ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 9, 2012

கோலமாமகரிஷி 1


 சாமி புத்தகம்   கோலமாமகரிஷி 1
(பக்கம் 6-13)
வலுகொண்ட மனிதன், தனக்குள் அந்த வலுவின் ஆற்றல் கொண்டு அரசு அமைத்தாலும், அரசுக்குள் வலுகொண்டவனிடத்தில் ஞானிகள் சிக்கினாலும், அரசனுடைய ஆணைப்படி, ஞானிகள் அடங்கித்தான் நடக்க வேண்டும்.

அரச காலங்களில், ஞானிகள் கொடுத்த நிலையை அருள்வழியிலே பக்குவப்படுத்தினாலும், இது தவறென்று ஞானிகள் சொல்ல முடியாது. அரசனை ஒத்துத்தான், மெய்ஞானிகள் பகுத்தறிந்து உண்மையைச் சொல்ல முடியும். அரசன் என்பது போக்கிரிதான். போக்கிரியாக இருப்பவன்தான் அரசனாக வர முடியும். மற்றவர்களை அடக்கி ஆட்சி செய்ய முடியும்.

சாதாரணமாக, ஒரு அணுவின் தன்மைக்குள் விஷத்தின் ஆற்றல் அதிகமாக இருந்துவிட்டால், அது படர்ந்து செல்லும் நிலைகளில், எத்தகைய நல்ல உணர்வின் சத்தையும் அது விழுங்கி விடும்.

அதைப் போன்று, அரசன் தனக்குள் ஆக்கிரமிக்கும் சத்தான, அந்த உணர்வின் வலுவான நிலைகள் கொண்டு, மற்றவர்களை அடக்கி ஆளும் அந்த ஆற்றல் அரசனுக்குண்டு. அவ்வாறு வந்தவர்கள்தான் அரசர்கள்.

ஒரு அணுவின் தன்மையில்,
தனக்குள் விஷத்தின் ஆற்றல் சேர்ந்துவிட்டால்,
மற்றதைத் தனக்குள் கவர்ந்து, தனக்குள் அடிமைப்படுத்தி,
அந்த உணர்வின் ஆற்றல், தனக்குள் எவ்வாறு செயல்படுகின்றதோ,
இதைப் போன்றுதான். மனிதனுக்குள் பலகோடி உணர்வின் அணுக்களின் தன்மை அதிகமாக இருந்தாலும், அந்த அணுக்களெல்லாம், அதை அடக்கி ஆளக்கூடிய, ஆற்றல்மிக்க விஷத்தின் உணர்வின் வேகமான உந்தலான சக்தி, ஒரு மனிதனுக்குள் அடங்கிவிட்டால், எதையும் கண்டு அஞ்சுவதில்லை.

அவன் எடுத்துக் கொண்ட உணர்வின் எண்ணத்தைப் பாய்ச்சப்படும்போது, மற்ற உணர்வுகள் அடிபணிந்தே தீர வேண்டும். சாதாரணமாக ஒரு உணர்வின் அலைகள் விஷத்தன்மையான நிலைகள் இங்கே அலைகளாகச் சென்றால், மாற்று அணுவின் உணர்வுகள் இவனுக்குள் எப்படி அடிமையாகிச் சிக்கித் தவிக்கின்றதோ, அதைப் போன்று மனித உடலுக்குள் ஊடுருவி, அவன் வளர்த்துக் கொண்ட உணர்வுகளுக்கொப்ப இவ்வாறு அதைச் செய்யும்.

அவ்வாறு வந்தவன் தான், அரசனாக ஆட்சி புரிய முடியும். எத்தகைய ஞானியாக இருந்தாலும், இவனைக் கண்டு அஞ்சித்தான் ஆக வேண்டும். இல்லையென்றால், அவன் உயிருடன் இருக்க முடியாது.

ஏனென்றால், அணுவின் தன்மை, ஒன்றை ஒன்று வென்றுதான் ஒன்று வலுப்பட்டு வந்தது. இது இயற்கையின் நியதி. மனிதனான பின்னும் அவ்வாறே.

ஏனென்றால், அந்த உணர்வின் இயக்கங்கள்தான்,
அது அவ்வாறு, எடுத்துக் கொண்ட உணர்வுக்குத் தக்கவாறு
தான் எடுத்துக் கொண்ட வெப்பமும், அதற்குண்டான ஈர்ப்பும்,
பல உணர்வின் ஆற்றல் கொண்டு
தான் சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப
அந்த அணுவின் ஆற்றல் மிக்க சக்தியாகத் தோன்றுகின்றது.
ஏற்கனவே, இதை யாம் சொல்லியிருக்கின்றோம்.

ஆரம்ப நிலைகளில் உயிரணுவாகத் தோன்றினாலும்,
அவ்வாறு தோன்றிய நிலைகள், பலவாறு ஒன்றை ஒன்று விழுங்கி,
அணுத்தன்மை வளர்ந்து, அதன் வழிகளில் கோளாகி,
கோளின் தன்மை ஆற்றல் பெற்று, நட்சத்திரமாகி,
நட்சத்திரத்தின் நிலைகள் சூரியனாகி,
அதனின்று விளைந்து, ஒரு பிரபஞ்சமாகி,
பிரபஞ்சத்திற்குள் ஒரு கோளாகி,
இந்தக் கோளுக்குள் மற்ற அனைத்தும் வடிக்கச் செய்து,
அதிலே உயிரணுக்களாகத் தோன்றி,
நம் பூமியான நிலைகள் கொண்டு, இதிலே உயிரணுக்கள் தோன்றி,
மற்ற கல்லும் மண்ணும் ஆவியாக மாறி,
தாவர இனச் சத்துக்களாக மாறி,
தாவர இனச் சத்தினுடைய ஆவிகளைச் சுவாசித்து,
உயிரணு அதனுடைய நிலைகளில் உட்கொண்டு, அதை வடித்து
அணுத்திசுக்களாக உயிரணுவாகத் தோற்றமாகி, மனிதனானபின்,
எப்படி சூரியன் ஒரு அணுவின் தன்மை பெற்று, சூரியன் ஆனதோ,
அதைப் போன்று, அந்தப் பிரபஞ்சத்திற்குள் தோன்றிய ஒரு உயிரணுவின் துடிப்பு, மற்ற உணர்வின் சத்தை எடுத்து, மனிதனாக வரும் பொழுது, எதையுமே அடக்கி ஆளும் சக்தி மனிதனுக்கு ண்டு.

ஆக, ஆரம்ப நிலையில் அணுவின் தன்மை பெற்ற நாம், மனிதனாகி வந்தாலும், அந்த சூரியனாகி வந்தாலும், சூரியனை அடக்கி ஆளும் சக்தி மனிதனுக்குண்டு.

அத்தகைய ஆற்றலின் தன்மை, எல்லாவற்றிலும் வடித்து, உணர்வின் இரசத்தின் தன்மையை வடிகட்டிய நிலைகள் கொண்டு, மனிதன் உருப்பெற்றான்.

அவ்வாறு உருப்பெற்றவனுடைய நிலைகளில், இவன் எண்ணத்தைச் சூரியனிடத்திலே பாய்ச்சி, இவனுடைய உணர்வலைகளை ஊடுருவச் செய்து, சூரியனையே திசை திருப்பவும், கோள்களைத் திசை திருப்பவும் ஆற்றல் பெற்றார்கள் அன்றைய மெய்ஞானிகள். அவ்வாறு பெற்றவர்தான் அகஸ்திய மாமகரிஷி.
(பக்கம் 14,15,30-33)
அகஸ்தியன், அவன் நம் தென்பகுதியில் தோன்றினாலும், இவனுடைய உணர்வின் நிலைகள் கொண்டு, பூமிக்குள் எங்கு சென்றாலும், இவன் விட்ட மூச்சலைகள்தான், மற்ற ஞானங்கள் தோன்றுவதற்கே காரணமாகின்றது.

அவ்வாறு மனிதனாகத் தோன்றி, இந்த உணர்வின் ஆற்றலைப் பெற்று, விண்சென்றவர்தான் “துருவ மகரிஷி” என்று பின் நாட்களில் அழைக்கப்பட்டவர்.

அகத்திய மகரிஷிதான் (“துருவ மகரிஷி”). தெற்கே தோன்றி,
தன் ஆற்றலின் தன்மை பெற்று,
அங்கே வடதுருவப்குதியில் எல்லை கொண்டு,
விண்ணிலே வரக்கூடிய ஆற்றலைத் தான் நுகர்ந்து,
தனக்குள் ஒளியின் சரீரமாக,
தனக்குள் ஆகாரமாக, தன் ஒளி சரீரமாக மாற்றி,
அதனின்று வரும், அதன் மூச்சலைகளாக
மனிதனாகத் தோன்றிய ஒவ்வொரு நிலைகள் கொண்டு உயிராத்மாவை, இனம் இனத்தை வளர்க்கும்.

இன்று ஒரு வித்தின் தன்மை, உதாரணமாக, ஒரு மாஞ்செடியை வளர்த்து விட்டால், அது மா இனத்தையே வளர்க்கும். அதே மாதிரி, புல் இனச் செடிகள் வளர்ந்துவிட்டால், தன் இனத்தை வளர்க்கும்.

இதைப் போன்றுதான் ஒரு மனிதனுக்குள் எல்லை கடந்த உணர்வின் ஆற்றல் வெளிப்பட்டுவிட்டால், அந்த உணர்வின் அலைகள், மற்றொரு மனிதன்பால் படும்போது, அந்த இனத்தை வளர்க்கச் செய்யும்.

கோலமாமகரிஷி, எல்லாம் வெறுத்துத்தான் தன் தத்துவத்தினுடைய நிலைகளை அத்வைதம், துவைதம் என்ற நிலைகள் கொண்டு, அவருடைய ஆற்றல் இந்த உலகம் முழுவதற்கும், இந்த ஆதிசங்கரர் என்ற நிலைகளில் அது வெளிப்படுகின்றது. நன்றாக கவனமாக வைத்துக் கொள்ளுங்கள்.

சூட்சம நிலையில் எடுத்துக் கொண்ட உணர்வின் அலையை, அது எவ்வாறு செயல்படுகின்றது என்ற நிலையில், ஆதிசங்கரர் ஆரம்ப நிலையில் எடுத்தவுடன் தன் தாயின் ஆற்றலைச் செயல்படுத்தும்போது,

அப்பொழுதுதான் பாடுகின்றார்,

“ஐகிரி நந்தினி, நந்திதமேதினி
விஸ்வ விநோதினி, நந்தினிதே”
ஒவ்வொரு அணுவுக்குள்ளும், ஐந்து அறிவின் புலனறிவுதான் அதாவது, ஒரு வெப்பகாந்தமும், அது எடுத்துக்கொண்ட உணர்வின் சத்தும், சேர்க்கப்படும்போது மூன்று.

ஆனால். ஒரு வெப்பத்திற்குள் மறைந்திருக்கக்கூடிய காந்தம், அது ஈர்க்கும் சக்தி (1), ஆனால் அந்த வெப்பத்தை உருவாக்கும் அணுவின் தன்மையை, அது பொருளைக் கொடுத்தவுடன்
உருவாக்கவும் செய்கின்றது.
அது மற்றதை மறைக்கவும் செய்கின்றது.

இப்பொழுது ஒரு மரத்திற்குள் வெப்பம் இருக்கும்போது,
அது உருப்பெறுகின்றது.
மரம், புவியின் ஈர்ப்பைவிட்டு நகர்ந்துவிட்டால்,
அதற்குள் இருக்கக்கூடிய சக்தியைக் காயச் செய்கின்றது.
ஆக இரு வேலைகளைச் செய்யும் (2,3).

ஆக நமக்குள் ஒரு உணர்வின் தன்மையை, மறைத்து, மாய்த்துவிட்டு, ஒன்றைத் தனக்குள் எடுத்து, அது வளர்க்கச் செய்யும். ஒன்றுடன் ஒன்று சேர்க்கப்படும்போது, ஒரு கருவின் தன்மை மாய்த்துவிட்டு, ஒரு சக்தியின் தன்மையை உருவாக்கும்.

இந்த வெப்பத்திற்கு - மூன்று சக்தி. அதைப்போன்று நாம் எந்தக் கோளின் தன்மையை எடுத்துக்கொண்டோமோ, இந்த உணர்வின் சக்தி, இந்த அணுவுக்குள் சேர்க்கப்படும்போது, இந்த அணுவின் தன்மை அந்த மணத்தை வெளிப்படுத்தும்(4).

அதே சமயம் அந்த உணர்வின் தன்மை ஒரு பொருளுக்குள், சேர்ந்தவுடன் இந்த உணர்வுகள் தூண்டப்பட்டு இயக்கும்(5) – ஆக – ஐந்து.
இதைப்போன்று மனிதனுக்குள் புலனறிவு - ஐந்து. அதுதான்,

“ஐகிரி நந்தினி, நந்திதமேதினி
விஸ்வ விநோதினி, நந்தினிதே”
என்று சொல்லும்போது ஐந்து புலனறிவுகள்.

நாம் சுவாசிக்கும் இந்த உணர்வின் தன்மைகள், எந்த குணத்தைக் கொண்டு சுவாசிக்கின்றோமோ, அதே உணர்வின் தன்மை, தன் உயிருடன் சேர்க்கப்படும்போது “விஸ்வவிநோதினி”,

ஐகிரி நந்தினி”. நம் உடலைச் சுற்றி வருகின்ற சுவாசத்தை நாம் சுவாசித்தவுடன், நாம் உயிரின் நிலைகளில் சுவாசித்து, நம் உயிரில் பட்டவுடன் அதே ஐந்து உணர்வுதான். “நந்திதமேதினி” “விஸ்வ விநோதினி”.

நாம் சுவாசித்த உணர்வின் தன்மை உயிரிலே பட்டு,
அந்த உணர்வின் தன்மை கொண்டு,
தனக்குள் செயல்படும் ஆற்றல் மிக்க சக்தி
சூட்சம நிலையின் தன்மையை,
அது எவ்வாறு விளைகிறதென்ற நிலையை,
தனக்குள் உள்நின்று,
அத்வைதத்தின் தத்துவத்தை அவன் (ஆதிசங்கரர்) ஒலிபரப்பி,
இயற்கையில், தான் எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தி,
எவ்வாறு உடலுக்குள் நின்று செயல்படுகிறதென்று உணர்த்தினான்.

அதாவது, சூட்சமமாக, மறைவான நிலையில் இருப்பது, அது பல உணர்வுகள் சேர்த்து ஒரு பொருளாகும்போது, திடப்பொருளாக எவ்வாறு ஆகின்றது என்ற இந்த உண்மையினுடைய நிலைகளைத்தான், கண்டு உணர்ந்தான் அன்று மெய்ஞானி, ஆதிசங்கரர்.

(பக்கம் 56-58)

உங்களை நீங்கள் காப்பாற்றாமல், சாமி காப்பாற்றுவார்! சாமியார் காப்பாற்றுவார்! ஜோசியம் காப்பாற்றும்! இயந்திரம் காப்பாற்றும்  என்று நினைக்க வேண்டாம், ஆக ஒன்றும் காப்பாற்றாது,

இந்த உடலிலும் சரி, இந்த உடலை விட்டுப் போனாலும் சரி,
உயிருடன் ஒன்றிய நிலையில் இந்த உணர்வைச் சேர்த்து, 
உயிர் வெளியிலே போனால்,
அவனுடன் ஒன்றி, அங்கே போக வேண்டும்,
அதற்கு நீங்கள் தயார் பண்ணிக்கொள்ளுங்கள்.

எமது குருநாதர் கஷ்டப்படச் சொன்னார். சரியென்று யாம் எமது நிலைகளில் எப்பொழுது வேண்டுமானாலும், எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும், எங்கு வேண்டுமென்றாலும் போய்க்கொள்ளலாம்.

ஆனால், அவர் இட்ட கட்டளை, “அனைவரது உயிரையும் கடவுளாக மதிக்கச் சொல்லி ருக்கிறார், உங்களிடமெல்லாம் வரம் கேட்கச் சொல்லியிருக்கிறார்”.

அதே மாதிரி,  நீங்கள் ஒவ்வொருவரும், “மகரிஷிகளின் அருளால், எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும், அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று வரம் கேளுங்கள்.  நீங்கள் ஆத்ம சுத்தி செய்யுங்கள்.

ஒருவர் கஷ்டப்படுகின்றார் என்றால், மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர் நன்றாக ஆகவேண்டும் என்று வேண்டுங்கள். அந்த உடலிலிருந்து நல்லது கிடைக்கும், அந்த உணர்வின் தன்மையில் நல்லது நடக்கும்.

உங்களுக்குப் பிடிக்காத நிலைகளில் இருக்கிறார்கள் என்று சொன்னால், விலகி நில்லுங்கள். அவர்கள் சங்கடத்தைப்பற்றி எண்ண வேண்டாம், விலகி நில்லுங்கள், அவர்களுக்கு நல்ல நேரம் வரட்டும் என்று சொல்லிவிடுங்கள்.
அவர்கள் இம்சை கொடுக்கிறார்கள்,
இம்சை கொடுக்கிறார்கள் என்று எண்ண வேண்டாம்,
இதை நீங்கள் செய்து பழகி வாருங்கள்.

