
தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் சப்தரிஷி மண்டல எல்லையை அடையும் நெறி
மனிதனின் வாழ்க்கையில் வேதனை வேதனை என்ற உணர்வுகள் அதிகமாகி
விட்டால் நல்ல குணங்கள் அனைத்தும் செயலிழந்து விடுகின்றது
1.நல்ல குணங்கள் அடங்கிய பின் வேதனை அதிகமாகி
2.”இந்த உடலை விட்டு எப்படா செல்வோம்…” என்ற இந்த உணர்வுகள் வந்துவிடும்
ஆனால் யாம் சொல்லும் தியானத்தைக் கடைப்பிடித்த ஒரு அன்பரின் நினைவு என்ன…?
1.சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்ற
உணர்வுகள் வலுவாக இருப்பதால்
2.அந்த துருவ தியான நேரத்தில் காலை நான்கு மணிக்கு அதனின் வலுக் கொண்டு
3.அந்த ஆன்மா பிரிந்து அதனுடைய ஈர்ப்பு வட்டத்திலே சென்றடைகின்றது.
ஆனால் வேதனை என்ற உணர்வு வரப்படும் பொழுது விஷத்தின் தன்மை
கொண்டவர் அனைவருமே அமாவாசை நாளுக்கு அருகிலே தான் உடலை விட்டுப்
பிரிவார்கள். அதாவது விஷ அலைகள் பரவும் நேரத்திலே தான் அந்த
ஆன்மாக்கள் பிரியும்.
அப்படிச் சென்றால் வேதனையான உணர்வுகளை அதிகமாக எடுத்து விஷத்தின் தன்மை பெற்று
அந்த உணர்வோடு வெளி வரப்படும் பொழுது பாம்பு எப்படி விஷத்தைப் பாய்ச்சி மற்ற உயிரினங்களை உணவாக எடுக்கின்றதோ இந்த விஷம் அவர்களுக்கு
ஒத்துக்கொள்ளும்.
1.அதன் உணர்வு கொண்டு இந்த மனித உடலைச் சவமாக்கிவிட்டு விஷத்தின் அணுக்களாகப் பெருகி…
2.உயிர் பாம்பின் ஈர்ப்பிற்கு அழைத்துச் சென்று
நம்மைப் பாம்பாக உருவாக்கிவிடும்,
ஆடு, மாடு மற்ற
உயிரினங்கள் எல்லாம் ஓர் விஷத்தின் தன்மையைத் தனக்குள்
உடலாக்கிக் கொள்கின்றது. அதனுடைய கழிவை (சாணத்தை) நல்லதாக
வெளிப்படுத்துகின்றது.
இத்தகைய தன்மையிலே இந்த மனித உடலில் வேதனை என்று உணர்வு அதிகமாகி
விட்டால் விஷத்தின் உணர்வைக் கவர்ந்து
அந்த வலுவின் தன்மை கொண்ட மாடாகவோ ஆடாகவோ… அதிகமான விஷமானால் விஷத்தைப் பாய்ச்சிப் பாம்பாகும் நிலை வந்துவிடும்.
காரணம்… ஒருவர் வேதனைப்படுகின்றார் என்று… “அதைக் கண்டு
சந்தோஷப்பட்டார்கள்” என்றால் நிச்சயம் பாம்பாகத்தான் அடுத்து
பிறப்பார்கள்.
சந்தர்ப்பத்தால் வேதனைகளின் உணர்வை நுகர்ந்தால்…
1.அந்த வேதனையை மறக்க துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அதிகமாகச் நாம் சேர்த்துக் கொண்டு வந்தால்
அந்த உணர்வு வலுவாகி
2.அந்த அடிப்படையில் உடலை விட்டுச் செல்லும் பொழுது சப்தரிஷி மண்டலத்தின் எல்லையைச்
சென்றடைகின்றோம்
3.இந்தத் தியானத்தைக் கடைப்பிடிக்கும் அன்பர்கள்
அனைவரும் செயல்படுத்த வேண்டிய நெறி முறை இது.