ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 9, 2025

தீமை செய்யும் உணர்வுகளை அடிக்கடி சுவாசித்தால் உடல் உறுப்புகளில் ஏற்படும் நிகழ்ச்சிகள்

தீமை செய்யும் உணர்வுகளை அடிக்கடி சுவாசித்தால் உடல் உறுப்புகளில் ஏற்படும் நிகழ்ச்சிகள்


எந்த மனிதன் கோபிக்கின்றானோ வெறுப்படைகின்றானோ தற்கொலை செய்து கொள்கின்றானோ குரோதமான நிலைகளில் ஒருவனைத் தாக்குகின்றானோ இவையெல்லாம் நாம் கண்ணுற்றுப் பார்க்கப்படும் பொழுது அவன் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகள் சூரியனால் கவரப்பட்டு இந்தக் காற்றிலே அலைகளாக மாற்றப்பட்டுள்ளது.
 
அந்த மனிதனை நாம் பார்க்கப்படும் பொழுது
1.அந்த மனித உடலிலிருந்து வெளிப்பட்டதை
2.நமது கண் அந்த மனிதனை நெஞ்சு எலும்பில் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்கி விடுகின்றது.
 
அவன் உடலிலிருந்து என்னென்ன நிலைகள் வெளிப்பட்டதோ அவன் கோபமாகப் பேசுகிறான் என்றால் அல்லது வெறித்தனமாகப் பேசுகிறான் என்றால்
1.அதன் உணர்வுகள் நம் உடலில் பதிவாக்கி
2.அவனை எண்ணும் போதெல்லாம் அந்த வெறித்தனமான சொல்லும் நமக்குள் அந்த செயலும் வருகின்றது.
 
அல்லது அவன் வெறித்தனமாகச் செயல்படுத்தும் போது அந்த உணர்வு நமக்கு அது பயமாக இருந்தால் அந்த நேரத்தில் வெறித்தன்மையான உணர்வுகள் நம் உடலில் பயத்தையே ஊட்டும். சிந்திக்கும் ஆற்றலையும் செயலற்றதாக மாற்றிவிடும்.
 
இப்படி
1.நாம் சந்தர்ப்பத்தால் சந்தித்த உணர்வுகள் எல்லாம்
2.நெஞ்சின் எலும்புக்குள் எண்ணிலடங்காத வித்துக்களாக ஊழ் வினையாக அது பதிவாகியுள்ளது.
 
இவை அனைத்தும் அதனதன் உணர்வுகளைக் கவர்ந்து அதற்கொப்ப நம் உடலில் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் அத்தகைய அணுக்கள் நம் உடலில் உருவாகத் தொடங்கி விடுகின்றது நம் இரத்தத்தில்.
 
இந்த இரத்தத்தில் கலந்து உடல் உறுப்புகளில் இவையெல்லாம் கலந்து விடுகின்றது ஆனால் உடலில் நல்லவைகளாக இருந்து வளர்ந்த இந்த உணர்வுகளில் நிலைகளில் நாம் படிப்படியாக வேதனைப்பட்டோர் வெறுப்படைவோர் உணர்வுகளை நாம் நுகர நுகர நமது உடலில் அத்தகைய அணுக்கள் விளைந்து விடுகின்றது.
 
மீண்டும் அவர்களைப் பற்றி எண்ணும் போதெல்லாம் நமக்கு வெறுப்பு பயம் கோபம் குரோதம் அது எந்தெந்த குணங்களோ எண்ணும் போதெல்லாம் அந்த உணர்ச்சிகள் முன்னணியில் வந்துவிடுகிறது.
 
அப்பொழுது அதனால் நம் உடலுக்குள் நல்ல குணங்களுக்கும் வெறுப்பான குணங்களுக்கும் இது ஒன்றுக்கொன்று இந்த உணர்வலைகள் பாயப்படும் பொழுது
1.உடலுக்குள் பல விதமான வலிகள் பல கலக்கங்கள் நம்மை அறியாமலேயே ஏன் எதற்குச் சங்கடப்படுகின்றோம்…? என்று தெரியாது.
2.அத்தகைய உணர்வுகள் நம் உடலுக்குள் போர் செய்யத் தொடங்கி விடுகின்றது.
 
நம் கண்ணால் பார்த்தவுடன் அல்லது நினைத்தவுடன் அந்த அதிர்ச்சி வருகின்றது. அதே சமயத்தில் உடலுக்குள்ளும் அந்த அதிர்ச்சியின் உணர்வு தோன்றுகின்றது அன்றைய நிலைகளில். அப்போது நல்லதை எண்ணுவதோ அல்லது அதைச் செயல்படுத்துவதோ முடியாது.
 
அந்த வெறித்தனமான உணர்வுகளை நாம் நுகர்ந்தால் அந்த உணர்வின் தன்மை கொண்டு அறியப்படும் பொழுது அந்த உணர்ச்சிகள் உமிழ் நீராக மாறி சிறு குடலுக்கு வரும் பொழுது வெறித்தனமான உணர்ச்சிகள் சிறு குடலை உருவாக்கிய அணுக்களை (நாம் எப்படிப் பயந்தோமோ) அதனின் இயக்கத்தைத் தணியச் செய்து நாம் சாப்பிட்ட ஆகாரத்தை அஜீரணம் ஆக்கி விடுகிறது அல்லது விஷத்தன்மையான இரத்தமாக மாற்றி விடுகின்றது.
 
இப்படி நாம் நுகர்ந்த உணர்வுகள் பெருங்குடலில் சேர்ந்தாலும் அதே வெறித்தனமான உணர்வுகளைச் செயல்படுத்தும் போது பயத்தின் உணர்வுகள் வந்து ஆகாரத்தை ரசமாக மாற்றும்போது அதிலேயும் இந்த விஷத்தன்மை கலந்துவிடுகிறது.
1.அவை நம் கணையங்களிலே சேர்க்கப்பட்டு அமிலங்களாக மாற்றும் போது
2.அந்த அமிலங்கள் கல்லீரல் மண்ணீரலிலே படும் பொழுது இதே உணர்ச்சியின் தன்மை கொண்டு
3.அந்தக் கல்லீரல் மண்ணீரலில் நல்ல இரத்தமாக மாற்றுவதற்கு மாறாக அதையும் சரியாக இயக்க விடாதபடி
4.இரத்தத்தில் விஷத்தன்மை கொண்ட அணுக்களாகப் பரவும் தன்மை வருகின்றது.
 
இப்படி இந்த விஷத்தின் தன்மை பரவி நுரையீரலுக்குள் சென்றபின் அதையும் சீராக இயக்காத படி அந்த நுரையீரலில் கலந்த பின் விஷத்தின் தன்மை நுகந்து சிந்திக்கும் தன்மையை இழந்து நம்மை அறியாமலே ஏன் எதற்கு என்று வெறி உணர்ச்சிகள் வருவதும் அல்லது சோர்வடைவதும் பயமடைவதும் வரும்.
 
அனால் நாம் தவறு செய்யவில்லை. இதே போல நமது உடலில் அடிக்கடி நிகழும் இந்த நிகழ்ச்சிகளிலிருந்து நாம் தப்ப வேண்டும்.