ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 19, 2012

ஆஸ்த்மா, ஹார்ட் அட்டாக் நோய் வரக் காரணங்கள்

1. ஆஸ்த்மா நோய் வரக் காரணம்
நாம் மகிழ்ச்சியான நிலைகளை நம் எண்ணத்தில் வைத்தாலும், நாம் அடிக்கடி, “இப்படிப் பேசுகின்றானே, அப்படிப் பேசுகின்றானே என்று பிறர்பால் நம் எண்ணங்களைச் செலுத்திவிட்டால், புளிப்பின் சத்தை அடைந்து, நாம் அடிக்கடி எதைக்கண்டாலும், சலிப்படைந்து கொண்டே இருப்போம்.

அப்படிச் சலிப்டையப்படும் பொழுது உங்கள் உடலில் உமிழ்நீர் சுரக்கின்றது. மாங்காயை நீங்கள் வெயில் காலத்தில் சாப்பிட்டு இருக்கிறீர்களா? எச்சில் ஊறும், மாங்காய் என்று சொல்லும்பொழுதே, உங்களுக்கு எப்படி உமிழ்நீர் சுரக்கின்றது.

 இதைப்போலத்தான், நாம் அடிக்கடி சலிப்பு என்ற எண்ணங்களை எண்ணுவோமேயானால், சலிப்பான எண்ணங்கள்தான் இருக்கும். எதைக் கண்டாலும் சலிப்பாக இருக்கும். இருப்பினும் நாம் சுவாசித்த உணர்வுகள், அது சேர்ந்து உமிழ்நீராக அதிகமாகச் சேரும்.

அந்தச் சலிப்பான உமிழ்நீர்கள் அதிகமாகச் சேர்ந்தவுடனே, அடிக்கடி, “இப்படிச் செய்தானே என்ற கோப உணர்வுகளைத் தூண்டச் செய்யும்.

அந்தக் கோப உணர்வுகளைத் தூண்டச் செய்யும்பொழுது, சலிப்பால் ஏற்பட்ட உமிழ்நீர் உறையும் தன்மையாகின்றது. அது சளி போன்று கெட்டியாக மாறும்.

ஆக சளியாக மாறும் பொழுது,
இந்த சலிப்பின் தன்மை அதிகமாக,
அது உமிழ்நீரை அதிகமாக சுரக்கச் செய்ய,
சுரந்த உமிழ்நீர் உறையச் செய்ய,
உறைந்த நிலைகள் சுவாசப் பைகளில் உறைந்தபின்,
ஆஸ்த்மா போன்ற நோய் வரக் காரணமாகின்றது.

எவரொருவர் சலிப்பும், சஞ்சலமும், அதிகமாக எண்ணத்தில் எடுக்கின்றனரோ, அவர்களுக்கு இந்த உணர்வின் நோய் நிச்சயம்  வரும். நாம் தவறு செய்யவில்லை,

நாம் நமக்குள் எடுத்துக் கொண்ட உணர்வு ஆன்மாவாக மாறும் பொழுது, ஒரு குழம்புக்குள் புளிப்பை அதிகமாக போட்டால், அந்தப் புளிப்பின் சுவை இருப்பது போல, நமது ஆன்மாவில் புளிப்பின் சுவையே முன்னிலையில் நிற்கும்.

 இதைத்தான், விநாயக தத்துவத்தில் கணங்களுக்கு அதிபதி கணபதி என்று சொல்லுவார்கள். நமது உடலில் எத்தனை குணங்கள் இருந்தாலும், புளிப்பபான உணர்வை நாம் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால், நமது உடலில் இருக்கும் நல்ல குணங்களுக்கு எல்லாம் அதிபதியாகி, அடிக்கடி புளிப்பாகப் பேசுவதும், சலிப்பான நிலைகளைச் செயல்படுத்தும் நிலை வந்துவிடும்.

 அதே சமயம் சலிப்பின் தன்மை அதிகமாகும் பொழுது, நாம் சுவாசிக்கும் உணர்வுகள், ‘’மூஷிகவாகனா’’ நாம் எந்த குணத்தைச் சுவாசிக்கின்றோமோ. அந்த உணர்வின் சத்து அதிகமாக, அந்த புளிப்பான செயல்கள் செயல்படும் பொழுது, அந்த குணமான நிலைகள், இந்த உடலை அழைத்துச் செல்லும். இந்த உடலுக்குள் உணர்வுகளை இயக்கிக் காட்டும்.

