ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 8, 2012

வித்தையைக் காண்பித்தார் குருநாதர் - நடந்த நிகழ்ச்சி...!

1. வித்தையைக் காண்பிக்கின்றேன் என்றார் குருநாதர்
ஒரு சமயம், பாப்பம்பட்டி இராமசாமி நாயுடுவின் கரும்புத் தோட்டத்தில், யாமும் நமது குருநாதர், நாங்கள் இரண்டுபேரும் இருந்து கொண்டிருக்கின்றோம். 
நான் வித்தையைக் காண்பிக்கிறேன்டா,
வித்தையைக் காண்பிக்கிறேன்டா 
என்று சொல்லி விட்டு, குருநாதர் என்ன செய்தார்?

கரும்புச் சக்கை சுற்றி கிடக்கின்றது. கரும்பு ஆலை இயங்கி கொண்டிருக்கின்றது. கரும்பு ஆலையில் சக்கை சரியாக வரவில்லை என்றவுடன் இருவரும் சென்றோம். கரும்பு ஆலைக்குள் போனவுடன்,
சாறை எடுத்து குடிடா, என்றார்.

குடித்தேன், அந்த பாகு சரியாக வரவில்லை என்று சொல்லி, எம்மை அழைத்து சென்றார்கள். 

குருநாதர் நானும் வருகிறேன் என்றார். கூட்டிக் கொண்டு சென்றோம்.

உள்ளே சென்றவுடன், அங்கே மிஷினை நிறுத்தி விட்டார்கள். வெல்லம் எதுவுமே சரியாக வரவில்லை என்று சொன்னார்கள்.

குருநாதர், இரண்டு பேரும் போகலாம், என்றார். போனோம்.

போனவுடன், என்னிடம் மிஷினை ஓட்டுடா என்றார்.

ஆயிலும் இல்லை, ஒன்றும் இல்லை, மிஷினை ஓட்டச் சொன்னால், எப்படி ஓட்ட முடியும் என்றேன்?.

ஓட்டுடா என்கிறேன், சக்தியை வைத்துக் கொண்டிருக்கின்றான், திருட்டுபய ஓட்டுடா, என்று மீண்டும் எமது குருநாதர் சொன்னார். எல்லாமே வைத்துக் கொண்டிருக்கிறாய். சுவிட்சைப் போட்டு வைத்திருக்கிறாய், உதை என்கிறார்.

எனக்கு ஒன்றும் தெரியாது சாமி, என்கிறேன்.

இவன் என்னென்னமோ சொல்கிறான், இவன் என்னமோ பண்ணிவைத்துவிட்டான். இவன்தான் செய்து வைத்திருக்கிறான் என்று திட்டிவிட்டு, என்னென்னமோ பண்ணினார்.

கரும்புச் சாறும் வந்தது. கரும்புச் சாறு வந்தபின், முதல் தடவை வெல்லம் நன்றாக வந்தது. அடுத்து என்னை இழுத்துக் கொண்டு போனார்.

இராமசாமி நாயுடுவுக்கு, எல்லாம் தெரியும். இராத்திரி பனிரெண்டு மணிக்கு, நான் எடுத்துக் கொண்ட துணிமணிகளையெல்லாம், குருநாதர் ஒரு பையில் எடுத்து வைத்துவிட்டார். இராத்திரி கை கால் வராமல் முடங்கிக் கொண்டு, அவர் சில வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றார்.

எங்களைச் சுற்றிக் கரும்புக் காடு. சோகைகள் நிறைய இருந்தது. தீயை வைத்துவிட்டார். இரண்டு பேரும்தான் உள்ளே இருக்கிறோம். எல்லோரும் வெளியிலே இருக்கிறார்கள். சுற்றி தீ எரிந்தால், கரும்புக் காடு எல்லம் எரிந்துவிடும்.

ஐய்யயோ, இவன் தீயை வைத்துவிட்டான், தீயை வைத்துவிட்டான் என்று என் பெயரைச் சொல்லி சத்தம் போடுகிறார். இப்படி சத்தம் போடுகிறார். என்னைக் காப்பாற்றுங்கள்,. என்னைக் காப்பாற்றுங்கள், என்னை நெருப்புக்குள் போட்டு வாட்டுகிறான், பாவிப்பயல் என்று சத்தம் போடுகிறார், கை கால்களை இழுத்துக் கொண்டே, சத்தம் போடுகிறார்.

மற்றவர்கள் எல்லோரும் சுற்றி நின்று, பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு எங்கும் போகமுடியவில்லை. வேஷ்டியிலும் தீ பிடித்துவிட்டது. அணைப்பதற்கு தண்ணீர்கூட, அந்த இடத்தில் இல்லை.
சாமி, வேஷ்டி எல்லாம் தீ பிடித்துவிட்டது என்றால்,

ஏன்டா, தீயை நீ வைத்துவிட்டு, என்னை ஏன்டா சொல்கிறாய்? என்கிறார் குருநாதர்.

இப்படியெல்லாம் அவஸ்தைப்படுத்தினார். தீ சுற்றி சூழ்ந்துவிட்டது. இன்னும் ஒரு நிமிடம் தான் இருக்கிறது, அந்த அளவில் இருக்கப்படும்போது,

இந்த தீ எப்படி பரவுகிறது?
இந்தத் தீயிற்கு உண்டான ஆற்றல் என்ன?
அவனுடைய ஆசை, எப்படி இந்த கரும்புச் சாறுக்காக வேண்டி, எந்த ஆசையில் கொண்டு வந்து, இங்கே ஆலையை வைத்தான்? என்று,  இத்தனை உணர்வை அங்கே காட்டுகின்றார்.

அவன் பணத்திற்காக வேண்டி, ஆசைப்பட்டு வைத்தான். நீ, சக்தி பெறவேண்டுமென்ற நிலைகளில், இங்கே வந்து கொண்டிருக்கின்றாய். நெருப்பு வந்து சூழ்ந்து கொண்டிருக்கின்றது, நீ எங்கே தப்பப் போகின்றாய்? 

நீ, ஆசையின் நிலைகளில் இருந்து கொண்டிருக்கின்றாய். அவன், ஆசையில் அங்கே இருக்கிறான்.  ஆனால், அவன் வெளியே இருக்கிறான். நீ இங்கே இருக்கின்றாய்.

அந்த இடத்தில், உபதேசம் எப்படி கொடுக்கிறார் பாருங்கள். எல்லாவற்றையும் போட்டு, நசுக்கி, தீயை அணைக்க முற்படுகிறார்கள். எல்லாம் நசுக்கினாலும், சுற்றி அனல் தாங்க முடியவில்லை, சோகை முழுவதும் அனல் பிடித்திருக்கிறது. இவ்வளவு அவஸ்தையில், இருந்து கொண்டிருக்கிறேன்.

அவன் ஆசையில் வந்தான். சொன்னான், கரும்புச் சாறு சரியாக இருக்கிறது என்றான். உன்னைப் போற்றினான், நீயும் எல்லாம் பண்ணினாய். இப்பொழுது தீ பிடித்துக் கொண்டது. இப்பொழுது என்னை யாரடா காப்பாற்றப் போகிறார்கள். சக்தி என்ன ஆனது? என்று கேட்கிறார்.

