
அகஸ்தியனுக்குள் விளைந்த நுண்ணறிவுகள்
1.அகஸ்தியன்
கற்றறிந்து வந்தவனல்ல.
2.தாய்
கருவிலே கவர்ந்த உணர்வுகள் அந்த அணுக்களே இயக்கி அவன் உடலுக்குள்ளே விளைந்தது.
3.விஞ்ஞானி
எப்படி உணர்வுகளை உருமாற்றுகின்றானோ அதைப்போல
4.இயற்கையின்
தன்மையைத் தனக்குள் உருவாக்கி அந்த உணர்வினைக் கண்டுபிடிக்கும் மெய்ஞானி ஆகின்றான்.
விஞ்ஞானி
ஒன்றைப் பதிவு செய்து அதைப் பெற வேண்டும் என்று தன் உணர்வைக் கூட்டுகின்றான். அதன்
வழி நுகர்ந்தறிந்த உணர்வு கொண்டு ஒவ்வொரு பொருளையும் அவன் உருவாக்குகின்றான்.
உருவாக்கும்
உணர்ச்சிகள் அவனுக்குள் வரப்படும் பொழுது அந்த அணுக்கள் அவனுக்குள் உருவாகின்றது.
அப்படிப்பட்ட அணுக்கள் உருவான பின் உணவுக்காக உணர்ச்சிகளைத் தூண்டும் பொழுது உணர்வின்
அறிவாக அது இயக்குகின்றது.
மேலும்
மேலும் இவன் கண்டுணர்ந்த உணர்வுகளை இணைக்கப்படும் பொழுது மகிழ்ச்சி பெறும்
உணர்வுகளாகவும் அதைச் செயலாக்கும் உணஸ்சிகளின் செயல்களும் மற்ற உணர்வுகளை நுகந்தறிந்து
செயலாக்கத்தையும் கண்டுணர்ந்து விஞ்ஞானி ஆகின்றான்.
அதைக்
கண்டுணர்ந்தவன் எந்திரத்தை உருவாக்கி அதை எப்படிப் பிரிப்பது…? என்று தத்துவத்தைக்
கண்டு இவன் கண்டு கொண்ட ஒரு பொருளுக்குள் மறைந்த உணர்வை எவ்வாறு பிரிக்க வேண்டும்…?
என்றும் அதற்குள் இன்ன பொருள் இருக்கிறது என்றும் விஞ்ஞானி காணுகின்றான்.
ஆனால்
அதே சமயத்தில் இன்ஜினியர் அதற்குண்டான உறுப்புகளைச் செய்து விஞ்ஞானி கண்ட
உணர்வுகளை எந்திரத்தின் துணைகொண்டு இவனின் உணர்வைக் கொண்டு
1.எதனை
எதனுடன் கலந்தால் வெப்ப நிலைகள் எப்படி இங்கே கூடுகின்றது…?
2.வெப்ப
நிலைகள் கொண்ட பின் ஆவியாக ஆன பின் இதை உறையச் செய்யும் மார்க்கம் என்ன…? என்ற
3.டெக்னிகலை
இன்ஜினியர்கள் அதைக் கண்டுகொள்கின்றார்கள்.
அவன்
கொடுத்த கருவினை இவன் உருவாக்கி இதைப் பிரித்துச் சேமிக்கும் உணர்வாக விஞ்ஞானி
கொடுக்கும் நிலைகள் கொண்டு “இதனுடைய ஆக்கச் சக்தி இவ்வளவுதான்” என்ற அளவீடு கொண்டு
வரப்படும் பொழுது இன்ஜினியர் அதற்குத் தக்க எந்திரங்களை உருவாக்கி உறுப்புகளுக்கு
வலுக் கொடுத்து அதிலே வரும் தடைகளைச் சீர்படுத்தி உருப் பெறும் உணர்வுகளைப் பிரித்து
அதை எவ்வாறு செயல்படுத்துவது…? என்ற நிலைகளைக் கொண்டு வருகின்றார்கள்.
உதாரணமாக
மணல்களைக் கடலிலிருந்து எடுத்து வந்து அதிலே பிரிக்கப்படும் போது வெடிக்கும் நிலை
வந்து விட்டால் என்ன செய்வது…? ஹைட்ரஜன் என்ற நிலையில் ஊடுருவப்பட்டு கடலின் தன்மை
கொண்டு உப்புச் சத்தின் நிலைகள் அதிலே மின்னல் தாக்கப்படும் பொழுது “யுரேனியமாக”
அது மாறுகின்றது.
அதே
கடலின் சத்தின் தன்மையை எடுத்து இது பிரிக்கப்படும் பொழுது ஆவியின் தன்மை அடைந்த
பின் இதற்குள் அடைத்து மீண்டும் கிடைக்கும் உணர்வு கொண்டு இதைக் கரைத்து அணுத் தன்மை
கொண்டதாகப் பல நிலைகள் பிரிக்கின்றார்கள்.
1.அணு
விசைகளை அணுக் கதிரியக்கங்களை தனக்குள் ஒரு பவுடரைப் போன்று உருவாக்குகின்றார்கள்.
2.மணலில்
இருக்கும் தன்மைகளை மணலைக் கருக்கி அதனுள் வரும் உணர்வினைப் பிரித்து அணுகுண்டுகளைத்
தயார் செய்கின்றான்.
3.அந்தக்
கடுகளவு இருக்கும் அணு விசைகளைக் கொண்டு ஒரு இயந்திரத்தில் இணைக்கப்படும் பொழுது
4.அதனுடைய
வேகத்தடிப்பு கொண்டு இயந்திரத்தையே துரிதமாக இயக்கச் செய்கின்றது.
இது
எல்லாம் விஞ்ஞானி கண்ட நிலைகள்.
