள்? என்று எண்ணுகின்றோம்.

இதை எடுக்கும் பொழுது, நம் உணர்வுகள் அந்தக் குறையை எண்ணி, இதை வளர்த்துவிடும். இங்கு கேட்க வருகின்றோம். சாமியின் உயர்ந்த கருத்துகளைப் பதிவு செய்து கொள்கின்றோம். அடுத்து நம் உணர்வுப்படி, இதை எடுத்தோம் என்றால், எல்லா நிலைகளிலும் குறைகளே வளர்ந்துவிடும்.

குறைகளைப் பார்க்கும் பொழுதெல்லாம், இந்த உண்மையை ஓங்கி வளர்த்தாலும், “இப்படி இருக்கின்றதே” என்று இதை எடுத்துக் கொள்கின்றோம். இது சிறிது சிறிதாக வரப்படும் பொழுது, அதர்வணவாகிவிடுகின்றது.

ஆனால், மற்றவர்கள் செய்யும் தீமையின் உணர்வுகள் நமக்குள் அதிகமாகப்படும் பொழுது, இது அதர்வணவாக மாறி, இதுவே யஜூராக மாறி, நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றிவிடுகின்றது. இந்த உண்மையைத் தெரிந்து கொண்டோம் என்றால், நமது வாழ்க்கையைச் சீராக நடத்த முடியும்.

இரவு படுக்கைக்குச் செல்லும் பொழுதெல்லாம், மகரிஷிகளின் உணர்வை எண்ணி, அதை உயிருடன் இணைத்து, உடல் முழுவதும் செலுத்த வேண்டும். இதுதான் “தூங்காமல் தூங்குவது” எப்பொழுது ஒளி சரீரம் பெற வேண்டுமென்று உயிருடன் ஒன்றும் பொழுது, தூங்காமல்தான் தூங்குகின்றோம்.

உங்கள் நினைவோடு ஒன்றும் பொழுது, தீமைகள் மறைக்கப்படுகின்றது. நீங்கள் ஒளியோடு ஒளி ஒன்றும் பொழுது, மற்ற நிலைகளை இருளாகக் காட்டுகின்றது. அதே மாதிரிதான், அந்த மகரிஷியோடு ஒன்றி, உணர்வை ஒளியாக்கும் பொழுது, ஒளியாகவே இருக்கின்றேன்.

தூங்காமல் தூங்குகின்றேன். நிம்மதியாக சாமி தூங்குகின்றார் என்று நீங்கள் நினைக்கலாம், அல்லது விழித்துக் கொண்டிருக்கிறார் என்று நினைக்கலாம். இரண்டும் இல்லை.

இந்த உணர்வோடு ஒன்றி, “குரு காட்டிய வழிகள்” எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணுகின்றேன். நான் எண்ணுகின்றபடி எண்ணினால் போதும்.
சக்தி எங்கிருக்கிறது என்றால், இதை நாம் பெற்றோம். இது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்” என்று எண்ண வேண்டும்.

நாம் யார் யாரையெல்லாம் பார்க்கின்றோமோ, அவர்களுக்கெல்லாம் அது கிடைக்க வேண்டும். இருள்  நீங்கிப் பொருள் காணும் திறன் பெற வேண்டும் என எண்ண வேண்டும்.
(பக்கம் 54-56)
அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை, எந்த நிமிடமும் எடுக்கக் கூடிய சக்தியை ஏற்படுத்தி இருக்கின்றது. நாம் அதைப் பற்றுடன் பற்ற வேண்டும்.

எந்த நிமிடம் ஆனாலும், எந்தக் குறையைப் பார்த்தாலும், ஈஸ்வரா என்று, அவனிடம் வேண்ட வேண்டும். ஈஸ்வரா என்ற சொல்லை, எப்பொழுதும் மறக்கக் கூடாது.

ஈஸ்வரா என்பது, நம்மை உருவாக்கிய உயிர். ஆகையினால், எத்தகைய நிலை வந்தாலும், அவர்களின் குறையை நீக்கிவிட்டு, “ஈஸ்வரா”, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று, கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக்குக் கொண்டுவர வேண்டும்.

நம் உயிருடன் ஒன்றி, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து, எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா, ஜீவஅணுக்கள் பெற வேண்டுமென்று, இந்த உணர்வைப் பழக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும். இது வளர்ந்தவுடன், நம் குறைகளை நீக்கும்.

நம் நினைவு, எப்பொழுதும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியும், மலரைப் போன்ற மணமும், அனைவரும் பெற வேண்டும். அவர்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும். எங்கள் பார்வை, அவர்களை நல்லவராக்க வேண்டும் என்று, இதை வளர்த்துப் பழக வேண்டும்.

இல்லையென்றால், நாம் நியாயத்தை நினைப்போம்.
ஒருவர் குறை சொன்னால்,
அந்தக் குறையை வளர்த்துவிடுவோம்.
இரண்டு முறை சொல்லிவிட்டால்,
அந்த வித்து வளர்ந்துவிடும். அந்தக் குறைதான் வளரும். அப்பொழுது நமக்குள் போராட்டம் வரும். நமக்குள், மனப் போராட்டமே அதிகம் இருக்கும். பின், நாம் போகும் பாதைக்கே இது இருள் சூழும்.

அதனால், நமது எல்லை எது? அந்த மகரிஷிகளின் அருள் வட்டம்தான். அந்த எல்லையை அடைய வேண்டும். அந்த எல்லையை அடைய வேண்டுமென்றால், அவர்கள் உணர்வை, நமக்குள் பெருக்க வேண்டும்.

அதை எல்லோருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். இது நமது தலையாயக் கடமையாக இருக்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். பொருள் கண்டுணர்ந்து செயல்படும் சக்தி பெற வேண்டும். இதை சிறிது நாள்களுக்குச் சொல்லிப் பாருங்கள். நம் பார்வை, அவர்களைத் தப்பிலிருந்து மாற்றும்.

அப்படி அவனே தப்பு செய்கிறான் என்றால்,
அவனிடம் இருள் இருக்கும்.
அதனை விலக்கித் தள்ளிவிட வேண்டும்.
அவன் நம்மிடம் இருந்தாலும், அவன் இருள் நம்மைச் சாராது.

நஞ்சில்லாமல் உலகம் இல்லை. சூரியன் சுழற்சியாகும் பொழுது, எந்த நஞ்சால் அது தாக்கப்பட்டு அது வெப்பமானதோ, அதிலே ஈர்க்கும் காந்தம் உருவாகின்றது. அதிலே வெப்ப காந்தமாக உருவாகும் பொழுது, எதை இந்த காந்தம் இழுக்கின்றதோ, அதிலே கலந்த விஷம் மீண்டும் வெப்பத்தை உருவாக்குகின்றது.

அணுக்களின் தன்மை வெப்பம் அதிகமாகும் பொழுது, விஷத்தைப் பிரிக்கும். இதைப் போலத்தான், மனிதனின் உணர்வின் தன்மை அங்கே வெப்பம். இங்கே, எண்ணத்தின் தன்மை மோதலாகும் பொழுது, தீமைகளைப் பிளக்கும்.

நாம் ஒருவனைக் கடுமையாகச் சொல்லப்படும் பொழுது, விஷம். அது தாக்கப்படும் பொழுது, அவருடைய உணர்வுகள் இருள் சூழும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று, எண்ணத்தைப் பாய்ச்சி, அவன் இருள் நீங்க வேண்டுமென்று, தாக்கப்படும் பொழுது, இருள் விலகுகின்றது. இந்தக் கட்டாயத்திற்கு நாம் வந்துவிட்டால், அவர்கள் சென்ற பாதையில், நாம் நிச்சயம் போக முடியும்.
(பக்கம் 62-64)
துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று, நீங்கள் எப்பொழுதெல்லாம் உயிருடன் ஒன்றுகின்றீர்களோ, அப்பொழுது, நீங்கள் அந்தச் சக்தியைப் பெறும் தகுதியை, ஏற்படுத்துகின்றோம். அதை விரையமில்லாது, எந்த நிமிடத்திலும் எடுக்கலாம்.

அதற்குத்தான், அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை ஆழப்பதிவு செய்வது. நீங்கள் பார்க்கின்றவர்களுக்கு எல்லாம்,ந்த சக்தியைக் கிடைக்கச் செய்ய வேண்டும்,

உங்கள் சொல், பேச்சு, பார்வை, உங்கள் மூச்சலைகள் இந்தக் காற்றிலே பரவினாலும், நீங்கள் யாருக்குப் பார்த்து, அவர்கள் நன்மை பெற வேண்டும் என்று எண்ணத்தைப் பாய்ச்சினாலும், அதை அவர்களும் பெற முடியும்.

ஒரு செடிக்குப் பக்கம் களை இல்லாது,
தன் இனத்தின் செடி பெருகிவிட்டால்,
குவிந்த சக்தி கொண்டு,
அந்தத் தாவர இனங்கள் செழிப்பாக வளரும்.
களைகள் முளைத்துவிட்டால், அந்த நிலையில் வளர்வதில்லை.

அதைப் போன்றுதான், நமது வாழ்க்கையில் களைகள் முளைக்காமல் இருக்க வேண்டுமென்றால், நாம் யாரைப் பார்த்தாலும், அவர்கள் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும், அவர்கள் பொருள் காணும் நிலைகள் பெற வேண்டும், அவர்கள் குடும்பம் நலம் பெற வேண்டும், அவர்கள் தொழில்கள் நலம் பெற வேண்டும், அவர்கள் எதிர்காலம் சிறந்திருக்க வேண்டும் என்று, எண்ண வேண்டும்.

இதைத்தான், கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ, அதுவாகின்றாய். அந்த உணர்வின் சக்தி நமக்குள் வருகின்றது. நாம் எல்லாம் சொல்வோம். நான் எல்லாம் நினைக்கின்றேன், ஆனால், ஆண்டவன் இப்படிச் சோதிக்கின்றான்”, அந்தப் பழைய பழக்கம் நம்மிடம் வந்துவிடும். ஆனால், அதற்கு நாம் முக்கியத்துவம் இல்லாதபடி செய்வோம்.

நம் உணர்வுகள் அனைத்தையும் துருவ மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைக்கச் செய்து, நீங்கள் உங்கள் நண்பர்களைச் சந்திக்கும் பொழுதெல்லாம், உங்கள் சக்தியை அவர்களுக்குப் பரப்பி, அவர்களைச் சந்திப்போர் எல்லாம் அதைப் பெறச் செய்ய வேண்டும். நாம் அதைப் பற்றுடன் பற்றி, எல்லோரையும் பற்ற வைக்க வேண்டும்.

சூரியன் எத்தனையோ விஷத்தன்மையுடைய நிலைகளை எடுத்தாலும், விஷத்தைப் பிரிக்கின்றது. ஒளியின் சுடராக மாற்றுகின்றது. அதில் விளைந்த மகாஞானி, உலகில் அவன் சுவாசிக்கும் உணர்வுகள் எதுவானாலும், அதிலுள்ள நஞ்சினைப் பிரித்துவிட்டு, ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டுள்ளான்.

இந்த மனித உடலில், அவர்கள் பின்பற்றிய அந்த உணர்வைச் சேர்த்தால்தான், என்றும் ஒளியின் சுடராக நிலைக்க முடியும். அதைப் பெறச் செய்வதற்குத்தான் இந்த நிலையே.

எனக்குச் சுயநலம் அதிகம். ஏனென்றால், நீங்கள் எல்லோரும் பெறவேண்டும் என்று நினைக்கும் பொழுது, அது எனக்குள் வளர்ந்து கொண்டே இருக்கின்றது.
நீங்கள் எல்லாம், மகிழ்ச்சியாகச் சொல்லும் பொழுது,
மகிழ்ச்சி எனக்குள் விளைகின்றது.
இந்த சுயநலத்தைக் கருதித்தான்,
உங்களுக்குள் இந்தப் பொது நலத்தின் சக்தியைப் பரப்புகின்றது.

நீங்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று, சுயநலமாக எண்ணும் பொழுது, அதுபோல் நீங்களும், எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது, அந்த சுயநலம் - பொது நலமானாலும், சுயநலம்தான். ஆயிரம் பேர் சேர்ந்து, ஒன்றாக இருக்கும் பொழுதுதான் மகிழ்ச்சி.

பல இலட்சக்கணக்கான உணர்வை, எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணியவர்கள்தான் மகரிஷிகள். பல கோள்களுடைய உணர்வுகளை மாற்றும் பொழுதுதான், சூரியனுடைய ஒளி.