நான் எப்படி உங்களை வேண்டுகின்றேனோ, அதைப்போல ஆத்ம சுத்தி செய்துவிட்டு, நன்றாக ஆக வேண்டுமென்று நீங்கள் சொல்லிப் பாருங்கள். இது உங்களுக்கு நன்மையைத் தரும். 

உங்களை யாராவது திட்டிகொண்டே இருந்தால், உடனே சொல்லுங்கள், “மகரிஷிகள் அருள் சக்தியால் அவர் அறியாமல் திட்டிக்கொண்டிருக்கும் எண்ணங்கள் மாறி, எல்லோருக்கும் நன்மை செய்யக்கூடிய எண்ணம் அவருக்கு வரவேண்டும்”. 

இவ்வாறு அவர் திட்டும் பொழுதெல்லாம், கேட்கும் பொழுதெல்லாம் இதைச் சொல்லிக்கொண்டே வாருங்கள்,
அவர் திட்டுவது உங்களுக்கு வராது.
நீங்கள் செய்வது அவருக்குப் போய்ச் சேரும்.

ஆனால் இப்படித் திட்டுகிறானே, இருக்கட்டும் பார்க்கிறேன் என்று சொன்னால், ஆத்திரம் கொஞ்சம் கொஞ்சமாக நமக்குள் வந்து, இரத்தக் கொதிப்பு, கை கால் குடைச்சல், தலைவலி போன்று நமக்குள் வர ஆரம்பித்துவிடும். இதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

(பக்கம் 62-65)
இன்னும் சில ஆண்டுகளில், நாம் எந்த நிலைகளில் இருப்போம் என்றே சொல்ல முடியாது. பக்கத்தில் நெருங்கிக் கொண்டேதான் இருக்கிறது. அதற்குள் நீங்கள் தைரியத்தைக் கூட்டிக் கொள்ளுங்கள்.

ஏனென்றால், விஞ்ஞானிகள் அணுகுண்டை எல்லாம் மண்ணுக்குள்ளும், கடலுக்குள்ளும், போட்டு வைத்திருக்கிறான். இன்று அவர்கள் மோப்பம் பிடிப்பது, அங்கிருந்து தட்டிவிட்டால் போதும். எங்கேயாவது இரண்டு ஊர் கடலுக்குள் போய்விடும்.

அணுகுண்டை கடலுக்குள் போட்டு வைத்திருக்கிறார்கள். மோப்பம் பிடித்து, ஏதாவது லேசரை அழுத்தம் கொடுத்தால், கம்ப்யூட்டரெல்லாம் தாறுமாறாக வேலை செய்ய ஆரம்பித்துவிடும்.

இப்பொழுது கம்ப்யூட்டரில்தான் பதிவு செய்து வைத்திருக்கிறான். ஒரு பாயிண்ட் தட்டினால் என்னவாகும் என்று, லேசரை ஏவி வைத்திருக்கிறான். இந்த மாதிரிக் கண்டுபிடித்து பூமிக்குள் ஒளித்து வைத்திருக்கிறான்.

நம் எண்ணங்கள் எப்படிப் பாய்கிறதோ, இதே மாதிரி மோப்ப நிலைகளில் ஊடுருவி, இதிலிருக்கக்கூடிய லேசர் கதிரியக்கத்தில் பாய்வது போல இருக்கிறது. அதை இவன் அழிப்பதற்கும் வழியில்லை.

கடலுக்குள் போட்டாலும், ஆவியாக வந்து சேர்ந்து விடுகிறது. என்னடா பண்ணுவது என்கிற வகையில் முழித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அளவில் நாம் இருக்கப்படும்போது, சுலபமான முறையில் செயல்படுத்த முயற்சிக்கிறான்.

அணுகுண்டில் பல வகைகள் இருக்கிறது. அது வெப்பத்தால் கடல் அலைகளாகப் பொங்கிவரும் கடலோரத்தில் இருக்கும் ரொம்ப ஊர்கள் கடலுக்குள் போய்விடும்.

இன்னும் சில ஆண்டுகளில் நடக்கப்போகிறது. அங்கே வெடிக்கிறது தண்ணீருக்குள் போகப்போகிறார்கள், இறந்துவிடுவார்கள். அது மேட்டிலிருந்து நாம் இந்த நிலைக்கு வந்தால், பிட்ஸ் வந்து ஜன்னி வந்துவிடும். எடுத்து தண்ணீர் கொடுப்பதற்குக் கூட, ஆள் இருக்காது.

கடைசியில், இன்று தென்னாப்பிரிக்காவில் என்ன செய்கிறார்கள் தெரியுமா? கெமிக்கல் விஷத்தைத் தூவி, செடிகொடிகளெல்லாம் அங்கே வளரவிடாதபடி செய்து வைத்துவிட்டு, அங்கு சாப்பாட்டிற்கில்லாமல் கஷ்டப்படுகிறார்கள் என்கிறார்கள்.

எந்தச் செடியும் வளராது, சாப்பாட்டிற்கு இல்லாதபடி கஷ்டப்படுகின்றார்கள், என்று உலகம் முழுவதும் தெரிந்தபின், இவன் பிழைப்பான், பிழைக்கமாட்டான் என்ற நிலைகளில், இவன் சாப்பாட்டிற்குக்கூட மார்க் போட்டுக் கொடுத்தார்கள்.

இவ்வாறு கொடுத்தால், 4,5 நாட்கள்தான் காப்பாற்ற முடியும் என்று வரிசைப்படுத்தி அனுப்பிக் கொண்டிருந்தார்கள். உலகம் முழுவதும் போட்டோ எடுத்துக் காட்டினார்கள், காட்டிக் கொண்ருக்கின்றார்கள்.

அந்த மாதிரி, நமக்கு மார்க் போடும் நிலை வந்துவிட்டது. இதில் யார், யார் மிஞ்சுவார்கள். அடுத்தாக, மார்க் போட்டு நீ இப்படிப்போ, நீ அப்படிப்போ என்று சொல்லும் நிலை வந்துவிட்டது.
இதிலிருந்தெல்லாம் நாம் தப்புவதற்கு.
நீங்கள் இந்த “சுவிட்சை”,
(துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும்)
உங்களிடம் சேர்த்துக் கொள்ளுங்கள். அதற்கென்று, உங்களுக்கென்று, யாம் சொல்ல வேண்டியதில்லை.

யாம் சொல்லும் முறைப்படிச் செய்தால்,
உங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு,
உங்களுக்குள் அந்த உணர்வு தோன்றும். அந்த நிமிடத்தில், உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். எமது அருளாசிகள்.

(பக்கம் 65-68)
கணவன் மனைவி இருவரும், அவசியம் இந்த தியானத்தைச் செய்யுங்கள். குழந்தைகளை அம்மா, அப்பாவை வணங்கிச் செல்ல பழக்கிவிடுங்கள்.

யாராவது நோயாளியைக் கண்டால், ஆத்மசுத்தி செய்துவிட்டு “உங்களுக்கு நோயில்லை” என்று சொல்லுங்கள். அந்த வீட்டில் இருப்போரை, இந்த மாதிரி தியானமிருக்கச் சொல்லுங்கள். அப்படிச் செய்தால், நீங்கள் வேறு எங்கும் போக வேண்டியதில்லை.

உங்களுக்கு நோயில்லை. “நீங்கள் நன்றாக விடுவீர்கள்” என்று சொல்லிக் கொண்டிருந்தாலே, அந்த நோய் விலகும். கேன்சர் முதற்கொண்டு விலகும் என்று யாம் சொல்கிறோம்.

இந்த மாதிரி நோய்கள் வந்துவிட்டால், வீட்டில் எல்லோரும் தியானமிருங்கள். “மகரிஷிகளின் அருளால் உங்களுக்கு ஒன்றுமில்லை. இதைச் சாப்பிடுங்கள், நன்றாகிவிடும்” என்று சொல்லிப்பாருங்கள். நல்லதாக இருக்கும்.

இப்படித்தான் உங்களை மாற்றிக் கொள்ளவேண்டுமே தவிர, வேறு வழியில்லை. இன்று டாக்டரிடம் மருத்துவத்திற்குச் சென்றால் கூட, காய்ச்சலுக்கு மருந்து கிடைக்கும். அடுத்தது இரண்டு டோஸ் ஊசி போட்டு, நிவர்த்தியாகிவிட்டால் நல்ல டாக்டர். உடனே நல்லதாகிவிடும்.

அடுத்ததாக, கைகள் குடைச்சலாகிறது, ஜாஸ்தியாகிறது, என்று போனவுடன்,
“டெஸ்ட் பண்ணுங்கள்.
உங்களுக்குச் சர்க்கரைச் சத்து இருப்பது போல் தெரிகிறதே” என்பார்கள்.

ஆக, இவர் கொடுக்கும் டோஸ், சர்க்கரைச் சத்தை, இரத்தத்தில் கலக்கக் கூடியதைப் பிரித்து வைத்துவிடும். இன்று சின்னக் குழந்தைகளுக்கெல்லாம், சர்க்கரைச் சத்து இருக்கிறதென்று சொல்கிறார்கள். நீங்கள் இதைப் பார்க்கலாம்.

உங்களை நீங்கள் நம்புங்கள். இவ்வளவு தூரம் சொல்கிறோம். ஏனென்றால், எமது குருநாதர் பைத்தியக்காரத்தனமாக இருந்தார். அதே போலத்தான், காட்டிற்குள் எம்மைக் கூட்டிச் சென்றார்.

பைத்தியக்காரத்தனமாக எமக்குச் சொல்லிக் கொடுத்தார். யாமும் பைத்தியக்காரத்தனமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்று, நீங்களும் பைத்தியக்காரத்தனமாக எண்ணிவிட வேண்டாம்.

பைத்தியக்காரத்தனமாக எண்ணாதபடி, இந்தச் சக்தியை நாம் பெறுவோம். நல்ல நிலைகள் பெறுவோம் என்ற நிலைகளில், நீங்கள் இந்த சக்தியைப் பெற வேண்டுமென்று எண்ணி உபதேசிக்கிறோம். இந்த நல்ல வாக்கைப் பின்பற்ற வேண்டுமென்று சொல்கிறோம்.

உலகம் எப்படி இருக்கிறதென்று தெரிகிறது. அதை மீட்பதற்குத்தான் இதைச் செய்கிறோம்.

ஆக நாம் அதை விட்டுவிடுகிறோம். நீங்கள் இப்படி இருங்கள் என்று சொன்னால், அப்படிச் செய்தால் நன்றாக இருக்குமென்று சொல்கிறார்கள். இவைகளெல்லாம்,
ஒரு அருள் வாக்கின் தன்மைகளில் ஊடுருவது,
சகஜமான வாழ்க்கையில் அறிந்து கொள்ளும்போது,
தப்பான முறையில், அபிப்பிராயத்தை எடுத்துக் கொள்கிறார்கள்.

ஏனென்றால், இவையெல்லாம் வாக்குகள் கொடுப்பது. கஷ்டப்பட்டு ஜெபம் எடுப்பதற்காக இல்லை. கஷ்டப்பட்டு ஜெபம் எடுத்து, சொர்க்கத்தை அடைவதில்லை.

நமது குருநாதர் எத்தனையோ கஷ்டப்பட்டு, வாக்குகளை உங்கள் மனதார இறுக்கச் செய்து, உணர்வுகளை பாய்ச்சச் செய்து கொண்டிருக்கின்றார்.

அப்படிப் பாய்ச்சிய, அந்த உணர்விலிருந்து நீங்கள் நல்லது பெற வேண்டுமென்பதற்காக வேண்டி, உங்களை அணுகி, தழுவி வருகிறோம். வேறு ஒன்றும் வேண்டியதில்லை. உங்களை பாசத்துடன் தழுவி வரப்படும் பொழுது, அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.

(பக்கம் 72-75)
யாம் சொல்லும் உபதேச நிலையை, சாமி சொன்னதில், அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பெறுகிறோம், என்று நீங்கள் எண்ண வேண்டும்.

உங்கள் உயிரைக் கடவுளாக மதியுங்கள். அந்த மகரிஷியின் அருள் ஒளியைப் பெற வேண்டுமென்று, அந்த நறுமணத்தை எடுங்கள். யாம் கொடுத்திருக்கக்கூடிய வாக்கு, அதாவது ஒரு அணு, ஒரு அணுவிற்குள் மோதி மோதித்தான், அணுவின் ஆற்றல் பெருகி, அதை வ்வளவு பெரிய மரங்களாகவும், செடிகளாகவும் வருகிறது.

பலகோடி அணுக்கள் ஒன்று சேர்த்து, இந்த மனிதனுக்கு எத்தனையோ கோடி. எண்ணமும் உணர்வும் வரவேண்டுமென்றால், பலகோடிச் சரீரங்களில் ஒவ்வொரு தந்திரமும், மற்ற நிலைகள் அத்தனையும் கடந்துதான், புலியாகவோ, நாயாகவோ, மாடாகவோ, குருவியாகவோ இருக்கும்போது,
இந்த சரீரத்தைக் காத்துக் கொள்வதற்காக வேண்டி,
அந்த உணர்வுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக,
அணுவிற்குள் அணுவைச் சேர்த்துச் சேர்த்து,
இந்த உணர்வின் அலைகள் கொண்டு, இந்த உடலாகி,
இவ்வளவு பெரிய மனிதனாக வந்திருக்கிறோம்.

இவையெல்லாம் யாம் லேசாகச் சொல்லவில்லை. எம்மை, குருநாதர் எறும்புப் புற்றின் மேல் உட்கார வைத்தார். தேள்களுக்கு இடையில், உட்கார வைத்தார்.

இன்னொரு எறும்பு இருக்கிறது. இந்த எறும்பு கடித்தால், பத்து எறும்பு கடித்தது போல் வீங்கிவிடும். அந்த எறும்புப் புற்றுக்குள் உட்கார்ந்து கொண்டு, எல்லாவற்றையும் தட்டிவிட்டுக் கொண்டு, அனைத்தையும் கடிக்கவிட்டுக் கொண்டு, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் மது குரு.

உயிருடன் இருக்கும்போது, உட்கார வைத்திருப்பார். எங்கிருந்துதான் எறும்பு வருகிறதோ தெரியவில்லை. கடித்து உடல் எல்லாமே வீங்கிவிட்டது.

இப்படியெல்லாம் கற்றுக்கொண்டு, அந்த உணர்வின் அலைகள் எப்படி வேலை செய்கிறது என்று உணரச் செய்தார், என்பதை உங்களிடம் சொல்கிறோம்.

ஏனென்றால், நம்மை அறியாமல் மனசு எவ்வளவோ கெடுகிறது.
எத்தனையோ நிலைகள் வருகிறது.
நாம் தப்புப் பண்ணவில்லை.
நம்மை அறியாமல் அந்த நிலை வருகிறது.

அதிலிருந்து மீட்டுக் கொள்வதற்கு, நம் குருநாதர் கொடுத்த அருள் வழியில், இப்படி மோதி மோதி, நல்ல உணர்வாக எடுத்து, இதை வாக்காகஆத்மசுத்தியும் செய்து கொள்ளுங்கள்.

இப்பொழுது, நீங்கள் உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது, உங்களை அறியாமல், உங்களுக்கு நன்மை பெறவேண்டும் என்றும், உங்களைக் கேட்க வைத்தும், உங்களுக்கு இந்த வாக்கைக் கொடுக்கிறோம்.

நீங்கள் நன்றாக இருப்பீர்கள். இதை நீங்கள் எடுத்துப் பழகுங்கள். நீங்கள் நன்றாக இருப்பீர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். அதனால், நீங்கள் இதைப் பேணிக்காத்துக் கொண்டீர்கள் என்றால், கொஞ்சம் நல்லதாக இருக்கும். நமக்கு நோயே இல்லை. கேன்சரிலிருந்து, எல்லா நோயையும் நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும். எல்லா நோய்களும் உங்களால் வந்ததுதான்.

ஆகையினாலே, இது லேசாகக் கிடைக்கிறது என்று அலட்சியப்படுத்தி விடாதபடி, எமக்கு, எமது குருநாதர் கொடுத்த அந்த உயர்ந்த ஆற்றலை, உங்களையெல்லாம், எமது குருநாதராக எண்ணிக் கொடுக்கிறோம்.

அவர் கடைசியில் எத்தனையோ வழிகள் கொண்டு, எத்தனையோ நிலைகள் கொடுத்து, இதையெல்லாம் செய் என்று செல்லும்போது, எல்லோரையும் குருநாதராகப் மதிக்கும்போது, அந்த மரியாதை எமக்குத் தனியாக வந்துவிடுகின்றது. அந்த நிலைகளை யாம் மதித்து. நெருங்கி வரும்போது, அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.

எமது குருநாதர் பைத்தியக்காரனாக இருந்த மாதிரி, மின் கம்பத்தில் கல்லைக் கொண்டு, தட்டிக் கொண்டிருந்ததை, “ஏன் சாமி தட்டுகிறீர்கள்என்று யாம் கேட்டோம்.

யாரடா கேட்டார்கள்? நீ தானே கேட்டாய், ஒரு பயலும் கேட்கவில்லை. நீ தான்டா கேட்டாய்”, “நீ பைத்தியக்காரப் பயலா?” என்று எம்மைக் கேட்டார்.

