ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 14, 2012

எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக்

(1) கம்ப்யூட்டருக்குள் இருக்கும் சிலிகான் (SILICON)

இன்று கம்ப்யூட்டரில் இந்த அலைவரிசை வருகிறதென்றால், அதை இயந்திரத்தினால் கேட்டறிவோம். ரேடியோவைக் கேட்போம். T.V.யைப் பார்ப்போம், எல்லாம் பார்ப்போம். அந்த உணர்வுகளெல்லாம் நம் உடலுக்குள் உள்ள செல்களுக்குள் பதிந்துவிட்டது.

விஞ்ஞான அறிவு, நம் உணர்வுடைய செல்லுக்குள் பதிந்தவுடன், மனிதன் விட்ட மூச்சலைகளை, இதுதான் “செல்” என்று எடுத்துக் கொண்டான்.

இதைக் கம்ப்யூட்டர் அலைவரிசையில் வைத்துக் கொண்டு, மனிதனுக்கு எப்படி,
இந்த உடலிலிருந்து வரக்கூடிய வாசனையை,
இந்த உணர்வின் நிலைகளை,
அந்த உயிராத்மா, அது எப்படி செயல்படுத்துகின்றதோ,
அதே மாதிரி எலக்ட்ரானிக் நிலையை உணர வைத்து,
அந்த அழுத்தத்தின் நிலைகள், இந்த உணர்வின் நிலைகளை,
“சிலிகான்" (silicon) என்ற நிலைகளில், உணர்வலைகளை இழுக்க, எதை எதைச் சேர்க்க வேண்டுமோ, அதைச் சேர்க்கின்றான் விஞ்ஞானி.

ஆக, இந்த மனிதனுடைய உணர்வுகள் பட்டுப் பட்டு, கம்ப்யூட்டரின் அலைகள் செயல்பட ஆரம்பித்துவிட்டது.

மனிதனுடைய உணர்வுகள், நாம் பேசக்கூடிய எண்ணத்தை, சூரியனுடைய வெப்ப காந்தங்கள், அந்த உணர்வுகளை ஈர்த்து, அதை நாடாக்களில் பதிவு செய்து, நாடாவில் பதிவு செய்தபின், அதையே ஒலிபரப்பி, வெப்ப காந்தத்தில் அனுப்பி, எந்த இயந்திரத்தின் துணை கொண்டு, எதன் அலைவரிசையில் வைத்தானோ, அதைப் பிரித்து எடுக்கின்றான்.

இதையே நாம் காதில் கேட்டு, இந்த உணர்வின் தன்மை, எந்தக் “கெமிக்கல்” உணர்வுடன் நம்முடன் கலந்து கொண்டோமோ, இந்த ஐம்பது வருடத்திற்குள் மனிதனுக்குள் விளைய வைத்து, அவன் கொண்டு வந்த, இந்த உணர்வு முழுவதுமே, இன்று காற்றலைகளில் கலந்து, அதையே இயந்திரத்தினால் ஈர்த்துப் பழகினான்.

ஏதோ சக்தி காற்றிலிருக்கிறது என்று அறிந்தான். இவன் விட்ட உணர்வே, மனித உடலில் பட்டு, இந்த மூச்சின் அலைகள் இந்தக் காற்றிற்குள் பெருக்கமாகின்றது.

ஆக, மனித உடலுக்குள் மந்திரங்கள், தந்திரங்கள், இயந்திரங்கள் எல்லாம் பதிவு செய்தான். ஆக, சினிமாக்களில் எத்தனை தந்திரங்கள், எத்தனை போர்கள் செய்கிறார்கள்? அதே போல, இவனுடைய சூட்சும உணர்வுகளைப் படங்களாகப் பிடித்தான். போனான், வந்தான், எல்லாம் கேட்டான். அந்த உணர்வுகள் பட, ஒளி கொண்டு ஒளிபரப்பு செய்தான்.

இது மனித உடலுக்குள் வந்தபின், அதே அலைவரிசையை எடுத்தான். இது சிலிகான் முறைகளில் இழுத்துக் கவர்ந்து, இழுக்கப்படும் பொழுது, எந்தெந்த நிலைகளில் செயல்பட்டானோ, அதை எலக்ட்ரானிக்கில் பதிவு செய்தான்.