ஆகவே, நமக்குள் இந்த உணர்வின் இயக்கத்தில் வந்தால், உயிரின் ஒளி இதைப் பெற முடியும் என்ற தன்னம்பிக்கையில்,
நமது ஆறாவது அறிவு கொண்டு,
எப்பொருளையும் அறிந்து,
எப்பொருளையும் கண்டுணர்ந்து,
படைத்திடும் உணர்வு கொண்டு செயல்படுவோம்.

இந்த ஆறாவது அறிவுதான் சரவணபவா, குகா, தீமைகளைச் சரணமடையச் செய்யக்கூடிய உடலான குகைக்குள் நின்று, கந்தா வருவதை அறிந்து, கடம்பா உருவாக்கத் தெரிந்து கொண்டவன் கார்த்திகேயா. எதனையும் அறிந்து உருவாக்கத் தெரிந்து கொண்டவன். பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்.

இவ்வளவு எளிதில் ஆறாவது அறிவைத் தெளிவாக்கியபின், நாம் ஏன் பின்னோக்கிப் போகவேண்டும்? முன்னோக்கியே போவோம். அருள் ஞானிகளின் உணர்வோடு செல்வோம்.
(பக்கம் 69-71)
ஆடு மாடுகளுக்கு, அந்தந்தக் காலங்களில் இரை போடுகின்றோம். 3 மணிக்கு இரை போட்டுப் பழக்கினால், மணி 3 என்று தெரிந்து கொள்ளும். அந்த உணர்வுப்படி, அது சத்தம் போட ஆரம்பித்துவிடும். யார் இரை போட்டாரோ, அவர்களை எண்ணி, உணர்வை வெளிப்படுத்துகின்றது. ரை போடும் பொழுது, சொல்வதையெல்லாம் ஆழமாகப் பதிவு செய்து கொள்கின்றது. அவர்களை அணுகி வருகின்றது.

ஆனால், ஒருவர் இதை மிரட்டி இருந்தார்களென்றால், அவர்கள் வரும் பொழுதே, இது மிரளுகின்றது. இந்த உணர்வுகள் அவர்களை இயக்குகின்றது. யார் மேல் பாசமாக இருக்கின்றதோ, அந்த உடலுக்குள் பரிணாம வளர்ச்சிக்கு அது வருகின்றது.

ஆனால், மனிதனாகி இருக்கும் நாம் ஒரு மனிதனின் நிலைகளில் பாசமாக இருக்கின்றோமென்றால், இந்த உடலைவிட்டுச் சென்றபின்,
அவர்கள் உணர்வை நாம் வளர்த்துக் கொண்டால்,
இந்த உடலைவிட்டுச் சென்றபின்,
யார் மேல் பாசமாக உள்ளோமோ,
அவர்கள் உடலுக்குள்தான் செல்லும்.

மனித உடலில் இருக்கும் போது, எந்த நோய் இருந்ததோ, அந்த நோயை அங்கே உருவாக்கத் தொடங்கிவிடும். மனிதனின் முதிர்ச்சி பெற்ற இயக்கங்கள் அதை இயக்கி, அதை மாற்றியமைக்கச் செய்கின்றது. ஏனென்றால், புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும், இந்த நிலை அடைந்தவர்கள்.

ஆடு மாடுகளுக்கு, எப்படி நாம் சொல்லும் போது, உணர்வின் தன்மை பதிவாகின்றதோ, அதைப் போன்று,
ஒரு கர்ப்பமாக இருக்கும் தாய்,
ஒன்றிலிருந்து தொண்ணூறு நாள்
அந்தக் கரு வளர்ச்சியாகும் பொழுது,
பாசத்தால், அன்பால், பிறர்படும் கஷ்டங்களை, வேதனைகளை நோய்வாய்ப்பட்டவர்களுடைய உணர்வுகளை, சண்டை போடுகின்றவர்களுடைய வெறுப்பான உணர்வுகளை,
தாய் கண்ணால் பார்க்கப்படும் பொழுது, கருவின் உயிரணு,
தாய் எதை உற்றுப் பார்த்ததோ,
அதனின் ரூபமாக அது கவரத் தொடங்கிவிடும்.

அது அதனுடன் இணைந்துவிட்டால், அதில் ஒருவருக்குப் புற்று நோய் இருந்ததென்றால், அவருக்கு 40 வயது இருந்தது என்றால், அதிலே விளைந்த இந்த செல்”, கருவிலே இருக்கும் குழந்தைக்கு, அதே 40 வது வயதில், புற்று நோய் வரும்.

ஆஸ்துமா நோயை உள்ளவரைத் தாய் பார்த்திருந்தால், அந்த உணர்வின் தன்மை கருவிலே பதிவாகி, 40 வயது வரையிலும் ஆஸ்துமா இருக்காது. 40 வயதுக்கு மேல், ஆஸ்துமா வரும்.

அதே மாதிரி, குடும்பத்தில் என்னென்ன சண்டை போட்டார்களோ, அதைக் கேட்டிருந்தால், இந்தக் குழந்தையின் கருவிலே பதிந்து, அதனுடைய உணர்ச்சிகள் தூண்டப்பட்டு, அதனுடைய வளர்ச்சியில் அதே சண்டை போடும் உணர்வுகள் வரும்.

ஒரு கண்ணில்லாத குழந்தையை, அதனுடைய உணர்வுகளை நுகர்ந்து, குறைகளைச் சொல்லிக் கொண்டிருந்தால், அதே உணர்வுகள் குழந்தையின் உடலிலே, கருவிலே இருக்கும் போது, விளையாடப்படும்போது, அதன் வளர்ச்சியைத் தடைப்படுத்தி, கண்ணுக்குண்டான சத்தைத் தடைப்படுத்தும். மனிதனின் வளர்ச்சியில் இப்படியெல்லாம் பல உண்டு.

முடமாக இருப்பவனை அதிகமாக நேசித்தாரென்றால், அதே உணர்வுகள் கருவிலே சேர்ந்தபின், அதே உணர்வின் தன்மையின் அணுக்கள் விளையத் தொடங்கி, அந்தக் கருவிலே வளரும்போதே விளைந்து, அந்தக் காலம் வரும்போது, உணர்ச்சியைத் தூண்டும்.

நாம் செடி கொடிகளுக்கு உரமிடும்போது, அதனுடன் இணைந்து, எவ்வாறு விளைகின்றதோ, இதைப் போலத்தான், கருவிலே வளரும் குழந்தைகளுக்கு வருகின்றது.

குடும்பத்தில் மிகவும் கஷ்டப்படுகின்றார்கள் என்றால், அந்தக் குடும்பத்தில் சண்டையும் சச்சரவும், அதிகமாக இருக்கும். இருந்தாலும், கர்ப்பத்தில் இருக்கப்படும் பொழுது, யாராவது ஒருவர் உயர்ந்த குணங்கள் கொண்டவர், எதையாவது பேசிக் கொண்டிருக்கும் பொழுது, கடைவீதிகளிலோ, மற்றவைகளிலோ, வேடிக்கை பார்க்கச் செல்கின்றது.

அந்த உயர்ந்த சொல்களைச் சொல்லும் பொழுது, கர்ப்பமாக இருப்பவர்கள் கேட்டார்களென்றால், அந்தக் குழந்தை கருவிலே விளைந்தபின், வீட்டிலே மிகவும் தரித்திரமாக இருப்பார்கள். ஆனால், இது ஞானக் குழந்தையாக வளரும்.

சில குடும்பங்களில், மிகவும் ஏழையாக இருப்பார்கள். ஆனால், அந்த சந்தர்ப்பம் பூர்வ புண்ணியமாக அமைந்து, அந்தக் குழந்தை ஞானியாக உருவாகும்.

இதே மாதிரி நமது வாழ்க்கையில், இன்றைக்கு எவ்வளவு திறமை உள்ளவராக இருந்தாலும், தாய் கருவிலே இருந்தபோது வந்த, பூர்வபுண்ணியமும் இணைந்தே வருகின்றது. இதையெல்லாம், நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, மிகவும் அவசியம்.
(பக்கம் 73)
உயிர், தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் சத்தை எடுத்து, ஜீவ அணுவாக மாற்றி, அது வளரப்படும் பொழுது, உணவை எடுக்கும் பொழுது, கிளர்ச்சியைத் தூண்டும் பொழுது, அந்த உணவை எடுத்து, உடலில் பரப்புகின்றது.

நமது பூமி, ஒரு திடப்பொருளானாலும், சூரியனிலிருந்து வரக்கூடிய ஒரு வெப்ப காந்தம், இதைக் கடந்து வரப்படும் பொழுது, (அல்ட்ரா வயலட்) “புற ஊதா கதிர்” என்ற விஷம், இது மூன்றும் மற்ற பொருளைக் கவர்ந்து வரப்படும் பொழுது,
இந்தப் பூமியில் கல்லும், பாறையும், மண்ணும்,
மற்ற உலோகங்களாகவும் உருவானாலும்,
இதிலிருந்து வெளிப்படுவதை, மீண்டும் அந்த அணுக்கள் எடுத்து,
தாவர இனங்களாக வளருகின்றது.

ஆனாலும், இந்தத் தாவர இனங்கள் எதைக் கவர்ந்ததோ, அந்தத் தாவர இனங்களும், அந்த இலையில் இருக்கக் கூடிய நரம்புகள் வழி, தன் உணவைக் கவர்கின்றது. அந்த இலைகளை, புழுக்கள் அழித்துவிட்டால், அந்தச் செடியின் வளர்ச்சியும் குன்றிவிடும். இது தாவர இனங்களுக்கு.

ஆனால், மனிதனின் உணர்வுகளுக்கு, சுவாசிக்கும் நிலைகளில்,
நம் ஆன்மாவில் கலந்துவிட்டால்,
சுவாசித்து இடைமறித்து,
நமக்குள், உள்ளுக்குள் செல்வதைத் தடைப்படுத்தும்.

தாவர இனங்கள், எந்தச் செடியின் சத்தைத் தனக்குள் வலுவாக எடுக்கின்றதோ, அந்த மணத்தின் வலுக்கொண்டு, மற்ற செடியின் சத்தை தனக்குள் விடுவதில்லை. தனித்துச் செல்லும் பொழுது, போர்முறைகள் வந்து, ஒன்றை ஒன்று வெல்லுகின்றது.

இணைந்து, ஒரு உணர்வின் சத்தாகும் பொழுது, அது இணைந்த சத்தின் வித்தாகின்றது. இந்தத் தாவர இனச் சத்துகள், உயிரணுவால் நுகரப்படும் பொழுது, அது ஜீவ அணுக்களாகி, அந்த அணுக்களின் மலம் உடலாகின்றது. நுகர்ந்த தாவர இனச் சத்துகளின் மணம், எண்ணங்களாகின்றது.
(பக்கம் 78,79)
அகஸ்தியன் விண்ணுலக ஆற்றலைத் தன்னுள் எடுத்து, விண்ணிலிருந்து வந்து மண்ணுக்குள் விளைந்தாலும், விண்ணின் ஆற்றலைத் தன்னுள் பருகினான். அதை
அறியும் ஆற்றலும்,
சேர்க்கும் ஆற்றலும்,
பிரிக்கும் ஆற்றலும்
பெற்ற முதல் மனிதன் அகஸ்தியன்.
“தென்னாடுடைய  சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்று சொல்லுவோம். தென்னாட்டில் தோன்றிய அகஸ்தியன் கண்டுணர்ந்தவைகளை, எந்நாட்டவரும் பெற முடியும்.

விண்ணின் ஆற்றலை
இந்த மண்ணுலகில் கவரும் சக்தி பெற்று
அது வளரப்படும்போது,
விண்ணுக்குப் போகும் நிலை வருகின்றது.

விஞ்ஞான அறிவு கொண்டு, ஒரு ராக்கெட்டை உந்து விசை கொண்டு, காற்றைப் பிளந்து விண்ணுக்கு வேகமாக செல்லும் தன்மையைப் பெற வைக்கின்றான் விஞ்ஞானி.

இதைப் போல, விண்ணிலிருந்து வரக்கூடிய நட்சத்திரத்தின் உணர்வின் சத்தை, அதே நஞ்சைப் பிளக்கும் உணர்வு வந்தவுடனே, மின்னல் தாக்குகின்றது.
அதைக் கவர்ந்து தனக்குள் எடுக்கும் போது,
தன் எண்ணத்தை விண்ணிலே பாய்ச்சும்போது,
இதே உணர்வுடன் தொடர்பு கொள்ளுகின்றது.