இதைப்
போன்று தான்
1.”விஷத்தின்
துடிப்பு கொண்ட நிலைகளைத் தாய் கருவிலே பெற்ற அகஸ்தியர்”
தன்
உணர்வின் எண்ணம் கொண்டு மூன்றாவது வயதிலே வானத்தை உற்றுப் பார்க்கின்றான்.
3.அந்த
வானுலகம் எவ்வாறு இயங்குகின்றது…? என்பதையும் அது எப்படிப் பிரபஞ்சமாக மாறுகிறது…?
என்பதையும்
4.அதிலிருந்து
வரக்கூடிய சக்திகளை நமது பூமி துருவத்தின் வழி எவ்வாறு கவர்கிறது…? என்பதையும்
5.நஞ்சு
கலந்ததாக வருவதைத் தனக்குள் இவன் ஒடுக்கி அந்த உணர்வின் இயக்கப் பொறிகளை அகஸ்தியன்
கண்டுணர்கின்றான்.
அவ்வாறு
கண்டு கொண்ட நிலையில் அந்தக் காட்டுக்கே அரசனாக மாறுகின்றான் தன் 5 வயதிலேயே…!
இறைச்சிகளை
உணவாக உட்கொண்ட அவன் இன மக்கள் இறைச்சிகள் அல்லாத உணவை எவ்வாறு உட்கொள்ள வேண்டும்
என்று கனிகளையும் மற்றதுகளையும் உட்கொள்ளும்படி செய்தான்.
பல
பயிர்களை இட்டு பல பல வித்துக்களை ஒன்றாக்கி அதையெல்லாம் விளைய வைத்த பின் உணவாக
உட்கொள்ளும் நிலைக்குக் கொண்டு வருகின்றான்.
தனக்குள்
உணர்ந்த நிலைகள் கொண்டு இறைச்சிகளை உட்கொள்ளாது அருள் ஒளி உணர்வினை உருவாக்கும்
தன்மை பெறுகின்றான். முதல் மனிதன் அணுவின் தன்மையை அறிந்த அகஸ்தியன் பல பல தாவர
இனங்களை உருவாக்குகின்றான்.
அதன்
வரிசையில் மனித நிலைகளுக்குள் சிறுகச் சிறுக ஊடுருவி இதன் உணர்வின் எண்ணங்கள் வலுப்பெற்று
விஞ்ஞானி ஆகின்றார்கள். கற்றுணர்ந்து உணர்வினை அறியும் அறிவுக்கு வரும் பொழுது
இவன் உணர்வினை எதற்குள் செலுத்துகின்றானோ அதில் வளர்ச்சி பெற்று விஞ்ஞானி
ஆகின்றான்.
விஞ்ஞான
அறிவு கொண்டு ஒன்றின் இயக்கங்களைத் தனித்துப் பிரித்து ஒழுங்குபடுத்தும் நிலைக்கு
வருகின்றான் மனிதன். விவசாய நிலங்களில் கால சூழ்நிலைக்கொப்ப வெயில் காலங்களிலும்
வளரும் பயிர்களை உருவாக்குகின்றான்.
வெயில்
காலத்தில் நமக்கு வியர்க்கின்றது. சனிக்கோளின் உணர்வுகள் மற்ற மற்ற அணுக்களில்
இருக்கப்படும் பொழுது ஒன்றுடன் ஒன்று வெப்பத்தின் தணல் ஆகும் பொழுது ஆவியாக
மாறுகின்றது.
1.ஆவியின்
தன்மை வரப்படும் பொழுது அதிலிருந்து நீர் சத்தைப் பிரிக்கின்றது.
2.அந்த
நீர்சத்தை உணவாக உட்கொள்ளும் தாவர இனங்களை உருவாக்குகின்றான்.
மறைந்த
நிலையில் நமக்குள் வியர்க்கின்றது. அதுவே அந்த அணுவின் உணவாக உட்கொண்டு பயிரினங்கள்
வளரும் தன்மையும் அதை உருவாக்குகின்றான் விஞ்ஞானி.
அன்று
மெய்ஞானி இத்தகைய நிலைகள் காலப்பருவத்திற்கொப்பத் தனக்கு உணவு தேவை என்றும் பல பல
உணர்வுகளை இணைத்து மனிதனுக்கு உகந்த தாவர இனங்களாக உருவாக்கினான்.
இறைச்சிகளை
உணவாக உட்கொள்ளாது தாவர இனத்தைப் பிரித்து அந்த உயர்ந்த குணங்களைத் தனக்குள்
சேர்த்து உணர்வின் ஒளியாக மாற்றி ஒளியான அணுக்களாக உருவாக்குகின்றான் அகஸ்தியன்.
அவ்வகையில்
வளர்ந்தவன் தான் பல தாவரங்களின் நிலைகளை உண்மையை அறியும் பொழுது அதையெல்லாம்
நுகந்தறிந்து தனக்குள் அணுவாக உருவாக்குகின்றான்.
1.அறியும்
உணர்வுகள் இவனுக்குள் இரு மடங்கு மோதப்படும் பொழுது ஞானத்தின் தன்மை பெறுகின்றான்.
2.ஒன்றுடன்
ஒன்று இணைக்கப்படும் பொழுது அதனுடைய இயக்கங்கள் எவ்வாறு என்றும் தனக்குள்ளேயே
அறிகின்றான்.
3.அவன்
எவ்வாறு அறிகின்றான்…? என்று குருநாதர் காட்டிய அருள் வழியில் இதை எல்லாம் அனுபவபூர்வமாக
அறிந்தேன்.
அதையே
தான் உங்களுக்குள்ளும் இப்போது பதிவு செய்கின்றேன்.