அதைப் போல, சில அழுத்தங்கள் வரப்படும் பொழுது, இந்த அலைகள், அது பேச ஆரம்பித்துவிட்டது. இதைத்தான், விஞ்ஞான மூளை என்று சொல்லி, சிலிகானின், எலெக்ட்ரானுடைய விஞ்ஞானக் கருவிகளுக்குள் உராய்ந்து, உணர்ந்து, உணர்வலைகள் பட்டவுடன், செயல்படுகிறது.

இப்பொழுது, எப்படி மனிதனுக்கு ஒரெ சீதோஷ்ண நிலை இருக்கிறதோ, இதே மாதிரி கம்ப்யூட்டருக்கு, 90டிகிரிF என்றால், அதே அளவுதான் இருக்க வேண்டும். அதற்கு மேல் போனால், காய்ச்சல் வந்துவிடும். தாறுமாறாகச் செயல்படும். அதே மாதிரி, கண், காது, உணர்வு சேர்த்து, அலைவரிசையை ஈர்த்து வைத்துக் கொள்ளும்.

உங்களிடம் ஒரு நோய் வந்துவிட்டதென்றால், அதை அடுத்தவருக்கு அனுப்பும். இப்படி ஒருவருக்கொருவர் நோயை அனுப்பி, கடைசியில், இந்த மனிதனுடைய உணர்வுகள் அங்கேயே சுழன்று கொண்டிருக்கும்.

விமானங்கள், இராக்கெட்டுகள் மற்றவைகளிலெல்லாம், இவன் வேலை செய்து கொண்டிருக்கின்றான். ஆக, இவைகளெல்லாம் என்று தாறுமாறாக விழப் போகின்றதோ? தெரியவில்லை.

எல்லாவற்றையும் பொருத்தி வைத்திருப்பது, எப்படி எப்படியோ, போகப் போகிறது. நாமும் இந்த மனித சிந்தனையை இழந்து, எப்படி எப்படியோ திரியப் போகிறோம்.

இதிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கு, மெய் ஒளியை எடுத்து, சுட்டுப் பொசுக்குங்கள். யாம் இலேசாகச் சொல்கின்றோம் என்று அலட்சியபடுத்தாதீர்கள்.

நாம், எல்லாம் விவரத்தையும் தெரிந்து எடுப்பதற்கு, நாட்கள் இல்லை. உங்களுக்குள் மெய் உணர்வைப் பாய்ச்சி, சக்தியை எடுப்பதற்கு, யாம் சுலபமாகச் சொல்கின்றோம்.

நீங்கள் தியானமிருந்து, மூதாதையர்களை விண் செலுத்துங்கள். விண்ணிலிருக்கக் கூடிய அலைகளை எடுப்பதற்கு, முயற்சி எடுங்கள், எமது அருளாசிகள்.
 
(2)  கம்ப்யூட்டர் எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது
அன்றைய அரசர்கள் செய்ததது போலத்தான், இன்றைய விஞ்ஞானிகள், ஒவ்வொரு உணர்வின் தன்மையையும் வளர்த்து, வளர்த்து, அது காற்றில் கலந்து, மீண்டும் விஞ்ஞானத்திற்கு வருகின்றது.

அன்று மெய் ஞானிகள் சொன்னது அனைத்தும், மனித உடலிலிருந்து எடுத்தார்கள். இன்று மனித உடலிலுள்ள உணர்வுகள் எதில் எதிலே கலந்திருந்ததோ, அதைக் கெமிக்கல் கலந்து அறிந்தான்.

உலோகத்தன்மையை வைத்து, மந்திரத்தினால், ஒருவன் சொல்லக்கூடிய எண்ணத்தை அறிந்தான். அதே சமயம் பூமிக்குள் இருக்கக்கூடிய நிலையை அறிந்தான்.

பூமிக்குள் ஆழமாக இருக்கக்கூடிய, கல்லை அறிந்தான். பூமிக்குள் இருக்கக்கூடிய மண்ணை அறிந்தான். பூமிக்குள் இருக்கக்கூடிய பாஷாணத்தை அறிந்தான். அதிலிருக்கக்கூடிய உலோகத்தைப் பக்குவபடுத்தினான்.