ஆகையினால், அந்த நிலைகளில் சிலவற்றை உங்களுக்குச் சொல்லுவதனாலே, நீங்கள் எல்லோருடைய நிலைகளிலும், உங்களை அந்த குருநாதனாக யாம் நினைத்து, உங்கள் அனைவருக்கும் அந்த நிலைகள் பெறவேண்டுமென்பது, மது குருநாதருடைய ஆசைகள்.

ஏனென்றால் அவர் விண்ணிலே ஒளி பெற்றவர். அங்கே ஒளி சரீரமாக இருக்கிறார். இன்று நாரதர் என்ற நிலைகளில் துருவ நட்சத்திரத்திலிருந்து வந்ததுபோல, நமது குருநாதர், விண்ணிlலிருந்து, அவர் பெற்ற ஆற்றல்மிக்க நிலைகள் வருகிறது.
அவருடைய அணுக்களின் நிலைகள் அணுகி வரப்படும் பொழுது,
அவருடைய சுழற்சியில் நாம் அனைவரும் ஒளியாகி நிற்போம்.
அவருடைய வட்டத்துக்குள் நாம் ஒளியாக நிற்போம்.
அவர்களை வைத்துத்தான், யாம் உபதேசிக்க முடியும்.

மேட்டூரில் கரண்ட் உற்பத்தி செய்கிறார்கள் என்றால், அதன் வழிகளிலேதான் லைட் போடுகிறோம். அதன் வழிகளில்தான், மோட்டாரை ஓட்டுகிறோம். அதன் வழிகளில்தான், நமக்கு வேண்டியதைச் செய்கின்றோம்.

ஆகையினாலே குருநாதர் எங்கேயோ இருக்கிறார் என்று எண்ண வேண்டாம். அவருடைய துணையை வரிசைப்படுத்தி, தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

(பக்கம் 84-89)
நாம் ஒவ்வொன்றும், நல்லது செய்ய வேண்டுமென்று எண்ணுகிறோம். அந்தக் காரியங்கள் தடைப்பட்டால், வேதனை அடைகின்றோம்.

வேதனை என்ற உணர்வுகளைச் சுவாசிக்கும்போது, நம் உடலில் எப்படிக் கடுகடுப்பு தோன்றுகிறது; சோர்வடைகின்றது. ஏதாவது சாப்பிட்டால் ருசி இருப்பதில்லை. சந்தோஷமாக யார் பேசினாலும், கேட்பதற்கு முடிவதில்லை.

நாம் அரும்பாடுபட்டு, பொருள்களை அதிகப் பணம் கொடுத்து, வாங்கி, அதைச் சேர்த்துச் சுவையான நிலைகளில் நாம் சமையல் செய்திருந்தாலும், வேதனையான உணர்ச்சியின் தன்மைகள், நாம் சுவாசித்த இந்த உணர்வுகள், நம் உமிழ்நீராக இருக்கும்போது, எவ்வளவுதான் சுவையான ஆகாரமாக அது இருந்தாலும், நாம் சாப்பிட்டால் உள் செல்லாது;

ஏனென்றால், அதற்கு எதிர்நிலை, காரமான உணர்வுகள் நமக்கு முன் நிற்கும்போது, இந்தக் காரமான உணர்வுகள் நமக்கு எதிர்மறையாகின்றது. அப்பொழுது, சாப்பிட்டாலே நமக்கு எரிச்சலாகும்.

அப்படியே கஷ்டப்பட்டு விழுங்கினாலும்,
இந்த உணர்வின் சத்து,
நாம் எடுத்துக் கொண்ட உமிழ்நீர் அது விஷமாகும்போது,
நாம் எடுத்துக் கொண்ட இந்தக் குணத்தின் சத்துடன் சேர்த்து,
நாம் உட்கொண்ட ஆகாரம் சத்தாக இருந்தாலும்,
அந்த உணர்வின் சத்து, நமக்குள் விஷமாக மாறுகின்றது.

அவ்வாறு, கடும் வேதனையான உணர்வுகளை நாம் சுவாசித்து, நாம் சாப்பிட்ட சத்தான ஆகாரத்திற்குள், அந்தச் சத்தின் தன்மை, நமக்குள் உமிழ்நீரின் தன்மை உருவாக்கக்கூடிய அந்த உணர்வின் நிலைகள், நம் உடலுக்குள், விஷமான அணுத் திசுக்களாக மாற்றிவிடுகின்றது.

ஆக, அது இரத்தத்தோடு கலக்கப்படும்போது, அந்த ஆற்றல் மிக்க நிலைகள், நம் உடல்களில் அந்த அணுக்களாக, இரத்தங்களிலேயே அணுத்திசுவாக மாற ஆரம்பித்து விடுகின்றது.

ஒன்று, நம் இரத்தத்திற்குள் கலக்கும் பொழுது, “இரத்தக் கேன்சர்” அதாவது அதிகமாகச் சேர்ந்துவிட்டால், அணுத்திசுக்களாக இரத்தத்திற்குள்ளேயே விளைய ஆரம்பித்துவிடுகிறது.

ஆனால் அதே சமயம், கடும் வேதனையினுடைய நிலைகளை நாம் எடுத்துக் கொண்டு, அதீதமான நிலையில் ஒரே நிலையான எண்ணங்கள் கொண்டு, அதிகமான நிலைகளில் நாம் சத்தான ஆகாரத்தைப் புசித்திருப்போம் என்றால், இந்த வேதனையின் உணர்வின் சத்துக்கள், உடலில் உபத்திரவம் செய்து, இந்த உடலின் நிலைகள், இரத்தத்தில் அணுத்திசுக்களாக மாறிவிடும்.

அப்படி மாறிவிட்டால், இது சுழலும் வேகம் கொண்டு,
அங்கே அது முடங்கி,
நாம் அமர்ந்திருக்கும் நிலையில் சாய்ந்தோ, அல்லது உராய்ந்தோ,
அல்லது நாம் தொழில் செய்யும் பொழுது, (ஒரே நிலையில்)
நாம் மடக்கும் நிலைகள் கொண்டு,
மூச்சை அதிகமாக மடக்கும்போது,
அந்த அணுவின் தன்மை அங்கே தேங்குகின்றது.

அப்படி அங்கே தேங்கி, ஆழமாகப் பதிந்து அந்த அணு தன்னிச்சையாகவே, தன் உணர்வின் சத்துக்களை, நாம் எப்படி வேதனைப்பட்டோமோ, அதைப்போன்று தேங்கிய நிலைகள் கொண்டு, அது உருப்பெற்று, அதனில் தன் வளர்ச்சி கொண்டு, அங்கே விஷமான தன்மைகள் கொண்ட அணுத்திசுக்கள், வளர்ச்சிப் பெற தொடங்கிவிடும்.

இதுதான் “கேன்சர்”. அது வளர்ச்சி பெற்றபின், தன் இனத்தின் தன்மையைக்கூட்டி வளர்க்கச் செய்துவிடும். அதைத் தடைப்படுத்துவதற்கு மருந்தே இல்லை.

நாம் பார்க்கின்றோம், மகிழ்ச்சியாக இருக்கின்றோம். ஆனால், இதைப் போன்ற நிலைகள் நமக்குள் தூண்டிவிடும். இதைத்தான்,
சிலபேர், அதீதமான மகிழ்ச்சி கொண்டிருந்தும்,
மகிழ்வான நிலைகளில் அதிக ஆகாரங்கள் சாப்பிட்டு,
சத்தான நிலைகள் இருக்கும்போது,
எதிர்பாராத பாசத்தினால்
ஒருவர்பால் அன்பை அதிகமாகச் செலுத்திக் கொண்டிருக்கும்போது,
அவர்படும் துயரமான எண்ணத்தையும்,
அந்த உணர்வுடன் நாம் கலந்து,
நாம் துயரமான எண்ணங்களை எடுத்து,
நாமும் வேதனையாகச் சுவாசிக்கும்போது
சுவாசித்த அந்த வேதனையான உணர்வுகள்
முதலிலே நமக்கு ஒன்றும் தெரியாது.
ஆனால், அந்த உணர்வின் சத்துக்கள் நம் ஆகாரத்துடன் கலந்து அது “கேன்சராக” மாறுகின்றது. இதைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஒருவர் வேதனையால் இருக்கப்படும்போது, அவர் சுவாசித்தது வாத நோயாக இருக்கலாம் அல்லது வாத முடக்கமாக இருக்கலாம். ஆனால், பித்த விஷ நீராக அதிகமாகக் கவர்ந்ததனாலே, அதனுடைய தன்மைகள் மற்ற உணர்வின் உறுப்புக்களை இயக்கக்கூடிய நிலை வரும்போது, அது பட்டவுடன் அது செயலிழக்கச் செய்து, கை, கால்களை முடக்கச் செய்கிறது.

அவர் முடங்கியிருப்பதை இன்னொரு திடமானவர், பாசமான நிலைகளில் எண்ணிப் பார்க்கப்படும்போது, அதனின் உணர்வுகள், இவன் மகிழ்ச்சியான ஆகாரங்களின் சத்தை எடுத்துக் கொண்டாலும், தொழிலின் நிமித்தம் இவர் வேதனையான நிலைகள் செயல்பட்டு, இந்த வேதனையான மூச்சின் திணறல் கொண்டு, இந்த வியாபாரத்தில் யாருடன் தொடர்பு கொண்டு பேசினாலும், இந்த உணர்வுகள் மற்றொருவருடன் கலக்கப்படும்போது, அங்கே அந்த வேதனையை உருவாக்கிவிடும்.

ஏனென்றால், இவர் சங்கடமாக இருக்கும்போது, ஒரு பொருளை எடுத்து, அதை விலை பேசிச் சொல்லி, கொடுத்தால் போதும். இந்தச் சங்கட உணர்வுகள் கேட்போருடைய செவிகளில் கேட்கப்பட்டு, இதே உணர்ச்சிகள் உந்தி, அந்த உணர்வின் அலைகள் அவர் புலனறிவிலே படும் பொழுது, அவர் கொடுக்கும் சரக்கை நீங்கள் பார்த்தவுடன், அச்சமயம் மட்டரகமாகத் தெரியும்.

அப்பொழுது, அந்த  உணர்வுகள் மாறுபடும் பொழுது, இந்தச் சரக்கு நல்லதாக இருந்தாலும் அது வியாபரமாகவில்லை என்றால், அங்கே வேதனை. இங்கே யார் மேல் பாசத்தால் இருந்தாரோ, அந்தப் பாசத்தில், அவர் எடுத்துக் கொண்ட இந்த வேதனையும் விஷமே.

இந்த விஷத்தின் தன்மையுடைய நிலைகள், அவர் எடுத்துக் கொண்ட இந்த உணர்வின் ஆற்றல்தான், இவர் உடலில் சேர்க்கப்படும் பொழுது, இந்த உணர்வின் தன்மைகள் அங்கே நஞ்சாக மாறி, இவருக்குக் கேன்சராக வருகின்றது.

இதைத்தான், நம் ஊர்களிலே “மாரித்தாய்” என்று சொல்வது. மாரியம்மன் என்ற நிலைகளில் ஒவ்வொரு இடங்களிலும் வைத்து, நாம் பூஜிப்பதைக் காணலாம். 

ஆகவே, நாம் பிறர் மேல் எந்தப் பாசத்தின் நிலைகள் தொடங்குகின்றோமோ, அந்தப் பாசத்தால் ஈர்த்துக் கொண்ட உணர்வுகள், பிறர் உடலிலே இருக்கக்கூடிய உணர்வின் தன்மைகள் நம் உடல்களிலே சேர்க்கப்பட்டு, அந்த உணர்வின் தன்மைகள் நமக்குள் மாறுகின்றது (மாரி)

மாறிய நிலைகள் கொண்டு, நாம் எந்தெந்த குணங்கள் எடுக்கின்றோமோ, அந்த உணர்வின் சக்தியாக நமக்குள் விளைகின்றது என்ற இந்தப் பேருண்மையினுடைய நிலைகளை உணர்த்துகின்றனர் ஞானிகள்.

அதாவது, நம் உடலில் விளையும் சக்தியும், நாம் எடுத்துக் கொண்ட உணர்வாலே, நம் உடல்களில் எப்படி அந்தச் சக்திகள் இயங்குகிறது? என்ற நிலையைத்தான், நமக்குள் உள்ளிருந்து இயக்குவதை, புறத்தாலே காட்டுகின்றனர் மெய்ஞானிகள்.

அந்தச் சக்திகளின் இயக்கத்தை, தெய்வம் என்று பெயரை வைத்து, அந்த உணர்வின் குணங்களுக்கு, செயல்கள் எவ்வாறு இருக்கிறது/ என்று அன்று மெய்ஞானிகள் காட்டினார்கள்.


(பக்கம் 90-93)
அன்று ஒன்றுமறியாத விஷத்தன்மை கொண்ட சாதாரண (ஒரு மனிதன்) ஒரு மீனவன் தான், அவனுடைய சந்தர்ப்பம்தான் அலைகடலிலே சென்று அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் அந்தச் சூழ்நிலையில், தான் எந்தெந்த மீனைக் கொன்று, விழுங்கினானோ, அதனால் அவன் மகிழ்ச்சி பெற்றான்.

ஆனால், அதே சமயம் மகிழ்ச்ச்சிகுண்டான நிலைகளில் அவன் கடலுக்குள் படகில் செல்லும் பொழுது, புயலால் தாக்கப்பட்டு,
அவனுடைய சந்தர்ப்பம் அந்தப் படகிலிருந்து வீழ்ந்து,
கடல் அலைகளிலே சிக்கி,
தான் ஜீவிக்க வேண்டிய இந்த உடலை,
தான் மீள வேண்டுமென்ற உணர்ச்சியைத் தூண்டி
இந்தப் பயத்தாலே தான் உயிர் வாழ
எண்ணத்தை ஓங்கிச் செலுத்துகின்றான்.

அவ்வாறு, அவன் ஓங்கிச் செலுத்தினாலும், கடல் அலைகளிலிருந்து மீள்வது கடினம். ஆனால், எத்தகைய மீனை அவன் வேட்டையாடினானோ, அதே இன மீன் இவனைக் கரை சேர்க்கின்றது.

இன்று நிலத்தில் வாழும் உயிரினங்களுக்குள், மனிதனுக்கு எவ்வளவு பெரிய ஆற்றல் உண்டோ, அதைப் போன்று, நீர் வாழும் உயிரினங்களுக்கு உண்டு.

சில மீன்களுக்கு, பிறருக்கு உதவி செய்யும் தன்மைகள் அதற்கொரு  உணர்ச்சிகள் உண்டு. அத்தகைய ஒரு மீன், இவன் பரிதவிக்கும் நிலைகள் கொண்டு, இவனைக் கரை சேர்த்து, இவனுடைய உணர்ச்சியுடன், அணைத்து, இவனைக் கரை சேர்க்கின்றது.

தான் எந்த மீனைக் கொன்று புசித்தோமோ, அது தன்னைக் காத்தது என்ற நிலைகள் கொண்டு, அதன் மேலே நினைவைச் செலுத்துகின்றான்.

ஆனால், அந்த மீனோ, இவனைக் காக்கும் உணர்ச்சிகளை உந்தியது. இவன் காக்கும் எண்ணத்தை எண்ணி, அவன் பயத்தின் வேகத்தின் நிலை வரும்பொழுது, அவனுடைய எண்ணத்தின் நிலைகள் அதிகமாக ஓடுகிறது.

ஏனென்றால், இந்த உடலில் நின்று, உயிருடன் இந்த உடலிலே இருக்க வேண்டும். இந்த உடலைக் காக்க வேண்டும் என்ற உணர்ச்சியைத் தூண்டி, அந்த உணர்வுக்குள், உயிருக்குள் அதிகமாகச் செலுத்தி, அந்தத் துடிப்பின் வேகமாகக் கூடும் பொழுதுதான், உடலுக்குள் அவயங்கள் அதிகமாகத் தூண்டுகின்றது.

ஆனால், இவன் காக்கும் தன்மை வரும் பொழுது, இன்னொரு உயிரினங்களைக் காக்கும் உணர்வுகள் சேர்த்து, இந்த உணர்வுக்குள்ளும் காக்கும் உணர்வு கொண்டு, “ஆ” என்று காத்துக் கொண்டோம் என்ற உணர்வின் தன்மை கொண்டு, விண்ணை நோக்கி ஏகுகின்றான்.

அகஸ்தியன், தான் துருவ நிலைளில் சென்று, அவன் துருவத்தின் நிலைகள் கொண்டு தனக்குள் பெற்ற நிலை. அதுதான் துருவ மகரிஷி என்று பெயர் பெற்றது. மனிதனாக நின்று, அவன் உணர்த்திய அந்த நிலைகள், இன்று துருவ நட்சத்திரம் என்று சொல்கின்றோமே, அவன் துருவ மகரிஷி.

ஆக, அதிலிருந்து வெளிப்படும் உணர்வின் ஆற்றல், விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பெற்று, மனித உடலிலிருந்து உணர்வை ஒளியாக மாற்றி, விண்ணில் இருந்து வரும் உணர்வின் அலையைத் தனக்குள் ஒளியலைகளாகச் சேர்க்கும் ஆற்றல்மிக்க நிலையைப் பெற்று, அந்த உணர்வின் ஆற்றல்மிக்க நிலைகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

அப்படி, வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் துருவ மகரிஷியின் உணர்வுகளைத்தான், இந்த மீனவன் (வியாசகன்), விண்ணை நோக்கி ஏகும் பொழுது, தன் உணர்வின் தன்மையாலே நுகர்ந்து, அந்த உணர்வின் தன்மை தனக்குள் அறிந்தது என்று, பேரண்டத்தின் பேருண்மை நிலைகள் வெளிப்படுத்தினார், வியாசகர்.

