
நஞ்சை முறிக்கும் சக்தி
ஒரு தேள் வெள்ளாட்டைத் தீண்டி விட்டால் விஷம் பாய்ந்து அந்த ஆடு மடிகின்றது. ஆனால் அதே சமயத்தில் கோழி பட்சி மற்ற
பறவைகள் இதை உணவாக உட்கொள்கின்றது. அவைகள் பயப்படுவதில்லை… அதற்கு வீரிய உணர்வுகள் வருகின்றது.
உதாரணமாக கருடனை எடுத்துக் கொண்டால் அதுவும் விஷத்தை ஒடுக்கும் நிலைகள் பெற்றது…
அதை ஒடுக்கி விடுகின்றது தேள் கொடுக்கு மிகவும் விஷம் கொண்டது. தேள் இறந்தாலும் அந்தக் கொடுக்கை வைத்து லேசாகக் குத்தினாலே அதில் உள்ள
விஷங்கள் நமக்குள் கடுகடுப்பை ஊட்டிவிடும்.
ஆனால் கோழி மற்ற பறவைகள் அதை உணவாக உட்கொள்கின்றது அதனின் உடலில்
இருக்கக்கூடிய அமிலம் இந்த விஷத்தைக் கரைக்கும் ஆற்றல் கொண்டது… வீரிய நிலைகளும் பெறுகின்றது.
கருடனைப் பாம்பு சீறித் தாக்கினால் அதனுடைய விஷம் அதற்குள் ஏறுவதில்லை. கருடன் அதை தாங்கிக் கொள்கின்றது. அது கூட்டைக் கட்டிக் குஞ்சுகளைப் பொரிக்கின்றது.
1.இரும்புக் கம்பிகள் கொண்டு அந்த குஞ்சுகளை நாம் விலங்கிட்டோம் என்றால்
2.கருடன் பறந்து சென்று அதை முறிக்கக் கூடிய தாவர இனங்களைத் தேடிச் செல்கிறது.
3.அதனுடைய குச்சிகளை எடுத்துக் கொண்டு வந்து அந்த இரும்புக் கம்பி மேல்
போடுகின்றது… அந்தக் கம்பிகள் அறுந்து விடுகின்றது.
அந்தத் தாவர இனத்தைக் கண்டு கொள்ள வேண்டும் என்றால் நம்மால் முடியாது.
ஒரு வாய்க்காலிலே நீர் வேகமாக ஓடுகிறது என்றால்
1.அந்தக் கருடன் குஞ்சுகளை வைத்திருந்த கூட்டைப் பிரித்து அதில் போட்டால்
2.அது (மீன்களைப் போல்)
எதிர்நீச்சல் அடிக்கும்.
மெய்ஞானிகள் சில முறைப்படுத்தி இதை எல்லாம் எடுத்துக் கொண்டார்கள் விஷத்தை
ஒடுக்கும் உணர்வாக மற்ற உலோகங்களை முறித்திடும் நிலையாக அத்தகைய தாவர இனங்களுக்கு
இந்த ஆற்றல் உண்டு.
இது எல்லாம் இயற்கையில் விளைந்த உணர்வுகள் தான்.
ஒவ்வொரு உயிரினங்களும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள எவ்வாறு இயங்குகின்றது…? என்று இதையெல்லாம் அறிவதற்காகப் பல
நிலைகளை எனக்குக் குருநாதர் காட்டுகின்றார்.
ஒரு சமயம் நான் கொல்லூரிலே குருநாதர் காட்டிய வழியில் தியானமிருந்து கொண்டிருக்கின்றேன். அங்கே ஆற்றங்கரை ஓரங்களில் கருநாகம் போன்று
மிகப் பெரிய பாம்புகள் உண்டு… காளிங்கராயன் என்று
சொல்வார்கள்.
அந்த ஆறு குடசாஸ்திரி என்ற மலையிலிருந்து பச்சிலைகளையும் மூலிகைகளையும் பல பல
தாவர இனங்களின் சத்துக்களையும் கவர்ந்து கொண்டு இங்கே வருகின்றது.
அங்கிருக்கக்கூடிய ஒரு பாறையிலே தான் அமர்ந்து இயற்கையின் உண்மை நிலைகளை
அறிவதற்காக இரவு முழுதும் தியானம் இருப்பேன். காலையில் எழுந்து காலைக்கடன் கழிப்பதற்காக எழுந்து
நடக்கின்றேன்
அவ்வாறு நடந்து செல்லப்படும் பொழுது என்னை அறியாமலேயே ஒரு செடியின் புதரிலே காலை வைத்து விட்டேன்.
1.சிர்….ர்ர்ர்…! என்று அந்தப்
பாம்பு எழுந்து நின்றது. சுமார் 70 அடி
நீளம் இருக்கும்
2.என் தலைக்கு மேலே “சுளவு” போன்று
படத்தைப் பிடிக்கின்றது.
அப்பொழுது குருநாதர் சொல்கின்றார். நீ அந்தப் பாம்பை இடறி விட்டாய். ஆனால்
அது உன்னைச் சீறித் தாக்கவில்லை. நீ தெரியாமல் மிதித்து
விட்டாய் என்பதை அது உணர்கின்றது… ஆகையினால் தாக்கவில்லை.
1.இங்கே வாழ்ந்த சில ரிஷிகள் வெளிப்படுத்திய உணர்வுகளை அந்தப் பாம்பு
நுகர்ந்துள்ளது.
2.அதனால் அதனுடைய பரிமணம் சில விஷத்தன்மைகளை நீக்கும் வல்லமையும் பெற்றது
என்று குருநாதர் இதையும் காட்டுகின்றார்.