தீ பிடிக்கிறது, எல்லாம் பண்ணிவிட்டு, என்னமோ மந்திர வேலை பண்ணிவிட்டான். என்னைத் தீயை வைத்துக் கொல்கிறான், என்னைக் காப்பாற்றுங்கள், என்றார் குருநாதர்.

அவர்கள், அங்கே அருகில் நெருங்க முடியவில்லை. என் கரும்புக் காடெல்லாம் போகிறதே, இங்கே தண்ணீர் ஊற்று, அங்கே தண்ணீர் ஊற்று, மோட்டாரைப் போடு என்றாலும்கூட, அங்கே கரண்ட் சுவிட்ச், தண்ணீராகி விட்டதால், மோட்டாரே பாயிலாகி போய்விடுவது போல இருக்கிறது. இந்த அளவுக்கு ஆபத்தான நிலைகளில் சிக்க வைத்துவிட்டு, நம்மைப் பார்க்கிறார். அப்படியெல்லாம் சிக்க வைத்து, நமக்கு உணர்த்தினார்.

அவ்வாறு உணர்ந்ததை நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். கஷ்டத்தைப் போக்குவதற்கு, கஷ்டம் வரும்போது,  அதை நிவர்த்தி செய்யச் சொன்னால்,  நேரம் இல்லை  என்கிறீர்கள்.

இப்படி, அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தைப் புகுத்தி, எனக்கு அப்படியே மரணமடையும் நிலை வந்துவிட்டது. அப்படி மரணமடையும் நிலைகளில்தான்,
அவருடைய ஆசை என்ன செய்தது?
அந்த ஆசையில் உன்னைக் கூட்டிக் கொண்டு வந்தாலும்,
அந்த ஆசையிலிருந்து அவரகள் தப்பிப் போக முடிந்தது.

அவர்கள் அங்கே இருக்கிறார்கள். ஆனால், நீ எல்லா சக்திகளை பெற்றாலும், புகழுக்காக வேண்டி இதை செய்தாய். நீ இதற்குள் மாட்டிக் கொண்டிருக்கும்போது, உன் புகழ் எங்கே போகப்போகிறது? இவ்வளவு பெரிய சக்தியை வைத்துக் கொண்டு, நீ என்ன பண்ணப்போகின்றாய்? என்னையும் இழுத்துக் கொண்டு சிக்க வைத்துவிட்டாய். நான் என்னடா பண்ணட்டும்என்கிறார் குருநாதர்.

கொஞ்ச நேரம் கழித்து, ஹா.. ஹா. என்று சிரித்துவிட்டு, இந்த உணர்வின் நிலைகள் அத்தனையுமே மனிதனாகப் போகும்போது என்னவாகும்என்பதை உணர்த்தினார்.

என் வேஷ்டி தீ பிடித்து எரிகிறது. மரணமாகக் கூடிய தருணம், வேஷ்டி தீ பிடித்து எரிகிறது. வேறு வழியே இல்லை. அப்பொழுது நெருப்புக்குள் இருந்து, அந்த உணர்வின் அலையை எடுத்துக் காட்டுகிறார்.

ஆனால், நீ மரணமடையப் போகும்பொழுது எந்த நிலை? உன் உடலுக்குள் இருக்கக்கூடிய உணர்வின் அலைகள் என்னென்ன செய்கிறது? என்று சொல்லி, அந்த உணர்வைக் காட்டினார்.

என் உடலில் தீ பிடிக்க வைத்து, அந்த மாதிரிச் செய்தார்.  அணுக்களின் செயலும், உன் ஆசையின் நிலைகளும், உன் உடலுக்குள் வளர்ந்த முந்தைய அணுவின் நிலை எப்படி? என்று உணரச் செய்தார்.

இதையெல்லாம் முதல் புத்தகத்தில் கொடுக்கவில்லை. கொடுத்தால், பயந்துவிடுவீர்கள். இப்படியும் இருக்கிறதா? என்று கொடுக்கவில்லை. இப்படியெல்லாம் உணர்ந்து இதை வெளிப்படுத்தியபின், அப்பொழுதுதான் அணுவின், ஆற்றலின் தன்மையைக் காட்டுகின்றார்.

இப்படிக் கண்டுணர்ந்த நிலை போல, இன்று உலகத்தின் நிலைகளில் விஞ்ஞான அறிவு இப்படி வந்துவிட்டது. அவனுடைய ஆசையில், தன்னைத் தற்காத்துக் கொள்ளக்கூடிய உணர்வுகளிலேயே இன்று, அவன் அதற்குள்ளேயே போய் சிக்கிக்கொண்டான். இது, இன்றைய விஞ்ஞான அறிவு.. 

ஏனென்றால், இன்று விஞ்ஞானிகள் மனிதனுக்குள் இயற்கையின் நிலைகளில், இதனுடைய அலைகளை வைத்து, ஒரு நொடிக்குள் அனைவரையும் மாய்க்க வந்துவிட்டார்கள்.

மனிதன், அந்த சூரியனிலிருந்து தோன்றிய உணர்வின் அணு கொண்டு வளர்ந்தான். இதையெல்லாம், பின்னாட்களில் இந்த விஞ்ஞானிகள் அறிவிப்பார்கள். ஒவ்வொரு நிமிடத்திலும், யாம் காலத்தை விரயம் செய்யவில்லை.

ஒவ்வொருவருடைய உள்ளங்களிலும், உயிரையும் ஈசனாக மதித்து, அந்த உடலுக்குள் இருக்கக்கூடிய உயிரை மதித்து, 
அந்த அணுவின் இயக்கங்களுக்குள்,
உங்களுடன் இரவும் பகலும் தொடர்பு கொண்டு,
உடலின் நிலைகளில் பதிவு செய்கின்றோம். 
இந்த உணர்வின் அலைகளை, நீங்கள் பெறவேண்டுமென்று, நமது குருநாதர் காட்டிய அருள்வழி கொண்டு, சதா ஜெபித்துக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால், எவ்வளவு சிரமப்பட்டு உங்கள் நிலைகளையும், நீங்கள் விஞ்ஞான அழிவிலிருந்து மீளுவவதற்கு, இந்த உணர்வைப் பாய்ச்சச் செய்து, உங்களுக்குள் ஆற்றல் மிக்க சக்தியைப் பெருக்கினாலும், இதை சிந்திப்பார் யாரும் இல்லை.

ஆனால்,  நமக்குள் எடுத்துக் கொண்ட, இவ்வளவு பெரிய ஆற்றல்களையும், நமது குருநாதர், எப்பொழுதும் இயக்கிக் கொண்டிருக்கின்றார்.

ஆனால், இந்த உடலிலிருந்து எவ்வளவு காலம் யாம் இயங்கமுடியும்? அதற்குள், இதை பெருக்கிக் கொண்ட நிலைகள் கொண்டு, நாளை வரக்கூடிய விஞ்ஞான உலகத்திலே, நாளைய எதிர்காலத்தை சிந்தித்து, ஒவ்வொருவரும் இந்த நிலைகளைச் செயல்படுத்திக் கொள்ளுங்கள். அதற்காகத்தான் இவ்வளவு பாடுபடுகின்றேன்.