இவன் உடலுக்குள் இருப்பது இருநிலைகள் வரப்படும் பொழுது, ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு ஏழு, என்கிற பொழுது, அது கடினமாகின்றது. அதற்குள் மறைந்த நுண்ணிய அலைகள் தெரிகிறது. அப்பொழுது, உலோகத்தை அறியும் தன்மை வருகிறது.

இப்படி, உலோகக் காலங்கள் வரப்படும் பொழுது, உலோகத்தை ஆயுதமாக வைத்து, இந்த மந்திரத்தை வைத்து, சில நிலைகளைச் செயல்படுத்துகிறான். உலோகத்தின் தன்மை வரப்படும் பொழுது, வெடிக்கும் தன்மை வருகின்றது.

இந்த உலோகத்தின் தன்மை, வெடிக்கும் தன்மை வந்தவுடன், மந்திரங்களெல்லாம் அடிப்பட்டுவிட்டது. மந்திரமெல்லாம் நிற்காது. “டம், டம்”, என்று மந்திரம் சொல்லும்முன், போட்டு அடித்துவிடுகின்றான். எந்திரங்களுக்குப் பவர் வந்தது. இன்று எந்திரங்களுக்கு முன் மந்திரம் நிற்காது.

மந்திரத்தைப் போல இன்று கம்ப்யூட்டர் வந்துவிட்டது. இந்தக் கம்ப்யூட்டர் வந்தபின், நாம் பேய், அது, இது, என்று சொன்னதை, இன்று நாம் T.V. யில் பேயைப் பார்க்கிறோம்.

நம் கண்ணின் நிலைகளில் அன்று பேயைப் பார்த்தோம். இன்று, உருவத்தின் நிலைகளைப் பேய்களைக் கண்ணில் பார்க்கிறோம். இதைப் போன்ற உணர்வின் தன்மை வரப்படும் பொழுது, கெமிக்கல் கலந்து இருப்பதனால், இந்தப் பேயின் உருவத்தை இன்று படம் எடுக்க முடியும். சொல்வது அரத்தமாகிறதல்லவா.

விஞ்ஞானம் உருவாகும் பொழுது,
கெமிக்கல் கலந்தபின் தான்,
அதன் நிலையை அறிகின்றோம்.
இன்று சிறுநீருக்குள், ஒவ்வொரு உணர்வின் தன்மை எது எது கலந்திருக்கிறது என்பதை, கெமிக்கல் வந்தவுடன், அதன் கலர்கள் மாறுகின்றது.

இதைப் போலத்தான், இவன் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை, மனித உணர்வுக்குள் வரப்படும் பொழுது, இன்று ஆவியை நாம் படம் பிடிக்க முடியும். முந்தைய நாட்களில் படம் பிடிக்க முடியாது.

இவனின் இரசாயணத்தன்மையுடைய நிலைகள்
நமக்குள் கலந்து கலந்து,
மனித உணர்வுக்குள் வந்தபின்,
அதில் சிக்கியதுதான் “எதிர்பாராத கண்டுபிடிப்புகள்”.


இவையெல்லாம் கண்டுபிடித்து, இன்று கம்ப்யூட்டராகவந்தது. இன்று இயந்திரத்தின் துணை கொண்டு மனிதனையே உருக்குலைக்கும் நிலை வந்துவிட்டது. இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

(3) கம்ப்யூட்டரின்  இயக்கம் (COMPUTER)

இப்பொழுது விஞ்ஞான அறிவு கொண்டு, காந்தப் புலனறிவுகளைக் கவரும் முலாம்களை, கம்ப்யூட்டர் நாடாக்களில் பூசுகின்றனர். அதில் பூசிய, உணர்வின் அதிர்வுகளுக்கொப்ப உருவங்களை அமைப்பதும், மற்ற நிலைகளையும் உருவாக்குகின்றனர். 

கம்ப்யூட்டரில் எதைப் பதிவு செய்கின்றோமோ, அந்தப் பதிவின் நிலைகொண்டு ஒரு இயந்திரத்துடன் இணைக்கப்படும் பொழுது, இயந்திரத்தின் அதிர்வை, கம்ப்யூட்டர் எலெக்ட்ரானிக்காக மாற்றி, அதனின் அதிர்வை மாற்றி, இயந்திரத்தை இயக்குகின்றது.

