ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 9, 2012

முதாதையரின் சாப உணர்வுகள் நம்மை இயக்கும் நிலைகள்


நாம் எல்லோரும் பாசத்தால் கட்டுப்பட்டு இருக்கிறோம். நாம் தவறு செய்யாமலேயே, மூதாதையர்கள் காட்டிய நிலைகள் கொண்டு, பக்திமார்க்க நிலைகளில், அவர்கள் எந்தெந்த தெய்வங்களை வணங்கினார்களோ, அந்த தெய்வத்தின் நிலைகள் கொண்டு, இவர்கள் விட்ட சாபத்தினால், மற்றவர்கள் அதை வணங்கப்படும் பொழுது, அதே உணர்வுகளை, மற்ற மனிதரின் உடலில் பதிவு செய்து கொள்ளுகின்றோம்.

ஆகையினால், அந்த வம்சாவழிகளின் நிலைகள் கொண்டு, அந்த தெய்வத்தை வணங்கி, அதே முறைகள் கொண்டு சாபமிட்டாலும், அதே தெய்வத்தின் வழியின் நிலைகள், அந்த வம்சாவழியினர் செயல்படும் பொழுது, அதுவே வந்து சேர்ந்து விடுகின்றது. ஆக, அந்த கொடி வழிகளில் வருகின்றது.

அந்தக் கொடி வழியின் நிலைகள் இங்கே வந்து, இன்று நாம் எவ்வளவு அன்பையும், பாசத்தையும் செலவு செய்தாலும், நமக்குள் இந்த மூதாதையர்கள் இட்ட சாப அலைகளின் நிலைகள் வந்துவிட்டால், நம்மை அறியாமலேயே பல தீயவினைகள் வந்துவிடுகின்றது.

இன்று குடும்பத்திற்குள் சென்றாலும்,
நாம் நிம்மதியாக இருக்க வேண்டுமென்று எண்ணுவோம்.
இந்த நேரம் (சாபத்தின் நிலை) வந்தவுடன்,
நம்மையறியாமலேயே, வேதனைப்படச் செய்யும் நிலைகள்தான்
திருப்பித் திருப்பி வந்து கொண்டே இருக்கும்.

ஆக, அவ்வாறு வேதனயான உணர்வுகளை வளர்த்துக் கொண்டால், மகிழ்ச்சி என்ற எல்லைக்குச் செல்லும் பொழுது, “டமார்” என்று சிதறுண்டு போகும். இப்படி ஏராளமான குடும்பங்கள் உண்டு.

அப்படி மகிழ்ச்சியின் எல்லையினுடைய நிலைகள் வரப்படும் பொழுது, சிதறுண்டு போகும் நிலையும், இந்தப் பாசத்தினால் எடுத்துக் கொண்ட நிலைகளில், எல்லோருக்கும் நன்மை செய்தாலும், அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகளாலே, கை கால் குடைச்சல் வரும்.

“ஐயோ, நான் எல்லோருக்கும் நல்லதுதானே செய்தேன், என் கை கால் எல்லாம் குடையுதே, என் உடலெல்லாம் வலிக்கின்றதே, ஆண்டவன் என்னைச் சோதித்துக் கொண்டிருக்கிறான்” என்பார்கள்.

ஆக, இதைப் போல நாம் நம் உணர்வுக்குள், நல்லதைச் செய்தாலும், “நல்லதைக் காக்கும் ஆற்றல்” நம்மிடம் இல்லை. அந்த நல்லதைச் செய்வதற்கு, நமக்குள், அந்த நல்லதின் நிலைகள் நிலைத்திருக்க வேண்டும்.

ஆனால், நாம் பாசத்திலே, பிறருக்கு நுகர்ந்துதான் (அவருடைய உணர்வுகளை) நல்லது செய்ய வேண்டுமென்று எண்ணுகின்றோம். அது நமக்கும் நல்லவைகளாக இருக்க வேண்டும்.

ஆகையினாலேதான், அன்று மெய்ஞானிகள் எடுத்ததைப் போல, நாம் எந்தத் துன்பத்தைக் கண்ணுற்றுப் பார்த்தாலும், அந்த நல்லதைக் காப்பதற்கு, யாம் சொல்லும் இந்த தியான முறைப்படி, துருவ நட்சத்திரத்தை எண்ணி, அதிலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளியை உங்களுக்குள் எடுத்துக் கூட்டிக் கொண்டு, “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கின்றேன்.

நாம் தவறு செய்யாமலேயே, பிறர் செயும் தவறை கண்ணுற்றுப் பார்த்துக் கொண்டிருந்தால் போதும், அதாவது, நீங்கள் ஒரு பத்து நாட்கள் சண்டை போடுவோரைப் பார்த்துக் கொண்டிருந்தால் போதும், உங்கள் வீட்டில் நீங்களும் சண்டை போட்டுவிடுவீர்கள்.

அப்படி, பத்து நாட்கள் சண்டை போடுவோரைப் பார்த்தபின், உங்கள் உடலில், கை கால் குடைச்சல் வரும், தலைவலி வரும். உங்களை அறியாமல் இனம் புரியாத நிலைகள் வரும்.

ஏனென்றால், கூர்மையான உணர்வின் தன்மைகள் நம்மை அறியாமலேயே, நமக்குள் வந்து, நமக்குள் பல தீய நிலைகளை நமக்குள் உருவாக்கிவிடும்.

இதைப் போன்ற நிலைகள் எல்லாம், நாம் பாசத்தின் நிலைகள் கொண்டு, மக்களிடம் ஒன்றி வாழும் பொழுது வரக்கூடிய உணர்வுகள்.

இதிலிருந்து மீண்டு வருவதற்கு, அன்று மகரிஷிகள் கொடுத்த, அந்த மெய்ஞானத்தின் சக்தியை நாம் பெறுவதற்கு, யாம் சொல்லும் இந்த தியானத்தைச் செய்ய வேண்டும்.

அவ்வாறு தியானத்ததின் நிலைகள் கொண்டு, நம் குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு, “ஓம் ஈஸ்வரா” என்று உங்கள் உயிரை எண்ணி, வாழ்க்கையில் அடிக்கடி, இந்த ஆத்ம சுத்தியைக் கடைப்பிடித்தால், அந்த ஆத்ம சுத்தியின் துணை கொண்டு, உங்களுக்குள் வரக்கூடிய துன்பங்கள் அனைத்தையும் துடைக்க முடியும். எமது அருளாசிகள்.