என் குருநாதர் இட்ட கட்டளைப்படி, ஒவ்வொருவரது உடலிலும் இதைப் பதிவு செய்திருக்கின்றோம். ஆகவே, தவறான நிலைகள் கொண்டு, இன்று விஞ்ஞான நிலைகள் கொண்ட அலைகள், உலகையே கரைக்கும் நிலைகள் வரும்போது, அதை மாற்றும் நிலைவேண்டும்.

அதற்குத்தான், துருவ நட்சத்திரத்தின் பேரருளை, ஒரு பத்து நிமிடமாவது எடுத்துக் கொள்ளூங்கள். அதே துருவ நட்சத்திரத்தின் பேரருளை தனக்குள் கூட்டியபின், மகரிஷிகளின் ஒளியை நீங்கள் பெறுங்கள். அந்த அத்திரி மாமகரிஷியின் அருள்சக்தி, நீங்கள் பெறுவதற்கு, எமது அருளாசிகள்.
2. காட்டுக்குள் அனுபவம்
குருநாதர் காட்டுக்குள்ளே செல்லும்போது, சில இடங்களிலே கூட்டிக் கொண்டு போவார். “இங்கே படுடாஎன்பார்.

இந்தப் பக்கம் படுத்தால், கொசுக் கடிக்கின்றது. இன்னொரு பக்கம் படுத்தால் கொசுக் கடிக்கிறதில்லை. இந்த மண்ணிலே, காட்டிலே இருந்து தவம் பண்ணி, தன்னைப் பெரிய சித்தானக்கிக் கொள்ள வேண்டும் என்று, தவத்திற்கு வந்தவர்கள், இந்த இடத்தில், பச்சிலை மூலிகைளை வைத்திருப்பார்கள்.

அவர்கள், இந்தப் பச்சிலை மூலிகைகளை எடுத்துத் தன் உடலிலே பூசிக் கொள்வார்கள். தவம் என்ற நிலைகளில் இருக்கப்படும் பொழுது, அந்த எல்லை வரையிலும் கொசுக்கள், பாம்புகள் மற்றவை வருவதில்லை.

அங்கே, சுத்தமான மனிதன் போனால்தான், போக முடியும். தவறான ஆசையுடன் போனால், அவனைத் தூக்கி எறிந்துவிடும். நான் போனேன்.

அங்கே உட்காருடாஎன்றார்.

தூக்கி எறியப்பட்டேன். “என்ன சாமி பேயோ, பிசாசோ இருக்கு போலிருக்குஎன்றேன்.

பேயுமில்லை, பிசாசுமில்லை அந்தக் காலத்தில், தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று, இந்தக் குறிப்பிட்ட இடத்திலே செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டும்தான் தெரியும். தவறான ஆட்கள் உட்கார்ந்தார்கள் என்றால், விஷத்தன்மை பரவிவிடும் என்று, இந்த உணர்வுகள், உன்னைத் தூக்கி எறிகிறது என்று சொன்னார்.

நான் சொன்ன மாதிரி இப்படிச் செய்என்றார். “அப்படிப் போய் உட்கார்என்றார்.

போய் உட்கார்ந்தால், கொசுவும் வரவில்லை ஒன்றும் வரவில்லை. ஆனந்தமாகத் தூக்கம் வந்ததது.

அவர் எப்படித் தியானம் பண்ணினாரோ, அதே மாதிரி எனக்கும் சக்தி கிடைத்தது. இதைப்போலத்தான், அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து, இந்த தபோவனத்தில் பாய்ச்சப்படும் பொழுது, இங்கே பதிவாகின்றது.

இதைப்போல, துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து, உங்கள் வீட்டில் நன்றாகப் பதிவு செய்து விட்டீர்கள் என்றால், விஷத்தன்மைகளையெல்லாம் போக்கும் நிலைகள் வரும்.
3. ஐவர் மலை அனுபவம்
ஒரு சமயம், நானும் குருதேவரும், ஐவர் மலையில் இருக்கும் பொழுது, இரவு பத்து மணிவரை உபதேசங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தார். பின்னர் என்னைப் படுத்துத் தூங்கச் சொல்லிவிட்டு, அவரும் படுத்துக் கொண்டார்.

விடியற்காலை நான்கு மணியளவில், நாங்கள் படுத்து இருந்த இடத்திலிருந்து, சிறிது தூரம் தள்ளி மலை உச்சியிலிருந்து குருதேவர் சப்தம் கேட்டது. “என்னைக் காப்பாற்று”, இப்படி, இரண்டு மூன்று தடவை சத்தம் வருவதைக் கேட்டு, விழித்துப் பார்த்தேன்.

குருதேவர், என் பக்கம் படுக்கையில் இல்லை. அவர் சப்தம் போடுவதைக் கேட்டுக் கொண்டே, அவர் இருக்குமிடத்தை அடைந்தேன். நிலா வெளிச்சம் இருந்தது. அவர் இருக்கும் இடத்தைப் பார்த்தால், வழுக்கலான இடம், எந்தப் பிடிமானமும் இல்லை.

“என்னைக் காப்பாற்று” என்று சொல்லிக் கொண்டே இருந்தார். என் வேஷ்டியைக் கழட்டி, முறுக்கி, குருதேவரைப் பிடித்துக் கொள்ளும்படிச் சொல்லி, நான் ஒரு முனையைப் பிடித்துக் கொண்டு, வேஷ்டியைப் போட்டேன்.

அவருக்கு எட்டவில்லை. சிறிது நேரம் சிந்தித்துவிட்டு, என் காலில் ஒரு பக்கம், வேஷ்டியைக் கட்டிக் கொண்டு, பாறையில் நான் படுத்துக் கொண்டு, அவர் இருக்கும் பக்கம் சறுக்கிக் கொண்டு, ஒரு பக்க முனை வேஷ்டியைப் பிடிக்கச் செய்ய, முயற்சி செய்தேன்.

ஆனால், அவர் இருக்கும் பக்கம் போகாமல், அதற்கு மாறாக, வேறு பக்கம் என்னை வழுக்கிக் கொண்டு போய், நான் கீழே விழுந்து விடும் நிலை ஏற்பட்டுவிட்டது.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த குருதேவர், “என்னைக் காப்பாற்றுகிறேன் என்று சொன்ன நீ, எங்கேயோ போகிறாய்” என்று சொல்லி, பலமாகச் சிரிக்க ஆரம்பித்துவிட்டார். சிறிது நேரத்தில்,
“வித்தையைக் காட்டுகிறேன் பார்,
அதைக் கற்றுக் கொள் என்றார்”

நானோ, மரணப் போராட்டத்தில், சிறுகச் சிறுக வழுக்கிக் கொண்டே போய்க்கொண்டிருக்கிறேன். பாறைகள் என் உடலில் உரசியதால், இரத்தம் வெளிப்பட்டு, வழுக்கல் அதிகமாகிவிட்டது. குருதேவரோ, “நான் சொல்வதைக் கேள், வித்தைகளைக் கற்றுக் கொள்” என்றார். நானோ, இன்னும் சிறிது நேரத்தில், மலையடிவாரத்தில் போய், வித்தைகளைக் கற்றுக் கொள்கிறேன் என்று, மனம் தளர்ந்த குரலில் சொல்லிக் கொண்டிருந்தேன்.