அன்று வியாசகர், வானஇயலின் தத்துவத்தை, “நாரயணா” என்று காட்டினார். அந்த நாராயணனின் தத்துவத்தை, ஆதிசேஷன் என்ற நிலை வரும் பொழுது விஷம். ஆனால், ஆதிசேஷன் மேல் பள்ளிகொண்டான் ஸ்ரீமன் நாராயணன்.

அப்படியென்றால், சூரியன் விண்ணிலே தோன்றிய விஷத்திற்குள், அது தனக்குள் சுழன்று எடுத்து, ஆற்றல்மிக்க சக்தியாக, சூரியன் விஷத்தின் அலைகளிலேதான் சுழன்று கொண்டிருக்கின்றது.

இந்த “Ultra violet” என்னும் விஷமான பொருளுக்குள்தான், சூரியன் சுழன்று கொண்டு இருக்கின்றது.
அது வெளிப்படுத்தும் அலைகள்,
அது பிரபஞ்சத்திலே அந்த அலைகளின் மோதல்தான்,
விஷங்களை மாய்த்து,
தான் தூய்மையான நிலைகளாக,
சிருஷ்டிக்கும் நிலைகள் கொண்டு,
உருப்பெறும் சூரியனாக இங்கே திகழ்கின்றது.
(பக்கம் 105-108)
நாம் நகை செய்யும்போது பித்தளையும், செம்பும், பொடி செய்து வைத்து இவை இரண்டையும் நெருப்பில் காட்டியவுடன், அந்த தங்கச் செயின் ஒன்றாக ஒட்டிக் கொள்கின்றது.

வெறும் தங்கத்துடன் தங்கத்தை வைத்து, செயினாக செய்ய வேண்டுமென்றால் முடியாது. இரண்டிற்கும் ஒரு அளவான சூடு வேண்டும்.
ஆக வெள்ளியும், செம்பும் கலந்து வைத்தவுடன்
இது சீக்கிரம் சூடாகிக் கரைந்து, இத்துடன் போய் ஒட்டிக் கொள்கிறது.

அதைப்போல, நமக்கு நல்ல மனது எவ்வளவு  இருந்தாலும், நல்ல மனது கொண்டே, நம்மைக் காப்பாற்ற முடியாது.

நாம் நல்ல மனதுடன் போய்க் கொண்டிருக்கிறோம். எதிர்புறம் ஒரு மாடு, பயத்தினாலோ, அல்லது வேறு காரணத்தினாலோ, மிரண்டு ஓடி வருகிறது. அப்பொழுது அது வெளிப்படுத்தும் மூச்சலைகளை நாம் கண்ணிலே பார்த்தவுடன், அந்த உணர்வை நாம் சுவாசிக்க நேருகிறது.

அது எதைக் கண்டோ பயந்து, மிரண்டு தன்னையறியாமல் கட்டுக் கடங்காமல் ஓடி வருகிறது. அப்படி ஓடி வரும்போது, நம்மீது மோதினால் என்ன ஆகும்? நம் உயிருக்கே ஆபத்து. நம் வாழ்க்கையைச் சரிபடுத்த முடியாது.
அப்பொழுது அந்த மாடு வெளிப்படுத்தும் மூச்சலைகளை,
நம் கண் புலனறிவு ஈர்த்து உயிரிலே பட்டவுடன்,
அது வேகமாக நமக்குள் பயத்தை ஊட்டி
மாடு மிரண்டு வருவதிலிருந்து, நம்மைத் தப்பிக்கச் செய்கின்றது.
அப்பொழுது வாழ்க்கை என்கிற செயின் ஒழுங்காக இருக்கிறது.
இல்லாவிட்டால் நம் வாழ்க்கையில் நல்ல குணத்தை,
நல்லது எண்ணியதைக் காப்பாற்ற முடியாது.

இந்த உடலில், உயிர் இருக்கும் வரைக்கும்தான் செயல்படுத்த முடியும். இந்த உயிர் போய்விட்டால், ஒன்றுமே இல்லை. ஆக இந்த உடலுக்குள் இருந்து, உயிர் இயங்க வேண்டுமென்றால் உடல் நலமாக இருக்க வேண்டும்.

அந்த மாடு மிரண்டு ஓடி வரப்படும்பொழுது, அந்த உணர்வுகள் பட்டுத்தான் நம்மைக் காப்பாற்ற முடியும். ஆக நம் உடலைக் காப்பாற்றிக் கொள்கிறோம். அதே சமயம் பயமான எண்ணங்களை, நாம் சுவாசித்து, நம் உடலுக்குள் சேர்த்துக் கொள்கின்றோம்.

நாம் செம்பும், வெள்ளியும் சேர்த்து தங்கத்துடன் ஒட்ட வைக்கும்போது, இரண்டும் அதனுடன் கலந்துவிடுகின்றது. மறுபடியும் நெருப்பில் போட்டு உருக்கினாலும்,. இவை இரண்டும் கலந்தேதான் இருக்கும்.

நீங்கள் அடிக்கடி அழித்து அழித்து
பற்றவைத்துக் கொண்டே இருந்தால்,
செம்பும் வெள்ளியும்தான் தேறும்,
கடைசியில் தங்கம் குறைந்து போகும்.
இதே மாதிரி, நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையில், கொஞ்சம் கொஞ்சமாக நம்மைப் பாதுகாக்கும் எண்ணத்தை, எடுத்து எடுத்து, நாம் இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு சரீரமாக மாற்றி, எல்லாத் துன்பத்தையும் துடைக்கக் கூடிய, ஆற்றல் மிக்க சக்தியாகப் பெற்றது இந்த மனித சரீரம்.

அவ்வளவு உயர்ந்த தங்கத்தைப் போல, சுத்த தங்கத்தைப் போல, அதே மாதிரி புழுவிலிருந்து மனிதனாகத் தோன்றும் வரையிலும், அந்த உயர்ந்த சக்தியின் நிலைகளை, நமக்குள் தங்கமாக வைத்திருக்கிறோம்.

வாழ்க்கை என்கிற நிலைகளில் ஒவ்வொரு நிமிடமும்,
பயம், ஆத்திரம் எல்லா நிலையும் வருகிறது.
இவை எல்லாம் பித்தளை, செம்பு, வெள்ளி போன்றவை,
அடிக்கடி இவை நம் உடலில் சேர்ந்துவிட்டால்,
நம் உயிரான வெப்பம், இவையெல்லாம் சேர்த்துக் கலந்து கொண்டே, போய்க் கொண்டிருக்கும்.

நல்ல மனதாக இருப்போருக்கு, இப்படி ஆகிறது. இன்று நல்லதைப் பற்றி எண்ணுகிறோம். அடுத்து, பிறருடைய தப்பான நிலைகளைப் பார்த்துவிட்டால், அந்த உணர்வு வந்து, அதையும் நாம் சேர்த்துக் கொள்கிறோம். இப்படி, நம் நல்ல குணத்தை அழித்து விடுகின்றது. இதை நாம் சுத்தப்படுத்த வேண்டுமல்லவா!

வாழ்க்கையில் எப்படி இருந்தாலும், குறையில்லாமல் நாம் வாழ முடியாது. நாம் ரோட்டில் போகும்போது, குறையான நிலைகளை நாம் பார்க்காமல் இருக்க முடியாது. யாராவது சண்டை போடுகிறார்கள் என்றால், அதைப் பார்க்காமல் இருக்க முடியாது.

இருவர் சண்டை போடும்போது, யார், எதற்கு? என்கிற வகையில் நாம் கேட்போம். “சும்மா போய் கொண்டிருக்கும்போது அடித்தான், உதைத்தான், அடித்து ரொம்பக் காயமாகி விட்டது” என்று சொல்வார்கள்.

“அடப் பாவிப்பயல், இந்த மாதிரி அடித்தானே”, என்று நமக்குள் பயமும் ஆத்திரமும் கோபமும் வருகிறது. ஏனென்றால் அந்த உணர்வுபட்டு, அதற்குத் தகுந்த எதிர்மறை நமக்குள் உருவாகிறது.

அப்பொழுது நாம் அதை சுவாசிக்கும்போது, உயிரில் பட்டு உணர்வு, உமிழ்நீராக மாறுகிறது. நம் உடலில் சேர்ந்து விடுகின்றது. ஆக அதைத் துடைக்க வேண்டுமல்லவா?

இவையெல்லாவற்றையும் துடைப்பதற்காகத்தான், யாம் “ஆத்ம சுத்தி”  என்ற ஆயுதத்தை உங்களுக்கு இலகுவாகக் கொடுக்கின்றோம். வாழ்க்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதும், அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருளாற்றலை நமக்குள் சேர்த்துக் கொண்டே, அதனுடன் ஒன்றியே நாம் வாழவேண்டும். எமது அருளாசிகள்.

(பக்கம் 111-116)
யாம் கொல்லூரில் இருக்கும்போது, மழை அதிகமாகப் பெய்து கொண்டிருக்கிறது. ஆறு மாதங்கள் மழை பெய்யும். குறைந்தது, இரண்டு மூன்று மாதங்கள், விடாது மழை பெய்யும்.

இங்கு கார்த்திகை மாதம் மழை பெய்வது போன்று, அங்கு ஆடி மாதம் விடாது மழை பெய்யும். யாம் அமர்ந்து கொண்டு, மழையில் நனைந்து கொண்டே இருக்கவேண்டும். குருநாதர் சொன்னதை எல்லாம், யாம் செய்து கொண்டிருக்க வேண்டும்.

எம்மை அட்டைப்பூச்சி கடித்து, இரத்தம் போய்க் கொண்டிருக்கின்றது. மழை நீர் எனது மேலே பட்டதற்கும், இந்த இரத்தத்திற்கும், இரத்தத்தில் குளித்த மாதிரியாகி விட்டது. அட்டை கடிப்பது தெரியாது.

இரத்த வாசனை வருகின்றது. புலி சும்மாவா இருக்கும். இரத்த வாடை வந்தவுடன், அது மோப்பம் பிடித்து, “கிர், கிர்…” என்று சுற்றி வருகின்றது.

இதை குருநாதர் எம்மைப் பார்க்கச் சொல்கிறார். வாசனையை நுகர்ந்து, அது சுற்றிச் சுற்றி வருகின்றது. எம்மை அட்டை சாப்பிட்டது. குடித்துவிட்டு, இரத்தம் வெளியிலே போகின்றது.

ஆக வாசனையைக் கண்டு கொண்டு, இந்தப் புலி வருகின்றது. அது, சுற்றிச் சுற்றி வந்து நிற்கின்றது. குருநாதர் எம்மை எழுப்பிவிட்டு, பாதுகாப்பாக இருந்து, அந்த உணர்ச்சியினுடைய நிலைகளையும், வேகத்தையும், எண்ண அலைகளையும், கவனிக்கச் சொல்கிறார்.

இந்த சமயத்தில், ஆத்மசுத்தி என்ற ஆயுதத்தை நீ எப்படி எடுக்கவேண்டும். இந்த உணர்வு கொண்டு, அந்த உணர்வுடன் எப்படிப் பாய்ச்ச வேண்டும், என்று உணர்த்துகின்றார். எம்மிடம் குருநாதர், இரண்டு மூன்று ஆயுதங்கள் கொடுத்திருக்கிறார்.

ஒன்று, யாம் வேகமாக எண்ணினோமென்றால், புலிக்குக் கண் தெரியாமல் போகும். மற்றொன்று, புலியின் வாயை அசைக்க முடியாமல் போகும். இதுபோன்று இரண்டு விதமான சக்தி கொடுத்திருக்கின்றார்.

அடுத்து, தாக்க வந்தது. அதற்கென்று இந்த உணர்வை எடுத்துச் சுவாசித்தால், அதற்குக் கண் தெரியாமல் போகும். அல்லது வாய் அசைக்காதபடி, கை கால்கள் அங்கேயே நின்று விடும்.

மூன்றாவது, அந்த எண்ணத்தைச் சுவாசித்தால், நமக்குச் சாதகமான நிலைகளில், அதனுடைய உணர்வை மாற்ற வேண்டும்.

நம்மிடமிருந்து போகும் கெட்ட வாசனையைத் தடுத்து நிறுத்திவிட்டு,
அதனுடைய பாசமான உணர்வு,
குழந்தைகளிடம் எப்படி அது பாசத்தைச் செலுத்துகின்றதோ,
அந்த மாதிரி ஒரு உணர்வைச் செலுத்தியவுடன்,
அது எவ்வாறு கொஞ்சுகின்றது, குலாவுகின்றது
என்ற நிலையைக் குருநாதர் எம்மிடம் காண்பிக்கிறார்.

இங்கே பயம் துடிக்கின்றது. என்னதான் இருந்தலும், தியானம் இருந்தாலும், பதுங்கிப் பதுங்கி புலி அருகில் வருகின்றது. இப்படிச் சுற்றி வருகின்றது, அப்படிச் சுற்றி வருகின்றது. புலிகள் இரண்டு ஜோடியாக வருகின்றது.

ஒன்றாக இருந்தால் தப்பிக்கலாம். இரண்டும் அருகில் இருந்தால் எப்படியிருக்கும்? மனது, “படக்… படக்… படக்” என்று அடித்துக் கொண்டிருக்கின்றது.

குருநாதர் கொடுத்த பவர் இருக்கிறது என்று, தைரியமாக இருக்கின்றது. இதைப் பாய்ச்சி, கண் தெரியாமல் போய்விட்டால்,
முதலில் அந்த கண் தெரியாத உணர்வை, யாம் எடுக்க வேண்டும். பவர் கொடுத்ததனால் கண் தெரியாமல் போய்விடும்.

கை கால் அசையாத நிலை இருக்கவேண்டும் என்றால், அந்த அலையை யாம் சுவாசிக்க வேண்டும். அந்த அலையைச் சுவாசித்து, பிரித்து, என் உடலில் சேர்த்துத்தான் பாய்ச்ச வேண்டும். பார்ப்பது, செய்வதற்கு நன்றாக இருக்கும்.

பின் நாட்களில், இதே உணர்வு வந்தவுடன், எம்மிடம் கண்ணின் கருவிழி கொஞ்சம் கொஞ்சமாக மங்கிப் போகும். சக்தியைக் கொடுத்துவிட்டு, இதையும் சொல்லியிருக்கிறார் குருநாதர். எதையுமே செய்யாவிட்டால், புலி நம்மை அடித்துச் சாப்பிட்டுவிடும்.

புலி எம் வாசனையை நுகர்ந்து அருகில் வரும்போது, நீ இப்படிச் செய்தால், இப்படிப் போவாய்... கைகால்கள் வராமல் போவிட்டால், உன் அங்கங்களும் இந்த மாதிரி ஆகிவிடும்…. என்று இதையும் சொல்லியிருக்கிறார், குருநாதர். ஆனால், புலிக்கு அதன் பசிக்கு, எதையாவது அடித்துச் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும்.

இங்கே யாம் நடந்து செல்லும்போது, வில் மாதிரி அட்டைப் பூச்சி எம்மீது ஒட்டிக் கொள்கின்றது. ஒட்டியது தெரியவில்லை. இரத்தத்தைக் குடித்துவிட்டு, புளியங்கொட்டை மாதிரி தொப்புத் தொப்பு என்று, கீழே விழுகின்றது. இரத்தம் சொட்டுகின்றது. முதலில் எமக்குத் தெரியவில்லை. இரத்த வாசனை பட்டு, புலி வந்த பின்புதான் எமக்குத் தெரிகின்றது.

இந்த இடத்தில் என்ன செய்ய வேண்டும்? ஒரு நிமிடத்தில் புலி நம் மீது தாவினால், எத்தனை தான் சிந்திக்கமுடியும். பவர் கொடுத்திருக்கிறார். திடீரென்று வரும்போது இதை எடுப்பதா? அதை எடுப்பதா?

திடீரென்று ஏதாவது வந்துவிட்டால், நாம் ஐய்யய்யோ! அம்மா, அப்பா! என்றுதானே சத்தம் போடுகிறோம். “ஈஸ்வரா” என்றா சத்தம் போடுகிறோம். எவ்வளவு தூரம் சொன்னாலும்கூட ஐயோ! அம்மா! என்றுதான் சத்தம் போடுகிறோம். இப்படிச் சொன்னாலும் பரவாயில்லை, “ஐய்யய்யோ, ஐய்யய்யோ” என்றுதானே சொல்கிறோம்.

“அம்மா” என்று சொன்னால்கூட, இந்த உணர்வைக் கேட்டு நாய் கூட நிற்கும். அம்மா என்று யார் சொல்லப் போகிறார்கள்? சொல்லமாட்டார்கள். “ஐய்யய்யோ ஐய்யய்யோ” என்றுதான் சத்தம் போடுவார்கள். அல்லது லபோ! லபோ! என்பார்கள். “அம்மா” என்றால் நாய் கடிக்காதே, வேகமாகக் கடிக்க வரும்போது, “அம்மா” என்று  சொன்னால் போதும்.

