
எண்ணவில்லை என்றால் “பதிவில்லை…” மீண்டும் நினைக்கவில்லை என்றால் “ஈர்ப்பு இல்லை”
ஒருவர் திட்டி விட்டார்… என்னை இப்படித் திட்டுகின்றான்…! என்ற எண்ணத்தைப்
பதிவு செய்து விட்டால் மீண்டும் என்ன செய்கின்றோம்…?
திட்டினான்… திட்டினான்… திட்டினான்… என்று அவனுடைய உணர்வுகள் நமக்குள்
வளர்ச்சியாகி அவன் மீது வெறுப்பாகி இந்த உடலுக்குள் இருக்கும் நல்ல அணுக்களுக்கும்
இதற்கும் வெறுக்கும் தன்மை வந்து இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது… பல விதமான நோய்கள் உடலிலே உருவாகின்றது.
இதையெல்லாம் இயற்கை எவ்வாறு விளைகிறது…? என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்கே உணர்த்துகின்றேன். பொறுமையாகக் கேளுங்கள்.
ஏனென்றால் விஞ்ஞான உலகில் இன்று அஞ்ஞான வாழ்க்கை வாழுகின்றோம். அண்டத்தையும் அளந்தறியும் சக்தியாகக்
கம்ப்யூட்டர் என்று சாதனம் மூலமாகக் காணுகின்றார்கள். உடலின்
இயக்கத்தையும் அறிகின்றான்.
எங்கோ காணா இடத்தில் இருப்பதையும் (கோள்கள்) இங்கிருந்து நுகருகின்றான். எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று நிலைகளில் இங்கே பதிவாக்கிப் பல ஆயிரம்
மடங்கு பெருக்கி உந்து விசையால் விண்ணிலே ஏவுகின்றான்.
கோள் எங்கே இருக்கின்றதோ அதை இங்கே பதிவாக்கி அதை வைத்து இராக்கெட் என்ற
சாதனத்தை விண்ணிலே பாய்ச்சப்படும் பொழுது
1.தன் இனமான உணர்வு கண்டபின் அந்தக் கோளுக்கே இவன் செலுத்திய இராக்கெட்டை
அழைத்துச் செல்கின்றது…
2.அங்கிருப்பதையும் அறியும்படி செய்கிறது.
இவ்வாறு இருக்கும் இன்றைய விஞ்ஞானக் காலத்திலே பக்தி மார்க்கங்களில்… யாரோ செய்வார் சாமியார் செய்வார்
எந்திரம் செய்யும் மந்திரம் செய்யும் ஜாதகம் செய்யும் யாகம் செய்யும் வேள்விகள்
செய்யும் என்ற நிலைகளில் தான் அஞ்ஞான வாழ்க்கை வாழ்கின்றோம்.
நமக்குள் தீமை என்ற நிலை இருப்பினும் அதை நீக்கிட
1.அருள் மகரிஷிகள் உணர்வை நாம் நுகர்ந்தால் அதை நமது உயிர் ஓ என்று ஜீவ அணுவாக
மாற்றுகிறது
2.அவ்வழியில் அதைத் திரும்ப எண்ணும் பொழுது நமக்குள் அந்த நன்மை செய்விக்கும்
நம் உடலை நலம் பெறச் செய்யும் சக்தியாக வளரும்
3.நம் சொல்லைக் கேட்போருக்கும் நலம் பெறும் சக்தியாக மாறும் என்பதனைத்
தெளிவாகக் கூறி இருப்பினும்
4.அதை நாம் யாரும் இதுவரையிலும் பின்பற்றவில்லை.
சாமியார் வந்துவிட்டால் சாமியாரிடம் தான் பெரிய சக்தி இருக்கிறது என்று
அவரிடம் ஆசி வாங்கச் சென்று விடுகின்றோம். ஆனால்
1.சாமி சொன்ன இந்த உணர்வின் சக்தியைப் பதிவு செய்து அதை மீண்டும் நினைவு
கொண்டால் அந்த உயர்ந்த குணத்தை நாம் பெற முடியும்.
2.தனக்குள் தீங்கு விளைவிக்கும் உணர்வுகளை மாற்றி அமைக்க முடியும்.