அச்சமயம், குருதேவர் பல அற்புத உபதேசங்களை உபதேசித்தார். ஆனால், அவர் சொல்வதைக் கவனித்துக் கேட்க, என்னால் முடியவில்லை. நான் கீழே விழுந்து இறந்துவிடுவேன் என்ற உணர்வே இருந்தது. அவர் சொல்வதைக் கேட்கக்கூட முடியவில்லை.

இந்த நிலையில், பலமாகச் சிரித்துவிட்டு, திடீரென்று எழுந்து நின்று கொண்டு, என்னருகில் வந்து, கைகொடுத்துத் தூக்கி நிறுத்தி, என்னை அழைத்துச் சென்று, சமமான இடத்தில் அமரச் செய்தார்.

பின்னர், சிவ நடனம் போன்று, மிக அற்புதமாக ஆடத் தொடங்கிவிட்டார். பின்பு, அமைதி கொண்டு, பல உபதேசங்களைக் கூறினார். பின்பு, வானை நோக்கிப் பார்க்கும்படிச் சொன்னார். அப்பொழுது, வானில், அணுக்களின் நிலைகளைக் காட்சியாகவும், உணர்வாலும், உணர்த்திக் கொண்டிருந்தார்.

அதற்குள் விடிந்துவிட்டது.
சூரியனின் கதிர் வீச்சால், அணுக்களின் துடிப்பையும், அசைவையும் காட்டி,
பல அணுக்களின் ஆற்றலின் சக்திகள், ஒன்றுடன் ஒன்று கலந்து
ஓர் புதிய அணு உருப்பெறுவதை உணர்த்தி,
இவ்வாறு, பல ஆற்றலின் அணுச்சக்திகளின் கலப்பில்,
ஒன்று சேர்ந்து, ஒரு பொருள் உருப்பெறும் நிகழ்ச்சிதான் “பிரம்மா”
என்று உணர்த்திவிட்டு, இதைத் தான் முன்னோர்கள் பிரம்மா உருவாக்குகின்றான் என்று பெயர் வைத்தனர் என்றார்.

மேலும், ஓர் உயிர் அணுவிலிருந்து எவ்வாறெல்லாம் உடல் அழிந்து, உடலில் சேர்த்துக் கொண்ட வினைகள், உயிரில் ஆத்மாவாகச் சேர்ந்து, சேர்த்துக் கொண்ட வினைகளுக்கொப்ப மறு ஜென்மத்தில் உடலின் உருவம் எப்படி மாறுபடுகிறதென்று உணர்த்திவிட்டு, பல நிகழ்ச்சிகளைக் காட்சிகளாகக் காண்பித்தார்.

பல உபதேசங்களை, இவ்வாறு காட்சிகளாக எனக்கு உணர்த்திய பிறகு, குருதேவர் உடலைவிட்டு உயிராத்மா வெளியில் வந்து, சூட்சமத்திலிருந்து கொண்டு, பல நிகழ்ச்சிகளைச் செய்து காட்டியது. பின்பு அவர் உடலுக்குள் சென்றுவிட்டது. குருதேவர் எழுந்து உட்கார்ந்து கொண்டு, பல விளக்கங்களை உணர்த்தி உபதேசித்தார்.
4. பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் அனுபவம்
ஒரு முறை ஆனைமலைக் காடுகளுக்கு, குருநாதர் எம்மை அழைத்துச் சென்றுவிட்டு, பொள்ளாச்சி பஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தார்.

பொள்ளாச்சி பஸ் நிலையத்திற்கு அருகில் வந்து கொண்டிருக்கும் பொழுதுவேகமாக வந்து கொண்டிருக்கும் பஸ்ஸிற்கு முன்னால், ரோட்டைக் கடப்பது போன்று குறுக்கே சென்றுஎம்மையும் இழுத்தார். நாங்கள் குறுக்கே புகுந்தவுடன்,  பஸ் திடீரென்று நின்றுவிட்டது.

உடனே குருநாதர் டிரைவரைப் பார்த்து, "மடத்தனமாக வண்டி ஓட்டுகின்றான் பார்" என்கிறார்.

பஸ்ஸின் டிரைவரோ, "ஏனய்யா புத்தி இருக்கிறதாபைத்தியமா பிடித்திருக்கிறது" என்று திட்டினார்.

குருநாதரும், "இது போலவா வண்டி ஓட்டுவது?  அறிவு கெட்டதனமாக வண்டி ஓட்டுகிறாய்" என்று டிரைவரைத் திட்டினார்.

பின்குருநாதர் தெளிவுபடுத்தினார். அதாவதுஇதுபோன்று சமுதாயத்தில்,  சந்தர்ப்பங்கள் சில நேரங்களில்உணர்வின் வேகம் கொண்டுநம் உணர்வுகள் செயல்பட்டு, 
தான் செய்த தவறை மறந்து, 
பஸ் டிரைவரைத்தான், குறை சொல்கிறோம். 

தவறு எப்படி நேர்ந்தது? என்று சிந்திக்கத் தவறும் பொழுதுடிரைவர் மீது கோபம் கொள்வது போன்ற நிலைகள் ஏற்படுகின்றன. 

டிரைவர் பிரேக் போடாமல் விட்டு விட்டால்அங்கே என்ன நேரும்? என்று நாம் சிந்திப்பதில்லை.  நாம் நசுங்கி இருப்போம் என்று,  அந்த இடத்தில் சிந்திக்க வேண்டும்.

டிரைவர் திட்டியது சரிதான்
என்று ஏற்றுக் கொள்ளும் நிலை வருமானால்
நாளை இது போன்ற அவசர புத்தி நமக்கு வராது. 
நல்ல அறிவினை ஊட்டினார் என்று எண்ணினால்
டிரைவர் மீது பகைமை வராது.

இப்படிகுருநாதர் உணர்வுகள் ஒவ்வொன்றையும் அனுபவ ரீதியில் கொடுத்தார். மக்கள் தங்கள் வாழ்க்கையில், தாம் எடுத்துக் கொண்ட எண்ணங்கள் கொண்டு செயல்படும் பொழுது, சிந்தனை அதன்பால் தான் இருக்கின்றதே தவிரஅங்கே தாம் செல்லும் பாதையில் உள்ள, இடையூறுகள் தெரிவதில்லை. தம்முடைய ஆசையின் நிலைகளிலே செல்கின்றனர். ஆனால், பாதையில் இருக்கும் ஆபத்தையும் எதிரியையும் மறந்து விடுகின்றனர்.

இது போன்ற சந்தர்ப்பங்கள் வரும் பொழுது, நாம் என்ன செய்ய வேண்டும் என்றால், அருள் ஒளியின் உணர்வை நமக்குள் சேர்த்து, தீமைகள் நம்மிடையே வராது விலக்கிஅருள் உணர்வுகள் அவர்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஆகவேநான் கொடுத்த சக்தி கொண்டு பிறரை வீழ்த்துவேன் என்ற அகந்தை கொண்டால்நல்வழியின்  உணர்வுகள் உனக்குள்  வராது என்று, குருநாதர்  எமக்குத்  தெளிவுபடுத்தினார்

ஒருவர் தீங்கு செய்கிறார் என்று எண்ணி, அதே உணர்வினை நுகர்ந்தால், நமக்குள் தீங்கு விளைவிக்கும் உணர்வுகள் வரும். ஆகவே, நாம் தீமைகளைத்தான் செய்ய முடியுமே தவிர,  நன்மை செய்ய முடியுமா?, என்று நாம் சிந்தித்தல் வேண்டும்.