அப்பொழுதுதான் அந்த தாய்ப் பாசத்திற்கு வேண்டி, என் அம்மாவை அந்த இடத்தில் நினைத்து, அந்த பாசத்தின் உணர்வின் நிலைகளில், எம்மை எப்படி வளர்த்ததோ, அந்த உணர்வுடன் சேர்த்து, “நீ சுவாசி” என்று குருநாதர் சொன்னார்.

அந்தத் தாய்ப்பாச உணர்வுகளை,
அந்த அலையை எடுத்துக் கொடுக்கச் சொன்னார்.
அவர் அவ்வாறு சொன்னவுடன்,
அதே உணர்வலைகளை எடுத்து, யாம் வேகமாகச் செலுத்தியவுடன், புலி தன் குழந்தையிடம் எப்படிச் சுழல்கின்றதோ, அதே மாதிரி சுழன்று செல்கின்றது. எம்மை ஒன்றும் செய்யவில்லை.

இதற்கு நேரம் ஆகும். இந்தத் தாய்ப்பாசத்தை எடுத்துக் கொடுப்பதற்கு நேரமாகும். இதை எடுத்துக் கொடுப்பதிற்குள், அது முந்திவிட்டால் நம்மைக் கொன்றுவிடும். உடனடியாக இதைச் செய்ய வேண்டும்.

இதை விடுத்து, தாக்கும் உணர்வுடன் உடனடியாக எண்ணினால், அதன் கண்ணோ, மூக்கோ, எதை நினைக்கிறோமோ, அது போய்விடும். அதற்கும் போய்விடும். ஆனால், கடைசியில் நமக்கும் போய்விடும்.

மனிதனாக இருக்கிறோம். ஒவ்வொரு அங்கமாக இழந்துவிட்டால், அடுத்து இந்த உயிராத்மாவில் எது சேரும்? அதுதான் சேரும். குருநாதர் இதையும் கொடுத்து, இதையும் காட்டி, அனுபவத்தில் நாம் எப்படித் தப்பிக்க வேண்டுமென்ற உபாயத்தைக் காட்டினார்..

(பக்கம் 127,128,131-133)
யாம் உங்களுக்கு லேசாகச் சொல்கிறோம். ஆனால் கஷ்டப்பட்டுப் பார்த்து, அனுபவித்து வந்தோம். உங்களுக்குள் வரக்கூடிய துன்பத்தை, லேசாகப் போக்கும்படி ஆத்மசுத்தி” என்ற ஆயுதத்தை எடுங்கள் என்று சொன்னால், கேட்க மாட்டேன் என்கிறீர்கள்.

கடைசியில் இவ்வளவு சொல்லியும், அந்த எண்ணத்தையே நினைக்க மாட்டேன் என்கிறீர்கள். இதுதான் நமக்கு வருத்தமாகப் போகிறது. எவ்வளவு கஷ்டப்பட்டு வந்தோம்.

சாமியிடம் ரொம்ப சிநேகிதம் ஆகிவிட்டால் போதும். அவ்வளவுதான்,
நாம் என்ன தவறு செய்தாலும் சரி
சாமியிருக்கிறார், பார்த்துக் கொள்வார்
என்று மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.
சாமியிருக்கிறார் என்றுதான் வருகிறதே தவிர, சாமி சொன்னதை எடுத்து, நம்மிடம் வரக்கூடிய ஆத்திரத்தைத் தடுப்பதற்கு இல்லை. அந்த கோபத்தையும், மற்றதையும்தான் எடுத்துக் கொள்கிறார்கள்.

சாமியிடம் ரொம்ப நெருங்கிப் பழகியவர்கள், இப்படிச் செய்கிறார்கள். அதை அவர்கள் எடுப்பதற்கே தடையாகிப் போகிறது. ஏனென்றால், சாமியிடம் ரொம்பப் பழகியவர்கள் இருக்கிறார்கள்.

ஐயா இப்படி இருங்கள், உங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு ஞானியினுடைய சக்தியை எடுங்கள் என்றால், சாமிதான் எடுக்கிறாரே என்று எண்ணுகிறார்கள். சாமி என்ன செய்வார்?

சாமி சொன்ன சக்தியை, தனக்குள் ஊன்றி வைத்துக் கொள்ள வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தியைப் பற்றிப் பேசவேண்டும், எடுக்கவேண்டும்.

உங்களுக்கு எல்லா நிலைகளும் பெற வேண்டுமென்பதற்காக சுலபமாகக் கொடுக்கிறோம். அதை நீங்கள் நல்ல முறையிலே, ஒவ்வொரு நிமிடமும் “ஆத்மசுத்தி” செய்து, எந்த சங்கடமான உணர்வு வந்தாலும் சரி,
உடனே ஆத்மசுத்தி செய்யுங்கள்,
உங்களிடம் அந்த அழுக்கு சேராது.
உங்களிடம் இவ்வளவு பவரைக் கொடுக்கிறோம்.
ஏனென்றால் யாம் அனுபவித்து வந்தது.

ஒவ்வொரு நொடிக்கு நொடி, எம்மை இம்சை பண்ணியே குருநாதர் எமக்குக் கொடுத்தார். உங்களுக்கு இம்சை வரும் பொழுதெல்லாம், உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று சொன்னால், கேட்க மாட்டேன் என்கிறீர்கள். கடைசியில், சாமிக்கே இம்சை கொடுக்க வந்துவிடுகிறார்கள்.

எந்த அளவுக்குச் செய்தோமோ, அந்த அளவுக்கு இம்சை கொடுக்க வந்துவிடுகிறார்கள். ரொம்ப அதிகமாகிவிட்டால், இராத்திரிக்குத் தூங்க முடியாது. “சாமியை வணங்கிக் கொண்டிருந்தோம், எனக்கு இப்படி இருக்கிறதே” என்று, சாமியை நினைத்துக் கொண்டே ஏங்கி அழுது கொண்டிருப்பார்கள்.

இப்பொழுது சிநேகிதர்களுக்குள் என்ன ஆகிறது? நண்பர்களுக்குள் எண்ணியவுடன் விக்கலாகிறது. “எனக்குத் துரோகம் செய்தான், பாவி” என்கிறபோது, புரை ஓடுகிறது.

பாசத்துடன் இருக்கும்போது, மனசு படக் படக்கென்று இனம் புரியாமல் பயமாக இருக்கிறது. குழந்தை எங்காவது போய்விட்டால், “என்ன பண்ணுகிறானோ? ஏது பண்ணுகிறானோ?” என்று சும்மா நினைத்துக் கொண்டிருந்தால் போதும்.

அவன் நல்ல பயனாக இருப்பான். தாய் பாசமாக இருக்கும்போது, “உடனே அவன் என்ன செய்கிறானோ! ஏது பண்ணுகிறானோ!” என்று எண்ணினால் போதும்.

இதே மாதிரி, அடிக்கடி தாய் அவர்கள் மேல் பாசமாக இருந்து எண்ணினால், அவன் வேலை செய்யும்போது, தப்பு செய்து கொண்டே இருப்பான். வேலை செய்யும்போது, கையை உள்ளே விட்டுவிடுவான்.  பாசத்தினால், உணர்வு வரும்போது இந்த நிலை.

சாமிமேலே ரொம்ப பக்தியாக இருக்கும்போது, இராத்திரிக்கெல்லாம் என்ன செய்கிறார்கள்” ஏதாவது தலை வலித்தால் போதும், நம்மைத் திட்டத்தான் செய்கிறார்கள்.
“சாமி இப்படி இருக்கிறதே!
தலை வலிக்கிறதே!
மேல் வலிக்கிறதே! என்று தான் எண்ணுகிறார்களே தவிர,
“ஆத்மசுத்தி செய்யுங்கள்” என்றால் விட்டுவிடுவார்கள்.

இராத்திரிக்கு, எமக்குத் தூக்கம் வருவதில்லை. ஏனென்றால், எல்லோரையும் பாசத்தால் நினைக்கிற பொழுது, கடைசியில் இப்படி நினைக்கிறார்கள்.

ஒரு வீட்டில் நான்கு பேர் சொன்னாலே, நான்கு பேருக்கு முன்னாடி, தாயினால் தாங்க முடியவில்லை. இரண்டாயிரம் பேர் இப்படிச் சொன்னால், எமக்கு எப்படி இருக்கும்? யாம் உங்கள் மேல் பாசமாக இருக்கிறோம். சிநேகிதர்கள் மேல் பாசமாக இருந்தால், விக்கலாகிறது.

இதே மாதிரி எத்தனையோ பேர் தப்புப் பண்ணிவிடுகிறார்கள். அதுவும் எம்மைத்தான் பாதிக்கிறது. இத்தனைக்கும், “எல்லோருடைய உயிரையும் கடவுளாக மதித்து, அவர்களுக்கு அந்த உணர்வுகள் மாறவேண்டும்” என்று, சதா யாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.

(பக்கம் 134-136)
ஒரு நாள் இரவு, மழையுடன் பக்கத்துக் கிராமத்திலிருந்து, பெண் குழந்தை ஒன்றை இளம்பிள்ளை வாதத்துடன், (இரண்டு காலும் ஆடிக்கொண்டிருக்கிறது) தபோவனத்திற்கு எடுத்துக் கொண்டு வந்தார்கள். காலை 05.30 முதல் 6 மணிக்குள் இருக்கும்.

அழுது கொண்டு வருகிறார்கள். இரண்டு வருடம் ஆகிவிட்டது. பெண் குழந்தையாக இருக்கிறது. ரொம்பக் கஷ்டமாக இருக்கிறதென்று, பொல பொலவென்று அழுது கொண்டே இருந்தார்கள்.

ஆரம்பக் காலங்களில் இது நடந்தது. கொஞ்சம் ரூம்கள்தான் இருந்தது. குழந்தைக்குச் சரி செய்து விட்டோம். எழுந்து நடந்தது. அதன்பின், சாமி எப்படி இருக்கிறார்? என்று எட்டிக்கூட பார்க்கவில்லை. அவர்களுக்கு வைத்தியம் பார்த்தது, சௌகரியமாக போய்விட்டது.

நாளைக்கு நீங்கள் கஷ்டப்படாதபடி, “இந்த மூச்சை எடுத்துக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்” என்று இதையும் கொடுத்துள்ளோம்.

உடம்பு நல்லதாக ஆகவேண்டும் என்று எண்ணும்போது, இந்த ஜெபத்தாலே உடம்பு நல்லதாக ஆகி விடும். வரக்கூடிய கெடுதலும் உங்களாலே காப்பாற்றப்படும்.

சாமியாரைத் தேடிப் போகவேண்டும், ஜோசியம் பார்க்கவேண்டும், என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறார்களே தவிர,
தனக்குள் அந்த உணர்வை எடுத்து,
“தீமைகள் வராமல் தடுத்துக் கொள்ள
இப்படிச் செய்யுங்கள்” என்கிறோம்.
இதைக் கவனிக்கமாட்டேன் என்கிறார்கள்.

நாம் எடுக்கக்கூடிய துன்பத்தை சுவாசித்தவுடன் நம் உடலில் புண் வருகிறது, சிரங்கு வருகிறது, அது வருகிறது, இது வருகிறது என்றால், இந்த உணர்வு அணுக்களாகச் சேர்த்து, உயிராத்மாவில் சேர்ந்து விடுகின்றது.


உடம்புக்கே சௌகரியம் இல்லாமல் போய் விட்டாலும் கூட, அப்பொழுது எண்ணலாம் என்றாலும் கூட, நேரமில்லை என்றுதான் சொல்கிறார்கள். காசைக் கொடுத்துவிட்டு, உடம்பை நிவர்த்தியாக்க வேண்டும் என்றுதான்  எண்ணுகின்றார்கள்.

மனிதனாகப் பிறப்பது ரொம்ப அபூர்வம்.
இந்த மாதிரி ஒவ்வொருத்தரும், உங்களை முழுமையாக நம்புங்கள்.
“அம்மா அப்பாவை தெய்வமாக எண்ணுங்கள்.
யாம் சொன்ன மாதிரி, துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுங்கள்.
உங்கள் உயிரைக் கடவுளாக மதியுங்கள்.
உடலை, அவன் அமைத்துக் கொண்ட கோயில் என்று நினையுங்கள்”.

உங்களிடம் உள்ள நல்ல குணத்திற்கு,
அதை வளர்ப்பதற்கு, “துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுங்கள்”.
ஞானிகளின் உடலில் விளைந்த நல்ல சக்தியை எடுப்பதற்கு,
இந்நேரம் வரையிலும் உபதேசித்து
அந்த சக்தியைக் கொடுத்திருக்கிறோம். இதைப் பெறுவதற்கு,
ஆத்மசுத்தி என்ற வாக்கையும் கொடுத்திருக்கிறோம்.

இதைப் பயன்படுத்தி,
உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய கஷ்டத்தை
நிவர்த்தி பண்ணிக் கொள்ளுங்கள்.
இவ்வளவு சுலபமாகக் கொடுத்திருக்கிறோம். 

(பக்கம் 136-139)
நமக்கெல்லாம் பண வசதி இல்லை. வேலைக்குப் போனால், இரண்டு பேர் திட்டுவார்கள். பேசுவார்கள். இத்தனை உணர்வும் உங்களுக்குள் விஷமாகச் சேர்கின்றது.

நாம் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். இரண்டு பேர் சண்டை போடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால், இரவு கை கால் குடைகின்றது, கண் வலிக்கின்றது, மேல் வலிக்கின்றது என்போம்.

ஏனென்றால், அந்த அளவுக்கு விஷ அலைகள் பரவியுள்ளது. மனித உடலில், வேதனையாகப் பேசி, சண்டை போடுவதைப் பார்த்தால், அந்த அளவுக்கு மேல்வலிக்கும். கை கால் வலிக்கும்.

ஒருவருக்கு சரவாங்கி நோய் வந்துவிட்டது. அவர்களைப் பற்றி பிரியமாகக் கேட்டுக் கொண்டிருந்தால், உங்களுக்கு முதுகு முழுமையும் வலிக்க ஆரம்பித்துவிடும். அதுதான் “மாரி”

“மாரித்தாய்” என்று ஊருக்கு ஊர், முச்சந்தியில் கோயில் கட்டிக் கும்பிடுகிறோம் அல்லவா! என்ன செய்யும்? இந்தச் சக்தி நம்மிடமும் மாறிவிடும்.

அப்படி மாறாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? மெய்ஞானிகள் ஒளியை நாம் எடுத்து, சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த மாரித்தாய் கோயிலுக்குச் சென்று, அழுதால் போதும். அந்த அழுகையுடன், உங்களிடம் மாரி வந்துவிடும்.

பெரும்பகுதியான பெண்கள் கோயிலுக்குப்போய், கும்பிட்டு தன் கஷ்டத்தையெல்லாம் சொல்லிச் சொல்லி, அழுது கொண்டிருப்பார்கள். அதே நிலைகளில் இறந்தவர்கள், அந்த மாரியம்மன் கோயிலில் பம்பைக் கொண்டு தட்டினால் போதும். அந்த உணர்வுகளை, இந்த ஆத்மா உள்ளே இழுத்துக் கொண்டு வரும்.

நான் தான் வந்துள்ளேன். எனக்கு ஏன் அக்னிச் சட்டி எடுக்கவில்லை என்று, இந்த உடலுக்குள் வந்து ஆடும். இதுதான் மாரித்தாயினுடைய நிலை.

ஏனென்றால், மனித உடலுக்குள் நாம் எதையெல்லாம் எண்ணுகிறோமோ, அந்த உணர்வின் தன்மை, நம் உடலுக்குள் வந்து இயங்கி விடுகின்றது. இதுதான் மெய்ஞானிகள் காட்டிய பேருண்மைகள்.

ஆக, நமக்குள் இருக்கக்கூடிய உயிரான ஈசன், இந்த உடலைவிட்டுப் போய்விட்டது என்றால் இந்த நீசத்திற்கு வேலையே இல்லை. நாம் எத்தனை கௌரவம் எத்தனை துணி, எத்தனை அலங்காரம், எத்தனை சுகமான நிலை, எத்தனை பஞ்சு மெத்தை போட்டு வைத்திருந்தாலும், இந்த ஈசன் போய்விட்டால், குப்பையில் போய் எரிந்து விடுவார்கள்.

நாம் இங்கு பார்க்கும் கௌரவமெல்லாம், இப்படியெல்லாம் இருந்தார்கள் என்றா பார்க்கின்றோம்? ஆனால்,
இழுத்துக் கொண்டு கட்டையில் வைக்கும்போதும்
மண்ணைக் கொட்டும் போதும்
பார்த்துக் கொண்டேதான் இருக்கின்றோம்.

“ஏண்டா இப்படிச் செய்கின்றாய், என்று கேட்கின்றோமோ?”
ஒரு நாளைக்கு மேல் வைத்திருந்தால்,
நாற்றம் அடிக்கும் என்று தூக்கிச் சென்று விடுகிறோம்.

இப்படி இருக்கப்படும் பொழுது, இந்த உடலிலே அந்த ஈசன் இருக்கும்போதே நீங்கள் இந்த கௌரவத்தைப் பார்ப்பதைக் காட்டிலும், அந்த மெய்ஞானியின் உணர்வை எடுத்து, அந்த நீசமான உணர்வு நமக்குள் வளராதபடி, அந்த மெய்ஞானியின் உணர்வை வளர்க்கச் செய்யுங்கள்.