இதைப் போன்று, நமக்குள் இருக்கும் பிறிதொருவர் பற்றிய குறை உணர்வும், ஆனால், அதை மறைத்து வெளிப்படுத்தும் உணர்வுகளும் வெளிப்படுத்தும் பொழுது, நம்முடைய சொற்கள் எலெக்ட்ரானிக்காக மாறுகின்றது.

ஒருவரிடம் நாம் பேசும் பொழுது, நம்முடைய சொற்கள் குறையோ, அல்லது ஏமாற்றும் நிலையோ, அல்லது புகழ் தரும் நிலையோ, இத்தகைய உணர்வாகி விட்டால், அவருடைய செவிகளில் படும்பொழுது, அவருடைய கண், இந்த உணர்வின் ஒலி அதிர்வுகளைப் பார்க்கும். 

இதில் குறைகள் இருந்தால், அவருடைய கண்ணில் ஒரு மாற்றமாகி, நாம் சொல்லும் உணர்வுகளை உற்றுப் பார்க்கச் சொல்லும். இதைத்தான்  கண்ணன் துகிலை உரிந்தான்  என்று காவியங்களில் உரைத்திருப்பார்கள்.

உணர்வின் ஒலி அலைகளைப் பரப்பி, பதிப்பாக்கி, பிறிதொருவரின் உணர்வின் தன்மைகளை தமக்குள் நுகர்ந்து, உயிருடன் ஒன்றச் செய்யும் பொழுது எலெக்ட்ரானிக்காக மாறுகின்றது. ஆக, நம்முடைய உணர்வின்  இயக்கத்திற்கொப்ப, நமது உடலில் செயலாகின்றது, சொற்களும் வெளிப்படுகின்றது.

அதே போன்று, நாம் எந்த உணர்வின் தன்மையை ஏற்றுக் கொண்டுள்ளோமோ, அதற்குத் தக்கவாறு பிறிதொருவர் சொல்வாரென்றால், அது நமக்குள் ஒத்த நிலை இருந்தால், நமது செவி ஏற்றுக் கொள்ளும்.

அவ்வாறு இல்லை என்றால், செவி ஏற்றுக் கொள்ளாது. இருப்பினும், சொல்லில் வெளிப்படுகின்ற உணர்வின் தன்மைகளை, கண் உற்று நோக்கச் சொல்லும்.

எதிர்பார்ப்பின் நிலைகள் கொண்டு, அவரின் உடலிலிருந்து வெளிப்படக்கூடிய உணர்வின் அலைகள் கண்டு, கண்கள் அசையும், ஒளிகள் மங்கும், இதைப் போன்ற சில உணர்வுகளை ஏற்படுத்தும். 

அப்பொழுது, நமது கண்ணின் நிலைகள், அவருடைய உணர்வின் எண்ணங்களுடன் மோதப்படும் பொழுது, இவை நம்முள் கலந்து, உயிரில் மோதி, கலந்த உணர்வின் தன்மை எலெக்ட்ரானிக்காக மாறி, அந்த உணர்வின் அதிர்வுகள் உடல் முழுவதும் பரவுகின்றது. அப்பொழுது நமது சொற்களின் தன்மையும், தொனியும் சிறிது மாறுகின்றது.

இவை எல்லாம், கம்ப்யூட்டர் ஒரு இயந்திரத்தை இயக்குவது போன்று, நம்முடைய உயிர், நம்முள் ஏற்கனவே பதிவு செய்துள்ள உணர்வுகளும், மற்றொரு மனிதரின் உணர்வுகளும் இரண்டும் மோதப்படும்பொழுது, இவைகளுடைய வித்தியாசமான உணர்வலைகள் நமக்குள் கலந்து அதற்கொப்ப, அங்கங்களை இயக்குவதும், கண்களின் பார்வையின் நிலைகளும், சொற்களின் தன்மைகளும் வித்தியாசமாக வெளிப்படுவதைக் காணலாம்.

ஒரு கம்ப்யூட்டரை எடுத்துக் கொண்டால், எலெக்ட்ரிக், எலக்ட்ரானிக் என்ற நிலையில்,  ஒலியின் அதிர்வுகளுக்கொப்ப இயந்திரங்களை இயக்குவதைப் போன்று, சொல்லின் வலிமையும் மனிதனை இயக்குகின்றது.