அகஸ்தியன் தன் 5வது வயதில், விண்ணுலகை ஆற்றலை எவ்வாறு பெற்றான்? என்று காட்டுகின்றார், குருநாதர். அவன் ஐந்து வயதில், தாய் தந்தையர் இறந்து விடுகின்றார்கள்.

அவன் தாய் கருவிலே இருக்கும்போது எப்படி சூரியனை வணங்கினார்களோ, அவர்கள் எந்தெந்த தாவர இனங்களை நுகர்ந்தார்களோ, இதெல்லாம் தன்னிச்சையாக எண்ணங்கள் வந்து,  அந்த உணர்வு அகஸ்தியனை இயக்குகின்றது.

பரிணாம வளர்ச்சியில், மனிதனக வளர்ந்த அந்த முதல் காலத்தில், இந்த தாவர இனத்தின் உணர்வுகள், அவனுக்குள் தீமையை அகற்றும் உணர்வின் அணுக்களாக விளைகின்றது.

அன்று அகஸ்தியனில் விளைந்தது, இன்றும் இருக்கின்றது. அகஸ்தியரைப் பற்றி அடிக்கடி சொல்லியிருப்பேன். அந்த அணுவின் தன்மையை, அவர்கள் பெற்ற நிலையை, உங்களுக்குப் போதிக்கும் போது, இந்த உணர்வுகள், உங்கள் அனைவருக்குள்ளும் பதிவாகின்றது.

பதிவாகும் அந்த உணர்வுகளை நீங்கள் எண்ணினால், அதை எளிதில் பெறலாம். அவ்வாறு,
அகஸ்தியன் பெற்ற விண்ணின் ஆற்றல்களை நீங்கள் பெற்று,
அவன் சென்ற எல்லையை அடைய, எமது அருளாசிகள்.
(பக்கம் 79-81)
சாமிக்கு மட்டும் எப்படி சக்தி வந்தது?
என்று, சிலர் எண்ணலாம்.
குரு சொன்ன நிலையைப் பதிவு செய்து கொண்டேன்.
அதனுடைய காலப் பருவம், நினைவுகளை ஊட்டுகின்றது.

இதெல்லாம் புத்தகத்தில் எழுதி வைத்து விட்டுப் படித்தால் முடியுமோ? புத்தகத்தில், எழுதிக் கொடுத்திருக்கின்றோம். திரும்ப மனப்பாடம் செய்வதென்றால், ஆயிரத்தில் ஒருவரால்தான் முடியும்.

ஆனால், மனப்பாடம் செய்தவர்கள், புத்தகத்தையே மனப்பாடம் செய்திடுவார்கள். திருப்பி மூலக்கூறுகளைக் கேட்டால், தெரியாது.

ஆனால், இந்த மகரிஷியின் உணர்வைப் பதிவு செய்ததை, மீண்டும் அந்த உணர்வு வரப்படும்போது, அந்த உணர்வின் ஞானமாக வளர்வதும், வளர்த்துக் கொள்வதும், கல்வி ஞானம் இல்லாதவர்கள், அதிகமாகப் பெறுகின்றார்கள்.

அவர்கள், அந்த உணர்வோடு ஒன்றி வளர்க்கும்போது அது வளர்கின்றது. மெய்ஞானிகள் கண்ட உணர்வினைக் கவரும்போது, மெய்வழி எடுத்து, நமக்குள் தீமைகளைப் பிளந்து, அந்த மெய்ப்பொருளுடன் ஒன்றச் செய்கின்றது.

விஞ்ஞான அறிவு, அதில்தான் நம்மைச் செலுத்துகின்றது.
விஞ்ஞான அறிவோடு நாம் கலக்கப்படும்போது,
இது (மெய்ப் பொருள்) பிரிக்கப்படுகின்றது.

ஆனால், மெய்ஞானி பொருளோடு இணைத்து, பிரித்துப் பார்க்கும்போது, இந்த விஞ்ஞான அறிவைப் பிரித்துவிட்டு, அந்த மூலக்கூறை அறிய முடிகின்றது. இதுக்கும், அதுக்கும், உள்ள வித்தியாசம் அது.

ஒரு வேலை அதிகமாகப் படித்திருந்தால், நானும் இப்படித்தான் ஆகியிருப்பேன். பொதுவாகப் பார்க்கும்போது, இராமகிருஷ்ண பரமஹம்சரோ, வான்மீகியோ, வியாசகரோ, இவர்கள் அனைவரும் கல்வியில் நாட்டம் இல்லாதவர்கள்.

இதைப் போன்றுதான், வரிசைப் படுத்திப் பார்க்கும்போது, நம் குருநாதருக்கும் கல்வி அறிவில்லை. படிப்பில்லை என்றாலும், அவர் தாய் கருவிலே விளைந்தது. அவர்கள் பூஜை, புனஸ்காரங்கள், மந்திரங்கள் இதெல்லாம் சொல்லித்தான் வளர்ந்திருக்கின்றார்கள்.

இருந்தாலும், அகஸ்தியரின் வாழ்க்கையைப் போன்று பூஜை செய்யும்போது, குருநாதருடைய தாயும் தந்தையும் இறந்துபோய் விடுகிறார்கள். இவர் இளமையில் ஆகப்போகும்போது, இவர் கருவிலே விளைந்த அந்த சக்தி இவருக்குள் இருக்கின்றது.

இதைப்போல ஏங்கித் தவிக்கும்போது அவர் ஊர் ஊராகச் சுற்ற ஆரம்பிக்கின்றார். ஆனால், தாய் கருவிலே விளையப்படும்பொழுது, அவர்கள் கற்றுக் கொண்ட இராமாயணம், மஹாபாரதம், கார்த்திகை புராணம் போன்ற, அந்த உணர்வைப் பதிவு செய்ததை வைத்து, குருநாதர் அனாதையாகத் தான் வெளியேறுகின்றார்.

வெளியேறி, அங்கங்கே ஏதாவது தொழிலில் சேருவது. பத்து நாட்களுக்கு இருக்கின்றது. கடையில் சேர்வது சமையல் சமைக்கின்றது. இப்படியேதான், உலகம் முழுவதற்கும் சுற்றி வந்திருக்கின்றார்.

அவர் எல்லா வழியிலும் வந்தார். ஆனாலும், அவரில் விளைந்த உணர்வுகள் தாய் கருவிலே விளைந்தது. அதன் அடிப்படையில்தான், ஒவ்வொன்றும் அந்தச் சந்தர்ப்பத்தில் தாய்  கருவிலே விளைந்தது, பூர்வ புண்ணியமாக அமைந்து, சில சக்திகளை அவர் பெறக்கூடிய தகுதி பெறுகின்றது.

குருநாதர் கற்று வந்தவர் அல்ல. எழுதவும் தெரியாது. எந்தப் பாறையில் எழுதினாலும், சும்மா இரண்டு கோடு போட்டுவிட்டுப் போய்விடுவார். இதில் நான் என்ன எழுதி இருக்கின்றேன்? என்று கேட்பார்.

ஏதும் சொன்னால், கோபித்துக் கொள்வார். கோபத்திற்குள், அவர் கண்ணுக்குள் இருந்து, ஒரு விதமான ஒளி வரும். அந்த ஒளிகள் வரும்போது என்னை அறியாமலே உடலை இயக்கும். அந்த இயக்க உணர்வுகள் வரும்.

யாம் உபதேசிக்கும் போது, நீங்கள் பார்க்கலாம். குருநாதர் காட்டிய வழிகளில், மெய்ப்பொருளை எடுத்துச் சொல்லும்போது, உடலிலே சில மாற்றங்கள் வரும். கண்களிலும் ஒருவிதமான ஒளிகள் வரும். அது எமக்கே தெரிகின்றது.

அதை, நீங்கள் நுகர்ந்து பார்க்கும் பொழுது,
எண்ணத்தால் அது பதிவாகும்போது,
குருநாதர் எனக்கு எப்படிக் கொடுத்தாரோ,
அதன் அலைவரிசையில்தான்,
உங்களுக்கும் யாம் கொடுக்கின்றோம்.
(பக்கம் 81-83)
படித்தவர்கள் இன்னென்ன கோடிட்டு, இன்னென்ன, என்ற வழிகளில் கொண்டு போகிறார்கள். அதிலே சில குறை வந்துவிட்டதென்றால், அந்தக் குறையாக வளர்ந்துவிடும்.
அந்தக் குறைகள் எதுவாக இருப்பினும்,
குருநாதர் காட்டிய அருள் வழியில்,
அந்தக் குறைகளை மாற்றும் உணர்விக்குத் தக்கவாறு,
எது எது மாற்றமானதோ,
அதே உணர்வை விளையச் செய்துதான், உபதேசமே. கொடுக்கின்றது.

இதற்குமுன் உபதேசித்த நிலைகள் வேறு. அதே கருத்துக்களின் மூலக்கூறுகளைப் பிரித்துத்தான், இப்பொழுது உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

இதைப் பதிவுச் செய்து விட்டால், “கண்ணன் கருவிலே இருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான்” என்று சொல்வார்கள். நமக்குள் ஏங்கிப் பெறும் அந்தக் கருவிலே, மகரிஷிகளின் உணர்வின் ஒளிகளை உங்களுக்குள் எண்ணக் கருவிலே உருவாக்கப்படும்போது அந்த உணர்வின் நினைவலைகள் உங்கள் கண்ணுக்கு வரும்.

இப்பொழுது யாம் சொல்லும்போது, கூர்மையாகக் கவனிக்கின்றீர்கள்.
இதே உணர்வுகளை, கருவிழி உங்களுக்குள் பதிவு செய்கின்றது.
யாம் சொல்லக்கூடிய காந்தப்புலன் அறிவுகள்
உள்ளுக்குள் இழுக்கின்றது.

அன்று குருநாதர் சொன்ன உணர்வுகளை, யாம் சொல்லும்போது, அது கண் வழியாகவும், சொல் வழியாகவும் வெளிப்படுகின்றது.

அப்படி வெளிப்படும் இந்த உணர்வுகளைத்தான், அந்த மூலக்கூறுகளை, குருநாதர் எமக்கு எப்படிக் கொடுத்தாரோ, அப்படியே உங்களுக்குக் கொடுக்கின்றது.

இதைப் படித்துணர்ந்தவர்கள், பல பாகங்களுக்குச் செல்லும்போது, சந்தர்ப்பம் வரும் பொழுதெல்லாம், எங்கே எந்த குறைகளைக் கண்டாலும், 
அந்த குரு அருளின் தன்மை,
அந்தக் குறைகளை நிவர்த்திக்கும் தன்மையாகப் பாயும்.

குறையை அணுக விடாது.
இதை அங்கே பெறச் செய்யும்.
இந்த நிலை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான், இதை பெறச் செய்வது.

ஏனென்றால் ஒருவர் கேவலமாகப் பேசுகின்றார். அப்படிக் கேவலமாகப் பேசும் உணர்வுகள், நமக்குள் பதிவாகிவிட்டால், மீண்டும் அவர்கள் உணர்வுகளை, நமக்குள் கவரத் தொடங்குகின்றது.

அப்படிக் கவரத் தொடங்கும்போது அது நம்மை இயக்காமல் தடைப்படுத்திப் பழக வேண்டும். அதற்குத்தான்,
அந்தத் தடைகளை விதிப்பதற்கு,
அந்த உணர்வுகள் எழும்போது,
நம்முடைய எண்ணம் கொண்டு,
அவர்கள் உணர்வுகள் நமக்குள் வராது,
இதைத் தணிக்க வேண்டும்.

அதற்குத்தான், இந்த உணர்வுகளை ஒவ்வொன்றும் விரிவாக்கப்பட்டு, அந்தத் துருவ மகரிஷிகளின் நினைவாற்றலுடன், இணையச் செய்வது. இதுதான், தொட்டுக் காட்டுவது என்பது.

ஒரு மனிதனின் பொட்டில் தொட்டுக் காட்டுவது என்றால், ஒரு உணர்வைத் தொட்டுக் காட்டுபொழுது, அந்த உணர்வு உடலாகின்றது. தொட்டுக் காட்டிய மனிதனுடைய நிலைதான் வரும்.

மகரிஷிகள் எதைப் பெற்றார்களோ, இந்த உணர்வின் சக்தியை, அதைத்தான், யாம் உங்கள் ஒவ்வொரு உணர்வோடும், பதிவு செய்கின்றோம்.

நமக்குள், எத்தனையோ கோடி உணர்வுகள்,
எத்தனையோ கோடி குணங்கள் உண்டு.
அவைகளுடன், துருவ மகரிஷிகளின் அருள் சக்தியை இணைக்க வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்வது.

