
கண்களுக்கு நாம் கொடுக்க வேண்டிய உயர்ந்த சக்தி
இந்த உபதேசத்தைக் கேட்பவர்கள்…
1.உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உடல் நலத்தோடு இருக்க வேண்டும் என்று
அந்தச் சக்தியை முதலிலே நாம் பெறுதல் வேண்டும்.
2.கணவனும் மனைவியும் ஒன்றாக இணைந்து ஒற்றுமையை
உருவாக்குதல் வேண்டும்.
இந்த உணர்வின் சக்தி
கொண்டு குழந்தைகளுக்குள் சில குறைபாடுகள் இருப்பினும் மகரிஷிகளின்
அருள் உணர்வுகள் அவர்கள் பெற வேண்டும் மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெற வேண்டும் என்று
குழந்தைகளுக்கு இந்த ஆசியை ஊட்டுங்கள்.
நம்முடைய நினைவுகள் அதுவாக இருக்க வேண்டும்.
கல்வியில் திறன் இல்லை என்றாலும்
1.மகரிஷிகளின் அருள் உணர்வு அவர்கள் பெற வேண்டும்
2.கல்வியில் சிறந்தவனாக வளர வேண்டும்
3.என்றும் அருள் வழியிலே வாழ
வேண்டும் என்று எண்ணங்களைக் கூர்மையாக அவன்
மேல் பாய்ச்சுங்கள்.
அதைப் போல குழந்தைகளும் எண்ணி ஏங்கி இதைப் பதிவாக்குங்கள்.
அம்மா அப்பா அருளால் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். கல்வியில் சிறந்த ஞானம்
பெற வேண்டும் என்ற உணர்வை ஒன்று சேர்த்து இணையுங்கள்.
அப்படி இணைக்கக் கற்றுக்
கொண்டால் இந்த உணர்வின் சக்தி நிச்சயம் குழந்தைகளுக்குள் ஞானமாக வளரும்… அந்த உணர்வின் தன்மை விளைகின்றது. குழந்தைகள்
மீது இப்படித்தான் பாசம் வைக்க வேண்டும். கல்வியில் சிறந்த ஞானம் வரும்.
இன்று தெரிந்தோ தெரியாமலோ விஞ்ஞான அறிவில் சிக்குண்ட நாம் ரேடியோ டிவி
இதைப் போன்ற நிலைகளில் பார்த்து கர்ப்பமுற்று இருக்கும்
காலங்களில் பகைமை உணர்வுகளையும் மற்ற தீமைகளின் உணர்வுகளை அதிகமாகப் பார்க்கப்படும் பொழுது இதைப் பதிவாக்கி விட்டால்…
பிறக்கும் குழந்தைகள் அதைத்தான் செய்யும்.
ஆனால் கர்ப்ப காலங்களில் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் அருள்
உணர்வுகள் பெற வேண்டும் என்று யாம் உபதேசித்த உணர்வுப்படி
1.அகஸ்தியன் பெற்ற சக்திகளை எல்லாம்
பெற வேண்டும் என்று இந்த உணர்வினைச் செலுத்தினால்
2.வியாசகன் எப்படி விண்ணுலக ஆற்றலைக் கண்டானோ இந்த உணர்வுகள் அனைத்தும்
3.கருவிலே வளரும் குழந்தை அதை அறியும் ஆற்றல் பெறும்.
அகஸ்தியன் எவ்வாறு வானஇயலையும்
துருவத்தின் ஆற்றலையும் புவியியலையும் அறிந்தானோ கருவிலே வளரும் குழந்தைகள் அதைப் பெற வேண்டும்
என்று விண்ணை நோக்கி ஏங்குங்கள் துருவ தியான நேரத்தில்.
அதன் உணர்வைத் தனக்குள் செலுத்துங்கள்… தன் கருவிலிருக்கும் குழந்தை பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
கண்ணின் நினைவை உள்ளுக்குள் செலுத்தப்படும் பொழுது இந்த உணர்வலைகள் கருவிலிருக்கும் குழந்தைக்குள்ளும் அது பாயும்.
நமக்குள் வளர்ச்சி கொண்டிருக்கும் அணுக்களுக்குள்ளும் இந்தச்
சக்தி பெருகும்.
கண்ணின் பார்வை எங்கிருந்தாலும் அதைத்தான் “பரமாத்மா” என்று
சொல்வது.
1.நாம் இந்த நினைவை… இந்தப்
பிரபஞ்சத்திற்குள் எங்கே நினைவைச் செலுத்தினாலும்
2.அதை ஈர்க்கும் சக்தி நம் கண்களுக்கு உண்டு.
அதை ஈர்க்கும்
சக்தி கொண்ட மனித உடலுக்குள் உங்களுக்குள் பதிவு செய்யப்படும்
பொழுது அதைப் பெற வேண்டும் என்ற நினைவின் ஆற்றலைச் செலுத்துங்கள்.
எனக்கு குருநாதர் அதை கொடுத்ததால் தான்…
1.அந்த வலிமை கொண்டு பெறும் சக்தியும் அதை அறிந்திடும்
உணர்வும் வளர்த்திடும் உணர்வும் பெற்றாலும்
2.உங்களுக்குள் நீங்களும் அதை பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் தான்
உங்களுக்குள் இதைப் பதிவு செய்கிறேன்.
நீங்கள் அனைவரும் பெற்று உங்களைச் சார்ந்தவர்களையும் அதைப் பெறச் செய்து பகைமைகளையும் தீமைகளையும் அகற்றும் சக்திகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.
அதை நீங்கள் எல்லோரும் பெறுவீர்கள் என்று பிரார்த்திக்கின்றேன்.