(4) எலெக்ட்ரானிக்கின் இயக்கம்
புவியிலிருந்து வெளிப்படும் உணர்வின் தன்மைகளை, சூரியனின் காந்த புலனறிவுகள் கவர்ந்து, எலெக்ட்ரான்களாக மாற்றுகின்றது சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்பதான், மற்றொன்றை உருவாக்குகின்றது. 

ஒரு உயிரினம் தனக்கு எதிர்நிலை வரப்படும் பொழுது, தன்னைக் காத்துக் கொள்ள எண்ணி ஏங்குகின்றது.  இது சமயம், தான் எடுத்துக் கொண்ட உணர்வுகள் தன்னுள் இணைந்த பின், உணர்வின் தன்மை ஒன்றாகி, உணர்வின் உணர்ச்சிகள் மாறுகின்றது. 

உணர்ச்சிக்கொப்ப ரூபங்கள் மாறுகின்றது என்பதை எலெக்ட்ரிக், எலெக்ட்ரான் என்ற நிலையில் விஞ்ஞான அறிவால் கண்டுணர்கின்றனர் விஞ்ஞானிகள்.

இப்படி, விஞ்ஞான அறிவு கொண்டு, கண்டுணர்ந்த எலும்புக் கூட்டை எடுத்து, எலெக்ட்ரான் என்ற உணர்வின் அதிர்வுகளை, ஆயிரம் மடங்கு கூட்டுகின்றனர். இதன் தொடர் கொண்டு, இந்த உணர்வின் தன்மைகளை அறிந்து, இந்த உயிரினம் எதனை உணவாக உட்கொண்டது? எதனால் எதிர்நிலை ஆனது?  இதனின் ரூபம் என்னஇதனுடைய குணங்கள் என்ன? என்று விஞ்ஞானிகள் அறிந்துஅதனின் உருவத்தையே காட்டுகின்றார்கள்.

ஒரு திருடனைப் பிடிக்க வேண்டுமென்று, ஒரு கைரேகையை வைத்து மற்ற கைரேகைகளுடன், அன்று ஒப்பிட்டுப் பார்த்தார்கள். ஆனால் இன்று, எலெக்ட்ரிக், எலெக்ட்ரான் என்ற நிலைகள் கொண்டு, ஒரு கைரேகையின் உணர்வைப் பதிவாக்கிவிட்டால், ஒரு கம்ப்யூட்டரின் உணர்வின் இயக்கத்தின் தன்மை கொண்டு, குற்றவாளியின் உருவத்தையும், அவனின் குணத்தையும், அவனின் செயலையும், அவன் எங்கே இருக்கின்றான் என்பதையும் விரித்துக் காண்பிக்கின்றது. தான் தெரியாமல் தவறைச் செய்தாலும்இந்த உணர்வின் தன்மை கொண்டு அறிகின்றனர்.

இதை போன்று, யார் தவறு செய்தாலும், அந்த உணர்வின் தன்மை அவருக்குள் பதிவாகும் என்பதை, மறந்துவிட வேண்டாம். 

அதே போன்று, பதிவான உணர்வுகள் வெளிப்படும் பொழுது, சூரியனின் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது என்பதையும், நாம் அறிந்து கொள்ள வேண்டும் இதைத்தான், விஞ்ஞானிகள் எலெக்ட்ரிக், எலெக்ட்ரான் என்ற நிலைகளில் அறிந்துள்ளனர்.

ஆனால்  மெய்ஞானிகள், நமது உயிர், ஆதிமூலம் என்ற நிலைகளில் உருப்பெற்று, சேர்த்துக் கொண்ட வினைக்கொப்ப மனிதனாக எப்படி உருவானது, என்ற உணர்வின் தன்மையை அறிந்து,  அறிந்த உணர்வு கொண்டு நஞ்சினை வென்றனர். உணர்வினை ஒளியாக்கினர். 