இந்தக் கௌரவப் பிரச்னை நம் அனைவருக்குமே, நிறைய உண்டு. ஏனென்றால் நாம் அல்ல. அரசனுக்கு அந்த கௌரவத்தில் என்ன செய்கிறான்? என்ன தப்புப் பண்ணினாலும் சரி? உடனே போர்முறைதான்.

நான் சொன்னேன் கேட்கவில்லை. உடனே போர்முறை. இப்பொழுது நான் வலுவாக நிலையில் இருக்கிறேன். நான் சொன்னதைக் கேட்கவில்லை. உடனே எதிர்த்துவிடு. என்னை எதிர்த்துப் பழகி ஆகிவிட்டால், அதே உணர்வு என்ன சொன்னாலும், அங்கே கேட்கமாட்டார்கள்.

இந்த உணர்வினுடைய வேலை எதிர் நிலைகளில் வேலை செய்து கொண்டேதான் இருக்கும். ஆக எந்தெந்த உணர்வுகள், நமக்குள் முன்னனியிலே நிற்கிறதோ, அது வேலை செய்து கொண்டே இருக்கும்.

இதை மாற்றுவதற்குத்தான் உங்களுக்கு இந்த ஆத்மசுத்தி என்ற ஆயுதத்தை வைத்து, வாழ்க்கையில் எப்பொழுது துன்பம் வருகிறதோ, அப்பொழுது நிவர்த்தி செய்து பழக வேண்டும்.

வாரத்தில் ஒரு நாள், கூட்டுக் குடும்ப தியானம் இருக்க வேண்டும். வீட்டில் அவசியம் தியானமிருக்க வேண்டும்.

(பக்கம் 147,148)
பணம் இந்த உடலின் நிலைகளுக்குத்தான் வரும். ஆனால் அந்த மெய்ஞானிகளின் அருள் ஒளியை நமக்குள் கூட்டினால், இந்த வாழ்க்கையில் வரக்கூடிய இருளை மாய்க்கலாம். இதற்குப் பணம் தேவையில்லை. காசைச் செலவழிக்க வேண்டியதில்லை.

உங்கள் மனதில், மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். எங்கள் மூச்சு, நாங்கள் பேசுகிறவர்களுக்கெல்லாம் நல்லதாக வேண்டுமென்று, இந்த ஆத்மசுத்தியின் நிலைகளை எடுத்துக் கொண்டே இருங்கள்.

அப்படிச் செய்து கொண்டிருந்தால்,
உங்களுக்கு வியாபாரம் நன்றாக இருக்கும்.
உங்கள் மனது நல்லதாக இருக்கும்,
உங்கள் குடும்பத்தில் நல்லதாக இருக்கும்.
சண்டையை நிறுத்தும், நோயைப் போக்கும்.
இத்தனையும் நீங்கள் அனுபவிக்கலாம்.உங்கள் எண்ணம், அண்டவெளி வரையிலும் போகும்”.

உங்கள் அனுபவத்தில், உங்களிடமிருக்கும் சக்தியை நீங்கள் பார்க்கலாம். நீங்கள் அனைவரும், இந்தச் சக்தியைப் பெறுவதற்கு வழியும் கொடுத்து, நீங்கள் பெறவேண்டும் என்று, சதா பிரார்த்தனையும் செய்கிறோம்.

ஒவ்வொரு ரிஷிகளும், ஞானிகளும், மனிதனைத்தான் தேடி வந்தார்கள். உங்களுக்குள் நீங்கள் தியானம் செய்யுங்கள். உங்களுக்குள் ஞானியரின் அருள் பெறவேண்டுமென்று நினையுங்கள். உங்களுக்குள் ஞானியரின் அருள் பெருகும்போது, துன்பத்தை ஊட்டக் கூடிய உணர்வுகள் அனைத்தும் விலகுகின்றது.

(பக்கம் 155-157)
கோலமாமகரிஷி, கர்நாடகா கொல்லூர் என்ற ஊருக்கு அருகில், “குடசாஸ்திரி” இறக்கத்தில் காட்டுக்குள் போய் தனித்து ஜெபமிருக்கிறார். ஜெபம் செய்து கொண்டிருந்தாலும், இவர் சேர்த்துக் கொண்ட நிலைகளுக்கு, இந்த அணுக்கள், ஆவியின் நிலைகள் எதிர்ப்பணுக்கள் அதிகமாயிற்று.

அரச காலங்களில், பேருண்மையினுடைய நிலைகளை கற்றுக் கொண்டதினாலே, அதையே பற்றி தன் வலிமையினாலே, இந்த உடலை விட்டுச் சென்றால் ஒளிசரீரம் பெற வேண்டும் என்ற உணர்ச்சிகள் தூண்டிய பின்தான், அவர் சிந்திக்கத் தொடங்குகின்றார்.

அப்படிச் சிந்திக்கத் தொடங்கும் போதுதான், இன்று “மூகாம்பிகை” என்று, கொல்லூரில் அந்தச் சிலையை வடித்தார்.

நமது பூமி சுழலும் போது வரக்கூடிய வெப்பம் “விஷ்ணு”. நமது பூமியை சிவம், சீவலிங்கம் என்றார். அதாவது,
நமது பூமி சுழலும்போது எடுக்கக்கூடிய காந்தமும்,
பிரபஞ்சத்திலேயுள்ள காந்தமும்,
இரண்டும் உராயப்படும்போது, ஏற்படக்கூடியது வெப்பம்.

அந்த வெப்பத்தால் வரக்கூடிய உணர்வின் தன்மை, நாதம், “ஓ” என்று வந்தாலும் “ம்” என்று பூமியின் ஈர்ப்புக்குள் வந்து, பூமிக்குள் இருக்கக்கூடிய மற்ற சத்துக்களுடன் இருக்கக்கூடிய வெப்ப காந்தங்களுடன் மோதியவுடன், இந்த பூமி வெப்பமாகிறது. அப்போது அந்த வெப்பம், சுழற்சியிலே பூமியின் நடுவட்டத்திற்குச் செல்கின்றது.

ஒரு தம்ளரில் தண்ணீர் வைத்து, கிர் என்று சுற்றினால், கடைசி பாகம் ஒட்டிய இடத்திலேயே நிற்பது போல, விண்ணிலே தோன்றக்கூடிய இந்த வெப்பத்தின் நிலைகள், பூமியின் நடுமையத்தில் தேங்கி, வெப்பத் தணல்கள் அதிகமாகக் கூடிக் கொண்டே வரும்.

அப்படிக் கூடும்போது, அதன் அலைகள் சிறுகச் சிறுக மேலே வரும்போது, பூமிக்குள் இருக்கக்கூடிய மற்ற பொருட்கள் அனைத்துமே, ஜீவன் பெறக்கூடிய சக்தி உண்டாகிறது.

அதனால்தான் “ஓம்” என்ற பிரணவத்தை அங்கே சொல்லி, இது ஜீவன் உண்டானாலும், சிவலிங்கம் இந்த பூமி ஜீவன் உள்ளது. எல்லாவற்றையும் இயக்கக்கூடிய சக்தி பெற்றதும், சீவலிங்கம் என்று பெயர் வைத்தார்கள்.

கொல்லூரில் வைத்திருப்பது சிவலிங்கம்தான். அந்த சிவலிங்கத்தில் சரிபாதி விஷ்ணுசக்தி, சரிபகுதி சிவசக்தியினுடைய நிலை என்று  சொல்வார்கள்.

கோலமாமகரிஷி என்ற பெயர் வந்ததின் காரணமே, கோள்களின் ஆற்றலின் பேருண்மையை நிலையை அறிந்தவர் அவர். ஆகையினாலேதான் கோலமாமகரிஷி.

(பக்கம் 169-173)
துவைதவாதிகள், ஆதிசங்கரரை “நீ காசியில் இருக்கும் அந்த விநாயகருக்கு, யாகங்கள் செய்து வந்தால்தான் நல்லது” என்கிறார்கள், துவைதவாதிகள். ஆதிசங்கரர் நாம் அதைச் செய்ய வேண்டியதில்லை என்றும், இந்த உடலுக்குள் உணர்வின் எண்ணங்கள் நமக்குள் உண்டு.

அதை எண்ணத்தாலே எடுத்து, அதைச் சுவாசிக்கும்போது, அதை நாம் பெறமுடியும் என்கிறார், ஆதிசங்கரர்.
இந்த உயிரின் துடிப்பைக் கூட்டி,
எண்ணத்தின் வலுவைக் கூட்டுவதற்கு,
எண்ணத்தின் சுவாசநிலைகள் கொண்டு,
மெய்ஞானியின் அருள் உணர்வை,
சுவாசிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டினார்.

இவ்வாறு, அதை நிரூபிப்பதற்காக வேண்டி, துவைதவாதிகள், அன்று இருக்கக்கூடிய அரசர்கள் அனைவரும் இவருக்கு எதிர்ப்பு நிலை ஆகின்றனர்.

ஜைன மதம் ஒரு பக்கம் தாக்குகிறது. இந்து மதம் ஒரு பக்கம் தாக்குகிறது. இவர் போகும் பக்கமெல்லாம் எதிர்ப்பு. இவர் இந்த உண்மையை எடுத்துச் சொல்லும்போது, எதிர்ப்புதான் அதிகமாகிறது.

இந்த துவைதவாதிகள் அனைவருமே, மனித உடலில் விளைந்த இந்த மந்திரத்தை எடுத்து, அடுத்து ஒருவனுக்கு வயிற்றுவலி வரவேண்டுமா, வயிற்று வலியுடன் இறந்தவன், எந்த மந்திரத்தாலே இறந்தானோ, அந்த உணர்வின் தன்மையை, அந்த மந்திரத்தால் அந்த நோயான உணர்வின் தன்மையை எடுத்து, அவர் உடலில் செருகினால் போதும். அவனுக்கும் வயிற்றுவலி வரும்.

வாதம் போன்ற நிலைகளில், வாதநோயால் இறந்தவனுடைய உடலில் இருந்து பிரித்து, மற்றொருவனுக்குச் செருகினால், அவனுக்கு வாதநோய் வந்துவிடும். இதுதான் ஏவல்.

ஆக, தெய்வத்திற்கு சக்தி இருக்கிறது என்ற நிலையில், இங்கே சிலைகள் செய்து, உருவங்களாக அமைத்து கதைகள் சொல்ல, அவன் எடுத்துக்கொண்ட நிலைகளுக்கு செயல்படுத்தினர், துவைதவாதிகள்.

நாமும், இன்னமும், இன்னென்ன குணங்களுக்கு, இன்னென்ன மந்திரத்தை ஜெபித்தால்தான் நல்லது, என்று (தவறான நிலையில்) செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

அன்று அத்வைதத்தின் உண்மையினுடைய நிலைகளை அன்று ஆதிசங்கரர் சொல்லும்போது, துவைதவாதிகள், “நீ இந்த வேள்விகள் செய்யாவிட்டால் அவஸ்தைப்படுவாய்” என்று சொன்னார்கள். சொன்னதோடு மட்டுமல்லாது, ஏவல் செய்தும் ஆதிசங்கரருக்கு வயிற்றுவலி வரவைத்துவிட்டார்கள்.

வயிற்றுவலி வந்தபின், இவர் கடும் நிலைகளில் சுவாசித்து, அத்வைத நிலைகளில் தன் வயிற்று வலியை நிவர்த்தி செய்தார். நிவர்த்தி செய்து, அந்தத் தத்துவத்தை, தன் நிலையை, நிலைநாட்டிக் காட்டுகின்றார்.

வேதியர்கள், அன்று துவைதத்தின் தத்துவத்தை இவரிடத்தில் வாதிட்டு, பல நிலைகள், எத்தனையோ வேலைகளைச் செய்தார்கள். அதையெல்லாம் மாற்றி, தன் நிலைகளை அங்கே வெளிப்படுத்தினார்.

இப்படி ஆதிசங்கரர் அதைச் செயல்படுத்தும்போது,
அன்று அரசர்கள், சிலைகளுக்கு முன்னால் யாகங்கள் வளர்ப்பதும்,
சிலைகளுக்கு அபிஷேகம் செய்வதும்,
பால் ஊற்றி பிற நிலைகள் செய்வதும்தான்
உண்மையான பக்தி, என்ற நிலைகளில் அவர்கள் வாதிட்டனர்.

ஆனால் ஆதிசங்கரர் சொன்னது, நம் உயிரான நிலைகள் ஈசன் ஆகின்றது. நாம் எண்ணும் எண்ணங்கள், நாம் சுவாசிக்கும் பொழுது,  உயிரான ஈசனிடத்தில் அந்த சுவாசங்கள் பட்டு, அது உறைகின்றது.

அவ்வாறு உறைந்து, நாம் எந்தெந்த குணங்களை எண்ணுகிறோமோ, “அந்த குணமே நம் உயிரில் பட்டு, அந்த அபிஷேகங்கள் நடக்கின்றது”.

அவ்வாறு அபிஷேகம் செய்யும்போது, நம் உடலிலுள்ள நல்ல குணங்களுக்குப் போய்ச் சேருகின்றது. நல்ல குணங்களுக்கு மகிழ்ச்சி ஊட்டுகின்றது.”

இவ்வாறு, ஆதிசங்கரர் அந்த துவைதவாதிகளிடம் உண்மைகளை வெளிப்படுத்தும் பொழுது, அங்கேயும் எதிர்ப்பு. ஆக இவர் என்ன சொல்கின்றார்?

நீ நல்ல குணத்தை எண்ணிச் சுவாசிக்கும் பொழுது, அது உயிரிலே படுகின்றது. அந்த உணர்வின் எண்ணம் கொண்டுதான், உன்னுடைய செயலாகின்றது. அப்பொழுது அந்த உயிரான ஈசனுக்கு, அந்த அபிஷேகம் நடக்கின்றது.

நாம் பாலைப் போல மனம் வேண்டுமென்று எண்ணி,
பால் எவ்வளவு தூய்மையான சத்தாக இருக்கின்றதோ,
அதைப் போல பிறருடைய எண்ணம் கண்டு,
கலக்கமில்லாத நிலைகள் ஏற்படுத்தி,
நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை நீ சுவாசித்தாயானால்,
அந்த உணர்வின் தன்மை உயிரிலே பட்டு,
அந்த உணர்வின் அலைகள்,
உயிரான ஈசனுக்கு அபிஷேகமாகின்றது.

ஆக, அந்த அலைகள் உடல் முழுவதற்கும் சென்றவுடன் நம் உடலில் நல்ல குணங்களான அந்த அலைகள் பட்டவுடன், அவைகள் எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கும்.

அதே சமயத்தில், ஒரு கோபமான உணர்வை, நாம் சுவாசித்தோம் என்றால், உயிரிலே பட்டவுடன் எரிச்சலாகின்றது. ஆக எரிச்சலான உணர்வுகள் நம் உடலுக்குள் பட்டவுடன், நல்ல குணங்கள் எல்லாம் எரிச்சலாகின்றது.

அப்பொழுது, இந்த உடலான சிவம்,
எரிச்சலினால் ருத்ரதாண்டவம் ஆடுகின்றது.
கோபத்தினால் துடிக்க ஆரம்பிக்கின்றது.
அதன் வேகத்தால், உடலை அசைக்க ஆரம்பித்துவிடுகின்றது
என்ற இந்தப் பேருண்மையை அங்கே காட்டுகின்றார் ஆதிசங்கரர்.

(பக்கம் 179-182)
இன்றிருக்ககூடிய நிலைகள், “தொடாதே, இதைத் தொடாதே” என்று வர்ணாசரமத் தன்மையை ஏற்படுத்தி, அதில் தீட்டு வந்துவிட்டால் சக்தி போய்விடும் என்றும், துவைதவாதிகள் சொல்வார்கள்.

ஆக, இவையெல்லாம் மந்திரத்தின் நிலைகள். மனித உணர்வுக்குள் இருக்கக்கூடிய, எதிர் சக்தியினுடைய நிலைகள் வரப்படும் பொழுது, செயல்படாது.

ஆக, இதைப் போலத்தான், ஒரு கோவிலில் மந்திரத்தை ஜெபிக்கும் பொழுது, ஒருவன் இறந்துவிட்டால், இவன் செய்த நிலைகளுக்கு, அங்கே ஆவிகள் சுற்றும் என்பார்கள். அதற்கென்று ஒரு மந்திரத்தைச் சொல்லி, சில நிலைகளை ஜெபிப்பார்கள்.

உலக ரீதியிலே, மனிதனுக்குள் இருக்கக்கூடிய மந்திரமில்லாத மதமில்லை. ஆக, மனிதனுக்குள் விளைய வைத்த இந்தச் சக்தியைத்தான், ஆண்டவன் என்ற நிலைகள் கொண்டு, நாம் மந்திர சக்திகளை ஜெபிக்கப்படும் பொழுது, அந்த மனிதனுக்குள் விளைய வைத்த ஆற்றலைக் கூட்டியவுடன், எவரொருவர் மந்திரத்தை ஜெபிக்கின்றாரோ, அந்த மந்திரத்திற்குள் இது வந்துவிடுகின்றது.

இவைகளெல்லாம் மூல மந்திரத்தினுடைய முறைகள். அந்த மூல மந்திரத்தின் முறைகள் பிரகாரம்தான், துவைதவாதிகள் செய்தார்கள். ஆகையினால் அதற்கென்ற நிலைகளில், சில கருத்தன்மைகளைக் கூட்டி, அதற்கென்று குரு நிலைகளைக் காட்டி, சாஸ்திரங்களை விதித்திருக்கிறார்கள்.