அதனால்தான் ‘’மூஷிகவாகனா’’. எலி என்ன செய்கின்றது? ஒரு நிலத்திலே, தனக்கு வேண்டிய வீடு, வசதியாக ஏற்படுத்திக் கொள்கிறது. சமமாக இருக்கும் நிலத்தில், அது வளை அமைத்துக் கொள்கிறது. நிலத்தின் சமமான நிலைகளை அது மாற்றிவிடுகின்றது.

 இதைப் போல, நமக்குள் இருக்கும் குணங்கள் அனைத்தும், நாம் அடிக்கடி, சலிப்பு என்று புளிப்பான செயல்களைச் செய்வோமேயானால், நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களைச் செயலற்றதாக்கி, அந்த புளிப்பின் உணர்வுகள் வளை அமைத்துக்கொள்ளும்.

புளிப்பின் உணர்வின் தன்மை அடையப்படும் பொழுது அதிகமாகவே உமிழ்நீர் சுரக்கும், ஆஸ்த்மா போன்ற நோய்களும் வரும். வாயிலே ரணங்கள் வரும். சோறு சாப்பிட்டாலும், சாப்பிடமுடியாது. வயிறு நிறைந்த மாதிரி இருக்கும்.

அதே சமயம் கை, கால் குடைச்சல் வரும். நம்மை அறியாமலேயே, நமக்கு கோப உணர்வுகளைத் தூண்டும். ஆக மீண்டும் உமிழ்நீர் சுரக்கும், மீண்டும் அது உறையச் செய்யும். சளியின் தன்மை அதிகமாகும்.

நாம் தவறு செய்யவில்லை. எடுத்துக் கொண்ட உணர்வுகள் கணங்களுக்கு அதிபதி கணபதி என்பது போல, சலிப்பின் தன்மை அதிகமாக இருந்தால், எல்லா குணங்களுக்கும் அதிபதியாக இருந்து புளிப்பின் செயலை நமக்குள் செயல்படுத்தும்.

 நாம் இதை தெளிவாகப் புரிந்து கொள்வதற்காக விநாயக தத்துவத்தில் தெளிவாக காட்டப்பட்டுள்ளது, விநாயகருக்கு முன்னாடி, எலியைப் போட்டு (மூஷிகவாகனா) ஞானிகள் காண்பித்து உள்ளார்கள்.

நாம் அடிக்கடி சலிப்பான எண்ணங்களை எடுப்போமென்றால், அந்த புளிப்பான குணங்களே இந்த உடலை, வாகனமாக நின்று, இந்த உடலின் இயக்கமாக மாற்றிக் கொண்டிருக்கும், என்ற நிலையைத் தெளிவாகக் காட்டுவதற்குத்தான், விநாயக தத்துவத்தை ஞானிகள் தெளிவுற எடுத்துரைத்துள்ளார்கள்.
2. ஹார்ட் அட்டாக் (HEART ATTACK) வரக் காரணம்
 நமது உடலில் பல வகையான குணங்கள் உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாகச் செயல்படும்.

ஒருவர், அடிக்கடி கோபமான குணத்தைச் செயல்படுத்துவார். அது கணங்களுக்கு அதிபதியாகி விட்டால், அவர் உடலிலே
இரத்தக் கொதிப்பும்,
அடிக்கடி பிறரைத் தாக்கும் உணர்வுகளும்,
தன்னையறியாமலேயே, கோபிக்கும் நிலைகளும் வரும்.

ஒருவர், சாதாரணமாக எளிமையில் வேலை செய்து கொண்டிருப்பார். அவரைப் பார்த்தாலே கோபம் வரும். இந்த கோபத்தை அதிகமாக எடுப்பவர்கள், வீட்டில் யாரையாவது, ஏதாவது வாங்கிவரச் சொன்னால் ஓடவேண்டும், ஓடவில்லையென்றால்,
நடக்கிறான் பார், போகிறான் பார்,
சொல்வதைக் கேட்கின்றானா பார்என்று,
இப்படி தன்னை அறியாமலேயே இந்த உணர்வுகள் கணங்களுக்கு அதிபதியாகி இந்த உணர்வின் செயலை இது உருவாக்கும்.

