
சொர்க்கலோகம்
பல கோடி நஞ்சுகளை வென்ற அகஸ்தியன்
துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆனான். அவன்
உணர்வை நாம் பெற்றோம் என்றால் சொர்க்கலோகம் என்ற நிலையை அடைகின்றோம்.
சொர்க்கவாசல் என்பது
1.நம் உயிரின் நிலை கொண்டு எந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்கின்றோமோ
2.நுகர்ந்த உணர்வுகள் உயிருடன் ஒன்றி அது விண் செல்லச் செய்கின்றது.
நாம் சுவாசிக்கும் உணர்வு எதுவோ நரகலோகம் செல்வதும் அதன் வழியே… ஆனால் சொர்க்கலோகம் செல்வதும் அதன்
வழியே…! ஆனால்… ஆறாவது அறிவின் துணை
கொண்டு எவர் ஒருவர் சொர்க்கத்தின் உணர்வை உருவாக்குகின்றனரோ அவரே விண் செல்கின்றார்.
அகஸ்தியன் அணுவின் இயக்கத்தைத் தன்னுள் உணர்ந்து அவன் வெளியிட்ட உணர்வுகள் அவனில்
விளைந்த நிலைகள் இந்தப் பரமான பூமியில் பரலோகமாகப் படர்ந்து கொண்டே உள்ளது.
1.அவன் பெற்ற உணர்வை நாம் நுகர்ந்து சிவலோகமாக மாற்றி அருள் லோகமாக மாற்றி
2.இருளை அகற்றி அருள் ஒளி என்ற உணர்வின் தன்மை ஊட்டி உருவாக்கி
3.எதனை உற்று நோக்கி அந்தத் துருவ நட்சத்திரத்தின்
சக்தியைப் பெற வேண்டும் என்று ஏங்கினோமோ - அதன் வழி கொண்டு
சொர்க்கலோகம்
4.எந்தத் தீமையும் தனக்குள் வராது ஒளியின் சிகரமாகத் தனக்குள் உருவாக்கும் நிலைகள்
பெறச் செய்கின்றது.
இந்தச் சந்தர்ப்பத்தை இழந்தால் எதன் உணர்வை நமக்குள் அதிகரிக்கின்றோமோ அதன்
வழி கணங்களுக்கு அதிபதியாகி உயிர் உடல்களை மாற்றி அமைத்துவிடும்.
அதைப் போன்ற நிலைகளில் இருந்து விடுபடும் நிலையாக நமது குரு ஈஸ்வராய குருதேவர்
காட்டிய அருள் வழிப்படி நாம் அருள் ஒளி பெற்று பிறவியில்லா நிலை அடைந்த துருவ
நட்சத்திரத்தின் உணர்வை நுகர்வோம்.
துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் அலைகளை அதிகாலை நேரம் சூரியன் துருவப் பகுதி
வழியாகப் புவியின் ஈர்ப்புக்குள் நமக்கு முன் அழைத்து வருகின்றது.
1.அதைப்
பருகுவதற்கு எம்முடைய உபதேசத்தின் உணர்வைப் பதிவாக்கி
2,அந்த உணர்வின் எண்ணத்தை வலுவாக்கி விண்ணை நோக்கி ஏகி அருள் ஒளியின் உணர்வைச்
சுவாசியுங்கள்.
3.சுவாசித்த உணர்வுகளை உயிர் உருவாக்கும் அதை நாம் உருவாக்குவோம்
4.இருளை அகற்றும் அருள் சக்தியை நாம் அனைவரும் பெறுவோம்.