அப்படி இணைத்தால்தான், உங்களுக்குள் கருவுற்று அந்த உணர்வின் தன்மை, அருள் ஞானிகளின் உணர்வோடு, நீங்கள் வளர்வதற்கு உதவும். எமது அருளாசிகள்.

(பக்கம் 89-91)
ஞானிகள் காட்டிய முறைப்படி, யாரும் தெய்வத்தை வணங்குவதில்லை. அந்தத் தெய்வ குணத்தைப் பெறவேண்டும். அந்த தெய்வமாக ஆக வேண்டும் என்று யாருமே எண்ணுவதில்லை.

ஞானிகள், சாதாரண மக்களுக்குக் கிடைக்க வேண்டுமென்றுதான், இதையெல்லாம் சொன்னார்கள். அரசன் ஒரு வகையில் மதங்களை உருவாக்கி, மதத்திற்கு ஒரு தெய்வம், மதத்திற்கு ஒரு கடவுள் என்று உருவாக்கினாலும், ஞானிகள் தன்னை உணரந்தவர்கள்.

தன் இன மக்களுக்குக் கிடைக்க வேண்டுமென்று காவியங்களைப் படைத்துக் கொடுத்திருக்கின்றார்கள். வழிபடும் முறையும் சொல்கிறார்கள். அதை, யாரும் கோவிலில் போய் அப்படிச் செய்வதில்லை.

நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி, அவர் எமக்குக் கொடுத்த உணர்வின் தன்மையை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது, தீமையை அகற்றிடும், இந்த மூலத்தைப் பதிவு செய்திடும் பொழுது, பிறர்படும் தீமையான உணர்வுகளைக் கண்டுணர்ந்தாலும், இந்த உணர்வுகள் முன்னனியில் வந்து, நமக்குள் அவர்களுடைய உணர்வுகளைச் செயலாக்க விடாது.

அப்படி, தீமைகளைத் தடைப்படுத்த வேண்டும். அதற்கு வேண்டிய சக்தி நமக்கு இருந்தால் தான், இதைச் செயல்படுத்த முடியும். உங்களுக்கு இந்த சக்தி கிடைக்க வேண்டும் என்பதற்குத்தான், இதையே உருவாக்குவது.

ஒருவருக்கு மேல்வலி வந்துவிட்டதென்றால்,
“அம்மம்மா…” என்றால்,
இந்த உணர்வு, அதற்கு சாப்பாடு கொடுத்துவிடும். சந்தோஷமான வார்த்தையைச் சொல்லி, நிவர்த்தி பண்ணலாம் என்றால், முடியாது. அது எதிரியாகிவிடுகின்றது.

இந்த எதிரியை வென்றவர்கள் யார்? இந்தச் சந்தோஷத்தை ஊட்டியவர்கள் யார்? அந்த மகரிஷிகள்தான். ஆகவே, அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நாம் எண்ணும் பொழுது, நமக்குள் அந்த ஆகாரத்தைக் கொடுத்தவுடனே, வலுப் பெறச் செய்கின்றது.

நம் உயிரான ஈசனிடம் எதைக் கேட்க வேண்டும்? உங்களுக்குள் பதிவு செய்ததை, நினைவிற்குக் கொண்டுவரவேண்டும்.

அந்தத் துருவ மகரிஷியின் அருள் சக்தியை, நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்ற நினைவை, புருவ மத்தியில் செலுத்திப் பழக வேண்டும்.

பிறர் செய்யும் தீமைகளை, நாம் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது,
அது நமது ஆன்மாவாக மாறி,
அதிலிருந்து சுவாசித்து, இந்த உணர்வுகளை
உயிர் அகக் கண்ணாக இருந்து நமக்கு உணர்த்துகின்றது.
ஆக, உயிர் “அகக் கண்ணாக” இருந்து பதிவு செய்து, மீண்டும் நினைவிற்குக் கொடுக்கின்றது.

ஆனால், அதே சமயம், நம் கண்கள் “புறக் கண்”
அதைப் படமெடுத்து, ஆன்மாவாகி,
உயிருடன் ஒன்றும் பொழுதுதான்,
அந்த உணர்வை அகக்கண்ணான கண் காட்டுகின்றது.

ஆனால் அதே சமயம், அந்த துருவ மகரிஷியின் உணர்வை நமக்குள் பதிவு செய்து, அதை மீண்டும் நினைவு கொண்டு, உயிரான அகக் கண்ணுடன் இணைக்கப்படும் பொழுது, இந்த ஆன்மாவிலிருந்து வரக்கூடியதைத் தடைப்படுத்துகின்றது.

உதாரணமாக, வேதனை அதிகமாக இருக்கின்றது என்றால், “ஈஸ்வரா” என்று நம் உயிரை வேண்டி, அந்த துருவ மகரிஷியின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று நினைவை அங்கே செலுத்தும் பொழுது, அந்த உணர்வைச் சிறிது நேரம் ஏங்கிச் சுவாசித்து விட்டால், இந்த வேதனயோ, மூச்சுத் திணறலோ, மற்ற வலியினாலும், அதை எண்ணும் பொழுது, அதைக் கூட்டும் பொழுது, இது குறையும்.

முதலில் நம்மை எடுக்கவிடாது. துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து, எங்கள் ஜீவான்மா, ஜீவ அணுக்கள் பெறவேண்டும் எனறு உயர்ந்த சக்தியின் எண்ண அலைகளைப் பரப்பும் பொழுது, மற்றவைகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும்.

இதற்குமுன் இது தெரியாது. இது பதிவாகியிருக்கின்றது. அதற்குச் சாப்பாடு வேண்டும். உணர்ச்சிகளைத் தூண்டும். அதை நுகர்ந்து, ஆன்மாவாக மாற்றும்.
நமது உயிர், ஆன்மாவில் இருப்பதை எடுத்து,
எது எதற்கு என்னென்ன வேண்டுதோ,
அதற்குச் சாப்பாடாகக் கொடுக்கும்.
உயிருடைய கடமை அது.
இதுதான் “விஷ்ணு” - வரம் கொடுக்கின்றான், “பிரம்மா” -  உருவாக்குகின்றான் என்பது.

உயிரில் இருக்கும் காந்தம் இழுத்து, விஷ்ணு என்ற உயிரின் வெப்பத்தோடு சேர்க்கப்படும் பொழுது, அது ஒரு புது அணுவாக உருவாகின்றது. இதுதான் விஷ்ணுவின் மகன் பிரம்மா.

இந்த அணுவின் தன்மை உறைந்துவிட்டால், அந்த உணர்வின் மலம் நம் உடலாகின்றது. ஆக, சக்தியாக இருக்கும் நிலைகள், கண்ணுக்குப் புலப்படுவதில்லை. அணுவின் தன்மை அடைந்தபின், அந்த அணுவின் மலத்தின் தன்மை உறைந்து, உடலாக சிவமாகின்றது.

மகிழ்ச்சியின் தன்மை வரும் பொழுது, மகிழ்ச்சியின் உடலாக மேனி அழகாக இருக்கின்ரது. வேதனையின் தன்மை அணுவின் தன்மையாகும் பொழுது, உடல் குறுகுகின்றது. இதைத்தான்
விஷ்ணு வரம் கொடுக்கின்றான்,
பிரம்மா உருவாக்குகின்றான்,
சிவனோ அரவணைக்கின்றான்
என்று, மெய்ஞானிகளால் காட்டப்பட்டது.
(பக்கம் 93-95)
தீமையை அகற்றிய ஞானியரின் உணர்வை நாம் நுகர்ந்தோமென்றால், தீமைகளை அகற்றும் நிலைகள் நமக்குள் வரும்.
“சாமி, உங்களுக்கு குருநாதர் சக்தி கொடுத்தார்,
நீங்கள் சக்தி பெற்றீர்கள்”.
எங்களுக்கு நீங்கள் எப்படிக் கொடுக்கின்றீர்கள்?
என்ற விசாலத்தைக் கொண்டு வந்தால்,
இது தள்ளி நிற்கும்.

ஒரு கம்ப்யூட்டரில் அந்த இயந்திரத்தை இயக்கப்படும்போது, எந்த அளவுகோல் கொடுக்கின்றோமோ, அது அந்த இயந்திரத்தை இயக்கும். அப்பொழுது, சந்தேக உணர்வு வந்துவிட்டதென்றால், சரியாக இயங்காது.

ஆக இணைத்து. இப்படித்தான் இருக்க வேண்டுமென்று எண்ணும்போது, எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது. மாற்றியது மோதியபின்தான், அது இயக்குகின்றது.

யாம் கொடுக்கும் உணர்வின் தன்மையைத் தள்ளி வைத்து விட்டால், அந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவாவது கஷ்டம்.

அதனால்தான், இங்கே சிவன் கோவிலில் நந்தீஸ்வரா என்று வைத்தது. உடலுக்குள் சித்திரத்தினால் உருவான புத்திரன், அதன்வழிகளில் தான் இயக்கும்.

“எனக்கு இப்படிச் செய்தான், நான் போக முடியவில்லை,
எனக்குத் தொழிலில் நஷ்டம் வருகின்றது” என்று,
இந்தக் கணக்கு அதிகமாகிவிட்டால், நாம் செயல்படும் உணர்வுகள் குறைகின்றது. அதனால் ஏற்படும் வேதனையான உணர்வுகள், நம்மைச் செயலற்றதாக மாறும்.

அப்பொழுது இந்த எண்ணம், மனிதனை உருவாக்கிய அந்த உணர்வுகள், எந்த அளவு கோலில் நஞ்சினை வளர்த்துக் கொண்டோமோ, அந்த உணர்வு போன்று, நோய்கள் வரும்.

எமன் என்ன செய்கின்றான்? அக்னி குண்டத்தில் போட்டு வறுக்கின்றார். ஒருத்தர், “ஐய்யய்யோ… எரியுதே…” என்று சொல்கின்றார். “அம்மம்மா… குத்துதே…” என்று ஒருவர் சொல்லுகின்றார். “மண்டையெல்லாம் இடிக்குதே…” என்று சொல்லுகின்றார். இப்படி, நமக்குள் குத்தல், குடைச்சல் எல்லாம் வருகின்றது.

எமன் என்ற இந்த எண்ணம், நமக்குள் இந்த நிலைகள் கொண்டு எமலோகத்திற்கு அழைத்துச் சென்று, நாம் நரகலோகத்தை அனுபவிக்கின்றோம். ஆக, இந்திரலோகமாக இருக்கும் இந்த உடலை, நரக லோகமாக மாற்றிவிடுகின்றோம்.

இந்த உடல் இந்திரலோகம். ஆனால், வேதனை என்ற நிலைகள் வரும்போது, நரகலோகமாக மாறிவிடுகின்றது. ஆக, நல்ல குணங்களுக்கெல்லாம், நம்முடைய எண்ணமே எமன் ஆகின்றது.

எமன் எருமை மேல் வருகின்றான். நாம் எதன் மேல் எண்ணத்தைச் செலுத்துகின்றோமோ, அதுதான் பாசக் கயிறு. அதன் வழிகொண்டுதான் இந்த எண்ணங்கள் இயக்குகிறதென்று, இவ்வளவு தெளிவாகக் கொடுத்திருக்கின்றார்கள். படங்களையும் போட்டுக் காட்டுகின்றார்கள். நாம் அதைப் புரிந்து கொள்கிறோமோ என்றால், இல்லை.

அன்று அகஸ்தியன் தன் அன்னை தந்தையர் இறந்தபின், விண்ணை நோக்கினான். தாய் கருவிலே இருக்கும்போது, நஞ்சினை நீக்கும் திறன் பெற்றான். அவன் தெரிந்து வரவில்லை.

குளவி விஷத்தின் தன்மையைப் பாய்ச்சியபின் தான்,
புழுவின் உடலில், அந்த நினைவின் தன்மை வருகின்றது.
அகஸ்தியன், விண்ணை நோக்கும்போது
தாய் கருவிலே பெற்ற நினைவின் தன்மை வருகின்றது.
சூரியனின் காந்த சக்தியைக் கவரும்போது,
ஒளியின் நாதமாகின்றது.

அந்த அகஸ்தியன், தெரிந்து இதைச் செய்யவில்லை. தாய் கருவிலே, அவன் நஞ்சினை வென்ற உணர்வினை நுகரப்படும்பொழுது,
எந்த நஞ்சின் தன்மை வருகின்றதோ,
அதே நஞ்சினை வெல்லும் சக்தி பெறுகின்றது.