 ஆக அந்த நிலைகளை நாம் எடுப்போமென்றால், நாம் எடுக்கும் உமிழ்நீர், நமது உடலில் கலந்து, கலந்த இந்த நிலைகள் நமது உடலிலே சேர்ந்தபின், இது  உடலிலே ரத்தமாக மாற்றும் பொழுது, இரத்தத்துடன் கலந்து, இந்த ரத்தத்துடன் கோப உண்ர்ச்சிகளை அதிகமாகத் தூண்டுகின்றது.

இந்த கோபம் வருவது, ஒன்று மட்டும் தனியாக இருப்பது இல்லை. கோபம் வந்துவிட்டால், இப்படிச் செய்கின்றானே என்று வேதனைப்படுவார்கள்.

வேதனை என்பது விஷம். வேதனை என்ற விஷமான உணர்வும், கோப உணர்வும் இரண்டும் கலந்து, இந்த உணர்வின் சத்து ரத்தமாக  மாறுகின்றது.

நமது இருதய வால்வு ரத்தத்தை உறிஞ்சி உடல் முழுவதும் பரப்புகின்றது. ரத்தத்தை உறிஞ்சும் இந்த பிஸ்டன், அது இழுத்து, சுவாசப்பைக்குள் அது பம்பு செய்து, மீண்டும் அது சிறுநீரகத்திற்கு அனுப்பும்.

சிறுநீரகத்திற்கு வந்தவுடனே அது ரத்தத்தில் உள்ள மாசுகளை சுத்தம் செய்யும். நாம் எடுத்துக்கொண்ட வேதனையான உணர்வுகள், இந்த வால்விலே உராயப்படும்பொழுது, அங்கே எரிச்சல் ஏற்படும்.

நமது காரமான எண்ணங்கள்,
கோபப்படவரின் உணர்வும், வேதனைப்பட்ட உணர்வும்
ஆக, இரண்டு உணர்வுகளும் கலந்தவுடனே,
எறும்பு கடித்தால், நமக்கு எப்படி வீங்குகின்றதோ,
இதைப் போல வேதனையான,
காரமான குணங்களின் உணர்வுகள் கலந்த,
ரத்தத்தை பம்பு செய்யும்பொழுது,
ரத்தம் வால்வுகளில் உராயப்படும்பொழுது,
வால்வுகள் வீக்கமடைந்து விடுகின்றன. 

அப்பொழுது, வால்வுகளில் சீரான இயக்கமில்லை ன்பதால், ஒரு பக்கம் பார்த்தவுடனே நெஞ்சு எரிகின்றது என்பார்கள். அந்த பக்கம் எடுத்தால், பளீர், பளீர் என்று மின்னும்.

உடலின் மற்ற பாகங்களுக்கு பம்பு செய்யும்பொழுது, இந்த நிலையை மாற்றி, மறு பக்கம் உறுப்புகளை மாற்றி அமைக்கும். இந்த வேளையில் வலி எடுக்க ஆரம்பித்துவிடும்.

வலி எடுக்க ஆரம்பித்தவுடனே, “ஹார்ட் அட்டாக்வந்துவிடுமோ என்று பய உணர்வுகள் அதிகமாக வந்துவிடும்.
நாம் எண்ணத்தால் எண்ணி,
சுவாசிக்கும் உணர்வின் தன்மை,
நம்மையறியமலேயே பல செயல்களைச் செய்விக்கும்.

 இதைப் போல வேதனையும், கோபமும் அதிகமாகிவிட்டால் வால்வின் நிலைகள் அதிகமாக வீக்கமாகிவிட்டாலும், அது எடுக்கும் ரத்தத்தை சுத்தமாக நிறுத்திவிடும்.

இதை இயக்கும் சிறுமூளையின் பாகமும். இதை இயக்க மறுக்கும். இவ்வாறு இயக்க மறுக்குமேயானால், உறுப்புகளில் சுவாசப் பைகளை அது செயல்படாது இறுக்கும்.