5. இரத்தப் போக்கை நிறுத்தினார் குருநாதர்
ஒரு சமயம், தனது மனைவிக்கு இரத்தப் போக்கு போய்க் கொண்டிருக்கின்றது, அதை குணப்படுத்த வேண்டும் என்று  எம்மைத் தேடி ஒருவர் வந்தார். அது சமயம், எனக்கு மூல நோய் இருந்தது. உட்கார்ந்தோம் என்றால், கடுகடுவென்று இருக்கும்.

நோய் பெண்மணிக்கு. ஆனால், அந்தப் பெண்மணியின் கணவர்தான் வந்திருந்தார். அவர், தனது மனைவிக்குத் தொடர்ந்து உதிரப் போக்கு போய்க் கொண்டிருக்கின்றது. டாக்டர்கள் இதனைக் குணப்படுத்த முடியாமல் கைவிட்டு விட்டார்கள்.

தனக்குக் கண்ணில்லாத குழந்தை ஒன்றும், மற்றும் ஐந்தாறு குழந்தைகள் இருப்பதாகவும், இவர்களை எல்லாம் காப்பாற்ற வேண்டி இருக்கின்றது. ஆகவே, நீங்கள்தான் எனது மனைவியை குணப்படுத்தித் தரவேண்டும். உங்கள் குருநாதரிடம் சொல்லி, மருந்து தாருங்கள் என்றார்.

அப்பொழுது, குருநாதர் எமக்குக் காட்சி கொடுத்து, எம்மிடம் பேசிக் கொண்டிருந்தார். யாம் இதன் விவரங்களை குருநாதரிடம் கேட்கப்படும் பொழுது, முருகன் வருகின்றார். ஆறாவது அறிவின் தன்மை பெற்று, நீ இங்கே வா என்றார். 

இந்த ஆறாவது அறிவைச் சரியாகப் பயன்படுத்தாதினால், உருவான நிலை என்ன? இவர்கள் சொன்ன, குறை மேல் ஆசை வருகின்றது.  குழந்தைகள் சிரமப்படுகின்றார்கள் எனச் சொல்லும் பொழுது, குருநாதர் காட்சி தருகின்றார்.

இப்பொழுது முருகனைக் காண்பித்து, அதன் பின்பக்கமாக குருநாதர் காட்சியில் வந்து, சிரிக்கின்றார்.

யாம் குருநாதரிடம், அவர்களுடைய வீட்டில் ஐந்தாறு குழந்தைகள் இருக்கின்றன. அவற்றில், குருட்டுக் குழந்தையும் இருக்கின்றது. நாளை அவர்கள் இறந்து போனால், அவர்களுடைய குழந்தைகள் தவிப்பார்களே,  அவர்கள் வருத்தமாகச் சொல்கிறார்கள், நீங்கள் சிரிக்கின்றீர்கள் என்றோம்.

போய் ஓமப்பொடி வாங்கிவா என்று, குருநாதர் எம்மிடம் கோபமாகச் சொன்னார்.

எமக்குக் கோபம் வந்து விட்டது. சாமி, அவர்கள் வேதனையாக இருக்கிறார்கள், நீங்கள், ஓமப்பொடி வாங்கிக் கொண்டு வரச் சொல்கிறீர்கள், என்றோம்.

எனக்குத் தெரியாது, நீ போய் ஐயப்பனைக் கேட்டுக்கொள் என்றார். குருநாதர்

காட்சியில் ஐயப்பன் வந்தார். ஐயப்பனிடம் கேட்டால், அவர் மௌனமாக இருக்கின்றார்.

நீ குருவையே எதிர்த்து பேசிவிட்டாய்,  இனி உன்னிடம் ஒன்றும் பேச மாட்டேன் என்று ஐயப்பன் கூறினார்.

குருநாதரிடம் யாம் கேட்டோம், ஐயப்பன் ஒன்றும் பேசமாட்டேன் என்கிறாரே என்றோம்.

அவர் எப்படிப் பேசுவார்? என்றார் குருநாதர்.

பின்னே யாரிடம் கேட்பது என்றோம், யாம். குருவாகிய உங்களிடம் தானே கேட்க முடியும், யாம் என்ன தவறு செய்தோம்? தேடி வந்தவர்கள் நலம் பெறவேண்டும் என்று தானே கேட்டோம்,  என உரைத்தோம்.

நீ ஐயப்பனையே கேள் என்று குருநாதர் கூறிவிட்டார்.

பாவம், இந்தப் பெண்மணி இறந்ததென்றால், அவர்களுடைய குழந்தைகளெல்லாம் அனாதைகளாக நிற்கும். கண்ணில்லாத குழந்தையும் இருக்கின்றது, இவர்களை எல்லாம் பாதுகாக்க வேண்டுமல்லவா? அந்தப் பெண்மணியைக் காப்பாற்றினோம் என்றால், அவர்களுடைய குடும்பத்தைக் காப்பாற்றிக் கொள்வார்கள். ஆனால், குருநாதரும், ஐயப்பனும் கேட்க மாட்டேன் என்கிறார்கள்.

அதன் பிறகு, எமது மகள் மீராவைக் கூப்பிட்டோம். அப்பொழுது, மீரா சிறு வயது பெண். அப்பொழுது,  மீரா, குருநாதரிடம் உரையாடினார்.
மீரா, எம்மைப் பார்த்து,
நீங்கள் குருநாதரிடம் முறை தவறிக் கேட்டீர்கள்,
குருநாதரிடம் கோபமாகப் பேசினால் எப்படி?
நோய் தீரவேண்டும் என்று கேட்டிருக்க வேண்டும், அதை விட்டு விட்டு, குருநாதரை அதிகாரம் பண்ணிக் கேட்கின்றீர்கள்.

அதிகாரம் செய்து, வேண்டுமானால் நீ எடுத்துக் கொண்டு போ  என்று குருநாதர், மீராவுக்குக் காட்சி கொடுத்துக் கூறினார்.

அப்பொழுது, நோயாளியின் கணவர் ஓமப்பொடியை வாங்கிக் கொண்டு வந்துவிட்டார்.

அந்தப் பெண்மணியை ஓமப் பொடியைச் சாப்பிடச் சொல் என்று மீரா மூலம் குருநாதர் கூறினார்.

அது எப்படி குணமாகும்? என்றோம் யாம். 
குருநாதர் தான் சொல்கிறார்,
ஆனால் யாம், அது எப்படி ஓமப்பொடி சாப்பிட்டுக் குணமடைய முடியும்? என்று  வாதிக்கின்றோம்.

இப்படி, மறுபடியும் விதண்ட வாதம் செய்தவுடனே, குருநாதர் மறுபடியும் மௌனமாகவே இருந்துவிட்டார்.  நீயே போய்க் காப்பாற்றிக்கொள்,  நீ குருவுக்கு மிஞ்சிய ஆளாக ஆகின்றாய்” என்று கூறிவிட்டார்.