அது வளர்ச்சியடையப்படும் பொழுதுதான், இந்தப் பிரபஞ்சத்தை அறிகின்றான் அகஸ்தியன். அவனில் விளைந்த அலைகள், இன்றும் இருக்கின்றது.

அகஸ்தியனில் விளைந்ததை நுகர்வதற்குத்தான், யாம் திரும்பத் திரும்பச் சொல்வது. அது மறந்தாலும் கூட, உடனே அதை இயக்கி, அந்த உணர்வுக்கு வலு கொடுக்க வேண்டும். எமது அருளாசிகள்
(பக்கம் 97-101)
அகஸ்திய மாமகரிஷி நஞ்சினை வென்றிடும் ஆற்றலை, தன் தாய் கருவிலேயே பெற்றதால், அவர் மனித வாழ்க்கையில் நஞ்சினை வென்று, உணர்வினை ஒளியாக்கி, உயிருடன் ஒன்றச் செய்த அலைகள் இன்றும் உண்டு.

அவைகளை நாம் நுகர்ந்தால், அந்த எண்ணம் வரப்படும்போது, நம் உடலிலே நுகர்ந்த தீயவைகளுக்கு, எமனாக ஆகின்றது. தீயவைகளைக் கொல்லக்கூடிய, நரசிம்ம அவதாரம் ஆகின்றது.

நாராயணன் ஒளியின் சுடராக, இருளைப் பிளக்கின்றான். அந்த அருள்ஞானியின் உணர்வின் தன்மை வரும் பொழுது, மகரிஷிகளின் உணர்வை நமக்குள் சேர்த்தபின், நம் சிந்தனையை இருள் சூழச் செய்யும் நிலையை இது பிளக்கின்றது. இதுதான் நரசிம்ம அவதாரம்.

இரண்யன் என்பது, இருள் சூழச் செய்யும் உணர்வு. மடிமீது வைத்து, வாசல்படி மேல் அமர்ந்து, இரண்யனைப் பிளந்தான் நர நாராயணன். நர நாராயணன் என்றால், நம் உயிர்.

அந்த ஒளியின் சுடராக, நம் எண்ணத்தை ஒவ்வொரு நொடியிலும் வளர்க்கப்படும்பொழுது, நம்மை இருள் சூழச் செய்யும் ஆன்மாவைப் பிளக்கும்.

ஆறாவது அறிவு கார்த்திகேயா என்பது, வெளிச்சம். மனிதனான பின், தெளிந்திடும் உணர்வு பெற்றவன். முருகு - தீமையின் நிலைகளை மாற்றி அமைக்கும் தன்மை பெற்றவன்.

நாம் கேட்டுணரும் உணர்வுகள் நமக்குள் வந்து, அதை நாம் அறிந்து கொண்டாலும், தீமை என்று அறிந்தபின், மகரிஷிகளின் அருள் சக்தியை இந்த முறைப்படி உள்ளே நுகர்ந்து, அதைப் பிளத்தல் வேண்டும்.

ஆனால், இதைப் பிளப்பதற்கு, நுகரும் ஆற்றல்” அந்த சக்தி வேண்டும். அந்த சக்தி இல்லையென்றால், நாம்  நுகர முடியாது.

ஒருவர் மிகவும் மோசமானவர். வாயினால் அழகாகப் பேசுவார். அப்படி அழகாக, மகிழ்ச்சியான நிலைகளில் அவர் பேசுவதை நாம் பதிவு செய்து கொள்கின்றோம்.

அவர் ஏமாற்றுவதை, இன்னொருவர் தெரிந்து வைத்திருக்கிறார்.
“ஏன் அவர் வலையில் போய் சிக்குகின்றீர்கள்.
உங்களை அவர் ஏமாற்றிவிடுவார்” என்று நம்மிடம் சொல்கின்றார்.

முதலில் சொன்னவர் உணர்வு வந்தபின், இவர் என்ன சொன்னாலும், “ஏமாற்றுவதற்குத்தான் சொல்கின்றார்” என்று எண்ணுகின்றோம்.

இரண்டாவது சொல்பவர் அனுபவப்பட்டவர், நம்மிடம் வந்து, சொல்கின்றார் என்று எண்ணுவதில்லை. அதற்குப் பதில், அவரைக் குற்றவாளியாக்குகின்றோம்.

“பார், அவரிடம் நட்பாக இருக்கின்றோம். பொறாமையால், பிடிக்காத நிலைகளில் இப்படிச் சொல்கிறார்” என்று எண்ணுகின்றோம்.

நம்மைக் காப்பதற்காகச் சொன்னாலும், அவரிடம், உங்களை எப்படியெல்லாம் சொல்லுகின்றார்? என்று சொல்லி விடுகின்றோம்.
ஆனால், சொல்லி ஏற்றுக் கொண்டு,
சிந்தித்துப் பார்க்கின்றோமா? என்றால் இல்லை.
அந்த உணர்வை உடனே வெளிப்படுத்துகின்றோம்.
அவர்களுக்குள், தீமை செய்யும் உணர்வுகளே விளைந்து இருக்கின்றது. ஆக, இப்படி நாம் தவறே செய்வதில்லை.

ஆனால், அவரின் இனிமை நமக்குள் விளைந்து விட்டால், பின்னாடிதான்”, அதிலே சிக்கிவிட்டோம் போல் இருக்கிறது என்று தெரிகின்றது.

ஒரு புலி ஒரு மானைப் பார்க்கின்றது என்று, வைத்துக் கொள்வோம். அந்த மானைப் பார்த்தவுடன், அமைதி கொண்டதாகவே இருக்கின்றது. தன்னருகிலே இருப்பதை, உற்றுப் பார்ப்பதில்லை.

வெகுதூரத்தில் இருப்பதை, புலி குறி வைக்கிறது. அதைப் பதிவு செய்துவிட்டதென்றால், அதன் மேல் எண்ணம் வருகின்றது.

ஆனால், பக்கத்திலிருப்பதை நின்று வேடிக்கை பார்க்கின்றது. ஆனால், தூரத்தில் இருப்பதை உற்றுப் பார்க்கும் பொழுது, அது ஓட ஆரம்பிக்கின்றது.
மானிற்கு இந்த உணர்வின் ஒலி பட்டபின்,
உணர்வின் அறிவு உன்னைக் குறி வைக்கின்றது
என்று உணர்த்துகின்றது. உடனே அது ஓட ஆரம்பிக்கின்றது.

புலியோ பக்கத்தில் இருக்கின்றதைப் பிடிக்காதபடி, தூரத்தில் இருப்பதைத் துரத்திச் செல்கின்றது. அந்த உணர்வின் வலு எதுவோ, அதனைத்தான் துரத்துகின்றது.

இதைப் போலத்தான், நாம் எதனைப் பதிவு செய்கின்றோமோ, அந்த உணர்வின் நினைவாற்றல்தான், நம்மை இயக்குகின்றது.

ஆகையினால், நாம் பக்கத்தில் இருப்பதையெல்லாம் விட்டுவிட்டு, அந்த மகரிஷிகளின் உணர்வை நமக்குள் எடுத்துக் கொண்டால், இது நம்மை ஒன்றும் பாதிக்காது.
அந்த உணர்வின் சத்தை நுகர்வதற்கு என்ன வழியோ,
அதைத்தான் உங்களிடம் யாம் பதிவு செய்வது.

குருநாதர் எமக்கு அப்படித்தான் சொன்னார். சொல்லி அதைப் பதிவு செய்தார். அது மாதிரிதான் உங்களிடம் பதிவு செய்கின்றேன். யாம் பதிவு செய்வதை, நீங்கள் நினைவுக்குக் கொண்டுவர வேண்டும்.
(பக்கம் 99-101)
நாம் காலையிலிருந்து எத்தனையோ பேரிடம் பேசுகின்றோம். எத்தனையோ பேர் பேசுவதைக் கேட்கின்றோம். எத்தனையோ இடங்களுக்குப் போகின்றோம், வருகின்றோம்.

வாழ்க்கையில், ஒருவர் நமக்கு நல்லவராக இருப்பார். நாம் சொல்வதையெல்லாம் செய்கின்றார். அவர் மேல், நாம் அன்பு செலுத்துகின்றோம்.

அதே சமயத்தில் இன்னொருவர் ஊடுருவி, அவருடைய சௌகரியத்திற்காகத் தவறு செய்ய வருகின்றார். நாம் அன்பு காட்டுபவரை, பல காரண காரியங்களைக் காட்டி, எப்படியெல்லாம் குற்றவாளியாக்க வேண்டுமோ, அந்த உணர்வெல்லாம் சேர்த்து, அவரைக் குற்றவாளியாக ஆக்குவார்.

ஒரு முறை சொல்வார். இரு முறை சொன்னவுடனே, சந்தேக உணர்வுகள் இங்கு வந்துவிடும். நமக்கு நம்மைக் காத்திட, சில நிலைகளைச் செய்யும்பொழுது, அவன் (முதலில் சொன்ன நல்லவர்) வந்துவிட்டுப் போய் இருப்பான்.
“அவன் இது மாதிரி திருடனாகப் போவானேன்.
எதை எதைச் செய்து எப்படி ஏமாற்றுகின்றானோ?
தெரியவில்லையே” என்று,
இவர் சொல்வதைப் பதிவு செய்துவிட்டு,
அவர் உண்மையைச் சொன்னாலும் கூட
வெறுப்பாக எடுத்துக் கொள்கின்றோம்.

நம் வாழ்க்கையில் இப்படித்தான் உணர்வுகள் வருகின்றது. நாம் நேர் வழியில் போனாலும், இந்த உணர்வுகள் சந்தர்ப்பங்களில், தீமைகளை நமக்குள் வளர்த்துவிடுகின்றது.

நாம் பாசத்தால், நல்வழிப்படுத்த வேண்டுமென்றாலும், இந்த வாழ்க்கையில்
ஒவ்வொருவரும், அவரை வளர்த்திட
இந்த உணர்வின் தன்மையை, நமக்குள் பதித்திட,
பதிந்த அந்த உணர்வே நமக்குள் இயங்கத் தொ\டங்கிவிடுகின்றது.

அந்தப் பதிவிற்கு வந்துவிட்டோம் என்றால், நமது உயிர் குருவாகின்றது. அந்த உணர்வின் தன்மை வந்தபின், அதைக் காப்பதற்கு அதனுடைய ஞானமே இயங்கத் தொடங்கிவிடுகின்றது.

ஒரு செடியை வெட்டிவிட்டால்,
அதனுடைய மணத்தை நுகர்ந்து வளரத் தொடங்கும்.
அதனால், ஒரு மனிதனுக்குள் விளைந்த எண்ணம் நமக்குள் பதிவாகிவிட்டால், அது மீண்டும் இயங்கத் தொடங்கிவிடும்.

மதங்களின் அடிப்படையில், எதை ஆதாரமாக வைத்திருக்கிறார்களோ, அதன்படி “இதுதான்” என்று பதிவு செய்துவிட்டால், அந்த நிலையைத்தான் வளர்க்கின்றோம். அதற்கு மாறாக, மற்றவர்கள் சொன்னாலும் அதை வெறுக்கின்றோம்.

இப்படி, நாம் எதை எதையெல்லாம் எண்ணுகின்றோமோ, அவை அனைத்திற்கும் நம் உயிரே குருவாக இருக்கின்றது. எந்த உணர்வின் தன்மை தனக்குள் இருக்கின்றதோ, நமது உயிர் அதை குருவாக்கி, அது வேலையைச் செய்யும்.

ஆகையால், இது போன்ற நிலைகளிலிருந்து மீள, மகரிஷிகள் காட்டிய குருவின் உணர்வின் தன்மையை, அந்த மெய்ப் பொருள் கண்டுணர்ந்த உணர்வின் ஆற்றலை, உங்களுக்குள் பதிவு செய்யப்படும் பொழுது, நீங்கள் எந்த அளவிற்கு அதைப் பெறுகின்றீர்களோ, அது குருவாக நின்று, உங்களைக் காக்கும்.

அதை நினைவு கொள்ளும் பொழுதெல்லாம், உங்களுக்குள் அது வரும். அதை உங்களுக்குள் ஆழப் பதிவு செய்வதற்குத்தான், இதைச் செய்வது. இந்த உணர்வைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது, அது உங்களைக் காக்கும். எமது அருளாசிகள்.
(பக்கம் 101-103)
புத்தகத்தைப் படித்துவிட்டு, ஒரு இயந்திரத்தில் அமிலத்தைக் கலந்து துணிக்குச் சாயத்தைக் கொடுக்கின்றோம். படித்தவர்கள் இந்த அளவுகோலில் திராவகத்தை ஊற்றினால், நூல் கெட்டுப் போய்விடும் என்று அந்த அளவுகோலை நினைத்திடுவார்கள்.