ஒரு நிமிடத்திற்குள் பளீர் என்று  மின்னியது போன்ற நிலையில், விரிந்த நிலைகள் மூடாது நிறுத்திவிடும், உடன் மூச்சு வெளியிலே போய்விடும்.

 நாம் எந்தெந்த குணங்களை எண்ணுகின்றோமோ, அவை அனைத்தும் சூரியனின் காந்த சக்தி கவருகின்றது. அந்த உணர்வின் சத்தாக நாம் எண்ணும்பொழுது,
எந்த குணத்தை எண்ணுகின்றமோ,
காற்றிலிருந்து தனக்குள் எடுக்கும் அதன் வழிகொண்டு, 
நமது உடலுக்குள் இந்த காந்தப்புலன்கள்,
மற்றொன்றுடன் உராயப்படும்பொழுதுதான்,
நாம் இயங்குகின்றோம்.

ஒரு மோட்டாருக்கு, மேக்னட் பவர் இருக்கப்படும்பொழுது, அதனைச் சுழற்றப்படும் பொழுது, இடைவெளி விட்டபின், அதனுடைய தன்மைகள் விட்டுவிட்டு இருந்தவுடனேதான், சுண்டி இழுக்கும் தன்மை பெறுகின்றது.

இதைப் போலத்தான், நாம் சுவாசிக்கும் உணர்வுகள்,
எந்த குணமானாலும்,
நாம் சுவாசித்த உணர்வுகள் உயிருடன் உராயப்பட்டு,
இந்த உணர்வுகள் நமக்குள் கரண்டை உற்பத்தி செய்வதும்,
நம் எடுத்துக்கொண்ட உணர்வின் சத்தை, உமிழ்நீராக மாற்றி,
நமது உடலுக்குள் மற்ற உணர்வுகளுக்கு ஆகாரமாக கொடுப்பதும்,
இவ்வாறு செயல்படும்.

நம் உயிருக்குள், நாம் இழுக்கும், இந்த சக்திகள் குறையப்படும் பொழுது, இதற்குள் இயக்கச் சக்தி குறைந்தால் நமக்குள் இருக்கக்கூடிய உறுப்புகள் அனைத்தும் செயலற்றதாகிவிடும்.

 இந்த ஹார்ட் அட்டாக்வரக்கூடியவர்களுக்கு, உயிரின் துடிப்பு மட்டும் இருந்து கொண்டே இருக்கும். நாடியைப் பார்த்தால் இன்னும் கொஞ்சம் துடிப்பு இருக்கின்றது, என்று சொல்வார்கள். 
3. வேதனையைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
உயிரின் துடிப்பு என்றும் அழிவது இல்லை. ஒரு மனிதன் தீயிலே குதித்தாலும், உயிரின் தன்மை நெருப்பிலே வேகுவது இல்லை. அந்த துடிப்பின் இயக்கமாகத்தான் இருக்கும், இயற்கையில் அது இவ்வாறு இயங்குகின்றது.

 நாம் யாரும் தவறு செய்யவில்லை, ஆனால் நாம் வாழ்க்கையில் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் இவ்வாறு ஆகிவிடுகின்றது.
ஆக இதைப் போன்ற நிலைகளிலிருந்து தப்ப,
நாம் அவசியம் தியானம் செய்யவேண்டும்,
ஒவ்வொரு நொடிப்பொழுதும்
ஆத்ம சுத்தி செய்யவேண்டும்,
வாழ்க்கையையே தியானமாக்க வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் நாம் சுவாசிக்கும், பலவிதமான குணங்களுக்குள்ளும், எல்லா உணர்வுகளுக்குள்ளும், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைச் சேர்த்து, அந்தப் பேரொளியை நமக்குள்ளும் வளர்த்து, நம் குடும்பத்தில் உள்ள அனைவரையும் பெறச் செய்ய வேண்டும்.

உலக மக்கள்  அனைவரும், இந்த நிலை பெற தியானிக்க வேண்டும். இவ்வாறு நாம், சிறுகச் சிறுகச் செய்து வந்தால், நாம் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில், இணைந்து வாழமுடியும். மகிழ்ந்து வாழமுடியும். பிறவியில்லா நிலை அடையமுடியும். அழியா ஒளிச் சரீரம் பெறமுடியும்.