அதன் பிறகு, நாங்கள் இருவருமே மௌனமாகி விட்டோம். இப்படி நான்கு மணி நேரம் ஆகிவிட்டது.

சாமி, என் மனைவிக்கு உடலிலிருந்து இரத்தம் முழுவதும் போய்விட்டது. டாக்டர்களும் கைவிரித்து விட்டார்கள். இன்றோ, நாளையோ என்று என் மணைவியின் நிலை இருக்கின்றது. நீங்கள் காப்பாற்றுவீர்கள் என்று  நம்பி வந்தால், நீங்கள் குருநாதரிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றீர்களே என்றார், எம்மைத் தேடி வந்தவர்.

குருநாதரிடம் நோய் நீக்கும் வழியைக் கேட்டுக் கொண்டிருக்கின்றோம், அவர் கொஞ்சம் கூட, கவனிக்க மாட்டேன் என்கிறார்  என்றோம் யாம். இது எம்முடைய புத்திசாலித்தனம்.

அன்றைக்கு இருக்கக் கூடிய சூழ்நிலையில், இதனின் உணர்வுகள் எப்படி இயக்குகின்றது? என்பதைக் காண்பித்தார் குருநாதர்.

இதனைத் தொடர்ந்து, பக்கத்து வீட்டுக்காரர், ஒரு தேவர், அவர் எம்மை மாப்பிள்ளை, மாப்பிள்ளை என்று அழைத்துக் கொண்டே வந்தார். என்னப்பா இது, நல்லையா நாயக்கர் சம்பாதித்து வைத்திருக்கிறார் என்று, நீ ஊரை சுற்றிக் கொண்டிருக்கின்றாய். என்னென்னவோ மந்திர வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றாய், இதெல்லாம் உனக்கு எதற்கு? என்று எம்மிடம் கேட்டார்.

நான் என்ன செய்ய வேண்டும்? என்று அவரிடம் கேட்டோம்.

நீ இது போன்ற மந்திர, தந்திர வேலைகளைச் செய்யக் கூடாது. நீ மறுபடியும் வீட்டிற்கு வந்து, வெளி வேலைகளுக்குச் சென்று, விறகுக் கடையும் கவனித்துக் கொள்ளவேண்டும் என்றார். தொடர்ந்து அவர், நீ பைத்தியத்துடன் சேர்ந்து சுற்றி, இதையெல்லாம் செய்து கொண்டிருக்கின்றாய் என்று சத்தம் போட்டார்.

அப்பொழுது, மீரா எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தது. எனது மகள் மீரா அவரைப் பார்த்து, கோபிக்காதீர்கள், குருநாதர் உங்களுக்கு லட்டு கொடுக்கின்றார் என்று சொன்னது.

அதற்கு அவர், என்ன பிள்ளை, எங்கே கொடுக்கிறார்? என்று கேட்டார்.

முகர்ந்து பாருங்கள், வாசனை தெரியும் என்றது மீரா.

பக்கத்து வீட்டுக்காரர், எனக்கு ஒரு வாசனையும் தெரியாது, ஒரு கத்திரிக்காயும் தெரியாது, இதுவெல்லாம் யாரை ஏமாற்றுகிற வேலை? என்று கூறினார்.

இல்லை, மறுபடியும் முகர்ந்து பாருங்கள், லட்டு வாசனை தெரியும் என்றது மீரா.

எனக்கு மூக்கடைத்துவிட்டது, வாசனை தெரியவில்லை என்று கூறினார் அவர்.

தாத்தா, குருநாதர், இப்பொழுது ஜிலேபி கொடுக்கின்றார், கொய்யாப் பழம் கொடுக்கிறார் என்று மீரா சொன்னால், எதுவும் எனக்கு தெரியாது, யாரை ஏமாற்றுகிறீர்கள்?, கொய்யாப் பழத்தை கொண்டு வரச்சொல், என் கையில் கொடுக்கச் சொல் என்றார் தேவர்.

நீங்கள் முதலில் வாசனையைப் பாருங்கள், பிறகு கொடுக்கிறேன் என்றார். குருநாதர். இப்படி, இருவருக்கும் வாக்குவாதம் தொடர்ந்தது.

ஊரை எமாற்றி, எங்களைப் பைத்தியக்காரனாக்க விரும்புகிறார் உனது குருநாதர் என்று பேசினார், பக்கத்து வீட்டுக்காரர்.

மீரா, மூக்கடைத்து விட்டது, வாசனை தெரியவில்லை என்றுதானே கூறினீர்கள், இப்பொழுது, நிஜமாகவே வாசனை தெரியும் பாருங்கள் என்று கூறிக் கொண்டிருந்த சமயத்தில், நோயாளிப் பெண்மணியின் கணவர், என்னங்க நீங்கள் விளையாடிக் கொண்டிருக்கின்றீர்கள்?, எனக்கு ஒரு நல்வழியைக் காண்பியுங்கள் என்று கூறினார்.

அதுதான் ஏற்கனவே சொல்லிவிட்டேனே, ஓமப்பொடி கொடுங்கள், குணமாகும் என்று கோபமாக மீரா மூலம் கூறினார், குருநாதர்.

ஓமப்பொடி கொடுத்தால் நோய் குணமாகுமா, அது எப்படி? என்று நோயாளியின் கணவரும் கேட்டார்.

இது நடந்த நிகழ்ச்சி. குருநாதர், எமக்கு ஒவ்வொரு அனுபவத்தையும் நேரடியாகக் கொடுத்தார்.

பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்து, முகர்ந்து பாருங்கள் வாசனை தெரியும் என்று கூறினால், எனக்கு ஒரு வாசனையும் தெரியாது, மூக்கடைத்து விட்டது என்று கூறினால், திரும்பத் திரும்ப, இதையே கூறுகின்றாயே என்று கேட்டார்.

குருநாதர் சிரித்துக் கொண்டே., இப்பொழுது, அழுத்தமாக உறிஞ்சிப் பாருங்கள் என்றார். பக்கத்து வீட்டுக்காரரும் அது போன்று செய்யவே, நச், நச் என்று பெரிய தும்மலாகத் தும்மினார்.

அவர் வெற்றிலையும், புகையிலையும், எப்பொழுதும் வாயில் போட்டு மென்று கொண்டிருப்பவர். இந்தத் தும்மலினால், அவர் வாயில் இருந்த வெற்றிலை, அவருடைய வேஷ்டி, சட்டையில் எல்லாம் விழுந்து கறை படிந்துவிட்டது. எம்மீதும், வெற்றிலை கறையாகிவிட்டது.

இப்படி, சிறிது நேரம் தும்மிக் கொண்டே இருந்தார். பக்கத்து வீட்டுக்காரரும் மீராவைப் பார்த்து, ஏய் பிள்ளை, தும்மலை நிறுத்தச் செய்கின்றாயா, இல்லையா? என்று கேட்டார்.

எனக்கென்ன தெரியும்?  குருநாதரிடம் கேளுங்கள், முகர்ந்து பார்க்கச் சொன்னார். வாசனை இல்லை என்று சொன்னீர்கள், இப்பொழுது வாசனை தெரிந்ததல்லவா என்றாள் மீரா.

இது என்னவோ பெரிய வேலையாக இருக்கின்றது. உங்கள் குருநாதரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன், தும்மலை நிறுத்தச் செய் என்று கேட்டுக் கொண்டார், தேவர்.