அளவுகோல் தெரியாதவர்கள் இந்த திராவகத்தை ஊற்றிவிட்டார்கள் என்றால்,  நூலோடு கலந்து, சாயத்தைக் கெட்டிச் சாயமாகக் கொண்டு போய்விடும். சிறிது நாளைக்கு, இந்தச் சாயம் இருக்கும். பின், துணி கிழிந்து போய்விடும்.

அந்த அமிலத்தின் அளவுகோல் குறைவாக இருந்தால், இதை இழுத்து வைக்கக்கூடிய நிலைகள் குறைந்துவிடும். தண்ணீருக்குள் போட்டவுடனே, இந்தச் சாயம் போய்விடும்.

சாயம் ஒன்றுதான். ஆனால், அமிலத்தின் அளவுகோல் இதனுடன் இணைந்திருக்கும் போது
எது அதிகமோ,
எது குறைவோ,
அதற்குத் தகுந்த நிலைகளைச் செய்யும்.

ஆகையால், அவர்கள் படித்த உணர்வுகொண்டு, அவர்கள் அறிவுக்கெட்டிய நிலைகள் கொண்டு நிதானிக்கின்றார்கள். ஒருவர் போடுவதைப் பார்த்த உடனே, இவர் துணியின் அளவுகோலைப் பார்க்கின்றார்.

நூல் எந்த அளவிற்குப் போடுகின்றார்களோ, அதற்குத்தகுந்த நிலைகளைப் போடுகின்றார்கள். அது பழக்கத்திற்கு வரும் வரையிலும், சரியாக வராது.

படித்தவர்கள், அளவுகோல்படி கெட்டியாக இருக்கவேண்டுமென்று எண்ணிச் செய்தால் துணி இத்துப் போய்விடும் என்று தெரியாது. அதே சமயத்தில், பெயர் வாங்கவேண்டும் என்று அளவுகோலை அதிகப்படுத்திவிட்டால், துணி போய்விடும். கெட்டிச் சாயம் என்று துணி வாங்குவோம், துணி போய்விடும்.

இந்த மாதிரி, நமது குருநாதர் தெளிந்த நிலை பெற்றவர் அந்த உணர்வை உங்களிடம் பதிவு செய்யப்படும்போது, அந்த மகரிஷியின் அருள் சக்தியை இங்கே சேர்த்து, அந்தந்தப் பக்குவ நிலைக்கு, குருவாக நின்று வழி நடத்தும்.

நம் குருநாதர் கண்டுணர்ந்த, மெய்யுணர்வின் தன்மையை உங்களுக்குள் பதிவு செய்யும்போது, ஒவ்வொரு நிமிடத்திலும் அது அளவுகோல் கொடுக்கும்.

ஒரு கம்ப்யூட்டரில், சீராகப் பதிவு செய்யும்போது, ஒவ்வொரு நிமிடத்திலும் அது அளவுகோல் கொடுக்கும். அதே போன்று, ஒரு எல்லை வரும்போது, ஒரே நிமிடத்தில்
உணர்வின் அழுத்தத்திற்குத் தக்கவாறு,
பல நிலைகளை, நாம் பதிவு செய்ததை
அது இயக்கித் தெளிவாக்குகின்றது.

இதைப் போலத்தான், மகரிஷிகளின் உணர்வுகளை எடுக்கப்படும்போது, அந்தத் தீமையின் நிலைகளை ஒவ்வொரு நொடிக்கும் இது மாற்றி, நமக்குள் அந்த ஒவ்வொரு உணர்வுகளும் கிளர்ந்தெழும்.

ஏனென்றால், இந்த ஆன்மாவில் பல நிலைகள் உண்டு. அந்த உணர்வின் தன்மை வரும்போது, அந்த மகரிஷியின் அருள் சக்தியால் இது ஒவ்வொன்றையும் பிளந்து, நமக்கு ஒவ்வொரு ஞானத்தையும் கொடுக்கும். தியானவழியில் இருப்பவர்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

கடும் சிக்கலாக இருக்கும்போது, ஆன்மாவில் வந்துவிடும். ஆத்மசுத்தி செய்து கொண்டிருக்கும்போது, அந்த உணர்வின் தன்மை வசப்படும்போது உடனுக்குடன் அதை மாற்றித் தெளிவாக்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.
ஆத்மசுத்தி செய்து கொண்டே இருக்கின்றேன்,
இடைஞ்சல் வந்து கொண்டே இருக்கிறது என்றால்,
அதை நீக்குவதற்குத்தான் இதை எடுக்கின்றோம்.

வீட்டைக் கூட்டுகின்றோம். கூட்டியபின், ரோட்டில் இருக்கின்ற தூசி இங்கே வந்துவிடும். அதில் நாற்றமான பொருளும் கலந்திருக்கும். இந்த வெயிலின் உணர்வுகள் தாக்கப்படும்போது, அது தூசியாக மாறும். அது வசப்படும்போது மோதி உள்ளுக்குள் வந்துவிடும்.

எவ்வளவோ சுத்தப்படுத்தியிருக்கின்றேன். இந்த மாதிரி நாற்றமாக இருக்கின்றதே என்று கூறுவதுபோல, காற்றிலிருந்து, நாம் அந்த மற்றவர்களுடைய நிலையை எண்ணும்போது, ஆன்மாவில் இந்த தூசி படத்தான் செய்கின்றது. இதை உடனுக்குடன் நாம் நீக்க வேண்டும்.

தீமைகள் எதைக் கண்டுணர்ந்தாலும், “ஈஸ்வரா” என்று அவனிடமே வேண்ட வேண்டும். இதுதான் ஆக்ஞை என்பது. நமக்குள், உயிர்தான் எண்ணியதை உருவாக்குகின்றது. இதுதான் கீதையிலே, “நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்” என்பது.

தீங்கு செய்து கொண்டே இருக்கின்றான் என்று, இந்த உணர்வைப் பதிவு செய்துவிட்டால், இந்தத் தீங்கின் நினைவே நமக்குள் உருவாகும். அப்பொழுது, “ஈஸ்வரா” என்று, உடனே இதை இடைமறிக்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியை, நாம் நமக்குள் பதிவு செய்திருக்கின்றோம். நமது உயிரை ஈஸ்வரா என்று வேண்டி, மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று, எண்ண வேண்டும்.

தீங்கு செய்வோருடைய உணர்வுகள் பதிவானதை விட்டுவிட்டோம் என்றால், உள்ளுக்குள் போய்விடும். கண்ணோடு பார்த்தது ஆன்மாவாக மாறிவிடும்.

நாம் சுவாசித்தவுடன், உயிரிலே படுகின்றது. உணர்வுகள் உடலுக்குள் படருகின்றது, இதை நிறுத்த வேண்டும். அதற்குப் பழக்கம் வேண்டும். இல்லையென்றால், அதை நிறுத்த முடியாது.
(பக்கம் 104-108)
விநாயகர் தத்துவத்தில் நாம் பார்ப்பது வினையாகின்றது. மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை, காலமறிந்து, கருத்தறிந்து செயல்பட வேண்டும் என்று, அவர்கள் பாடுகின்றார்கள்.

நமது உயிர் மூலம். அந்த மூலத்தில் மோதும்போது, அதனுடைய ஆதாரமாகத்தான் (மூலாதாரத்தில் மூண்டெழும் கனல்) அந்த உணர்வு எதுவோ, அது மோதியவுடன் கனலாக எழும்புகின்றது.

ஒருவர் கோபிப்பது, நம்மை வேதனைப்படச் செய்கின்றது. ஒருவர் கடுமையான செயல்களைச் செய்தாலும், அவரை நண்பனாக எண்ணி, பாசப்பட்டிருப்போர் அல்லது நமது குழந்தையையே அப்படி எண்ணி இருப்போம். நம் குழந்தை அந்த சமயத்தில், கோபம் வரும் அளவிற்கு என்ன செய்தது? என்று நமக்குத் தெரியாது.

அவர் சொல்லக் கூடிய உணர்வை, நம் கண் பார்க்கின்றது.
அந்த உணர்வின் தன்மை நம் ஆன்மாவாக ஆகின்றது.
சுவாசித்தது, மூலத்தில் (உயிரில்) மோதுகின்றது.
இதில் மூண்டெழும் கனலை, காலமறிந்து, கருத்தறிய வேண்டும்.

ஏன் இப்படிச் சொல்கிறார்கள்? அது எதனால்? என்ற காரணத்தை அறிந்தால், காலமறிந்து அதை நீக்க முடியும்.

அதை நீக்க முடியவில்லை என்றால், குழந்தை செய்த வினைகள் நமக்குள் வினையாகி, அது நாயகனாகி, அந்தக் குழந்தைக்கு உதவி செய்யும் நோக்கத்தோடு, இதுவும் செயல்படும். அந்தக் குழந்தையின் குற்றத்தை, நீக்கச் சொல்லாது.

இது உணர்த்திய உணர்வுகள் நமக்குள் உருவாகி, அவர்கள் மேல் பகைமையை உருவாக்கும். அவர்களை எண்ணும் பொழுதெல்லாம் அந்த பகைமையின் உணர்வுகள் இது வளரும்.

இதுதான் விநாயகர் தத்துவத்தில்
“மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை,
காலமறிந்து கருத்தறிந்து செயல்பட வேண்டும்”
என்று சொன்னது.

இந்த வாழ்க்கையில் வரும் சங்கடங்களை,
நம் மேல் பட்ட தூசியைத் துடைப்பதுபோல, துடைக்க வேண்டும்.

இன்று கலி என்ற நிலைகளில் எல்லாமே கடவுளாக உருவாக்குகின்றார்கள். எல்லாமே கடவுளாக உருவாக்கிக் கொண்டு வருகின்றார்கள். இதுதான் கலி. நான் ஒரு தெய்வத்தை வைக்கின்றேன். அது இது மாதிரி செய்கின்றது. எனக்கு இந்தக் கடவுள், இதைச் செய்து கொடுத்தார்.

இது போன்ற நிலைகள், கலி என்ற பெயரில் எல்லோர் மத்தியிலும் உருவாகிவிட்டது. “நான் உருவாக்குகின்றேன். நான் உன்னைக் காப்பாற்றுகின்றேன்” என்று, எல்லோரும் சொல்கின்றார்கள். “நானே, உனக்கு உள் நின்று இயக்குகின்றேன்” என்று, சொல்கின்றார்கள்.

இப்பொழுது, நான் கூட உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்று, சொல்லுகின்றேன். இந்த சொல்லின் நிலைகள்,
நான் உங்களுக்கு,
உதவியாக இருப்பேன் என்று பொருள்.
இதை நீங்கள் எடுத்துக் கொண்டால்தான்,
உங்கள் உதவி வேண்டாம் என்றால், ஒன்றும் இல்லை.

உங்களுக்கு உறுதுணையாக இருக்கலாம். இதை எடுத்ததுமே, நான் கொடுத்த எண்ணங்களுக்கு வலுக் கூடுகின்றது.
நான் காப்பாற்றுகின்றேன் என்றால், நான் கடவுள் அல்ல.
நான் காப்பாற்றுகின்றேன் என்று சொன்னால்,
நீங்கள் உங்களை மறந்துவிடுவீர்கள்.
“சாமி நம்மைக் காப்பாற்றி விடுவார்” என்று, எண்ணுவீர்கள்.

நீங்கள் நல்ல மருந்தைச் சாப்பிட்டால், அது உங்களைக் காக்கும். வேதனையை நீக்க வேண்டுமென்றால், வேதனையை உருவாக்கித்தான் அந்த வேதனையை நீக்க வேண்டும். அந்த மருந்து அதற்கு வேதனையை உருவாக்கும்.

சாதாரணமாக வேதனையை உருவாக்கும்போது, அந்த அணு அங்கு உருவாகின்றது. இதை நல்லதாக்க வேண்டுமென்றால், விஞ்ஞான அறிவுப்படி நல்ல மருந்தைச் சேர்க்கின்றார்கள்.

இந்த நல்ல மருந்துடன் சேர்க்கப்பட்ட விஷம், உடலில் வேகமாக ஊடுருவி, உடலில் அலைய ஆரம்பித்து விடும். நல்ல சத்தின் தன்மை வரப்படும்போது,
இந்த வேதனை
மருந்தில் இருக்கும் விஷம்
அதற்குள் போனவுடனே தேங்கி நின்று,
இது சேமிக்க ஆரம்பிக்கின்றது.
அதற்கு வேதனை ஆகின்றது.