ஒளியான அவர்கள், தன் இன மக்களும் பெறவேண்டும் என்று உண்மையின் உணர்வினை ரூபமாக்கினர். துவைதம் என்று கற்சிலையாக (ஆலயத்தில்) வடித்தனர். குணங்களின் தன்மையினைச் சித்தரித்தனர். நாம் பெறவேண்டிய மார்க்கம் எது? என்பதை உணர்த்தி, தீமைகளிலிருந்து விடுபடும்  நிலையை, மெய்ஞானிகள் உருவாக்கினார்கள்.

(5) ரோபோட்டின் இயக்கம் (ROBOT)
இன்றுவிஞ்ஞானம் கம்ப்யூட்டரில் கையால் பட்டனைத் தட்டிஎலெக்ட்ரிக்எலக்ட்ரானிக் என்ற நிலையில் ஒலி அதிர்வுகளைக் கொடுத்துச் செயல்படுவதைக் காட்டிலும்சொல்லால் இந்த உணர்வின் உணர்ச்சிகளைத் தூண்டிகம்ப்யூட்டரை இயக்கும் நிலைஇப்பொழுது உருவாக்கிக் கொண்டுள்ளது. யாம் இப்பொழுது சொல்வதை (1997),  சிறிது காலத்தில் நீங்கள் காணலாம்.

ஆகஅவன் அறிவின் தெளிவை இயந்திரத்தில் பதிவு செய்கின்றான். அதன் பதிவின் தன்மை கொண்டுஒரு சொல்லின் தன்மையை ஒரு கேசட்டில் பதிவாக்கிப் போட்டுவிட்டால்அந்த உணர்வின் அலைகள் ஒரு இயந்திரத்தை இயக்கவும்ஒரு தொழிலை நிர்வகிக்கவும் வருகின்றது.

இதற்கு ஆதாரபூர்வமாகரோபட் (ROBOT) என்ற நிலைகளில், ஒரு இயந்திரத்தை உருவாக்கிஅதற்குண்டான கட்டளைகளைக் கேசட்டில் பதிவு செய்துரோபட்டில் இணைத்துஅதனின் ஒலி அதிர்வுகளின் துணைகொண்டு ரோபட்டை இயக்கிமனிதனைப் போன்றே செயலாக்கும் தன்மைக்கேற்ப, மனித உருக் கொடுத்துஇன்று விஞ்ஞானிகள் இயந்திரத்தை உருவாக்கும் நிலை உள்ளது.

அதாவது, ஒலிகளின் உணர்வுகளை எழுப்பிவீட்டு வேலைகளையும் மற்ற நிலைகளையும் செயல்படுத்தும் தன்மை, இன்று உருவாகியுள்ளது. இப்படி எலெக்ட்ரிக்எலக்ட்ரானிக் என்ற நிலையில் உணர்வின் அதிர்வுகளை வைத்துஒரு இயந்திரத்தை இயக்கும் தன்மையில்விஞ்ஞானம் இன்று முன்னேறிவிட்டது.

விஞ்ஞானிகள் எலெக்ட்ரிக், எலெக்ட்ரானிக் என்பதன் அடிப்படையில், மனிதர் போன்ற ரோபாட்  என்ற இயந்திரங்களை உருவாக்குகின்றனர். தொழிற்சாலைகளில் இயந்திரங்களுக்கொப்ப, மாறுதல்களுக்கேற்ப, செயல்படும் வண்ணம் ரோபாட்டுகளை உருவாக்குகின்றனர். ஒரு வீட்டிற்கு வேண்டியவர், வேண்டாதவர் போன்றவர்களை அறிந்து இயங்கும் வண்ணம் உள்ள, ரோபாட்டுகளையும் உருவாக்கியுள்ளனர்.

ஒரு வீட்டிற்குள், திருட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒரு நபர் வந்தால், இந்த ரோபாட் உடனே கண்டறிந்து, ஓலமிடும். ஏனெனில், மனித உணர்வு மாறுபட்டு வரும் பொழுது, இந்த ரோபாட் இயந்திரம் உடனே கண்டறிகின்றது. உடனே அந்த திருடன்மீது, மின்சாரத்தைப் பாய்ச்சிக் கொன்றுவிடுகின்றது. இது போன்றுதான், நமது உயிர் எலக்ட்ரிக்காக இயங்குகின்றது, நாம் நுகரும் உணர்வுகள் எலக்ட்ரான்களாக நம்மை இயக்குகின்றன.