அது சமயம், ஓமப்பொடி வாங்கி வந்தவர், இது என்ன எல்லோரையும் ஏமாற்றுவது போன்று இருக்கின்றது. உங்களுடைய குருநாதர் பைத்தியக்காரராக இருந்தார். உங்களுடைய வாழ்க்கையும் பைத்தியக்காரர் போன்று இருக்கின்றது. நானும் போயும், போயும், உங்களைத் தேடி வந்தேன் என்று கூறினார்.

தேவரும், என்னால் தும்ம முடியவில்லை, மாப்பிள்ளை, உன் குருநாதரிடம் சொல்லி, என்னுடைய தும்மலை நிறுத்து என்று எம்மிடம் கூறினார்.

யாம், எமக்கென்ன தெரியும்?, நீங்களே எமது குருநாதரைக் கேட்டுக் கொள்ளுங்கள் என்றோம்.

இதற்கு எமது மகள் மீரா, இனிமேல் இது போன்று சொல்ல மாட்டேன் என்று சொல்லுங்கள் என்றதும், இனிமேல் அப்படிச் சொல்வேனா, உன் குருநாதரிடம் சொல்லி என்னுடைய தும்மலை நிறுத்து என்றார்.

முக்கால் அல்லது ஒரு மணி நேரம் தும்மிக் கொண்டிருந்தார். எனக்கு வயிற்று வலி ஆகின்றது, உடலெல்லாம் வலிக்கின்றது, என்னை விட்டுவிடு என்றார்.

மீரா, சரி, தும்மல் நின்று போகும், குருநாதர் இன்னொரு பொருள்  தருகின்றார், வாசனை பாருங்கள் என்றதும் கொடு பிள்ளை, கொடு என்றார் தேவர். உடனே தும்மலும் நின்றது.

தும்மல் நின்றதைப் பார்த்துக் கொண்டிருந்த, ஓமப்பொடியை வாங்கி வந்தவர் எம்மிடம், நைனா, ஓமப்பொடி கொடுத்தால் குணமாகும் போலத்தான் தெரிகின்றதுநான்தான் பைத்தியக்காரன் என்றார்.

யாம், ஓமப்பொடியைக் கொண்டு போய், உனது மனைவிக்கு கொடு என்றோம். இதை கொண்டு போய்க் கொடுத்தவுடனே, இரண்டு, மூன்று மாதமாக இருந்து கொண்டிருந்த உதிரப் போக்கு, நின்று போனது. குணமானவுடனேஓடி வந்து எங்களிடம் சொன்னார்.

அதன் பிறகு குருநாதர் எமக்குச் சொன்னார். ஐயப்பனிடம் எப்படிக் கேட்பது, நீ அவரையே மிரட்டுகிறாய், முருகனை மிரட்டுகிறாய், அதன் பிறகு, நான் என்ன சொல்ல வேண்டியிருக்கின்றது என்றார்.
நீ எப்படி இருக்கவேண்டும்?
குருநாதரிடம் எப்படிப் பேச வேண்டும்?
நீ என்னென்ன செய்ய வேண்டும்?  என்று எமது மகள் மீராவிற்கு, குருநாதர் காட்சி கொடுத்து, மீரா மூலம் எமக்கு உபதேசம் கொடுத்தார்.

இவ்வாறு, அனுபவபூர்வமாகத்தான் எமக்குப் பல நிலைகளை உணர்த்தி,  நாம் எவ்வாறு மெய் வழியில், குரு வழியில் செல்வது? என்று உபதேசித்தார். 

இதன்வழியில், குருநாதர் காட்டிய மெய் உணர்வுகளைக் கடைப்பிடித்து வருபவர்கள் அனைவரும், அவர்களது வாழ்க்கையில் இருள் நீங்கி, மெய்ப்பொருள் காணும் திறன் பெற்று, நோய் நீங்கி, நோய் நீக்கிடும் அருள் சக்தி பெற்று, குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமை உணர்வுடன் மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்ந்திடவும், என்றென்றும் அந்த மகரிஷிகள் அருள் வட்டத்தில் இணைந்து வாழ்ந்திடவும், எமது அருள் ஆசிகள்.

6. சினிமாப் படம் மூலம் உணர்த்தினார் குருநாதர்
ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும், சந்தர்ப்பங்கள் அவர்களை எந்தெந்த நேரத்தில், எது எது இயக்குகின்றது என்பதையும், அவரவர் வாழ எதைச் செய்கின்றனர் என்பதையும், நமது குருநாதர் எமக்கு, தினம், தினம், அனுபவப்பூர்வமாக உணர்த்தினார்.

ஒரு உடலில், ஒரு உணர்வின் தன்மை எப்படிப் பெருகுகின்றது? பெருகியபின், அவ்வுடல் என்ன நிலையாகின்றது? என்பதையெல்லாம் எமக்குத் தெளிவாக உபதேசித்து அருளினார்.

குருநாதர், எமக்கு எழுத்து வடிவில் எதையும் கற்றுக் கொடுக்கவில்லை. ஆனால், அருள் வழியில், எமக்கு கற்றுக் கொடுத்தார். 

பார்த்தால், சின்ன விஷயமாகத் தோன்றும். ஆனால், அதனுள் விஷயம் ஏராளமாக இருக்கும். 

எமது சொந்தக்காரர்கள் எல்லாம், எம்மைப் பார்த்து, பைத்தியத்துடன் சேர்ந்து அலைந்து கொண்டிருக்கின்றேன் என்று எம்மைத் திட்டுவதற்குதான் வந்தார்களே தவிர,  குருநாதருக்கும், எமக்கும் இடையே உள்ள, உண்மை நிலை என்ன?  என்பதை அறிந்துகொள்ள முன் வரவில்லை.

நண்பர்களாக இருந்தவர்களும், எம்மைப் பைத்தியத்துடன் சேர்ந்து பைத்தியமாகி விட்டார் என்றுதான் பேசினார்கள். ஏன், எமது வீட்டில் சாமி அம்மாவும் அப்படித்தான் பேசினார்கள். வீட்டில் இருந்த மாமா, அத்தை, எமது குழந்தைகள் என்று, அனைவரும் எம்மை அப்படித்தான் நினைத்தார்கள்.

அருள் உணர்வின் தன்மையை, சாமி அம்மாவும் கொஞ்சம், கொஞ்சமாகத் தெரிந்து கொண்டார்கள். ஏனென்றால், நாங்கள் வைத்திருக்கும் விறகுக் கடைக்கு, குருநாதர் வந்து, ஹாயாகப் படுத்துக் கொள்வார்.

சாமி அம்மாவிடம், இவர்களைப் பார், அவர்களைப் பார், என்று தனது உள்ளங்கையைக் காண்பிப்பார். இப்படியெல்லாம் பல நிலைகளை செய்து, உலகம் எப்படி இருக்கிறது என்று உணர்த்தினார்.

பிறகு, சினிமாத் தியேட்டர்களில் என்ன படங்கள் ஓடுகின்றன? என்று குருநாதர் கேட்பார். சினிமாத் தியேட்டர்களில் ஓடும் படங்களைச் சொன்னால், எந்தச் சினிமாப் படம் பார்க்க விரும்புகின்றாய்?, அதை இங்கேயே பார்க்கலாம் என்று கூறுவார்.