அப்பொழுது, மருந்து சாப்பிடும் பொழுது, வேதனையைக் கலைத்துவிட்டால் “அய்யோ! அம்மா… உடலெல்லாம் கலையுதே!” என்பார்கள்.
.
கலைந்த உணர்வின் தன்மை நீராக மாறும்போது, சிறுநீராகப் போகும். அல்லது, அந்த உணர்வின் தன்மை சீதமாக வெளியே போகும்.
அப்பொழுது உடம்பெல்லாம் வலிக்கும்.
அந்த மருந்தின் தன்மை, அதனுடைய உற்பத்தியைக் குறைக்கும்.

“அய்யய்யோ! எனக்கு இந்த மருந்து கொடுத்தார் இப்படி ஆகிவிட்டது” என்று சொல்லிவிட்டு, வேறு ஒரு மருந்து சாப்பிட்டால் என்ன ஆகும்? இது இரண்டையும் ஏற்றுக்கொள்ளாத நிலைகளில், நோயாக மாறும்.

இந்த விஷத்திற்கு இவ்வளவு பெரிய ஆற்றல். வாழ்க்கையில் நாம் இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

குருநாதர், மூன்று இலட்சம் பேர்களைப் பற்றி யாம் தெரிந்து கொள்வதற்காக, எம்மைக் காடு மேடெல்லாம் அலையச் சொன்னார்.
காலில் செருப்பில்லாமல் நடக்கச் சொன்னார்.
வெயிலில் நடக்கச் சொன்னார்.
இந்த உணர்வுகள் எப்படி எல்லாம் உந்துகின்றது.
உனக்கு எண்ணும்போது ஆசையெல்லாம் வருகின்றது.

அந்த ஆசைகள் வரும்போது, கஷ்டங்கள் வந்து, உனக்கு என்ன என்ன தடை விதிக்கின்றது? உன்னுடைய ஆசைகள், மனக்கோட்டைகள் தகர்ந்து போகும் பொழுது, உனக்கு என்னென்ன தடை விதிக்கின்றது?

இதே மாதிரி, ஒவ்வொரு மனிதனுக்கும் எந்தெந்த அளவிலே ஈர்க்கின்றது என்பதை, தெளிவாகக் காட்டினார், குருநாதர்.
(பக்கம் 109-114)
மனித வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும், சந்தர்ப்ப சூழ்நிலைகளால், வேதனை, வெறுப்பு, சோர்வு, கோபம், குரோதம், அவசரம், ஆத்திரம் போன்ற உணர்வுகளை, நுகராமல் இருக்க முடியவில்லை.

நாம் நுகர்ந்த உணர்வுகளை நம் உயிர் இயக்கி, நமது உடலாக மாற்றிவிடுகின்றது. இந்தத் தீமையான உணர்வுகள், நம் உடலை உருவாக்கிய நல்ல உணர்வின் அணுக்களைக் கொன்று, அந்த அணுக்களின் மலங்களால் உருவான உறுப்புகளில், பலவித நோய்களை விளையச் செய்துவிடுகின்றன.

இந்த மனித வாழ்க்கையில், இதைத்தான் நாம் செய்கின்றோம். அந்த மாதிரி சந்தர்ப்பங்களிலெல்லாம்,
நாம் நம் குரு காட்டிய அருள் வழிகளில்
மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று
எடுப்பதற்கு சக்தியைக் கொடுக்கின்றோம்.
நீங்கள் அதை எடுத்துப் பழக வேண்டும்.

அந்த மாதிரி சந்தர்ப்பங்களில், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாம் பெற வேண்டும் என்று, நம் உயிரை வேண்டி, எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும், பெறவேண்டுமென்று உள்ளுக்குள் செலுத்த வேண்டும்.

இந்த வலு பெற்றபின், எதை பலவீனமான நிலைகளில் இருந்து இயக்கி உணருகின்றதோ, அது அணுவாக மாறுகின்றது. ஒவ்வொரு நிமிடத்திலும் ஒவ்வொரு விதமான அணுக்கள் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும். அதுதான் பிரம்மா உருவாக்குகின்றான். விஷ்ணுவின் மகன் பிரம்மா. அதாவது,
உயிரால் உருவாக்கப்பட்ட அந்த அணு
மீண்டும் தன் இனத்தை விருத்தி செய்யும்.
தன் ஆகாரத்தை அது கேட்கும்.
பின், தன் இனத்தை விருத்தி செய்து கொண்டே இருக்கும்.

இந்த உணர்வுகள் எது அதிகமோ, அது சிவத்திற்குள் இருந்து, அதன் செயலாக்கமாக அது மாற்றும். சிவத்துக்குள் சக்தியாக இருந்து, அதன் செயல் ரூபங்கள் எதுவோ, அதன் செயலாகத்தான் இது மாற்றும். இதுதான் சக்தி சிவமாகின்றது. சிவத்திற்குள் சக்தியாக இயக்குகின்றது.

சக்தியில்லையேல் சிவமில்லை. சிவமில்லையேல் சக்தியில்லை. இந்த சிவம் உருவாகவில்லை என்றால், சக்தி என்ற செயல் இல்லை. இது நமது சாஸ்திரங்களில், ஞானிகளால் தெளிவாக்கப்பட்டு இருக்கின்றது.

மெய்ஞானிகள் தமக்குள் தன்னைக் கண்டுணர்ந்தவர்கள். ஆகையினால், நாம் இதை எத்தகைய நிலைகள் வந்தாலும், இதை மறக்காது செய்ய வேண்டும்.

குருநாதர் எனக்கு எவ்வளவு கொடுத்தாரோ, அதைக் காட்டிலும் பன்மடங்கு உங்களுக்குக் கொடுத்திருக்கின்றேன், கொடுக்கின்றேன். அந்தச் சக்தியின் துணை கொண்டு, எடுக்க வேண்டும்.

“சாமி சொல்கின்றார். ஆனால், நான் படுகின்ற இம்சை எனக்குத்தான் தெரியும்” என்று இதைக் கலந்து விட்டால், இதைப் பெற முடியாது.

ஆனால், குரு சொன்னதைச் செய்தால், நாம் அனைவரும் அதைப் பெறமுடியும். அந்த மகரிஷிகளின் அருள் உணர்வின் எண்ணங்களாக்கி, மணங்கள் வந்துவிடும்.

நாம் எடுத்துக்கொண்ட உணர்வின் அறிவிற்குத் தக்கவாறுதான்,
ஒருவருடைய  சொல்லிலும் பதிவாகும்.
இந்த பதிவிற்குத் தக்கவாறு தான்,
நண்பனாக்குவதோ, நண்பனை உயர்த்துவதோ,
பகைவனாக்குவதோ இதுதான்.
நாம் சந்திக்கும் சந்தர்ப்பத்தின் வேகம் நம்மை தடைப்படுத்தும். அந்த சந்த்ர்ப்பங்களில் அந்த மகரிஷிகளை எண்ணி, நாம் இதைச் சுத்தப்படுத்த வேண்டும்.

இதற்குத்தான் கோவிலை வைத்தார்கள். ஒருவர் மேல் சந்தர்ப்பத்தில் பகைமை ஆகிவிட்டால் கோவிலில் தீப ஆராதனை காட்டும்போது, பொருளறிந்து செயல்படும் இச்சக்தி கிடைக்க வேண்டும். இந்த ஆலயம் வருவோரெல்லாம் அந்த நிலை பெற வேண்டும், என்று அந்த உணர்வை ஒளியாக்க வேண்டும்.

அந்த அறிவு இல்லையென்றால், இப்படிச் செய்கின்றார்களே என்ற இந்த அறிவு தான் நம்மை இயக்கும். இதுவும் அறிவு தான், அதுவும் அறிவு தான்.

ஆகவே, எதன் உணர்வு எதனுடன் இயக்குகின்றதோ, அதன் அறிவின் இயக்கமாக உயிர் நம்மை இயக்கும்.
உயிரின் இயக்கத்தைச் செயல்படுத்துவதற்குத்தான், ஆலயங்களில்
இந்த தெய்வம் நல்லது செய்யும்
என்று கதைகளை எழுதினார்கள்.

அந்த  தெய்வ குணத்தை எடுத்து,
அந்த உணர்வின் தன்மையை நமக்குள் வளர்த்து,
இந்த தெய்வகுணம் நாங்கள் பெற வேண்டும்.
ங்களைப் பார்ப்போரெல்லாம் அந்த தெய்வநிலை பெற வேண்டும்.
இந்த ஆலயம் வருவோரெல்லாம்,
அந்த தெய்வநிலை பெற வேண்டும்.
அவர்கள் குடும்பமெல்லாம் அந்த நிலையாக வளரவேண்டும், என்ற  இந்த உணர்வை, நமக்குள் வளர்க்கச் சொல்லுகிறார்கள்.

அந்த சந்தனத்தின் நறுமணம் நாங்கள் பெற வேண்டும். இது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும். எங்களைப் பார்க்கின்றவர்களுக்கு எல்லாம் நறுமணம் கிடைக்க வேண்டும். அவர்கள் குடும்பமெல்லாம் நல்வழியில் நடக்க வேண்டும். இந்த உணர்வை நாம் எடுக்க வேண்டும். இப்படி எடுக்கப்படும்போது இந்த உணர்வு விளைகின்றது.  

தெய்வச் சிலையை, சந்தனம் மற்ற பொருள்களைப் போட்டு அதை அழுக்காக்குகின்றார்கள். பின் நன்னீரை விட்டு அதைச் சுத்தப்படுத்துகின்றார்கள். மீண்டும் நறுமணம் வாய்ந்த பன்னீரை ஊற்றுகின்றார்கள்.

அப்பொழுது, இந்த பன்னீரைப் போன்ற தெளிந்த மணங்கள் நாங்கள் பெறவேண்டும். எங்களைப் பார்ப்போரும், இந்த ஆலயம் வருவோரும், அந்த தெளிந்த மணங்கள் பெறவேண்டும் என்று ஏங்கவேண்டும்.

இந்த உண்மையை உணர்த்திய அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும். எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று எண்ண வேண்டும். பின், என்னைப் பார்ப்போரும், இந்த ஆலயம் வருவோரும், மலரைப் போன்ற மணமும், மகரிஷிகளின் அருள் சக்தியும் பெற்று, அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெறவேண்டும் என்று ஏங்க வேண்டும்.

அதே போன்று, நாங்கள் பணிபுரியும் இடங்களிலும், தொழில் செய்யும் இடங்களிலும், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படரவேண்டும். மலரின் மணங்கள் அங்கே படரவேண்டும். அங்கு உற்பத்தியாகும் பொருளைப் பயன்படுத்துவோர் அனைவரும், அந்த அருள்சக்தி பெறவேண்டும் என்று, நாம் எண்ணிப் பழகவேண்டும்.
(பக்கம் 114,115)
அருள் மகரிஷிகள் இருளை வென்று உணர்வினை ஒளியாக மாற்றியவர்கள். ஒளியின் சரீரமாக நிலை கொண்டவர்கள் மகரிஷிகள். அதனின்று வெளிப்படும் சத்துதான், ரிஷியின் மகன் நாரதன், நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன்.

நாராயணன் என்பது சூரியன். அது ஒளியின் சுடராக எதைத் தனக்குள் கவர்ந்தாலும், அதன் இனத்திற்கு அறிவாக ஊட்டுகின்றது. அதன் நிலைகளில் அதை வளர்க்கின்றது.

இதைப் போலத்தான் சூரியன் எப்படி, அதனதன் நிலைகள் கொண்டு, உலகை அது உருவாக்குகின்றதோ, உணர்வின் அறிவாக இயக்குகின்றதோ, அதன் வழிகளிலே அதை வளர்ச்சி செய்கின்றது.

இதைப் போலத்தான், மனிதன் இருளைப் போக்கி, உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சுடராக இருக்கும். மகரிஷியின் அருள் சக்தியை நாம் நுகருவோம் என்றால், அந்த உணர்வின் சத்தையும் சூரியனின் காந்தசக்திதான் கவருகின்றது.

அது அலைகளாகப் படரப்படும் பொழுது, அந்த நினைவை நமக்குள் பதிவு செய்தால்தான், அதிலிருந்து வந்த உணர்வை நாம் நுகர முடியும். அதுவே நினைவில் இல்லாதபடி நாம் இதை எடுப்போம் என்றால், முடியாது.