3.நம் சொல் பிறரைப் புனிதமாக்க உதவும் புனிதமாக்கும் உணர்வுகள் நமக்குள் விளையும்
என்ற இந்தத் தன்னம்பிக்கை வர வேண்டும்.
இதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொல்வது. அடிக்கடி நாம் ஒருவரைக் குறை கூறிக்
கொண்டே இருந்தால் அடுத்து நாமும்… குறையான செயல்களைச்
செயல்படுத்தும் அதுவாக மாறி விடுகின்றோம்.
அடிக்கடி ஒருவரை வேதனைப்படும்படி செய்தோம் என்றால் வேதனைப்படச் செய்யும்
உணர்வுகள் நமக்குள் விளைந்து “ஐயோ எனக்கு மேல் வலிக்கின்றது… தலை வலிக்கிறது…” என்று வரும்.
இவர் நினைப்பார்…! நான் எல்லோருக்கும்
நல்லதைத் தான் சொன்னேன். அவர் தவறு செய்வதைத் தானே நான்
சொன்னேன் என்று…! ஆனால் தன்னை நியாயப்படுத்தி வேதனைப்படும்படி
புண்படுத்தும்படி சொல்லைச் சொல்வார்.
இந்த உணர்வுகள் உடலுக்குள் விளைந்த பின்… கை வலிக்கின்றதே கால் வலிக்கின்றதே மேல் வலிக்கின்றது…! நான் எல்லோருக்கும் நல்லது தானே செய்தேன் ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றானே…! என்று பெரும் பகுதி பிறரைக் குறை கூறிப் பேசும் நிலைகளே நடக்கின்றது.
ஆனால் இவர்கள்
1.தெய்வத்திற்குப் பூமாலை சூட்டுவதும் அபிஷேகங்கள் செய்வதும் ஆராதனைகள்
செய்வதும் இப்படிச் செய்தாலும்
2.பிறரிடம் சொல்லும் போதெல்லாம் தன்னைத்தான் எண்ணாது தவறுகளைச் செய்து
கொண்டே அதை நுகர்வதும்
3.அப்படி நுகர்வதை உயிர் அந்த அணுவாக மாற்றி இவர் உடலாக மாற்றி அந்த உணர்வின்
சக்தியாகத் தனக்குள் இயக்கும் என்பதை மறந்து விட்டார்.
இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் இயற்கை எப்படி விளைந்தது…? கடவுள் ஒருவனா…? கடவுள் ஒருவன் இல்லை...!
வெப்பம் காந்தம் விஷம் மணம் அந்தச் சத்து இந்த ஐந்தும் சேர்ந்து இயக்கும்
நிலைகளில் உருவாக்கும் சக்தி பெற்றது. கடவுள் ஒருவன் என்றால் எப்படி நியாயமாகும்…!
ஓரு செடியானாலும் அது தான். ஐந்து புலனறிவு கொண்டு தான் எதைக் கவர்ந்து கொண்டதோ அதன் நிலையில்
1.ஒன்றுக்குள் சென்று உள் நின்று இயக்குவதே கடவுள்.
2.ஒரு உயிரணு இதை நுகர்ந்தால் உருவாக்குவதை ஈசன் என்றும்
3.உருவான பொருளைப் பிரம்மம் என்றும் விஷ்ணுவின் மகன் பிரம்மா என்றும்
4.உயிரின் இயக்கம் ஈசன் என்றாலும் துடிப்புக்குள் ஏற்படும் வெப்பம் விஷ்ணு என்று
சாஸ்திரங்கள் தெளிவாக நமக்கு இப்படி உணர்த்துகின்றன.
நான் (ஞானகுரு)
இப்போது பேசுகிறேன் என்றால்…
1.இது எல்லாம் ஆதியில் விளைந்த அகஸ்தியன் தனக்குள் கண்டுணர்ந்த அவனுள்
விளைந்த உணர்வுகள் தான்
2.வெளியிலே பரவி உள்ளது… அதைச் சூரியனுடைய காந்த சக்தி
கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது.
3.அதை நீங்களும் நுகரலாம்…!
இந்த உலகில் மனிதனாகப் பிறந்தோர் அனைவரும் அந்த உணர்வின் எண்ணத்தை ஏங்கிப்
பதிவு செய்து கொண்ட பின் அது மீண்டும் நினைவுக்கு வரும் பொழுது அதைப் பெற முடியும்.