அது எப்படித் தியேட்டரில் ஓடும் சினிமாப் படத்தை இங்கிருந்து பார்க்க முடியும்? என்று யாம் கேட்போம்.

இப்பொழுது பார் என்று கூறுவார். சினிமாப் படம், அது, அப்படியே நாங்கள் நின்ற இடத்தில் இருந்தே பார்க்க முடிந்தது. எமது மகள் மீராவிடம், தியேட்டரில் என்ன படம் ஓடுகின்றது? என்று கேட்பார் குருநாதர். மீராவிடம் கேட்டு, மீரா விரும்பிய படத்தை அங்கே காண்பிப்பார்.

 யாம், குருநாதர் எமக்குக் கொடுத்த உணர்வுகளை வரிசைப்படுத்தி, ஒழுங்குபடுத்தி, என்ன தியேட்டரில் என்ன படம் ஓடுகின்றது என்று குழந்தைகளிடம் கேட்டு, அதைப் பாருங்கள் என்று கூறி, யாமும் மற்றவர்களுக்குச் சினிமாப் படம் காண்பிக்க ஆரம்பித்தோம்.

இதனால், எம்மைப் பார்த்தால் போதும், குழந்தைகள் கூட்டம் கூடிவிடும். நைனா., நைனா., என்று குழந்தைகள் எம்மைச் சூழ்ந்து கொள்வார்கள். இந்தந்தச் சினிமாப் படங்களைக் காண்பியுங்கள் என்று கேட்பார்கள். அவர்கள் கேட்ட சினிமாவைக் காண்பித்தால், உடனே குழந்தைகளுக்குக் குஷியாகும்.

அதன் பிறகு, குருநாதர் எம்மைத் திட்டுவார். உன்னைச் சினிமா பார்க்கச் சொன்னேனா?
ஒவ்வொருவரும், சினிமாவில் நடிப்பதைப் போன்று,
வாழ்க்கையில் எப்படி நடிக்கின்றார்கள்? 

இதனின் உணர்வு எப்படி வருகின்றது?  ஒருவருக்கு நடிப்பு எப்படி வருகின்றது?. ஒரு உணர்வை நுகர்ந்தபின், எப்படி நடிக்கின்றார்கள்? நுகர்ந்த உணர்வின்  உணர்ச்சிகள், ஒருவரை எப்படி ஆட்டிப் படைக்கின்றது? என்று இதைத்தான் உன்னைப் பார்க்கச் சொன்னேன் என்றார், குருநாதர்.

ஒருவருடைய உணர்வுக்குத் தக்க, அவருடைய வாழ்க்கையில், வீட்டில் ஒருவருடன் சண்டைக்குச் செல்கின்றார்.
ஒரு பக்கம் அரவணைக்கின்றார்,
மறு பக்கம் வெறுக்கின்றார்.
இதனின் உணர்வுகளைச் சுவாசிக்கின்றார். அதனின் உணர்வுகள், அவருக்குள் எப்படி அங்கே இயங்குகின்றது? என்று உபதேசித்தார்.

நீ குழந்தைகளுக்குச் சினிமாப் படம் காண்பிக்கின்றாய். அதனால் குழந்தைகள் சந்தோஷப்படுகின்றன. ஆனால், பெரியவர்களிடம் சொன்னால், அவர்கள் எதற்கு ஆசைப்படுகிறார்கள்? ஏதாவது, புதையல் கிடைக்குமா? புதையல் இருக்கும் இடம் தெரியுமா? என்று கேட்டு வருகின்றார்கள். புதையல் கிடைத்தால், நான் நன்றாக ஆகிவிடுவேன். குபேரனாக வாழலாம் என்பது, பெரியவர்களுடைய ஆசை.

ஆனால், அருள் ஞானத்தைப் பெருக்க வேண்டும், இருளைப் போக்க வேண்டும், என்ற நிலைக்குத்தான் "அருள் ஆற்றலை" உனக்குக் கொடுத்தேன்.
நீ மற்றவர்களுடைய ஆசைகளைப் பெருக்கவா போகின்றாய்? என்று கேட்டார் குருநாதர்.

ஆனால், ஆசையினைப் பெருக்க வேண்டும். எந்த ஆசையினைப் பெருக்க வேண்டும்? அருளை ஆசைபட்டால், இருளைப் போக்கும். உடலின் ஆசையை வளர்த்தால், இருள் சூழும். ஆக,
உயிர் ஆசை,
உடல் ஆசை, என்பதற்கு விளக்கம் கொடுத்தார் குருநாதர்.

ஏனென்றால், விஞ்ஞான அறிவில் எலெக்ட்ரிக், எலெக்ட்ரான் என்ற நிலை வரப்படும் பொழுது, கம்ப்யூடர் போன்ற சாதனங்களை உருவாக்குகின்றனர். கெமிக்கல் கலந்த நிலைகளில், நாம் எப்படி
சிக்கி முக்கி கல்லைத் தட்டுகின்ற பொழுது
அதில் உணர்வின் அதிர்வும், ஒளியும் வருவதைப் போன்று
கெமிக்கல் கலந்த பொருள்களில் அதிர்வைக் கொடுத்து,
உணர்வின் ரூபத்தை, விஞ்ஞான அறிவால் காட்டுகின்றனர்.

நாம், கோபம் என்ற நிலையை எடுத்துக் கொண்டபின், கோபத்தின் உணர்வுகள் எலெக்ட்ரானிக், கோப உணர்வின் உணர்ச்சிகள், அழுத்தங்கள் வரப்படும் பொழுது, நமது கண் எப்படிச் சிவக்கின்றது, நரம்புகள் எப்படி முறுக்குகின்றது, எதன் வழி செயல்படுகின்றது என்று குருநாதர் எமக்கு உணர்த்தினார்.

எலெக்ட்ரிக், எலெக்ட்ரான் என்ற நிலையில் ஒரு பொருளுடன் ஒரு பொருள் கலக்கப்படும் பொழுது, அதனின் கலவையின் நிலைகள் எப்படிச் செயல்படுகின்றன? செடி கொடிகள் எப்படி வளர்கின்றன? எப்படி  ரூபம் மாற்றமடைகின்றன? என்பதையெல்லாம் எமக்கு உணர்த்தினார்.

இப்படி,  எங்களுக்குள் நடைபெறும் உணர்வுப் பரிமாற்றங்கள்,  வேறு யாருக்கும் தெரியாது.

            அனுபவரீதியாக, ஒவ்வொன்றையும் சினிமாப் படம் போன்று காண்பித்தார். இந்த உண்மையின் இயக்கத்தை, நமது அகத்திற்குள் பதிவு செய்ய வேண்டும் என்ற நிலைகளில், குருநாதர், எமக்கு உபதேசித்த அருள் வழி கொண்டுதான், இப்பொழுது, யாம் உங்களிடத்தில் பதிவு செய்கின்றோம்.

சில நேரங்களில்,  யாம் உபதேசித்த உண்மையின் நிலைகளை,  உங்களுக்குள் பதிவு செய்து கொண்ட உணர்விற்கொப்ப, நுகர்ந்தபின்,  உணர்வின் அறிவாக, நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.