இது தெரியாதபடி நம்மைப் போல் உள்ளவர்கள், அந்த மந்திரத்தை ஜெபித்தார்கள் என்றால், திரும்பத் திரும்ப ஜெபித்தார்கள் என்றால், மந்திரப் புத்தகங்களில் எழுதி வைத்து, இதை ஜெபித்தார்கள் என்றால், முருகனைக் கைவல்யம் பண்ணலாம், பல நிலைகளைப் பெறலாம் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். நாம் வாழ்நாள் முழுவதற்கும் இதை ஜெபிப்போம்.

இதைப் போல நாம் மந்திரத்தை ஜெபித்தோம் என்றால், நாம் இறந்தபின், இன்னொருவன் இதே போல ஜெபித்தான் என்றால், அவன் உடலில் நம் ஆன்மா புகுந்துவிடும். மீளும் நிலை இல்லை.

ஆனால், அன்று ஆதிசங்கரர் சொன்ன அத்வைதத்தின் தத்துவம்”,
அதாவது, சூட்சம நிலைகளில் இருக்கக்கூடிய
மெய் உணர்வுகளை நாம் சுவாசித்து,
நம் உடலுக்குள் சேர்ப்பதுதான் அந்த நிலை.

ஆக சூட்சமத்திற்கு எத்தனை குணமிருக்கின்றதோ, நல்ல எண்ணங்கள் எடுத்து, நல்லதே செய்ய வேண்டுமென்று, ஒருவரைப் பார்த்து எண்ணும் பொழுது, அந்த நல்ல குணங்களை நீ சுவாசிக்கின்றாய்.

ஆக கோவில்களில், உடல்களில் இருக்கக் கூடிய அந்த குணங்களை வடிவமைத்துத்தான், அந்த சிலையைக் காட்டியது.

நீ கோவிலிலே தெய்வத்தைப் பார்க்கப்படும் பொழுது, இந்தத் தெய்வத்தின் குணத்தின் சக்தியை, நாங்கள் பெற வேண்டும் என்று சுவாசிக்க வேண்டும்.
அந்தத் தெய்வம் எந்த நல்லதைச் செய்கின்றதோ,
“அந்த தெய்வ குணத்தைப் பெற வேண்டும்.
எங்கள் பேச்சும் மூச்சும், அந்தத் தெய்வ நிலைகள் பெற வேண்டும்”
என்று சுவாசிக்க வேண்டும்.

வியாபாரம் செய்யும் பொழுது,
“எங்களிடம் பொருள் வாங்கிச் செல்வோரும்,
அவர்களது குடும்பத்தினர் அனைவரும், நலமாக இருக்க வேண்டும்”
என்று இந்தச் சுவாசத்தை எடுத்து,
சரக்குகளை எடுத்துக் கொடுத்தால் நன்றாக இருப்பார்கள்.

இப்படி, பிறரை நீ வாழ்த்தும் பொழுது, இந்த உணர்வின் தன்மை நீ ஏங்கும் பொழுது, உடலுக்குள் இருக்கக்கூடிய உயிருக்கு, இந்த உணர்வுகள் பட்டு, இந்த உணர்வின் தன்மையை அங்கே இயக்கி, நன்மையை விளையச் செய்யும்.

அங்கே நல்லதாகும் பொழுது, அங்கிருந்து வாழ்த்து கிடைக்கும். இப்படிச் சொன்னார் ஆதிசங்கரர்.

(பக்கம் 197-201)
கோலமாமகரிஷி கடும் ஜெபமிருந்து, அந்த ஆதிசங்கரருடைய இளமைப் பருவத்திலே அவருக்குள் புகுந்திருக்கும் பொழுது, அவர் எண்ணத்தால் சுழன்று வந்த நிலையைத்தான், கடந்த இரண்டு மூன்று நாட்களாக, அவருடைய எண்ண அலைகளை எடுத்து உபதேசித்தோம். (உபதேசம் செய்த வருடம் 1989).

ஆதிசங்கரர், அன்று காசியிலிருந்து, ஒவ்வொரு பாகமும் யாத்திரை செய்யப்படும் பொழுது, தன் உயிரை வேண்டி, அந்த உணர்வை எடுத்து, ஒவ்வொரு மக்களையும் வருந்தி, அந்த ஆற்றல் மிக்க சக்திகளைப் பற்றிப் பேசினார்.

ஏனென்றால், மக்கள் அனைவரும், அவர்கள் எண்ண அலைகளாலே, அவர் அறியாத நிலைகள், மனிதனால் வளர்க்கப்பட்ட இந்த ஆசை அலைகள், உள்ளே சென்று,  அவர்கள் நல்லதை எண்ணினாலும் கூட, முடியாத நிலைகளில் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும், அந்தச் சக்தியை மாற்றுவதற்காக, அத்வைதத்தின் தத்துவத்தை (சூட்சமம் - கண்ணுக்குப் புலப்படாத நிலை) ஒவ்வொரு மக்களுடைய நிலைகளிலும் ஊடுருவச் செய்தார்.

அதைத்தான், கடந்த இரண்டு நாட்களிலும் அனைத்து மெம்பர்களுக்கும்,  எத்தனையோ அவஸ்தைகள்பட்டு, தொல்லைகள்பட்டு, அவர்கள் சிந்திக்க முடியாத நிலைகளில் இருக்கின்றார்கள்.

நல்லதை நினைக்கின்றார்கள், நல்லதைச் செயல்படுத்த முடியவில்லை. இப்படி, நம்மிடம் இருபது வருடமாக, அனுபவப்பட்டவர்களும், அந்தப் பக்தியின் நிலையில் இருக்கப்படும் பொழுது, அந்த உணர்வலைகளால் ஈர்க்கப்பட்டு, அது திடீரென்ற நிலைகளில், அவர்களைச் சிந்திக்க முடியாத நிலைகள் செய்துவிடுகின்றது.

இதைப் போன்று, எந்தெந்தப் பக்தியின் வசத்தில் நாம் சிக்கினோமோ, இந்த உணர்வின் தன்மை கொண்டு, நம்மையறியாமல் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது என்ற நிலையும், அந்த உணர்வின் நிலையில் சிக்கி, நாம் எந்தெந்த உணர்ச்சிவசப்பட்டோமோ, அந்த உணர்வுகளே நம்மை இட்டுச் செல்கின்றது.

அதிலிருந்து மீளவேண்டுமென்று, யாம் அந்த கடும் ஜெபத்தாலே, நமது மெம்பருடைய நிலைகளிலிருந்து அதை விளக்கித்தான், கடந்த இரண்டு நாட்களாக, இந்த உணர்வுகளிலிருந்து  அவர் (கோலமாமகரிஷி) பேசியது.

ஏனென்றால், யாம் ஜெபத்தாலே பிறருடைய துன்பங்களைப் போக்குவதற்குத்தான், யாரையுமே குற்றமாகக் கருதியோ, குற்றத்திற்கு ஆளாக்கிப் பேசவில்லை.
அவர்களை அறியாமல் ஆட்டிப்படைக்கும்
இருளான உணர்வுகளிலிருந்து மீட்டுவதற்கு,
அந்த “கோலமாமகரிஷி”,
அந்த உணர்வின் சக்தி கொண்டுதான்,
அந்த நிலைகளைப் பேசிக் கொண்டிருந்தார்.

யாம் நேற்று என்ன பேசினோம் என்று,
எமக்கே தெரியாது. அந்த அளவிற்கு அந்த நிலைகள்.

நாம் ஆசாபாசத்துடன் இருக்கப்படும் பொழுது, அந்தப் பாசத்திற்குள் நமக்குத் தெரியாத நிலைகளில் நம்மை அறியாமலேயே, சில நிலைகளில் தவறுகள் செய்ய வைத்துவிடுகிறது. நாம் தவறு செய்யவில்லை. அந்தத் தவறு இல்லாத நிலைகளில், எத்தனையோ இன்னல் பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

ஒரு சொல்லின் தொடர் வந்துவிட்டதென்றால், அதைப் பின் தொடர்ந்து முடியாத நிலைகளில், பலர் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அவர்களெல்லாம் மீள வேண்டுமென்றுதான், இந்தக் கோலமாமகரிஷியினுடைய அருள் சக்தியின் நிலைகள் எடுத்து, அவர் எந்த அலையின் தன்மை கொண்டு எல்லோரும்  பெற வேண்டுமென்று, விரும்பினாரோ, அதை யாம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்..

ஆதிசங்கரருடைய தத்துவத்தை, இந்த 2000 ஆண்டுகளுக்குள்,
அவர் இந்தியா முழுவதற்கும் பரப்பிச் சென்ற,
அந்த அலையின் தன்மையை
சுலப நிலைகளில் கிடைக்கச் செய்வதற்குத்தான்,
எண்ணத்தைத் தூண்டி,
அந்தத் தூண்டிய நிலைகள் கொண்டு, நினைவுபடுத்தி,
அந்த உணர்வின் தன்மை கொண்டு ஒவ்வொரு உடலிலேயும்
மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டுமென்ற நோக்கத்தில்தான்
அந்த உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பக் கூடிய நிலைகளுக்கும்,
அந்த எண்ணங்கள் செயல்படுத்துவதற்கும் யாம் செய்தது.

ஆக, எதையுமே குற்றமாக எடுத்துக் கொள்ளவே கூடாது. நாம் மனதில் எண்ணி, ஒவ்வொரு மனிதனும் அந்த இன்பமான நிலைகள் பெற, அந்த மகரிஷிகளின் அருள் ஒளிகள் அவர்கள்  பெறவேண்டும் என்று நாம் தியானிக்க வேண்டும்.
(பக்கம் 202-210)
யாம் உள்ளத்தாலே, எல்லோரையும் தெய்வமாகத்தான் மதிக்கின்றோம். யாரையுமே மனிதன் என்ற நிலைகள் கொண்டு, அவர்கள் எந்தத் துன்பப்பட்டு, எந்த இன்னல்கள்படுகின்றார்களோ, அந்த இன்னலிலிருந்து மீளவேண்டும் என்றுதான், யாம் இந்த ஜெபம் எடுத்தது.

ஜெப காலங்களில் நல்ல அலைகளைப் பரப்பி, அவர்கள் மகிழ்ச்சியோடு இருக்கவேண்டும் என்றுதான், நேற்றைய தினம் மெம்பர் அத்தனை பேருக்குமே, எல்லோருடைய நிலைகளிலும்,
அவர்கள் அறியாமல் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கக்கூடிய 
இன்னல்களிருந்து மீட்க வேண்டும் என்பதற்காகத்தான்,
ஆதிசங்கரர் வழியில், அபரிமிதமாகக் கொடுத்தது.

சிக்கலிலிருந்து விடுபடாதபடி நம் சிந்தனையின் நிலைகளில் நாம் மீளமுடியாத நிலைகளில் இருக்கிறோம். இதைப்போன்ற நிலைகளில் எல்லாம், நாம் எடுக்கும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெறும் சந்தர்ப்பங்களை, நாம் பயன்படுத்துவதற்குத்தான், யாம் ஜெபத்திலிருந்தோம்.

எம்முடைய நிலைக்கு இருக்கும்போது, வேறோரு நிலை. ஆனால், மகரிஷிகளின் அருள் ஒளி வரப்படும்பொழுது, எல்லோரும் அந்த நிலை பெறச் செய்வதற்குத்தான் இந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியதுதானே தவிர, எமக்காக இல்லை.

எம்மீது பாசத்தைச் செலுத்தும்போது, அந்தப் பாசத்தின் நிலைகள் கொண்டு, எமக்கு அளவு கடந்த பாசம் இருக்கும். அந்தப் பாசத்தின் நிலைகள் கொண்டுதான், நீங்கள் ஒவ்வொருவரும் சிரித்த முகத்துடன் இருந்தால்தான், எமக்கு அந்த சக்தி என்று, பலமுறை யாம் சொல்லியிருக்கிறோம்.

யாரையும் குறை கூறியோ, அவர் செயல்களின் நிலைகளையோ செயல்படுத்துவதற்கு அல்ல. ஆக, இதைத்தான்
யாம் ஒவ்வொரு நிமிடமும்,
யாம் குருவிடம் வணங்குவதெல்லாம்,
யாம் ஜெபம் பண்ணுவதெல்லாம்,
ஒவ்வொரு மனிதனுடைய உயிரைத்தான்,.
அவர்கள் நல்லவராக இருந்தாலும் எதுவாக இருந்தாலும்.

நீங்கள் வளர வேண்டும் என்றும், உங்களிடத்தில் யாம் மகிழ்ச்சியைத்தான் எதிர்பார்க்கின்றேனே தவிர, ஒருவருக்கு ஒருவர் முகம் கோணி, முகம் சுருங்கி இருப்பதைப் பார்ப்பதற்காக வேண்டி, யாம் இதைச் செய்யவில்லை.

ஆக, பல இன்னல்களை யாம் பட்டோம். மகரிஷிகளின் அருள் ஒளியை யாம் பெற்றோம். அதை நீங்களும் பெறுவதற்குத்தான், அதற்குத்தான் உங்களிடம் யாம் உபதேசிப்பது.

நமது குரு, எமக்குப் பல ஆற்றலான சக்திகளைக் கொடுத்தாலும், காட்டிற்குள் எம்மை அங்கு துன்புறச் செய்து, இந்த உணர்வின் எண்ணங்கள் மற்ற மிருகங்கள் பக்கம் அது சாடும்போது, அதனுடன் நிலைகள் என்னவாகிறது? என்று காட்டினார்.

அதனுடைய உணர்வின் தன்மையை, நமக்குள் இருக்கக்கூடிய சக்தியைக் கொண்டு, அதைத் துன்புறுத்தக்கூடாது என்றார்.

அதைப்போன்றுதான், இப்போது ஒருவருடைய உடலிலிருந்து துன்பமூட்டுவது ஒரு ஆன்மா என்றால், கடுமையான நிலைகள் கொண்டு வாக்காக, அதிகமாக எண்ண அலைகளைப் பாய்ச்சினால், இது போய் அதை அடக்கும்.

ஆனால், அவருடைய உடலிலுள்ள நல்ல குணங்களை அது மாற்றிவிடும். அந்த மாதிரித் தொல்லையும் உண்டு. ஆக, அதற்காக
அந்த மெய்ஞானியினுடைய அருள் ஒளியை,
எண்ணத்திற்குள் எண்ணச் செய்து,
அதைச் சுவாசிக்கச் செய்து,
இந்த உணர்வின் ஆற்றலைப் பெருக்கச் செய்வதற்குத்தான்,
இதைச் செய்கின்றோம்.

இவையெல்லாம் மற்றவர்கள் பேசுவது போன்று, நாம் ஜோசியம் சொல்லி சாமியாராக வந்து மற்றவரிடம் புகழ் தேடுவதற்காக அல்ல. நீங்கள் ஒவ்வொருவரும், மகிழ்ச்சியான எண்ணங்களை எப்பொழுது வெளியிடுகிறீர்களோ, அந்த மகிழ்ச்சியான எண்ணத்திலேதான், எமக்குள் எடுத்துக் கொண்ட சக்தியின் தன்மையை, யாம் பார்க்க முடியும்.

அதுவரையிலும், “எம்மைத் திட்டினாலும், திட்டுபவரைத் திட்டியதாக எண்ணுவதில்லை”. ஆக, அங்கே உணர்வின் தன்மை மெய் ஒளியின் நிலைகளில், மகிழ்ச்சியைக் காணுவதுதான் என்னுடைய வழி.
ஆக, யாருடைய நிலைகளையும் புண்படுத்துவதில்லை.
புண்படும் நிலைகளுக்கு விடமாட்டேன். அதற்காக வேண்டி,
அந்த உடலில் இருக்ககூடிய,
உயிரின் தன்மையைப் பிரார்த்திப்பேன்.

ஆக அந்த உடலின் நிலைகளை மகிழ்ச்சியின் நிலைகளுக்கு பெற வேண்டும். இருள் சூழ்ந்திருக்கும் நிலைகளிலிருந்து விடுபட்டு, ஒவ்வொரு நிமிடத்திலும், நமக்குள் மகிழ்ச்சியின் நிலைகள்தான் தோன்ற வேண்டும்.

இந்த உணர்வின் நிலைகள், இன்று சூரியன் ஒளியாகச் சென்றாலும், இன்று சப்தரிஷி மண்டலங்கள் ஒளியாகச் சென்றாலும், பாசத்தின் நிலைகளிலேதான், பல ஆயிரம் மக்களின் நிலைகளில், எண்ணங்கள் உருவாக்கச் செய்து, அந்த உணர்வின் அலையை எடுத்துத்தான், இங்கு மனிதர்களாக வாழ்ந்தார்கள், மகரிஷிகள்.
                                         
மகரிஷிகள், அவர்களுக்குள் எண்ணத்தின் நிலையை ஒளியாக மாற்றி, விண் சென்றார்கள். அத்தகைய நிலைகளைத்தான், உங்கள் அனைவரையும் அடையச்செய்ய வேண்டுமென்று, ஒவ்வொரு நிமிடமும் யாம் செயல்படுகின்றோம். எமது அருளாசிகள்.
(பக்கம் 223-225)
தப்புப் பண்ணினால் சும்மாவாவிடுவோம். யாம் திட்டத்தான் செய்கின்றோம். உங்களை அந்த உணர்விலிருந்து விடுபடச் செய்வதற்கு, உணர்வோடு உணர்வுடன்தான் மோதுகின்றேனே தவிர, உங்களுடன் அல்ல.