அதனால்தான் இன்று, துருவ நட்சத்திரத்தை தம் கண்ணிலே பார்க்கும் நிலை பெற்றவர்கள். மனிதனின் நிலைகளில் உணர்வின் ஒளியாக மாற்றிவர்கள் “சப்தரிஷிகள்”.

துருவ நட்சத்திரத்தை எண்ணி, அதனைப் பின்பற்றிவர்கள் அனைவரும் சப்தரிஷி மண்டலங்களாக அதன் ஈர்ப்பு வட்டத்தில் வருகின்றார்கள்.

சூரியனில் வளர்ச்சி பெற்ற நட்சத்திரங்களும், கோள்களும், சூரியனின் ஈர்ப்பு வட்டத்தில் வருகின்றது.

இதைப் போன்று, இந்தப் பிரபஞ்சத்திற்குள் உயிரணு தோன்றி, இந்தப் பிரபஞ்சத்தின் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிய,
அந்த உயிரணுவின் மாற்றம்
இன்று எந்த துருவத்தின் நிலை கொண்டு
இந்த பூமி உணவாக எடுக்கின்றதோ,
அதே துருவ நிலைகளைத் தனக்குள் எடுத்து
ஒளியாக மாற்றிக் கொண்டே இருக்கின்றார், “துருவ மகரிஷி”
இதுதான் நம் குருநாதர் காட்டிய நிலைகள்.

அந்த உண்மை வழிப்படி, அதை உற்று நோக்கிப் பதிவு செய்து, அதிலிருந்து விளைந்த உணர்வின் தன்மையை சிருஷ்டித்துக் கொண்டவர்கள் மகரிஷிகள்.

ஆறாவது அறிவின் துணை கொண்டு, ஏழாவது நிலை பெற்றவர்கள் சப்தரிஷிகள். அந்த உணர்வின் நாதங்களாகத் தனக்குள் சிருஷ்டித்துக் கொண்டவர்கள். அந்த சப்தரிஷிகள் உருவாக்கிய அந்த உணர்வுகளை நாம் பெறவேண்டும்.

துருவ மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறவேண்டும். அதனின்று பெற்ற சப்தரிஷி மண்டலங்களின் நிலைகள் நாம் பெறவேண்டும். இந்த உணர்வுடன் ஒன்றி, அதனின் நிலைகளை நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும்.
அப்படி வளர்த்துக் கொண்டு, வரும் தீமைகளை நீக்குவதற்கு,
ஒவ்வொரு நொடியிலும், “ஈஸ்வரா” என்று உயிரை வேண்டி,
துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்,
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று
நாம் இதைச் சேமிக்க வேண்டும்.
இதுதான் அழியாப் பெரும் சொத்து.
உயிரான்மாவிற்கு நாம் சேர்க்க வேண்டிய சொத்து.

அப்படி அதைச் சேமிக்கும் பொழுது, இந்த உடலுக்குப் பின், நாம் நிச்சயம் பிறவியில்லா நிலை என்ற நிலை அடைந்து, அழியா ஒளிச் சரீரம் பெறுவோம். இது உறுதி.
(பக்கம் 115-119)
நாம் தொழிலில் சேர்க்கும் சொத்து, நம் வாழ்க்கைக்கு உதவும். அதிலே சீராக இல்லையென்றால், அதைக் காக்க முடியாது.
வேதனை என்ற உணர்வு வரும்போது,
இந்தச் சொத்தை கொண்டு கொடுத்தால்,
இது எதற்கு? என்று தோன்றும்.

செல்வம் சேர்த்துக் கொண்டு இருக்கும்போது, “எனக்கு இப்படி வந்துவிட்டதே” என்று உடலின் பற்று வந்து வேதனையை எடுத்துவிட்டால், நஞ்சின் தன்மை வந்துவிடும்.

இந்த உடலின் பற்று வந்தபின், யார் மேல் இந்த பற்று வருகின்றதோ, அதைப் பற்றிக் கொள்கின்றோம். அந்த உடலை, நாம் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றோம்.

அந்த உடலுக்குள் சென்று, இந்த உடலில் விளைந்ததை சாகாக் கலையாக்கி, அந்த ஆசையைத் தூண்டி, அதை மடியச் செய்கின்றோம். இது நமக்குள் பேயாக அந்த உணர்வின் வளர்ச்சியாக, பூத கணங்களாக விளைகின்றது. இதுதான் பூதங்கள்.

ஆனால், எதனை அடக்கி அதற்குள் வந்ததோ, அந்த உணர்வின் தன்மை வந்தபின், எதனின் வளர்ச்சி பெற்ற உயிரினங்கள் வருகின்றதோ, அங்கே கொண்டுபோய், இந்த பூத நிலைகள் அதுவாகவே உருவாக்கி, அதனின் செயலாக்கமாகவே ஆகிவிடும்.

“ஈஸ்வரா” என்று அவனிடம் வேண்டி, துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டுமென்று, நாம் கேட்டறிந்த தீமையான உணர்வுகளை, ஆன்மாவிலிருந்து பிளக்க வேண்டும். இதுதான் நரசிம்மா.

அருள் ஞானியின் உணர்வை நமக்குள் சேர்த்து, தீமையைப் பிளந்து, உணர்வினை ஒளியாக்கி, மற்றவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

நஞ்சினை வென்றிடும் உணர்வினை நாம் வளர்த்தால், அங்கே செல்லலாம். இல்லையென்றால், எங்கே சென்று மோதுவோம் என்று தெரியாது. பிறருடைய பாசத்தால், வேதனையை உருவாக்கப்படும் பொழுது, தீமையின் நிலையே நமக்குள் உருவாகி, அந்தத் தீமையையே செயல்படச் செய்து, தீமையை ரசித்திடும் உணர்வுகள்தான் நமக்குள் வரும்.

இவ்வாறு, நமக்குள் சேர்க்கும் தீமையின் உணர்வுகள் அனைத்தும், நம் உடலுக்குள் உறைந்து விடுகின்றது. இவைகளைக் கரைத்தல் வேண்டும்.

இதைக் கரைக்க வேண்டுமென்றால், நமக்கு முன்  இருப்பதை அப்புறப்படுத்த வேண்டும். இதற்குத்தான் விநாயகர் சதுர்த்தியை மெய்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

நமது வாழ்க்கையில் யார் மீதெல்லாம் பகைமை கொண்டோமோ, நோயினால் வேதனைப்படுகிறார்கள் என்று யாரையெல்லாம் பாசத்தால் எண்ணி, அந்த வேதனையை நமக்குள் வளர்த்துக் கொண்டோமோ, அவ்வாறு  இணைத்துக் கொண்ட அதனின் உணர்வுகளும், பரமாத்மாவில் இருக்கும்.

நம்மிடம் உள்ள உணர்வுக்கு, உணவு இங்கிருந்து தான் கிடைக்கின்றது. இதைத் தடைப்படுத்த, விநாயகர் சதூர்த்தி அன்று காலை 4½ மணிக்கு எழுந்து, நீரிலே மூழ்கி உடல் அழுக்கைப் போக்கி விட்டு, அந்த சூரிய உதய நேரத்தில் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று, இந்த உணர்வை நமக்குள் வினையாக்க வேண்டும்.

பின், நாம் நோய்வாய் பட்டவர்கள் யார் யாரையெல்லாம் பார்த்து, நமக்குள் பதிவாக்கியிருந்தோமோ, அவர்களுக்கெல்லாம் இந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். பிணியிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும். மெய்ப் பொருளுடன் ஒன்ற வேண்டும். அவர்கள் மகிழ்ந்திடும் நிலைகள் பெற வேண்டும் என்று, நமக்குள் எடுத்து அவர்களுக்குப் பாய்ச்சவேண்டும்.

அதே சமயத்தில், யார் மீதெல்லாம் பகைமை உண்டானதோ, அவர்கள் குடும்பத்தில், மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். குடும்பம் நன்றாக இருக்க வேண்டும். தொழில்கள் வளம் பெற வேண்டும். அவர்கள், ஒன்றுபட்டு வாழும் நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணி, அதை நமக்குள் வினையாக்க வேண்டும்.

விநாயகர் சதுர்த்தி என்றால், “தீமையை உனக்குள் தடைப்படுத்து. அதைக் கரைத்து விடு” என்று சாஸ்திரத்தில் காட்டியது.

பகைமை கொண்ட நிலைகளை, நமக்குள் வளரவிடக் கூடாது.
நமக்குள் தெளிந்திடும் அறிவை ஊட்டும்
அருள் ஞானியின் உணர்வை, வினையாகச் சேர்க்க வேண்டும்.
இதுதான் மகரிஷிகள் காட்டிய நிலைகள்.
உண்மையின் நிலைகள் இதுதான்.

நாம் எந்த ஆலயத்திற்குச் சென்றாலும், அந்த அருள் ஞானிகளின் உணர்வைத்தான் வளர்த்திடல் வேண்டும். அந்தப் பேரானந்த பெருநிலை கண்ட, ஞானிகளின் அருள் உணர்வுகள் அனைவரும் பெற வேண்டும் என்று ஏக்க உணர்வுகளை, இங்கே சேர்க்க வேண்டும். அதை நமக்குள் வினையாக மாற்ற வேண்டும்.

பிறர் மேல் உள்ள பகைமையை எண்ணாது, அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவாத்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று,
இந்த உணர்வினை வளர்க்க வளர்க்க,
இந்த உணர்வின் தன்மை நமக்குள் வலுபெற வலுபெற,
நம்மை எண்ணும்போதெல்லாம்
கடும் ஆயுதமாக அவனை மாற்றும்.

இதை நூகர்ந்தான் என்றால், அவன் அறிவின் நிலையை மடக்கும். அந்த உணர்வின் தன்மையை ஒடுக்கும். அங்கே, தீமையின் நிலையை செயலற்றதாக மாற்றும்.

அவன் சிந்தித்தால், சிந்தித்த வினையின் தன்மை கொண்டு அவன் நன்மையடைவான். இல்லையென்றால், அவனுள் விளைந்த உணர்வுகள் அனைத்தும் ஒடுங்கி, அவன் பிறப்பின் உண்மையை, அவன் அனுபவித்துத்தான் ஆகவேண்டும். இதிலிருந்து யாரும் தப்ப முடியாது.

சந்தர்ப்பத்தால் வாழ்க்கையில் வரும் தீமைகளை, நாம் அடிக்கடி தூய்மைப்படுத்தல் வேண்டும்.
யாரும் குற்றவாளி அல்ல.
யாரும் தப்பு செய்ய நினைப்பதில்லை.

நாம் உடல் அழுக்கைப் போக்கி விடுகின்றோம். உணர்வுகளில் பட்ட அழுக்கைப் போக்க, ஞானிகள் காட்டிய முறையை நாம் கடைபிடித்துப் பழகிக் கொள்ள வேண்டும். ஆகவே, ஒவ்வொரு நொடிப்பொழுதும், அந்த ஞானிகள் காட்டிய முறைப்படி பிறரின் உணர்வுகள் நமக்குள் பதிவாகாதபடி, தடைபடுத்த வேண்டும்.
நாம் தீமையைப் பார்க்காமல் இருக்க முடியாது.
தீமை என்று உணரவில்லையென்றால்,
தீமையில் இருந்து விடுபட முடியாது.

தீமையை நாம் நுகரும்பொழுது, அதை ஜீவ அணுவாக மாற்றி விடுகின்றது நமது உயிர். அந்தத் தீமையின் உணர்வுகள், மீண்டும் மீண்டும் நமக்குள் வந்தே சேரும்.

அப்பொழுதெல்லாம், அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று, உயிரிடம் கட்டளையிட்டு, அந்த உணர்வின் தன்மையை, ஈர்ப்பின் தன்மை இல்லாது, துடைத்தல் வேண்டும்.

இந்த உணர்வை ஒட்டி வரும்போது தான், உங்களைக் காத்திடும் உணர்வு வளர முடியும். விஞ்ஞான அறிவால், காற்று மண்டலமே நச்சுத் தன்மை அடைந்துவிட்டது. ஆகவே, இந்த மெய்ஞானிகள் காட்டிய வழியில், இந்த நச்சுத் தன்மையைப் பிளத்திடல் வேண்டும்.

பல கோடி நச்சுத்தன்மையை, நாம் நுகர்ந்துள்ளோம். அதன் வழிகளில், அது நம்மை இயக்கும்.
அந்த நச்சுத் தன்மையை முறித்த
ஞானியின் உணர்வை நமக்குள் இணைத்து,
ஒவ்வொரு நொடியிலும் இதை நமக்குள் வளர்க்க வேண்டும்.
எமது அருளாசிகள்