விண்ணிற்கு அனுப்பிய விண்கலம், அது, தான் கவர்ந்த உணர்வுகளை அலைகளாக மாற்றி, விண்ணில் பரப்பும்பொழுது, விஞ்ஞானிகள் இங்கிருந்து இயந்திரங்கள் மூலம் கவர்ந்து, விண்ணின் நிலைகளை அறிகின்றனர்.

விண்ணின் நிலைகளைப் படமெடுத்து, அறிந்து, அலைகளாகப் புவியில் பரவச் செய்யும் விண்கலத்தின் ஒரு பகுதி, பழுதாகிப் போனால், விஞ்ஞானிகள் விண்கலத்திலிருந்து வரும் தகவல்களை அறிய முடியாமல் போகின்றது. இதனால், விண்கலம் காணாமல் போய்விட்டது என்று விஞ்ஞானிகள் கூறிவிடுகின்றனர். ஆனால், அது அண்டவெளியில் பறந்து கொண்டுதான் இருக்கும்.

இன்று மனிதர்கள், தங்களுடைய குழந்தைகளோ, உறவினர்களோ காணவில்லை என்றால் பதட்டமடைகின்றனர். அவர்களுடைய இருப்பிடத்தை அறிய முடியவில்லை. இதனால். அவர்களுடைய நிலைபற்றி அறிய முடியாமல், பயம் வருகின்றது.

ஆனால், நாம் பயத்தைத் தவிர்த்து, காணாமல் போனவர் வீடு திரும்ப வேண்டும் என்ற உணர்வை வலுவாக்கினால், அவருடைய இயக்கங்களை மாற்றி, வீடு திரும்பும்படி செய்யலாம். அவர்கள் வீட்டை வெறுத்து, வெறுப்பாகச் செல்லப்படும்பொழுது, அவர்களுடைய உணர்வை நாம் காண முடிவதில்லை.

அன்பு கொண்டு வாழும் பொழுது, வெளியூர் சென்ற என் பையன் ஒரு மாதமாகியும் தபால் போடவில்லையே, எப்படி இருக்கிறானோ? என்ற  வேதனையின் உணர்வை எடுக்கும் பொழுது, உணர்வுகள் வலிமையடைகின்றன.

அந்தப் பையன் அமெரிக்காவில் இருந்தாலும், அந்த பையனின் உணர்வில் மோதி,  சிந்திக்கும் தன்மையை இழக்கச் செய்து, பணியில் தவறை ஏற்படுத்தி விடுகின்றன. சாலையில் நடந்து கொண்டு சென்று கொண்டிருக்கும் பொழுது, சிந்தனை மறைக்கப்பட்டு, மேடு, பள்ளம் தெரியாதபடி கீழே விழுந்து, காயங்கள் ஆகிவிடுகின்றன.

இவைகளெல்லாம் நாம் உணர்ந்து,  எப்படி விஞ்ஞானிகள், மாறுபட்ட உணர்வுகள் கொண்ட ஒருவன் உள்ளே நுழைகையில், ஓலமிட்டு, அவனைத் தாக்கிக் கொல்வதற்கு, ரோபாட் என்ற இயந்திரத்தை உருவாக்கியுள்ளனரோ, இது போன்றுதான், நாம் அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளை, நமக்குள் பெருக்கி வலுவாக்கும் பொழுது, அருள் ஞானிகளின் அருள் உணர்வுகள், நஞ்சான உணர்வுகளை அருகில் விடுவதில்லை. 

இதை உணர்ந்து, அருள் ஞானிகள் காண்பித்த அருள் வழியில் அருளளுணர்வுகளை தம்முள் பெருக்கி வரும் அன்பர்கள் அனைவரும்,
தம்முள் இருளை விலக்கி,
மெய் பொருள் காணும் திறன் பெற்று,
உயிரைப் போன்றே உணர்வனைத்தையும் ஒளியாக்கி,
ஏகாந்த நிலை பெற்று,
பிறவியில்லாப் பெருநிலை பெறும் நிலையாக
வேகா நிலை பெரும் நிலையாக வாழ்ந்து,
இவ்வாழ்வில் உடல் நலத்துடன், மன நலத்துடன், மன வளத்துடன்,
            வாழ்ந்து வளர்ந்திட எமது அருள் ஆசிகள்.