உங்களுக்குத் தீங்கு விளைவித்துக் கொண்டிருக்கும் இந்த உணர்விலிருந்து உங்களை மீட்பதற்குத்தான், இந்த உபதேசமும் மற்ற நிலைகளும் கொடுக்கிறோம். உங்களுக்கு ஆசிர்வாதம் மட்டும் கொடுத்துக் கொண்டிருந்தால், மணிக்கணக்கில் பேச வேண்டிய அவசியமில்லை.

மணிக்கணக்கில் ஏன் பேசுகின்றோம்?
எதற்குப் பேசுகின்றோம்? என்றால்
நீங்கள் தியானமிருந்து, ஜெபம் இருந்து எடுக்க முடியவில்லை. உங்களை அறியாமல், உங்கள் உடலில் எத்தனையோ உணர்வுகள் சங்கடம், சலிப்புப்பட்டுக் கொண்டு இருக்கின்றீர்கள்.

இவை எல்லாவற்றையும் நிவர்த்தி பண்ணுவதற்குத்தான், இவ்வாறு உபதேசித்து, ஜெபித்து, அந்த ஞானியின் அருளை எடுத்துக் கொடுக்கும்போது, அந்த உணர்வுடன் கலந்து, அவர்களது வாக்கை, உங்களிடம் கொஞ்சம் கொஞ்சமாகச் செலுத்தி, உங்களைத் தீமைகளிலிலிருந்து விடுபடுவதற்குத்தான் செய்கிறோம்.

ஒவ்வொரு நிமிடத்திலும் எவ்வளவோ இடைஞ்சல் வந்து கொண்டே இருக்கின்றது. உங்களிடமிருந்துதானே சக்தியை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நிமிடமும், இடத்திற்கு இடம் உணர்வுகள் மாறும் பொழுது, உணர்வுகள் மாறுகிறது. இதிலிருந்தெல்லாம் தப்புவதற்குத்தான், யாம் மணிக்கணக்கில் உபதேசம் கொடுக்கிறோம்.

இன்று நாம் தவறு செய்யவில்லை என்றாலும், மூன்றாவது தலைமுறையில் தவறு செய்திருந்தாலும், நம் உடலில் வந்தால், இன்றும் ஆட்டிப்படைத்துவிடும். அதைப் போக்குவதற்கு, நாம் நல்ல வாக்கைப் பெற வேண்டும்.

இரண்டு பேர் திட்டினார்களென்றால், அதுவும் வாக்குதான். ஒன்றுமே இல்லாது, அடிக்கடி வேதனையுடன் இருக்கிறான், ரொம்பக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறான், “நீ உருப்படுவாயாடா” என்று நச்சுப்பல் விழுந்துவிட்டால், அதிலிருந்து தப்பிப்பதற்கு முடியாது.

யாம் இவ்வளவு காலம் தவமிருந்து, நன்றாக ஆகிப் போகும் என்று சொல்வதற்கு, அது விளைவதற்கு நாளாகும். நச்சுப்பல்காரர்கள், “உருப்படுவியா” என்று சொன்னால், அந்த நிமிடத்திலிருந்து, அந்த நினைவு வந்து கொண்டேயிருக்கும். அவர்கள் எந்த வேலையைச் செய்தாலும், தொல்லைகள் வந்து கொண்டேயிருக்கும். அது வேகமாக வேலை செய்யும்.

யாம் இவ்வளவு கஷ்டப்பட்டு, காடு மேடெல்லாம் சுற்றிக் கொண்டு வந்தோம். கஷ்டமான நிலைகளிலிருந்து, நன்றாக ஆக வேண்டும் என்ற வாக்குக் கொடுத்தாலும் கூட, இதை நிறைவேற்றுவதற்கு, கொடுத்த அன்றே கொஞ்சம் வேலை செய்யும். கொஞ்ச நாட்கள் இருக்கும். அதற்குப்பின் மங்கிப் போகும்.

இந்த நச்சுப்பல்காரர் கொடுத்தது, இந்த விஷம் வளர்ந்தவுடன், கிடுகிடுவென்று போய்க் கொண்டிருக்கும். குறையவே குறையாது. அதிகமாகிக் கொண்டே போகும்.

யாம் ஒரு தரம் வாக்குக் கொடுத்தால், “ஆகா சாமி கொடுத்தார், நிம்மதியாகிவிட்டோம்” என்பார்கள். அடுத்து சுதாரித்துக் கொண்டால், அந்த நல்லதைக் கொஞ்சம் நேரம் காப்பாற்ற முடியும்.

நச்சுப்பல்காரன் சொன்னால், உடனடியாக வேலை செய்கிறது. இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நிமிடத்திலும், தன்னைக் காக்க, தன் நிலைகளைச் செய்ய வேண்டும்.

ஏனென்றால், யாம் உங்களுடன் ஒட்டி, சாதாரண நிலைகளில் யாம் வந்து கொண்டிருக்கின்றோம் என்றால், பயன்படுத்திக் கொள்ளுங்கள். யாம் உங்களுடன் எல்லாம் சகஜமான நிலைகளில், யாம் தாய்ப் பாசத்துடன் வருகிறோம்.

உங்களைத் தாயாக எண்ணி,
நான் குழந்தையினுடைய பாசத்தில்
இப்படி அணுகி வருகிறோம்.
ஆனால், செயலாக்கும் பொழுது,
தாயாக இருக்கிறோம்.
குழந்தை திட்டிவிட்டால், தாய் என்ன செய்யும்? அந்த இடத்தில் தாயாக இருக்கிறோம்.

நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு, அந்த இடத்தில் குழந்தையாக அணுகி வருகிறோம். குழந்தையாக எண்ணி, உங்களை உயர்த்திப் பார்க்கும் பொழுது, மகிழ்ச்சியை அங்கே ஊட்ட வேண்டும்.

இந்த இரண்டு நிலைகளைத்தான் குருநாதர் சொன்னார். ஆக, மனிதனுடைய வாழ்க்கையில் நாம் இதைச் செய்ய வேண்டும். அதைச் செய்வதற்குத்தான், இதைச் செயல்படுத்துகிறோம்.

(பக்கம் 227-230)
நீங்களெல்லாம் நன்றாக மகிழ்ச்சியாக இருப்பதுதான், எமது குறிக்கோளே தவிர, பிறர் மாதிரி, என்னை நீங்கள் கௌரவமாக மதித்துப் போற்ற வேண்டுமென்பதல்ல.

எப்பொழுது நீங்கள் சந்தோஷமாகச் சொல்கிறீர்களோ, அதுதான் எமக்கு மகிழ்ச்சி. எம்மைக் கண்டவுடன், “அப்படி இருக்கிறது, இப்படி இருக்கிறது” என்று பெருமை பேசுவதற்கு அல்ல.
நாளை அதே நிலையை எதிர்ப்பார்த்து இருந்து,
அது இல்லையென்று சொன்னால்,
பெருமை ஒரு நொடிக்குள் போய்விடும்.

எமக்குள் இருக்கக்கூடிய பெருமை, எப்பொழுதுமே நீங்கள் எல்லாம் மகிழ்ந்து,
“நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம்.
மகிழ்ச்சியான நிலையில் தொழில் செய்கிறோம்,
மகிழ்ச்சியான நிலைகளில் இருக்கிறோம்”
என்று சொல்வதுதான் அது ஒரு பெருமை.

அந்தப் பெருமையைத்தான் நான் எதிர்ப்பார்க்கிறேனே தவிர, எம்மைப் போற்ற வேண்டுமென்பதற்காக வேண்டி அல்ல. உங்களில் தவறிருந்தால், அதை நிவர்த்திக்க வேண்டி ஏதாவது செய்துதான் ஆக வேண்டும்.

அதற்காக வேண்டி, தவறை வளர்க்கச் சென்றால், அப்பொழுது நான் புகழுக்கு எதிர்ப்பார்க்கிறேன் என்றுதான் அர்த்தம். எப்படி இருந்தால் என்ன? நீங்கள் எம்மை மதித்தால் போதும், என்ற இந்த மதிப்பு அல்ல.

நீங்கள், எப்பொழுதுமே மகிழ்ச்சியான நிலைகளில் இருக்கிறீர்கள் என்றால்,  அதுதான் எமக்கு பெருமையும், புகழுமே தவிர வேறொன்றுமில்லை. இதை ஒவ்வொருவரும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

எல்லோரையும் போல, உங்களிடம் மகிழ்ச்சியை எதிர்ப்பார்க்கிறோம். “சாமி” உங்களிடம் இப்படி இருக்கிறார், அப்படி இருக்கிறார் என்று புகழ்ந்து பேசி, அந்தப் புகழ்ச்சியினுடைய மறைவில், அது ஒரு நிமிடம் கூட நிற்காது. அதை யாம் எதிர்ப்பார்க்கவே இல்லை.

ஆக எமது குருநாதர் காட்டியபடி, அவர் ஏழ்மையாக இருந்து, ஒரு பைத்தியக்காரத்தனமாக இருந்து, எல்லா நிலைகளையும் சுட்டிக்காட்டி, உலகம் இப்படி இருக்கிறது, குப்பையிலிருந்துதான் மரம் சத்து எடுக்கிறது,

அதைப் போல, குப்பையான இந்தச் சரீரத்திலிருந்து, சத்தான எண்ணங்களைக் கூட்டுவோம். நீ சரீரத்தைக் குப்பையாக எண்ணினாலும், உனக்குள் இருக்கக் கூடிய அந்த நல்ல எண்ணத்தை, அந்த வைரத்தை, குப்பையான சரீரத்திலிருந்து விளையச் செய், அதுதான் சொந்தம் என்றார் குருநாதர்.

ஆக ஒவ்வொரு மனிதனுடைய உடலிலும் எத்தனையோ துன்பங்கள் இருக்கிறது. அந்தத் துன்பங்களை விளைவிக்கக் கூடிய எண்ணங்கள் இருக்கிறது. அந்தத் துன்பத்தை விளைவிக்கக் கூடிய எண்ணங்களிலிருந்து அவர்களை மீட்க வேண்டும்.

ஆகவே, “அவர்களிடமிருந்து நீ மகிழ்ச்சியை எதிர்பார். அந்த மகிழ்ச்சியே உனக்குச் சொர்க்கம்” என்ற நிலைகளை நமது குருநாதர் எமக்குச் சொன்னதினாலே, நீங்கள் மகிழ்ந்து, என்றைக்கு எம்மிடத்தில் சந்திக்கின்றீர்களோ, அதில்தான் யாம் சொர்க்கத்தைக் காண்கிறோம்.

ஆகையினாலேதான் சிலருடைய நிலைகளில் திடீரென்று சொன்னவுடன், நாம் யாரையுமே முதலில் பழித்துப் பேசிவிடக்கூடாது.

ஆக, அந்தக் குறைபாடுகள் இருந்தாலும், நாம் அணுகி, நிவர்த்தி பண்ணுவதற்கு என்ன வழியோ, அதற்கு நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
சொல்லிப் பார்ப்போம்,
முடியவில்லை என்கிற பொழுது,
அது அவருடைய சந்தர்ப்பம்.
அதற்காக வேண்டி, முடியவில்லையே,
அவர் தவறு செய்கிறார் என்ற உணர்வை,
நமக்குள் எடுத்துக் கொள்வதற்கல்ல.

ஆனால், தவறின் நிலையில் அவர்கள் இப்படிச் செய்கிறார்களே என்று நாம் எண்ணினோமானால், அவர்களுடைய உணர்வை நமக்குள் வளர்த்துக் கொள்கிறோம்.

நாம் செய்ய வேண்டியது என்ன? யார் எதைப் பேசினாலும், குறைத்துப் பேசினாலும்,
அவர்கள் வாழ்க்கையிலே அவர்கள் உயர வேண்டும்,
அவர்களை அறியாமல், அவர்களுக்குள் துன்பத்தைத் தோற்றுவிக்கும்
அந்த உணர்வுகளிலிருந்து மீள வேண்டும் “ஈஸ்வரா”
என்று உங்களுக்குள் நின்று,
உயிரான நிலைகளில் நேசிக்கும்,
நம் உயிரை எண்ணி நாம் சுவாசிக்கும் பொழுது,
இந்த உணர்வு நமக்குள் விளைகின்றது.

அந்த நிலைகளில், நாம் அடிக்கடி செய்தோமானால், அவர்களை அடிக்கடி எண்ணத் தொடங்கினோமேயானால், அவர்களுக்குள் நல்லது உண்டாகும். இதைத்தான் யாம் உங்களிடம் எதிர்பார்ப்பது.

(பக்கம் 249-252)
நம்முடைய உயிர் நெருப்பு, நம் உடல் ஒரு குண்டம். ஆக, எந்தெந்த குணத்தை நாம் சுவாசிக்கின்றோமோ, அந்த குணத்தின் தன்மை நம் உயிரிலே பட்டு, இந்த உணர்வுகள் உடலிலே இயங்கப்பட்டு, இந்த உணர்வின் சக்தி நம் உடலிலே சேர்கின்றது.

நாம் எண்ணும் எண்ணம் “சூட்சமம்” -- அத்வைதம். அந்த குணத்தை (எண்ணத்தை) நாம் எண்ணி, அதை நாம் பெற வேண்டுமென்று, நமக்குள் அந்த உணர்வை ஏக்கத்துடன் செலுத்தும்போது,
இந்த உயிரான நெருப்புக்குள் பட்டு,
இந்த உணர்வுகள் நமக்குள் இயங்கி,
உடலில் இருக்கக்கூடிய வெப்பம், 
இந்த உணர்வின் சக்தியாக மாற்றுகின்றது,
என்ற நிலையைக் காட்டினார்கள்.

இப்பொழுது, அந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்வதென்றால், அந்தப்பாலை அங்கே ஊற்றுவதில்லை. நமக்குள் இந்த தெய்வம், ஒரு சிலையைக் காட்டும்போது, அதற்கென்று ஒரு கதையை எழுதியிருப்பார்கள்,

இந்த தெய்வம் இன்னது செய்யும், அது நமக்குள் அந்த குணத்தை எண்ணி, அதை நாம் சுவாசித்து, நாம் எந்த குணங்களுடன் சுவாசிக்கின்றோமோ, இந்த உணர்வுகள் நம் உடலுக்குள் நின்று, அதுவே நமக்குள் தெய்வமாகச் செயல்படுகின்றது.

அதற்கு நீ செய்ய வேண்டியது, பால் என்பது எல்லாவற்றிலும் சத்தானது, அதைப்போல பிறருடைய எண்ணங்கள் மகிழக்கூடிய எண்ணம் கொண்டு, அந்த தெய்வ குணத்தை நான் பெறவேண்டுமென்று ஏங்கி, இந்த உணர்வின் தன்மை தனக்குள் சுவாசிக்கும் போது, அந்த உணர்வு நம் உயிரான நிலைகள் கொண்டு, இங்கு அபிஷேகம் நடக்கின்றது.

ஆக நம் உயிர் ஈசனாகின்றது. இந்த உணர்வின் தன்மையை, நாம் எண்ணி சுவாசிக்கும் பொழுது, நம் உயிருக்குள்ளும், உடலுக்குள்ளும் அந்த மகிழ்ச்சியான எண்ணங்கள் ஏற்படுகின்றது.

ஆனால், அதேசமயம் இந்த உணர்வின் தன்மை, நம் உடலுக்குள் போனவுடன், எல்லா உணர்வுகளும் அந்த மகிழ்ச்சியினுடைய நிலைகளிலே தாண்டவம் ஆடுகின்றது.

அந்த சக்தியாக, நம் உடலின் செயல்களும், நம் சொல்லின் தன்மைகளும் அவ்வாறு இயங்குகின்றது? என்ற இந்தத் தத்துவத்தைத்தான் அன்று ஆதிசங்கரர் சொன்னார்.

ஆக, நமக்குள் இருக்கக்கூடிய நிலையைத்தான் அங்கே புறத்தில் காட்டப்பட்டிருக்கிறது. சூட்சம நிலைகள் மறைந்திருப்பது அத்வைதம்.

சூட்சம நிலையில் உள்ளதை, காற்றிலிருந்து நாம் சுவாசித்து, நம் உடலாக்கும்போது. அந்த உணர்வின் செயல் துவைதம்.

ஆக நாம் சக்தியாக இருப்பது,
ஒரு சிவமாக ஜடப்பொருளாக இருக்கும்போதுதான். இயக்கம்
இல்லையென்றால் சக்திக்கு வேலையில்லை.

“சக்தி இல்லையேல் சிவமில்லை
சிவம் இல்லையேல் சக்தியில்லை”

பல சூட்சும நிலைகள் கொண்டு, ஒரு திடப்பொருளான பின்தான் – சிவமான பிற்பாடுதான். அந்த சிவத்திற்குள் ஐக்கியமாகி, இயக்கும் செயல்தான் சக்தி -- சிவசக்தி, என்ற இந்தப் பேருண்மையை அன்று ஆதிசங்கரர் தெளிவான முறையில் சொல்லியுள்ளார்.